Thursday, April 29, 2010

ஈ.மெயில் நகைச்சுவைகள்.



பலமுறை வலைப்பூக்களில் உலாவிய போது பலரும் தமக்கு எஸ்.எம்.எஸ் வாயிலாக வந்த நகைச்சுவைகளை பகிர்ந்திருந்தனர். எனக்கும் இது போல பல மின் அஞ்சல்கள் வருவது வழக்கம். எனவே அதை நானும் பகிரலாமே என தோன்ற குறிப்பிட்ட அந்த நண்பருடன் தொடர்பினை ஏற்படுத்தி அவர் அனுமதியுடன் உங்களுடன் பகிருகின்றேன். என்னைக் கவர்ந்த நகைச்சுவைகள் இனி என் வலைப்பூவில் உலாவரும் உங்களை மகிழ்விக்கும்.

*******************************************************************************************

கோழியினாலே முட்டை வந்ததா? அல்லது முட்டையினாலே கோழி வந்ததா?"

"கோழியினால்தான் முட்டை வந்தது"

"எப்படி?"

"ஒருமுறை ஹோட்டலுக்குப் போய் கோழி பிரியாணி ஆர்டர் பண்ணினேன். கூடவே
முட்டையும் வந்தது. இன்னொரு நாள் போய் முட்டை பிரியாணி ஆர்டர் பண்ணினேன்.
ஆனால் அதோடு கோழி வரவில்லை

****************************************************************************************************************************

பையன்: அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட
செய்தி நடந்துச்சிம்மா.
அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.
பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா
அம்மா: கெட்ட செய்தி
பையன்: வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க

*************************************************************************************************************************

நீதிபதி: பத்தாயிரம் ஒரு மாத ஜெயில் தண்டனை இதுல எது வேனும் உனக்கு.

குற்றவாளி: ஹி.ஹி...பத்தாயிரமே போதும் சாமி எப்டியாச்சும் பொட்டிக்கடை
வச்சாச்சியும் பொழச்சிக்குவேன்.

***************************************************************************************************************************

(ஒருவர் மஞ்சப்பை வைத்துக் கொண்டு LIC க்கு முன்னால் நிற்கிறார். ஒரு
சென்னை லோக்கல் ரவுடி அவரிடம் )

ரவுடி: இங்க என்ன பண்ணிட்டு இருக்கிற

ஒருவர்: எவ்வளவு பெரிய உயரமான
கட்டிடம் பாத்துட்டு இருக்கேன்.

ரவுடி: அப்படியெல்லாம் சும்மா பாக்க கூடாது. நீ எத்தனை மாடி வரை பாத்தியோ
அதுக்கு எனக்கு பணம் தரனும். ஒரு மாடிக்கு பத்து ரூபாய் குடு.

ஒருவர் :நான் 4 வது மாடி வரைக்கும் தான் பாத்தேன் இந்தா பிடி (40 ரூபாய்
கொடுக்கிறார்)

ஒரு பொது ஜனம்: என்னங்க அந்த ரவுடி ஏமாத்தி பணம் வாங்கிட்டான்
உங்களிடம்

ஒருவர்: அவன் எங்க ஏமாந்தான் நான்தான் ஏமாத்திட்டேன். நான்
பாத்தது ஏழாவது மாடி அவனிடம் 4 வது மாடின்னு சொல்லி ஏமாத்தி 40 ருவாதானே
குடுத்தேன்

*******************************************************************************************************************

நீதிபதி: 'நகைகளை திருடியதாக உன் மீது தொட‌ரப்பட்ட வழக்கில் நீ குற்றவாளி
இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்'
குற்றவாளி: ' அப்படீன்னா திருடிய நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி?'

******************************************************************************************************************

ஆசிரியர்: "டேய் ராமு, இன்னும் பத்து நாளில் உலகம் அழியப்போகுதுன்னு
வச்சுக்கோ. அப்போ கடவுள் கிட்டே என்ன வேண்டிக்குவே?"

ராமு: "அன்னிக்கு ஸ்கூல் லீவு விடணும்னு வேண்டிக்குவேன் சார்"

*************************************************************************************************************************

மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்

அப்பா: ஓன்னுமில்லை

மகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை
பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம்
ஸ்டாப் ஆவலியே.

அப்பா:...............

*************************************************************************************************************************

நோயாளி: டாக்டர் என் கால் நல்லா போயிடுமா டாக்டர்

டாக்டர்: இன்னும் மூனு நாளைக்குள்ளே உங்க கால் சரியாயிடும்

நோயாளி: நான் நடக்கலாமா

டாக்டர்:நல்லா நடக்கலாம். நான் கொடுத்திருக்கும் மருந்த மறக்காம தடவுங்க

நோயாளி: இந்த மருந்த தடவுனா கால் வலி போயிடுமா டாக்டர் நான் அப்புறமா ஓடலாமா.

டாக்டர்: தாராளமா

நோயாளி: இந்த மருந்துக்கு அத்தனை பவரா..நான் சைக்கிள் ஓட்டலாமா.

டாக்டர்:ம்..ஓட்டலாமே...

நோயாளி: ஏன்னா எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது..அதான் கேட்டேன்.

டாக்டர்: ......????????

*************************************************************************************************************************

நெஞ்சில் பண்ணவேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டீங்களே டாக்டர்"
"உங்களை யார் ஓரடி மேலே தள்ளிப்படுக்கச் சொன்னாங்க?

***********************************************************************************************************************

எதுக்கு சார், லஞ்சம் வாங்கும்போது உங்க கை இப்படி நடுங்குது?
ரெண்டு மாசமா லீவ்ல இருந்ததுனால டச் விட்டுப்போச்சுய்யா.

**********************************************************************************************************************

உங்க மாப்பிள்ளைக்குப் பெரிய இடத்துல வேலையாமே!
ஆமாம். பீச்ல சுண்டல் விக்கிறார்!

********************************************************************************************************************

ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!
எப்படி?

என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்

*******************************************************************************************************************

ஊர்ல நாலு பேர் சிரிக்கிற மாதிரி, எந்தக் காரியத்தையும் என் பையன் பண்ணவே மாட்டான்.

பையன் என்ன பண்றான்?

டி.வி. மெகா சீரியல் டைரக்டரா இருக்கான்

******************************************************************************************************************

"எங்க வீட்டு நாயைக் காணோம் சார்...

""அடையாளம் சொல்லுங்க...

""அது குரைக்கும் பொழுது, என்னோட மாமியார் மாதிரியே இருக்கும்.......!"

*******************************************************************************************************************

நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !

நபர் : ஏன்?

நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !

****************************************************************************************************************

என்னோட மாமியார் அவங்க பணக்காரப் புத்தியைக் காட்டிட்டாங்க.

அப்படியா... என்ன பண்ணினாங்க?

எனக்கும் அவங்களுக்கும் நடந்த சண்டையை உள்ளூர் கேபிள்ல ஒளிபரப்ப ஏற்பாடு
பண்ணிட்டாங்களாம்

*****************************************************************************************************************

நோயாளி: டாக்டர் டாக்டர். நாய் கடிச்சிடுச்சு டாக்டர்!

டாக்டர்: எங்கப்பாகடிச்சுச்சு?

நோயாளி: விட்டுக்கு பக்கத்துக்கு தெருவில் டாக்டர்!
Share:

4 கருத்துரைகள்:

கன்கொன் || Kangon said...

:))))

பகிர்வுக்கு நன்றிண்ணே....

சிரிப்பு வந்திச்சு... ஆகவே நகைச்சுவை தான்... ;)

:)))

SShathiesh-சதீஷ். said...

@கன்கொன் || Kangon

நான் எழுதலா அதனால் கண்டிப்பாய் சிரிப்பு வரும் கான்கொன்.

தமிழ் மதுரம் said...

ஐயோ தாங்க முடியல்லையே... சிரியுங்கோ.. சிரியுங்கோ.....

பகிர்வுக்கு நன்றிகள் நண்பா.

Yoganathan.N said...

//உங்க மாப்பிள்ளைக்குப் பெரிய இடத்துல வேலையாமே!
ஆமாம். பீச்ல சுண்டல் விக்கிறார்!//

இது டாப்பு... :)

Btw, சுறாவிற்கு ஆல் தி பெஸ்ட். விமர்சனம் ஒன்னு போடுங்க... :)

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive