
என்ன நண்பர்களே? எப்பிடி இருக்கிறிங்க. இலங்கையில் இருந்த போது நிறைய கிறுக்கிய இவன் இப்போ அடங்கி இருக்கிறான் என சந்தோசப்படும் நல்ல உள்ளங்களே. நானும் ஒரு பதிவருங்கோ!
மாதம் ஒரு பதிவுபோட்டிட்டு எல்லா தளத்திலும் பின்னூட்டம் போடும் பிரபல பின்னூட்டவாதியில்லையுங்கோ!(அதுக்காகா அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய பதிவர் சாரி பின்நூட்டவாதி கறுப்பு தங்கத்தை குத்துறேன் என நினைக்க கூடாது. குத்தினால் எனக்கு தான் வலிக்கும்.) இருந்தாலும் நான் ஒரு பதிவருங்கோ! பின்னூட்டம் போடாவிட்டாலும் இன்ட்லியில் இரவு பகல் பாராமல் அத்தனை இடுகையும் வாசிக்கும் வாசகனுங்கோ.
லண்டன் ஸ்நோ பெண்டு கழட்டுதுங்கோ அதனால பதிவ எழுத முடியாமல் இருக்கு என சாட்டு சொல்ல மாட்டேனுங்கோ ஆனாலும் நான்பதிவருங்கோ! நிறைய நாளுக்கு ஒரு பதிவு போட்டாலும் ஹிட் ஆக நான் ஒன்றும் சூப்பர் ஸ்டார் இல்லைங்கோ ஆனாலும் நான் பதிவருங்கோ! எனக்கு நிறைய படிப்பு புரிஜெக்டுகள் இருக்குதுங்கோ இருந்தாலும் இப்படி ஒரு பதிவு போடுறேனுங்கோ ஏனெண்டால் நானும் உங்களை போல ஒரு மொக்கை பதிவருங்கோ!
என்ன கடுப்பாகுதா? இப்படி தான் எனக்கும் கொஞ்ச நாள் பதிவு எழுதாமல் கை எல்லாம் ஏதோ பண்ணுதுங்கோ! வரும் சில நாட்கள் முடிந்தால் அதகளம் பண்ண போறேன் அதனால தான் சொல்லுறேன் நானும் ஒரு பதிவருங்கோ! இப்ப கூட இந்த செமிச்டேரின் இறுதி நாட்களில் இருக்கின்றேன். இருந்தாலும் ஒரு பதிவு போட்டு நானும் ஒரு பதிவர் என உங்களுக்கு சொல்ல வேண்டாமா? காரணம் இல்லாமலா இப்படி ஒரு பதிவு. இப்பெல்லாம் காற்றெல்லாம் கொலை வாசி வீசுது. அந்த சூறாவளி எங்க பக்கம் வரமுதல் நானும் ஒரு பதிவர் என உங்களுக்கு நினைவூட்ட வேண்டாமா?
யாரும் இதை சீரியசாய் படிக்காதிங்க. இதுவும் ஒரு மொக்கை தாங்கோ! அட சொன்னால் தான் தெரிது என யாரப்பா அங்கே சவுண்டு விடறது. ஓகே ஓகே இப்போ போறேன் மறுபடி வருவேன்.


















