உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Thursday, April 29, 2010

ஈ.மெயில் நகைச்சுவைகள்.



பலமுறை வலைப்பூக்களில் உலாவிய போது பலரும் தமக்கு எஸ்.எம்.எஸ் வாயிலாக வந்த நகைச்சுவைகளை பகிர்ந்திருந்தனர். எனக்கும் இது போல பல மின் அஞ்சல்கள் வருவது வழக்கம். எனவே அதை நானும் பகிரலாமே என தோன்ற குறிப்பிட்ட அந்த நண்பருடன் தொடர்பினை ஏற்படுத்தி அவர் அனுமதியுடன் உங்களுடன் பகிருகின்றேன். என்னைக் கவர்ந்த நகைச்சுவைகள் இனி என் வலைப்பூவில் உலாவரும் உங்களை மகிழ்விக்கும்.

*******************************************************************************************

கோழியினாலே முட்டை வந்ததா? அல்லது முட்டையினாலே கோழி வந்ததா?"

"கோழியினால்தான் முட்டை வந்தது"

"எப்படி?"

"ஒருமுறை ஹோட்டலுக்குப் போய் கோழி பிரியாணி ஆர்டர் பண்ணினேன். கூடவே
முட்டையும் வந்தது. இன்னொரு நாள் போய் முட்டை பிரியாணி ஆர்டர் பண்ணினேன்.
ஆனால் அதோடு கோழி வரவில்லை

****************************************************************************************************************************

பையன்: அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட
செய்தி நடந்துச்சிம்மா.
அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.
பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா
அம்மா: கெட்ட செய்தி
பையன்: வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க

*************************************************************************************************************************

நீதிபதி: பத்தாயிரம் ஒரு மாத ஜெயில் தண்டனை இதுல எது வேனும் உனக்கு.

குற்றவாளி: ஹி.ஹி...பத்தாயிரமே போதும் சாமி எப்டியாச்சும் பொட்டிக்கடை
வச்சாச்சியும் பொழச்சிக்குவேன்.

***************************************************************************************************************************

(ஒருவர் மஞ்சப்பை வைத்துக் கொண்டு LIC க்கு முன்னால் நிற்கிறார். ஒரு
சென்னை லோக்கல் ரவுடி அவரிடம் )

ரவுடி: இங்க என்ன பண்ணிட்டு இருக்கிற

ஒருவர்: எவ்வளவு பெரிய உயரமான
கட்டிடம் பாத்துட்டு இருக்கேன்.

ரவுடி: அப்படியெல்லாம் சும்மா பாக்க கூடாது. நீ எத்தனை மாடி வரை பாத்தியோ
அதுக்கு எனக்கு பணம் தரனும். ஒரு மாடிக்கு பத்து ரூபாய் குடு.

ஒருவர் :நான் 4 வது மாடி வரைக்கும் தான் பாத்தேன் இந்தா பிடி (40 ரூபாய்
கொடுக்கிறார்)

ஒரு பொது ஜனம்: என்னங்க அந்த ரவுடி ஏமாத்தி பணம் வாங்கிட்டான்
உங்களிடம்

ஒருவர்: அவன் எங்க ஏமாந்தான் நான்தான் ஏமாத்திட்டேன். நான்
பாத்தது ஏழாவது மாடி அவனிடம் 4 வது மாடின்னு சொல்லி ஏமாத்தி 40 ருவாதானே
குடுத்தேன்

*******************************************************************************************************************

நீதிபதி: 'நகைகளை திருடியதாக உன் மீது தொட‌ரப்பட்ட வழக்கில் நீ குற்றவாளி
இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்'
குற்றவாளி: ' அப்படீன்னா திருடிய நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி?'

******************************************************************************************************************

ஆசிரியர்: "டேய் ராமு, இன்னும் பத்து நாளில் உலகம் அழியப்போகுதுன்னு
வச்சுக்கோ. அப்போ கடவுள் கிட்டே என்ன வேண்டிக்குவே?"

ராமு: "அன்னிக்கு ஸ்கூல் லீவு விடணும்னு வேண்டிக்குவேன் சார்"

*************************************************************************************************************************

மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்

அப்பா: ஓன்னுமில்லை

மகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை
பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம்
ஸ்டாப் ஆவலியே.

அப்பா:...............

*************************************************************************************************************************

நோயாளி: டாக்டர் என் கால் நல்லா போயிடுமா டாக்டர்

டாக்டர்: இன்னும் மூனு நாளைக்குள்ளே உங்க கால் சரியாயிடும்

நோயாளி: நான் நடக்கலாமா

டாக்டர்:நல்லா நடக்கலாம். நான் கொடுத்திருக்கும் மருந்த மறக்காம தடவுங்க

நோயாளி: இந்த மருந்த தடவுனா கால் வலி போயிடுமா டாக்டர் நான் அப்புறமா ஓடலாமா.

டாக்டர்: தாராளமா

நோயாளி: இந்த மருந்துக்கு அத்தனை பவரா..நான் சைக்கிள் ஓட்டலாமா.

டாக்டர்:ம்..ஓட்டலாமே...

நோயாளி: ஏன்னா எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது..அதான் கேட்டேன்.

டாக்டர்: ......????????

*************************************************************************************************************************

நெஞ்சில் பண்ணவேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டீங்களே டாக்டர்"
"உங்களை யார் ஓரடி மேலே தள்ளிப்படுக்கச் சொன்னாங்க?

***********************************************************************************************************************

எதுக்கு சார், லஞ்சம் வாங்கும்போது உங்க கை இப்படி நடுங்குது?
ரெண்டு மாசமா லீவ்ல இருந்ததுனால டச் விட்டுப்போச்சுய்யா.

**********************************************************************************************************************

உங்க மாப்பிள்ளைக்குப் பெரிய இடத்துல வேலையாமே!
ஆமாம். பீச்ல சுண்டல் விக்கிறார்!

********************************************************************************************************************

ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!
எப்படி?

என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்

*******************************************************************************************************************

ஊர்ல நாலு பேர் சிரிக்கிற மாதிரி, எந்தக் காரியத்தையும் என் பையன் பண்ணவே மாட்டான்.

பையன் என்ன பண்றான்?

டி.வி. மெகா சீரியல் டைரக்டரா இருக்கான்

******************************************************************************************************************

"எங்க வீட்டு நாயைக் காணோம் சார்...

""அடையாளம் சொல்லுங்க...

""அது குரைக்கும் பொழுது, என்னோட மாமியார் மாதிரியே இருக்கும்.......!"

*******************************************************************************************************************

நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !

நபர் : ஏன்?

நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !

****************************************************************************************************************

என்னோட மாமியார் அவங்க பணக்காரப் புத்தியைக் காட்டிட்டாங்க.

அப்படியா... என்ன பண்ணினாங்க?

எனக்கும் அவங்களுக்கும் நடந்த சண்டையை உள்ளூர் கேபிள்ல ஒளிபரப்ப ஏற்பாடு
பண்ணிட்டாங்களாம்

*****************************************************************************************************************

நோயாளி: டாக்டர் டாக்டர். நாய் கடிச்சிடுச்சு டாக்டர்!

டாக்டர்: எங்கப்பாகடிச்சுச்சு?

நோயாளி: விட்டுக்கு பக்கத்துக்கு தெருவில் டாக்டர்!
Share:

Tuesday, April 27, 2010

ஐ.பி.எல் ஸ்பெசல் போட்டோ கொமண்ட்ஸ்.










நம்ம சமீரா ரெட்டியை பார்த்தே முன்தினம் பார்த்தேனே ஸ்டைலில் பாடுறான் இந்த மோடி.





ஜெயஹோ பாடல் போல படியுங்கள்.



Share:

Sunday, April 25, 2010

இன்றைய தினக்குரல் பத்திரிகையில் நான் - நன்றி யாழ்தேவி.

வணக்கம் நண்பர்களே,
இன்று இலங்கையில் இருந்து வெளியாகும் தினக்குரல் பத்திரிகையில் யாழ்தேவி தெரிவு செய்த நட்சத்திரப்பதிவராக ஜோளித்துக்கொண்டிருக்கின்றேன். தினக்குரல் யாழ்தேவி, வாசகர்கள்,பின்நூட்டிகள்,அனானிகள்,திரட்டிகள், நண்பர்கள் எல்லோருக்கும் என் நன்றிகள்.


கீழே நான் கொடுத்திருப்பது இன்று பத்திரிகையில் வெளியாகி இருக்கும் பிரதி. பெரிதாக்கி படித்துப்பாருங்களேன்.



Share:

Saturday, April 24, 2010

நாளை நான் தினக்குரல் பத்திரிகையில் இன்று சச்சின் .


சச்சின் சச்சின் சச்சின் ....இந்த பெயரை கேட்டால் நாடு கடந்து இருக்கும் சின்னக்குழந்தையும் சொல்லும் யாரென்று. இவரை பற்றி முகவுரை, கை உரை காலுரை சொல்ல நானா தேவை. . சுருக்கமாக சொல்லப்போனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் எதிரணியில் விளையாடினாலும் கிரிக்கெட் வீரர்களுக்கும் இவர் கடவுள். சாதனை என்பதற்கு சச்சின் என்று ஒரு ஒத்த சொல் அகராதியில் இடலாம். இந்த சாதாரண மனிதனை பற்றி தான் இன்று எல்லா பத்திரிகைகளிலும் இணையத்திலும். நான் சாதாரண மனிதன் என சொல்லக்காரணம் சச்சின் என்றுமே தன்னை ஒரு சாதனையாளனாக அபூர்வ பிறவியாக பார்க்காமல் இன்னும் சாதிக்கத் துடிக்கும் இளைஞனாக எம்மில் ஒருவராக வாழ்வதால் தான். எல்லோரும் தமக்கு தெரிந்த வடிவில் வாழ்த்து சொல்லிவிட்டார்கள். இது என் முறை அவருக்கு வாழ்த்து சொல்வதுடன். அவரிடம் இருந்து நான் கற்ற ஒரு விடயம் நம்மை பற்றி வரும் தவறான கருத்துக்களுக்கு மௌனமாக இருந்து எங்கள் வேலையை சரியாக செய்து மற்றவர் வாயை அடைப்பதே. அந்த வகையில் சச்சின் என் ஹீரோ.

இப்போது என்னை பற்றி....வெற்றி எப்.எம்மில் வானொலி அறிவிப்பாளனாக இருக்கும் போது ஆரம்பித்த இந்த வலைப்பூவில் வாசகர்களும் சக பதிவர்களும் திரட்டிகளும் தந்த ஆதரவில் நானும் ஓரளவு நல்ல பதிவாளனாக ஏற்றுக்கொள்ளப்பட்டேன். எம் பதிவு அதிக வாக்குகள் பெறும் போதும் பலர் படிக்கும் போதும் பலரின் பின்னூட்டங்கள் கிடைத்த போதும் வந்த சந்தோசம் மட்டுமே இன்றும் என்னை பதிவெழுத வைக்கின்றது. அந்த வரிசையில் எனக்கும் இன்னும் உத்வேகத்தை கொடுக்கும் விதமாக அண்மையில் யாழ்தேவி திரட்டியினர் என்னை நட்சத்திரப்பதிவராக அறிவித்து மகிழ்வித்தனர். நீண்ட நாட்களாக ஏனோ தானோ என்று வந்த என் பதிவுகள் ஒரு கட்டுக்கோப்புக்குள் வருவதற்கும் தொடர்ச்சியாக என் பதிவுகள் வருவதற்கும் சிலர் குறிப்பிட்டதை போல சினிமாவை தாண்டி நான் பதிவிட ஆரம்பித்ததும் இந்த உற்சாகத்தால் தான். யாழ்தேவி நிர்வாக குழுவினருக்கு என் நன்றிகள்.

இதன் தொடர்ச்சியாக என்னை பற்றியும் என் வலைப்பூ பற்றியும் நாளை(25.04.2010) ஞாயிறு தினக்குரலில் ஒரு பகுதி வெளிவர இருக்கின்றது. ஏற்கனவே வானொலி அறிவிப்பாளனாய் என் நிறை குறைகள் இந்த பத்திரிகையிலும் இன்னும் சில சஞ்சிகைகளில் சில தடவைகள் விமர்சனங்களும் பாராட்டுகளும் வந்திருந்தாலும் வலைப்பூவை பற்றி என்னும் பொது இன்னொரு எதிர்பார்ப்பு. இந்த நேரத்தில் தினக்குரல் குழுவினருக்கு என் நன்றிகள்.

என்னை நட்சத்திரமாக்கி ஊக்கப்படுத்தியது போல இன்னும் பலரை தொடர்ந்து ஊக்குவிக்கும் யாழ்தேவிக்கும் தினக்குரலுக்கும் பதிவர்கள் சார்பாக என் நன்றிகள். காரணம் பலரை அறியாமல் நாம் அவர் தளங்களை படித்து வந்தாலும் அந்த அறிமுகத்தை கொடுப்பது இவர்களே. இன்னுமொரு விடயம் இது என் கருத்து மட்டுமே யாரும் தவறாக எண்ணி விடாதீர்கள். என்னை எடுத்துக்கொண்டால் நான் ஒரு அறிவிப்பாளனாய் இருக்கும் போது இந்த வலைப்பூவில் இணைந்தது என் வலைப்பதிவு நண்பர் வட்டாரத்தை இலகுவில் அதிகரித்து கொள்ள உதவியாக இருந்தது. அதேநேரம் என்னை விட நன்றாக பல இடுகைகளை இடும் பதிவர்களுக்கு இந்த நண்பர் வட்டம் கிடைக்க நீண்ட காலம் எடுத்திருக்கலாம். சிலர் இன்னும் அதை பெறாமல் இருக்கலாம். இன்றும் கூட நான் இடும் சில எதிர்பார்ப்பான பதிவுகளுக்கு வாக்கும் பின்னூட்டமும் கிடைக்காவிட்டால் கலங்கி இருக்கின்றேன். ஆனால் இதை விட ஒரு முக்கியமான விடயம் யாராயிருப்பினும் ஏதோ ஒரு வகையில் ரசிக்கும் வகையில் எழுதினால் அவர்களை தேடி நம் வாசகர்கள் வருவார்கள் என்பது உண்மை.

நண்பர்களே சுவாரஸ்யமாக எழுதுவோம் பயனடைய எழுதுவோம் எழுத்தால் புது விதி செய்வோம். அந்த விதியில் படியாக இருக்கும் யாழ்தேவிக்கும் தினக்குரலுக்கும் என் நன்றிகள்.
Share:

Friday, April 23, 2010

சுறா வெற்றி பெறும் என்பதற்கு ஒரு சுண்டக்கா காரணம்.



இளைய தளபதி டாக்டர் விஜய் அவர்கள் நடிப்பில் வெளிவர இருக்கும் அவரின் ஐம்பதாவது படம் சுறா. எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி வெற்றியை இன்னும் போக்கிரிக்கு பின்னர் விஜய் கொடுக்கவில்லை. இந்த நிலையில் தான் வரப்போகின்றது சுறா. பாடல்கள் ஏற்கனவே வந்து ஹிட் ஆகியுள்ளன. ஆனால் பாடல்கள் மணிஷர்மா தான் ஏற்கனவே பயன்படுத்திய மெட்டை பயன்படுத்தியது ஏனோ கொஞ்சம் விமர்சனத்தைக் கொடுத்திருக்கின்றது. ஆனால் அதையும் மீறி விஜய் பாடல்கள் என்ற ரீதியில் வெற்றி அடைந்திருக்கின்றன.

சண் பிக்செர்ஸ் வாங்கியவுடன் படம் டப்பா அதனால் சன்னுக்கு கொடுத்தாயிற்று என்றவர்கள் படம் வென்றுவிட்டால் சண் புண்ணியம் என்பார்கள் என்ன செய்வது நாம் இப்போது இருக்கும் நிலையில் எதுவும் பேச முடியாது. எல்லோர் கிண்டல் கேலிகளையும் ஏற்கத்தான் வேண்டும். சுறா வெற்றி பெற வேண்டும் என்பது விஜய் ரசிகனாக என் ஆசை ஆனால் விஜய் மாறிப்படம் கொடுக்க வேண்டுமென்பதும் நம் ஆசை ஆச்சே. எல்லோரும் தங்கள் பதிவுகளில் சுறாவின் தோலை உரிக்க தொடங்கிவிட்டனர். ஊரோடு ஒத்துப்போகும் வகையில் கொஞ்சம் இப்படி நடக்காதா என்ற ஏக்கத்துடனான ஒரு பதிவு இது.

கொஞ்சம் விஜயின் பழைய படங்களுக்கு போகலாமா? துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தை பற்றி தெரியும் அதன் வெற்றியும் தெரியும். அந்த திரைப்பட பாடல்கள் எந்தளவு ஹிட் என்பதும் தெரியும். அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற தொடு தொடுவேனவே என்ற பாடலை கொஞ்சம் நினைவு படுத்துங்கள்....அப்படியே அடுத்த விடயத்துக்கு போகலாமா? அடுத்தது பிரியமானவளே திரைப்படம். நல்ல வசூலையும் விஜயின் தொடர் வெற்றியையும் உறுதி செய்த ஒரு படம். இந்த படத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் வந்த அத்தனை பாடல்களும் இதமானவை. இங்கே நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய பாடல் என்னவோ என்னவோ என் வசம் நான் இல்லை....

அடுத்தது என்ன...பிரண்ட்ஸ் திரைப்படம் தான். சூர்யாவுடன் இணைந்து சித்திக்கின் இயக்கத்தில் வந்த நகைச்சுவைக்கதம்பம் எனலாம் இந்த படத்தை. இந்த பட பாடல்களும் ஏமாறவில்லை. பெண்களோடு போட்டி போடும் ஆண்கள் இங்கே யாரு என்ற பாடல் இப்போது நினைவில் கொள்ளுங்கள். இப்போ நாங்கள் நினைத்துப் பார்க்க வேண்டிய திரைப்படம் திருப்பாச்சி. இந்த படத்தில் வந்த கும்பிடபோன தெய்வம் பாடல் இன்றும் பட்டையை கிளப்பும் பாடல். சிவகாசி திரைப்படத்திலும் இடம்பெற்ற அட என்னாத்த சொல்வேனுங்கோ பாடல் முக்கியமான ஒரு பாடல். அடுத்து வேட்டைக்காரன் நம்மில் பலர் தோல்வி என்றாலும் இருப்பத்தைந்து கோடியில் தயாராகி எண்பத்தேழு கோடிக்கு மேல் வசூலித்த இந்த படத்தை தோல்வி என சொல்லமுடியாது. அந்த படத்தில் வந்த கரிகாலன் காலைப்போல இந்த பாடலையும் நினைவு படுத்திட்டிங்களா?

நான் ஒரு பெரிய உண்மையை சொல்லப்போறன் ரெடியா?

=>

=>

இந்த உண்மை இதுவரை யாருக்கும் தெரியாதது.....

=>

=>

இதை நீங்களும் யாருக்கும் சொல்லக்கூடாது.....

=>

=>

விஜய் கேட்டால் என்னை மாட்டி விடக்கூட்டாது.....

=>

=>

சொல்லவா....

சொல்லவா.....

சொல்றன்......

கவனமா பாருங்க.....

நான் சொன்ன அத்தனை பாடல்களும் ஒருவர் கேள்வி கேட்க மற்றவர் பதில் சொல்லும் படி அமைந்திருக்கும். இந்த பாடல்கள் இடம்பெற்ற அத்தனை படங்களும் விஜயின் வெற்றிப்படங்கள். அந்த வரிசையில் இப்போது நீங்கள் உங்கள் காது கிழிய கேட்கும் பாடல் என்ன? நம்ம சுறாவில் வந்த தஞ்சாவூர் ஜில்லாக்காரி மற்றும் வங்கக்கடல் எல்லை பாடல்கள் இந்த ரகம் தானே. அப்போ சுறா வெற்றிதானே....எப்புடி...? முப்பதாம் திகதிவரை காத்திருக்க தேவை இல்லை. இப்பவே சன்னில சொல்லுங்கப்பா.

யாரது அங்கே உருட்டுக்கட்டை சைக்கிள் செய்யின் எல்லாம் எடுக்கிறது....வேண்டாம் சொல்லிப்புட்டன் மவனே அப்பிடி யாரும் வந்திங்க வீட்டில வில்லு ஏகன் டி.வி.டி இருக்கு போட்டு பார்க்க வச்சிடுவன்.

Share:

எவன்டா மோடி? இவன் கிரவுண்டில ஒன்னுக்கு போறான் அம்பயர்.


தொடர்ந்து போட்டோ கொமண்ட்ஸ் பதிவுகளுக்கு உங்கள் ஆதரவு கிடைத்துவருவது ரொம்ப சந்தோசமாக இருக்கின்றது. இதோ அடுத்த அட்டகாசம். பாருங்கள் மகிழுங்கள் மறக்காமல் வாக்களியுங்கள் மற்றவர்களும் பார்க்க.




Share:

Thursday, April 22, 2010

சென்னை vs டெக்கான் முதன் முறையாக வீடியோ அலசல் தமிழில்.

பதிவுலகில் என் முயற்சி வீடியோவாக. மேட்ச் பாருங்கள் அதற்க்கு முன் இதையும் பாருங்கள். நடைபெற்றும் ஐ.பி.எல்லின் இரண்டாவது அரை இறுதிப்போட்டிக்கான தமிழ் அலசல் வீடியோ. முதலாவது முயற்சிக்கு நீங்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றி.


Share:

யாரப்பாத்து தம்பி என்றாய். உம்மா உம்மா உம்மா ஆண்டி..

ஐ.பி.எல்லில் நம்ம கிரிக்கெட் வீரர்களும் சினிமா நடிகைகளும் அப்படி என்னதான் பேசி இருப்பாங்க. சும்மா லோலாய்க்கு. படியுங்க முடிஞ்சா சிரிங்க அப்பிடியே ஒரு வாக்கை குத்துங்க. எல்லோரும் இதை பார்க்க.










Share:

Wednesday, April 21, 2010

ஐ.பி.எல். நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரை இறுதிப்போட்டி பற்றிய அலசல் தமிழில் வீடியோ.

ஹாய் பிரண்ட்ஸ், பதிவை எழுத்தில தந்து ரொம்ப போரடிச்சு போச்சு. இன்றைக்கு இந்த பதிவை போடணும் அதேநேரம் போட்டியும் பார்க்கணும் என்பதற்காக இதுவரை வேறு சம்பவங்களையும் இன்னும் சில வீடியோக்களையும் இணைப்பாக இட்டு பதிவு தந்துள்ளோம். முதல் முறையாக நான் என்ன சொல்ல நினைக்கின்றேனோ அதை வீடியோவாக உங்களுக்காக தருகின்றேன்.

இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் போட்டி பற்றிய என் அலசலான பதிவு இது எனவே இந்த முயற்சிக்கு உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆரம்பிக்கின்றேன்.


Share:

Tuesday, April 20, 2010

ஐஸ்லாந்தில் வெடிக்கும் எரிமலை நேரடிப்படங்கள் சுட சுட - பகுதி II

முதலில் இட்ட இடுகையை தொடர்ந்து மிகுதிப்படங்கள் இப்போது. இந்த இடுகைக்கும் வாக்குப்போடுங்க. வாசகர்களை சென்றடைய.

Experts are concerned the recent eruption could trigger another more powerful one from the nearby Katla volcano


Part of the glacier has melted under the ferocious temperatures causing the flood swell to pour down the mountain


Workers have been forced to smash holes through roads in Iceland to allow the surging flood water to escape out to sea


The Eyjafjallajokull eruption is the second in less than a month and has seen hundreds of international flights cancelled


Spectacular: Plumes of smoke shoot up from a volcano under the Eyjafjallajokull glacier in Iceland today which has erupted for the first time in 200 years


Around 800 people have had to be evacuated and 70 tourists were rescued after they were trapped by the rising flood waters


A man surveys what is left of the main Icelandic coastal road after it was washed away by flood water following the volcano eruption


Spectacular: A satellite image of the volcano under the Eyjafjallajokull glacier in Iceland

Widespread: Ash from the erupting volcano sweeps in an arc across the Netherlands , Germany , Poland , and Russia in this image from NASA yesterday

Share:

ஐஸ்லாந்தில் வெடிக்கும் எரிமலை நேரடிப்படங்கள் சுட சுட - பகுதி I

எனக்கு இ-மெயிலில் வந்த ஐஸ்லாந்து தொடர்பான படங்கள் இவை. இவற்றை அனுப்பி வைத்த Jesuthasan Hemamuhunthini க்கு என் நன்றிகள்.




Dusty: A car in Iceland drives through the ash from the volcano


Frozen: Ice chunks carried downstream by floodwaters caused by volcanic activity lie on the Markarfljot riverbank in Iceland yesterday


Coating: Researchers at Sheffield Hallam University collected these particles of volcanic ash (seen here under a microscope) which fell on cars in the centre's grounds earlier today


The plume from the Icelandic volcano - seen as a grey-brown streak drifting across the middle of the image - is visible from space. It was imaged by the Modis instruments on two Nasa satellites as it blew towards the Shetland Islands


Close-up: The dark cloud of smoke coming from the Icelandic crater as seen by an Icelandic Coast Guard helicopter



Lava spurts out of the site of a volcanic eruption at the Fimmvorduhals volcano near the Eyjafjallajokull glacier



Only around an hour old, this lavaflow is falling from a steep cliff a few hundred metres from the main eruption




Lava hits the sea from the volcanic eruption between the Myrdalsjokull and Eyjafjallajokull glaciers, east of Iceland 's capital Reykjavik


Photographer Martin Rietze got to within 250 metres of the lava fountains to capture his stunning series of images

வந்த படங்களில் சில படங்களை முதலில் இடுகையாக இட்டுள்ளேன். இதை பார்த்துக் கொண்டே இருங்கள் உடனடியாக மிகுதி படங்களையும் இடுகின்றேன்.உங்கள் அனைவரிடமும் அன்பாக கேட்பது என்னவென்றால் வலைப்பூக்களில் உலாவும் நம் நண்பர்கள் எல்லோரையும் சென்றடைய இந்த பதிவிற்கு உங்கள் வாக்கினை அளித்து செல்லுங்கள்.
Share:

நான் வீட்டை விட்டு ஓடப்போகின்றேன்.




என்னத்த சொல்ல. நிறைய சொல்லணும் ஆனால் ரொம்ப சோம்பலாய் கிடக்கு. போன வாரம் யாழ் தேவி நட்சத்திரப்பதிவராய் தெரிவு செய்யப்பட்டதால ஒருநாளைக்கு இரண்டு மூன்று பதிவு போட்டன். இப்போ ஒன்று போடவே மூச்சிரைக்கிது. அதுக்காக ரொம்ப பிசியா இருக்கேன் என்று தப்புக்கணக்கு போடப்படாது. ஆமா சொல்லிப்புட்டன்.

வெற்றி எப்.எம்மில் வேலை செய்யும் போது எனக்கு இரவு தான் பகல் பகல் தான் இரவு. இரவு வேலை முடித்திட்டு பன்னிரண்டு மணிக்கு நம் அலுவலக வாகனத்தில் ஏறினாலும் பக்கத்தில் இருக்கும் வெள்ளவத்தைக்கு வருவதற்கு எனக்கு பன்னிப்பிட்டிய காட்டி ௦ந்ரரை இரண்டுக்கு வீட்டுக்கு கொண்டுவந்து விடும் நல்ல நண்பர் சாரதி. அப்புறம் சாப்பிட்டிட்டு அப்பிடியே வந்து இணையத்துக்கு முன்னால குந்தினால் இரண்டரை மூன்றுக்கு தான் தூக்கம் வரும்.மீண்டும் காலையில் எழும்பிறது என்னவோ பத்து மணிக்குத்தான். எழுந்தவுடன் பிரஷ் பண்றானோ இல்லையோ மீண்டும் இணையத்தில் இருக்கும் முக்கியமான சகல தளங்களும் நம் பதிவர்களின் வலைப் பூக்களையும் பார்த்து விட்டுத்தான் அடுத்த வேலை. காலை சாப்பாடு கொஞ்சம் லயிட்டா இருக்கும். அப்புறம் ஒரு இரண்டு மணி போல மதிய சாப்பாடு சாப்பிட்டு விட்டு அலுவலகம் போனால் மாலை ஆருமநிபோல பக்கத்துக்கு கடைக்கு போறது நம்ம வழக்கம். என்னடா அடிக்கடி சாப்பிடிறான் என நினைக்கலாம். நமக்குத்தான் இப்போ வயிறில் புண் உருவாக்கி இருக்கே. அடிக்கடி கொட்டிக்கோ அதுதான் நல்லம் என்பது டாக்டரின் அட்வைஸ்.

இப்பிடி சாப்பிட்டா எப்பிடி இருக்கும் என் உடம்பு. கொஞ்சம் கூட உடற்பயிற்சி இல்லை. இதனால தான் வீட்டை விட்டு வெளிய போய் ஓடலாம் என முடிவெடுத்தேன் ஓடிறன் ஓடிறன் ஓடிக்கொண்டே இருக்கேன். (ஓடாவிட்டால் சாப்பாடு போடிறாங்க இல்லை.) ஆனால் என்ன இரண்டு ரவுண்ட் ஓடிறதுக்குள் மூச்சு வாங்கிறது. கூட யாரும் அழகான பொண்ணுங்க ஓடினால் வாங்கதோ என்னவோ? அனுபவஸ்தர் யாரும் இருந்தால் சொல்லுங்க. ஏதோ கஷ்டப்பட்டு நாமளும் கொஞ்சம் அழகாய் இருக்கணும்(அதுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என யாரங்க கேட்கிறது) என்கிறதுக்காக ஓடிட்டிருக்கேன். என்னாலையும் நம்ப முடியல மூன்று வார ஓட்டத்துக்கு பின் ஒரு அரை இஞ்சி குறைஞ்சிருக்கு. இதில என்ன கொடுமை என்றால் என் ஒன்று விட்ட தங்கை வீட்டுக்கு போனால் அவள் நக்கல் தாங்க முடியல என்பதுதான் என்னுடைய இந்த கொலைவெறி ஓட்டத்துக்கு காரணம்.

நான் ஓடும் போது காலில் ஒரு சப்பாத்து அணிந்து தான் ஓடுகின்றேன். (இதை மட்டும் சொல்றாய் அப்போ உடுப்பு போடிறதில்லையா என கேட்கப்படாது.) நான் சொல்லப்போகும் விடயத்துக்கு இது முக்கியம் என்பதால் தான் சொன்னேன். சரி ஷூ இல்லாமல் ஓடலாம் என்று போனால்(எல்லாம் போட்டுக்கழற்றும் பஞ்சிதான்.) வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அப்படி ஓடாத காலில கல்லு முள்ளு குத்திடும் என பொங்கி எழுந்திடுவாங்க அப்புறம் என்ன பத்து நாள் தோய்க்காத சொக்சும் சூவும் போட்டுக்கொண்டு ஐயா ஓடிறதுதான் வேலை. எனக்கு ஓடிறதென்றால் அதற்கு கட்டாயம் ஷூ போடிறதுதான் என்ற எண்ணம் வந்துவிடாது. அதேபோல அந்த மைதானத்துக்கு வரும் பலரும் ஷூ அணிந்து வந்துதான் ஓடுகின்றனர். ஆனால் சில நாட்கள் போக வெறும் காலுடன் ஓடுபவர்களையும் நான் காணத்தொடங்கினேன். அடடா ஓடிறாங்களே அதுவும் வெறுங்காலோடு என கொஞ்சம் ஆச்சரியத்தோடு அவர்கள் செய்கையையும் கவனிக்கத்தொடங்கினேன்.

எங்களை போல எந்தவித கஷ்டமும் இன்றி மிக இலகுவாக ஓடினார்கள். பாதங்களும் முழுமையாக நிலத்தில் படும்படி அவர்கள் ஓட்டம் நேர்த்தியாக இருந்தது. கொஞ்சம் தயங்கித்தயங்கி கேட்டுவிடலாம் என்று நேற்று ஒருவரிடம் ஏன் நீங்கள் இப்படி வெறும் காலுடன் ஓடுகின்றீர்கள். ஷூ போட்டுத்தானே எல்லோரும் ஓடுகின்றார்கள் என்று சொன்னேன். அதற்கு அவர் சொன்னது எனக்கு சரியாகப்படது. ஷூ இன்றி ஓடும் போது காலுக்கும் பாதங்களுக்கும் எந்த தடையும் இல்லை. முழுமையாக எங்கள் பாதங்களை நிலத்தில் பதிக்க முடியும். அதுமட்டுமன்றி ஷூ அணிந்து ஓடுவது உடல் எடையை பாதிக்கும் என்று சொன்னார். எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஓடும் நமக்கு இப்படி ஒரு பிரச்சனை வருமா தெரியல. அவர் சொன்னது சரியோ தப்போ. சிலர் வெறும் காலுடன் ஓடுகின்றனர். எனவே ஏதோ ஒன்று இல்லாமல் இருக்காது. இப்போ நான் வெறுங்காலுடன் ஓடிறதா அல்லது ஷூ போட்டு ஓடிறதா தெரியல.

ஒரு முக்கியமான விஷயம் இந்த பதிவு type செய்து ரொம்ப களைத்துப்போனேன் என்று கொஞ்சம் கூல்ட்ரிங்க்ஸ் கரைத்துத் தாங்க என்று கேட்டால் .அம்மா தரமாட்டேன் என்கிறா. நன்றாக சீனியை குடிச்சு குடிச்சு இருக்கிற உடம்புக்கு வருத்தத்தை வாங்கிடாதயாம். நான் ரொம்ப பாவமுங்க.
Share:

Monday, April 19, 2010

சீ போங்க வெட்கமாய் இருக்கு.

என் முதல் இரண்டு போட்டோ கொமண்ட்ஸ் பதிவுகளும் கிரிக்கெட் சம்பந்தமாக இருந்தது. அதற்கு உங்கள் ஆதரவும் அமோகமாக இருந்தது. அந்த சந்தோசத்தில் இப்போது முதல் முறையாக சினிமா பதிவொன்று....இம்முறை என்ன கேட்கப்போகின்றேன். நாங்கள் எப்போதும் ஒரே பேச்சு தான் இண்டைக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒன்றில்லை. அதனால வாக்குப்போடுங்க கருத்து சொல்லுங்க...ப்ளீஸ் சீரியஸா எடுக்காமல் ரசித்து விட்டு போங்க.

இம்முறை பதிவில் முதல் மூன்று படங்களும் பார்ப்பதற்கு கொஞ்சம் எழுத்துக்கள் சிறிதாக இருக்கின்றன. எனவே படத்தில் மேல் சொடுக்கு பெரிதாக்கி பாருங்கள். அடுத்த முறை இந்த தவறை சரி செய்கின்றேன்.










Share:

Sunday, April 18, 2010

மோடியின் மோகம் ஐ.பி.எல் மாயம்

இந்தியாவின் கிரிக்கெட்டை வளப்படுத்துகின்றோம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் முதல் இரண்டு தொடர்களை விட இம்முறை சுவாரஸ்யத்தையும் சர்ச்சைக்களையும் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றது. கடந்த தொடர்களைப்போல் அல்லாமல் இந்த தொடர் ஆரம்பிக்கும் போது எங்கள் நண்பர்கள் வட்டத்தில் பெரிதான எதிர்பார்ப்பு இருக்கவில்லை. ஆனால் போக போகப்போக சூடு பிடித்தது.


முதல் போட்டியே அதிர்ச்சியும் ஆச்சரியமும் தந்த போட்டியாக மாறியது. கடந்த முறை சாம்பியனும் இறுதி இடம் பிடித்த அணியும் மோதிய அந்தப்போட்டியில் சாம்பியன்கள் மண்ணைக்கவ்வினர். ஆனால் அடுத்தடுத்த போட்டிகள் பெரிதாக கவர்ந்திழுக்காமல் போக சூடாக வெளிவந்த விடயம் தான் இந்த போட்டித்தொடரில் லலித் மோடி என்ன சொல்கின்றாரோ அதுதான் நடக்கின்றது என்றும் எந்த அணி வெல்லவேண்டுமென சொல்பவரும் அவர்தான் என்று. இதை எப்படி நம்பமுடியும்? கோடி கோடியாக காசை கொடுத்து தங்கள் சொத்தாக வாங்கியவர்கள் தங்கள் அணியை தோற்க்கவைப்பார்களா? அல்லது சர்வதேச வீரர்கள்தான் இதற்கு ஒத்துக்கொள்வார்களா? பாண்டிங் போன்று ஆரம்பத்தில் கர்ஜித்தவர்கள் இதை வெளியே கொண்டுவரமாடார்களா? இதற்க்கான பதில்கள் இன்னும் மர்மமாகவே இருக்கின்றன.

இனி நான் சொல்லப்போபவை எல்லாம் என் கோணத்தில் இருந்து பார்க்கப்படும் விடயங்கள். இது என் பார்வை என்பதை சொல்லிக்கொள்கின்றேன். காரணம் இந்தக்கருத்து பிறகு இப்படி நடக்கின்றது என நான் உறுதியாக சொல்கின்றேன் என்ற வாதத்தை கொண்டுவரக்கூடாது. முதல் போட்டியில் இப்படி ஒரு முடிவு கிடைக்கும் போதே கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும் இந்த தொடர் நிறைய மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது என்று.


ஒவ்வொரு அணிகளும் இம்முறை ஏற்படுத்திய ஆச்சரியங்களை பார்க்கலாம். கடந்தமுறை யுவராஜின் தலைமையில் ப்ரீத்தியின் கட்டிப்பிடி வைத்தியத்தில் ஐந்தாம் இடத்தை பிடித்த கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி இம்முறை அதன் தலைவராக மாற்றும் போதே சில கேள்விகளை கொடுத்தது. காரணம் அந்தணியில் யுவராஜ் நன்றாகத்தான் அணித்தலைவராக செயற்பட்டார். அவருக்கு விருப்பின்றியே தலைமைப்பதவியில் இருந்து தூக்கப்பட்டது யுவி பஞ்சாபை விட்டு விலக எடுத்த முயற்சி என்பதையும் தாண்டி இப்போதைய இலங்கை அணித்தலைவராக சங்கக்கார இருப்பினும் அதே அணியில் ஆடும் மகேள சிறந்த அணித்தலைவராக இருக்கும் நிலையில் சங்ககாவை தலைவராக்கியது. இவை எல்லாம் உட்கட்சிப்பூசலாக இருக்கையில் களம் வந்தது ப்ரீத்தியின் அணி. மூன்று போட்டியில் அடிமேல் அடிவாங்கிய அணி நான்காவது போட்டியில் சென்னையுடன் சூப்பர் ஓவர் முறையில் வெற்றி பெற்றது. இலகுவாக சென்னை வெல்லக்கூடிய போட்டியில் இந்த பரபரப்பான பஞ்சாபின் வெற்றி ஏன்? மீண்டும் தோல்வி முகம் கண்ட அணி போட்டிகள் சூடு பிடிக்கத் தொடக்கி அரை இறுதிக்கு அணிகள் தெரிவாகும் கட்டத்தை நெருங்க வீறுகொண்டு எழுகின்றது. பஞ்சாப். இது எப்படி சாத்தியமாயிற்று? சரி அணி தோல்வியில் இருந்து மீண்டு வந்து விட்டது என எண்ணினால் பரபரப்புக்காகவும் போட்டிகளின் விறு விறுப்பைக் கூட்டவும் தான் பஞ்சாப் இப்படி ஆடியதோ என அந்த அணியின் இறுதிப்போட்டியில் அடைந்த தோல்வி என்னை கேட்கவைக்கின்றது. மொத்தத்தில் பஞ்சாப் இம்முறை அரை இறுதிக்கு செல்லும் அணிகளை தீர்மானிக்கும் ஒரு அணியாகவும் பரபரப்பைக் கொடுக்கும் அணியாகவும் பயன்பட்டதா?


அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ், வார்னேயின் படையாக பல்லுக் கழன்ற அணியாக ஷில்பாவின் அரவணைப்பில் களம் கண்ட ராஜஸ்தான் வெற்றி தோல்வி என மாறி மாறி கண்டுவந்தது. பெரிதாக சோதனை ஆட்டங்களை ஆடாவிட்டாலும் இறுதிவரை அரை இறுதியில் தொங்கும் அணியாக இருக்க வைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதா என்பது என் அடுத்த கேள்வி? அடுத்ததாக கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணி, கடந்த தொடரில் கடைசி இடத்தில் வந்து நம்ம இளைய தளபதிக்கு ஈடாக வலையுலகில் வசைபாடப்பட்ட அணி இம்முறை வசீம் அக்ரம் என்னும் ஜாம்பவானின் பந்துவீச்சு பயிற்சியில் வெற்றியோடு ஆரம்பித்தது. ஆனால் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த அணி வங்கபுலியின் அதிரடி துடுப்பாட்டம் ஆச்சரியப்படும் களத்தடுப்பினால் வெற்றிக்கொடி கட்டத்தொடங்கி இடையில் அரை இறுதிக்கே வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டு மீண்டும் இன்று அரை இறுதிக்குள் நுழையலாம் என்ற வாய்ப்பை திறந்துவிட்டுள்ளது. நான் இந்தப்பதிவை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் மும்பை,சென்னை அணிகள் மாத்திரமே அரை இறுதிக்கு தெரிவாகி உள்ளன. பஞ்சாப்,ராஜஸ்தான் அணிகள் மூட்டை கட்டிவிடன. இன்று நடைபெறும் டெல்லி மற்றும் டெக்கான் அணிகளுக்கிடையிலான போட்டியில் வெல்லும் அணி மூன்றாவதாக அரை இறுதிக்குள் இன்று நுழைந்துவிடும். தன சகல போட்டிகளையும் முடித்துவிட்ட பெங்களூரின் எதிர்காலம் கொல்கத்தாவின் கையில் இருக்கின்றது. மும்பையுடன் கொல்கட்டா மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தால் அரை இறுதிக்குள் நுழைந்துவிடும். ஆனால் இதற்கான வாய்ப்பு மிக மிக அரிதானது.

எனவே மும்பை,டெல்லி அல்லது டெக்கான்,பெங்களூர், சென்னை அணிகளே அரை இறுதியில் மோதும் வாய்ப்புள்ளன. ஆனால் இதற்காக இந்த அணிகள் பட்ட பாடு அப்பப்பா சொல்லமுடியாது. மும்பையை பொறுத்தவரை சச்சின்,சச்சின், சச்சின்.......சச்சின் ஆட்டமிழந்தால் அணியே ஆட்டம் கண்டுவிடும் என்பது கண்கூடாக இருந்தது அணியை முழுமையாக தாங்கி கொண்டுசென்றது சச்சின்தான். இதுவே ஒரு கேள்வியாகிப்போனது எனக்கு? காரணம் சச்சின் மட்டுமே மும்பையில் சர்வதேச வீரர் இல்லையே. அதேநேரம் தங்கு தடை இன்றி முதலில் அரை இறுதிக்குள் நுழைந்தது கடந்தமுறை ஏழாம் இடம் பிடித்த மும்பை.


அடுத்து இன்றுவரை எங்களை எல்லாம் சோதித்து நகம்கடிக்க வைத்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி. இந்த அணியும் கிட்டதட்ட மும்பை போலவே ஆகியது. பந்துவீச்சு பலம் இல்லை. முரளி இருந்தும் பெரிதாக கைகொடுக்கவில்லை. போளிங்கேர் வந்த பின் பலம் பெற்றது. இடையில் தோணி காயத்தால் வெளியேற ரைனா தலைவராகி வெற்றியை பெற்றுக்கொடுத்தாலும் மத்திய வரிசை சொதப்ப சோடைபோன அணி மீண்டும் தோணி வர மீண்டு எழுந்தது. இவர்களை பொறுத்தவரை மங்கூஸ் கொண்டுவந்து ஹய்டேன் பெரிதாக கைகொடுக்காமல் போக விஜய் விஸ்வரூபம் எடுத்தார். தோனிக்கு தேவைப்படும் நேரம் ரைனா,பத்ரி கைகொடுக்க ஒருவாறு வந்துவிட்டார்கள். இலகுவாக வெல்லக்கூடிய போட்டிகளில் கோட்டைவிட்டது மட்டுமன்றி பலிக்கடா போல ஆடி வந்திருக்கின்றார்கள்


அடுத்து டெல்லி, கடந்த முறை புள்ளிகள் அடிப்படையில் முதலாவதாக இருந்தவர்கள் இம்முறை கம்பீரின் தலைமையில் வெற்றியுடன் ஆரம்பித்தனர் அதன் பின் அவர் காயத்தால் வெளியேற தினேஷ் கார்த்திக் தலைமையில் சொதப்பினர் மீண்டும் கம்பீர் வந்து கரை சேர போராடிக்கொண்டிருக்கின்றார். இம்முறை சேவாக் பெரிதாக வானவேடிக்கைகளை நிகழ்த்தவில்லை. என்பதுடன் பலமான அணி ஒன்று இப்படி பல்லிளித்து நின்றது. என் கேள்விகளை மேலும் கூட்டியது.


டெக்கானை பொறுத்தவரை கில்லி தான் முழு பலம். ஆனால் அவர் பலம் சில போட்டிகளில் படுத்துப்போக அவ்வப்போது சைமண்ட்ஸ்,ரோஹித் கைகொடுத்து இன்று இந்த தொங்குபாலம் வரை கொண்டுவந்து விட்டனர். கடந்தமுறை சாம்பியன்கள் இன்று வாழ்வா சாவா என போராடிக்கொண்டிருக்கின்றனர். இவர்களும் இலகுவான சில போட்டிகளில் வேண்டுமென்ற தோற்றார்களா? கடந்தமுறை இறுதிவரை வந்த பெங்களூர் இம்முறை கொல்கட்டாவிடம் தங்கி இருக்கின்றது. கலிஸ் ஆரம்பத்தில் ஆட்டமே இழக்காமல் ஆடிவர கோலியும் கைகொடுக்க வெற்றிநடை போட்டுவந்த அணி அடுத்தடுத்த சரிவுகளை சந்தித்தாலும் அரை இறுதி வாய்ப்பு இன்னும் இருக்கின்றது.

இவை எல்லாம் அந்தந்த அணிகளின் மீதான என் பார்வை. மும்பை முதலில் நுழைந்தாலும் தன லீக் போட்டியின் இறுதிப்போட்டியில் வென்றால்தான் உள்ளே என்ற நிலையில் ஆடிய சென்னை உள்ளே வந்துவிட்டது. இன்று இவர்கள் தோற்றிருந்தால் பஞ்சாபுக்கு கூட அரை இறுதி வாய்ப்பு கிடக்கும் அணி என சொல்லும் அளவிற்கு தொடர் வந்திருக்கும். இந்த பரபரப்பு யாரால் உருவாக்கப்பட்டது? ராஜஸ்தான் தன இறுதிப்போட்டியில் வென்றால் அரை இறுதி வாய்ப்புண்டு இல்லை என்றால் வெளியே இதேபோலத்தான் கொல்கத்தாவிற்கும் என்ற நிலையில் நடைபெற்ற நிலையில் வென்ற கொல்கத்தா ராஜஸ்தானை வீட்டுக்கு அனுப்பிவிட்டு இன்னும் பரபரப்பை கூட்டி தன் இறுதிப்போட்டிக்காக காத்திருக்கின்றது. வென்ற அந்தப்போட்டியில் கங்குலி தனி மனிதனாக வென்று கொடுத்தார் என்றே சொல்லலாம்.


டெக்கான் டெல்லி அணிகளை பொறுத்தவரை இன்று நடைபெறும் தங்கள் கடைசிப்போட்டிவரை உள்ளே வெளியே ஆட்டத்திற்கு காத்திருக்கின்றார்கள். வெல்பவர் உள்ளே மற்றவர் வெளியே. பெங்களூருக்கும் லீக்கின் கடைசி ஆட்டத்தில் தான் தலைவிதி தெரியப்போகின்றது. கடைசிப்போட்டிவரையான பரபரப்பு உண்மையில் போட்டியால் வந்ததா? அல்லது பணத்தின் விளையாட்டா? இடையே வந்த புது அணிகளுக்காக ஏலம், அதேநேரம் இப்போது இருக்கும் அணிகளில் பல அணிகளில் மோடியின் நெருங்கியவர்களின் பங்கு இருப்பது என்பதையும் தாண்டி மோடிதான் போட்டியின் முடிவை தீர்மானிக்கின்றாரா என்ற கேள்வி எழுகின்றது. இன்று மோடியின் வண்டவாளம் தண்டவாளம் ஏறிக்கொண்டிருக்கும் நிலையில் அவரின் அதிகாரங்களை குறைக்கும் வாய்ப்பும் இருப்பதாக சொல்லப்படுகின்றது.

அத்துடன் இந்த ஐ.பி.எல்லின் கறுப்பு சரித்திரத்தை பார்த்தால் இன்னும் சில உண்மைகள் வெளிவருவதுடன் வீர்களின் ஆட்டத்தை விட மோடியின் ஆட்டம் மிக சிறப்பாக இருந்ததோ என தோன்றுகின்றது. காரணம் இந்திய வீரர்களை ஊக்குவிக்க என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடரில் இன்றுவரை ஒரு இந்திய வீரர் தலைமை தாங்கிய அணி சாம்பியன் ஆகியுள்ளதா? முதலாவது தொடரில் 7ம் 8ம் இடங்களை முறையே பெற்ற பெங்களூர் மற்றும் டெக்கான் அணிகள் அடுத்த தொடரில் இறுதியில் மோதின. இதில் இறுதி இடம் பிடித்த டெக்கான் சாம்பியனானது. இம்முறையும் கடந்தமுறை ஏழாம் இடம் பிடித்த மும்பை அரை இறுதிக்கு தெரிவாகி இருக்க எட்டாம் இடம் பிடித்த கொல்கத்தா அரை இறுதி வாய்ப்புக்ககா கடுமையாக போராட உள்ளது. சிலவேளை மும்பையை அசாத்தியமாக தோற்கடித்து அரை இறுதிக்குள் வந்தால் அது நிச்சயம் மோடியின் விளையாட்டே. ஆனால் தன் மேல் ஒருவிதமான பார்வை ஆரம்பித்த பின் மோடி அடங்குவாரா என்பது அடுத்த கேள்வி?


இன்னொரு சுவாரஷ்யமான விடயம் என்னவென்றால் இந்த தொடர்களில் இதுவரை நடைபெற்ற இரண்டு தொடரிலும் நீல நிற ஆடை அணிந்த அணிகளே வென்றிருக்கின்றன. ராஜஸ்தான்,டெக்கான் அணிகள் நீல ஆடையில் கிண்ணத்தை வென்றன. இம்முறை அரை இறுதியில் இருக்கும் அணிகளில் மும்பை மட்டுமே நீல ஆடை அணிந்துள்ளது. டெக்கான் வந்தால் அதுவும் சேர்ந்துவிடும். போட்டியின் போக்கை பார்த்தால் வாய்ப்பில்லை போல தெரிகின்றது. மோடியின் ஆட்டமும் அதுதானே? எது எப்படியோ. என்னை பொறுத்தவரை அரை இறுதியில் இம்முறை மும்பையுடன் டெல்லியும் சென்னையுடன் பெங்களூரும் மோதும் என்றே எதிர்பார்க்கின்றேன். இதில் மும்பையும் சென்னையும் இறுதியில் மோதும் வாய்ப்பு உண்டு. காரணம் இறுதி மும்பையில் நடக்கப்போகின்றது. சச்சினும் தோனியும் மோதினால் போட்டியும் பரபரப்பாகுமே.அதேநேரம் இறுதியில் வெல்லப் போவதும் மும்பை தான். காரணம் இறுதிப்போட்டி மும்பையிலல்லவா நடக்கப்போகின்றது. ரசிகர் நிறைய வந்து போட்டி பிரபலமானால்தானே மோடி நிறைய பணம் கண்டு மோகத்தில் திக்கு முக்காட முடியும்.

திரு மோடி அவர்களே. நான் இதுவரை கேட்ட கேள்விகள் என் நியாயங்கள் எல்லாம் பொய்யாய் இருக்க வேண்டும் ஏனென்றால் இந்த ஐ.பி.எல், கிரிக்கெட்டில் மாற்றம் கொண்டுவந்தது உண்மைதான். பல வீரர்கள் வெளிவந்ததும் உண்மை. ஆனால் இதெல்லாம் பொய்யாகிப்போனால் அவர்கள் திறமை மீதே நாம் சந்தேகப்பட வேண்டிவரும். அதேநேரம் பல ரசிகர்கள் இந்த போட்டியினால் மாதக்கணக்கில் கட்டுண்டு கிடக்கின்றார்கள் தங்கள் நகத்தைக்கடித்துக்கொண்டு பார்த்த போட்டிகள் எல்லாம் திட்டமிட்ட நாடகங்கள் என்றால் எப்படி இருக்கும். நாங்கள் என்ன முட்டாள்களா? கிரிக்கெட் கிரிக்கெட்டாக இருக்கட்டும். அதை உங்கள் தனி மனித ஆட்டமாக்கிவிட வேண்டாம். இந்த ஐ.பி.எல்லில் என்ன நடந்தது என்பது விரைவில் வெளிவரும். உண்மைகள் எப்போதும் உறங்காது. அந்த உண்மை சதீஷ் எழுதிய பதிவு பொய் அவன் எல்லாம் பதிவு எழுதுகின்றானா என்று என்னை கேட்டாலும் பரவாயில்லை. கனவான்களின் ஆட்டம் களங்கப்பட்டுவிடவில்லை என்றால் அது என் சந்தோசமே.

Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive