உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Monday, June 29, 2009

கண்ணைக்கவரும் கவர்ச்சிப்படங்கள்.

























எனக்கு நண்பர் ஒருவர் e-mail மூலம் அனுப்பிய சில கவர்ச்சியான படங்களை இங்கே பகிருகின்றேன். நிச்சயமாக இவை உங்களை கவரும் கவர்ச்சிப்படங்கள் தானே. பிடித்திருந்தால் அப்படியே ஒருதடவை வாக்களித்துவிட்டு போங்களேன்.
Share:

Saturday, June 27, 2009

விஜய்,அஜித்தை மிஞ்சிய ஆர்யா!

நடிப்பில் நல்லா நடிப்பார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசத்துவார். நடிகராக திறமையானவராக இருந்தாலும் வணிக ரீதியாக பெரிய வெற்றியாளர் இல்லை.அறிந்தும் அறியாமலும் தான் இதுவரை இவரின் மிகப்பெரிய வெற்றிப்படம் ஆனால் அதுதான் முதல்படமும் கூட. ஆனால் நடிப்பில் சிகரம் தொட்டது. பாலாவின் நான்கடவுள் தான் இவரின் நடிப்பு பசியை தீர்த்தது. அப்போதும் அந்தப்படத்துக்கு அதிககாலத்தை செலவழித்த களைப்பு தீரமுதலே படம் பெட்டியைக்கட்டியது.

ஆனால் அதன் பின் இன்னுமொரு பரீட்சாத்தமாக மதராசுப்பாட்டனம் என்னும் சரித்திர படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். அடுத்ததாக சிக்குபுக்கு படமும் வரபோகின்றது. நடிப்பில் சாதிக்க எவ்வளவோ இருக்கும் போது விஜய் அஜித் கூட செய்யாத ஒரு அரிய முயற்சியை(இது எத்தனை நாளைக்கோ தெரியல) இப்போது செய்யப்போகின்றார். நடிக்கவே நேரம் ஒதுக்க முடியாத நிலையில் இவருக்கு "த ஷோ பீப்பிள்" என்னும் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து படம் தயாரிக்கப்போகின்றாராம்.

படித்துறை என்னும் இந்த படத்துக்கு இளையராஜா இசை அமைப்பது தான் மிகப்பெரிய அதிசயம். முதல் படத்திற்கே இசைஞானி இசை அமைப்பது அவருக்கு வெற்றியே. படமும் வெற்றி அடைந்தால் அதன் பின் நல்ல படங்களை கொடுத்தல் விஜய், அஜித்தை ஆர்யா மிஞ்சுவார்தானே சொல்லுங்க.
Share:

Monday, June 22, 2009

தேவையா இது?இளைய தளபதி டாக்டர் விஜய்க்கு .............


வெற்றிமாலைக்கென்று பிறந்தவனே.......


இன்றோடு உங்களுக்கு முப்பத்தாறு வயதாகின்றது. நடிக்கவந்து ஐம்பதாவது படமும் தொடப்போகின்றீர்கள். எல்லாவற்றுக்கும் உங்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.

கொஞ்சம் உங்கள் கடந்த கால வாழ்க்கையை நீங்கள் அலசிப்பார்க்கவேண்டும். அப்படி பார்க்கும் போதுதான் நீங்கள் இப்போது எங்கே நிற்கிறீர்கள் அரசியல் தேவையா என்பது தெரியும்.

தாய் ஷோபா மற்றும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் விஜய்.



உங்கள் தந்தை தன்னை ஒரு புரட்சிகரமான இயக்குனராக ஓரளவு வெற்றிகரமான இயக்குனராக நிரூபிக்க, பட்ட கஷ்டங்கள் தெரிந்தவர் நீங்கள். ஒருமுறை நீங்களே ஒரு பேட்டியில், உங்கள் இளவயது கஷ்டங்களை எல்லாம் சொன்னிர்கள். நீங்கள் குழந்தையாக இருக்கும் போதே குடிக்கும் பால் மா இல்லாமல் கஷ்டப்பட்டது, பெட்ரோல் நிலையத்தில் இருந்து படித்தது எல்லாம் உங்களுக்கு நினைவிருக்கும். இதை நீங்களே சொல்லி இருப்பதால் நிச்சயம் நீங்கள் பழசை மறக்காதவர் என்பது தெரிகின்றது.


குட்டி விஜயின் பிறந்தநாள்.

உங்கள் வாழ்வில் நீங்கள் கலகலப்பானவர் ஆனால், தங்கையின் இழப்பே உங்களை இப்படி மாற்றியது என்பதை ஏற்கின்றோம். இந்த அமைதி பக்குவம் எல்லாருக்கும் வராது. லயோலா கல்லூரியில் படிக்கும் போதே கல்லூரிக்கு "கட்" போட்டிட்டு உங்கள் தலைவர்(இப்போ இவர் யாரென கேட்கக்கூடாது) ரஜினியின் படம் பார்க்காப்போனது எல்லாம் உங்களுக்கு சுவையாக இருக்கும். ஆனால் அதுதான் பின்னர் உங்கள் சினிமா வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது என்பது உண்மையே.



தமிழ் திரையில் சொந்தக்காலில் விஜய்.


உங்கள் தந்தை இயக்குனர், தாய் தயாரிப்பாளர், கதாசிரியர், பாடகி இப்படி இருக்கும்போது நீங்கள் சினிமாவிற்கு வந்தது ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் பலர் சொல்வது போல உங்கள் தந்தை மற்றும் தாய் ஆரம்பத்தில் உங்களை தாங்கிப்பிடித்து வளர்த்ததை நீங்களும் ஏற்கத்தான் வேண்டும். அதுமட்டுமில்லாமல் அதனாலே மட்டும் நீங்கள் இன்று இந்த நிலைக்கு வந்தீர்கள் என்பது ஏற்கமுடியாது. வாரிசாக மட்டும் இருந்தால் ஜெயிக்கமுடியாது. திறமையும் வேண்டும், அந்த திறமை இருப்பதால் தான் இன்று உங்கள் நிலை இப்படி.


தளபதியும் இளையதளபதியும்....... ஒரேமாதிரி யோசிப்பாங்களோ?

அண்ணாமலை திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சியை உங்கள் தந்தைக்கே நடித்து காட்டி ரஜினிதான் உங்கள் குரு என சொல்லாமல் சொல்லி நடிக்க வந்த நீங்கள் அறிந்தோ அறியாமலோ அவரை பின்பற்றியது ஆச்சரியமில்லை.(ஏனெனில் ஒரு துறையில் ஒருவரை நாங்கள் ரசிக்கும் போது அதே துறைக்கு நாம் வந்தால் அவர் பாதிப்பு நம்மிடம் வரும் என்பது தவிர்க்கமுடியாததே.) அப்படி இருக்கும் போது ஒரு சில தனித்தன்மைகளோடு உங்கள் படங்களை கொடுக்கின்றீர்கள்.

திருமணக்கோலத்தில் இலங்கைமண்ணின் மகள் சங்கீதாவுடன்.

உங்கள் திரைபிரவேச காலத்தில் நீங்கள் நடித்த சில திரைப்படங்கள் இன்று நீங்களே பார்க்கும் போது ஏன் நடித்தோம் என உங்களுக்கு தோன்றும். (உதாரணம் மாமிக்கு "soap" போடும் நல்ல தரமான காட்சிகள்.) ஆனால் அதை எல்லாம் இப்போது பேசுவதை விட காலம் கடந்தும் நிற்கும் படத்தை கொடுப்பதே உங்களுக்கு நல்லது. பொதுவாக நீங்கள் நடிக்கும் படங்கள் பெரிதாக கதை இருப்பதில்லை. ஆனால் ஏதோ சுவாரஷ்யம் இருக்கும். உங்கள் வெற்றியும் அதுதான், உங்கள் தோல்வியும் அதுதான்.


அன்றும் இன்றும் ஒரு சில வித்தியாசங்களுடன்.

இதிலே முக்கியமான விடயம் என்னவென்றால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் நடித்த பல திரைப்படங்கள் முதலுக்கு மோசமில்லாமல் ஓடியதுதான். இன்று பெரும் விமர்சனத்தை சந்தித்த வில்லு, குருவி படங்கள் கூட யாரையும் ஏமாற்றவில்லை. உங்களின் மிகப்பெரிய வெற்றி அதுதான். அதனால் தான் உங்களுக்கு எம்.ஜி.ஆர்,ரஜினி என்ற ஜாம்பவான்களுக்கு பிறகு வசூல் நாயகனாக ஒரு இடத்தை மக்கள் கொடுத்திருக்கின்றார்கள். அதை புரிந்து நீங்கள் உங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

சிறுவயதில் விஜய்.

பொதுவாக நீங்கள் தோற்றத்தை மாற்றாது ஒரே தோற்றத்தோடு ஒரேமாதிரியான படத்தை கொடுத்தாலும் முன்னணி கதாநாயகனாக வலம் வருவது சாதாரண விடயமில்லை. அதாவது உங்கள் படம் ஓடுவது உங்களுக்காக மட்டும்தான் என்பதை நிரூபித்து நிற்கின்றது. அதிலும் கதை சேர்த்து நடித்தால், நீங்கள் இன்னும் உங்களை உயர்த்தலாம் என்பது உங்களுக்கு தெரியாதா?. ஆரம்பகால உங்கள் படங்கள் பலத்த விமர்சனத்துக்கு உள்ளானாலும் அதன் பின்னர் அதை எல்லாம் மாற்றி இன்று தாய்க்குலத்தின் மதிப்பை வென்ற ஒருவர் நீங்கள் தான். சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அத்தனை பேரையும் திருப்திப்படுத்தி கட்டி வைத்திருப்பது என்பதும் ஒரு சாதனையே.

டாக்டர் பட்டம் ஷங்கருடன். எஸ்.ஏ.சியின் இரண்டு மாணவர்களும்.

நீங்கள் செய்த சமுகசேவைகள் இன்னும் அளப்பரிய சேவைகளை(என்ன என கேட்கக்கூடாது.) எல்லாம் பாராட்டித்தான் உங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுத்தார்கள். ஆனால் அதுவே இன்று உங்களை இங்கே கொண்டுவந்து விட்டிருக்கின்றதா என்பதே என் கேள்வி. நன்றாக போய்க்கொண்டிருந்த உங்கள் திரைப்பயணத்தில் அண்மையில் பல சறுக்கல்கள். அதை திருத்தி கொடுக்கும் அக்கறையே இல்லாதவர் போல உங்கள் நடவடிக்கைகள் இருக்கின்றது. அடிமட்ட ரசிகர் முதல் அவுஸ்ரேலிய அரசியல் தலைவர்கள் வரை உங்களை ரசிக்கின்றார்கள்.(இந்திய சஞ்சிகை ஒன்றில் பார்த்தேன்) அப்படி இருக்கும் போது தரமான படங்களை கொடுக்கவேண்டாமா?


கிடைச்சது இதுமட்டும் தானுங்கண்ணா.......


ஒரு காலத்தில் உங்களுக்கு நடனம் தெரியாதென நடன இயக்குனர் திட்டியதால் அதன் பின் உங்கள் முயற்சியினால் தானே இன்று நடனத்தில் உங்களை யாரும் அடிக்க முடியாவில்லை. அதேபோல கதையிலும் உங்கள் நடிப்பிலும் கவனம் செலுத்தலாமே.(நான் இயக்குனர்களை நம்புறன் அவங்க தான் கவுத்து விடுறாங்க என சொல்லாதிங்க.)

உங்களின் படிக்கல். அப்போது ஏற்றிவைத்தவர். இப்போது இறக்கியும் விடுகின்றார்.

சினிமாவில் உங்கள் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் உங்கள் தந்தை என்பதை மறுக்கமுடியாது. உங்கள் ஆரம்பகாலத்தில் அவர் எடுத்த சில முடிவுகள் உங்களை இன்று சிகரத்தில் வைத்திருக்கின்றது. அதை இன்றும் நம்பிக்கொண்டிருக்கின்றீர்கள். ஏன்??????? இவ்வளவு அனுபவம் எத்தனையோ பிரச்சனைகளை எல்லாம் பார்த்து வெற்றி தோல்விகள் எல்லாம் பார்த்த நீங்கள் ஏன் முடிவெடுப்பதற்கு இன்னும் குழம்புகின்றீர்கள். நீங்கள் குழம்புவதோடு ரசிகர்களையும் குழப்புகின்றீர்கள். ஆனால் உங்களை குழப்புவது என்னவோ உங்கள் தந்தை தான். அவரை கொஞ்சம் யோசித்து பார்க்க சொல்லுங்கள். ஒழுங்காக மைக் பிடித்தது பேசத்தெரியாத உங்களுக்கு எதுக்கு அரசியல்.
இந்தியாவே விஜய்க்கு பின்னாலயாம்!!!!!!

மகனை முதல்வராக்கிப்பார்ப்பது அவருக்கு ஆசையாக இருக்கலாம். ஆனால் நீங்கள் சினிமாவில் சாதிக்க இன்னும் எவ்வளவோ இருக்கின்றது. உங்களுக்கு தெரிந்த அந்த துறையில் முதலில் சாதனை நாயகானாக முன்னுக்கு வாருங்கள். ஒரு காலத்தில் ஸ்டார் பட்டத்தின் மேல் இளம் நடிகர்களுக்கு இருந்த ஈர்ப்பு இப்போது உங்கள் தளபதிப்பட்டம் மேலேதானே. அது ஏன் உங்களுக்கு புரியவில்லை. தமிழ் சினிமாவில் நீங்கள் இன்னும் உழைத்தால் உங்களுக்கு ஒரு சிகரத்தை தர ரசிகர்கள் காத்திருக்கும் போது ஏன் இப்பட்டிப்பட்ட ஆசை. நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வரவேண்டுமென்றால் அரசியல் என்ன ஆகுமென யோசியுங்கள்.


இவரும் ஒரு வழிகாட்டியா? நடக்கட்டும் நடக்கட்டும்.

எனைப்பொறுத்தவரை நீங்கள் சுயமாக சிந்திக்கவில்லை என நினைக்கின்றேன். உங்களுக்கு பிடிக்காத இந்த அரசியலில் உங்கள் தந்தையின் வலுக்கட்டாயத்தால் தான் இறங்க முடிவெடுத்தீர்கள் என நினைக்கின்றேன். இப்போது நீங்கள் அந்த முடிவை பிற்போட்டிருப்பது சந்தோசம். இந்த இடைப்பட்ட காலத்தில் யோசித்து நல்ல முடிவெடுங்கள்.

இப்பிடி கூடும்போதே திட்டம் தீட்டுவாங்களோ?


ஏராளமான ரசிகர் பலம், அரசியல் பலம் இருக்கும் ரஜினியே அரசியலுக்கு வர தயங்கும்போது உங்களுக்கு ஏன் இந்த அவசரம். ஆனால் நீங்கள் ரஜினியின் விசிறி என நிரூபிக்கின்றீர்கள். அதுதான் அரசியக்கு வருவேன்.......ஆனால் வரமாட்டேன்.


உன்னால் முடியும் என்பது உங்களுக்கும்தான் விஜய்.(நல்ல படங்களை கொடுப்பதை சொன்னேன்.)

உங்களுக்கு அரசியல் வேண்டாம். சினிமாவே போதும் ஆனால் அதிலும் ரசிகர்களை சோதிக்காமல், உங்களை பற்றி வரும் விமர்சனங்களை எல்லாம் உடைக்கும் படி உடனடியாக மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கவேண்டியதே இப்போதைய காலத்தின் தேவை. அதுமட்டுமன்றி ஐம்பதாவது படத்தை ஒரு பிரமாண்ட வெற்றிப்படமாக கொடுப்பதே இதுவரை உங்களை நம்பிய ரசிகர்களை நீங்கள் திருப்திப்படுத்த ஒரே வழி. உன்னால் முடியும் என கொடியில் பதித்திருக்கும் உங்களாலும் முடியும் என்பதை தலைவரான நீங்கள் முதலில் நம்பவேண்டும். எனவே கொஞ்சம் சிரத்தை எடுத்தால் உங்களை விஞ்ச எவரும் இல்லை. வெற்றிமாலை உங்கள் தோள்களில் ஆடாமல் போக வாய்ப்பும் இல்லை. அதை விட்டுவிட்டு எனக்கும் silence சொல்லிவிட்டு நீங்கள் வேண்டாத துறைதான் வேண்டுமென போனால் அங்கே உங்களுக்கு silence சொல்ல நிறையபேர் காத்திருப்பார்கள்.
Share:

Saturday, June 20, 2009

இறுதிக்கட்டத்தில் இலங்கை-பாகிஸ்தான்.- ஒரு முழு அலசல்.

ஒருவாறு பல்வேறு அதிர்ச்சிகளோடும் ஆச்சரியங்களோடும் என் முந்தயபதிவில் என் கணிப்புக்கெல்லாம் சாட்டை அடி கொடுத்ததுபோல T20 உலகக்கிண்ணம் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டது.

நிறைவில் கடந்தமுறை போல் இம்முறையும் இறுதிவரை வந்து அசத்திய பாகிஸ்தான் அணிக்கா? அல்லது அதிஷ்டதேவதை தலையில் ஏறி ஆடும் நம் சங்கக்காரவின் கையில் தான் T20 உலகக்கிண்ணம் தவழப்போகின்றது என தெரியப்போகின்றது.

பயிற்சிப்போட்டிகள் ஆரம்பித்தது முதல் பரபரப்பு தொடங்கிவிட்டது. என்ன ஆச்சரியம், பயிற்சியில் சொதப்பிய இரண்டு அணிகளுமே இப்போ இறுதியில். முதல் போட்டியிலேயே இங்கிலாந்துக்கு, நெதர்லாந்து அணி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தபோதே, பதிவர்கள் நாம் கொஞ்சம் யாக்கிரதையாக கணித்திருக்கலாம் என்ன செய்வது பெரிய ஜாம்பவான்கள் மேல் வைத்த நம்பிக்கையில் கணித்துவிட்டேன்.

T20 எல்லாம் டூப்பு 50-50 தான் டாப்பு.

இம்முறை களங்கங்களை எல்லாம் துடைத்து T20 கிண்ணத்தை ஏந்துவோம் என்ற நினைப்பில் வந்த அவுஸ்ரேலியா முதல் போட்டியிலேயே மேற்கிந்திய தீவுகளிடம் மரண அடிவாங்கி விட்டது. அதுவும் ஏழு விக்கெட்டுகளால் தோல்வி. அடுத்தபோட்டியில் இலங்கைக்கு சவுக்கடி கொடுக்கலாம் என்றால் அடேய் வலிக்கிறமாதிரி விரட்டி விரட்டி அடிகின்றான்களே என பாண்டிங் மற்றும் சகாவினர் அழாதகுறையாக இலங்கையும் ஆறு விக்கெட்டினால் தோற்கடித்து ஒருநாள் சாம்பியன்கள் மற்றும் டெஸ்ட் நாயகர்களை பெட்டியை கட்டவைத்தனர். அந்த வகையில் இம்முறையும் அவர்களுக்கு T20 எட்டாகனி ஆகிவிட்டது. இவர்களை பற்றி பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை காரணம் இன்னும் இவர்களுக்கு T20 சரிப்படவில்லை. அதீத நம்பிக்கைக்கு ஏற்ப செயற்பட்டு இருந்தால் வென்றிருக்கலாம்.

அது ஒரு காலம் அழகிய காலம்.

அடுத்தவர்கள் உண்மையில் T20 உலகசாம்பியன்கள் கடந்தமுறை. ஆனால் இம்முறை அப்படி எந்த ஆட்டைத்தையும் வெளிப்படுத்தவில்லை. நியூசிலாந்துடன் தோல்வி. வழக்கமாக நியூசிலாந்து தானே T20 இல் இவர்களின் வில்லன். போட்டி தொடங்கியபின் எல்லாம் சரி ஆகிவிடும் என பார்த்தால், பங்களாதேஷ் அணியுடன் ஏதோ வென்றோம் என்னும் அளவிலே தான் அவர்கள் விளையாட்டு. அதன் பின் உப்புசப்பில்லாமல் செத்த பாம்பான அயர்லாந்தை வாரிக்கட்டிக்கொண்டு பிரித்து மேய்ந்தார்கள்.. (ஆனால் இம்முறை அயர்லாந்து தன் வரவு சரியானதே என நிரூபித்துவிட்டது.)

ஒருவாறு சூப்பர் 8க்குள் நுழைந்த இந்தியாவிற்கு அதன் பிறகு தான் ஆப்பு காத்திருந்தது. மேற்கிந்திய தீவுகள் , இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளை வீழ்த்தவேண்டிய கட்டாய சூழல். ஆனால் முதல் போட்டியிலேயே மேற்கிந்திய தீவுகள் கொடுத்த அடி இடியாகி போனது. அடுத்த இரண்டு போட்டியும் வென்றாக வேண்டிய சூழலில் இங்கிலாந்துடன் போட்டி. தோனியின் சில பிழையான கணிப்புகள் அணியின் ஒட்டுமொத்த தப்பாட்டம் என இதிலும் மூன்று ஓட்டத்தால் தோற்று தொடரை விட்டே வெளியேறியது இந்தியா.

ஷேவாக் இல்லாதது நன்றாகவே தெரிந்தது. யுவராஜ் துடுப்பில் மட்டுமே பந்துபடும் மற்றவர்கள் துடுப்பில் படமாட்டாது என எல்லோரும் ஆட இந்தியாவே ஆடிப்போனது. (இதை பற்றி பல பதிவர்கள் பதிவிட்டிருப்பதால் அதை விட்டுவிடுவோம்.) அதன் பின் தென் ஆபிரிக்காவிடம் வென்றாவது ஆறுதல் வெற்றி பெறலாம் என்றால் அங்கும் வேகவில்லை பருப்பு. மொத்தத்தில் ஒரு சாதாரண அணியைபோல ஆடிவிட்டு நாடு திரும்பியது இந்தியா.

வரும் காலம் வசந்தமாகும்.

மாற்றங்களை தரும் என எதிர்பார்த்த பங்களாதேஷ் இம்முறை கத்துக்குட்டி அணியாக வெளிஏறிவிட்டது. முதல் போட்டியில் அதிர்வை தந்த நெதர்லாந்து பின் சோர்ந்து போய்விட்டது. ஸ்கொட்லாந்து வந்ததும் தெரியல போனதும் தெரியல. இந்த மூன்று அணிகளும் இம்முறை அடவியை நிரப்பியது மட்டுமே மிச்சம்.

அள்ளவும் முடியல வெல்லவும் முடியல உலககிண்ணத்தில் ஏதோ ஆகிப்போச்சு.

இங்கிலாந்து அணி முதல் போட்டியில் கண்ட தோல்வியுடன் சுதாகரித்து விட்டது. இறுதிவரை வந்திருக்கும் பாகிஸ்தானை ஆரம்ப சுற்றிலேயே வீழ்த்தி சூப்பர் 8க்குள் வந்து விட்டது. அங்கேயும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆபிரிக்காவிடம் அடிவாங்கிய அணி சாம்பியன்கள் இந்தியாவிற்கு இடியை கொடுத்துவிட்டு தானும் வெளியேறிவிட்டது. இவர்களின் ஆட்டம் பெரிதாக சொல்லும் படி இருக்கவில்லை.

காயம்தான் எங்களை போட்டு வாட்டி எடுத்ததே.

நியூசிலாந்து அணி இம்முறை அரை இறுதிவரை வரும் என எதிர்பார்க்கப்பட, சுக்கிரதிசையோ என்னவோ எல்லாத்திலும்(யாரும் தேவையற்றதையும் சேர்த்தால் நான் பொறுப்பல்ல நான் சொல்வது போட்டிகளை.) நியூசிலாந்தின் கனவையும் உடைத்தது. இன்னும் எத்தனை நாடுகளை ஏமாற்றி மூக்குடைக்கப்போகின்றதோ?(இதுவும் கிரிக்கெட் போட்டிகள் தான்.)

ஆரம்பத்தில் ஸ்கொட்லாந்தை வென்று தென் ஆபிரிக்கவிடமே ஒரு ஓட்டத்தினால் தோற்று இம்முறை சாம்பியன் ஆகும் கனவுடன் சூப்பர் 8க்குள் வந்தவர்கள் அயர்லாந்தை வென்று வெற்றியை தொடர பாகிஸ்தான் அதற்கும் முட்டுக்கட்டை போட்டு விட இலங்கை அதற்க்கு முடிவே கட்டிவிட்டது. அணியில் பல வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டது தான் இறுதியில் இவர்களுக்கு எமனாகிப்போனது.


சென்று வா மகனே.

அயர்லாந்து அணியினரை பொறுத்தவரை இம்முறை கலக்கியவர்கள் என சொல்லலாம். பங்களாதேஷை வீட்டுக்கு அனுப்பிவிட்டு சூப்பர் 8க்குள் வந்தவர்கள் இறுதிவரை வந்திருக்கும் இலங்கையை கொஞ்சம் ஆடவைத்டவர்கள் இவர்களே. அதைவிட இவர்களை பற்றி சொல்லவேண்டும் என்றால், இப்படியே போனால் மிகவிரைவில் தவிர்க்க முடியாத ஒரு அணியாக மாறிவிடுவார்கள்.

அதிரடிக்காரன் மச்சானே.

மேற்கிந்திய தீவுகள் அணி இம்முறை கைல் என்னும் அசகாய சூரனின் வழிநடத்தலில் அவுஸ்ரேலியாவை கூட வீழ்த்தி அடுத்த சுற்றிலும் பலமான இந்தியா மற்றும் இங்கிலாந்தை வீழ்த்தினர். ஆனால் தென் ஆபிரிக்காவிடம் தோல்வி கண்டாலும் அரை இறுதிக்குள் வந்து முதல் சுற்றில் இலங்கையிடம் தோற்றதுபோல அரை இறுதியிலும் தோற்று வெளி ஏறிவிட்டது. இம்முறை அணியாக விளையாடி அசத்திய முக்கியமான அணி இதுதான். அத்தனை பேரும் அர்ப்பணிப்புடன் ஆடினர்.

தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை வெறுக்கலாமா.

இவர்களுக்கும் அரை இறுதிக்கும் எப்போதும் ராசி இல்லை. இறுதிக்குள் வந்திருக்கும் இலங்கை-பாகிஸ்தான் அணிகளை விட இம்முறை சாம்பியனாகும் அனைத்து தகுதியும் உள்ள ஒரே அணி என நான் அடித்து சொல்லும் அணி இதுதான். அதுதான் தென் ஆபிரிக்கா. ஆரம்பம் முதல் அமர்க்களமான ஆட்டம். பந்துவீச்சா , துடுப்பாட்டமா கலத்தடுப்ப எதிலுமே இவர்களை விஞ்ச ஆளில்லை. என்னைப் பொறுத்தவரை இப்போதுள்ள அணிகளில் டெஸ்ட், ஒருநாள், என அனைத்திலும் கில்லிகள் இவர்கள்தான்.. வழக்கமான துரதிஷ்டம் இம்முறையும் துரத்த பாகிஸ்தானிடம் அநியாயமாக தோற்று வெளி ஏறிவிட்டார்கள். இம்முறை யாரிடமும் தோற்காமல் அரை இறுதி வரை வந்தவர்கள் இடையில் இந்தியாவிடம் மட்டுமே துடுப்பாட்டத்தில் மட்டுமே சோடை போனார்கள்.

பாகிஸ்தான் அணி என் முதல் பதிவில் சொன்னதுபோலவே சொல்லமுடியாத் அணியாகத்தான் தன்னை காட்டி இருக்கின்றது. எப்போது எழுவார்கள் எப்போது வீழ்வார்கள் இது இவர்களுக்கான தனி வாசகம். இங்கிலாந்திடம் தோற்று தடுமாரியவர்கள் நெதர்லாந்தை அடித்து துவைத்து சூப்பர் 8க்குள் வந்தார்கள். இலங்கையிடம் தோற்று தடுமாறியவர்கள் அதன் பின் நியூசிலாந்தை வருத்தெடுத்தவுடன் ஆரம்பமாகியது இவர்களின் வெற்றிப்பயணம்.

அயர்லாந்தை வென்று அரை இறுதிக்குள் வந்தவர்கள் அரை இறுதியில் அதிர்ச்சி கொடுத்து தென் ஆபிரிக்காவை வென்று இறுதிக்குள் இன்று. சைட் அபிரிடி என்னும் அதிரடி துப்பாக்கி இருக்கும் வரை இலங்கைக்கு கஷ்டம்தான். பாகிஸ்தான் வெல்லத்தொடங்கும் வரை சின்ன அணிகளும் அவர்களை துவைத்தெடுப்பர். வெல்ல ஆரம்பித்தால் இவர்களை கட்டுப்படுத்துவது கஷ்டம். பந்து வீச்சு, துடுப்பாட்டம், களத்தடுப்பு என அத்தனை விடயத்திலும் இப்போது அசத்தும் பாகிஸ்தான் கடந்தமுறை போல இறுதியில் சொதப்பாமல் நம்பிக்கையோடு ஆடினால் இம்முறை கிண்ணத்தோடு திரும்பலாம்.

இலங்கையின் பலத்துக்கு சற்றும் குறைவில்லாமல் இருக்கின்றது பாகிஸ்தான். எனவே ஒரு சூப்பர் போட்டி காத்திருக்கின்றது.

வெற்றி மீது வெற்றி வந்து நம்மை சேரும்.

இலங்கை அணிக்கு இப்போ என்ன நடக்கின்றது தெரியவேஇல்லை. முதலில் அவுஸ்ரேலியா, மேற்கிந்திய தீவுகளை வெல்லுமா இந்த அணி என்ற கேள்விகள்? ஆனால் அத்தனைக்கும் தொடர் வெற்றியின் மூலம் விடை சொல்லி விருந்து வைக்க காத்திருக்கின்றார்கள். ஜெயசூரியாவை விட இம்முறை இலங்கையின் நாயகன் டில்ஷான். பந்துவீச்சிலும் முரளியைக் கூட புதியவர்கள் விஞ்சி அசத்துகின்றார்கள்.

நானே சங்ககாரவின் தலைமை பற்றி சந்தேகப்பட்டேன். ஆனால் எனக்கு இப்படி இரு சவுக்கடியை கொடுத்துவிட்டார் அவர். வாழ்த்துக்கள் சங்கா. எனவே இம்முறை கிண்ணம் வெல்ல அதிக வாய்ப்போடு இருக்கின்றார்கள். அவர்களின் திறமை ஒரு பக்கம் இருக்கட்டும் மறுபக்கம் அதிஷ்டதேவதை சங்காவின் தலையில் அறி இருந்து கூத்தாடுகின்றது. எனவே கைகளில் கிண்ணம் கூத்தாடும் வாய்ப்பும் அதிகம்.


தருவியா தரமாட்டியா?

மொத்தத்தில் பல அணிகளை தலை குனியவைத்து இப்போது இருதிப்போட்டிக்காக காத்திருக்கின்றது உலகக்கிண்ணம். யுனிஷ்கானா? சங்ககாரவா? எல்லாவற்றிலும் இலங்கைக்கு உதவும் பாகிஸ்தான் இன்றும் இலங்கைக்கு கையில் தூக்கி கொடுக்குமா? அல்லது வீராவேசத்தோடு வென்று இலங்கையின் மூஞ்சியில் கரியை பூசுமா பொறுத்திருந்து பார்ப்போம்.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive