உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Wednesday, March 31, 2010

செக்ஸ்க்கு துணைபோகும் Facebook.



நம்மில் பலர் பயன்படுத்தும் நண்பர்களை இணைக்கும் Facebook தளத்தினால் முன் பின் அறியாதவர்களோடு கூட ஏற்படும் தொடர்பால் செக்ஸ் தொடர்புகள் ஏற்படுவதால் பாலியல் நோய்கள் அதிகரிப்பதாக இங்கிலாந்தின் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூக இணையதளங்களில் இணைந்து கொள்ளும் இளைஞர் யுவதிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த வகையில் ஏற்படும் தொடர்பின் மூலம் லண்டனின் சந்தர்லாந்த், துர்காம், டிசைட், போன்ற பகுதிகளில் பலருக்கு சைபில்ஸ் என்ற பாலியல் நோய் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்தப் பகுதிகளில் பிரபல்யமாக உள்ளது. இதன் மூலம் சந்திக்கும் புதியவர்கள் கூட செக்ஸ் உறவில் ஈடுபடுவதாக சொல்லப்படுகின்றது.

இதை பற்றி கருத்து தெரிவித்த டிசைட் பொது சுகாதார இயக்குனர் பீட்டர் கெல்லி, சைபில்ஸ் போன்ற பால்வினை நோயாளிகளிடம் நடத்திய விசாரணையில் இது போன்ற சமூக இணைய தளங்களின் முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்தது. இது போல பாதுகாப்பற்ற உறவு கொள்பபவர்களுக்கு பால்வினை நோய் மட்டுமன்றி எச்.ஐ.வி நோய் ஏற்ப்படும் அபாயம் அதிகம் என்கின்றார்.
Share:

Wednesday, March 24, 2010

பஞ்சாமிர்தம்= SO+சந்தோசமாக+மழை+கடிதம்+கோபம்.


நானும் ஒரு வானொலி அறிவிப்பாளராக இருந்த காரணத்தால் இதை பற்றி பேச ஓரளவு தகுதி இருக்கும் என நினைக்கின்றேன். இன்று காலை ஒரு தொலைக்காட்சியில் தொலைபேசி வாயிலாக நேயர்களை கலாய்க்கும் நிகழ்ச்சி ஒலி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. பொழுது போகணுமே என்பதற்காக அப்படியே இருந்தேன். அந்த நிகழ்ச்சியின் கடைசி பகுதி தான் அது. அந்தப்பகுதியில் நேயருடன் தொகுப்பாளர் பேசிறார் பேசிறார் பேசிறார் அவர் பேச்சில் so என்ற ஆங்கில வார்த்தை கிட்டத்தட்ட ஐம்பது தடவை வந்து தாண்டவமாடி இருக்கும். அது அவருக்கே கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஒரு வசனம் முடிந்து அடுத்த வசனத்துக்கு இடையில் வந்துவிடும். அந்த சொல்லின் அர்த்தம் வரக்கூடாத இடத்திலும் பேசினாரா என்பது அவருக்கு தான் வெளிச்சம்.(நான் அவர் பேசியதை கவனிக்கவில்லை. soவைத்தான் கவனித்தேன்.)

************************************************************************************************

இந்த கொடுமை இப்படி இருக்க. மதிய நேரம் இன்னொரு தொலைக்காட்சியில் வந்த தொகுப்பாளினி சந்தோசமாக என்ற வார்த்தையை அதை கேட்டு நாங்கள் சந்தோசத்தை இழக்கும் வரை பாவித்தார். சந்தோசமாய் இணைந்து கொள்ளுங்கள், சந்தோசமா டயல் பண்ணுங்க,சந்தோசமா பேசுங்க,சந்தோசமா பாருங்க என்று சந்தோஷ கொடுமை. இப்போது வீட்டில் இருந்து அனுபவிக்கின்றேன். இதில் இன்னொரு விடயமும் சொல்லவேண்டும் என்ற Bodyguard திரைப்படத்தின் தழுவலில் சித்திக் இயக்கம் படத்தில் தான் விஜய் அடுத்து நடிக்க இருக்கின்றார். ஆனால் அந்த பெயரை பாடிகார்ட் பாடிகார்ட் என்றே சொல்லிக்கொண்டிருந்தார் அவர். இந்தியாவில் சில தளங்களில் இப்படி இடுகின்றார்கள். அது அவர்கள் வழக்கமாக இருக்கலாம். நம் நாட்டில் அது வழக்கம் இல்லை. அதே போல ஒரு பெயரை மாற்ற எங்களுக்கு உரிமை இல்லை. ஆரம்பத்தில் நான் இந்த பிழைகளை விட்டு அதன் பின் சரியான நெறிப்படுத்தலால் இதை தவிர்த்து வந்தவன் என்ற ரீதியில் இதை பகிர்கின்றேன்.

****************************************************************************************************

நீண்ட நாட்களின் பின் இன்று காலை கொழும்பில் சில பகுதிகளில் மழை பெய்து சூட்டை தணித்தது. இது இப்படியே இருக்கவேண்டும் என்ற ஆசை பலருக்கு இருந்திருக்கும். ஆனால் கொளுத்துதே. காலையில் இங்கே நின்ற அந்த நல்லவர் இப்போ எங்கேயும் போய்விட்டாரோ? ஏனென்றால் காலையில் விடியலில் லோஷன் அண்ணா நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்றாரே. அதுதான் சந்தேகம்....

************************************************************************************************************

வீட்டுக்கு ஏதும் கடிதங்கள் வருகின்றனவோ இல்லையோ இப்போது தினமும் வீட்டு தபால் இடும் பெட்டிக்குள் மூன்று நான்கு பிரசுரங்கள் கிடைக்கின்றன. வேறு ஒன்றுமில்லை தேர்தல் பிரசார துண்டுகள் தான் அவை. இப்படி வீடு வீடாக கடிதங்கள் எழுதி எனக்கு வாக்களியுங்கள் என வாக்காளர் கையொப்பம் இட்டு கடிதம் வந்தாலும் வரும்.


*********************************************************************************************************

நானும் நேற்றும் இன்றும் சில பதிவுகளை தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றேன். வழக்கமாக வருபவர்கள் கூட இந்தப்பக்கம் வருவதாக தெரியவில்லை. வாக்குகளும் இல்லை பின்னூட்டங்களும் இல்லை.ஏனையா எல்லோருக்கும் என் மேல் கோவம். ப்ளீஸ் கோபித்துக்கொள்ளாதீர்கள். ப்ளீஸ் எல்லோரும் வாங்கோ எல்லாத் தளத்துக்கும் போங்கோ. எந்த லாபமும் இன்றி பதிவெழுதும் எமக்கு ஆக்கமும் ஊக்கமும் உங்கள் வாக்குகளும் பின்னூட்டங்களும் பாராட்டுக்களுமே.

Share:

உலககிண்ணப் போட்டிகளில் ஆடமாடேன்- சச்சின்.


இந்த வருடத்தில் பங்குபற்றிய டெஸ்ட் போட்டிகளில் தொடர் சதங்கள் போதாக்குறைக்கு ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் கில்லியும் சில பல்லிகளும் எட்டிப்பார்த்தும் எட்டாக்கனியாகிப்போன 200 அதுவும் குறைந்தளவு பந்துகளில். போதாக்குறைக்கு இப்போது ஐ.பி.எல்லில் முதல் போட்டியில் 11 பந்துகளில் மூன்று 4 ஓட்டங்கள் அடங்கலாக 17 ஓட்டங்கள் அடுத்தபோட்டியில் மரண அடி வெறும் 32 பந்துகளில் 11 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 63 ஓட்டங்கள்(கண்குளிர கண்டேன் இந்த தாண்டவத்தை.) அடுத்த போட்டியில் கொஞ்சம் மந்தமாக ஆடினாலும் இருபத்தைந்து ஓட்டங்கள் இறுதியாக கங்குலியின் அணிக்கெதிராக நாற்பத்தெட்டு பந்துகளில் ஆட்டமிழக்காமல் எழுபத்தொரு ஓட்டங்கள். இந்த தொடர் சிறப்பான ஆட்டத்துக்கு சொந்தக்காரர் தான் இப்போது உலகக்கிண்ண போட்டிகளில் ஆடமாட்டார் என தெரிவித்துள்ளார்.

இளையவர்களின் ஆட்டம் என சொல்லப்பட்ட அதிரடி T20இல் சூறாவளியாக ஆடிக்கொண்டிருக்கின்றார். அப்படி இருக்கையில் பலரின் பேச்சும் வரும் உலகக்கிண்ண போட்டிகளில் ஆடி மீண்டும் ஒரு தடவை இந்தியாவை வெல்லவைக்க வேண்டும் என்று இருக்கின்றது. ஆனால் இதற்க்கு சச்சின் மறுத்து விட்டார். அறிவிக்கப்பட்ட முப்பது பேர் கொண்ட இந்திய உத்தேச அணியில் சச்சின் இடம்பெறவில்லை. கடந்த 2007ஆம் ஆண்டிலேயே சச்சின் T20 போட்டிகளில் இருந்து விலகியதே இதற்கு காரணம். இருப்பினும் அசத்தலாட்டம் ஆடும் இவரை நிச்சயம் சேர்க்கவேண்டுமென ஒலிக்கும் பலரின் குரலுக்கு செவிசாய்த்து அணியில் சேர்த்துக்கொள்ளவேண்டுமென பலரின் கோரிக்கையாக இருந்தது. இதற்கு வழி திறந்து விடுவது போல உத்தேச அணியில் இடம்பெறாவிட்டாலும் இறுதியாக அறிவிக்கும் பதினைந்து பேர் கொண்ட அணியில் புதிதாக வீரர்களை இணைத்துக்கொள்ளலாம் என ஐ.சி.சி அறிவித்துள்ளது. இதன் மூலம் சச்சின் நிச்சயம் களம் இறங்குவார் என எதிர் பார்க்கப்பட நிலையில் தான் சச்சின் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சர்வதேச T20 போட்டிகளில் பங்குபற்றுவதில்லை என தான் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என சச்சின் தெரிவித்துள்ளார். இது ஒரு புறம் இருக்கட்டும். சச்சின் ஒரு சிறந்த தலைவர் இல்லை என்பது வெளிப்படை உண்மை எழுதமுடியாத விதியாகவே பேசப்பட்டு வருகின்றது. நம் கிரிக்கெட் தொடர் பதிவில் கூட சச்சினை வீரராக பிடித்தவர்கள் கூட ஒரு தலைவராக பிடிக்கவில்லை என்றனர். அதற்கு சர்வதேசப்போட்டிகளில் இந்தியாவை அவர் பிரதிநிதித்துவப்படுத்திய போது கிடைத்த பெறு பேறுகளே சான்று. ஆனால் இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவரகாவும் ஆட்டத்திலும் கலக்குகின்றார். கடந்தமுறை கூட காயத்தில் இருந்து தலைவராக இவர் வந்த பின் சனத்தும் இவரும் சேர்ந்து ஆடிய ஆட்டமும் பெற்ற வெற்றிகளும் தெரியும். நட்சத்திர வீரர்கள் சர்வதேச வீரர்கள் திறமையான வீரர்கள் இருக்கும் இந்த மும்பை அணியை வெற்றிக்கொடி நாட்ட வைக்கும் சிறந்த அணித்தலைவராக பிரகாசிக்கும் சச்சினால் ஏன் அன்று ஜெயிக்கமுடியாமல் போனது. அன்று இருந்த அணி திறமையில் சளைத்ததல்ல வேண்டுமென்றே இப்படி ஆடினார்களா அல்லது என்னதான் காரணம் புரியாத புதிராகவே உள்ளது. என்னைக் கேட்டால் சச்சினும் இப்போது சிறந்த தலைவர்தான்.
Share:

மிருகங்கள் மனிதனானால்-ஒரு உண்மை பதிவு.


ஒரு ஊரில ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்தாவாம்(அது உழுந்து வடையா பருப்பு வடையா என்று இன்றுவரை யாரும் என் சந்தேகத்தை தீர்க்கவில்லை.) அந்தவழியால் வந்த காக்கை ........அடேய் நிறுத்தடா இதுதான் காலம் காலமாய் தெரியுமே என்று யாரப்பா சவுண்ட் விடிறது.....சரி சரி இந்த கதை தெரியுமா நான் இன்னொரு கதை சொல்றன்.

ஒரு கிராமத்தில் இருந்த பத்து பசுக்கள் ஒன்றாக காடுப்பகுதிக்கு அண்மையில் இருந்த புல்வெளிக்கு மேயப்போவது வழக்கம். எப்போதும் ஒன்றாகவே போகும் இவை ஒரு முறை பிரச்சனை பட்டு.......டாங்.........அடேய் என்னடா கதை சொல்றாய்......அடடா இதுவும் தெரியுமா. சரி இந்தக்கதைகள் தெரியும் தானே நேரடியா விசயத்துக்கே வந்திவிடுகின்றேன்.

முதல் கதையில் பாட்டியிடம் வடையை திருடியது காகம் அதே காகத்தை ஏமாற்றியது நரி இப்படி காலம் காலமாக நம் பிஞ்சு மனங்களிலேயே விதை விதைத்து விட்டனர் நம் பாட்டா பாட்டி தொடக்கம் ஆசிரியர் வரை. என் கோபம் என்னவென்றால் அதென்ன எதற்கெடுத்தாலும் மிருகங்களை வைத்தே கதை சொல்வது அவற்றை தப்பாக காட்டுவது. ஏன் நம் முன்னோர்கள் சமகாலத்தவரை வைத்தது கதை சொன்னால் என்ன?ஒருவேளை அந்த மிருகங்களுக்கு இது தெரிந்தால் அவை நம்மை என்ன செய்யும்.

முதலில் மனிதர்கள் நாம் சிந்திக்க வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது. மனிதரில் நாம் எப்படி ஆண் பெண் என இரண்டு இனம் இருக்கின்றோம அதேபோல மற்ற மிருகங்களிலும் இருக்கின்றன. இதற்கடுத்து பேசும் மொழி வேறுபடுகின்றது இனம் மதம் குலம் கோத்திரம் இன்னும் என்னவென்னவோ எல்லாம் சொல்லி மனிதரில் பல வகை சொல்கின்றனர் சிலர். ஏன் இந்த பாகுபாடு மிருகங்கள் குலம் கோத்திரம் பார்க்கின்றனவா? மதத்துக்காக நாட்டுக்காக இனத்துக்காக என்று வேண்டுமென்றே சண்டை பிடிக்கின்றனவா?

ஆறாவது அறிவென்ற ஒன்று மற்ற மிருகங்களை விட இருக்கின்றது என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு செய்வது சரியான காரியமா? ஒரு தடவையாவது சிந்தித்திருக்கின்றோமா நாங்கள் மிருகங்கள் எங்களை பற்றி என்ன நினைக்குமென்று. நாய் போல மாடு போல என்று பேசுகின்றோம். அவை நிச்சயம் தங்களில் கெட்டவர்களை நீ அந்த மனிதன் போல இந்த மனிதன் போல என திட்டி கேவலமாக பேசாதென்பதற்கு என்ன நிச்சயம்.. அதேபோல எங்களை விட தங்களுக்கு அறிவு கூட என நினைத்துக்கொண்டு அவை செயற்படவில்லை என்பதற்கு என்ன நிச்சயம். ஏதாவது ஆராய்ச்சிகள் செய்து பார்ப்பதென்றால் முதலில் மற்ற மிருகங்களுக்கு செய்து பார்க்கின்றோம். அதே போல மிருகங்கள் செய்து பார்த்தால் இந்த உலகில் நாம் யாருமே இருக்க முடியாது.

காரணம் மிருகங்களுடன் போட்டி போட நிச்சயம் ஒரு சாதாரண மனிதனால் முடியாது. ஒரு நாயை அடிக்கவே கல்லை தேடுகின்றோம் அப்படி இருக்கையில் கொஞ்சம் யோசித்து பாருங்கள். ஒரு ஆராச்சி செய்வதேன்றாலோ அல்லது ஒரு சின்ன வேலையை செய்வதேன்றாலோ கருவி இல்லாமல் செய்ய மனிதனால் முடியாமல் போய்விட்டது. இதே உலகத்தில் தங்களுக்கான உலகத்தில் மிருகங்கள் என்ன நேர்த்தியாக வாழ்கின்றன. எனக்கு ஒரு ஆசை மிருகங்கள் மனிதர்கள் ஆகிய எங்களை பற்றி என்ன நினைக்கின்றன அவர்களின் உலகில் இந்த மனிதன் என்பவன் எப்படி? ஒரு தாவரமா அல்லது வேற்றுக்கிரக வாசியா? நம் சினிமா ஹீரோக்கள் கூட இதுவரை பஞ்ச டயலாக்குகளில் மிருகங்களுடன் தான் தங்களை ஒப்பிடுகின்றனர் அப்படியானால் அவர்கள் மனிதனை விட மிருகங்கள் சிறந்தவை என ஒப்புக்கொள்கின்றனரா? மிருகங்கள் பலவற்றை நாம் கட்டிப்போட்டு வைக்கின்றோம் நம் பாதுகாப்புக்கென்று. அதே மிருகங்கள் இவன்களால் நாங்கள் அளிக்கின்றோம் இவனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நம்மை கட்டிப்போட ஆரம்பித்தால்.

மனிதர்கள் உன்னதமானவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் கொஞ்சமாவது படித்துக்கொள்ளலாம் மிருகங்களிடம். மிருகங்கள் மனிதரானால் இந்த உலகம் தாங்காது அவற்றை அவர்கள் வாழ்வியலிலேயே விட்டு விடுவோம். மிருகங்களை அடைத்து வைத்து காட்சிப்படுத்த மிருகக்காட்சி சாலை அதே மிருகங்கள் மாறி விட்டால் மனிதக்காட்சி சாலை எப்படி இருக்கும்?

இன்று இந்தப்பதிவிட காரணம். லோஷன் அண்ணாதான். ஏனோ இன்று காலையில் (நீண்ட நாட்களுக்கு பின்) எழுந்து விடியல் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது குறு சிஷ்யன் படத்தில் இடம்பெற்ற திப்பு பாடிய நடிக்கிறான் என்ற பாடலை கேட்கும் போதுதான் இந்த கோபம், இந்த சிந்தனை வந்தது. இந்த பதிவிட தூண்டிய லோஷன் அண்ணாவிற்கும் வெற்றியின் விடியலுக்கும் நன்றிகள்.
Share:

Tuesday, March 23, 2010

கூகிளுடன் மோதும் சீனா.


கூகுள் தேடுதள சேவையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுளை நீக்கியதன் மூலம் வாக்குறுதியை மீறிவிட்டதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. கூகுள் மூலம், சீனாவில் உள்ளவர்கள் சீன அரசுக்கு சிக்கலை உண்டாக்கும் திபெத், தியான்மர் சதுக்க படுகொலைகள் மற்றும் மனித உரிமைகள் குழு போன்ற செய்திகள் மற்றும் தகவல்களை பெற முடியாதவாறு தடைவிதிக்கப்படிருந்தது. சீன அரசின் நிர்ப்பந்தம் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக கூகுள், மேற்கூறிய சேவைகளை சீனாவில் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், கூகுள் நிறுவன இணையதளத்துக்குள்ளாகவே சீன அரசு 'ஹேக்' செய்து ஊடுருவி தகவல்களை திருடி விட்டதாக அண்மையில் கூகுள் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் மேற்கூறிய கட்டுப்பாடுகள் மற்றும் 'ஹேக்' காரணமாக சீனாவில் தனது தேடுதள இணைய சேவையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தது கூகுள்.இதனைத் தொடர்ந்து வருகிற ஏப்ரல் மாதம் சீனாவிலிருந்து கூகுள் வெளியேற திட்டமிட்டுள்ளதாக கடந்த வாரம் செய்தி வெளியானது.

இந்நிலையில், திடீர் திருப்பமாக சீன அரசு எந்த செய்திகள் மற்றும் தகவல்களை தமது நாட்டு மக்கள் பார்க்கக்கூடாது என தணிக்கை விதித்திருந்ததோ, அந்த தகவல்கள் உள்பட அனைத்து சேவைகளையும் ஹாங்காங்கில் உள்ள தேடுபொறி தளம் மூலம் சீன மக்களுக்கு இன்று திறந்துவிட்டது கூகுள். அதன்படி சீனாவில் உள்ள ஒருவர் தனது கணினியில் கூகுள் இணைய தேடுதள சேவை மூலம் தகவலை தேடினால், அதற்கான கட்டளை ஹாங்காங்கில் உள்ள தேடுபொறி தளத்திற்கு திருப்பிவிடப்பட்டு உரிய தகவல்கள் கிடைக்கிறது. இது குறித்த தகவல் கிடைத்ததும் சீனாவுக்கு மிகுந்த அதிர்ச்சியும், கூகுள் மீது ஆத்திரமும் ஏற்பட்டது.
Share:

ப்ளீஸ்....பதிவர் சந்திப்பில் வெளிவந்த உண்மைகள்.

ப்ளீஸ் நானும் ஒரு பதிவு எழுதி இருக்கேன் நம்ம ப்ளீசை பற்றி. ப்ளீஸ் வந்து படிச்சிட்டு ப்ளீஸ் ஒரு வோட்டுப் போட்டிட்டு ப்ளீஸ் யாரும் சீரியஸா எடுக்காமல் ப்ளீஸ் அப்பிடியே வந்த வழியே போய்டுங்க.

முதலில் நடந்ததை என் பங்குக்கு சொல்லிவிடுகின்றேன். அதன் பின் அன்றைய பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்களை பற்றிய திடுக்கிடும் உண்மைகளை வெளியிட இருக்கின்றேன்.

வாங்க விசயத்துக்கு போகலாம்....

வெள்ளி இரவு ஒரு பத்து முப்பது இருக்கும். என் கைப்பேசி பாட ஆரம்பித்தது. பார்த்தால் ஒரு புது இலக்கம். சரி யாரென பார்ப்போம்.

ஹலோ!
ஹலோ! நான் சுபாங்கன் கதைக்கிறன்.....
ஹலோ யார்?
நான்தான் ஐந்தறைப்பெட்டி சுபாங்கன்.( என்னது சவப்பெட்டி பென்சில் பெட்டி மாதிரி உங்கள் வீட்டில் இருக்கிறது ஐந்தறை அதுவும் பெட்டி மாதிரி போலவா?)
ஆ சொல்லுங்க....
நம்ம பவன் வந்திருக்கான் நாளைக்கு சும்மா ஒரு சின்ன சந்திப்பு கோல் பேசில் நடத்தலாம். வருவிங்களா?
என்ன ப்ளான் வச்சிருக்கிங்க?
பெரிதா ஒன்றும் இல்லை அங்கேயே வந்து பார்த்துக்கொள்வோம்.
அதுசரி நம்ம ஏரியாவில் இருந்து யார் யார் வாரார்?
கான்கொன்,ஆதிரை பாட்டா, புல்லட் தாத்தா வருவாங்க.
சரி...
கட்டாயம் வருவிங்கதானே...
சரி வாறன் வாறன்...


இப்படியே உரையாடல் முடிந்த பின். மறுநாள் ஆதிரை அண்ணருடன் பேசி மாலை நான்கு முப்பதுக்கு வெள்ளவத்தை ஆர்பிக்கோவிற்கு முன்னால் வரவும் என்றும் தனக்கு அங்கெ இன்னொரு சைடு பிசினஸ் இருப்பதாகவும் சொன்னார். மதியம் நம்ம குட்டி வந்தியத்தேவன்(லோஷன் அண்ணாதான் இந்த அறிவிப்பை விடுத்தவர்.) கான்கொன் கோல் பண்ணினான். என்ன வார ஐடியா இருக்கா என்று கேட்க. தன்னிடம் ஆதிரை அண்ணாவின் நம்பர் இல்லையாம் நீங்கள் எப்படி போகின்றீர்கள் நானும் வருகின்றேன் என்றான். சரி என எங்கள் ராணுவ ரகசியங்களை சொல்லி விட்டு நகரவில்லை ஆதிரை அன்னார் அலைப்பெடுத்தார். சரியாக நான்கரைக்கு வந்துவிடுவீர்களா என கேட்டார். ஏனண்ண என கேட்டன். இல்லை புல்லட் இப்போதான் திருப்பள்ளி எழுச்சி பாடுகின்றாராம் அதுதான் தனிய வந்து நிக்கனுமே என கவலைப் பட்டார்.(கவனிக்கவேண்டிய விடயம் இப்போதெல்லாம் மனிதர் தனிய தனிய என அடிக்கடி சொல்கின்றார் எதுக்கும் வீட்டில சொல்லுறது நல்லம் வேற என்னது இவருக்கும் ஒரு மலேசியா சிங்கப்பூர் இல்லாவிடாலும் இன்னொரு நாட்டிலாவது சிக்காமலா போய்விடும்.)

ஒருவாறு நான்கரைக்கு வந்து சேர்ந்தோம் அவ்விடத்தில். ஐந்து நிமிடத்துக்குள் குளித்துவிட்டு(கவனிக்க.) நம் புல்லட் ஆட்டோ பிடித்து வந்தாராம். வந்தவர் ஆர்பிக்கோவிற்குள்நிற்கும் பிள்ளையை பார்க்கணும் என நினைத்து விட்டார் போல ஆதிரை பட்டாவின் ஸ்பான்சரில் தாக சாந்தி செய்தார். அப்புறம் பஸ் ஏறி வந்தோம். டிக்கெட் எடுத்தது அண்ணல் புல்லட் தான். வந்து சற்று நேரத்தில் எல்லோரும் கூடி விட்டோம். இனி வரோவின் பதிவை படியுங்கள் புரியும். அதன் பின் இவர்களை பற்றிய உண்மைகளை படியுங்கள்.


நான் ரெடி யார் யார் என கண்டு பிடிப்பது இலகு பின்னூட்டத்தில் யார் யார் என சொல்லுங்களேன்.

*பங்குகளை இதுவரை பேசி வந்தவர் தன் வாழ்க்கையை பங்கு போட இருப்பவரை தேடி பறந்து போக இருப்பதாக பட்சி சொல்கின்றது. பறக்கும் இடமும் ஏற்கனவே தேவர் பதிவர் இருக்கும் இடம் என அந்த பட்சி சொன்னது.

* தான் இறங்கும் எல்லா களத்திலும் தலையாக இருக்கும் உடலமைப்பிலும் தல போல இருக்கும் இவர் சந்திப்புக்கு வந்த போது தன் வாகனத்தை நிறுத்தமுடியாமல் செய்தவர்கள் மீது கொண்ட கோபத்தால் அந்தக்களத்திலும் தலையாகியே தீருவேன் என்ற வைராக்கியத்தில் நித்தியானந்தரின் ஆசியுடன் களம் இறங்க இருப்பதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

*தினமும் பதிவிடும் பதிவர் தான் இருக்கும் துறையை விட மேக்கப்போடும் தொழிலே தன்னுடனும் தன் ரசிகர்கள் படம் எடுக்க மொய்ப்பார் என்ற காரணத்தால் அந்த துறையில் வந்து பலரை வசியம் செய்ய தயாராகிவிட்டார்.

*ப்ளீஸ் சை பிரபலப்படுத்தியவர் மூஞ்சிப்புத்தகத்தில் தன் சொந்த photo போட காரணம் சொந்தக்காரியா வரப்போறவர் சொன்ன அட்வைஸ் தானாம். யானை எவ்வளவு பலம் வாய்ந்தது என்ற வார்த்தை தானாம் அவரை மாற்றி இருக்கின்றது, ஆனால் இதனால் பலர் கலங்கி இருப்பதாக கேள்வி. எல்லாம் இனி தமக்கு கிடைக்காதே என்றுதான்.

*பிள்ளையாரோடு நெருங்கிய பதிவர்(இருக்கும் இடம்) அன்மைக்கலாமாக தன் சிரிப்பை தொலைத்து விட்டாராம். காரணத்தை தேடிக்கொண்டிருப்பதாக பல்கலை கழகத்தில் இருந்து செய்திகள் வெளியாகின்றன. அதேநேரம் மலேசியா இல்லாவிட்டால் என்ன மாலைதீவிலாவது பிடிப்பேன் என வலை வீசி தேடுவதாக கேள்வி.

*பெண்களின் இதயத்தை துளைத்தெடுக்க முயன்று முடியாமல் போன கோவா பதிவர் மீது இப்போது எல்லோரும் ஒரு ஜாக்கிரதையான கண் வைத்திருந்த நேரம் தான் கோவா பதிவர் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு பின் காணாமல் போய்விட்டார். விசாரித்ததில் வாலிபா வா வா என யாரோ அழைத்து தான் போனதாக கேள்வி.

*ரயில் ஏறி சந்திக்க வந்த பதிவர் தன் தளத்தில் பிளந்து கட்டினாலும் அமைதியை மெயின்டெயின் செய்தார் விசாரித்ததில் கிடைத்த உண்மை ரயிலில் பார்த்த கிளி வேட்டைக்காரன் படம் போல வேட்டியாடக்கூடியது என்ற நினைப்பில் இருந்தவருக்கு 5 star படம் போல ஆகியதே காரணம் என சொல்லப்படுகின்றது.

*பெட்டிக்குள் எழுதி பழக்கமான பதிவர் யாழில் சென்று ரெஜினோ ஐஸ்கிரீம் சாப்பிட்டபோது கிடைத்த அனுபவத்தில் இங்கே வந்தார். போகும் போது வழியில் எங்காவது கட்டம் கட்டலாம் என வந்தவரை கட்டம் கட்டி அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகின்றது.

இந்த உண்மைகள் எல்லாம் வடிகட்டிய பொய்கள். ப்ளீஸ் இதை யாரும் சீரியஸாக எடுக்காதீர்கள். ப்ளீஸ் என்னை கட்டம் கட்டி அடித்து விடாதீர்கள். ப்ளீஸ் நான் ரொம்ப பாவம்...ப்ளீஸ் இதை இங்கேயே விட்டு விடுங்கள். ப்ளீஸ் கொஞ்சம் சிரித்துக்கொண்டுதான் போங்களேன் ....ப்ளீஸ் உங்களுக்கு என் மேல் கோவமா....எதையும் தாங்கும் இதயம் கொண்ட நம் ப்ளீஸ் புகழ் கான்கொன் உங்களை தன் தளத்துக்கு அழைக்கின்றார். கோபம் வந்த அவரை கும்முங்க. காரணம் நாங்கள் எல்லாம் ப்ளீஸ் பதிவு போட அவர் தானே காரணம்....ப்ளீஸ்...ப்ளீஸ்...எனக்காக இதை செய்யுங்கள்....
Share:

Monday, March 22, 2010

மு.க. அழகிரி நடிக்கும் தூங்கா நகரம்.


மத்திய அமைச்சரும் கலைஞரின் வாரிசுமான மு.க. அழகிரி தன் மகன் தயாரிப்பில் உருவாகும் தூங்கா நகரம் என்ற திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடிப்பதாக பேச்சடிபடுகின்றது. (கலைஞரே எவ்வளவு பெரிய நடிகர் இவரால் முடியாதா என்ன? சாரி பாசத்தலைவர் நடிகர் இல்லை வசன கர்த்த என்ன. அப்போ உள்குத்தெண்டு நினைக்கிறிங்களா நினச்சிட்டு போங்க.) நமபமுடியாமல் இருந்தாலும் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்கின்றார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

மதுரையை கதைக்களமாக கொண்ட இந்தப்படத்தை தொடக்கி வைத்தவரே இந்த மதுரை நாயகன் தான். அப்படி இருக்கையில் மதுரையை பற்றிய படத்தில் இவர் இல்லாமல் போகமுடியுமா. பாசக்கார தலைவர் பாடையில் போன பின் வரலாறாய் அவர் வாழ்ந்தகாலம் வந்தாலும் வரும் பள்ளிப்பாடத்தில்.

தமிழ் படத்துக்கும் தலையின் படத்துக்கும் இடையில் தன் தனயன் தயாரிக்கும் படத்தில் தன் இப்போதைய பதவியான மத்திய அமைச்சராகவே பட்டையை கிளப்ப தயாரிவிட்டார் அண்ணல். தொண்டர்களே ஹீரோவைவிட பெரிய கட அவுட்,பனர், பால் அபிஷேகம் கொண்டாட்டத்துக்கு தயாராகுங்கள். ரெடி...ஸ்டார்ட்....

ஒரு சின்ன சந்தேகம் தளபதி இருக்கார்....இளைய தளபதியும் இருக்கார்....சின்ன தளபதியும் இருக்கார் அப்போ இவருக்கு பெரிய தளபதி என டைட்டில் போடுவாங்களோ?
Share:

வெற்றி வானலையில் விடை பெறல்.



இன்று நாளை என இழுத்தடித்துக்கொண்டு வந்த என் வானொலி நிறைவுப் பகுதியின் நிறைவுப்பதிவிற்கு ஒரு முடிவு கட்டலாம் என்ற நினைப்பில் இப்போது இந்தப் பதிவு. இது இழுபடக் காரணம் பல. ஒன்று என்னால் இன்னும் முழுமையாக வானொலியில் இருந்து விடை பெற்ற அந்த சோக தருணத்தில் இருந்து மீளமுடியவில்லை. அதேநேரம் இந்தப் பதிவை எழுதலாம் என்றால் மனம் வரவே இல்லை. இதோ இப்போது பணக்காரன் படத்தை பார்த்துக் கொண்டே எழுதுகின்றேன். இதில் என்ன கொடுமை என்றால் நான் விடை பெற்ற நாளுக்கு முதல் நாளில் என் இறுதிப் பாடலாக ஒலித்த மரத்தை வச்சவன் பாடல் என்னை மீண்டும் எங்கோ இழுத்துப்போகின்றது. காத்திருப்பவர் எத்தனை பேரோ உன்னிடம் தோற்பதற்கு உண்மையில் ஒரு வெறியை தரும் வரி இது.

வெற்றி வானொலி ஒரு சாதாரண ரசிகனாக அதன் ஆரம்ப காலத்திலேயே நான் ரசித்துக் கேட்ட வானொலி. சுபாஷ் அண்ணாவுடன் வந்த சின்ன முரண்பாடு என்னையும் அங்கேயே வேலை செய்ய வைக்கும் என நான் நினைக்கவில்லை. ஆனால் விதி யாரை விட்டது. என்னையும் எங்கோ கொண்டு சென்று விட்டது. இதை பற்றிய என் முன்னைய பதிவை படிக்க இங்கே சொடுக்குங்கள்.

நவம்பர் 3, 2008 ஆரம்பித்த பயணம் 2010 மார்ச் பத்தாம் திகதியோடு முற்றுப்பெற்று விட்டது. இந்த முற்றுப்பெறுகை என்னை நிச்சயமாக பாதித்தே இருக்கின்றது. காரணம் இல்லாமல் இருக்குமா? ஒரு குறுகிற காலத்திலேயே ஒரே குடும்பமாக பழகிய வெற்றிக் குழுவினர். என்னையும் தங்களில் ஒருவனாக நினைக்கும் என் பிரியமான நேயர்கள். அத்துடன் பல பிரபலங்களின் நட்பு. இவை எல்லாவற்றையும் ஒரே நாளில் விட்டு வர யாருக்கு மனது வரும். என் குரல் முதல் நாள் ஒலிக்க ஆரம்பித்ததிலிருந்து என் குறை நிறைகளை சுட்டிக்காட்டி என்னை வளர்த்தெடுத்த வெற்றிக்குடும்பமும் நேயர்களும் இன்னும் சில இத்துறை சார் நண்பர்களுக்கும் முதலில் என் நன்றிகளை சொல்லிவிட்டு. இறுதி நாளில் நடந்த மறக்கமுடியா நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றேன்.

என் உயர் கல்விக்காக போகப்போகின்றேன் என்கின்ற காரணமே நான் வெற்றி வானொலியை விட்டு ஒரு அறிவிப்பாளன் என்கின்ற நிலையில் பிரிய காரணம். முதல் நாள் இரவு நான் காற்றின் சிறகுகள் நிகழ்ச்சி செய்யும் போது மறுநாள் ஆகாய முகவரியை நிறுத்தி விட்டு உன்னுடைய சிறப்பு நிகழ்ச்சியாக செய்வோம் என சொன்னார். உடனடியாக ரஜீவும் நானும் சேர்ந்து அதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டோம். மறுநாள் மதியம் நான் அலுவலகம் சென்று விட்டேன். காரணம் நான் வழக்கமாக வரும் மாலைப்பொழுதில் வேலை செய்யும் எல்லோரையும் ஒன்றாக காண்பதென்பது எப்போதாவது நடக்கும் ஒரு அதிசயம். எல்லோருடனும் என் இறுதி நிமிடங்களில் சந்தோசமாகா இருக்கவேண்டும் என்ற காரணத்துக்காக சென்றேன். என் எதிர்பார்ப்புப்போலவே எல்லோரும் அங்கே பிரசன்ட். எல்லோருடனும் மனம் விட்டு பேசிவிட்டு இன்னொரு முக்கியமான விடயத்தை செய்யும் வாய்ப்பு எனக்கு அன்றுதான் கிடைத்தது. வழக்கமாக புதியவர்கள் தங்கள் அறிமுக நாளில் லோஷன் அண்ணாவின் ஆசீர்வாதத்துடன் தான் கலையகம் செல்வார்கள் என கேள்விப்பட்டிருக்கின்றேன். எனக்கு அந்த கொடுப்பனை அமையவில்லை காரணம் என்னவென பலருக்குத் தெரியும். எனக்கும் மனதுக்குள் இது ஒரு பெரிய குறையாகவே இருந்து வந்தது. ஆனால் இது என்று கழுவப்படும் என ஏங்கிய எனக்கு என் இறுதி நாள் நிகழ்ச்சியை செய்யும் முன் தான் அந்த வாய்ப்புக் கிடைத்தது. அந்த மன நிறைவுடன் நான் என் இறுதி நிகழ்ச்சியில்......

இரவு 7.30அளவில் அலுவலகம் சென்றுவிட்டேன். மனதுக்குள் பட படப்பு. இதற்குள் Face bookஇலும் என் கடைசி நிகழ்ச்சி பற்றி சிலர் தங்கள் வாழ்த்துக்களுடன் கூடிய அறிவிப்பை செய்து விட்டனர். இந்த இடத்தில் நன்றிகள். என் கடைசி செய்தியை வாசிக்கப்போகின்றேன். எனக்குள் இதே போல ஒரு டென்சன் வேறு ஒருநாளும் இருந்ததில்லை. தயாராகிவிட்டேன். செய்திக்கும் இறுதி நிகழ்ச்சிக்கும். இதில் நானும் ரஜீவும் எடுத்துக்கொண்ட ஒரு சபதம் எக்காரணம் கொண்டும் நிகழ்ச்சியில் கண்கலங்கக்கூடாது என்று. அதில் தெளிவாகவும் இருந்தோம். என் செய்தியை வாசிக்க நான் கலையகத்துக்கு சென்ற வேளை அங்கே நிகழ்ச்சி செய்து கொண்டிருந்தது பூஜா அக்கா . எனக்காக அவர் நிகழ்ச்சியில் மகராசன் தோஸ்து நீ பாடலுடன் விடைபெற்று செல்லும் போதே "அடேய் சதீஷ் போறியாடா ரொம்ப நல்ல பழகிட்டு போறியா தம்பி" என கவலைப்பட எனக்கும் முதல் கலக்கம் ஆரம்பித்தது அக்கா நான் செய்தி வாசிக்கணும் வேண்டாம் விட்டுடுங்க என அவரையே கலாய்த்துவிட்டு செய்திக்கு தயாராகிவிட்டேன் மனதில் வலியோடு.

செய்தி வாசித்து விட்டு வேப்ப மரம் புளிய மரம் பாடலோடு என் இறுதி நிகழ்ச்சி ஆரம்பமானது. ரஜீவிடம் போர்ட்டை கையாளும் படி சொல்லிவிட்டு நான் மறு ஒலிவாங்கியில் அமர பூஜா அக்கா மீண்டும் கலையகம் வந்தார். வந்தவர் எனக்கு வாழ்த்து சொல்லிவிட்டு கண்கலங்கிவிட்டார். நானும் கொஞ்சம் அப்செட் ஆக அந்த இடத்தை கலகலப்பாக்கியது ரஜீவ். அக்கா வேண்டாம் இன்னும் நிகழ்ச்சி ஆரம்பிக்கவில்லை. நாங்கள் நிகழ்ச்சி செய்யணும் என சொல்ல ஒருவாறு அந்த பிரியாவிடை முடிந்தது. ஆரம்பத்தில் வெளியில் இருந்து பேசிய ரஜீவ் இப்போது சொன்ன வசனம் எனக்கு இன்னும் வலியைக் கொடுத்தது. சதீஷ், வெளியில் இருக்கும் போது இதுதா கடைசி நிகழ்ச்சி என்றாலும் எனக்கு அது பெரிதா தோணல இந்த நிமிடம் ரொம்ப கவலையா இருக்கு சதீஷ் என்ற வார்த்தை என்னை கொஞ்சம் வலியை உணரவைத்தது. நேயர்கள் கேட்கும் கேள்விக்கும் தான் கேட்கும் கேள்விக்கும் பதில் சொல்லவேண்டும் என்றவுடன் கொஞ்சம் பயமாய் தான் போய்விட்டது. ரஜீவ் என்னத்தை கேட்பாரோ அதைவிட நம் அன்பு நேயர்கள் என்னத்தை கேட்டு திக்கு முக்காட வைத்துவிடுவார்களோ என்ற பயம். ஆனால் அட நம் நேயர்களிடம் மறைக்க என்னதான் இருக்கு எந்த கேள்வியாய் இருந்தால் என்ன ஒரு கை பார்த்து விடலாம் என்று முடிவோடு. நல்ல ஜாலியாக ஆரம்பித்தோம் நிகழ்ச்சியை.

இடையில் வெளியே சென்று மூஞ்சிப்புத்தகத்தை திறந்து பார்த்தால் ஒரு நண்பர் சதீஷ் தன் இறுதி செய்தி அறிக்கையை இப்போது வாசித்து முடித்துவிட்டார் என போடா இன்னொருவரோ சதீஷின் இறுதி நிகழ்ச்சி வெற்றியில் என போட கொஞ்சம் அசந்து போனேன். என்னடா இது கிரிக்கெட் ஸ்கோர் போடிறது போல போடுகின்றார்களே என கமென்ட் போட்டு விட்டு அந்த நண்பர்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பை நினைத்து வியந்தேன். அதேநேரம் எஸ்.எம்.எஸ். வாயிலாக மற்ற வானொலிகளின் அறிவிப்பாளர்கள் சிலரின் வாழ்த்தும் வந்து சேர்ந்தது. அந்த அன்பான நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.

நேயர்களின் கேள்விகள் ஆரம்பமானது. தொலைபேசியில் வந்த நேயர்களுடன் என்னையே பேசச் சொல்லி விட்டு விட்டார் ரஜீவ். காரணம் உங்களுடன் தானே அவர்கள் பேச எடுப்பார்கள் என்று. அதேநேரம் யாரும் கேள்வி கேட்டால் அதை தான் குறிப்பெடுத்துக்கொண்டு தன் ஸ்டைலில் என்னை போட்டு தாக்க தொடங்கினார் ரஜீவ்.

அங்கே என்னை நோக்கி வந்த கேள்விக்கணைகள் சிலவும் அதற்கான என் பதில்களும்.

கேள்வி: உங்கள் சொந்த இடம்,குடும்பம்.?

பதில்: என் சொந்த இடம் யாழ்ப்பாணம், பிறந்தது அங்கே அதன் பின் கல்வி வவுனியாவில் இப்போது இங்கே. அம்மா அப்பாவிற்கு ஒரே பிள்ளை.

கேள்வி: வெற்றிக்கு வந்த விதம்?


கேள்வி: வெற்றில் பிடித்தவர்?

பதில்: சந்தேகமே இல்லை லோஷன் அண்ணாதான். காரணம் என் ஐந்தாம் ஆண்டில் இருந்து அவரை நான் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன். முதலில் நான் அவருக்கு ரசிகன் அதற்க்கு பின்தான் அவர் முகாமைத்துவத்தில் வேலை செய்யும் ஒரு அறிவிப்பாளன்.

கேள்வி: லோஷன் அண்ணாவை தவிர வேறு யாரை வெற்றியில் பிடிக்கும்?

பதில்: ரஜீவ் உங்களை தான் சொல்லணும் காரணம் நீங்கள் தான் எனக்கு அருகில் இருக்கின்றீர்கள் என சொல்லிவிட்டே நான் சொன்னது. எனக்கு வெற்றியில் யாரையும் பிடிக்கதென்று இல்லை.

லோஷன் அண்ணா- பல தடவை இவரிடம் நான் திட்டும் வாங்கி இருக்கின்றேன் அப்போதெல்லாம் சொல்வார் என் தம்பி செந்துவிர்க்கும் இப்படிதான் செய்வேன் விரும்பினால் கேட்டுப்பார் என்று. அப்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன் தொழிலில் அண்ணன் தம்பி எல்லாம் இல்லை எல்லோரும் சமம்தான் அதேபோல்தான் எங்களையும் தன் தம்பி போல நினைத்து தான் நடத்துகின்றார் என்று.

ஹிஷாம் அண்ணா- உதவி முகாமையாளர் என்பதை மீறி நல்ல நண்பர். மாலையில் எங்களுடன் அரட்டை ஆகட்டும் சண்டை(வம்புச் சண்டை தான்) இன்னும் உணவருந்த செல்வதாகட்டும் ரஜீவை போட்டு கலாய்ப்பதாகட்டும் சார்தான் முன்னோடி.

விமல் அண்ணா- இவரை நான் சரியாக புரிந்து கொண்டது அண்மையில் தான். ஒருமுறை மவிண்ட்லவனியா கடற்கரையில் வைத்து அவர் எனக்கு சொன்னது என்ஜாய் பண்ணும் போது பண்ணனும் வேலை செய்யும் போது செய்யணும் அப்படியான ஒரு அண்ணன் உனக்கு கிடைப்பாரா இதோ என்னை பார் என்று அவர் சொன்னதுதான் அவரை நான் புரிந்து கொண்ட சந்தர்ப்பம்.

பிரதீப் அண்ணா- காற்றின் சிறகுகள் நிகழ்ச்சி என்னிடம் தந்தபோது நான் ஆரம்பத்தில் பயந்தேன் என்னால் எப்படி பாடல்களை பக்காவாக போடமுடியும் என்று. ஆனால் என் பாடல் தெரிவுகளை நெறிப்படுத்தி உங்களுக்கு பிடித்த பாடல்களை நான் தர காரணம் இவர்தான்.

சந்துரு அண்ணா- நல்ல நண்பர். எப்போதும் பார்க்க டெரர் போல இருப்பார் என பலர் நினைப்பார். ஆனால் அந்தளவிற்கு என்ஜாய் பண்ணக்கூடியவர். நம்மை எப்போதும் கலாய்ப்பது இந்த தலைதான்.

பூஜா அக்கா- இந்த நிகழ்ச்சிக்கு நான் வரும்போது அவர் கண்கலங்கி வாழ்த்தியதே அவரின் அன்புக்கான ஒரு சாட்சி.

வைதேகி அக்கா- பல விடயங்களை பேசினாலும் அநேகமாய் எனக்கும் அவருக்கும் இடையில் வேண்டுமென்றே வம்புச்சண்டை பிடிப்போம்.

ரஜீவ்- தன் சொந்த விடயங்களையும் பகிர்ந்து கொள்ளும் நல்ல நண்பன். நான் காற்றின் சிறகுகள் பாடல்களை இட்டவுடன் முதலில் பார்த்து திருத்துவது இவர்தான்.

வனிதா- என்னுடன் அறிமுகமான என் நண்பி. அண்மைக்காலமாக தான் எங்கள் நட்பு இறுக்கமானது. நீங்கள் இன்னும் பயணிக்க நிறைய தூரம் இருக்கு. உங்களிடம் திறமை இருக்கு அதேநேரம் வெற்றியில் உங்களுக்கு சாதிக்க நிறைய வாய்ப்புகளும் இருக்கு சாதிக்க இந்த அன்பான நண்பனின் வாழ்த்துக்கள்.

தினேஷா- பழக பெரிதான வாய்ப்புக்கள் கிடைக்காவிட்டாலும். எங்கள் அலுவலகத்தில் என்னை அண்ணா என கூப்பிடும் ஒரே தங்கை. உங்களுக்கும் இன்னும் நிறைய சாதிக்க வாழ்த்துக்கள். .

பாபு- உண்மையில் என்னை விட நான்கு வயது அதிகம் ஆனால் பாபு எனதான் கூப்பிடுவேன். அனுபவமும் என்னைவிட அதிகமானவர். பாபு சரியான இடத்துக்கு வந்திட்டிங்க. இனி நீங்களும் மேலே போக வாழ்த்துக்கள்.

டிஷோ அண்ணா- என்னுடைய விருப்பம் அறிந்து பாடல் போடும் அண்ணா. அதாவது எனக்கு எந்த எந்த பாட்டுகள் பிடிக்குமோ அந்த பாடல் களை போடுபவர். அமரகானங்கள் நான் செய்யும் போது பாடல்களை போட்டு அசத்தியவர்.

அருந்ததி அக்கா- எப்போதெல்லாம் ஏதும் குழப்பத்தில் இருந்தால் தீர்த்து வைப்பவர். நல்ல ஒரு வழிகாட்டி.

கேள்வி: வெற்றியில் செய்ததில் பிடித்த நிகழ்ச்சி?

பதில்: நானாட நீயாட காரணம் என் முதல் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி என்றால் எங்கிருந்துதான் எனக்கு ஒரு எனெர்ஜி வருமோ தெரியாது. அடுத்து விடியல் ஒருநாள் முழுவதும் இன்னொருநாள் சிறு பகுதியும் செய்துள்ளேன். இந்த துறைக்கு வரும் என்னைப்போன்ற பலரின் இலட்சியமாக இருக்கும் கட்டாயம் செய்ய வேண்டும் என ஆசைப்படும் நிகழ்ச்சி.

கேள்வி: வெற்றியில் இதுவரை செய்யாத நிகழ்ச்சி?

பதில்: ரஜீவ் உங்கள் நிகழ்ச்சிதான். தாம் தூம், ஏன் அதற்கு அப்படி இந்த இரண்டும் இன்னும் எட்டவே இல்லை.

கேள்வி: செய்தி வாசிப்பது தனி ஸ்டைலில் இருக்கும் அதெப்படி யாரிடம் கற்றீர்கள் அப்படி முடிகின்றது?

பதில்: இதற்காக தனியாக கற்றது என்றில்லை. வெற்றியில் தந்த பயிற்சி அதே போல என் ஆசிரியர்கள். பாடசாலை காலத்திலேயே இந்த திறனை வளர்த்துக்கொண்டேன்.

கேள்வி: வெற்றியில் முதல் நாள் முதல் நிகழ்ச்சி?

பதில்: முதல் நாள் அமைதியாக சந்தோசமாக ஆரம்பமானது. முதல் நிகழ்ச்சி சுபாஷ் அண்ணாவுடன் சேர்ந்து எல்லாப்புகழும் ஒருவனுக்கே நீ ஓடிக்கொண்டிரு என்ற பாடலோடு ஊட ஆரம்பித்தேன் ஓடிக்கொண்டிருக்கேன்.

கேள்வி: ஒரு துடிப்பான ஒலிபரப்பாளனாக நல்ல எழுத்தாற்றல் கொண்டவனாக அதை விட நல்ல நண்பனாக எங்களுக்கு தெரிந்த இவனின் அடுத்த பரிமாணம் என்ன? இதை கேட்டவர் ஒரு போட்டி வானொலியில் வேலை செய்யும் அறிவிப்பாளர்.

பதில்: நல்ல நண்பன் என்று சொன்னது உண்மையில் மற்ற இரண்டு விடயங்களையும் விட சந்தோசமானது. காரணம் இந்த துறையில் போட்டி இருக்கு அதை விட நட்பு இருக்கின்றது என்பதை உணர்த்திவிட்டீர்கள். அடுத்த பரிமாணம் என்ன எதையும் ப்ளான் பண்ணல என் வாழ்க்கையில் எல்லாம் தன் பாட்டில் நடக்கின்றது. ஓடுவோம் ஓடிக்கொண்டே இருப்போம். அதேபோல நம்பிக்கையோடு போராடிக்கொண்டே இருப்போம்.

கேள்வி: வெற்றியில் இருந்து போகும் நீங்கள் இந்த துறையை விட்டு ஒரேயடியாக போய் விடுவீர்களா அல்லது படிப்பு முடித்து வருவீர்களா?

பதில்: உண்மையில் அந்தக்கணம் நான் இந்த துறையில் மீண்டும் வருவேன் என எதிர்பார்க்கவில்லை. ஆனால் படிப்பை முடித்த பின் எப்படியும் என் வாழ்க்கை இன்னொரு மாற்றத்துக்குள் சென்று விடும் என எனக்குத் தெரியும். எனவே வாய்ப்புக்குறைவு என்றே சொனேன். சொல்லிவிட்டு எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்து படுத்தால் இரவில் தூக்கம் இல்லை. இன்னும் நான் தூங்க தொடங்கவில்லை. நேசித்த ரசித்த தொழில் அதைவிட பாசமான சொந்தங்களான நேயர்கள் இவர்கள் இல்லாமல் வாழ்க்கை ஏனோ வெறிச்சோடிப்போய் இருக்கின்றது. இன்றும் நேயர்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் எஸ்.எம்.எஸ் எல்லாம் என்னை மீண்டும் வா வா என்கின்றது. அந்த இறுதி நிகழ்ச்சியை கேட்டு அழுதோம் என சொல்லும் நேயர்கள் பலர் அதை விட இதே துறையில் இருக்கும் பலர் இவர்கள் எல்லாம் எனக்காக ஒரு சொட்டுக்கண்ணீர் வடித்தனர் இந்த பாசம் எங்கே கிடைக்கும். உறவுகள் பெரிதாக இல்லை என்று சொன்ன எனக்கு இதோ உனக்கு ஒரு அக்கா ஒரு அண்ணா தம்பி தங்கை என ஒவ்வொரு உறவும் இருக்கு என்று கலையகத்துக்கு அழைப்பெடுத்து அழுத அந்த நல்லுள்ளங்களுக்கு நான் என்ன செய்யப்போகின்றேன்.

என்னால் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும். இன்னும் இந்த துறையில் படிக்க சாதிக்க நிறைய இருக்கும் போது நான் இதுவரை செய்த நிகழ்ச்சிகளை கேட்டு எனக்கும் ஆதரவளித்தவர்களுக்கு நன்றிகள் ஆனால் உங்களுக்கு ஒரு இனிப்பான செய்தியை இந்த பதிவின் இறுதியில் சொல்கின்றேன்.

கேள்வி: உங்கள் காதல் கதை?

பதில்: என் பெற்றோரை தொழிலை காதலிக்கின்றேன். ஆனால் நீங்கள் என்ன கேட்கின்றீர்கள் என தெரியும் என் வாழ்விலும் ஒரு காதல் வந்தது ஆனால் சில காரணங்களால் அது தோற்றுவிட்டது. இந்த இடத்தில் அந்த நபருக்கு என் நன்றிகள். காரணம் இன்று நான் சந்தோசமாக இருக்கவும் இத்தனை சொந்தங்களை பெறவும் காரணமாக இருந்தது அந்த காதல் தோல்விதான். கேள்வி கேட்டவரே போதுமா?
நினைவில் நின்ற கேள்விகளை மீட்டு இங்கே பகிர்ந்துள்ளேன். நிகழ்ச்சி நடந்துகொண்டே இருக்கும் போது என் தனிப்பட்ட தொலைபேசிக்கே பல எஸ்.எம்.எஸ்களும் அழைப்புக்களும் வந்திருந்தன. அதில் மற்ற வானொலி, தொலைக்காட்சியில் இருந்து சாதித்தவர்கள் சிலரும் அடங்கி இருந்தது எனக்கு கவலையிலும் சந்தோசம் கொடுத்தது, காரணம் என்னையும் இவர்கள் கவனித்திருக்கின்றார்களே என்று. இன்றும் அந்த நட்புக்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அதிலும் ஒருவர் தாங்கள் ஒரு குட்டி லோஷனை மிஸ் பண்ணப்போகின்றோம் என என் மீது கொண்ட அன்பு மேலீட்டால் சொல்லிவிட்டார். அதேபோல இன்னொரு அறிவிப்பாளரும் அவர் நண்பன் ஒருவர் இதை சொன்னதாக சொன்னார். உண்மையில் நீங்கள் அப்படி சொன்னது சந்தோசம் காரணம் என் குருவும் நான் ரசித்து ரசித்து வளர்ந்தவரும் அவர்தான். இதை விட பெரிய விடயம் வேறு என்ன இருக்கும் எல்லோருக்கும் அந்த துறையில் வரும் போது சாதித்த ஒருவரை போல தாங்களும் வர வேணும் என்பதே இலட்சியமாக இருக்கும். அந்த அன்பு வார்த்தைகளுக்கு நிச்சயம் நான் தகுதியானவன் இல்லை. நான் இன்னும் படிக்கவே பல இருக்கின்றது. அதைவிட இன்னொரு சுவாரஷ்யமான விடயமும் நான் இதில் சொல்ல வேண்டும். சினிமாலை நிகழ்ச்சியை அடுத்தவாரத்தில் இருந்து நீதான் செய்யப்போகின்றாய் என அப்போது நான் சொன்ன விடயம் அண்ணா வெற்றியின் ஒரு அறிவிப்பாளனாய் அந்த நிகழ்ச்சி எனக்கு கிடைப்பது சந்தோசம் ஆனால் உங்களின் ஒரு ரசிகனாக எனக்கு அது கவலை. காரணம் உங்களுக்காகவே சினிமாலை கேட்டவன் நான். இனி நான் எப்படி அதை செய்வேன்?

நிகழ்ச்சியில் இடை இடையே ரஜீவ் தன் சொல்லாளுமையாலும் தகுந்த பாடல்களினாலும் கலங்கடித்து விட்டார். இனி ஒரு அறிவிப்பாளனாய் இந்தக் கலையகத்துள் வர முடியாதே. நேயர்களின் தொலைபேசி அழைப்பெடுக்க முடியாதே. உங்கள் கவிதைகளை வாசிக்க முடியாதே, காற்றி சிறகுகளின் ஆகைய முகவரியில் உங்கள் கடிதங்களுக்கு குரல் கொடுக்க முடியாதே என என்னும் போது கலங்கத் தொடங்கினேன். அந்த நேரம் பார்த்து ஒலித்த பாடல் விடுகதையா இந்த வாழ்க்கை. பொதுவாக நான் பாடல் தெரிவுகளை செய்யும் போது நம்மை அந்த இடத்தில் வைத்து பார்த்து தான் தெரிவு செய்வேன். இது கொஞ்சம் ஓவர் தான் ஆனால் இந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் என்னை வாளால் வெட்டியது போல இருந்தது. அதில் வந்த ஒரு வரி வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்..... என்று வந்தது நான் போவதும் வாழ்வை தேடி கிடத்தட்ட வடக்கே தானே. அழுதே விட்டேன். ரஜீவும் நானும் கலங்கி இருக்க அதன் பின் வந்த எந்த அழைப்பையும் நான் எடுத்துப் பேசவில்லை. பேசும் நிலையில் நான் இல்லை. ஏதோ ஒரு கவசம் இல்லாமல் போவது போல இருந்தது. ஏதோ பெரிய இழப்பு என்று வாட்டியது.

இந்த நிகச்சியை எப்படியாவது பதிவு செய்ய வேண்டும் என்று பார்த்து ஒன்றல்ல இரண்டு ஏற்பாடு செய்தேன். அலுவலகத்தில் இணையத்தில் வெற்றி ஒலிக்கும் நேரம் அதேபோல வீட்டில் கசட்டில் ஒலிப்பதிவு செய்தால் இடையில் நம் இணைய ஒலிபரப்பு தடைப்பட்டுப்போக அதை கைவிட வேண்டிய நிலை. சரி வீட்டில் சரியாய் இருக்கும் தானே என்று வந்து பார்த்தால் நன் செய்தி வாசிப்பதும் இறுதியில் விடைபெறுவதும் மட்டும் இருக்கின்றது. என்ன கொடுமை சார் இது. ஒருவாறு வழக்கம் போல விடை பெற என்ற எண்ணத்தில் எங்கள் மன நிலையை இலகுவாக்கி கொண்டோம். புதியவர்கள் வரப்போகின்றார்கள் அவர்களுக்கும் நேயர்கள் தங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் என் நானாட நீயாட விடைபெறல் ஸ்டைலில் வரட்டாவுடன் விடை பெற்றேன். இறுதிப்பாடல் நாடோடி நண்பா போகாதே.............எனை ஈன்ற பூமி எனை அங்கு தேடும் என் தொட்ட பூவெல்லாம் காணாமல் வாடும் எனவே வருவேன் என்பதே வெற்றியில் என் இறுதி வார்த்தைகள்.

ஒருவாறு விடைபெற்று வீடு வந்து சேர்ந்தேன். வந்திருந்த எஸ்.எம்.எஸ்கள் எல்லாவற்றுக்கும் பதில் அனுப்பிக்கொண்டிருந்த போது லோஷன் அண்ணாவின் எஸ்.எம்.எஸ் வந்தது அதை அப்படியே இங்கே இடுவிடுகின்றேன். Good show da. Sentimental. All the best for ur new future. Its all in the game of life. Thanks for the nice words about me. take care. தொடர்ந்து காலையிலும் எனக்கு வாழ்த்தியதோடு என்னைப் பற்றி நன்றாக கூறி இருந்தார். அண்ணா நன்றி மட்டும் தான் என்னால் சொல்ல முடியும் ஆனால் நான் தடுமாறிய வேளைகளிலும் இன்னும் சில சூழ்நிலைகளிலும் எனக்கு ஆதரவாகவும் ஆலோசனைகளை தந்தமைக்கும் நன்றி மட்டும் தான் சொல்லமுடியும். அதே போல வெற்றிக் குடும்பமும் நீங்களும் சொல்லித்தந்த இந்த தொழிலை இந்த கலையை நான் எங்கிருந்தாலும் உங்கள் பெயரை காப்பாற்றுவது மட்டுமே நான் செய்யும் கைம்மாறு.

வெற்றிக்குடும்பமே, ஜேசன்,தினேஷ்,செய்திப் பிரிவை சேர்ந்த பென்சி அண்ணா,ரஜினி அண்ணா, அருண்,விஜய்,லெனின்,சிறியான் இன்னும் அங்கே இருக்கும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் உயர் அதிகாரிகளுக்கும் உங்கள் அன்புக்கு நன்றி. என் பிரியமான நேயர்களே, உங்களை ரொம்பவே விட்டு செல்கின்றேன். இந்த இழப்பை எப்படி ஈடு செய்வேன் தெரியவில்லை. வெற்றிக்கான உங்கள் ஆதரவுக்கு நன்றி. அதேபோல ஒரு நாள் நானும் புதுமுகம்தான் எனவே அடுத்து புதிதாய் வருபவர்களுக்கும் உங்கள் ஆதரவைக் கொடுங்கள். உங்கள் ஆதரவு இல்லாவிட்டால் எந்த ஒரு அறிவிப்பாளரும் நிலைக்கமுடியாது. எனவே அவர்களையும் வளர்த்துவிடுங்கள். பதிவுலக நண்பர்களே பின்னூட்டத்திலும் சரி சில பதிவுகளிலும் சரி என்னை பற்றி நல்ல விதத்திலும் சரி குறைகளையும் சரி விமர்சித்த உங்களுக்கும் என் நன்றிகள்.

அந்த சந்தோஷமான செய்தி என்ன..... சிலவேளை நான் என் கல்வியோடு நான் செல்லும் நாட்டில் இருந்து இயங்கும் ஒரு சர்வதேச வானொலியில் இணைந்து மீண்டும் இதே துறையில் பயணிக்கும் வாய்ப்பிருக்கின்றது.....ஒரு நண்பர் இது பற்றி பேசி இருக்கின்றார்.......இந்த துறையை விட்டு இருக்க முடியாது....எனவே சிந்திப்போம் என்ற நம்பிக்கையில் இப்போது விடைபெறுகின்றேன் விடைபெறும் நான் என்றென்றும் ப்ரியமுடன் உங்கள் பிரியமானவன் சதீஷ்.
Share:

கலைஞருக்கு எதிராக விஜய்?- சண் டி.வி ஆதரவு.


கடந்த முறை தூக்கிவிடும் என நினைத்த சண் தொலைக்காட்சியே வேட்டைக்காரனை மறைமுக வேட்டை ஆடியது தெரிந்த சங்கதி. அரசியல் ஆர்வத்தில் விஜய் பேசிய பன்ச் டயலக் எல்லாவற்றையும் வெட்டியது மட்டுமில்லாமல் சில காட்சிகளை மீள எடுக்கச் சொல்லி செய்தவை உங்களுக்கு தெரிந்ததுதான். ஒருவன் நிலை தாழ்ந்து போனால் அவன் நிழல் கூட அவனை மிதிக்கும் என தெரியாமலா சொன்னார் கண்ணதாசன். இதெல்லாம் போன வருடம் இது இந்த வருடம் என்று வடிவேல் டயலாக் தன இப்போ பொருந்துகின்றது விஜய்க்கும் சன்னுக்கும்

அப்படி என்னதான் நடந்திருக்கின்றது. சுறா படத்தின் கதை என்று இயக்குனர் சொன்னதை பார்த்தால் நிச்சயம் இது அரசியல் படம் என்பது தெளிவாகி விட்டது. இந்த அரசியல் படத்தில் இஷ்டத்துக்கு பன்ச் வைத்துக்கொள்ளுங்கள் என சன்னே சொல்லிவிட்டது. எனவே இந்தமுறை கடந்தமுரைக்கும் சேர்த்து பன்ச் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதுநாள் வரை எதிரியாக பார்த்த சண் இப்போ விஜயை தூக்கி வைக்க என்ன காரணம். அங்கேதான் அரசியல் இருக்கே.

வேறொன்றுமில்லை தயாநிதி, உதயநிதி என்று இரண்டு நிதிகளும் தயாரிப்பாளராகி வியாபார யுக்தி மூலம் தங்கள் படங்களை பிரபல்யப்படுத்த தொடங்கிவிட்டனர். எனவே சன்னின் நிலை இப்போது கொஞ்சம் கவலைக்கிடமாம். இதனால் தான் அவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட இந்த அதிரடியாம். மொத்தத்தில் சுறாவிரில் பல பாராவில் பன்ச் இருந்தாலும் ஆச்சரியம் இல்லை. முதலில் கலைஞருக்காக விஜயை நாஸ்தி பண்ணியவர்கள் இப்போது அதே விஜயை வைத்து கலைஞருக்கு ஒரு அபாய மணி அடிக்கப்போவதாக் சொல்லப்படுகின்றது. என்ன தான் நடக்கிறது நடக்கட்டுமே......
Share:

Saturday, March 20, 2010

சென்னை சூப்பர் கிங்ஸ்- சாப்பாட்டு ராமர்களாக.


சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்காக வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் ஷெரட்டன் பார்க் ஹோட்டலில் உள்ள கப்புசினோ காஃபி ஷாப்பில் தான் உணவு தயார் செய்யப்பட உள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சர்வதேச வீரர்கள் ஒவ்வொரும் தங்கள் விரும்பமான உணவுகளை தெரிவித்திருப்பதால், கிளப் சாண்ட்விச் முதல் வீச்சு புரோட்டா வரை உலகளாவிய உணவு வகைகள் தயாரிக்கப்பட உள்ளன.சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தங்களின் பிடித்தமான ஐட்டங்கள் குறித்து 'செப்' பர்வீன் ஆனந்திடம் கூறியுள்ளனர்.

தோனிக்கு பட்டர் சற்று தூக்கலாக பட்டர் சிக்கன், மாத்யூ ஹெய்டனுக்கு கல் தோசையுடன் பிரான் கறி விருப்பமாம்.முரளிதரனுக்கு சாபா புலுசு எனப்படும் மீன் உணவு, சுரேஷ் ரெய்னாவுக்கு சிக்கன் சாண்ட்விச்சும் தேவையாம்.அல்பி மார்க்கெல்லுக்கு கிளம் சாண்ட்விச் மற்றும் பனானா மில்க்ஷேக், பாலாஜிக்கு பெப்பர் சிக்கன் கிரேவியுடன் வீச்சு புரோட்டா சாப்பிட ஆசை.

ஆனால் பார்திவ் பட்டேலுக்கு வேக வைத்த சாதத்துடன் பருப்பு மற்றும் ஜீரா ஆலு என்ற சைவ உணவு தான் விருப்பம் என தெரிவித்துள்ளார்.மேலும் ஜொகிந்தர் ஷர்மாவுக்கு கொண்டை கடலையுடன் பாதுராவும், சுப்ரமணியம் பத்ரிநாத்துக்கு மட்டன் பிரியாணியும் தயாரித்து தர பார்க் ஷெரட்டன் தயாராகி வருகிறது.

நன்றி தட்ஸ்தமிழ்.

Share:

Tuesday, March 16, 2010

தேர்தல் களத்தில் குதிக்கின்றார் கான்கொன்.


நேற்றைய கும்மியின் பயனாக இன்று நானும் எங்கள் அன்பு நமீதா வருங்கால அமைச்சர் (எந்த நாட்டுக்கு என்று கேட்டு என்னை வம்பில் மாட்டக்கூடாது.) கௌரவ அதி மேன்மை தங்கிய கான்கொன்னுடன் வெள்ளவத்தை பீச்சுக்கு செல்ல திட்டம் தீட்டினோம். என்னடா பெரிய திட்டம் என கேட்கப்படாது ஒன்றும் இல்லை, உடனடியா நடக்கும் என்ற ஒரு விஷயம் கொஞ்சம் தமதமாகிப்போக தூக்கமும் இல்லை கனவும் இல்லை கலரும் இல்லை என போகும் வெறுத்த என் வாழ்க்கைக்கு இன்றாவது ஒரு விடிவெள்ளி(மாலையில் எப்பிடிடா என கேட்கப்படாது) கிடைக்காதா என தேடிப்பார்க்க என வைத்துக்கொள்ளுங்கள்.


போக முன் ஒரு அரை மணிநேரத்துக்கு முன்னர் எனக்கு அழைப்பெடுப்பதாக சொன்ன எங்கள் அன்புத் தம்பி. மன்னிக்கவும் தலைவர். சொன்னபடி எடுத்து தோளைத்துவிட்டார். இவன் எங்க டைமுக்கு வரப்போறான் என்ற நினைப்பில் நானும் ஆறுதலா வெளிக்கிட வந்திட்டானப்பா நேரத்துக்கு. அரசியலில் இறங்கப்போகும் தம்பியே ஆரம்பமே தப்பா இருக்கே. இப்பிடி நேரத்துக்கு வரக்கூடாது. ஒரு மாதிரி நடைராசா வாகனத்தில் நாங்களும் பிரயாணம் செய்து பீச்சுக்கு வந்தோம். தம்பி, வழக்கமா இப்படி கடல் ஐ பார்க்க (கடலை அல்ல என்பதை அடிக்கடி சொன்னார்.) வருவதாக சொன்னார். கொஞ்சநேரம் இருக்காது தொலைவில் வந்த காதல் ஜோடி ஒன்றை பார்த்து நான் எப்போ இப்படி வாறது என்ற பெருமூச்சுடன் நிற்க இன்னொரு நண்பர் எங்களோடு இணைந்து கொண்டார். அவர் வருகை எனக்கு பலமாகிப் போனது. காரணம் எங்கள் சிங்கத்தின் வீரச்செயல்களை அடுக்கி வைத்தார் அந்த நபர்.





பல விடயங்களை அலசி ஆராய்ந்த எங்கள் பொதுக்குழு(எல்லாம் பில்ட் அப்தான். ) பல விசயங்களை பேசிக்கொண்டிருக்கும் போது அடிக்கடி அந்த வழியால் சென்ற புகையிரதம் எண்களை குழப்பியது. கொதித்தெழுந்த எங்கள் தன்மான சிங்கம். தான் அரசியலில் நுழைந்து முதல் வேலையாக இந்த தண்டவாளங்களை இந்த பீச்சில் இருந்து தள்ளி வைக்கவேண்டும் என்ற தன் முக்கியமான பிரதான கோட்பாட்டை முன்வைத்தார். பாவம் வழக்கமா வருபவருடன் வரும் போது கஷ்டப்பட்டிருப்பார் போல. விடுங்கப்பா அவர் கஷ்டம் அவருக்கு தானே தெரியும்,





அதை விட இன்னொரு கருத்து பாருங்க இப்படிப்பட்ட அரசியல் வாதி கண்டிப்பா எந்த நாட்டில் இருக்க வேண்டும் என நீங்களே முடிவு செய்யுங்க இந்தியாவின் லாலு பிரசாத் யாதவ்வை அழைத்து வந்துதான் இதை செய்யணும் என்ற கதை வேறு. (இப்போ சொல்லுங்க இவர் எந்த நாட்டு அரசியல் வாதி என நான் சந்தேகப்பட்டது சரிதானே.) என்ன செய்றது எத்தனையோ பேர் அரசியலுக்கு வரும் போது இப்படிப்பாட அறிவாளி நல எண்ணம் படைத்த எங்கள் அன்புத் தளபதி, நமீதாவின் கொள்கை பரப்புச் செயலாளர் கான்கொன் வருவதில் என்ன தப்பு. ஒருவாறு மழைக்குள் நனைந்தபடி வீடு வந்து சேர்ந்தோம்.(நிறைய நாட்களின் பின் தான் குளிக்கின்றேன் என்ற உண்மையை சொன்னார். நீர்வள போக்குவரத்து அமைச்சராக இருக்க தகுதியான்a எங்கள் தலைவரின் பேட்டி இதோ.



நானும் ரொம்ப நாளை ஒரு மொக்கை பதிவு போட்டு மொக்கை பதிவராகனும் என பார்த்தால் நடக்கிதில்லையே. ஏன்பா யாரங்கே என்னையும் கவனியுங்கப்பா.


அப்புறம் அந்த வானொலிப் பதிவு இன்னும் இழுபடுகின்றது. இன்றோ நாளையோ இட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு தட்டச்சுகின்றேன். பார்க்கலாம்.
Share:

Saturday, March 13, 2010

கில்லியை தொடரும் கிரிக்கெட்.


கிரிக்கெட், விளையாட்டுகளில் எனக்கு ஓரளவு தெரிந்த விளையாட்டு எனக்கு பெரிதாக விளையாட தெரியாவிட்டாலும் அதை பற்றிய ஓரளவு அறிவை வளர்த்து வைத்துள்ளேன். 1999 பிற்பட்ட காலப்பகுதியில் இருந்து தான் கிரிக்கெட் பற்றி நான் அறிந்து கொண்டேன். எனவே என்னை கவர்ந்த வீரர்கள் அதன் பின் வந்த வீரர்களாக தான் இருக்கும். பெரியவர்கள் மன்னித்துக்கொள்ளுங்கள்.

ஆரம்பிக்கலாமா.

அழைத்தவர்: எப்பூடி.

விதி முறைகள்:

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.


2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை

3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்

(1) பிடித்த போட்டிவகை :ஒருநாள் மற்றும் T20

(2) பிடிக்காத போட்டிவகை :சில டெஸ்ட் போட்டிகள். முடிவே இல்லாமல் முடிவதனால்.

(3) பிடித்த அணி : இந்தியா அதன் பின் இலங்கை,நியூசிலாந்து,இங்கிலாந்து .

(4) பிடிக்காத அணி : அவுஸ்திரேலியா. காரணம் மற்ற அணிகளில் என்ன தரமான வீரர்கள் இருந்தாலும் தாங்கள் தான் மன்னர் என ஒரு சில வீரர்கள் நினைப்பது. தங்களை மற்றவர்கள் வென்றால் அதிஷ்டம் என சொல்லி சமாளிப்பது.

(5) பிடித்த துடுப்பாட்ட வீரர்கள் : சச்சின்(காரணம் சொல்லவேணுமா?) ,கங்குலி(அவர் போல நானும் இடக்கை.),சேவாக்(எதற்கும் அஞ்சா அதிரடி பார்க்கும் நேரம் முழுக்க வெறுப்பு வராத ஆட்டம்.),யுவராஜ்(மண்டியிட்டு சிக்ஸ் அடிக்கும் ஸ்டைல்.) ,கம்பீர்(கங்குலியின் வாரிசு.),விராட் கோலி(அதிரடி.), தோணி(தல ஆச்சே.),சங்கா(முன்னர் பிடிக்கும் இப்போ வெறுப்பு.) அர்ஜுன(ஒரு ரன்னை கூட நடந்து எடுக்கும் தைரியசாலி) ஸ்டீபன் பிளமின்க்,அடம் கில்கிறிஸ்ட்(அந்த அணியில் இருக்கும் ஒரே நல்லவர்.)

(6) பிடிக்காத துடுப்பாட்ட வீரர்கள் :பலர் உண்டு. ஆனால் பிரபலங்களை மட்டுமே சொல்கின்றேன். அத்தப்பத்து, டில்ஷான்(இப்போ அடி அடி என அடிப்பது ஆனாலும் ஸ்டைல் இல்லா மலட்டடி.) இன்சமாம்(மனிதன் அவுட்டே ஆகமாட்டார்.) லாரா(காரணமே இல்லை.) பொண்டின்க் (திறமை இருந்தும் வாயால் அலட்டுவதால்.) மைக்கல் கிளார்க் .(குட்டி பொண்டின்க்.) சமரவீர, சல்மான் பட்(இந்தியாவை தாக்குவதனால்.)


(7) பிடித்த விக்கட் காப்பாளர் : தோணி(நம்ம அணிக்காக ஆடுவதால்.) திராவிட்(யார்மே இல்லாத நேரம் அணியின் நலனுக்காக அந்த சுமையையும் ஏற்றதால்.) சங்கா,மார்க் பவ்ச்சர், கில்கிறிஸ்ட்.

(8) பிடிக்காத விக்கட் காப்பாளர் : பார்த்திவ் பட்டேல்

(9) பிடித்த களத்தடுப்பாளர் : எப்போதும் யுவராஜ் சிங்(பாயும் புலி.) கைப்(ஓடி எடுப்பார்.) சச்சின்(இந்த வயதிலும் ஓடி ஓடி பிடிப்பதால்.) பாண்டிங்

(10) பிடிக்காத களத்தடுப்பாளர் : கங்குலி(பந்து போக பார்த்துக்கொண்டிருப்பது.) அர்ஜுன(சொல்லவா வேணும்)

(11) பிடித்த வேகப் பந்து வீச்சாளர் :வசீம் அக்ரம், சோயிப் அக்தர்(என்ன தான் குழப்படி பயலா இருந்தாலும் வேகம் எண்டால் வேகம்.) லீ( என் தங்கைக்கு பிடித்ததால் எனக்கும் பிடித்து விட்டது.)

(12) பிடிக்காத வேகப் பந்து வீச்சாளர் : டில்ஹார பெர்னாண்டோ, மொகமத் சாமி, கிலேச்பி, ஷேன் பாண்ட் (இந்தியரை பாழாய் படுத்தியதால்.)

(13) பிடித்த ஸ்பின்னர் : முரளி(தமிழன் என்னும் பாசம்.) கும்ப்ளே(விடா முயற்சி) ஷேன் வாரன்(சாதனைகளை படைத்ததால். பின்னாளில் திருந்தியதால்)

(16) பிடிக்காத ஸ்பின்னர் : அஜந்தா மென்டிஸ்(வெட்டி பந்தா.)

(17) பிடித்த ஆடுகளங்கள் : இந்தியாவின் சென்னை, கொல்கத்தாவின் ஈடன் காடன், அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன்,அடிலெயிட்,சிட்னி,இலங்கையின் காலி, பாகிஸ்தான் லாகூர், இங்கிலாந்தின் ஓவல், தென் ஆபிரிக்காவின் ஜோகனச்பெர்க்.

(18) பிடிக்காத ஆடுகளங்கள் : இலங்கையின் தம்புள்ள(இலங்கை வெல்ல வேண்டுமென தயாரிக்கும் மைதானம்.)

(19) பிடித்த சகலதுறை வீரர் : யுவராஜ் சிங், சச்சின், இர்பான் பதான், சனத், கலிஸ், அப்பிரிடி, டானியல் வெட்டோரி.


என்ன ஒரு சகல துறை வீரர் பாருங்க.

(20) பிடிக்காத சகலதுறை வீரர் : அன்றூ சைமன்ஸ்.(குழப்படிக்கார பயல்).

(21)பிடித்த அணித் தலைவர் : கங்குலி(இந்தியாவுக்கு வெற்றி என்று ஒன்று இருக்கென சொல்லிக் கொடுத்தவர் தைரியத்தை கொடுத்தவர்) தோணி(அதிஷ்டக்கார தல) மஹேல(பொறுமை சாலி) அர்ஜுன, ஸ்டீவ் வாவ், ஸ்டீபன் பிளமின்க்(நீண்டகாலம் அணியை வெற்றிப்பாதையில் கொண்டுவந்தவர்.)

(22) பிடிக்காத அணித்தலைவர் : சச்சின்,சனத்(துடுப்பால் சாதித்தவர்கள் ஆனால் தலைமையில் சாதிக்கவில்லை.) பாண்டிங்(திமிர்.)

(23) கனவான் வீரர்கள் : சச்சின்,முரளி.

(24) பிடித்த வர்ணனையாளர் : டோனி கிரேக்,ரவி சாஸ்திரி,கவாஸ்கர்

(25) பிடிக்காத வர்ணனையாளர் :ஹர்ஷா போக்லே

(26) பிடித்த பயிற்றுவிப்பாளர் : டேவ் வட்மோர்(கத்துக்குட்டி அணியை பாயும் புலி ஆக்கியவர்) பாப் வூல்மர் (பயிற்ச்சியில் பல தொழில் நுட்பம் புகுத்தியவர்.) இப்போது கேரி கேச்டன்(இந்தியாவின் வெற்றிகளின் பங்காளன்.)


(27) பிடிக்காத பயிற்றுவிப்பாளர் : கிரேக் சப்பல்(கோச்சர் என்ற பெயரில் வந்து நாசமாக்கியது. )

(28) பிடித்த போட்டி : இந்தியா விளையாடும் எல்லாப்போட்டிகளும்.

(29) பிடித்த வளரும் வீரர் : விராட் கோலி.(என்ன பொறுப்பு என்ன அதிரடி. வருங்கால இந்தியா என சொல்லலாம்.)

(30) பிடிக்காத வளரும் வீரர் : ரியான் ஜேம்ஸ் ஹரிஷ்(அவுஸ்திரேலியா அணிக்காக விளையாடுகின்றாரே.)


பதிவெழுத நான் அழைப்பது.

1. அகசியம் வரோ ( என்னதான் எழுதிறார் பார்ப்போமே.)
2. சாளரம் கார்க்கி(உறவுக்காக)
4. க.கோபி கிருஷ்ணா( நீண்டகாலம் வேறு ஆணிகள் புடுங்குவதால்.)

வானொலியில் என் இறுதிநாள் பற்றி விரைவில் என் பதிவு வரும். சில பல தனி வேலைகள் உறவினர்களுடன் என் நேரத்தை செலவளிப்பதர்க்காக இந்த சில நாட்களை ஒதுக்கினேன். அத்துடன் வானொலியில் இருந்து விலகிய கவலை இன்னும் மாறவில்லை. எனவே நேரம் வரும் போது என் பதிவையும் எதிர்பாருங்கள்.

பல்டி: கன்கொன் || Kangon அழைச்சதுக்கு நன்றிங்ணா....
ஆனா ஏற்கனவே பதிவிட்டுவிட்டதால் பதிவிடாத ஆதிரை அண்ணாவை (:ப) இந்தப் பதிவிட அழைக்கவும்.....
http://kangon-kangon.blogspot.com/2010/02/blog-post_10.html கான்கொனின் கோரிக்கையை ஏற்று ஆதிரையை இதை தொடர அழைக்கின்றேன்.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive