உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Wednesday, December 29, 2010

உலக வரலாற்றில் முதன் முறையாக ஒரு வித்தியாச பதிவு!



உலக மகா ஜனங்களுக்கு வணக்கம்,

பதிவுலகில் ஒரு சாதாரண பதிவராக இருந்து வரும் ஒருவர் நிறைய பதிவுகளை எழுத பொறி தட்டுப்பட்டும் இன்னும் அவற்றை பதிப்பில் இடாமல் உள்ளார். சினிமா, விளையாட்டு வம்பு தும்பு என கலந்து கட்டி எழுதி பலரிடம் அடிவான்கியும் வலிக்காமல் எழுதிக்கொண்டிருந்தவருக்கு இப்போதெல்லாம் நேரம் கிடைத்தும் பதிவு எழுத மனம் இல்லாமல் எல்லாவற்றையும் டிராப்டில் வைத்துள்ளாராம்.

பதில் பதிவுகள் பரபரப்பு பதிவுகள் என பல கைவசம் இருந்தும் கரை சேர்க்க முடியாமல் இருக்கும் இவருக்கு பதிவுகளை எழுதி தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்(சுடு சோறு என நினைக்க படாது) என அறிவித்துள்ளார். அதன் ஒரு விளம்பர பதிவாக இந்த பதிவை இட வேண்டும் என அந்த பதிவர் கேட்டுக்கொண்டதுடன் நாடு கடந்த அதிகார மைய பதிவர் அவர் என்பதால் பல வெளிநாடு பெண்கள் இந்த வேலைக்கு விண்ணப்பித்தும் தமிழர் ஒருவருக்காய் காத்திருப்பதாய் சொல்லி இருக்கின்றார்.

ஆர்வம உள்ளவர்கள் கீழ்காணும் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்:
வெட்டிப்பயளுக்கு வெட்டிப்பயல்,
வெட்டித்தெரு,
வெட்டியர் கிராமம்,
லண்டன்.

அண்ணே மாரே அக்கா மாரே அங்கெ இங்கே பார்த்து உருட்டுக்கட்டை தேடாதிங்கோ. உங்களால அவரை அடிக்க முடியாது ஏன்னா அவர் அவர்......

























நான்தானுங்கோ!



உங்களால என்னை அடிக்க முடியாது. காரணம் லண்டனுக்கு வர ரொம்ப செலவாகும். இங்கே அழ வச்சு அடிக்கலாம் எண்டால முடியாதுங்க.....ஏன்னா நாங்க தான் நாடு கடந்த பதிவர்கள் அதிகார மையம் ஆச்சே....சும்மா லோலாய்....

நீங்க எல்லோரும் பதிவை போட்டு கலக்க நாமளும் ஒரு பங்குக்கு போடா வேண்டாமா என்ன? எழுத நிறைய விடயங்கள் இருந்தாலும் மகா மொக்கை ஒன்று போடணும் என்பதற்காய் இப்படி ஒரு பதிவு. சும்மா ஒரு வாக்கு குத்திட்டு போங்கோ!


Share:

Sunday, December 19, 2010

இன்றுமுதல் பதிவர்கள் இதை தான் எழுதபோகின்றார்கள்.

என்ன பதிவர்களே! ஒரு சின்ன மொக்கை போடபோகின்றேன் அதுக்கு முதல் ஒரு சீரியஸ் விடயம்.

இந்தியா, தென் ஆபிரிக்காவுடன் போட்டியில் டிரா செய்கின்றதோ இல்லையோ சச்சின் தன சாதனை பயணத்தில் இன்னொரு மயில் கல்லை தாண்டி விட்டார். சத்தத்தில் அரைச்சதம் கடந்து தன அணியை மீட்க போராடிக்கொண்டிருக்கின்றார். சாதனை நாயகனுக்கு வாழ்த்துக்கள் சொல்கின்றேன். இதை விட வேற ஒன்றும் நான் சொல்ல மாட்டேன். ஏன் தெரியுமா?

வரபோகும் இரு நாட்களும் இதுவரை பதிவர்களால் போற்றி வழிபடப்பட்ட விஜயை பின்தள்ளி சச்சின் பெயர் அடிபடபோகின்றது. இந்தியா தோற்றாலும் சச்சின் நாமமமே அனைத்து தளங்களிலும் பரவலாக ஆக்கிரமிக்கப்படபோகின்றது. மீண்டும் ஒரு தடவை சச்சின் சாதனை புத்தகம் தூசு தட்டப்படபோகின்றது.(இந்த முறை தூசு இருக்காது காரணம் இப்பதான் சில நாட்களுக்கு முன்னம் இன்னொரு சாதனையை பதிக்க எடுத்திருப்பார்கள்.) சச்சின் கடவுளுக்கும் மேலாக வைத்து பதிவர்களால் பூசிக்கப்படபோகின்றார்.

இன்னொருபுறம் சாதனைக்காக ஆடும் சச்சின். சச்சின் சுயநலவாதி என்னும் விமர்சன பதிவுகளும் வரபோகின்றன. இன்னும் என்னென்னவோ பதிவுகள் வந்தாலும் சச்சின் தான் வரும் இரண்டு நாட்கள் எல்லா பதிவர்களாலும் எழுதப்படபோகின்றார். அப்புறம் எதுக்கு நான் அவரை பற்றி எழுதுவான். நீங்கள் எழுதுங்கோ வாசிக்கின்றேன்.
Share:

The making of பதிவர் சந்திப்பு! - வரலாற்று தடம்.

பதிவர் சந்திப்பை எல்லோருக்கும் ஏற்ற ஒரு நாளில் நடத்துவதே கஷ்டம் அதை விட கஷ்டம் இந்த பதிவு போடுறது. என்ன செய்வது வெளியே போகமுடியாமல் பனி மூடிக்கிடப்பதால் வீட்டுக்குள் இருந்து ஒரு அவசர பதிவு.

லண்டனில் முதன்முறையாக தமிழ் பதிவர்கள் ஒன்று கூட வேண்டும் என்ற ஆசை வந்தி அண்ணாவுக்கு எப்போதும் இருந்தது உண்டு(இப்போது மாம்ஸ் வேற விசயத்தில் பிசி) இதை நிரூஜாவும்(அட உடனே சந்தேகப்படாதிங்கோ) மாம்சும் பலமுறை பகிர்ந்து கொண்டாலும் நான் லண்டனில் காலடி வைத்த பின் தான் சந்திப்பு என அறிவித்துவிட்டார் நாடுகடந்த பதிவர்களின் அதிகாரமைய தலைவர் திரு வந்தி அவர்கள். இந்த நிலையில் நிரூஜா இலங்கை சென்று சந்திப்பை வெற்றிகரமாக நடத்தியும் விட்டார்.

நான் லண்டன் வந்தே நான்கு மாதங்கள் ஆகும் நிலையில் சந்திப்பு பற்றி எந்த பேச்சும் இன்றி நாட்கள் போக போகத்தான் மாம்ஸ்க்கும் கரவைக்குரலுக்கும் பிறந்த நாள் வந்தது. எனவே இருவரும் விருந்துவைப்பதாய் சொன்னதை நம்பி நானும் ஓகே என ஒரு நாள் சொன்னேன்.(கடைசிவரை ஏமாத்திட்டாங்க பயலுகள்) அப்போதுதான் ஏன் இதை மற்றைய சில பதிவர்களையும் சேர்த்து சந்திப்பாக்க கூடாது என எண்ணி ஒரு மாதத்துக்கு முன்னரே பேசி வைத்துவிட்டோம்.

லண்டனில் கல்வி நடவடிக்கை வேலை என எல்லாம் பார்த்து எல்லோருக்கும் சரியான நான் எது அமையும் என்றால் நூறு வருடம் சென்றாலும் அறியமுடியாது. இந்த நிலையில் திடீரென ஒரு நாளை பலரின் தெரிவில் செய்வோம் என்ற ரீதியிலும் இந்த கிறிஸ்மஸ் விடுமுறை அதற்க்கு பொருத்தமாக இருக்கும் என எண்ணினேன். அந்த வகையில் என்னுடன் என் உளறல்கள் வந்தி அண்ணா, கரவைக்குரல் தினேஷ், பங்குசந்தை அச்சு, இளங்கன், ஜனகன் மற்றும் முன்னாள் பதிவர்கள் கோசலன், பார்த்தி, ஷனா இவர்களுடன் பின்னூட்டங்களில் சில காலம் கலக்கிய செல்லம்மாவுக்கும் அழைப்பு விடுத்ததோடு இந்திய பதிவர்களையும் கலந்து கொள்ள வைக்கும் எண்ணத்தில் பதிவர்கள் சாளரம் கார்க்கி, ரசிகன் சௌந்தர் ஆகியோரிடமும் இதை பற்றி பேசி இருந்தேன்.

இலங்கை பதிவர்கள் என்பதையும் மீறி தமிழ் பதிவர்களின் சந்திப்பாக இது அமைந்தால் சந்தோசமாக இருக்கும் என்பது மட்டுமன்றி. தமிழ் பதிவர்கள் சந்திப்பு வரலாற்றில் முதன் முறையாக லண்டனில் நடக்கும் பொது அதற்க்கு பலர் வந்தால் உரம் சேர்க்கும் என்ற எண்ணம தான்.

இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் முதல் நாள் மதியம் தான் நாளை சந்திப்பது என ஐவர் முன் வந்த நிலையில் நாங்கள் இதை பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போதே கரவைக்குரல் தினேஷ் தன கைவேலையை காட்டிவிட்டார். இதற்க்குபிறகும் நாங்கள் பின்னடிக்க முடியாது என முடிவெடுத்து ஓரளவுக்கு இடத்தையும் நேரத்தையும் முடிவெடுத்தோம். இந்த நிலையில் சிலர் தம்மால் இம்முறை பங்கு பற்ற முடியாது அடுத்தமுறை பார்ப்போம் என ஒதுன்கியதுடன் வாழ்த்துக்களை தெரிவிக்க இறுதியில் நால்வர் மட்டுமே சந்திக்க போகின்றோம் என்ற நிலை உருவானது. இங்கே கல்வியை கட் அடித்துவிட்டு வந்தாலும் வேலையை யாரும் கட் அடிக்க மாட்டார்கள். இருப்பினும் எதற்கும் ஒரு ஆரம்பம் வேண்டும் தானே சந்தித்துவிடுவோம் என முடிவெடுத்து இரவு தூங்க போகும் நேரத்தில் மாம்ஸ் அழைப்பெடுத்து நேரம் கேட்டார். அந்த நேரம் எனக்கு காய்ச்சல் ஆனால் என்ன செய்யமுடியும் இதை நான் சொல்ல சந்திப்பை நிறுத்துவோம் என்றார் இருப்பினும் சந்திக்கணும் என்று முடிவெடுத்தாச்சு இனி நாங்களே எங்க பேச்சை கேட்ககூடாது என்ற நினைப்பில் நாளை காலநிலை என்ன என்று பார்த்தால் கடும் பனிப்பொழிவு. அப்படி ஏதும் சிக்கல் என்றாலே ஒழிய வேறு எந்த காரணத்துக்காகவும் சந்திப்பு நிக்காது என சொல்லிவிட்டு தொலைபேசியை மௌனத்தில் போட்டுவிட்டு தூங்கிவிட்டேன்.

பங்குசந்தை அழைப்பு எடுத்து பார்த்து என்னை தொடர்பு கொள்ள முடியாமல் போக கரவைக்குரலுடன் தொடர்பை ஏற்ப்படுத்தி எல்லோரும் மறுநாள் oxfrod circus இல 12.30 க்கு சந்திப்பதை ஏற்பாடானது. ஆனால் அன்றைய நாளோ லண்டனில் கடும் மழை. அப்புறம் தானே நம்ம பதிவர்கள் தங்கள் நிஜ முகங்களை காட்ட ஆரம்பித்தனர். இனி கரவைக்குரல், மாம்ஸ், அச்சு தொடர்வார்கள்.

குறிப்பு: பதிவுலக மார்க்கண்டேயன் லண்டன் அதிகார மைய தலைவர் என் மாம்ஸ் வந்தி அவர்கள்(தலைவர் ஆகிட்டார் எல்லா) இப்போது வேறு வேலைகளில் பிசியாக இருப்பதால் இன்னும் படங்களை அனுப்பவில்லை. இனி அதுவும் வருமா தெரியாது. சிலவேளை கடவுச்சொல் பறிபோனால்??????????? ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.
Share:

Sunday, December 12, 2010

கொலைக்காற்று பாகம்-3

பதிவர்களினால் தொடர் கதையாக எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் கொலைக்காற்று கதையின் மூன்றாவது பகுதி என் கையில். ஏற்கனவே எழுதிய பகுதிகளை படிக்க இங்கே கீழே உள்ள சுட்டிகளுக்கு செல்லுங்கள்.




தொலைபேசி அழைப்பை தொடர்ந்து உடனடியாக கொலை நடந்த பீச்சுக்கு விரைந்த பொலிஸ் அதிகாரி சூர்யபிரகாஷ் சேகரின் உடலை கூர்ந்து கவனித்ததில் அவரின் ஆடையில் பெண்ணின் தலைமுடி சில இருந்ததை அவதானித்து விட்டார். இருப்பினும் அதை பெரிதாக காட்டிக்கொள்ளாது பிரேதத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு நேரடியாக காவல்நிலையம் சென்றுவிட்டார்.

"குட் ஈவினிங் சார்" - கான்ஸ்டபிள்

"சொல்லையா என்ன இண்டைக்கு ஒரே செத்த வீடாய் இருக்கு" இது சூர்யபிரகாஷ்.

"அதுதான் தெரியல என்ன சார் போன இடத்தில் ஏதும் சிக்கிச்சா" என காண்டபில் கேட்டதும் "அட போய்யா நீவேற என்ன கறுமமோ தெரியல ஏதும் கள்ள தொடர்போ தெரியாது. சும்மா போயா இந்த கேஸ் எல்லாம் நடத்தி என்னத்தை கிழிக்க போறோம். போ போய் எனக்கு ஒரு கொத்தும் சிகறேட்டும் வாங்கி வா" என அதட்டி விட்டு அப்படியே மெதுவாய் கண்ணயர்கின்றான் சூர்யபிர்காஷ்.

.......................................................................................................

மறுபுறம் தனது கையடக்க தொலைபேசியில் இருந்து தனது ஆருயிர் நண்பன் சேகரை தொடர்பு கொள்ள முயன்ற கெளதமுக்கு ஏமாற்றமே மிஞ்ச அப்படியே வர்ஷாவுக்கு பக்கத்தில் சாய்ந்து படுத்து கொண்டே கண்களை மூடினாலும் கெளதமை ஏனோ தூக்கம் அணைக்கவில்லை. புரண்டும் திரும்பியும் படுத்தும் தன் கணவன் தூங்கவில்லையே என அறிந்த வர்ஷா "என்னங்க தூக்கம் வரவில்லையா? என்னத்தை நினச்சுக்கொண்டு இருக்கிறிங்க" என கேட்க "ஒண்ணுமில்லை லேசா தலைவலிக்கிறது நீ படு" என சொல்லிவிட்டு மறு பக்கம் திரும்ப முயன்றவனை இழுத்து அணைத்து அன்பாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டு "எதுக்குமே யோசிக்காதிங்க அதுதான் நான் கூட இருக்கிறேன் எல்லா. பிறகென்ன தலைவலி அப்புறம் போனில தட்டுறது" என வர்ஷா தட்டு தடுமாறி கேட்டுவிட "அப்போ நீ இன்னும் தூங்கலையா? நான் என்ன செய்கின்றேன் என பார்த்து கொண்டா இருந்தாய்?" என கோபமும் சந்தேகமும் கலந்து கெளதம் சொல்ல "என்ன சார் இப்போ கோபம் நான் ஒன்றும் அடுத்த வீட்டுக்காரி இல்லை. உங்க பொண்டாட்டி தான். நானொன்றும் ஒட்டுக்கேட்கவில்லை. உடல் அசதியில் வந்து படுத்தாலும் நீங்கள் எனக்கு அருகில் இருக்கிறதால மனதளவில் எனக்கு அசதியே வரவில்லை" என ஜொள்ளு விட்டபடியே வர்ஷா பேசினாலும் கெளதமால் அதற்க்கு இசைய முடியவில்லை.

ஒரு சில நிமிட நேர பேச்சுக்கு பிறகு சத்தம் குறைந்தது. ஒருவர் மற்றவர் தூங்கிவிட்டார் என்று நினைத்தார்களோ என்னவோ தங்களுக்குள் அணைக்க முயாவிட்டாலும் கால ஓட்ட கட்டளைக்கமைய இரவை அணைத்துக்கொண்டார்கள். வர்ஷா தூங்கிவிட்டதை உணர்ந்த கெளதம் மெதுவாய் அரவமின்றி எழுந்து வந்து தன் கையடக்க தொலைபேசியைஎடுத்து சேகரின் இலக்கத்துக்கு அழைப்பெடுக்க இம்முறை ஒரு ஆண்குரல் "ஹலோ ஐ ஆம் சேகர்" என்றது இருந்தாலும் அது தன் நண்பன் சேகரின் குரல் இல்லை என உறுதி செய்து கெளதம் அந்த அழைப்பை உடனடியாகக் துண்டித்ததுடன் அடுத்த கணமே ஜெனியின் நம்பருக்கும் அழைப்பை எடுத்தான். என்ன ஆச்சரியம் இம்முறையும் அதே குரல் ஆனால் "நான் ஜெனியின் அப்பா நீங்க"
"......................................."
"ஹலோ யாரடா அது"
".........................................."
"அந்த நம்பரும் இதுவும் ஒன்று தான் சார்"
டக் டக்

ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கிறது என புரிந்து கொண்ட கெளதம் அந்த அழைப்பை துண்டித்தது மட்டுமன்றி அந்த இலக்கத்தையும் துண்டித்துவிட்டான்.
..................................................................................................................

அதே நேரம்....கொழும்பு காவல் நிலையத்தில்.......

"சார் இரண்டு நம்பரும் ஒன்றுதான். யாரோ இரண்டுபேருக்கும் தெரிந்தவன் கோல் பண்ணுறான் போல..."
"அந்த நம்பர் யார் பெயரில் இருக்கு என்று எனக்கு இப்ப உடனே தெரியணும்...." - சூர்யபிரகாஷ்.
"இப்போ நைட் காலமைக்கு தான் எடுக்கலாம்."
"ஓகே ஓகே எனக்கு நாளைக்கு தெரிஞ்சாகணும்" இது சூர்யபிரகாஷ்.

........................................................................................

கண்டியில் கெளதம் அறையில்..........

தன் எந்த முயற்சியும் பலனளிக்காமல் வந்து கட்டிலில் சரிந்த கெளதமின் நினைவுகள் கடந்த காலத்தை மீட்டி பார்க்க தொடங்கியது.......

இன்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் மாணவர் விசாவில் லண்டன் சென்ற கெளதம் பல்கலைக்கழகத்தில் தன் கல்வியை சீராக ஆரம்பித்தான். ஒரு சில வார நகர்வுகளுக்கு பிறகு தானும் இன்னொரு மாணவியும் தான் அங்கே தமிழர் என்பதை இனங்கண்டு கொண்டு அவரை சந்திக்கின்றான்.

"ஹாய்"
"ஹாய்"
"ஐ ஆம் கெளதம் புறோம் ஸ்ரீ லங்கா. ஆர் யூ எ ஸ்ரீ லங்கன் தமிழ்?"
"எஸ். ஐ ஆம் ஜெனி. ஹவ் ஆர் யூ?"
"ஐ ஆம் ஓகே....ஹா ஹா ஹா"
"என்னங்க சிரிப்பு?"
"இல்லை நாங்க இரண்டுபேரும் தமிழர்கள் என்று அடையாளம் தெரிஞ்ச பிறகும். வி ஆர் டாக்கிங் இன் இங்கிலீஷ்."
ஜெனி விழுந்து விழுந்து சிரிக்கின்றாள்.
"ஏனுங்க சிரிக்கிரிங்க"
"இல்லை தமிழில கதைப்பம் எண்டு நீங்களே இங்கிலிஷில கதைக்கிறிங்க அதுதான்."
"என்னங்க பண்ணுறது இங்க நம்ம ஆட்கள் ஒரு மூஞ்சியை பார்க்கிறதே கஷ்டமாய் இருக்கு. உங்களை பார்த்தது சந்தோசம்"
"எனக்கும் தாங்க. வி ஆர் பிரண்ட்ஸ்."
"ஏங்க நான் ஒன்று சொன்னால் தப்பாய் எடுக்க மாட்டியலே"
"இல்லை சொல்லுங்க. அதுதான் சொல்ல வந்திட்டிங்க அப்புறம் என்ன கேள்வி."
"ஓகே சொல்லுறேன். சிரிக்கும்போது உங்களை பார்த்தால் லைலா மாதிரி இருக்குதுங்க"
"இது லைலாவுக்கு தெரியுமா? ஓகே ஓகே எனக்கு ஐஸ் வச்சது போதும் வாங்க கிளாஸ் தொடங்கபோகிறது"

இருவரும் ஒரே பாதையில் பயணிக்க இரண்டுபேருக்கும் இடையில் மலர்ந்த நட்பு காதலாகி பின்னர் லண்டனில் ஒரே வீட்டில் லிவ்விங் டுகெதர் அளவிற்கு வந்தது. இந்த இளம் காதல் ஜோடியின் வாழ்வில் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் சுமுகமாக வாழ்க்கை போய் கொண்டிருக்க இருவரும் தங்கள் கல்வியை முடித்து பட்டம் பெற்றனர். அதன் பின் இரண்டு வருட வேலைவாய்ப்புக்கு வழங்கும் விசாவையும் பெற்று எவ்வளவு முடியுமோ அந்தளவிற்கு கஷ்டப்பட்டு உழைத்து பணத்தையும் சேர்க்க தொடங்கினர். தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடங்களையும் ஒன்றும் விடாமல் தன் நண்பன் சேகருடன் தொலைபேசியிலும் மின் அஞ்சலிலும் பகிரும் கெளதம் தன் நண்பனை தன் வருங்கால மனைவுக்கும் நல்ல நண்பனாக மாற்றி இருந்தான். சில நேரங்களில் இருவருக்குள்ளும் செல்ல சண்டைகள் வரும் போதெல்லாம் சேகர் தான் பேசி தீர்த்து வைப்பான். அந்த நேரத்தில் சேகர் சில நேரங்களில் ஜெனியின் ஒரு நல்ல சகோதரன் போல இருந்து கெளதமை எதிர்த்து இவர்கள் பிணக்கை தீர்த்ததும் உண்டு.

இந்த நிலையில் கெளதம் மற்றும் ஜெனிக்கு இருவர் வீட்டிலும் திருமண பேச்சுக்கள் வந்தாலும் இருவராலும் தங்கள் காதலை பற்றி வீட்டில் சொல்ல முடியாமல் இருவர் மதமும் தடுத்துக்கொண்டே இருந்தது. இந்த நேரத்தில் கெளதமின் அம்மா வர்ஷாவை பார்த்து தன் மகன் வெளிநாட்டில் இருக்கின்றான் லண்டன் மாப்பிள்ளை என்ற பெயருடன் நிறைய சீதனத்துடன் பொண்ணும் கேட்டு எல்லாம் ஓகே செய்துவிட்டார். இதை கெளதம் பெரிதாக எடுக்காவிட்டாலும் விதி இவர்கள் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்தது.

ஜெனி, கெளதம் இருவருக்கும் ஒரே நேரத்தில் விசா முடிய மேலும் லண்டனில் தங்க முடியாத சூழ்நிலை வர இருவரும் ஒரே நாள் ஒரே விமானத்தில் பறந்து தாயகம் திரும்பினர். விமான நிலையத்தில் வைத்து பிரியும் போதே....

"கெளதம் என்னை மறந்திட மாட்டியே?"
"ஆர் யூ (f)பூல்? உன்னை விட்டு என்னால வாழ முடியுமா? தைரியமாய் போ நானே உன் வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்கின்றேன்."

இருவர் கண்களும் பனிக்க நீண்ட நாட்களின் பின் அந்த காதல் ஜோடி தன் சிறகுகளை வேறு வேறு திசையில் பறக்க திருப்பியது.

வீட்டுக்கு வந்த கெளதம்,ஜெனியால் நேரடியாக சந்திக்க வாய்ப்புக்கள் இல்லாமல் போக தொலைபேசியில் மட்டுமே இவர்கள் காதல் வளர்ந்தது. இந்த நிலையில் தான்.
"டேய் உனக்கு நிச்சயம் பண்ணனும் அதுக்கு முதல் போய் பொண்ணை ஒருக்கா பார். உனக்கு பிடிக்காட்டில் வேண்டாம். ஆனால் பார்த்திட்டு சொல்லு" இது கெளதமின் அம்மா.

அவரின் நச்சரிப்பு தாங்காமலே சேகரையும் கூட்டிக்கொண்டு வர்ஷா வீட்டுக்கு போனவன். அவர்களின் வீட்டின் வசதிகளை பார்த்ததும் மனதில் சலனம் தோன்றுவதை உணர தொடங்கினான்.
"மச்சான் எவ்வளவு பெரிய வீடடா"?
"ம் உன் அம்மா உனக்கு பெரிய இடமாய் தான் பார்த்திருக்கா? சொத்து ஓகேடா ஆனால் பொண்ணு தான் எப்பிடி இருக்கோ?"

பேசிக்கொண்டே உள்ளே சென்றவர்களை இன்முகத்துடன் வரவேற்ற குடும்பம் வர்ஷாவை கோக் கொண்டு வா என சொல்ல பல திரிஷாக்களையும் அசின்களையும் அனுஷ்காக்களையும் ஒன்றாக சேர்த்த ஒரு அழகு சில வருவதை கண்டு அப்படியே சொக்கிப்போய்விட்டன் கெளதம். சம்பிரதாயமாய் பார்க்க போனவன் கூடிய சீக்கிரமே கல்யாணத்தை முடிப்போம் என தன் மாமா மாமியிடம் சொல்லிவிட்டு வெளியில் வர சேகர் இது சரியில்லையா ஜெனி பாவம் என எச்சரித்தான்.

"போடா போ. அது லண்டனில எல்லாம் முடிஞ்சிது. இங்கே இனி அவள் எதுக்கு. ஜெனியிடம் என்ன இருக்கு. வர்ஷா பார் எப்பிடி அழகாய் இருக்கா. அதைவிட நாலு தலைமுறைக்கு உட்காந்து சாப்பிட சொத்து இருக்கு" என்று கெளதம் சொல்லிமுடிக்க முன்னரே

"நான் இப்பவே ஜெனியிடம் எல்லாம் சொல்ல போறேன்" என சென்ற நண்பனை தன் தாயின் பேச்சை மீற முடியாது இவளை தான் திருமணம் செய்ய வேண்டும் என புதிய கீதை ஒன்றை உரைத்து சேகர் மனதையும் கலைத்தான்.

சொல்லி ஒருமாத்தத்தில் திருமணமும் இனிதாய் நடந்தேறியது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஜெனியுடன் கதைப்பதை கெளதம் தவிர்க்க முயன்றாலும் மீறி கதைக்கும் சந்தர்ப்பத்தில் இதை காட்டிக்கொள்ளாமல் நடக்க முயன்றான். ஆனால் கெளதமின் திருமண நாளன்று ஜெனியிடம் இனி நீ அவனை தொடர கூடாது அவன் இனி இன்னொருத்தனுக்கு சொந்தம் என சேகர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சொல்லி வைக்க முதல் கெளதமின் அலைபேசி அலறியது.

அந்த அழைப்பை ஏற்றவன் சொன்ன வார்த்தைகள் மட்டுமே இங்கே எழுத்தில் வடிக்க கூடியவை. ஜெனி.....?

"நான் சொல்லுறத கேளு ஜெனி நான் வேணுமெண்டே செய்யல என் அம்மா கட்டாயப்படுத்தி செய்திட்டா. நீ கவலை படாதே நான் எப்பிடியும் இவளை டைவர்ஸ் பண்ணிட்டு உன்னோட தான் வாழ்வேன் நீ தான் என் மனைவி என சமாதனப்படுத்திக்கொண்டிருக்கவே அவன் அம்மா அந்த இடத்துக்கு வர தொடர்பை துண்டித்து விட்டான். பிறகு பல தடவை ஜெனி தொடர்புகொள்ள முயன்றும் முடியாமல் போய்விட்டது. ஆனால் மூன்று நாட்கள் கடந்த பின் வந்த அழைப்பை ஏற்று பேசிய கெளதம் உனக்காக அவளை கொலை செய்து விட்டு வந்து என்றாலும் வாழ்வேன். கொஞ்ச நாள் பொறு என சொல்லிவிட்டு வைத்துவிட்டான். இந்த நிலையில் தான் ஜெனி, சேகர் என இருவரின் கொலையும் நடந்தேறி இருக்கிறது.


மறு நாள் அதிகாலை.....

"வர்ஷா இண்டைக்கு நாங்கள் கொழும்புக்கு போகணும் சீக்கிரம் எழும்பு"
"என்னங்க இண்டைக்கு வேலை இல்லையா?"
"இருக்கு ஆனால் நம்ம சேகரை யாரோ கொன்னுட்டாங்களாம்"
"என்னது உங்க பிரென்ட் சேகர்? செத்திட்டாரா? எப்பிடிங்க? யாரு கொன்றதாம்? உங்களுக்கு எப்பிடி தெரியும்?"
"வா எல்லாம் போகும் போது சொல்லுறேன் இப்போ ரெடியாகு"
இருவரும் பேசிக்கொண்டே கொழும்பை நோக்கி விரைகின்றனர்.

இதற்கிடையில் கெளதம் முன்னர் சேகர் மற்றும் ஜெனியுடன் தொடர்பு கொண்ட நம்பர் யார் பெயரில் பதிவாகி இருக்கின்றது என்று தேடி பார்த்த போது அது சேகரின் பெயரில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. நாடு திரும்பிய வேளை சேகர் தன் பெயரில் இருந்த ஒரு சிம்மையே கெளதமிடம் கொடுக்க தொடர்ந்து கெளதம் அதையே பயன்படுத்தி வந்தான்.

நேராக சேகர் வீட்டுக்கு சென்றவர்கள் பகல் முழுவதும் அவர்களுடன் இருந்துவிட்டு இரவு ஒரு விடுதிக்கு சென்று அறை எடுத்து தங்கினர். விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனை என்று சூரியபிரகாசும் அடிக்கடி அங்கே வந்து சென்று கெளதமுக்கு நெருங்கிய நண்பராகிவிட்டார். இதனால் அவர்கள் தங்கும் ஹோட்டல் விபரங்களையும் பெற்றுக்கொண்டு அனுப்பிவைத்தார்.

ஹோட்டல் அறைக்கு வந்த இருவரும் பயண மற்றும் இறந்த வீட்டில் இருந்த களைப்பால் நேரத்துக்கே தூங்கிவிட்டனர். இடையில் தூக்கம் கலைந்து எழுந்த வர்ஷா,கெளதமுக்கு தெரியாமல் யாரோ ஒருவருக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவிட்டு தூங்கிவிட்டாள். இருவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கையில் ஒரு மர்மமான உருவம் அவர்கள் அறையை நெருங்குகின்றது. இந்த நேரம் சொல்லி வைத்தது போல அந்த உருவம் நெருங்கும் திசையை நோக்கியே வர்ஷாவும் எழுந்து நடக்க ஆரம்பிக்கின்றாள்.!!!!


இனி???????????????????????????????????????

கொலை குழப்பம் நிறைந்த இந்த கதையை நம் சக பதிவர் மது தொடர்வார்.

Share:

Tuesday, December 7, 2010

விஜயின் கடைசிப்படம் வேலாயுதம்????


தலைப்பை பார்த்து நிறைய பேர் பயந்திடுவாங்க. அடுத்து இவன் விஜய் ரசிகன் தானே விஜய்க்கு சப்போர்ட்டா எழுதி இருப்பான் என்று நினைப்பவர்கள் மேலே படிக்க வேண்டாம். இல்லை இல்லை தன் ஆதங்கத்தை கொட்டி இருப்பான் என நினைப்பவர்கள் சத்தியமாய் அப்பிடியே அடுத்த பக்கம் போங்கோ. நிஜமாய் தான் சொல்கின்றேன் நம்ம தளபதியை ரவுண்டு கட்டி தான் இந்த பதிவு.

விஜய்க்கு இது போதாதா காலம் என்று சொல்ல மாட்டேன். அந்த முட்டாளுக்கு(3 idiots படத்தில் ஒரு ஹீரோ என பேசினாங்க அப்போ இவர் ஒரு முட்டாள் தானே) சொந்த செலவில் சூனியம் வைக்க ரொம்ப நல்லாய் தெரியும். அப்பா பேச்சை கேட்டால் பிள்ளைகள் நல்லாய் இருப்பாங்க என்று நம்ம மூதாதையர் சொன்னதை இன்றுவரை பின்பற்றும் ஒரே ஒருவர் இவர் தான். பின்னே எத்தனை மொக்கை படம் எத்தனை கிண்டல் கேலி வந்தாலும் அசந்து கொடுக்கிரானா இந்த மாப்பு. இதை விட என்னங்க வேணும் அரசியலுக்கு வர. கல்லெறிந்தாலும் வலிக்காத மாதிரி நடிக்க தெரிந்த விஜயை பார்த்து யாரையா சொன்னது நடிக்க தெரியாது.

எங்க தளபதிக்கு வேணுமென்றால் திரையில் கமல் போல நடிக்க தெரியாமல் இருக்கலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் எங்கள் அழகிய தமிழ் மகனை விஞ்ச யார். கைப்புள்ளை இன்னுமாடா ஆஸ்பத்திரி போகாமல் இருக்கிறாய். தமிழ் சினிமாவில அவருக்கு அடுத்து ஒரு இடம் உனக்கு தாப்பா இருந்தது அதை மறுக்கல ஆனால் இப்போ நீ போற பாதையை பார்த்தால் உவ்வே.....குருவை மிஞ்ச ட்ரை பண்ணாதேப்பா. எல்லாத்தையும் அவருகிட்ட இருந்து கொப்பி பண்ணுற நீ இதை மட்டும் எதுக்கு அவசரப்படுகின்றாய்(அவர் யாரென்று நான் பெயர் சொல்ல மாட்டேன் பிறகு அவர் பெயர் சொல்லி நான் ஹிட் கொடுத்தேன் என்று சொல்லிடுவாங்க.)

அவரே கிழட்டு சிங்கத்தை பார்த்து அரை டவுசர் பையன் மாதிரி நிக்கும் போது அரை டவுசர் போடும் வயசு பையன் உனக்கு அரசியல் எதுக்கு? முதல்வன் படத்தில் நடிக்காத நீங்கள் இரண்டு பேரும் எதுக்கு முதல்வன் பதவிக்கு மட்டும் ஆசைபடுகிறிங்க. கொஞ்ச படம் ஒழுங்காய் போகல என்டவுடனையே உன் அப்பாவை கொஞ்சம் வீட்டில உட்கார வச்சிட்டு பையன் படம் நடிக்க போறான் என உன் முடிவுகளை நினைச்சு சந்தோசப்பட்டோம். ஆனால் அவர் வீட்டில் இல்லை போயஸ் காடனில் இருந்தார் என்று இப்பதானே தெரிய வருது. ஏண்டா ராசா உனக்கு இந்த வேலை. காவலன்,வேலாயுதம்,மூன்று முட்டாள், பகலவன், விக்ரம் கே குமார் என்று ஒழுங்கான இயக்குனர்களிட்ட நீ போறத பார்த்து அட தளபதியும் தலையும் மீண்டும் கிளம்பிட்டாங்க என நினைச்சா, நீங்க என்னவென்றால் அரிசிமூட்டையும் பசு மாதுமை அலையிறிங்க.

எல்லாம் இருக்கட்டும் உங்களுக்காக மதுரையே கலக்கிய மதுரை மன்னனின் வீட்டு கல்யாணத்துக்கு கூட போகலையாம். சரி படம் மேலே உண்மையில் அக்கறை என பார்த்தால் இல்லை இல்லை பகை என்று எல்லோ புகை வருது. என்ன தளபதி இது தியேட்டரை அடைச்சால் என்ன நீங்கள் ஒரு ஹிட் படம் கொடுத்தால் எவனும் உங்க படத்துக்கு தடை போட முடியாது. பாபா தோற்ற போது எல்லோரும் தானே ஆடினியல் உங்கள் குரு மீண்டு வரவில்லையா? இப்போ உங்கள் நேரம் ஒரு படத்தில பிக் அப் ஆனால் போய்ட்டே இருக்க வேண்டியது தானே. திரையிலையே நடிக்க கஷ்டப்படும் உங்களால் நிஜத்தில் நடிக்க முடியாது டாக்டர்.

திரைப்படங்கள் போதும் என்ற எண்ணம் உங்கள் மனதில் வந்ததால் தான் உங்கள் வாரிசாக வருங்களா நடிகனாக உங்கள் மகனை அறிமுகப்படுத்தி விட்டீர்கள். இனி அவன் வளர்ந்து வந்து விட்டதை தொடரட்டும் என்று நீங்கள் அரசியல் போறதாய் முடிவோ? இந்த பதிவை எழுத வைத்த செய்தி என்ன என்றால் ஷங்கர் படத்தில் இறுதி விலகிட்டிங்க என்று வந்த செய்தி தான். ஏனுங்கோ இந்த முட்டாள் முடிவு. நல்ல ஸ்க்ரிப்ட் நல்ல இயக்குனர் நீங்கள் விலகிப்போனால் யாருக்கு நட்டம். ஒ உங்களுக்கு இல்லை என்று நீங்கள் சொல்வது புரிது. அதுதானே அரசியலுக்கு வரவேண்டிய அத்தனை ஏற்பாடும் செய்தாச்சு இனி எதுக்கு ஷங்கர் என்ன மணிரத்னம் என்ன? யார் படமும் முக்கியமில்லை. இனி தேவை பசுவும் அரிசி மூட்டையும் தானே. சூப்பர் தலிவா உங்க அப்பன் பேச்சை கேட்டு நீயும் ஒருநாள் அரிசி மூட்டை போல வீட்டில் இருக்கும் நாள் வரும். காரணம் இது எம்.ஜி.ஆர் காலமில்லிங்க அண்ணா.

இனி நம் மக்களுக்கு!
விஜய் அரசியல்க்கு வர முழு வேலையும் செய்து முடித்து விட்டார். இனி அவரை மட்டும் அல்ல யாரையும் காப்பாத்துவது கஷ்டம். அதுக்கு இறுதி ஆயுதம் ஒன்று தான் உண்டு. அதுதான் காவலன் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்குவது. அப்படி நடக்கும் பட்சத்தில் தான் விஜய் மேலும் படங்கள் நடிப்பார் இல்லையேல் அரசியல் சாக்கடையில் இன்னொரு நட்சத்திரம் மங்கிப்போகும் காலம் வெகு தொலைவில் இல்லை. சாதாரண கதைகளுடன் ஹீரோயிசத்தை தவிர்த்து விஜய் படம் கொடுத்தால் இளைய தளபதி திரையுலகில் தொடர்ந்து மின்னலாம். இதை அவர் தந்தை யோசிக்க வேண்டும்.(நான் சொல்வதை யாரும் சீரியசாய் எடுக்க மாட்டீர்கள் என நினைக்கின்றேன்.)

சீரியஸ் மேட்டர்: ஒரு மகனாக விஜய் அவர் அப்பா சொன்னதெல்லாம் செய்கின்றார்(சோப்பு போட்டதும் தான்). தந்தை சொல்லை மதிக்கும் ஒரு தனயனை தந்தை தன் சுய விருப்பு வெறுப்புக்காக அழிக்காமல் திரை உலகில் வாழவிடுவதே சிறப்பு.

மிக விரைவில் பதிவர்கள் பற்றிய என் கிசு கிசுவுடன் போலி பதிவுலீக்ஸ் பதிவு.
Share:

Monday, December 6, 2010

மகனுடன் துடுப்பெடுத்தாடும் சச்சின்.-காணொளி இணைப்பு.

கிரிக்கெட்டின் சாதனை மன்னன் சச்சின் தன் மகனுடன் கிரிக்கெட் ஆடும் காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. வருங்கால இந்தியா அவர் கருத்திலோ?

Share:

நானும் ஒரு பதிவருங்கோ?- மறந்தவர்களுக்கு நினைவூட்ட.



என்ன நண்பர்களே? எப்பிடி இருக்கிறிங்க. இலங்கையில் இருந்த போது நிறைய கிறுக்கிய இவன் இப்போ அடங்கி இருக்கிறான் என சந்தோசப்படும் நல்ல உள்ளங்களே. நானும் ஒரு பதிவருங்கோ!

மாதம் ஒரு பதிவுபோட்டிட்டு எல்லா தளத்திலும் பின்னூட்டம் போடும் பிரபல பின்னூட்டவாதியில்லையுங்கோ!(அதுக்காகா அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய பதிவர் சாரி பின்நூட்டவாதி கறுப்பு தங்கத்தை குத்துறேன் என நினைக்க கூடாது. குத்தினால் எனக்கு தான் வலிக்கும்.) இருந்தாலும் நான் ஒரு பதிவருங்கோ! பின்னூட்டம் போடாவிட்டாலும் இன்ட்லியில் இரவு பகல் பாராமல் அத்தனை இடுகையும் வாசிக்கும் வாசகனுங்கோ.

லண்டன் ஸ்நோ பெண்டு கழட்டுதுங்கோ அதனால பதிவ எழுத முடியாமல் இருக்கு என சாட்டு சொல்ல மாட்டேனுங்கோ ஆனாலும் நான்பதிவருங்கோ! நிறைய நாளுக்கு ஒரு பதிவு போட்டாலும் ஹிட் ஆக நான் ஒன்றும் சூப்பர் ஸ்டார் இல்லைங்கோ ஆனாலும் நான் பதிவருங்கோ! எனக்கு நிறைய படிப்பு புரிஜெக்டுகள் இருக்குதுங்கோ இருந்தாலும் இப்படி ஒரு பதிவு போடுறேனுங்கோ ஏனெண்டால் நானும் உங்களை போல ஒரு மொக்கை பதிவருங்கோ!

என்ன கடுப்பாகுதா? இப்படி தான் எனக்கும் கொஞ்ச நாள் பதிவு எழுதாமல் கை எல்லாம் ஏதோ பண்ணுதுங்கோ! வரும் சில நாட்கள் முடிந்தால் அதகளம் பண்ண போறேன் அதனால தான் சொல்லுறேன் நானும் ஒரு பதிவருங்கோ! இப்ப கூட இந்த செமிச்டேரின் இறுதி நாட்களில் இருக்கின்றேன். இருந்தாலும் ஒரு பதிவு போட்டு நானும் ஒரு பதிவர் என உங்களுக்கு சொல்ல வேண்டாமா? காரணம் இல்லாமலா இப்படி ஒரு பதிவு. இப்பெல்லாம் காற்றெல்லாம் கொலை வாசி வீசுது. அந்த சூறாவளி எங்க பக்கம் வரமுதல் நானும் ஒரு பதிவர் என உங்களுக்கு நினைவூட்ட வேண்டாமா?

யாரும் இதை சீரியசாய் படிக்காதிங்க. இதுவும் ஒரு மொக்கை தாங்கோ! அட சொன்னால் தான் தெரிது என யாரப்பா அங்கே சவுண்டு விடறது. ஓகே ஓகே இப்போ போறேன் மறுபடி வருவேன்.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive