உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Thursday, December 31, 2009

சினிமாலை-2009



வெற்றி எப். எம் வானொலியில் ஞாயிறு மாலை 3-5 மணிவரை சினிமா செய்திகள்,புதிய பட விமர்சனம், சிறப்புத்திரைப்படமாக ஏற்கனவே வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனா ஒரு திரைப்படத்தோடு திரைப்படங்களுக்கான தரப்படுத்தலையும் வழங்கி வருகின்றேன்.அந்த வகையில் இந்த வருடத்தின் நிறைவு சினிமாலை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒலி பரப்பானது. சாதனைகள்,வேதனைகளோடு முற்று முழுதான இந்த அலசலில் சில முக்கியமான விடயங்களை இங்கே பகிர்ந்து கொள்கின்றேன்.

இந்த வருட தமிழ் சினிமா இப்போது திரும்பி பார்க்கும் போது அதிக இழப்புக்களை சந்தித்த ஒரு வருடமென சொல்லலாம் அதேநேரம் ஒரு சில அளப்பரிய சாதனைகளை கொண்டு வந்ததும் இந்த வருடமே. இதில் என்ன கொடுமை என்றால் மொக்கையோ அல்லது சக்கை போடு போடும் படமோ இரண்டையும் இந்த வருடம் பார்க்கும் பாக்கியசாலி நான் தான். இதோ இந்த வருடத்தின் தமிழ் சினிமா.....

இந்த வருடம் வெளிவந்த திரைப்படங்களில் சிலவற்றை நான்கு பிரிவுகளாக பிரித்துள்ளேன்.
1.மிகப்பெரிய வெற்றி.
2.வெற்றி.
3.சராசரி.
4.எதிர்பார்த்து தோல்வி அடைந்தவை.



முதலில் எதிர்பார்த்து தோல்வி அடைந்தவற்றை பார்த்தால். விஜயின் வில்லு அந்த பெயரை முதலில் தட்டிக்கொள்கின்றது. அழகிய தமிழ் மகன்,குருவி சறுக்கல்களுக்கு பின் தன் முந்தைய வெற்றி இயக்குனர் பிரபுதேவாவுடன்(போக்கிரி) கைகோர்த்த இரண்டாவது திரைப்படம் ஆனால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் படுத்துக்கொண்டது. அடுத்து கே.பாலசந்தருக்கு பிறகு இரண்டு முன்னணி கதாநாயகர்களை உருவாக்கிய பாலா இயக்கிய நான் கடவுள் ஆர்யாவை பழிவாங்கிகொண்டது. விருதுகளை அள்ளிக்குவித்து பிரகாஷ்ராஜ் நடித்த காஞ்சிவரமும் ஏனோ வசூலை குவிக்கவில்லை. கல்லூரி கலாட்டாக்களுடன் அழகிய அம்மா நதியா நடித்த பட்டாளம் பட்டையை கிளப்பவில்லை. பில்லா படத்தை பிரமாண்டமாக கொடுத்த விஷ்ணுவர்த்தன் நான் கடவுளில் சொதப்பினாலும் நடிப்பில் இன்னொரு பரிமாணம் காட்டிய ஆர்யா இணையும் படம் என்ற எதிர்பார்ப்பில் வந்த சர்வம் சந்தடி இன்றி போனது. தளபதி பட்டத்தை சொருகிக்கொண்டு விஷால் இளைய தளபதியை பின்பற்றி நடித்த தோரணை விஷாலுக்கு சத்தியத்தை தொடர்ந்து வந்த சோதனையாகிப்போனது. பத்து இயக்குனர்கள் ஒன்றாக நடிக்கும் படம் என்பது மட்டுமில்லாமல் சீமான் பாடி நடித்த பேசாமல் பேசாமல் இருந்து...என்ற பாட்டும் எதிர்பார்ப்பை கூட்டி நல்ல படமாக வெளி வந்தாலும் எமதருமை ரசிகர்கள் அதை ஏற்கவில்லை. தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் எடுக்க நினைக்கும் கதை ஆனால் தொட பயப்படும் கதை பிரசன்னா-சினேகா வாழ்ந்து காட்டிய அச்சமுண்டு அச்சமுண்டை வெளிநாட்டவர் ரசித்து விருது கொடுத்தளவிற்கு வசூலை கொடுக்கவில்லை. அஜித்தின் அசல் படத்தை இயக்கப்போபவர் முன்னைய சறுக்கலை துடைப்பார் என்னும் எதிர்பார்ப்பில் மோதி விளையாடுக்காக காத்திருக்க திரைக்கதையில் ஓட்டையை வைத்து எங்களுக்கு சாட்டை அடி கொடுத்தார் சரண். சேரனின் படங்கள் இழுவை அதிகமானாலும் தரம் இருக்கும் என்ற நம்பிக்கையை பொக்கிஷம் காப்பாற்றாமல் போனது. சிறுவர்களுக்கான படம் என்ற கவர்ச்சியுடன் வந்த வண்ணாத்திப்பூச்சி சிறகு விரிக்கவில்லை. சின்ன தளபதிக்கு சூப்பர் ஸ்டார் ஆசையில் மண்ணைப் போட்டது ஆறுமுகம். நான் அவனில்லை படம் கொடுத்த தைரியத்தில் செல்வாவும் ஜீவனும் கை கோர்த்து கொடுத்த நான் அவன் இல்லை இரண்டு நான் அவனில்லை ஒன்றைக் கொடுத்த அவன் நான் இல்லை என சொல்ல வைத்து விட்டது


அடுத்து வெற்றி என்ற இலக்கை அடைந்த படங்கள்.
ஜீவா ஒரு சராசரி கதாநாயகனாக நடித்த படம் சிவா மனசில சக்தி நகைச்சுவையால் வெற்றி பெற்றது. புதுமுகங்கள் நடிப்பில் வெளிவந்த குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் நன்றாக போனது. சண் டி.வி புண்ணியத்தில் நம்ம சுனைனா(இப்போ எனக்கு தலைவி இவதாங்க அதுதான் நம்ம அசின், திரிஷா எல்லாம் இல்லையே) நடித்த மாசிலாமணி மாசில்லாமல் ஓடி வெற்றியை தொட்டது. நகைச்சுவையை மையப்படுத்தி வந்த வெடிகுண்டு முருகேசன், குயிக் கண் முருகன் இரண்டும் எதிர்பாராத வெற்றியை ருசித்தன. தொடர்ந்து பல வருடங்களாக தன்னை நிலை நிறுத்த போராடிய அருண்குமார்-அருண் விஜய் என்ற பெயரில் நடித்த மசாலா திரைப்படம் அவர் திரை உலக வாழ்க்கையில் பாரிய திருப்பத்தை உண்டு பண்ணியது. மீண்டும் ஒரு கல்லூரிக்கதை நினைத்தாலே இனிக்கும் விஜய் ஆண்டனியின் அதிரடி இசையில் இனிக்கும் கரும்பானது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்த மதுரை சம்பவம், நகைச்சுவையை தெளித்த திரு திரு துரு துருவும் தங்கள் வெற்றிய பதிவு செய்தன. அண்மையில் வெளிவந்த ரேணி குண்டாவும் இந்த வருடத்துக்கான வெற்றி படமாக தன்னையும் சேர்த்துக்கொண்டது.



இந்த வருடம் இப்படி சங்கடங்களை சந்தித்தாலும் சில படங்கள் புரட்சி செய்யத் தவறவில்லை. இவைதான் இந்த வருடம் மிகப்பெரிய வெற்றிக் கொடியை நாட்டிய படங்கள் இந்த வருடத்துக்கான பெரிய வெற்றிப்படங்களை ஆரம்பித்து வைத்தவர் தனுஷ் படிக்காதவன் மூலம் வழக்கமான சாதாரண கதை தான் என்றாலும் தனுஷ்-தமன்னா என்பதையும் தாண்டி ஏதோ ஒரு ஈர்ப்பினால் ஒடிவிட்டது. கிராமத்தையும் விளையாட்டையும் மையப்படுத்தி குழுவாக திட்டமிட்டு வந்த வெண்ணிலா கபடிக்குழு திரில்லர்,ஆவி என பயமுறுத்திய யாவரும் நலம், அழகிய அனுஷ்காவை மீள அழைத்து ஆனால் கொஞ்சம் பயப்படுத்திய(எங்களை மட்டுமல்ல அசின்,திரிஷா நயனங்களையும் தான்.) அருந்ததி என தங்கள் பங்குக்கு படங்கள் வெற்றியை பதிவு செய்து இந்த வருடத்தை காப்பாற்றின. அதனை தொடர்ந்து இந்த வருடத்தின் வசூல் சாதனை படைத்த அயன் பாடல்களிலும் பட்டையை கிளப்பியது.சிறுவர்களையே நாயகர்களாக்கி வீட்டுக்குள் நடக்கும் சுவாரஷ்யத்தை திரையில் தந்த பசங்க சாதனையோ அளப்பரியது. அடுத்து நாடோடிகள் இந்த வருடம் வந்த சிறந்த படம் என மார்தட்டி சொல்லலாம். சசிகுமார் என்னும் இவ்வருட நட்சத்திரத்தை மின்ன வைத்த படம். இப்படி ஒரு படமா என ரசிகர்களை பாராட்டவைத்தது.

விக்ரமின் கடின உழைப்பில் பொழுது போக்குடன் சமூக கருத்தும் சொன்ன கந்தசாமியை நம் பதிவர்கள் நொந்தசாமி ஆக்கினாலும் அவர்களை வெந்தசாமி ஆக்கிவிட்டு வெற்றிக் கோட்டை சாமியானார் விக்ரம். இமாலய வெற்றியை சூர்யாவிற்கு பதிவு செய்த அயன் திரைப்படமும் படிக்காதவனும் கந்தசாமியும் தான் இந்த வருடம் வெற்றி பெற்ற மசாலா படங்கள். இது தமிழ் சினிமாவிற்கு ரசிகர்கள் அடித்த சாவு மணி என்றே சொல்லலாம். ரசனை மாற்றம் ஏற்ப்படத்தொடங்கிவிட்டது என்பதையும் காட்டிகின்றது. வழக்கம் போலவே புதுமையுடன் இருந்த இடத்தில் இருந்தே சிக்ஸர் அடித்தார் உன்னைப்போல் ஒருவன் கமல். அருந்ததி,யாவரும் நலம் வரிசையில் இன்னொரு த்ரில்லர் ஈரமும் ஒட்டிக்கொண்டது. இளைய நாயகர்களில் இவ்வருடம் வித்தியாசமாக சாதித்தது ஜெயம் ரவி தான் கோமணத்தோடு நடித்து வெற்றியும் கண்டார். எஸ்.பி.ஜனநாதன் என்ற அற்புத படைப்பாளியின் இன்னொரு குழந்தையாக வந்து அசர வைத்தது பேராண்மை . மொழிமாற்றப்பட்டு அளப்பரையற்று வந்த கண்டேன் காதலை வெற்றியை கண்டுகொண்டது. அண்மையில் வெளிவந்து வெற்றிகரமாக தன் ஆரம்பத்தை கண்டிருக்கும் வேட்டைக்காரன்(நாம என்ன சொன்னலும் வசூலை தடுக்க முடியல) கந்த கோட்டை திரைப்படங்களை இந்த வருட கணக்கில் சேர்க்கவில்லை காரணம் சில நாட்கள் மட்டுமே ஆன நிலையில் முழுதாக இவற்றின் வெற்றி தோல்வி பற்றி பேசமுடியாது.


அடுத்து இந்த வருடம் இசை அமைப்பாளர்களில் விஜய் அன்ரனியே அதிகம் ஜொலித்திருக்கின்றார். யுவன் ஷங்கர் ராஜாவும் விஜய் அண்டனியும் ஒரே அளவு படங்களுக்கு இசை அமைத்தாலும் விஜய் அண்டனியின் இசையில் வந்த பாடல்களும் படங்களும் பட்டையை கிளப்பியதை மறுக்கமுடியாது. அ ஆ இ ஈ ,தா ந 07அ ல 4777, நினைத்தாலே இனிக்கும்,வேட்டைக்காரன் என விஜய் அன்டனிக்கு இசை ரீதியான வெற்றியை இந்த பட பாடல்கள் பெற்றுக்கொடுத்தன. ஆனால் யுவன் இசை அமைத்த பெரிய படங்கள் சர்வம்,வாமணன்,யோகி கவித்துவிட சிவாமனசில சக்தி கொஞ்சம் பெயரை காப்பாற்றியது. பாடகர்களில் இந்தவருடம் பென்னி தயாளுக்கும் சுசித்ராவுக்கும் முக்கியமான ஆண்டாக முடியப்போகின்றது.



கடந்த வருடங்களில் அதிக படங்களில் நடித்த சத்யராஜின் ஒரு படமும் இந்த வருடம் வராமல் போக சுந்தர்.சி இம்முறை அந்த இடத்தை பிடித்துக்கொண்டார். தீ,பெருமாள்,ஐந்தாம்படை இந்த மூன்று படங்களும் சராசரியாக ஓடியதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல ஜெய்,அஜ்மல் இந்த இரண்டுபேருக்கும் தங்கள் திறமையை வெளிக்காட்டவும் முன்னிறுத்திக் கொள்ளவும் இந்த வருடம் உதவியாக அமைந்தது. நடிகைகளில் சந்தேகமே இல்லாமல் இது தமன்னா ஆண்டு. அசின்,திரிஷா இல்லாத இடத்தில் புகுந்து தனி ஆவர்த்தனம் நடத்தினார். ஆனந்த தாண்டவத்தை தவிர அயன்,கண்டேன் காதலை,படிக்காதவன் மூன்றும் ஹிட் ஆகி இந்த வெண்ணிற அழகியை(சுடுதண்ணி ஊத்தின தோல் என என் நண்பன் நக்கலடிப்பான்.) முன்னணிக்கு கொண்டுவந்தது. யார் முன்னுக்கு வந்தால் என்ன நான் தான் அதிக படம் நடிப்பேன் என நடித்த கவர்ச்சி பாம் நமீதாவிற்கு தீ,பெருமாள் தவிர ௧௯௭௭,இந்திரவிழா,ஜெகன்மோகினி படங்கள் கைகொடுக்கவில்லை. அடுத்து கவனிக்கப்பட்டவர்கள் லக்ஷ்மிராயும் சரண்ஜா மோகனும்


எதிர்கால நபிக்கையை யார் கொடுத்தார்கள் என்றால் புதுமுகங்களில் யாருமே இல்லை என்று சொல்லலாம். குங்குமபூவும் கொஞ்சும் புறாவும் நன்றாக போயும் ஹீரோ ராம கிரிஷ்ணனை யாரும் கண்டு கொள்ளவில்லை. அதே போல உன்னை போல் ஒருவனில் நடித்த கணேஷ் வெங்கட்ராமன் கவனிக்கப்படாலும் பின்னர் படங்கள் அமையவில்லை. யோகி அமீர் நடிகராக ஓரளவு தன்னை காட்டிக்கொண்டாலும் இது தொடருமா என்பது கேள்வியே? பெண்கள் அணியில் நாடோடிகள் கதாநாயகியை தவிர யாருக்கும் தங்களை நிலை நிறுத்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அந்த வகையில் ஏராளமான புதுமுகங்கள் அறிமுகமாகியும் பிரகாசமற்று போன ஒரு வருடம் கடந்து போகின்றது. நகைச்சுவை நடிகர்களில் வடிவேலு,விவேக்கை முந்தி சந்தானமும் கஞ்சாகருப்பும் வந்து கொண்டிருக்கின்றனர்.


இந்த வருடம் தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சாதனைகளும் வேதனைகளும்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒஸ்கார் விருது.
நகைச்சுவைத்திலகம் நாகேஷ் எழுபத்தாறு வயதில் காலமானார்.
அசினின் உதவியாளர் மாயமான பிரச்சனை ஒரு கலக்கு கலக்கியது.
இலங்கைத் தமிழர்களுக்காக அஜித் தன் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்தார்.
சண்டை கலைஞர் ராம்போ ராஜ்குமார் தன் ஐம்பத்து மூன்று வயதில் காலமானார்.
தயாரிப்பாளரும் நடிகருமான கே.பாலாஜி எழுபத்து நானு வயதில் காலமானார்.
கஸ்தூரிமான் திரைப்படத்தை இயக்கிய மலையாள இயக்குனரும் மீரா ஜாஸ்மினுடன் கிசுகிசுக்கப்பட்டவருமான லோகிதாஸ் காலமானார்.
காவ்யாமாதவன் திருமணமும் விவகாரத்தும்
மலையாள நடிகர் முரளி காலமானார்.
உலகநாயகன் தன் ஐமபதாவதாண்டை திரை உலகில் பூர்த்தி செய்தார்.
ஜெயம் ரவி,மீனா,விக்ராந்த் போன்று இன்னும் சில நட்சத்திரங்கள் திருமண பந்தத்தில் இணைந்தன.
சோனியா அகர்வால்-செல்வராகவன்-ஆண்ட்ரியா பிரச்சனை.
நயன்தாரா-பிரபுதேவா கள்ளக்காதல்.(அம்பலக்காதல்)
நடிகர் விஜயின் அரசியல் நாடகம்.
காஞ்சிவரம் படத்துக்கும் பிரகாஷ்ராஜுக்கும் தேசிய விருது.
சி.என்.என் ஐ.பி.என் டி.வியின் சிறந்த இந்தியருக்கான விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது.

இதோ இன்னும் ஒரு சில மணித்தியாலங்களில் இந்த வருடம் விடைபெற்றுக்கொள்ளப்போகின்றது. அடுத்த வருடம் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல நம் பலரின் வாழ்கையில் எதிர்பார்ப்புகளுக்கு பஞ்சமில்லாமல் உதயமாக போகின்றது. என் பிரியமானவர்களுக்கு என் இனிய புது வருட வாழ்த்துக்கள்.

Share:

Thursday, December 24, 2009

வேட்டைக்காரனையே வேட்டை ஆடிய விஜய் ரசிகன்.



விஜய் ரசிகர்கள் மட்டும் அல்ல விஜய் எதிர்ப்பு வாதிகளாலும் எதிர்பார்க்கப்பட்ட(உங்களுக்கு மட்டும் தானுண்ணா இந்த சிறப்பு.) வேட்டைக்காரன் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்துவிட்டான். இலங்கையில் வியாழன் இரவே ஒரு சிலர் படத்தை பார்த்து விட்டதால் வெள்ளி காலையில் இருந்து விமர்சனப்பதிவுகள் வர ஆரம்பித்தன. நான் எதிர்பார்த்தது போலவே வேட்டைக்கரனை வேட்டையாடிய பதிவுகள். நேரம் செல்ல செல்ல நிலைமை மோசமானது. பதிவர்களின் வேட்டை அதிகைத்தது. உண்மையில் ஒரு விஜய் ரசிகனாக வெட்கிப்போனேன். அதுமட்டுமில்லாமல் கவலையும் பட்டேன். இந்தமுறையும் கவித்திட்டாரா என்ற கவலையுடன் எதுவா இருப்பினும் ஒருதடவை படத்தை பார்த்து விடனும் என்ற முடிவில் சனிக்கிழமை காலை படம்பார்க்க சென்றேன்.


டிக்கெட் கிடைக்கவில்லை சினிசிட்டிக்கு. இங்கே ஓசியாக பார்க்கும் வாய்ப்பும் கிடைக்க இங்கேயே பார்க்கலாம் என நானும் அலுவலக நண்பன் ஒருவரும் சென்றோம்(அவரும் விஜய் ரசிகருங்கோ.). காலை பத்து பதினைந்துக்கு காட்சி என்றனர் நாங்கள் 9.45க்கே சென்றுவிட்டோம். எல்லா ஆர்வக்கோளாறு தான்.சென்றால் கூட்டம் இளைஞர்கள் பெண்கள் குழந்தைகள் என அந்த வெயிலிலும் கூட்டம்.(இந்த திரை அரங்கிலேயே இப்படி என்றால் இதை விட நல்ல திரை அரங்குகளில் எவ்வளவு கூட்டம் இருக்கும் என சிந்தித்தேன்.) ஒருவாறு நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு உள்ளே சென்றால் ஹவுஸ் புல் என்பதை அறியக்கூடியதாக இருந்தது.


சரி படம் பார்க்கலாம் என ஆவலோடு எதிர்பார்க்க சண் pictures தொடக்கம் விஜய் சண் வரும் வரை விசிலடித்தான். எனக்குள் சந்தோசம் அட நம்ம தளபதி ஜெயிச்சிட்டார் என்று. குருவி, வில்லு போன்ற ஓவர் பில்ட் அப்புகள் இல்லாமல் தளபதியின் அறிமுகம் எனக்கு சந்தோசத்தை கொடுத்தது. அதை தொடர்ந்து வழக்கமான ஒபிநிங் பாடல் விஜயின் வழக்கமான நடனம் இல்லாமல் போனது ஏனோ? கொஞ்சம் அடக்கி வாசித்தார். மகனுடன் ஆடும் பொது விஜய் கொஞ்சம் மெதுவாக ஆட ஜூனியர் தளபதி ஐயப்பன் ஆசியுடன் அறிமுகமாகி அப்பாவுடம் அமர்க்களம் பண்ணினார். மகன் ஆட விஜய் பார்த்து ரசித்ததை நானும் ரசித்தேன்.மூன்று முறை பரீட்சையில் தோற்று நான்காவதில் வெல்வதை அப்பட்டமாக சொல்லாமல் சொல்லி இருக்கின்றார்கள் தளபதியின் இன்றைய நிலையை.


வழக்கமான படம் போல ஆரம்பித்து விட்டது இனியாவது களை கட்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த எனக்கு பட்டாம் பூச்சி பறந்தது அதுதான் நம்ம ஸ்வீட்டி அறிமுகமான நேரம் நான் வழியல அனுஷ்கா நிஜ பெயரை சொன்னேன். சும்மா சொல்லக்கூடாது நன்றாகத்தான் இருந்தா அக்கா.(எஸ்கேப்) வழக்கமான படங்களில் ஹீரோ ஹீரோயின் அறிமுகம் போல இங்கும் ரசிக்க முடியவில்லை. ஆனால் விஜயின் அந்த குறும்புத்தனத்தை மட்டுமே அதில் ரசித்தேன். வாரணம் ஆயிரம் போல தளபதிக்கும் ரயில் பயணமோ என நினைக்க இல்லை இல்லை என அனுஷ்கா சொன்னபோது கவலைப்பட்டது விஜய் மட்டுமல்ல நானும் தான். அதற்க்கு முன் தன குடும்பம் பற்றி விஜய் கற்பனை காதல் கவிதை.ஆனால் அதன் பின் ரயிலில் என்ன நடந்தது என்பது தெரிய முன்னமே காலேஜில் சேரும் விஜய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க அனுஷ்கா வருவார் என நினைக்க ஒரு சோடாபுட்டி போட்டா பெண் அறிமுகமாகிறார். என்னடா இது என நினைக்க அந்த வகுப்பிலேயே தனக்கு படிப்பிக்க வரும் ஆசியருக்கு படிப்பிக்கின்றார் நம் விஜய். டாக்டர் பட்டம் இதுக்கு தானோ.(சத்தியமா ரசிக்க முடியல இது ரொம்ப ஓவருங்க.) அதற்க்கு பின் செல்லா அறிமுகம் அட நம்ம ஆதி வில்லன் சாய்குமார். ஆளே மாறிப்போனார். அதேபோல அந்த நடிப்பிலும் ஏதோ மிஸ்ஸிங். அவரின் பாத்திர படைப்பை காட்டவே காமுகனாக காட்டி இருக்கின்றார்கள். வழக்கமான விஜய் படம் போலவே எதிர்பாராத (வேண்டுமென்றே திணிக்கப்பட்டிருக்கும் மாணிக்கவிநாயகம் அண்ட் மகள் ) திருப்பத்தால் விஜய்-வில்லன் மோதல் உருவாகிறது. இதற்கிடையே அனுஷ்கா வருகின்றார் போகின்றார். கரிகாலன் பாட்டு பரவாயில்லை ஆனால் ஏனோ விஜயின் நடனம் மிஸ்ஸிங். சண்டைக்காட்சிகளிலும் புதுமை இல்லை. பார்த்துப் புளிச்சு போன காட்சிகள்.


போலீஸ் பிடித்துப்போகும் விஜயை காப்பாற்ற அனுஷ்கா எடுக்கும் முயற்சி சராசரி கதாநாயகிக்கு உரியது. ஆனால் இறுதியில் விஜய் போலிசிடம் இருந்து தப்புவது. அருவியில் குதி ப்பதெல்லாம் எதிர்பார்த்ததுதான். இங்கே இடைவேளை விட கொஞ்சம் அயர்ந்து தூங்கப்போன என்னுடன் வந்த நண்பரை எழுப்பினேன். அடப்பாவி இங்கே இப்படி விஜயின் தாண்டவம் நடக்க நீ தூங்கிறாயா? இடைவேளைக்கு பிறகு நான் எதிர்பார்த்த புலி உருமுது பாடல் வானொலியில் நான் ஒலிபரப்பும் போது கிடைத்த அந்த புத்துணர்ச்சியை தரவில்லை. இன்னும் நன்றாக படமாக்கி இருக்கலாம். அடுத்து சின்ன தாமரை இதில் தான் விஜய் வித்தியாசம் காட்ட முயற்சித்து இருக்கின்றார். இப்படி பாடல்களில் வித்தியாசம் காட்டும் நீங்கள் ஏன் ஒரு படம் அப்படி நடித்து முயற்சி செய்யக்கூடாது என நானும் யோசித்தேன். ஆனால் அதற்கும் காரணம் இருந்தது நிறைவில் சொல்கின்றேன்.என் உச்சி மண்டையில் மட்டுமே விஜயின் அசுர நடனத்தை காணக்கூடியதாக இருந்தது.


இரண்டாம்பாதி ஒரு சிவகாசி,திருப்பாச்சியில் இருந்த விறு விறுப்பு இருக்கும் என்றால் விஜயின் நடை உடை எல்லாம் அவரின் பகவதி படத்தை அச்சு அசலாக கொப்பி பண்ணி இருந்தது. சில காட்சிகள் எனக்கு அலுப்பு தட்டியது உண்மை. ஒரு சில Punch டயலக்குகள் இருந்தது Punch டயலாக் ரசிகரான எனக்கு கவலயே. செல்லாவின் தந்தையாக வருபவர் அசால்டாக வில்லத்தனம் அனால் அதுவே கொஞ்சம் ஓவர். விஜயும் அவரும் மோதும் காட்சிகளை இன்னும் சுவாரஷ்யமாக்கி இருக்கலாம். இறுதியில் விஜய் வில்லனை அழிக்காமல் தேவராஜை வைத்து அழிப்பது விஜய் படங்களுக்கு புதுசு. இதைவிட இடை இடையே சத்தியன் குழு உட்பட வரும் காட்சிகள் எல்லாம் விஜய் ரசிகர்களுக்கு புதிதல்ல. மொத்தத்தில் விஜயின் திருப்பாச்சி, சிவகாசி,போக்கிரி(ஒரு சில காட்சி) பகவதி, பாட்ஷா படங்களில் இருந்து உருவியது மட்டுமில்லாமல் வரப்போகும் சிங்கம் பட காட்சிகளையும் வைத்து வந்து வேட்டை ஆடிக்கொண்டிருக்கின்றான் வேட்டைக்காரன்.


இந்த விமர்சனம் வானொலியில் நான் வேலைக்கு சேர்ந்த பின் வரும் விமர்சனம், காரணம் ஒரு விமர்சனம் செய்யும் நாடு நிலையில் இருந்து இந்த படத்தை பார்க்கும் போது நிச்சயமாக இது ஒரு சிறந்த படம் அல்ல. விஜய் படம் அப்படி தானே என நீங்கள் கேட்கலாம். ஆனால் மூன்று தோல்விகளுக்கு பின் மீள்வருகை கொடுக்கும் ஒரு படமாக இது அமையவில்லை என்பதே என் கருத்து. கொஞ்சமேனும் கதையில் வித்தியாசம் காட்டி இருந்தால் இமாலய வெற்றி கிடைத்திருக்குமே. ஆனால் நிச்சயம் இது வழக்கமான விஜய் ரசிகர்களை முழுதாக திருப்திப்படுத்திய படமே. இதற்க்கு சாட்சி இன்று வரை குழந்தைகள், பெண்கள்,இளைஞர்கள் உட்பட எல்லோரும் குடும்பம் குடும்பமாக சென்று ஹவுஸ்புல்லாக இருக்கும் இந்த படத்தை பார்ப்பது. இன்றுவரை இலங்கையில் ஹவுஸ் புல்லாகவும் டிக்கெட் எடுப்பதில் கடினமாக இருப்பது போன்றவை வேடைக்காரனின் எழுச்சிக்கு உதாரணங்கள். என்னதான் சண் Pictures படத்தை வெளியிட்டாலும் படம் ரசிகர்களுக்கு பிடிக்காவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது. அதேபோல இன்றைய திகதியில் ஒரு திரைப்படம் நூறு நாள் ஓடுவதை வைத்து வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படவில்லை. வெளியாகும் போது அதிக திரை அரங்குகளில் அதிக காட்சிகள் என ஓடும் போது குறிப்பிட்ட சில நாடகளிலேயே வசூல் சாதனை படைத்து விடும் அண்மையில் இதற்க்கு கண்டேன் காதலை உதாரணம் ஐம்பது நாளில் கந்தசாமி வசூலை முறியடித்து விட்டது. பரத்தின் படமே அப்படி எண்டால் விஜய் படம்? சொல்லவா வேண்டும்.


இதெல்லாம் இருக்கட்டும் படம் வெற்றியா இல்லையா என கேக்கிறிங்களா? நிச்சயமாக இது விஜயின் வெற்றிப்படங்களில் ஒன்று ஐம்பது அடிக்கமுன் ஒரு பவுண்டரி அடித்து அரை சதத்தை நெருங்குகின்றார் விஜய். இந்த பெருமையில் பெரும் பங்கு நம்மை போன்ற பதிவர்களையே சாரும். தன வாழ்நாளில் விஜய் படம் திரை அரங்கில் பார்க்காதவர்கள் என சொல்லிக்கொண்டே இந்த படத்தை பார்த்தோம் என சொல்லி விமர்சனம் எழுதிய பதிவர்கள் உட்பட பலரின் பங்களிப்பில் வேட்டைக்காரன் வெற்றிக்காரனாகி விட்டான். எஸ்.எம்.எஸ்கள், எதிர் பதிவுகள், தடைகள் எல்லாவற்றையும் தாண்டி இன்று வேட்டைக்காரன் வெற்றி பெற்று விட்டான். வேட்டைக்காரன் தோல்வியடையும் என படம் வர முன்னர் கணித்த நம் தீர்கதரிசன பதிவர்களே என்ன சொல்லப்போகின்றீர்கள். ஒரு விஜய் ரசிகனாக எனக்கு இந்த வெற்றி சந்தோசமே. ஆரம்பத்தில் சொன்னேனேனே விஜய் இப்படி வித்தியாசமான வேடம் செய்யக்கூடாதென ஆனால் விஜய் நிச்சயமாக உங்களை அப்படி ஒரு நிலையில் பார்க்கும் தன்மை ரசிகர்களுக்கு இல்லை. விஜயை விஜயாக திரையில் பார்க்கவே ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர் என்பதற்கு இந்த கதையில்ல வேட்டைக்காரனே உதாரணம். இது ஒரு சில நாயகர்களுக்கு மட்டுமே உண்டான வரம். அது உங்களுக்கு உண்டு.எனக்கு வேட்டைக்காரன் இன்னொரு திருமலை, கானரணம் தோல்வியில் இருந்து விஜய் வெற்றிப்படியில் ஏற தொடக்கி இருக்கும் படம்........
Share:

Thursday, December 17, 2009

வேட்டைக்காரன் வென்றுவிட்டால்?



இளைய தளபதியாக ஒரு சில வருடங்களுக்கு முன் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வந்த விஜய் இன்று இளைய தலைவலியாகவும் சர்தாஜி ஜோக்கர் போலவும் வலம் வந்து கொண்டிருக்கின்றார். காரணம் அந்த மூன்று படங்களும் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மூன்று படங்களும் விஜய் ரசிகர்களுக்கே பிடிக்காத படங்களாக மாற சந்தில் சிந்து பாடும் கூட்டத்துக்கு அது வாய்ப்பாகி போனது. நம்மில் எத்தனையோ பதிவர்கள் தங்கள் தளத்துக்கு ஹிட்ஸ் கூட்டவும் பிரபல்யபபடுத்தவும் விஜய் என்னும் பெயர் ஆணிவேராகிப்போனது. விஜயை தாக்கினால் பதிவு பிரபலம் என்ற கணக்கில் இன்றைய நிலை. இதெல்லாம் கில்லி,சிவகாசி வரும் போது இல்லையே. ஆனால் இப்போது அந்த திரைப்படங்களையும் போட்டு தாக்குகின்றனர் சில பதிவர்கள். ஒன்று மட்டும் புரியவில்லை அன்று வெற்றி பெற்ற படங்கள் என சொல்லப்பட்ட இந்த படங்கள் இன்று ஏன் உங்களுக்கு மொக்கையாகின.

சரி என்ன செய்வது இதை பற்றி எழுதப்போனால் எனக்கு தாக்குதல் மட்டுமே மிஞ்சும் வேறு பலனில்லை. ஆனால் வேட்டைக்காரனை புறக்கணிப்போம், வேட்டைக்காரன் தோல்விப்படமாகும் என சொல்லிவருபவர்கள் இதே வேட்டைக்காரன் வெற்றி பெற்றுவிட்டால் என்ன நடக்கும் என சிந்தித்ததில்லை. எல்லாத் தடைகளையும் தாண்டி வேட்டைக்காரன் வசூல் வேட்டை ஆடிவிட்டால்?


1.மூன்று படங்களினாலும் கோமாளியாக்கப்பட்ட விஜய் பழையபடி நம்பர் வன் ஹீரோ ஆகிவிடுவார். மீண்டும் நம் பதிவர்கள் வேறு ஒரு நடிகரை தேடிப்பிடித்து வறுக்க ஆரம்பிப்பர். விஜய் புகழ் பாடும் பதிவுகள் அதிகம் வரும்.

2.விஜயின் ஐம்பதாவது படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரிப்பதுடன் அந்த படம் இன்னும் பல வசூல் சாதனைகளை செய்யும்.

3.பழைய பட பெயர்களை பாவிக்கும் பழக்கம் இன்னும் அதிகரிக்கும்.

4.தமிழ் படங்களை தவிர்த்து ஜேம்ஸ் கமரூனின் அவதார் போன்ற படங்களை பார்க்கும் உயர் ரசனைக்காரர்கள் கூட தமிழ் படங்கள் மேல் காதல் கொள்வர்.(தமிழ் படங்களை கேவலமாக விமர்சித்து வேறு மொழிப்படங்களை நன்றென தூக்கிப்பிடிக்கும் தமிழர்கள்.)

5.இயக்குனர் பாபு சிவனுக்கு வேறு பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம்.

6.சண் பிக்செர்சுக்கே தொடர்ந்து விஜய் தன் படங்களை கொடுக்கலாம்.(கொடுத்த அடியை பார்த்தால் இந்த வாய்ப்பு குறைவே.)

7.விஜய் அன்டனி இசை அமைத்தால் வெற்றி என்ற மாயை உருவாவதுடன் விஜய்-விஜய் அன்டனி கூட்டணி தொடரலாம்.(இசை-வித்தியாசாகர் கூட்டணி கொஞ்சகாலம் மிரட்டியது போல்.)

8.ஏற்கனவே படம் பார்க்காமல் விமர்சனம் எழுதும் ஒரு சில பதிவர்கள்(தொப்பி பொருந்தியவர்கள் போடுங்கள்) இனி வாழ்நாளில் அந்த தீர்கதரிசன தவறை செய்யாமல் போகலாம்.

9.இதே பட கூட்டணி மீண்டும் இணையலாம்.

10.விஜய்-த்ரிஷா போல் இந்த ஜோடியும் அடிக்கடி இணையலாம்.( விஜய்-அனுஷ்கா)

11.விஜயை தாக்கி வரும் நகைச்சுவைகள் திசை மாறலாம்.

12.விஜய் மூலம் ஹிட்ஸ் தேடிய பல பதிவர்களின் பதிவுகள் ஹிட் ஆகாமல் போகலாம்.

13.நம் லோஷன் அண்ணா விஜய் ரசிகனாக மாறலாம்.(ஹி ஹி ஹி)

14.நான் இந்த பதிவு போடா காரணமாக இருந்த ஹிஷாம் அண்ணா வேட்டைக்காரன் சொதப்பினால் என போட்ட பதிவினைப்போல சுராவிற்கு போடாமல் தப்பிக்கலாம்.

15.மூக்குடைபட்ட பல பதிவர்கள் வைத்தியசாலியில் அனுமதிக்கப்படலாம்.

16.படத்தை புறக்கணிப்போம் என சொல்லிய சில தமிழ் பற்றாளர்கள்?????? இதை நீங்களே சொல்லுங்கள் அவர்கள் கதி என்னாகும்.

17.இதை விட கொடுமை ஒன்றும் நடக்கும் தொடர்ந்து இதே போன்ற படங்களில் விஜய் நடிக்கலாம்.


எதுவா இருப்பினும் இன்று மாலை கொழும்பில்(யாருக்காக புலம்ப்யர் தமிழர் புறக்கணிப்போம் என்றனரோ அதே நாட்டில்) சினி சிட்டியில் வேட்டைக்காரன் திரையிடப்பட இருக்கிறதாம். என்னால் இன்று முடியாது பார்ப்போம் நாளை. வேட்டைக்காரனின் வேட்டை ஆரம்பமாகப்போகின்றது.
Share:

Wednesday, December 9, 2009

என்னது பதிவர் சந்திப்பா?-நான் வரமாட்டேன்.













இலங்கைத் தமிழ் பதிவர்கள் சந்திப்பு வெற்றிகரமாக முதல் தடவையாக நடந்து முடிந்தபின்னர் அடுத்த சந்திப்பு எப்போது என்று எல்லோரும் எதிர்பார்த்த போது நாங்கள் இருக்கிறோம் என சந்திப்பென்ற பெயரில் சில விரும்பத்தகாத சம்பவங்களோடு நடந்து முடிந்தது அந்த நிக்கிறம் மன்னிக்கவும் இருக்கிறம் சந்திப்பு.

அந்த குறைகளை நிவர்த்தி செய்து முற்று முழுதாக ஒரு ஆரோக்கியமான பதிவர் சந்திப்பு நடை பெறுவதற்கான ஆயத்த முயற்ச்சிகள் இடம்பெற்ற வேளையில் எனக்கு ஒரு மிரட்டல் விஜய்க்கு பதில் என்னுடைய கொடும்பாவியை எரிக்கப்போவதாக. (இப்போ சூர்யாவின் கொடும்பாவியும் எரிப்பிங்களா?) என் அன்பான பதிவர்கள் என்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கின்றார்கள் என்றதன் வெளிப்பாடே அது.

இருந்தாலும் நம் குடும்பம், அன்பான நண்பர்களை பார்க்க வேண்டும் என எனக்கும் ஆசை.எல்லோரையும் சந்திக்கப்போகும் அந்த இனிய நாள் எப்போது என நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால்வைத்தார்கள் பாருங்கள் எனக்கு ஒரு இடி ஏற்ப்பாட்டாளர்கள். ஏனையா உங்களுக்கு என்மேல் என்ன கோவம்.? என் கையில் மாட்டிநீர்கள்? (அன்பாக திட்டுவேன்) இந்த சந்திப்புக்கான நாள் பலருக்கு உசிதமாக இருந்தாலும் இந்த துர்ப்பாக்கியசாலிக்கு ஏற்ப்புடையதாக இல்லை. காரணம் என் பெரியப்பாவின் அந்திரிட்டிக்கு நான் இன்றிரவு யாழ்ப்பாணம் செல்கின்றேன். என்ன செய்வது நண்பர்களே உங்களை பார்க்க முடியவில்லை. உங்கள் இனிமையான வார்த்தைகளை கேட்கமுடியவில்லை உங்களுடன் என் அன்பை நேரட்டியாக பகிர முடியவில்லை இது என் விதி.

ஏற்ப்பாட்டுக்குழு நண்பர்களே என்னை மன்னித்து விடுங்கள் நான் வரமாட்டேன். ஆனால் மற்ற பதிவுலக நண்பர்களே நீங்கள் கண்டிப்பாக செல்லுங்கள் இந்த இனிமையான் சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள். சந்திப்பு வெற்றிபெற உங்கள் குடும்பத்தில் ஒருவனின் வாழ்த்துக்கள். மீண்டும் விரைவில்
சந்திப்போம் .....

இடம் : தேசிய கலை இலக்கியப் பேரவை, காலி வீதி, வெள்ளவத்தை (ரொக்சி திரையரங்கு முன்னால்)
காலம் : டிசம்பர் 13, 2009 (ஞாயிற்றுக்கிழமை)- பி.ப. 2.00 மணி


நிகழ்ச்சி நிரல்
அறிமுகவுரை
புதிய பதிவர்கள் அறிமுகம்

கலந்துரையாடல் ஒன்று : பயனுறப் பதிவெழுதல்
பதிவுகளின் தன்மை, எவ்வாறு அது இருக்கவேண்டும், அதன் வீச்சு, தாக்கம், எவ்வாறு அதனை மேம்படுத்துவது போன்றன.

கலந்துரையாடல் இரண்டு : பின்னூட்டங்கள் குறித்தான பார்வை
காத்திரமான பின்னூட்டம், பயன்தரு பின்னூட்டம், தனிநபர் தாக்குதல் பின்னூட்டம், அநாமதேயப் பின்னூட்டம், பின்னூட்டங்களுக்கான எமது தயார்படுத்தல், பின்னூட்டக் கடமை மற்றும் கயமை போன்றன

சிற்றுண்டியும் சில பாடல்களும்

கலந்துரையாடல் மூன்று : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது?

கலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும்
பதிவெழுதுதலில் பெண்களுக்கிருக்கக்கூடிய பிரச்சினைகளும் இருந்தால் தீர்வுகளும், குறிப்பாக இது இலங்கைத் தமிழ்ப் பெண்பதிவர்களைப் பற்றியதாக இருக்கும்

பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி
கலந்துகொள்ளும் பதிவர்கள் சில குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சுவாரசியமான போட்டி நடாத்தப்படும். வெல்லும் குழு புகைப்படத்தினுள் அடக்கப்பட்டு முடியுமெனின் பரிசுடன் சந்திப்பின் பின்னான பதிவுகளில் சிலாகிக்கப்படும்.
உங்களுக்குள் உரையாடுங்கள்

கடந்தமுறை என்னைப்போன்ற ஒரு சிலரால் இப்படி பங்கேற்க முடியாமல் போக அவர்கள் மனம் நோகா வண்ணம் நேரடி ஒளி/ஒலிபரப்பு செய்யப்பட்டது. அதே போல் இம்முறையும் உங்கள் வீடுகளில் இருந்தே நீங்கள் பார்த்து மகிழ.http://livestream.com/srilankatamilbloggers

இதுவரை வருகிறோம் ஐயா போடாதவர்கள் இங்கே சென்று போட்டு விடுங்கள்.
http://srilankantamilbloggers.blogspot.com/2009/12/blog-post.html

தகவல்கள் தந்துதவிய லோஷன் அண்ணாவிற்கு நன்றிகள்.
Share:

Thursday, December 3, 2009

ரஜினியின் சுல்தான் தி வாரியார் வருமா?



ரஜினியின் மகள் சவுந்தரியாவுக்கு இது போதாத காலம். சொந்த காலில் தான் நிற்பேன் என்று தம் கட்டியவர் இப்போது தள்ளாடிப்போய் நிற்கின்றார். கோவா திரைப்படத்தை தயாரித்தவருக்கு இப்போது அந்த படத்தின் வாயிலாகவே பிரச்சனை வந்திருக்கின்றது. அப்போதும் தளராமல் இருக்கின்றார். அத்துடன் அடுத்து வந்திருக்கும் செய்தியும் அவருக்கு பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதைதான்.

ஏறத்தாள அறுபது கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும் ரஜினியின் என விளம்பரப்படுத்தப்படும் சுல்தான் தி வாரியார் திரைப்படமும் இப்போது கைவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. மிகப்பெரிய பரபரப்பு, பஞ்ச் வசனங்கள்,ரஜினியின் நேரடி ஆலோசனைகள் என வளர்ந்த படம் இப்போது சிக்கலில் மாட்டி இருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் இது தொடர்பாக சவுந்தர்யாவை தொடர்புகொள்ள முற்பட்டும் முடியாமல் போக ஆக்கர் ஸ்டுடியோவின் தலைவர் கார்த்திக் இது வெறும் பொய் மாத்திரமே என்று கூறி இருக்கின்றார். இது தொடர்பாக மேலும் துருவி கேட்டவர்களிடம் இந்த படம் 2007இல் தொடங்கப்பட்டது வார்னர் பிறதேர்ஸ் 2008இல் தான் தமிழ் படங்கள் மேல் கண் செலுத்த ஆரம்பித்தன. இப்படி இருக்கையில் வார்னர் பிரதேர்சுக்கும் இந்த படத்துக்கும் எப்படி சம்பந்தம் இருக்கும் என திருப்பிக் கேட்டிருக்கின்றார்.

கேள்விக்கு கேள்வி வந்திருந்தாலும் படம் வருமா என்பது இன்னும் கேள்வியாகவே இருக்கின்றது? பொறுத்திருந்து பார்ப்போம் காலம் பதில் சொல்லும்.
Share:

Tuesday, December 1, 2009

ஆதவன் என்ன தோல்விப்படமா? .

ஆதவன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வந்த திரைப்படம். ஆனால் மிகப்பெரிய எதிர்ப்பையும் சூர்யாவின் ரசிகர்களிடம் சலசலப்பையும் உண்டாக்கிய படம். இந்த படம் பற்றி என் முன்னைய பதிவின் தொடர்ச்சி......என் முன்னைய பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்.


ஒருகாலகட்டத்தில் இவர்தான் வேண்டும் என அத்தனை ஹீரோக்களும் அடம்பிடித்த நாயகி. இன்று நாயகியின் அம்மாவின் அம்மா போன்ற தோற்றம். கட்டழகில் இன்னும் எதுவும் குறையவில்லை ஆனால் முகத்திலே கிழடு விழுந்து விட்டது நயனத்துக்கு. இதை எல்லாம் விட்டு விட்டு பார்த்தால். பிரபுதேவாவுடன் ஊரே நாறடித்த கள்ளக்காதல் தமிழ் நாட்டில் பல எதிர்ப்பலைகளை கொண்டுவந்தது. நயன்தாராவிற்கு எதிராக மாதர் சங்கங்கள் போர்க்கொடி தூக்க தயாராகின. பெரும்பாலானோர் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை வெறுத்தனர். இந்த நேரத்தில் ஆதவன் வந்தது என்ன சூர்யா செய்த பாவமா? நயனின் இந்த நடத்தை கூட ஆதவன் சறுக்களுக்கு காரணமாக அமையலாம்.

இதற்கடுத்து இன்னும் சில பிரச்சனைகள். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் தன் காட்டுக்கத்தலை காட்டி விட விடுவார்களா? அவர்கள் வறுத்தெடுத்து விட்டனர். என்ன செய்வது மினிமம் கரண்டி இயக்குனர் கே.எஸ்.ஆரால் கூட ஆதவனின் எதிர்ப்பை சமாளிக்க முடியவில்லை.


இப்படி ஆதவன் அஸ்தமித்த காரணம் என நான் பட்டியலிட்டாலும் ஆதவன் உணமையிலேயே அஸ்தமித்த படமா என்றால் அது தப்பு தான். சூர்யா,கே.எஸ்.ஆர்,நயன்தாராவின் பிரச்சனைகள் பெரிதாக பேசப்பட்டது ஒரு காரணமாக அமைந்தாலும் வடிவேலு படத்தை தூக்கி நிறுத்த பாடுபட்டிருக்கின்றார். அதேபோல போட்ட முதலுக்கு மோசமில்லாமல் ஆதவன் வசூலித்து விட்டது. அப்படியானால் ஆதவன் தோல்வியா இல்லையே. இது சூர்யாவின் தப்பா? இல்லை ரசிகர்கள் தப்பா? உண்மையில் சூர்யா என்னும் நடிகனிடம் ரசிகர்கள் இன்னும் எதிர்பார்த்தது ரசிகர்கள் தப்பு அதை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் சூர்யா படத்தினைக் கொடுக்காதது அவர் தப்பு. இந்த படத்துக்கு ஆதரவாகவும் எதிரமறையாகவும் எழுதிய சில பதிவர்களின் தப்பு. என தப்புக்கள் நிறைய இருந்தாலும் ஆதவன் எனக்கென்னவோ வசூலில் ஏமாற்றாமல் சூர்யாவிற்கு படிப்பினையையும் நல்ல பொழுது போக்குள்ள சினிமாவையும் கொடுத்ததேன்றே சொல்வேன். சுருக்கி சொல்லப்போனால் விஜய்யின் குருவி, அஜித்தின் ஏகன் வழியில் சூர்யாவிற்கும் ஒருபடம்......

டிஸ்கி:என் மாமா (வந்தியர்தாங்க) நேற்று இரவு ரொம்ப கவலைப்பட்டார் வேட்டைக்காரன் டிரைலரில் நம் தலைவி அனுஷ்காவை காட்டவில்லை என்று தலைவருக்கு பயங்கர கவலை அதனால் என் மாமனை குளிர்விக்க இதோ ஸ்வீட்டி ஷெட்டி...அதுதாங்க அனுஷ்காவின் நிஜபெயராம்.


Share:

Sunday, November 22, 2009

வானலையில் வெற்றிகரமாக ஒரு வருடம்.

காலம் சிலரை எங்கேயோ கொண்டு போய் விட்டு விடும் இல்லாவிட்டால் வடமராட்சியில் பிறந்து வரணியில் தவழ்ந்து இன்று வெற்றியோடு நான் தவழ்வதை என்னவென்று சொல்வது. சரி விசயத்துக்கு வா என்பது புரிகிறது. வெற்றி வானொலியில் வானலை வழியே உங்களை நான் சந்தித்து இன்றுடன் ஒருவருடமாகிவிட்டது. அதற்காக சில நினைவு மீட்டல்கள் தான் இந்த பதிவு.

நான் கொழும்பில் ஒரு விடுதியில் இருந்த காலம் என் கைத்தொலைபேசியில் எல்லா வானொலிகளையும் கேட்பேன். ஒருநாள் அலைவரிசைகளை செட் செய்யும் பொது தொடர் இசையாக பாடல்கள் ஒலித்த ஒரு அலைவரிசை தட்டுப்பட்டது. பாடல்கள் நன்றாக இருக்கே என கேட்க ஆரம்பித்தேன். சில நாட்கள் செல்ல கற்றது கையளவு என்னும் நிகழ்ச்சியில் நானும் என் கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன். அத்துடன் ஒரு சொல் ஒரு கானம் நிகழ்ச்சியிலும் பங்குபற்றியுள்ளேன். அதை தொடர்ந்து காற்றின் சிறகுகள் நிகழ்ச்சிதான் என்னை மாற்றிப்போட்டது எனலாம். எனக்கும் சுபாஷ் அண்ணாவிற்கும் இடையில் சிறு மோதலோடு தான் பேச்சு ஆரம்பமானது, அதன் பின் என் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் நபர் அவர் என தெரியாமல். மோதல் எப்படி காதலாகுமோ அதேபோல எங்களுக்குள்ளும் மோதல் இல்லாமல் போய் நல்ல நட்பு சகோதரத்துவம் ஏற்பட்டது.

இந்த நேரம் தான் எனக்கு வானொலி ஆசை கொஞ்சம் எட்டிப்பார்த்தது. ஒரு இணையத்தில் இயங்கும் பிரபல வானொலியில் நேர்முகத்தேர்வுக்காக போனேன். நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்டாலும் அந்த நிலையம் அமைந்துள்ள இடம் ரொம்ப தூரமாக அமைந்தது என் வீட்டுக்காரருக்கு கொஞ்சம் விருப்பமின்மையை ஏற்படுத்தியது. இதை நான் சுபாஷ் அண்ணாவுடன் பகிர்ந்து கொள்ள அவர் சொன்ன வார்த்தை உனக்கு வெற்றியில் ஒரு நேர்முகத்தேர்விற்கு வாய்ப்பினை உண்டு பண்ணிவிடுகின்றேன் ஆனால் மிகுதி உன் கையில் உன் திறமையில் என்றார். நானும் சரி என்று விட்டேன். இந்த இடத்தில் என் பெற்றோருக்கு நன்றி சொல்ல வேண்டும். காரணம் நான் என்ன செய்தாலும் எனக்கு முழு சுதந்திரம் கொடுப்பவர்கள் இவர்கள். இல்லாவிட்டால் வாழ்க்கையில் விழுந்து போன என்ன தாங்கிப்பிடித்து எழுப்பிவிட்டிருப்பார்களா?


நேர்முகத்தேர்வுக்கான நாளும் வந்தது நான் என் பெற்றோருடனும் ஒரு அண்ணாவுடனும் வெற்றி அலுவலகத்துக்கு போனேன். இதில் இன்னொரு முக்கியமான விடயம் இதுவரை எனக்கு சுபாஷ் அண்ணாவின் முகமே தெரியாது. தொலைபேசியில் பேசியது மாத்திரமே. அலுவலகத்தில் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு காத்திருக்க ஒரு பெண் வந்து என்னை அழைத்து போனார். அவர்தான் பூஜா அக்கா. நேரடியா Recording அறைக்கு என்னை அழைத்து போக அங்கே ஒருவர் இருந்தார். எனக்கு அவரையும் யாரென தெரியாது. அந்த அறைக்குள் இருந்த கண்ணாடியாலான இன்னொரு அறைக்குள் ஒலிவாங்கி இருக்கும் இடத்துக்கு என்னை போகச் சொன்ன அந்த நபர் தானும் உள்ளே வந்து ஒலிவாங்கியை எனக்கு சரி செய்துவிடும் போது உங்கள் பெயர் என கேட்க விமல் என்றார். உடனே நான் நீங்கள் தானே எங்க பாடசாலையில் படித்தீர்கள் என சொல்ல அவரும் ஆமாம் என சொல்லிவிட்டு என் குரலை பதிவு செய்யத் தொடங்கினார்.

செய்தி அறிக்கையை நான் வாசித்துக்கொண்டிருந்த போது லோஷன் அண்ணா உள்ளே வந்து நிறுத்த சொல்லிவிட்டு ஒரு நிகழ்ச்சி செய்ய சொன்னார். நானும் காற்றின் சிறகுகள் செய்து காட்ட Fast ஆக ஒரு நிகழ்ச்சி செய்யும் படி சொல்ல பகல் பந்தி செய்து காட்டினேன். வெளியே வரச்சொல்லி இப்போ சின்ன வயது தானே இன்னும் காத்திருக்கலாமே என்றார். எனக்கும் பயமாக இருக்க தாங்கள் மீண்டும் அழைக்கிறோம் இப்போ போகலாம் என்றார். நானும் வீட்டுக்கு வந்தாலும் சுபாஷ் அண்ணாவை நையப்புடைந்து கொண்டே இருந்தேன். என் குடைச்சலகளுக்கு கோபப்படாமல் பதில் சொல்லியே அவர் களைத்திருப்பார்.(அதற்கு பிறகு அண்மையில் தான் அன்றைய தினம் என்னை எடுப்பதா இல்லையா என்ற விடயத்தில் என்ன முடிவு என்ன பேசினார்கள் என்பதை விமல் அண்ணா மூலம் அறிந்தேன். விமல் அண்ணா உங்களுக்கு என் நன்றிகள். அத்துடன் நீங்கள் நடுநிலையாக நடந்தது மகிழ்ச்சியாக உள்ளது.)

அதன் பின் இன்னும் மூன்று முறை நேர்முகத்தேர்வு எல்லாம் முடிந்து நவம்பர் மாதம் மூன்றாம் திகதி அலுவலகத்தில் நானும் ஒரு ஊழியனாய் இணைந்தேன். ஆரம்பகால பயிற்சிகள் ஆரம்பித்தன. அப்போது எனக்கு இரண்டு பேரைக்கண்டால் பயம் ஒன்று விமல் அண்ணா இன்னொருவர் சந்துரு அண்ணா இரண்டு பேரும் ஏதாவது கேட்டு அன்று ஒரு ரணகப்படுத்தாமல் விடமாட்டார்கள். இன்று விமல் அண்ணா நல்ல அண்ணாவாக நல்லா நண்பனாக மாறினாலும் இன்னும் எனக்குள் அந்த பயம் போகவில்லை. ஆனால் இப்போது தான் உணர்ந்தேன் அது பயம் மட்டுமலல மரியாதையும் என்று.( ஆனால் நம் பாடசாலைக் காலத்தில் விமல் அண்ணா எங்களுக்கு சீனியர் அதை நினைத்தால் இன்றும் நடுங்கும்.) சந்துரு அண்ணாவும் தன் கண்டிப்பை குறைத்தாலும் இன்று நல்ல நண்பனாக அதேநேரம் என் தயாரிப்பு பணிகளில் நல்ல உதவியாக இருக்கின்றார்.

அடுத்து ஹிஷாம் அண்ணா செய்தி வாசிப்பதில் கவனிக்கவேண்டிய விடயங்களை முதலில் சொல்லித்தந்தவர். எங்கள் உதவி முகாமையாளர். பெரிதாக கோபப்படமாட்டார் ஆனால் வேலை சரியாக இருக்கவேண்டும் என்பதில் அக்கறை உள்ளவர். இப்போது எங்கள் மாலை நேரத்து வேலை நேர உற்ற நண்பனாக. அடுத்து பிரதீப் அண்ணா, ஆரம்பத்தில் நான் ஒருநாள் இவரிடம் வாங்கிய திட்டு தான் இன்று என்னை பக்குவப்படுத்தியுள்ளது. நன்றி அண்ணா. அதேபோல சகலவிடயங்களையும் சொல்லித்தருவதில் இவருக்கு நிகர் இவரே. ஆரம்பத்தில் எனக்கு பாடல்கள் பற்றிய அறிவை வளர்க்க பெரிதாக உதவியவர் இன்றும் என் பாடல்தெரிவுகளுக்கு ஆதாரமாக விளங்குபவர். செந்தூரன் அண்ணாவுடன் பெரிதாக பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.ஆனால் அவரின் அறிவுரை இன்றும் பயன்படுகின்றது. தான் நாடு விட்டு போகமுதலே எங்கள் கனவில் முதல் தீபத்தை ஏற்றிவைக்கும் வண்ணம் தன் அனுபவத்தை பகிர்ந்து போன அன்பு அண்ணா. இன்றும் வாழ்த்தி இருக்கின்றார். நன்றி அண்ணா.
.

அடுத்து பூஜா அக்கா, நேர்முகத்தேர்வுக்கு சென்ற நேரம் என்னை அழைத்து சென்றவர். இவரின் பகல் பந்தி எனக்கு பல அனுபவங்களை பெற்றுத்தந்த களம். அனேகமாக பகல் பந்தி நிகழ்ச்சி செய்யும் போது அதை பார்த்து பார்த்து நல்ல விடயங்களை கற்றுக்கொண்டேன். இந்த நேரம் தன்னால் முடிந்த அளவு எனக்கு நிகழ்ச்சி பற்றி சொல்லி கொடுத்த அக்காவிற்கு நன்றிகள். அடுத்தவர் வைதேகி அக்கா, இப்போது என் குறைகளை சொல்லி திருத்துவது மட்டுமில்லாமல் உள்ளதை உள்ளபடி சொல்லி விடுவார். ஆரம்பகாலத்தில் என் செய்திகளை அவர் தந்தை சர்வானந்தா அவர்கள் கேட்டு (பிரபல வானொலி அறிவிப்பாளர்.) நன்றாக இருக்கு நல்லா வருவான் என சொல்லி எனக்குள் நம்பிக்கை அளித்தவர்.

சுபாஷ் அண்ணா எப்போதும் மாலையில் வருவார் ஆனால் என் தயாரிப்பு வேலைகள் செய்ய பிள்ளையார் சுழி போட்டவர். முகம் தெரியாமலே உதவியவர் முகத்துக்கு நேரே நல்ல சகோதரனாக மாறிவிட்டார். அடுத்து லோஷன் அண்ணா. என் ஐந்தாம் ஆண்டில் இருந்து நான் தொடர்ந்து வந்த ஒரு சாதனையாளர். வானொலி அறிவிப்புத் துறையில் என் மானசீக குரு. இதை வெறும் பேச்சுக்காக சொல்லவில்லை. எந்தளவிற்கு நான் விஜய் ரசிகன் என நீங்கள் எண்ணுகின்றீர்களோ அதேபோல இங்கே லோஷன் அண்ணாவின் ரசிகன்.(விஜயை ஒப்பிட காரணம் எல்லோரும் என்னை விஜயின் தீவிர ரசிகனென நன்கறிந்திருப்பதே.) இதனால் தானோ என்னவோ அவரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு அவர் நிகழ்ச்சி செய்யும் நேரம் அவர் அருகே இருந்து ரசித்து பார்த்திருக்கின்றேன். அத்தனை விடயங்களையும் அறிந்து விட்டீர்களா என கேட்டு எங்கள் ஆவலை அதிகரிப்பதுடன் தெரியாத விடயங்களை தானே சொல்லித்தரும் நல்ல மனது. முகாமையாளர் என்னும் பதவியில் இருந்தாலும் பழகுவதில் அவர் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அண்ணாவே. (அண்ணா உங்களிடம் வேலை செய்த ஒருவர் எனக்கு சொன்னது லோஷன் அண்ணாவின் முகாமைத்துவத்தின் கீழ் வேலை செய்ய முடியாத யாரும் இன்னொருவரின் கீழ் வேலை செய்ய முடியாது என்று. இது என் அனுபவத்திலும் உண்மை.) இப்படி எத்தனையோ இனிமையான நினைவுகள் இருந்தாலும் இந்த பயிற்சிக்காலம் ஒரு முட்படுக்கையே.

நாங்கள் வெற்றியோடு இணைந்து அடுத்த வாரமே ஒரு சில வேண்டத்தகாத சம்பவங்கள் லோஷன் அண்ணாவிற்கு நடக்க உள்ளே வெளியே ஆட்டம் நடந்தேறியது. என்ன நடக்கப்போகின்றது என தெரியாமல் எல்லோரும் விழி பிதுங்கிய நேரம் ஹிஷாம் அண்ணா சொன்னார் நாளை சதீஷ்,வனிதா இருவரும் நிகழ்ச்சி செய்யப்போகின்றீர்கள் ஆனால் உங்கள் பெயர் சொல்லக்கூடாதென. மனதிலே பயமும் வலியும் கலந்திருக்க கடந்தவருடம் நவம்பர் இதே தினம் ஒரு சனிக்கிழமை என் கன்னிக்களம் சுபாஷ் அண்ணாவுடன் அரங்கேறியது நானாட நீயாடாவில். எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே என்ற பாடலோடு நானும் நதியாக ஓடத்தொடங்கினேன்.அந்த நிகழ்ச்சியில் நான் விட்ட பிழைகள் எல்லாவற்றையும் திருத்தி எனக்கு நல்ல வழி காட்டினார் அவர். இதில் இன்னொரு சந்தோசமும் சேர்ந்துகொண்டது அதுதான் லோஷன் அண்ணா உள்ளே வெளியே ஆட்டம் முடித்து வீட்டுக்கு வந்து விட்டார். எவர் எனக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டரோ அவருடன் என் பயணம் ஆரம்பமானது இரட்டிப்பு சந்தோசம். மறுநாள் விமல் அண்ணாவுடன் அமரகானங்கள் மற்றும் ஒரு சொல் ஒரு கானம். அன்று நான் நன்றாக மாட்டி கொண்டேன். ஆனால் இன்று அதுவும் படிப்பினையாக மாறி உதவி புரிகின்றது. தொடர்ந்து அனேகமாக எல்லோருடைய நிகழ்ச்சியிலும் இருந்து அவர்கள் நிகழ்ச்சி செய்யும் விதத்தை பார்த்து கற்றுக்கொண்டேன்


இப்படியே போகப் போக குறுகிய காலங்களிலேயே வாங்க நீங்க நிகழ்ச்சி வாய்ப்பும் கிடைத்தது. ஒருநாள் சுபாஷ் அண்ணா தன் வீட்டுக்கு கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கு போக வேண்டும் என்பதற்காக என்மேல் முழு நம்பிக்கை வைத்து காற்றின் சிறகுகள் நிகழ்ச்சியை ஒப்படைத்தார்.

இதற்கு காரணமும் இல்லாமல் இல்லை, நானாட நீயாட நிகழ்ச்சியில் அடிக்கடி வெளியே சென்று என்னை தனியே செய்ய விட்டு எனக்கு பயத்தை போக்கி அனுபவத்தை வளர்த்தார். அந்த நம்பிக்கையை லோஷன் அண்ணா என்மேல் வைக்க முதல் முறையாக காற்றின் சிறகுகளில் தனி ஆவர்த்தனத்தை தொடங்கினேன். நிகழ்ச்சி முடிந்த உடன் சுபாஷ் அண்ணாவிற்கு அழைப்பெடுத்து சரியாக செய்தேனா என கேட்டேன் அவரும் குறைநிறைகளை சொல்லி மேலும் உதவினார். மறுநாள் காலை லோஷன் அண்ணாவிடம் இருந்து நேற்றைய நிகழ்ச்சி சூப்பர் மேலும் சிறப்புற வாழ்த்துக்கள் என்ற எஸ்.எம்.எஸ் வந்தது இன்றும் என் தொலைபேசியில் இருக்கிறது அது. இன்று அதே நிகழ்ச்சி எனக்கு வழங்கப்பட்டிருப்பது இன்னொரு ஆச்சரியம். இதை அடுத்து பூஜா அக்காவும் என் மேல் தன் நம்பிக்கை வெளிப்பாட்டை பகல் பந்தியைக் கொடுத்து வெளிப்படுத்த நான் அதை பயன்படுத்திக்கொண்டேன். கிறிஸ்மஸ் தினத்தன்று நத்தார் தாத்தாவாக நான் செய்த அட்டகாசத்துக்கு கிடைத்த பாராட்டுகள் இன்னும் சந்தோஷ அலைகள்.

இப்படியே போகப்போக என்றென்றும் உங்கள் பிரியமானவனாக வலம் வர தொடங்கினேன். இந்த ஆண்டின் முதல் நாள் விடியலில் லோஷன் அண்ணா மூலம் நானும் வனிதாவும் உத்தியோக பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டோம். அன்றும் இரவு காற்றின் சிறகுகளோடு வந்த நான் அதன் பின் இரு வாரங்கள் நெருப்பு காச்சலால் வைத்தியசாலையில் இருந்து மீண்டும் வந்தேன். அதன் பின் தொடர்ந்து குதூகல குவியல், இருபது புது இசை, வேகம் விவேகம், கற்றது கையளவு, அதிரடி புதிரடி, வினோத வியூகம், எங்கேயும் எப்போதும், சினிமாலை, விடியல் என பெரும்பாலான நிகழ்ச்சிகள் செய்து விட்டேன். இதில் சினிமாலை நிகழ்ச்சி லோஷன் அண்ணா செய்தது ஒருநாள் அவர் சொன்ன வார்த்தைகள் தான் கஷ்டப்பட்டு ரசித்து ரசித்து தயார் செய்த நிகழ்ச்சி உனக்கு வழங்கியுள்ளேன் கெடுத்துவிடாதே என்று. அதேபோல முழு சுதந்திரத்துடன் உன் ஸ்டைலில் செய் என சொல்லிவிட்டார். ஓரளவிற்கு நன்றாக அந்த நிகழ்ச்சியை கொண்டு செல்கின்றேன் என நம்புகின்றேன். அதேபோல்தான் விடியல் என் மனதுக்குள் ஒரு எட்டாத கோட்டையாக இருந்த நிகழ்ச்சி, சுபாஷ் அண்ணா விடை பெற்று செல்லும் போது உனக்கு இனி காலை நேர நிகழ்ச்சி தான் குறியாக இருக்க வேண்டும் அந்தளவிற்கு உன் செயற்பாடு அமைய வேண்டும் என்பதை எனக்குள் பதித்து போனது. இன்னும் உலாவரும் உற்சாகம், ஏன் எதற்கு எப்படி,அவதாரம், தாம் தூம் மட்டுமே எனக்கு எட்டாக்கனியாக இருக்கின்றன.

இப்படியே சென்ற எனக்கு இன்னொரு வாய்ப்பு செய்தி அறிக்கை மூலம் கிடைத்தது. ஒருநாள் காலை லோஷன் நான் இன்று மதியம் செய்தி வாசி என சொல்ல நானும் சரி சொல்லி விட்டு அலுவலகம் சென்ற நேரம் காலை பதினொன்று நாற்பது. அன்றுதான் என் வாழ்க்கையில் இன்னொரு சரிவை சந்தித்த நாள். ஆனால் அதை யாரிடமும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் நான் தடுமாறி செய்தி வாசிக்க உள்ளே சென்றுவிட்டு இறுதி நேரம் வைதேகி அக்காவிடம் கொடுத்து விட்டு வெளியேறிவிட்டேன். இதனால் எல்லோரிடமும் கொஞ்சம் பேச்சு வாங்கவேண்டிய நிலை. அப்போதும் இருநாள் கழித்து மீண்டும் எனக்கு அந்த வாய்ப்பினை லோஷன் அண்ணா வழங்கினார். செய்தி வாசித்து விட்டு வந்ததன் பின்னர் அவர் சொன்ன வார்த்தைகளும் மறக்கவில்லை. சங்ககாரபோல எப்போதும் போர்மில் இரு மஹேல போல அடிக்கடி Form அவுட் ஆகிடாதே என்று. ஒரு சில நாட்களிலேயே காலை நேர செய்தி அறிக்கை வாசிக்கும் வாய்ப்பை லோஷன் அண்ணா வழங்கினார்.


இதுவரை நான் சொன்னவர்கள் உங்களுக்கும் தெரிந்தவர்கள் இவர்களை விட அருந்ததி அக்கா எப்போதும் பெரிய பலம். அறிவுரைகளும் அனுபவ பாடமும் அவரிடம் கிடைக்கும். அடுத்து திஷோ அண்ணா, எப்போதும் சிரித்த முகம் சிறுபிள்ளை போல குறும்புத்தனம். ஆரம்பத்தில் ஒரு பிரச்சனை எனக்கும் அவருக்கும்.ஆனால் அடுத்தடுத்த நாட்களிலேயே எல்லாம் சரியாகிவிட்டது. அண்ணா இந்த நேரத்தில் அந்த சம்பவத்துக்கு உங்களிடம் மன்னிப்பு கோருகின்றேன். இவரை பற்றி சொல்ல வேண்டுமாக இருந்தால் என் பாடல் விருப்பம் அறிந்தவர். அமரகானங்களில் எனக்காக பாடல் போட்டு அசத்தியவர். இப்போதும் இது உனக்கு ஏற்ற பாட்டு போடு என சில பாடல்களை தருபவர்.

அடுத்து செய்திப்பிரிவில் தெரியாதைதை சொல்லித்தரும் பென்சி அண்ணா, தன் வேலையில் கண்ணாயினும் எங்களுக்கு அறிவுரைதரும் ரஜினி அண்ணா என் நண்பர்கள் அருண், விஜய், லெனின்,ஸ்ரியான்(நம்மா சீயான்) என எல்லோரும் என் ஒரு வருட படிக்கட்டை தாங்கி நிற்பவர்கள். இதில் ஜெய்சன் தினேஷ் இருவரும் அடிக்கடி காணாமல் போனாலும் என் வெற்றிப்பயணத்தின் ஒவ்வொரு கற்கள்.

அடுத்து என்னுடன் வெற்றியில் இணைந்து குருவியாக வலம் வந்து இன்று உங்களுக்கும் எனக்கும் இனிய தோழியாக இருக்கும் வனிதா, நாங்கள் இணைந்ததன் பின் இணைந்து இப்போது என் இணைபிரியா நண்பனாக காற்றின் சிறகுகள் நிகழ்ச்சியில் என் பாடல்தெரிவுகளின் குறை நிறைகளை சுட்டிக்காட்டி என் பாடல் அறிவை மேம்படுத்தும் அன்பு நண்பன் ரஜீவ் இவர்களின் துணை என் வெற்றிப் பயணத்தில் கிடைத்தது. வெற்றியில் இப்போது இணைந்தாலும் அனுபவமுள்ள பாபு, பிர்னாஸ், தினேஷா என எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் என்னை மேம்படுத்த உதவுகின்றனர்.
லோஷன் அண்ணா முதல் பிர்னாஸ், தினேஷா வரை ஒவ்வொருவரிடம் இருந்தும் நிறைய கற்றுக்கொண்டிருக்கின்றேன்.

இவர்கள் எல்லாரையும் போல என் வெற்றிப் பயணத்தில் பிரதான பங்காளிகள் என் பிரியமான நேயர்கள். என்னையும் ஒரு அறிவிப்பாளனாக ஏற்றுக்கொண்டு ஆதரவை வழங்கிவரும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் நன்றிகள். உங்களிடம் இருந்து கூட நல்ல பாடல் அறிவு, இன்னும் பல பொது விடயங்களை கற்பதோடு உங்கள் வீட்டில் ஒருவனாக ஏற்று அன்புதரும் நேயர்களும் இருக்கின்றார்கள் என்ற சந்தோசத்தில் உங்கள் அன்புக்கு தலை வணங்குகின்றேன். ஒரு வருடம் கடந்தாயிற்று.... இன்னும் பல வருடம் வெற்றிக்குடும்பத்தோடு வெற்றிகரமாக வலம் வரலாம் என்ற நம்பிக்கையில் இன்று வாழ்த்திய அத்தனை பேருக்கும் நன்றிகளோடு விடைபெறுகின்றேன்.
Share:

Saturday, November 21, 2009

நீ ஹலோ சொல்லவில்லை என்றால்.... இன்று உலக ஹலோ தினம்.


தினம் தினம் ஒரு தினம். அதை அனுதினம் கொண்டாடுவதில் ஒரு சுகம். அந்த வகையில் இன்று ஹலோ தினம். அட எவ்வளவோ தினம் கொண்டாடிட்டோம் இதையும் கொண்டாடிலாம் என கொண்டாட இருப்பவர்களுக்கு இத்தினம் பற்றிய சுவாரஸ்யமும் தெரியட்டுமே. இந்த தினத்தின் பிறப்பு இறப்புகளின் இறுதியில் இருந்து ஆரம்பமாகி இருப்பது இன்னொரு சுவாரஷ்யம்.

எகிப்து-இஸ்ரேல் நாடுகளுக்கிரையில் இடம்பெற்ற போர் நிறைவுக்கு வரும் நேரம் (1973.11.21) இரு நாட்டு தலைவர்களும், அப்படைவீரர்களும், மக்களும் மட்டும் ஹலோ சொல்லி சமாதானம் ஆனால் போதாது உலகமே ஹலோ சொல்லி அமைதியாக இருக்கட்டுமென நினைத்தார்களோ என்னவோ அன்றுமுதல் ஹலோ தினம் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதுமுள்ள நாடுகளில் கொண்டாடப்பட்டு வரும் ஹலோ தினத்தின் வயது 37. நிற்க நடக்க ஓட என மலிந்து போய் இருக்கும் தினக் கொண்டாட்டங்களுக்கு நடுவில் ஹலோ தினத்தின் சாரம் பாராட்டப்படக்கூடியதே. உலகமெங்கும் அமைதி நிலவ பாடுபடுவோம் என்னும் கருப்பொருளுக்கே வைக்கலாம் ஒரு சல்யூட்.

எல்லாம் சரி நாம கொண்டாடவேன்டாமா ? நான் ரெடி.....

ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ

என்ன பார்க்கிறிங்க பத்து தரம் சொல்லி நான் ஆரம்பித்து விட்டேன் கொண்டாட்டத்தை நீங்களும் கொண்டாடுங்கள். செலவில்லாமல் ஒரு அமைதிக்கான கொண்டாட்டம். பத்துப் பேருக்காவது ஹலோ சொல்லுங்கள்......

ஹலோ தினம் என்றவுடன் நினைவு வந்த பாடல்
நீ ஹலோ சொல்லவில்லை என்றால் ஒரு கிலோ எடை குறைவேன்........
பார்த்து சொல்லிடுங்க இல்லாட்டில் எடை குறைந்து குறைந்து ஒல்லிப்பிச்சான் ஆகமுதல்.......

ரொம்பநாளாக பதிவிடவில்லை. காரணம் என் பெரியப்பாவின் இழப்பு. இப்போது மீண்டும் வந்துவிட்டேன் இனி கலக்கல் தான். இந்த நேரத்தில் இறந்த செய்தி கேட்டு தொலைபேசி வாயிலாகவும் மூஞ்சிப் புத்தகம் வாயிலாகவும் இதர வழிகளிலும் ஆறுதல் கூறிய நண்பர்கள் நல்லுள்ளங்களுக்கும் என் திடீர் யாழ்ப்பான பயணம் செய்ய வியாபரங்களை தந்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இழப்புகள் இடிந்து போகவல்ல இதயத்திற்கு வாழ்க்கை பாடத்தை படிப்பிக்கவே.
Share:

Monday, November 9, 2009

வந்திக்கு என் பிந்திய வாழ்த்துக்கள்.


நம் பச்சிளம் பாலாகன் தான் இது.

வந்தியத்தேவன் என பதிவுலகில் பிரபலமாக மூத்த பதிவராக பலரால் அறியப்பட்ட என் மாமா(இந்த உறவுக்கு ஆயிரம் அர்த்தம் உண்டு யாரும் தப்பா நினைக்காதிங்க.) இன்று தன் பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

லோஷன் அண்ணாவின் நண்பராக என் பிறந்தநாளில் அறிமுகமான நம் பச்சிளம் பாலகன் பிறந்தநாளுக்கு இந்த மருமகன்(மாமாவே பச்சிளம் பாலகன் என்றால் மருமகன் யோசித்து பாருங்க எவ்வளவு பச்சிளம் பாலகன் என்று. யோ வாய்ஸ் இது உங்கள் கவனத்திற்கு.௦) வாழ்த்தாமலா?

வந்துவிட்டேன் என் உளறல்களோடு(மன்னிக்கணும் மாமா வழக்கமா நீங்கள் தான் உளறுவிங்க இன்று நான்.காரணம் இது கவிதை என சொல்ல முடியாதெல்லா.) ஏன் தாமதம் என கேட்கலாம்? பிறந்தநாள் விருந்து கேட்டால் கொடுக்கமாட்டேன் என சொல்லிவிட்டார். அப்புறம் எதற்காக நேரத்தை செலவு செய்து ஒரு பதிவு என ஒதுங்கிய வேளை வரும் வாரம் விருந்தாம்(வர விரும்புபவர்கள் தெரியப்படுத்தலாம் மாமா எஸ்கேப் ஆக முதல்.) அப்பாடா இனி வாழ்த்தாவிட்டால் மனிசன் தரும் விருந்து சமிபாடடையாது.

இதோ என்னால் முடிந்த வாழ்த்து....


பதிவுலகம் வந்தீர்கள் நீங்கள் முந்தி.-இங்கே
பட்டையை கிளப்புகிறீர்கள் வந்தி.

நெல்லியடியில் உதித்தீர்கள்.- ஆனாலும்
பிறரை சொல்லால் அடிக்காமல் புன்முறுவல் உதிர்ப்பீர்கள்.

முதல் சந்திப்போ Futsalல்.-
உங்கள் பதிவுகளோ Fruit சலட்.

அண்ணனாய் என் பிறந்தநாளில் அறிமுகமாகி வாழ்த்தினீர்கள் -இன்று
மாமாவாய் உம் பணி செய்து மருமகனுக்கு வழிகாட்டுகின்றீர்கள்.

பின்னூட்ட பெருமகனே-எங்கள்
பின்னூட்டத்தின் பின்னூட்ட தளபதியே.

திரை உலகில் உங்கள் தலைவர் உலக நாயகன்-என்றும்
பதிவுலகில் நீங்கள் எங்கள் உள்ளூர் நாயகன்.

கோபியரின் கண்ணனே- எங்கள்
பதிவுலகின் பச்சிளம் பாலகனே.

சிரித்தால் நீங்கள் குழந்தை- மீறி
பலம்கொண்டெளுகையில் ஆயிரம் யானை.

புதியவர்களுக்கு வழிகாட்டி-இன்றும்
பழையவர்களுக்கு ஆட்காட்டி.(பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டுபவர்.)

அகவைகள் பலபோயும்-உந்தன்
அகத்துக்கு வயதுபோகவில்லை.

பதிவுலகின் தேவனுக்கு விரைவில்- வந்து
சேரட்டும் ஒரு தேவதை.

இளவரசன் நீங்கள் தான்- அந்த
இளவரசி(????) உம்மவர் தான்.

இணையட்டும் இதயம் இரண்டு-இன்றுபோல்
அன்றும் வாழ்த்தும் இந்த இளைய உள்ளம
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive