Wednesday, March 4, 2009

முட்கிரீடம் யாருக்கு?

உலக கிரிக்கெட் அரங்கில் ஒரு பலமான அணியாக இருந்து கடந்த ஒரு சில மாதமாக இந்திய அணியிடம் வாங்கிய மரண அடியால் மதுவாக விழுந்து இன்று பாகிஸ்தானில் மலையாக எழுந்து நிற்கிறது இலங்கை அணி.
1996 உலக கிண்ண சாம்பியன் 2007 இல் இறுதிப்போட்டி. முதலாவதில் அர்ஜுன ரணதுங்க இரண்டாவதில் மஹேல ஜெயவர்த்தென. இலங்கை அணி இதுவரை கண்ட மிகச்சிறந்த தலைவர்களில் முதன்மையானவர்கள் இவர்கள்.


எல்லோருக்கும் ஏற்றமும் இறக்கமும் வரும். ஆனால் கடந்த மாதம் இந்திய அணி வரும்போது மஹேல மட்டுமில்லை மஹேந்திர சிங் தோணி கூட நினைத்திருக்க மாட்டார் இப்படி நடக்குமென்று. இந்தியாவின் இளம்படை இலங்கைக்கு கொடுத்த அடி ஒவ்வொன்றும் இடியாக இறங்க ஒருநாள் தொடரின் முதல் 4 போட்டிகளும் இந்தியாவசம். அதுபோதாதென்றது இருபதுக்கு இருபது போட்டியிலும் வெற்றி.
இந்தியா இப்படியா அடித்து துவைப்பது?

இலங்கை துடுப்பாட்டக்காரர்கள் அடிக்கிறார்கள் இல்லையே என ஆதங்கப்பட்டு இலங்கை ரசிகர்கள் அடித்து விட்டனர் இந்திய வீரர்களை.


அதுவும் இருபதுக்கு இருபது போட்டியில் மஹேலவையும் சங்கக்காரவையும் அணியிலிருந்து தூக்கிவிட்டு திலகரத்ன தில்ஷானிடம் தலைமைப்பொறுப்பை வழங்கியும் வைக்கவில்லை.


அது ஒரு காலம்!

அஜந்தா மென்டிஸ் என்ற மாயவலை முற்றாக அறுந்து அழிந்துபோனது.


இவைதான் மகேலவின் அணித்தலைமை பதவியிலிருந்து ராஜினாமா செய்ய காரணம் என வெளிப்படையாக சொல்லப்பட்டாலும் உள்ளேயும் சில காரணங்கள். இவை எல்லாம் நடந்துமுடிந்தவை.


மஹேலவின் அறிவிப்பின் பின் பாகிஸ்தான் பறந்தனர் இலங்கை அணியினர். இன்றைய இந்திய அணியைப்போல் பாகிஸ்தான் பலமான அணியாக இல்லாவிட்டாலும் அந்த அணியையும் அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம்.


முதலாவது டெஸ்ட் போட்டியில் out of form இலிருந்த மஹேல, திலான் சமரவீரவுடன் இணைந்து விஸ்வரூபம் கொண்டு சாதனை ஓட்டக்குவிப்பில் ஈடுபட்டார். இவர் ஏன் தலைமைப்பொறுப்பில் இருந்து விலகவேண்டும் என எல்லோர் மனதிலும் ஒரு கேள்வியை எழுப்பினார். அது சரியானதே.


ஆனால் பாகிஸ்தான் அணியினரும் சளைக்காமல் ஓட்டங்களை குவித்து அந்தப் போட்டியை ஒரு செத்த போட்டியாக மாற்றினர்.



மஹேலவின் தலைமையில் இறுதிப்போட்டி. தொடரை தீர்மானிக்கப்போகும் போட்டி எனும் சுவாரஸ்யத்தோடு ஆரம்பமான போட்டியில் மஹேல எடுத்ததோ சொற்ப ஓட்டங்கள். எனினும் சமரவீரவின் அற்புத ஆட்டத்தால் தலைநிமிர்ந்து நின்றது ஸ்ரீ லங்கா. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானின் ஆட்டத்தைப் பார்த்தால் இதுவும் ஒரு செத்த போட்டியாக மாறும்போலத்தான் இருந்தது.


இலங்கைக்கு இன்னும் டெஸ்டில் ஒரு சிறந்த ஆரம்ப இணை கிடைக்கவில்லை என்பது துரதிஸ்டமே.

நீங்கதான் வரனும்போலகிடக்கு


இந்த தொடரில் நேற்று நடந்த அசம்பாவிதம் இரு அணிகளுக்கு மட்டுமன்றி விளையாட்டு உலகுக்கே ஒரு பேரிடியாக அமைந்து விட்டது.


இந்த தொடருடன் மஹேலவின் தலைமைப்பதவி?


அடுத்து?

சங்கக்கார!

நானா அடுத்தது?

உலகின் சிறந்த விக்கெட் காப்பாளர் மட்டுமன்றி சிறந்த துடுப்பாட்ட வீரானும்தான் ஆனால் தலைமைப்பதவியில் ஜொலிப்பாரா தெரியவில்லை.


டில்ஷானுக்கும் இந்த பதவிக்கும் இப்போது எட்டப்போருத்தம் என்பதை அவரே இந்தியாவுடனான இருபதுக்கு இருபது போட்டியில் நிரூபித்துவிட்டார். மீறிக் கொடுத்தால் அது அணிக்கும் வெற்றிக்கும் எட்டாக்கனியாகிவிடும்.


சனத் ஜெயசூரிய.


இன்னும் எத்தனை நாட்களுக்கோ? மனிதர் கொடுத்தாலும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. வந்து இறங்கி விசுக்கவே அவர் மனம் ஏங்கும்.


வரும்போது சூறாவளியாக வந்து எமி அணிக்கு முரளியே வேண்டாம் என ஒதுக்க வைத்து அடுத்த தலைவர் என புகழப்பட்ட அஜந்த மென்டிஸ் தன் பந்து வீச்சையே சரியாக செய்யமுடியாது இந்தியாவிடம் அடி வாங்கி சின்னாபின்னமாகி அணி பதினோரு பேருக்குள்ளேயே இடம்பெற இன்று தவித்துக்கொண்டிருக்கிறார். இவருக்கு தலைமைப்பதவி?????????


இன்னும் எவ்வளவு காலம் விளையாடுவார் என அவருக்கே தெரியாது. ஒரு நாள் அணியில் இல்லை. டெஸ்ட் அணியிலோ சோதனையில். இந்த நிலையிலும் சமிந்த வாஸ் தலைவராவது பொருத்தமில்லை.


இந்தியாவுடன் எல்லோரும் தடுமாறிய வேளையில் தனியாக விளாசிய திலின கண்டம்பியிடம் ஒருநாள் மற்றும் 20க்கு 20 போட்டியில் அணித்தலைமை பொறுப்பை ஒப்படைப்பது மிகச் சரியாக இருக்கும் என நினைக்கின்றேன். இவரின் துடுப்பாட்டம் முன்னாள் இந்திய அணித்தலைவர் கங்குலியை நினைவுபடுத்துகின்றது. அதுமட்டுமன்றி புதிய துடிப்பான இளம் தலைவரை இலங்கை அணி பெறும்.


இந்தியாவின் தோணி மற்றும் தென் ஆபிரிக்காவின் சிமித் இதற்கு நல்ல உதாரணங்கள். அதே நேரம் டெஸ்ட் அணிக்கு முதுகெலும்பாக இருக்கும் திலான் சமரவீரவை தலைவராக்கலாம். அப்படி இல்லை எனில் சகலதுறையிலும் பிரகாசிக்கும் Farveez Maharoof சகல போட்டிகளிலும் தலைவராக்கினால் அவர் சிறந்த தலைவராக விளங்க வாய்ப்புள்ளது.


எனியாவது கிடைக்குமா?

இவர்களை எல்லாம் விட தலைமைப்பதவி கொடுத்து கௌரவப்படுத்த வேண்டிய அனுபவமுள்ள துடிப்பான ஒருவரும் அணியில் இருக்கிறார். ஆனால் அவருக்கு தலைமைப்பதவி கிடைக்குமா என்பது வடதுருவமும் தென்துருவமும்தான். பல சாதனைகளின் சொந்தக்காரனும் எங்கேயும் எப்போதும் இலங்கையின் வெற்றிக்கு காரணமுமான மாஜாயால மன்னன் முத்தையா முரளிதரன் தான்.2011 உலகக் கிண்ணம் வரை விளையாடுவேன் என அறிவித்திருப்பதால் அவரிடம் அணியை ஒப்படைத்து மதிப்பளிக்கலாம். (முரளி ஏற்க்கனவே தனக்கு தலைமைப்பதவி வேண்டாம் என பேட்டி கொடுத்ததெல்லாம் வேறு கதை). 20க்கு 20௦க்கு தலைவராக ஒரு புதிய இளம் வீரரை நியமித்து அவரை பயிற்றுவிக்கலாம். அவர் திலின கண்டம்பியாக இருந்தால் நல்லது.


அணில் கும்ப்ளே என்னும் சகாப்தத்துக்கு அவரின் கடைசிக் காலத்திலாவது தலைமைப் பதவி கொடுத்து கௌரவப்படுத்திய இந்தியாவைப் பார்த்தாவது(எதற்கும் இந்தியாவிடம் ஐடியா கேட்கும்) இலங்கை முரளிக்கும் ஒரு மணி மகுடம் சூட்டுமா? அல்லது இப்போதும் கொடுக்காது அவர் மனதை முள் கொண்டு தைக்குமா?
Share:

2 கருத்துரைகள்:

ARV Loshan said...

நல்லதொரு அலசல்.. எல்லோர் மனதிலும் இருக்கும் அதே எண்ணங்களே உங்கள் எழுத்து வடிவில், ஆனாலும் இலகு நடையில் தெளிவாக வந்திருக்கின்றன..

யார் கண்டார், செத்த தொடர், அதுவும் லாகூர் பயங்கரதினால் பாதியில் செத்த தொடரில் இருந்து வந்ததனால் பழசெல்லாம் மறந்து மீண்டும் மகேலவைத் தொடர சொல்லி உயர் மட்டம் அழைக்கலாம்..

நம்ம நாட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

துஷா said...

பதிவு நல்லக இருக்கின்றது முரளியின் கதை வெறும் கனவாக மட்டும் போக வாய்ப்புக்கள் இருக்கின்றது போல இருக்கு

"(எதற்கும் இந்தியாவிடம் ஐடியா கேட்கும்)"

அட நிங்களுமா நடக்கட்டும்

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive