Monday, March 23, 2009

கிரிக்கெட்டை எதிர்க்கிறாரா சச்சின்?


இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்ச்சத்திரம், உலக கிரிக்கெட்டின் மேதையும் ஆகிய சச்சின், கிரிக்கெட் போட்டி ஒன்றுக்கு தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார். சச்சின் ஏன் இப்படி மாறிவிட்டார்? கிரிக்கெட் மீதான அவர்காதல் செத்துவிட்டதா?

ICLக்கு போட்டியாக தொடங்கப்பட்ட IPL கடந்த வருடம் மிகவும் வெற்றிகரமாக நடந்த்தப்பட்டது யாவரும் அறிந்ததே. ஆனால் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்திலேயே சில அசம்பாவிதங்கள் நடந்தேறின. பல வீரர்கள் தொடர்ந்து போட்டியில் ஆடமாட்டோம் என கூறி பின்னர் ஒருவாறாக நல்ல படியாக நடந்து முடிந்தது. அதன் மூலம் கிடைத்ததோ எத்தனை கோடிகள், எத்தனை முத்தான வீரர்கள் நல்ல புரிந்துணர்வு.

இப்போது அந்தக் களியாட்ட திருவிழாவின் இரண்டாம் பருவகாலம். ஆனால் அதை தொடங்க முன்னரே இம்முறை பல பிரச்சனைகள் ஆரம்பமாகிவிட்டன. ஏப்ரல் மாதம் இந்தியாவின் லோக் சபா தேர்தல் நடைபெறவுள்ள காலப்பகுதியிலேயே IPLதொடரும் களம் காண இருகிறது. எனவே பாதுகாப்பு காரணங்களால் போட்டியை பிற்போடுமாறு இந்தியாவின் உள்த்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டிருந்தார்.ஆனால் லலித் மோடி எந்த மாற்றமும் இன்றி IPL நடந்தே தீரும் என ஒற்றைக்காலில் நின்றார்.
அப்படியாயின் தேர்தல் நடைபெறும் தினங்களிலும் இடங்களிலும் போட்டியை தவிர்க்குமாறு ப.சிதம்பரம் கேட்டும் லலித் மோடி சம்மதிக்கவில்லை. அதன் பின் இந்தப்போட்டிகளை நடத்த வேண்டாம் எங்கள் பேச்சை கேட்காமல் நடத்தினால் ஏதும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல என அரசாங்கம் கைவிரித்ததோடு கடுமையாக சாடியுமிருந்தது. வீரர்களின் பாதுகாப்பே முக்கியமாக கொள்ள வேண்டிய இந்தத் தொடரில் எத்தனையோ முன்னணி வீரர்கள் இடம்பெறுகின்றனர்.

என்ன நடந்ததோ தெரியாது அண்மையில் கூடிய IPLபோட்டி ஏற்ப்பாட்டுக்குழு இப்போது ஒரு சவாலான முடிவை எடுத்திருக்கிறது.
SPL அல்லது EPL ஆகுமா IPL?

இந்தியாவில் நடக்கும் IPL போட்டிகள் அதே திகதிகளில் தென் ஆபிரிக்காவிலோ அல்லது இங்கிலாந்திலோ நடக்கும் என இப்போது அறிவித்திருக்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம். அப்படி நடை பெற்றால் இதனை IPL என்றா அல்லது தென் ஆபிரிக்காவில் நடை பெற்றால் S(outh Affica)PL அல்லது இங்கிலாந்தில் நடைபெற்றால் E(ngland)PL என்றா அழைக்கமுடியும்?

கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாது ஆசிய ரசிகர்களையும் பெரிதும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த கோடை கால விடுமுறையை சந்தோசமாக கழிக்க திட்டம் தீட்டிய இந்திய மற்றும் அயல் நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் தலையில் இது மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறது.

இந்த நிலையில் தான் சச்சின் இந்தப்போட்டிகள் வெளிநாட்டில் நடத்துவதற்கு தன் எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றார். "IPL போட்டிகளை வெளிநாட்டில் நடத்த முடிவெடுத்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. இந்தப் போட்டிகளை இந்தியாவில்தான் நடத்த வேண்டும். அதுவே நியாயமானதும்கூட. ஒவ்வொரு இந்தியருக்கும் அதுவே பெருமையளிக்கும். என்னைப் போன்ற வீரர்களின் கருத்தும் இதுவே" என்று கூறியுள்ளார். நிச்சயமாக சச்சினின் கருத்தும் ஒரு வகையில் ஏற்கக்கூடியதே.

அதேபோலத்தான் இந்தியாவிற்கு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த ஜாம்பவானும் ICL இல் அங்கம் வகிக்கும் கபில் தேவும் தன் அதிர்ப்தியை தெரிவித்திருக்கின்றார். என்னதான் தன் போட்டி அமைப்பாக இருந்தாலும் அதன் போட்டிகளை வேறு இடத்துக்கொண்டு செல்லாமல் தங்கள் நாட்டிலேயே நடத்தவேண்டும் என்ற கபிலின் எண்ணமும் பாராட்டத்தக்கதே.
இது இவ்வாறு இருக்க இந்திய ரசிகர்களையும் அயல் நாட்டு ரசிகர்களையும் கருத்தி கொண்டு இப்போது அந்த போட்டிகள் இந்திய நேரப்படி மாலை வேளைகளில் நடைபெறும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அடிக்கடி மாறும் இந்த முடிவுகளால் நான் எழுதும்போது உள்ள இந்த நிலைமை, நீங்கள் வாசிக்கும் பொது எப்படி வேண்டுமென்றாலும் மாறலாம். .
Share:

0 கருத்துரைகள்:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive