Sunday, April 19, 2009

நம்பமுடியல ஆனால் நம்பித்தான் ஆகணும்.

எங்கள் வாழ்கையில் நாங்கள் பார்க்காமல் பல அதிசய விடயங்கள் நடந்திருக்கின்றது. சிலவற்றை நம்பி இருக்கின்றோம் சிலவற்றை நம்பமுடியவில்லை. ஆனால் நெருப்பில்லாமல் புகை வருமா என்பது போல் இப்படியான செய்திகள் ஒரு அடிப்படை இல்லாமல் வர சாத்தியமும் இல்லை.

அண்மையில் இப்படித்தான் நான் ஒரு பத்திரிகையில் படித்த ஆச்சரியமான ஒரு உண்மை சம்பவத்தை வலைப்பதிவு மூலமாக உங்களுடன் பகிரலாம் என தோன்றியதால் இந்த பதிவை இடுகின்றேன். இதை பார்த்ததும் நானும் நம்பவில்லை இப்படி நடக்காது இது பொய் என்று தான் யோசித்தேன். ஆனால் அதைப்பற்றி தேடியபோது தான் இது கற்பனை அல்ல, கட்டுக்கதை அல்ல உண்மைச் சம்பவம் என்பதை அறிந்து கொண்டேன்.

சவூதி அரேபியாவில் உள்ள அல்-ஹாஷாபிரதேச ஒரு கிராமத்தில் தான் இந்த அதிசயம் நிகழ்கின்றது. 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முஹாஜித் போராளி ஒருவரை ஒரு பாறை ஒன்றுக்கு பின்னால் வைத்து சுட்டுக்கொன்றிருக்கின்றனர். அதன் போது சிந்திய ரத்தம் இன்னும் உறையாமல் காய்ந்து இல்லாமல் போகாமல் புதிதாக சிந்திய ரத்தம் போல அந்தப் பாறையில் காணப்படுவதாக அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். (கையில் ஒரு சின்ன காயம் ஏற்பாட்டல் வரும் ரத்தமே சற்று நேரத்தில் உறைந்துவிடும் ஆனால் இங்கே...................?) இதை விட அவர்கள் கூறிய இன்னுமொரு விடயம் புல்லரிக்க வைக்கின்றது. தாங்கள் அந்த குருதியை துடைத்தோ அல்லது கழுவியோ விட்டாலும் மீண்டும் அவ்விடம் வழமைபோல் ரத்தம் கசிந்த இடமாக மாறிவிடுவதாக தெரிவித்த மக்கள் சொன்ன மற்றுமொரு விடயம் இவற்றை எல்லாம் தூக்கி சாப்பிடுவது போல் இருந்தது.

இதே பாறை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் 11 cm உயரம் தரையிலிருந்து மேலே எழுந்து 11 நிமிடங்கள் அந்தரத்தில் மிதப்பதாக சொன்னார்கள். ஒரு செக்கன் இரண்டு செக்கன் அல்ல நிமிடங்கள் மிதக்கிறதாம். (நம்பமுடியலையா அதிகம் மூளையைப்போட்டு குழப்பிக்காமல் நேரடியாக சவுதிக்கு சென்று பாத்திட்டு வாங்க.)

அதுக்கு முன்னர் இப்படியான சம்பவங்கள் பற்றி உங்கள் எண்ணங்களை பின்னோட்டங்களாக இட்டிட்டு போங்களேன்.
Share:

0 கருத்துரைகள்:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox