
கடந்த ஒரு சில நாட்களாக சில வலைப்பூக்களிலும் பிரபல இணையத்தளம் ஒன்றிலும் விஜயின் தொடர் தோல்விகளும் அஜித்தின் சுமாரான வெற்றியும் திரை உலகையும் தாண்டி இப்போது ஐ.பி.எல்லிலும் வியாபித்திருப்பதாக செய்திகள் வருகின்றன. அதாவது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்ட விஜய் போட்டி நடைபெறும் காலகட்டத்தில் மைதானத்துக்கு சென்று வீரர்களையும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தாததால் அவரை நீக்கிவிட்டு அஜித்தை நியமிக்க இருப்பதாக அந்த செய்தியை பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. ஏற்கனே விலகிய ஒருவரை எப்படி விலக்கமுடியும் என்பதே என் கேள்வி?
இந்த விடயம் நேற்று இன்று தான் இணையத்தில் நான் கண்டேன். ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு தொலைக்கட்சியிலேயே இந்த செய்தியை நான் பார்த்து விட்டேன். உடனடியாக லோஷன் அண்ணாவிற்கு தொடர்பை ஏற்படுத்தி விசாரித்தரித்ததுடன் அதை நானும் தேடி உறுதிப்படுத்திக் கொண்டேன். அந்த உறுதிப்பாடு என்னவென்றால் கடந்த முதலாவது ஐ.பி.எல் தொடருடனே விஜயுடனான ஒப்பந்தம் முடிவடைந்து விட்டது. இதில் இன்னொரு குற்றச்சாட்டு என்னவென்றால் விஜய் மைதானம் வரவில்லை என்பது. முதல் தொடரை பார்த்தவர்களுக்கு தெரியும் தொடக்க விழா முதல் தன் மகனுடன் வந்து சென்னையில் இடம்பெறும் போட்டிகளில் கலந்து கொண்டவர் விஜய். அதேநேரம் ஒப்பந்தம் செய்யும் போது அவர் போட்ட நிபந்தனைகளில் தனக்கு படப்பிடிப்பு உள்ளநாட்களில் கலந்து கொள்ள முடியாதென்றும் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் மாத்திரமே கலந்து கொள்வேன் என்றும் தெளிவாக சொல்லிவிட்டார். இதையும் இதே இணையத்தில் தான் படித்து தெரிந்தேன். இரண்டாவது தொடருக்கே வராத விஜய் இப்போது வரவில்லை என்று குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது.
மூன்றாண்டுகளுடன் ஒப்பந்தம் முடிந்து வீர்கள் முதல் முழு அணியும் மாறும் நேரத்தில் சென்னையும் தன் தூதராக அஜித்தை நியமிக்கலாம் அதில் தப்பில்லை. அதற்க்கு காரணம் வேறாக இருக்கலாம். சிலவேளை விஜய் ஒத்துக்கொள்ளவில்லை என்றும் வைத்துக்கொள்ளலாம். அல்லது அஜித்தின் அண்மைய பிரபலமாக கூட இருக்கலாம். ஆனால் ஒரு தப்பான செய்தியை சொல்லி அஜித்தை கொண்டுவருவது என்று செய்தியை வெளியிடுவது ஏன் என தெரியவில்லை. சாதாரண விழாக்களுக்கு வரவே களைத்துப்போகும் அஜித் விழாக்களில் பங்குபற்றாத அஜித் மைதானத்துக்கு வந்தா உற்சாகப்படுத்தப்போகின்றார் என்பது என் தனிப்பட்ட கேள்வி? ஒருவேளை இங்கே அதிக பணம் கிடைக்கின்றதென்று வருவாரோ தெரியாது? (விழாக்களில் கலந்து கொள்ள சிலருக்கு பணம் வழங்கினாலும் ரஜினி கமல் விஜய் அஜித் போன்ற நட்சத்திரங்கள் மரியாதை நிமித்தமே கலந்து கொண்டுவருகின்றனர்.)
அன்பார்ந்த என் சகோதர பதிவர்களே! ஒரு செய்தியை நாம் இடுகையாக இடும் முன்னர் அந்த செய்தி பற்றி கொஞ்சம் அலசி ஆராய்ந்து இடுவதே நமக்கு நல்லது. இல்லாவிட்டால் நம்மூலம் தவறான செய்திகள் வந்துவிடுமென்பது உங்கள் நன்பனில் ஒருவனாக என் கருத்து. கோபமின்றி ஏற்பீர்கள் என நம்புகின்றேன். இந்த இடுகையில் தவறிருந்தால் சொல்லுங்கள் நான் திருத்திக்கொள்கின்றேன்.
இன்று இன்னும் ஒரு விஜய் பற்றிய இடுகையும் ஒரு சில இடுகைகளும் இடலாம் என எண்ணியிருந்த நிலையில் இந்த செய்திகளை பார்த்தவுடன் இந்த இடுகையை நான் இடவேண்டும் என்ற அவசரத்தில் இடுகின்றேன். நேரம் கிடைப்பின் இன்றே அந்த இடுகைகளும் வரும்....













