உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label திரிஷா. Show all posts
Showing posts with label திரிஷா. Show all posts

Thursday, June 17, 2010

நடிகைகளுடன் பிரபல பதிவருக்கு தொடர்பு. - ஒப்புதல் வாக்கு மூலம்.

சினிமா நடிகைகளுடன் பல பிரபலங்களுக்கு தொடர்பு இருப்பதும் அதை இரு தரப்பும் மறுப்பதும் காலம் காலமாக கசப்பான உண்மைகள். இம்முறை அந்த சர்ச்சையில் சிக்கி இருப்பவர் ஒரு பிரபல பதிவர். ஆனால் இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் தனக்கும் நடிகைகளுக்கும் இடையில் இருக்கும் உறவினை பற்றி தன் வாயால் அவர் சொன்ன விடயங்கள் இவை. கொஞ்சம் சீரியசாய் படியுங்க. என்ன செய்றது இப்படி எல்லாம் இருக்குமா? அதுசரி இவர் மட்டும் என்ன விதி விலக்கா?


இலங்கையை சேர்ந்த பிரபல பதிவர் பவன். எரியாத சுவடுகள் என்ற பெயரில் வலைப்பூவினை எழுதும் இவர் பலரின் டவுசர்களை கிழித்துள்ளார். இம்முறை கிழியப்போவது அவர் டவுசர். ஒருத்தனின் டவுசரை கிழிப்பதில் என்ன ஒரு சந்தோசம். யாரும் திட்டப்படாது ஒழுங்காய் படிக்கணும் புரிதா?

உப்புடித்தாங்கோ நாங்கள் பல விஷயம் பேசுவோம். அட பதிவர்களை தான் சொன்னேன். அப்பிடி பேசினால் பல பேர் தங்கள் டவுசரை தாங்களே கிழிச்சிடுறாங்க. அதுக்கு நாமா பொறுப்பு என்ன செய்ய? பேசிக்கொண்டு இருக்கும் போது அவா எப்பிடி இருக்கா என கேட்க இவர் பலருக்கு காதலில் "அஞ்சலி" செய்த பாட்டி தானே சீக்கிரம் சொல்லிடுவாரா என்ன. ஆனால் அவர் விசாரிச்சு பாத்திருக்கிறார் அவா பற்றி ஆசை யாரை விட்டது. ஏற்கனவே இவர் இருக்கும் பிரதேசத்தில் இவருக்கு குறிப்பாக பெண் எதிரிகள் அதிகம் என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கின்றேன் அண்ணே என்றார். இனி உரையாடல் முறையாக பவனின் ஒப்புதல் வாக்கு மூலம்.



நான்: அடேய் நீ நல்லவனா?

பவன்: நான் நல்லவன்.

நான்: ஜோக் அடிக்காதே.

பவன்: அவ்வ்வ்வ்வ்வ் பிளீஸ் நம்புங்க நான் ரொம்ப நல்லவன்.

நான்: பிளீஸ் நான் நம்பமாட்டேன்.

பவன்: அவ்வ்வ்வ்வ் என்ன செய்தா நம்புவீங்க பிளீஸ்.

நான்: நம்பமாட்டேன்.

பவன்: எனக்கு இப்போதானே இருபது வயது. இனியும் காதலிக்கலாம் தானே.

நான்: காதலா எத்தனையாவது?

பவன்: ஒரு 16வது....சிம்ரனில் ஆரம்பிச்ச காதல் திரிஷா ஜெனிலியா தாண்டி இப்போ எமா வட்சனிட்ட வந்து நிற்குது.

நான்: அடேய் பாதகா கிராதகா அப்போ நாங்கள் எப்பிடி பார்க்கிரதாம்.

பவன்: திரிஷா இல்லைனா திவ்யா அண்ணே.

நான்: அடேய்

பவன்: என்னோட அடுத்த எயிம் ஏஞ்சலினா ஜூலி.

பவன்: அடோ வேற என்னடா ஐடியா வச்சிருக்காய்.

பவன்: தமிழில அங்காடி தெரு அஞ்சலிக்கு டிரை பண்ணலாம் என இருக்கு.

நான்: ஏன் திடீரென அந்த ......மேலே ஆசை

பவன்: அது .......?கொய்யாலே

நான்: தமன்னா என்ன ஆச்சு.

பவன்: அது விட்டிட்டு போயிடிச்சு.

இப்படி சொன்ன பவன் உடனே அஞ்சலியின் படம் ஒன்றை அனுப்பி வைத்தார். இதோ உங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக அந்த படம்.




எப்பிடி நம்ம செலேக்சன்.

நான்: இது நல்லாவா இருக்கு.

பவன்: மற்றவங்களுக்கு எப்பிடியோ எனக்கு நல்லாய் இருக்கு. நேற்றுக்கூட சுனைனா வந்து ஐ.லவ்.யூ சொன்னா.

நான்: அடுத்து என்ன செய்வதாய் உத்தேசம்.

பவன்: அஞ்சலியை கரெக்ட் செய்வதாய் உத்தேசம்.

நான்: உனக்கு டேஸ்ட் இல்லை. இதுக்கெல்லாம் வந்தி மாமாவை தான் கேட்கணும்.

பவன்: ஏன் எனக்கு டேஸ்ட் இல்லையா?

நான்: அஞ்சலியை எப்பிடி கரெக்ட் பண்ணப்போறாய்.

பவன்: இன்று மாலைக்குள் கரெக்ட் பண்ணி காட்டவா?

நான்: முடிஞ்சா காட்டு.

பவன்: ஆதாரத்துடன் காட்டுகின்றேன்.


நான்: ஓகே வேற என்ன செய்வாய்?(தப்பாய் நினைக்கப்படாது)

பவன்: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஏதோ ஆப்பு வைக்கப்படுவதாய் உணர்கின்றேன்.

நான்: இல்லை சொல்லடா.

பவன்: வேற ஒன்றும் செய்யல

நான்: அட போடா நிஜமாய் நீ யாரை கரெக்ட் பண்ணப்போறாய்.

பவன்: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் அப்பிடி யாரும் இல்லைண்ணே

நான்: ஏண்டா இப்பிடி நடிகளைகளை கரெக்ட் பண்ணியே காலத்தை ஓட்டப்போறாயா?

பவன்: காதலை தேடிக்கிட்டு போக முடியாது. அது நிலைக்காது.

நான்: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பவன்: அப்போ ஒருத்தி தேடி வருவா என நம்புறேன்.

நான்: வேற ஏதும் சொல்ல இருக்கா?

பவன்: தினமும் கேட் வாசலில் நிக்கிறன்.

நான்: ஏன்?

பவன்: ஒரு நாய் குடும்பத்தோட போகும் வீட்டு வாசலால.

நான்: அந்த நாயை தான் இப்போ பார்க்கிறியா?

பவன்: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நான்: அட சொல்லப்பு.

பவன்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்


நான்: காதல் என்றால் என்னடா?

பவன்: இலங்கை பட்ஜெட் போல அண்ணே.

நான்: காதலிச்சா செலவு அதிகரிக்குமே தவிர குறையாது.

நான்: அடப்பாவி அனுபவமா?

பவன்: ஹீ ஹீ காதல் நாடகங்கள் பலவற்றை கண்கூடாக கண்ட பார்வையாளன்.

நான்: சரி இப்போ நடிகைகளில் உனக்கு அஞ்சலி தான் பிடிச்சிருக்கா?
நமீதா எப்பிடி?

பவன்: நமீதா நயன்தாரா எல்லாம் பொதுச்சொத்து.யார் வேண்டும் என்றாலும் உபயோகிக்கலாம்.

நான்: அடபபவி அப்போ உன் சொத்து எது?

பவன்: எனக்கு இன்னும் தனிச்சொத்து கிடைக்கல என் தலைவன் சிம்பு சொன்ன வழியில் தேடிவரும்

நான்: அப்போ நீ ட்ரை பண்ணியது?

பவன்: சிம்ரன்

நான்: ஓகே அடுத்து யார்?

பவன்: அது அறியாத வயசில புரியாத காதல்.

நான்: பருவ கால அடிப்படையில் ஒழுங்காய் சொல்.

பவன்: 6ம் ஆண்டு - சிம்ரன்.
7ம் ஆண்டு - ஜோதிகா

நான்: ஜோவை தான் சூர்யா கொண்டு போய்ட்டாரே கோபம இல்லையா?

இந்த கேள்விக்கு பயல சைலன்ஸ்.


பவன்: 8 ம் ஆண்டு நினைவில்லை............ஆஹ் லைலா அண்ணே.
9 ம் ஆண்டு ரோஜா.

நான்: அது ரொம்ப பழசேடா

பவன்: ம் ஆணா எனக்கு அப்போ தான் அதை தெரியும் பழைய படத்தை ரசிச்சு பார்த்தேன். 10 ம் ஆண்டு அசின்
11 ம் ஆண்டு நயன் திரிஷா 12 தொடக்கம் இப்போ வரை ஏமா வாட்சன் தான்.

ம் இனி வருபவை என பவன் சொன்னவை.
ஏஞ்சலினா ஜோலி.
அஞ்சலி.

நான்: அப்போ தமன்னா,சுனைனா?

பவன்: அது 13 இல் அப்பப்போ வந்து போனது. ஏமா வாட்சன் சூட்டிங் போன டைம் தமன்னாக்கு ரூட் போட்டு செட ஆகி கழட்டி விட்டாச்சு.

நான்: அப்போ சுனைனா?

பவன்: அது இன்கமிங்.அண்ட் ஐ ரிஜெக்ட்

நான்: வேற யாரையும் மிஸ் பண்ணிட்டாயா?

பவன்: ஆஹ் சுப்ரமணியபுரம் சுவாதி.

நான்: அதெப்போ?

பவன்: அந்த படம் வந்த டைமில்

நான்: ஒ வேற யாரும் இருக்காங்களா?

பவன்: இல்லை இம்புட்டும்தான்.

நான்: இன்று மாலைக்குள் இவர்களை கரெக்ட் பண்ணிய ஆதாரங்களை தரமுடியுமா?

அதற்க்கு அவர் அளித்த ஆதாரங்கள் தான் இங்கே நான் இட்டிருக்கும் படங்கள்.

அப்பாடா ஒரு பதிவு போட்டாச்சு. ஒருத்தன் டவுசரை கழட்டியாச்சு. அதில் என்ன ஒரு சந்தோசம் பாருங்கோ. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்திட்டன். இந்த பதிவு கற்பனை என்று சொல்லி உங்களை கடுப்பாக்க விரும்பல அதுக்காக உண்மை என்று சொல்லி தீ மூட்டவும் விரும்பல. எல்லாம் ஒரு மொக்கை தான். மொக்கை மொக்கை மொக்கை. புரிஞ்சிதா? என்னது ரஞ்சிதாவா என்று கேட்கபடாது அவா இப்போ மீண்டும் பிசி. நித்தியானந்தாவிடம் போகப்போறாவாம். நான் எழுதியதும் பவானந்தா பற்றி தான் என்ன ஒரு பொருத்தம் பாருங்கோ.

Share:

Monday, March 8, 2010

நடிகைகளின் மகளிர் தின கருத்துக்கள்.

ஈகோ இல்லாமல் பெண்களை சரிசமமாக பார்க்க வேண்டும் என்றும், பெண்களை அரவணைத்து செல்ல வேண்டும் என்றும் நடிகைகள் கூறியுள்ளனர். ஆண்டுதோறும் மார்ச் 8ம்தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று 100வது ஆண்டு மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மாதராய் பிறந்து திரையுலகில் சாதித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் மகளிர் தினத்தையொட்டி தினமலர் டாட் காம் வாசகர்களுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளனர்

த்ரிஷா


எனக்கு எல்லா நாளும் பெண்கள்தினம்தான். எனக்கு வீட்ல, வெளில நல்லா சப்போர்ட் இருக்கு. அதனால்தான் நிறைய வேலை செய்ய முடியுது. அம்மா என்னுடைய தேவைகள் எல்லாத்தையும் கவனித்துக் கொள்வதால் நடிப்புத் துறையில் சரியாக செல்ல முடிகிறது. வேலையை சந்தோஷமாக செய்ய முடிகிறது. இதுவரைக்கும் எனக்கு பெரிய பிரச்னை எதுவும் இருந்ததில்லை. என் வாழ்க்கையில் குறைபடும்படியா எதுவும் இல்லை. பெண்கள் முன்னேறி நிறைய சாதிக்கணும். நாட்டுக்கே பெருமை சேர்க்கணும்

ப்ரியாமணி


முதல்ல பெண்களா பிறந்ததுக்கு பெண்கள் எல்லாரும் பெருமைப்படணும். இப்ப இருக்குற காலகட்டத்துல ஆணுக்கு நிகரா, எல்லா துறைகளிலும் பெண்கள் இருக்காங்க. உதாரணத்துக்கு கல்பனா, சுனிதா, சானியா மிர்சா... இப்படி நிறைய வெற்றி பெற்றவர்களை சொல்ல முடியும். உலக அளவில் நம் பெருமையை எடுத்துட்டு போயிருக்காங்க. நம்மாலும் சாதிக்க முடியும்னு வெற்றிய கொடுத்திருக்காங்க. ரொம்ப பெருமையா இருக்கு. வாழ்த்துக்கள். நிறைய பெண்கள் தைரியமா வெளில வந்து சாதிக்கணும்

சந்தியா

நாங்க ஜெயிச்சிட்‌டோம், சாதிச்சிட்டோம்னு எல்லாம் பெண்கள் சொல்லிக் கொண்டாலும், இந்தியாவில் பெண்கள் இந்த அளவு வெளியே வர ஆண்கள்தான் காரணம். சமுதாயத்தில் பெண்களும் நல்ல நிலைக்கு வரணும்னு ஆண்கள் விரும்புறாங்க. என் குடும்பத்தில் எனக்கு அப்பாவும், அண்ணாவும் ரொம்ப உதவுறாங்க. அதனால்தான் சந்தியாவா, என்னால இந்த துறைக்கு வர முடிந்தது. ஒவ்வொரு குடும்பத்திலும் அப்பா, அண்ணா, கணவர் என் எல்லாரும் உதவி செய்தால் பெண்கள் நிறைய சாதிக்க முடியும்னு நம்புறேன்

சானாகான்


பெண்கள்னா ஒரு பவர் இருக்குன்னு நான் நினைக்கிறேன். எல்லா இடங்களிலும் பெண்கள் இருக்காங்க. ஒரு குடும்பத்தில் கண்ட்ரோல் பாயிண்ட் அந்த வீட்டில் இருக்கும் பெரிய பாட்டிதான்னு சொல்வேன். பெண்களுக்கு மிகப்பெரிய மரியாதை இங்கே இருக்கு. பெண்களுக்கு இப்ப நிறைய விழிப்புணர்வு வந்திருக்கு. யாரும் வீட்டில் சும்மா இருக்க விரும்புறதில்லை. எனக்கு எங்க அம்மாவோட சப்போர்ட் ரொம்பவே இருக்கு. அது மாதிரி எல்லா பெண்களுக்கும் ஒரு சப்போர்ட் தேவைப்படுது. இந்த தினத்தில் ஆண்கள்கிட்ட கேட்டுக்கிறேன். ஈகோ இல்லாம எல்லோரையும் சரி சமமா பாருங்க. நன்றி! வாழ்த்துக்கள்

மீனாட்சி

என்னை பொறுத்தவரைக்கும் இன்னும் எங்காவது ஒரு இடத்தில் ஆணாதிக்கம் இருக்கத்தான் செய்கிறது. விரைவில் இதெல்லாம் மாறும்னு நினைக்கிறேன். ஈகோ, தான் என்பதெல்லாம் இல்லாமல் பெண்களை அரவணைத்து செல்ல வேண்டும். ஆண்கள் இல்லன்னா பெண்கள் இல்லை. அவங்களால எதையும் தனியா சாதிக்க முடியாது. நான் பெண்ணா ‌பிறந்ததற்கு ‌ரொம்ப சந்தோஷப்படுறேன். பெருமைப்படுறேன். அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்

ரம்பா


ஒவ்வொரு நாளும் மகளிர் தினம்தான். அம்மா, தங்கை, மனைவி, அக்கா இப்படி எந்த பெண் உறவாக இருந்தாலும் காலையில் காபி கொடுக்குறதுல தொடங்கி, ஒவ்வொரு ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள். இந்தியாவில் மார்ச் 8ம்தேதி பெண்கள் தினம் கொண்டாடுவதில் பெருமையா இருக்கு. எனக்கு இந்திராகாந்தியை ரொம்ப படிக்கும். அவங்க பெஸ்ட் வுமன். அடுத்து என் அம்மாவ ரொம்ப பிடிக்கும். அவங்க இல்லன்னா இன்னிக்கு இந்த ரம்பா இல்லை. அதனால பெண்ணா பிறந்ததுக்கு பெருமைப்படுறேன். உலகத்தில் இருக்குற எல்லா பெண்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

உலகத்தின் கருப்பொருளாய் விளங்கும் பெண்கள் எல்லோருக்கும் என் இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள். தினமலருக்கு நன்றிகள்.

Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox