
பூனைக்கண் புவனேஷ்வரி..... பேரைக் கேட்டாலே அதிருதெல்லா. இந்தியா மட்டுமல்ல நாடு கடந்தும் இன்று இந்த பெயர் அறிமுகம். காரணம் என்ன விபச்சாரம். நாட்டில் எத்தனையோ பேர் இதை செய்தாலும் பெரும் புள்ளிகள் செய்துவிட்டால் வெளிச்சத்துக்கு வருவது இயற்கையே. இப்படி இன்றல்ல நேற்றல்ல காலம் காலமாக நடந்து வருகிறது. இது புவனேஷ்வரி முறை.
இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விடயம் மட்டுமல்ல நம் பதிவர்கள் பலர் பதறி அடித்துக்கொண்டு பதிவிட்ட விடயம் கூட. அதை தொடர்ந்து நடிக நடிகையர் நடத்திய கூட்டம் பெரிய பரபரப்பை கிளறியது. நடிகர்கள் ரஜினி,சத்யராஜ்,விவேக் பேச்சுகளோடு நடிகைகள் பேசிய பேச்சுக்களும் சலசலப்பை ஏற்ப்படுத்தியுள்ள நிலையில் சூர்யாவின் பேச்சுதான் இவற்றுக்கு அடித்தளம் என்னும் பேச்சும் இடம்பெற்றுள்ளது. பத்திரிக்கையாளர்களை ஈனப்பிறவிகள் அது இது என சில தகாத வார்த்தை பிரயோகங்களை உதிர்த்து திட்டிய மார்க்கண்டேயரின் மகன் அதன் பின் பல்டி அடித்துள்ளார். இதையே தூக்கி சாப்பிட்டுவிட்டார் அவரின் தந்தை. இந்த விடயத்தோடு அவரை அனுகியவர்களுக்கு மூஞ்சியில் கரி பூசி அனுப்பி இருக்கின்றார்.
இவ்வளவு காலமும் திரை உலகில் இருக்கும் ஒரு ஒழுக்க சீலரான சிவகுமார் இன்று தன மகனால் இப்படி நடக்கவேண்டி ஏற்பட்டதோ? எதுவாக இருப்பினும் சூர்யா சரி அவர் குடும்பம் சரி ஈழ மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் உதவிய நல்லுள்ளம் கொண்ட குடும்பம். அந்த நல்லமனதுக்கு சொந்தக்காரர் தான் சூர்யாவும். ஆனால் என்ன காரணத்துக்காக அன்று அப்படி பொங்கிவிட்டார். பொங்கியவர் அடுத்தடுத்த நாட்களிலேயே மறுப்பறிக்கையும் விட்டார் காரணம் வந்தி அண்ணா பதிவில் சொன்னது போல ஆதவன். ஊடகங்களை பகைத்தால் எல்லாமே பொசுங்கிவிடும் எனதெரியாத நடிகரா அவர். திரையில் அழகாக நடிக்கும் சூர்யா நிஜமாக நடித்தார். இது நிஜாயமா? உங்கள் கருத்து என்ன என சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு. அந்த வகையில் அன்று பத்திரிகையாளரை கண்டித்தீர்கள். அதை தொடர்ந்திருக்கவேண்டும். காரணம் அன்று உங்களுக்கு நியாயமாக பட்டது என்றும் பட வேண்டும். இந்த விடயத்தில் விவேக் சொன்னது சரியோ தப்போ என்பதை விட பத்திரியாளர் தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்தாலும் அதை எதிர்த்து நிற்கின்றார். ஒரு காமெடியனுக்கு இருக்கும் துணிவு ஹீரோ உங்களுக்கு எங்கே போய் விட்டது.
அடுத்து நான் சொல்ல போகும் விஷயத்துக்கு எனக்கு எல்லோரும் சேர்ந்து கும்மப் போகின்றீர்கள் என தெரியும். அதற்க்கு சான்று இப்படி ஒரு பதிவிட போகின்றேன் என வந்தி அண்ணருடன் பேசும்போது சொன்னேன். பதிவிட்டு விட்டு சொல் வந்து கும்முகின்றோம் என்றார். பரவாயில்லை சொல்ல வேண்டியதை சொல்லவேண்டிய நேரம் சொல்லாவிட்டால் அது மனதுக்குள்ளேயே அழிந்து போய்விடும். அதனால் சொல்ல தான் போகின்றேன். ஈனப்பிறவிகள்...... என பேசிய சூர்யாவை அண்மைக்காலமாக (வேட்டைக்காரன் ஆதவன் போட்டி இருக்கும் நேரம்)கொண்டாடிய பல பதிவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜயை சொன்ன சைலன்ஸ் என்னும் சொல்லுக்கு வியாக்கியானம் எழுதிய யாரும் இதை ஏன் கண்டு கொள்ளவில்லை. ஒப்பீட்டளவில் ஒரு சிலர் மாத்திரமே இதை எழுதியுள்ளனர். ஆதவன் வரப்போகும் நேரத்தில் சூர்யா அடித்த பல்டிக்கு இவர்களும் பலியாகிவிட்டனரா?
என் முன்னைய ஒரு பதிவில் யார் தப்பு செய்தாலும் பதிவர்கள் நாங்கள் கிளிப்போம் என்றவர்கள் இன்று எங்கே போய்விட்டனர். இது ஒரு விஜய் ரசிகனாக என் ஆதங்கமே. அதற்காக எனக்கு ஏதோ சூர்யாமேல் வெறுப்பு என்று நினைக்க வேண்டாம்.
விஜய்-சூர்யா இருவரும் நடிகர்கள் இருவரும் சமூக சேவையும் செய்துள்ளனர். அப்படி இருக்கும் போது பாரபட்சம் காட்டுவது ஏனோ? சூர்யா என்னதான் பெரிய வெற்றியைக் கொடுத்தாலும் விஜய் அளவிற்கு இன்னும் மாஸ் கிடைக்கவில்லை என்பது உண்மையே. அப்படி இருக்கையில் பதிவர்களின் சில நடவடிக்கைகள் எனக்கு இன்னும் புரியாத புதிராகவே இருக்கின்றன. தெரிந்தவர்கள் சொல்லுங்கள் மற்றவர்கள் கும்முங்கள் என்ன செய்வது இப்போது உங்கள் பார்வையில் விஜயும் விஜய் ரசிகர்களும் இழிச்சவாயர்களே.













