
நேற்று இரவு எத்தனை மணிக்கு உலக கிண்ண கால்பந்து போட்டி என்று ஒரு குழப்பம் வர இலங்கையில் நடமாடும் போட்டி அட்டவணை(நிறைய பேரை நடு ராத்திரி தூக்கத்தில் இருந்து எழுப்பி போட்டியை பார் என்றாராம்.) சுபாங்கன் தாத்தாவிடம் கேட்கலாம் என்ற ஆவலில் அவருக்கு அழைப்பு எடுத்தால், மனிதர் என் மேல் கோபப்படுகின்றார். அண்மைக்காலமாய் என் பதிவுகள் எண்ணிக்கை குறைந்து விட்டதாம். நானும் வழக்கமாய் எல்லோரும் சொல்லும் காரணம் சொன்னேன்(அதுக்காக நான் பிசி மான் என்று யாரும் தப்பாய் நினைக்கப்படாது.) அப்படியே பேசிக்கொண்டிருக்கும் போது உலககிண்ண கால்பந்து பற்றி ஒரு பதிவிடலாமே என்றார். நமக்கு தான் கால்பந்து சுத்த சூனியம் ஆச்சே என்று சொல்ல பவனை போல தெரிந்த கிரிக்கெட்டை வைத்து தெரியாத கால்பந்துக்கு பதிவு ஒன்று போடு என அடி எடுத்துக் கொடுத்துள்ளார். அவர் அடியுடன் குரு பவனின் ஆசி(எந்த விதத்தில் என்று கேட்கப்படாது) வழங்க இந்த பதிவை எழுதுகின்றேன்.
நேற்று நடைபெற்ற உலககிண்ண கால்பந்து போட்டியின் ஸ்பெயின் வெற்றி பெற்றது எல்லோருக்கும் தெரியும். இதை வைத்துக்கொண்டு ஒரு மொக்கை பதிவு போடுகின்றேன். இது முழு மொக்கை. மொக்கை இல்லாவிட்டாலும் மொக்கை என்று எடுத்துக்கொள்ளுங்கள் அப்புறம் எனக்கு வலிக்குமெல்லா.சரி நேரே மேட்டருக்கு போவோமா?
ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான Footket(Cricket போல) போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஸ்பெயின் அணி தலைவர் தங்களுக்கு ஒரு பக்க கிரவுண்ட் வேண்டும் என்றும் நெதர்லாந்து அணியை பந்தினை எடுத்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர். அதற்க்கிணங்க முதலில் காலாட்டத்தை(துடுப்பாட்டம் போல) தொடங்கிய நெதர்லாந்து அணி மிகவிரைவிலேயே தங்கள் அடித்தாடும் பாணியை தொடங்கவில்லை. மறுபுறம் தங்கள் நிதானமான அடித்தாடும் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்பெயின் அணி நெதர்லாந்துக்கு பாரிய சவாலை வழங்கியது.
இந்த நேரத்தில் போட்டியை பார்க்கும் போது சின்ன பிள்ளைகளை விளையாட்டுக்காட்ட பெரியவர்கள் பந்தை தூக்கி எறிய அதை பிடிக்க சிறுவர்கள் ஓட உடனே அந்த பந்தை இன்னொரு இடத்துக்கு தூக்கி எறிய அதை பிடிக்க பிள்ளை ஓடுவது போல இருந்தது. ஆனால் சிறிது நேரத்தின் பின் ஓரளவு சுதாகரித்துக்கொண்ட நெதர்லாந்து அணி தன் ஓட்ட வேகத்தை சராசரியாக அதிகரித்தாலும் இரண்டு அணியினராலும் ஒரு ஓட்டத்தைக் கூட பெற முடியவில்லை. தொடர்ந்து இரண்டு அணி வீரர்களும் கடும் போராட்டத்தை வெளிப்படுத்தினாலும் மறு புறம் இரண்டு அணியின் பிரதான களத்தடுப்பாளர்களும் (கோல் காப்பாளர்களும்) பறந்து பறந்து பந்தினை பிடித்து எதிரணியினர் ஓட்டத்தினை பெற முடியாமல் கட்டுப்படுத்தினர்.
இடை இடையே தன் பொகெட்டில்இருந்த மஞ்சள் நிற அட்டையை எடுத்து காட்டி வீரர்களை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார். இடையிடையே வீரர்கள் ஓட்டங்களை பெற முடியாமல் களத்தடுப்பாளர்கள் தங்கள் கால்களால் நெஞ்சில் உதைத்தும் கால்தடம் போட்டு விழுத்தியதும் நாம் வயல் வெளியில் ஆடிய ஆட்டத்தை நினைவு படுத்தியது. அடிக்கடி எல்லைக்கோட்டுகருகே பந்து சென்று வந்தாலும் எந்த அணியாலும் ஓட்டங்களை பெற முடியவில்லை. ஆனாலும் பாருங்கோ சில நேரங்களில் பந்து மைதானத்தி விட்டு வெளியே சென்றாலும் சிக்ஸ் போர் கொடுக்காமல் பந்தினை எதிரணி வீரரிடம் கொடுத்து மைதானத்துக்குள் கையால் எறியச்சொன்னார் அம்பயர். ஆனாலும் பாருங்கோ காலாலும் தலையாலும் பந்தை களத்தடுப்பு செய்ய அனுமதிப்பவர்கள் கையால் செய்யவிடாதது என் கவலை.
கடுமையாகவும் சுவாரஸ்யமாகவும் நடைபெற்ற போட்டியில் முழு ஓவரும் ஆடி முடித்தும் இரு அணியும் ஒரு ஓட்டத்தையும் பெற முடியாமல் போக இன்னும் சில ஓவர்கள் ஆடலாம் என்று பால்வர்த்தார் அம்பயர். ஆனால் பாருங்கோ பதினைந்து நிமிடம் ஆடியும் மீண்டும் யாரும் ஓட்டத்தை பெறாமல் போக மீண்டும் ஒரு தடவை ஓவர் அதிகம் கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் தான் பாருங்கோ யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இனியேஸ்டா என்ற வீரர் அற்ப்புதமான ஒரு சிக்ஸ் அடித்து தன் அணியை முன்னிலை பெற வைத்தார். எனவே தாங்கள் அபாரமாக ஆடி இதே போல இரண்டு அடி விட்டால் தான் முடியும் என்ற நிலையில் ஆக்ரோசமாக நெதர்லாந்து ஆடினாலும் இறுதியில் ஓவர் முடிவடைந்த காரணத்தால் ஸ்பெயின் வெற்றி பெற்றது.
அடிக்கடி offside offside என்றார்கள் ஆனால் பாருங்கோ கடைசிவரை legside காட்டவில்லை.(கண்டு பிடிப்பு உதவி பவன்) Ballலை காட்டியவர்கள் Batறை காட்டவில்லை. பந்து மைதானத்தை விட்டு வெளியே போனாலும் ஆறு நான்கு ஓட்டங்கள் வழங்கப்படவில்லை. நடுவர் கையை மேலே தூக்கி காட்டினாலும் ஆறு ஓட்டம் கொடுக்காப்படாமல் வீரர் எச்சரிக்கப்படுகின்றார். என்ன ஒரு கவலை இந்த சியர் லீடர்ஸ் ஆடவில்லை என்பதுதான். ஆனால் நேற்று போட்டி பார்த்த பின் வரும் உலக கிண்ண போட்டியில் நான் விளையாடும் அறிவு கிடைத்திருக்கு என நம்புகின்றேன். என்ன சொல்றிங்க இந்த அறிவு போதாதா எனக்கு அப்புறம் என் குரு பவனிடம் இதை பற்றி ஒரு கோர்ஸ் செய்யப்போறேன். நேரம் ஆச்சு குரு கோவிப்பார் வரட்டா.....
பி.கு: படம் எப்பிடி இருக்கு. கட்டாயம் சொல்லிட்டு போங்கோ.














