உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label நானாட நீயாட. Show all posts
Showing posts with label நானாட நீயாட. Show all posts

Saturday, August 15, 2009

Super Singers உடன் ஒரு சூப்பர் பயணம்-பகுதி-2

வெற்றிக் கூட்டம்.

Super Singers அழைக்க செல்லும்போது ஏற்பட்ட சிறு தடங்கலில் விட்டிருந்தேன். இதோ தொடர்கின்றேன்.......... காலை 9.30க்கு என் வீட்டுக்கு மாருதி குமார் அண்ணா வருவதாக சொன்னார். அதன் படியே நானும் தயாராகிவிட்டேன். குமார் அண்ணாவை காணவில்லை. மனிதருக்கு என் வீடு தெரியாது எங்கேனும் மாறிப் போய்விடுவாரோ? என மனதுக்குள் பயம். அவருக்கு தொலைபேசி அழைப்பெடுக்க அதுவும் ஏற்படவில்லை. என்ன செய்வதென தெரியாமல் ஜெய்சனிடம் விடயத்தை சொன்னேன்.இதற்கிடையில் லோஷன் அண்ணாவிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு "என்ன விமான நிலையத்துக்கு கிளம்பியாச்சா?" என்றார். குமார் அண்ணா இன்னும் வரவில்லை என அவருக்கு சொன்னேன். அத்துடன் ஜெய்சனிடம் நான் இதைப்பற்றி கூறியதை சொன்னவுடன், தானும் குமார் அண்ணாவுடன் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக லோஷன் அண்ணா சொன்னார். மீண்டும் சிணுங்கியது என் கையடக்கத்தொலைபேசி."குமார் அண்ணா வந்து கொண்டிருக்கின்றார், இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவார் என" ஜெய்சன் சொல்ல நானும் அவருக்காக காத்திருக்க ஒருவாறு வந்து சேர்ந்தார்.

என் வீட்டில் இருந்து புறப்பட்ட சற்று நேரத்தில் லோஷன் அண்ணாவிற்கு தொடர்பை ஏற்படுத்தி நாங்கள் செல்லும் விடயத்தை சொன்னேன். அதன் பின் பம்பலப்பிட்டியில் ஐஸ்வர் என்கிற சிறுவனும் அவரின் தந்தையும் ஏறிக்கொள்ள நான் முன்னுக்கிருந்து பின்னுக்கு சென்றுவிட்டேன். காரணம் புதிதாக ஏறிய நபர் வாகனத்தை செலுத்த குமார் அண்ணா எழுந்து பின்னுக்கு செல்ல என் மனம் முன்னுக்கு இருக்க இடம் கொடுக்காமல் அந்த இடத்தை விட்டு நான் பின்னுக்கு சென்றுவிட்டேன். அதன் பின் அந்த சிறுவனுடன் உரையாடியவண்ணம், நம் தினேஷை ஏற்றுவதற்காக சென்றோம். (அந்த பையன் எனது நானாட நீயாட நிகழ்ச்சியை கேட்பவராம். அப்பாடா ஒருவராவது நான் செய்யிறத கேட்கின்றார்.)

அப்பாடா சாதித்து விட்டேன் என்னும் திருப்தியில் சிவகார்த்திகேயனுடன் தினேஷ்.
தினேஷை ஏற்றியவுடன் வாகனம் விமான நிலையத்தை நோக்கி மிக வேகமாக செல்ல தொடங்கியது. வெற்றியை ஒலிக்க விட்டபடி நாங்கள் பயணித்துக்கொண்டிருந்தோம். உலாவரும் உற்சாகம் நிகழ்ச்சியில் வைதேகியும்,பூஜாவும் எங்களை கலாய்த்துவிட்டனர். பதிலுக்கு நாங்கள் ஒன்றும் செய்ய வேண்டாமா அதற்கும் தயாரானோம். என்ன செய்திருப்போம்? இன்னும் கொஞ்சம் காத்திருங்கள் அந்த இனிய நினைவை சொல்கின்றேன்.
Share:

Sunday, April 26, 2009

தப்பிப் பிழைத்த தமிழன்.

நேற்று நடைபெற்ற இலங்கையின் மேல்மாகண சபை தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டிய ஒருவனாக நான் எங்கள் வானொலியில். நேற்று இரவு 9 மணிக்கு "நானாட நீயாட" நிகழ்ச்சியில் ஆரம்பித்து மறுநாள் காலை(இன்று) 6 மணிவரை தொடர்ச்சியாக தேர்தல் கடமையில் இருந்து தூக்கத்தோடு இருந்தாலும் தேர்தல் முடிவு வரும் வரும் என அதிகாலை வரை எதிர்பார்த்து சலித்துப்போய் நன்றாக தூங்கிவிட்டு வந்து எழுதும் பதிவு என்பதால் கொஞ்சம் தாமதமாக இருந்தாலும் ஏதோ தோன்றியதை எழுதுகின்றேன்.

தமிழன் என்றாலே உயிருக்கு உத்தரவாதமில்லாதவன் என்றாகிவிட்ட நிலையில் இயற்கையும், சில விபத்துக்களும் கூட தமிழனை கொல்லாமல் விட மாட்டேன் என துரத்திக்கொண்டே இருக்கிறது.

உண்மையில் தமிழன் என்ற உணர்வோடு வாழ்ந்து வரும் தமிழக அரசியல்வாதி(சில சமயங்களில் இவரும் அந்த அணியில் சேர்ந்து கொள்கின்றார் எனும் பொது கவலையாகத்தான் இருக்கிறது.) பழ.நெடுமாறன் அவர்கள்(வயதுக்கும் அவர் செய்த நல்ல காரியங்களுக்கும் இந்த மரியாதை கொடுக்கின்றேன்.) நேற்று மாலை வேளை மயிலாடுதுறையில் இருந்து சென்னைக்கு செல்லும் வழியில் காஸ் நிரப்பி வந்த வாகனத்துடன் இவர் பயணம் செய்த கார் மோதி விபத்துக்குள்ளகியுள்ள நிலையில் காரின் முன்பகுதி முற்றாக சேதமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காரில் பயணம் செய்த ஓட்டுனர், பழ. நெடுமாறன் உட்பட யாருக்கும் எந்த வித ஆபத்துமின்றி பத்திரமாக தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழனை துரத்தும் மரணம் இவரின் கார்க்கதவையும் தட்டி விட்டு சென்றிருக்கிறது. மரண பயம் என்றால் என்ன என்பதை பழ.நெடுமாறன் ஐயாவும் அறிந்து கொள்ள ஆண்டவன் ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கின்றார். இதை எல்லோரும் புரிந்து நடந்தால் எல்லாமே மாறிடுமே. நடப்பார்களா?
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox