Sunday, October 25, 2009

ஆதவன் என்ன பாதகனா?

ஆதவன் திரைப்படம் எப்படியாவது இம்முறை முதலில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்குள்ளும் சில நாட்களாக இருந்தது. காரணம் சூர்யாவின் அண்மைய அபார வளர்ச்சி. அதன்படி தீபாவளி அன்று காலை பார்க்கலாம் என திட்டம் தீட்டினேன். அதற்கு முன்னர் முதல் நாள் இரவு ஆதவனை பார்த்த நண்பர்களிடம் ஆதவனை பற்றி விசாரித்ததில் ஆதவன் பாதகனாவிட்டான் என நொந்துகொண்டேரே பலர். இதனால் நானும் மறுநாள் காலை அதுவும் ஒரு நரகாசூரன் அழிந்தநாளில் இன்னொரு நரகாசுரனை பார்க்கவேண்டுமா வேண்டாமே என முடிவெடுத்து தள்ளிப்போட்டேன். காரணம் படம் பார்த்த பதிவர்கள் குருவி, வில்லு திரைப்படங்களை விட ஆதவனை வறுத்தெடுத்தமை என்னை ஏனோ யோசிக்க வைத்தது.


அப்படி இப்படி என்று ஒருவாறு கடந்த வெள்ளிக்கிழமை மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒருதடவை பார்ப்போம் அப்படி என்னதான் இருக்கின்றதென்று என முடிவெடுத்து திரை அரங்கிற்கு போக என்னுடைய நண்பன் ஒருவனையும் அழைத்தேன். நன்றாக தூங்கி எழுந்து நான் திரை அரங்கு சென்று சேர எழுத்தோட்டத்தில் சூர்யாவின் பெயர் வந்து போய் விட்டது. ஏதோ சூர்யாவின் குழந்தை படத்தில் இருந்து அவரின் குழந்தை தியாவின் படம் வரை போட்டு தொடங்குகின்றார்கள் என பலர் சொன்னனர். ஆனால் நான் அதை தவற விட்டு விட்டேன்.

அதற்கு பிறகு சூர்யாவின் அறிமுக பாடல் காட்சி . எனக்கென்னவோ நடனத்தில் சூர்யா ஏற்கனவே தன படங்களில் ஆடிய அதே அசைவுகளை மீள செய்தது போல இருந்தது இருப்பினும் அதையும் ரசிக்கும் படி செய்திருந்தார். தொடர்ந்து கதை ஆரம்பிக்கும் போதே என்னடா இது நம் பதிவர்கள் சொன்னது போல இல்லை பரவாயில்லாமல் தானே இருக்கு என நினைத்தேன். ஆனால் அதுவெல்லாம் வடிவேலு திரையில் வரும் வரை தான். இதில் குறிப்பிடத்தக்க விடயம் திரை அரங்கில் பெரிதாக கூட்டமும் இல்லை சூர்யாவின் அறிமுக காட்சி உட்பட எந்த ஒரு காட்சியிலும் விசில் அடிக்கவோ கைதட்டவோ இல்லை. ஆனால் வடிவேலுவின் அத்தனை காட்சிகளுக்கும் விசில் பறந்தது.

நயன்தாரா குடும்பம் அது ஒரு குடும்பமா அல்லது ஒரு ஏரியாவா என சந்தேகமே வந்தது. இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு பெரிய கூட்டுக்குடும்பம் இருக்குமா என்பது என் சந்தேகம். முரளி சரியான தேர்வு. அச்சுஅசலாக பொருந்தி இருக்கின்றார். அடுத்து சரோஜாதேவி. பெரிதாக இவர் படத்தை நான் பார்த்ததில்லை. அதனால் சொல்லவும் தெரியவில்லை ஆனால் ஆதவனில் நன்றாக தான் செய்திருக்கின்றார். அவருக்கும் நயனுக்கும் இடையில் நடக்கும் சண்டை போன்ற அந்த தேக்கோ பாடல் எனக்கு வானொலியில் கேட்க பிடிக்கவில்லை. திரையில் ஏனோ பிடித்துப்போனது.

ரமேஷ்கண்ணா ஏன் வந்தார் என தெரியவில்லை. ஒருவேளை இயக்குனர் இப்படி ஒரு லூசுத்தனமான கதையை கொடுத்த உனக்கு லூசாகவே பாத்திரம் தருகின்றேன் என கொடுத்தாரா தெரியவில்லை. அனுகாசனையும் உப்புசப்பாக பாவித்திருக்கின்றார்கள். இவர்களை விட வேறு யாரும் என் நினைவில் வரவில்லை. எல்லோரும் சொன்னது போல நயனின் முகத்தை குளோசப்பில் பார்க்க பயமா இருந்தது. ஆனால் கொஞ்சம் தள்ளி முழுதாக காட்டும் போது எல்லாம்...... நல்லா தான் இருந்தது. ஆனால் என்ன நடிக்க தான் வாய்ப்பில்லை. அதே நேரம் பச்சை பெரிதாக பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.


அடுத்து சூர்யாவா? வடிவேலுவா? ஹீரோ என்ற கேள்விக்கு ஒருமித்த பதில் வடிவேலுதான் என்று. அதற்கு இன்னொரு சான்று அண்மையில் படத்தின் சில காட்சிகளை தூக்கும் போது வடிவேலுவின் எந்த காட்சியிலும் கை வைக்காமல் சூர்யாவின் பல காட்சிகளை கத்தரித்து விட்டது . அதேநேரம் முதல் பாதி முழுவதும் படத்தை தொய்யவிடாமல் கொடுத்திருப்பது வடிவேலுதான். நகைச்சுவையில் எப்போதுன் தான் ஹீரோ தான் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்? ஒவ்வொரு காட்சியிலும் சிரித்து சிரித்து எனக்கு புரைக்கேறியதுதான் மிச்சம். முன் பாதி ஏனோ எனக்கு பிடித்தது. இடைவேளையில் நண்பனிடம் சொன்னேன். எனக்கு படம் பிடித்திருக்கின்றதென.

ஆனால் பின்னாலே இப்படி ஒரு வெடிகுண்டு காத்திருக்கும் என தெரியாமல். இடைவேளை முடிந்து மீண்டும் படம் ஆரம்பித்து ஓரிரு நிமிடங்களிலேயே அலுப்பு தட்ட ஆரம்பித்து விட்டது ஹீரோ வடிவேலுவை விட துணை நடிகர் சூர்யா அதிகம் திரையில் வந்தார். ஆனால் கதை நகரவே இல்லை. ஏற்கனவே பார்த்த காட்சிகளை மீண்டும் பார்க்கும் அலுப்பு. சாயாஜி சிண்டேயை எல்லோரும் புகழ்ந்தனர். எனக்கோ மனிதரை பார்க்கையில் அழகிய தமிழ் மகனில் அவர் செய்த அதே விளையாட்டை இங்கேயும் காட்டி உள்ளாரோ என தோன்றியது. அந்த டாக்டர் வில்லன் நன்றாக பொருந்தி இருக்கின்றார். ஆனால் நடிக்கவே இல்லை.

நிஜ ஹீரோ.

இரண்டாம் பாதியின் இழுவையில் இனிமை சேர்த்தது மூன்று பாடல்கள். மூன்றும் நல்ல பாடல்கள் ஆனால் அடுத்தடுத்து வந்து எரிச்சலை தந்தன. மூன்றும் முத்தாக இதயத்தை வருடியதை மறுக்கமுயாது. ஆனந்த பாபு இதுவரை நான் எழுதும் வரை நினைவு வரவில்லை. அதேபோல ஒரு பாத்திரம் தான் அவருக்கு படத்திலும். அதிலும் அந்த கிளைமாக்ஸ் காட்சி அப்பப்பா என்ன ஒரு உலகத்தரம். அதை விபரிக்க வார்த்தை இல்லை. சண்டைக்காட்சிகள் அப்படியே குருவியில் விஜய் செய்தது. குருவியில் ஆவது விமானத்தில் இருந்து கொண்டே விஜய் கீழே விழுவர். இங்கோ கீழே இருந்த சூர்யா பறக்கும் விமானத்தில் ஏறிவிடுவார். பல இடங்களில் சூர்யா தன முந்தைய படங்களின் நடிப்பை அப்படியே கொடுத்துள்ளார்.

யாரப்பா சொன்னது பத்துவயது சிறுவனைக் சூர்யா நடித்துள்ளார் என்று ஏதோ ஒரு உடலுக்கு சூர்யாவின் முகம் அதுவும் பொருந்தவில்லை என்பது பத்துவயது பிள்ளைக்கே தெரியும். தயவு செய்து ஏமாற்றும் படத்திலும் இப்படியான ஏமாற்றும் காட்சிகளை வைத்தால் உங்களை ரசிகர்கள் ஏமாற்றி விடுவர். ஆனால் இப்படியான ஒரு முயற்ச்சிக்கு தொழில்நுட்ப கலைஞருக்கே பாராட்டுக்கள் சேரும் உங்களுக்கல சூர்யா என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். கே.எஸ்.ஆர் மற்று ஹரிஷ் இந்த படத்தில் சொல்லிக்கொள்ளும் படி இல்லை நல்ல படங்களை தந்த இயக்குனரையும் பின்னணி இசையிலும் கலக்கிய ஹரிஷ் இருவரையும் இங்கே காணவில்லை. எனவே அவர்களை பற்றி நான் பேசவில்லை.


நடனம், மேனரிசம், நடிப்பு, வசன நடை என எதிலும் புதிய சூர்யா தெரியவில்லை. சூர்யா நீங்கள் விஜய் அஜித் போல ஒரு ஸ்டார் நடிகர் அல்ல. சாதாரண நடிகர். உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது வித்தியாசமான கதை ஓட்டம் உள்ள நடிப்புடன் கூடிய படங்களையே. அதேநேரம் நீங்கள் இதுவரை கொடுத்த ஹிட் எதுவும் சூர்யா என்னும் பெயருக்காக ஓடவில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். வடிவேல் என்னும் பெயருக்காக எத்தனையோ படங்கள் ஓடும் நிலையில் இன்னும் உங்கள் பெயருக்காக எந்த படமும் ஓடவில்லை. உங்கள் படத்தின் கதை அந்த காதாபாத்திரமாக நீங்கள் மாறும் திறமை (இதுதான் இப்பொது உலை வைத்ததுள்ளது.) இந்த இரண்டுமே உங்கள் வெற்றியின் காரணம். அதேநேரம் கணிசமான ஜோவின் ரசிகர்களும் இப்போ உங்கள் ரசிகர்களாகி விட்டனர். புது முக இயக்குனர்களோ அல்லது கமர்சியல் படம் தரும் இயக்குனர்களோ உங்களை காப்பாற்ற முடியாது. உங்கள் பலமும் பலவீனமுமான கதாபாத்திரமாக வாழும் உங்கள் வழக்கமான படங்களையே கொடுங்கள். அதைத்தான் உங்களிடம் எதிர்பார்க்கின்றார்கள். சிங்கம் அசிங்கமாகி உங்களை கீழே தள்ளி இன்னொரு ஆறாக்காமல் உடனடியாக நிங்கள் தை இட்டாலே ஒழிய உங்கள் தலை எழுத்தை மாற்ற முடியாமல் போய்விடும்.

இதுவே ஸ்டார் வலியூ உள்ள விஜய் அல்லது அஜித் ஏன் சிலவேளை விஷால் நடித்திருந்தால் கூட மெஹா ஹிட் ஆகி இருக்கும் இந்த திரைப்படம். படம் முடிந்து வெளியே வரும் போது எனக்கு படம் பிடித்திருந்தது. என்னதான் குறைகள் பல இருந்தாலும் ஒரு தடவை பார்க்க கூடிய திரைப்படமே இந்த ஆதவன்.

இவங்க கூட்டே தாங்க முடியல......


இனி இதுவேற இருக்கா.....?
Share:

18 கருத்துரைகள்:

manjoorraja said...

படம் சுமார் தான்
சூர்யா சுதாரித்துக்கொள்ளவேண்டும்.

பறக்கும் வேலைகளை நிறுத்திக்கொள்ளவேண்டும்.

முரளிகண்ணன் said...

நல்ல அலசலுடன் கூடிய விமர்சனம்.

Jawahar said...

//நயனின் முகத்தை குளோசப்பில் பார்க்க பயமா இருந்தது. ஆனால் கொஞ்சம் தள்ளி முழுதாக காட்டும் போது எல்லாம்...... நல்லா தான் இருந்தது.//

புரியுது.

http://kgjawarlal.wordpress.com

Subankan said...

Nice review. will u come to the 2nd bloggers meeting? will meet there.

thilak said...

enn sathishan neee tamilan thaneeee neenga vijay fann enrathala ippadi ellam eluthuvinkalooo villi adipadda kuruviya vida aadavan evalavoo paravai illa nanum vijay rasigan thaaaan neengal sariyana karuththa eluthunka illaddi intha webpa closs pannunga
nan vanthathila irunthu pakkiran oree vija paththi maddum thaan eluthiringa
ippadi web vashshirukkiravanka ellarayum paththi thaan podanum athu enna villu ,kuruvi ,ennn agen illaya kanthasuwamy thaaan illaya eniyavathu karuththa nalla parunka ippadi ellam sollurinkale neenga poiii oru padaththa eduththu parunka theriyum summa ithila irunthu konduu vera vela illama enakku theriyum anthaa udanja villukke naaalla kathayenru sonna allll thane neenga sirrrrrrrrrrrrr

ISR Selvakumar said...

லேட்டான, ஆதவன் திரைப்படத்தின் இரண்டாவது பாதிபோல நீளமான பதிவு.

யோ வொய்ஸ் (யோகா) said...

:))

King... said...

......படம்பாத்தா மட்டும் போதும்!

:(

King... said...

பாவமய்யா நீர்...தொலைக்காட்சி டொப்டென் மாதிரி இருக்கு.

:))

SShathiesh-சதீஷ். said...

மஞ்சூர் ராசா கூறியது...
படம் சுமார் தான்
சூர்யா சுதாரித்துக்கொள்ளவேண்டும்.

பறக்கும் வேலைகளை நிறுத்திக்கொள்ளவேண்டும்.

=>>
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

SShathiesh-சதீஷ். said...

முரளிகண்ணன் கூறியது...
நல்ல அலசலுடன் கூடிய விமர்சனம்.

=>>
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

SShathiesh-சதீஷ். said...

Jawarlal கூறியது...
//நயனின் முகத்தை குளோசப்பில் பார்க்க பயமா இருந்தது. ஆனால் கொஞ்சம் தள்ளி முழுதாக காட்டும் போது எல்லாம்...... நல்லா தான் இருந்தது.//

புரியுது.

=>>
புரிஞ்சா சரி

SShathiesh-சதீஷ். said...

Subankan கூறியது...
Nice review. will u come to the 2nd bloggers meeting? will meet there.

=>>
thanks

SShathiesh-சதீஷ். said...

thilak கூறியது...
enn sathishan neee tamilan thaneeee neenga vijay fann enrathala ippadi ellam eluthuvinkalooo villi adipadda kuruviya vida aadavan evalavoo paravai illa nanum vijay rasigan thaaaan neengal sariyana karuththa eluthunka illaddi intha webpa closs pannunga
nan vanthathila irunthu pakkiran oree vija paththi maddum thaan eluthiringa
ippadi web vashshirukkiravanka ellarayum paththi thaan podanum athu enna villu ,kuruvi ,ennn agen illaya kanthasuwamy thaaan illaya eniyavathu karuththa nalla parunka ippadi ellam sollurinkale neenga poiii oru padaththa eduththu parunka theriyum summa ithila irunthu konduu vera vela illama enakku theriyum anthaa udanja villukke naaalla kathayenru sonna allll thane neenga sirrrrrrrrrrrrr

=>>
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

SShathiesh-சதீஷ். said...

r.selvakkumar கூறியது...
லேட்டான, ஆதவன் திரைப்படத்தின் இரண்டாவது பாதிபோல நீளமான பதிவு.

=>>
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

SShathiesh-சதீஷ். said...

யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
:))

=>>
நன்றி

SShathiesh-சதீஷ். said...

King... கூறியது...
......படம்பாத்தா மட்டும் போதும்!

:(

=>>
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

SShathiesh-சதீஷ். said...

King... கூறியது...
பாவமய்யா நீர்...தொலைக்காட்சி டொப்டென் மாதிரி இருக்கு.

:))

=>>
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என்ன எண்ணி பாவப்பட்டதுக்கும் நன்றி.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive