உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Sunday, February 28, 2010

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றும் விஜய்.?



எம்.ஜி-ஆர்-சிவாஜி, ரஜினி-கமல் இந்த இணைக்கடுத்து எத்தனை பேர் வந்தாலும் பிரகாசித்தாலும் நாம் மறுக்கமுடியாமல் ஏற்கவேண்டிய இணை விஜய்-அஜித் இணைதான். இரண்டு திலகங்களும் ஒரு திரைப்படத்தில் மட்டும் இணைத்து நடித்தனர். அடுத்த இருவரும் பல படங்களில் நடித்தனர். திலகங்களை போல ஒரே படத்துடன் நிறுத்திவிட்டனர் தளபதியும் தலையும். இதற்கு காரணம் தான் எல்லோருக்கும் தெரியுமே. மீண்டும் இணையும் வாய்ப்பில்லை என இவர்கள் சொல்லியே விட்டனர். ஆனால் இப்போது மீண்டும் அதற்கு வாய்ப்பு ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை.(எல்லாம் ஆசைதான். இது நடக்காது என தெரியும்.)


இளையவர்களில் இப்போது முன்னணியில் இருக்கும் நால்வரும் ஒருவருடன் ஒருவர் இணைந்து நடிக்கதவர்கள் இல்லை. ஆரம்பத்தில் ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தில் விஜயுடன் அஜித் சேர்ந்து நடித்தார் அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது விஜயின் தந்தை என்பது மட்டுமில்லாமல் விஜயின் தாயார் தயாரித்த உணவை இருவரும் ஒரே தட்டில் உண்டகாலம் அது. அதன் பின் பார்த்தாலே பத்தும் நிலையில் இருந்தவர்கள் இப்போது தங்கள் மனைவியர் சமைத்த உணவுகளை (முன்பு தாயார்) பரிமாறிக்கொள்ளும் அளவு நட்பு இருக்கின்றது. படங்களிலும் ஒருவரை ஒருவர் சாடல் குறைந்துள்ளது. இந்த நிலையில் இவர்களின் இணைவு. அதற்க்கு பிரமாண்டமாக தயாரிக்கும் இயக்குனர், நல்ல கதை, அள்ளிக்கொட்டும் தயாரிப்பாளர் ஜாம்பவான் கூட்டணி நிச்சயம் அமையவேண்டும். அது இப்போது அமைந்திருப்பது இவர்களை இணைக்காதா என்ற என் ஆசையை தூண்டி விட்டுள்ளது.


3இடியட்ஸ் எவ்வளவு பிரமாண்டமான வெற்றியை பெற்ற படம் என்பது உங்களுக்கு தெரியும்.அதேபோல அப்படி திரைப்படங்கள் வராதா என்ற ஆவலையும் தமிழர்களுக்கு தூண்டிய படம். ஏன் வராது இதோ தருகின்றோம் என விஜய் அதன் உரிமையை வாங்கியதாக ஒரு பேச்சு. இல்லை இல்லை ஜெமினி வாங்கி அதில் விஜயை நடிக்க வைக்க முயற்ச்சிபதாக கேள்வி. எதுவாய் இருப்பினும் இந்த முயற்சிக்கு பலன் வெகு தொலைவில் இல்லை. காரணம் விஜய்க்கும் இமாலய வெற்றி ஒன்று தேவைப்படுகின்றது.



அப்படி இருக்கையில் அஜித்துடன் கூட்டு? பதில் கேள்விக்குறியாக இருந்தாலும் அஜித் இரண்டு கதாநாயகர்கள் உள்ள படங்களில் நடித்த இளம் நடிகர் என்பதை மறக்கக்கூடாது. விக்ரமுடன் உல்லாசம், பார்த்தீபனுடன் நீவருவாய் என,கார்த்திக்குடன் ஆனந்த பூங்காற்றே, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பிரசாந்துடன் கல்லூரி வாசல், ரஞ்சிதோடு மைனர் மாப்பிள்ளை, சத்யராஜோடு பகைவன்,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேனில் மம்முட்டி,அப்பாஸ், தீனாவில் சுரேஷ் கோபி,உன்னைக்கொடு என்னை தருவேனில் பார்த்தீபன்,சாம்ராட் அசோகாவில் ஷாருக்கான் என தொடர்ந்தவர் அண்மைக்காலமாக தான் கொஞ்சம் இந்த பாலிசியை விட்டிருக்கின்றார் சிலவேளை இந்த கூட்டணி அமைந்தாலும் ஆச்சரியமில்லை. நடக்குமா????


மூவரில் இருவர் ஏறக்குறைய உறுதியாகிவிடும் என நினைக்கின்றேன். அமீர்கான் வேடத்தில் விஜயும் மாதவன் நடித்த வேடத்தை தமிழிலும் அவரே செய்வார் என ஓரளவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டணி சாத்தியதுக்கான வாய்ப்புக்கள் உண்டு. காரணம் மாதவனுக்கு விஜய் மேல் அன்பும் அதே நேரம் மதிப்பும் அதிகம். ஒரு பெட்டியில் சொல்லி இருந்தார் விஜயை பார்க்க பொறாமையாக இருக்கின்றது. மூன்று மாதங்களுக்கு ஒரு படம் நடிக்கின்றார் பெரிதாக மினக்கெடுவது இல்லை. அவரின் பெயரை வைத்தே படத்தி ஓட்டி விடுகின்றார். அவரை போல ஆடத்தெரிந்தால் நான் தமிழ் நாட்டின் நம்பர் வன் நாயகனாகிவிடுவேன் என்று. விஜய் பக்கம் பார்த்தால் மாதவனால் பிரச்சனை இல்லை. என்ற ரீதியில் இவர்கள் கூட்டணியில் விரிசல் சாத்தியமில்லை


அடுத்து சூர்யா. இப்போது தனி ஆவர்த்தனம் நடத்தினாலும் விஜயுடன் நேருக்கு நேரில் அறிமுகமானவர். அதன் பின் பிரண்ட்ஸ் படத்தில் நடித்தது மட்டுமன்றி இருவரும் நல்ல நண்பர்கள் எனவே இந்த இணைக்கான வாய்ப்பும் அதிகம் இருக்கின்றது. சூர்யாவை பொறுத்தவரை நடிப்பில் பின்னிவிடுவார் ஆனால் விஜய் தரப்பில் சூர்யாவேண்டாம் என்ற கதை எழும் வாய்ப்பு குறைவு காரணம் நட்பு. சூர்யாவும் காதலே நிம்மதியில் முரளி, பெரியன்னாவில் விஜயகாந்த், நந்தாவில் ராஜ்கிரண், மௌனம் பேசியதேயில் அறிமுகனாயகன் நந்தா, பிதாமகன் விக்ரம்,ஆயுத எழுத்தில் மாதவன் சித்தார்த் என கூட்டு சேர்ந்து கலக்கியவர் விஜயுடன் ஜோடி சேர்ந்தால் அமர்க்களம் தான். அனேகமாக இந்த ஜோடியின் வாய்ப்பே அதிகம்.

மறுபக்கம் விக்ரமும் விஜயும் எவ்வளவு நெருக்கம் என்பதும் ஊரறிந்ததே. இருவரும் ஒன்றாக ஜாலியாக பல விழாக்களில் கலந்துகொண்டது மட்டுமில்லாமல் அரட்டைகளிலும் பங்குபற்றியவர்கள். அப்போதே சரியான வாய்ப்பமைந்தால் சேர்ந்து நடிக்க தயார் என சொன்னவர்கள் இப்போது வாய்ப்பமைந்திருக்கின்றது இணைவார்களா என எதிர்ப்பாக்கின்றேன்? விக்ரமை பொறுத்தவரை கூட யார் நடித்தாலும் பரவாயில்லை தூக்கிச் சாப்பிட்டு விடுவார்.
அவருக்கு ஒரு பலமான கதாபாத்திரம் போதும் வில்லனாக கூட நடிக்க தயார் என்றவர். இவரின் பயணத்தில் மீராவில் சரத்குமாருடனும், உல்லாசத்தில் அஜீத்துடனும்,கவுஸ் புல்லில் பார்த்தீபனோடும், விண்ணுக்கும் மண்ணுக்குமில் மீண்டும் சரத்துடனும், பிதாமகனாக சூர்யாவுடனும், பசுபதியுடன் மஜாவிலும், இப்போது ராவணாவில் பிரிதிவிராஜ்,பிரபு,கார்த்திக் என எல்லோரும் கலந்து கட்டி அடித்துக்கொண்டிருக்கும் விக்ரம் நடித்தாலும் ஆச்சரியமில்லை. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலைகளில் வாய்ப்பு குறைவு.

இந்த முன்னணிகளை தவிர்த்துவிட்டு பார்த்தலால், தனுஷ்,சிம்பு நடிக்கும் வாய்ப்பும் அறவே இல்லை என்பேன். சிலவேளைகளில் விஷால், ஆர்யா நடிப்பார் என்றால் அவர்களோ பாலாவிடம் அவர் சொன்னபடி ஆறுமாதத்தில் முடித்தல் ஆர்யாவுக்கு வாய்ப்பதிகம். காரணம் விஷாலை விஜய்க்கு பிடிக்கதேன்பது வேறு கதை. அடுத்து விஜய் புகழ் பாடும் பரத்,ஜீவா இவர்களுக்கும் வாய்ப்புண்டு. ஏன் ஜெயம் ரவி கூட நடிக்கும் வாய்ப்பு சூர்யாவுக்கு அடுத்து உண்டென நான் சொல்வேன்.ஆனால் இவர்களை தவிர்த்துவிட்டு இரண்டாம் நிலை நாயகர்களில் ஒருவர் நடித்தாலும் ஆச்சரியமில்லை.

இவர்களை விட மற்றவர்களுக்கு வாய்ப்புக்குறைவாக இருந்தாலும் இடையில் வேறு யாரும் முந்தும் வாய்ப்பும் உண்டு. இவை எல்லாவறையும் பார்த்தாயிற்று. விஜய் இரட்டைக் கதாநாயகர் உள்ள படங்களில் அதிகம் நடித்திருக்கின்றாரா என தேடினால். ஆச்சரியம். ஆரம்பகாலங்களில் விஜயகாந்துடன் செந்தூரப்பாண்டி, அஜித்துடன் ராஜாவின் பார்வையிலே, நடிகர் திலகத்துடன் ஒன்ஸ்மோர்,சூர்யாவுடன் நேருக்கு நேர்,பிரண்ட்ஸ் என சொற்ப படங்களில் மட்டுமே நடித்தவர் சிறப்புத் தோற்றத்தில் ரவிக்ரிஷ்ணாவுடன் சுக்ரன், நிதின் சத்யாவுடன் பந்தயம் போன்ற படங்களில் மட்டுமே நடித்திருக்கின்றார்.

இந்த நிலையில் விஜய்-மாதவனோடு இணைவதே பெரிய விடயமாக இருக்கையில் மூன்றாவதாக ஒரு பெரிய நடிகரும் சேர்ந்தால் தமிழிலும் 3இடியட்ஸ் பிச்சிக்கிட்டு ஓடும். முன்னணி நாயகர்களாக மாறிய பின் இளம் நாயகர்கள் இணைந்து நடித்து தமிழ் சினிமாவின் புதிய பாதையை திறந்த பெருமையும் விஜய்க்கு வரும். இது நடக்குமா? அல்லது காத்தோடு போகுமா பார்ப்போம்?


நடிகைகளை பொறுத்தவரை பஞ்சம் நிலவும் காரணத்தால் மீண்டும் வந்த அசின், அலுத்துப்போன திரிஷா, முத்திப்போன நயன்தாரா, புதிய அக்கா அனுஷ்கா, இடையழகி இலியானா, அசல் நாயகி சமீரா ரெட்டி, புன்னகை அரசி(எத்தனை நாளைக்கு தான் இளவரசி வயசு போகுதெல்லா) சினேகா, நம்ம பாவனா இவர்களில் நான் சொன்ன வரிசையில் வாய்ப்பை அல்லும் சாத்தியம் உண்டு.

நான் சொன்னதெல்லாம் இருக்கட்டும் இந்த அதிசயம், ஆச்சரியம்.....நடந்தால் விஜய்-மாதவனுடன் இணையும் அந்த மூன்றாவது ஹீரோ யார்? மாற்றங்களை உண்டாக்கப்போகும் அந்த நிஜ நாயகன் யாராக இருக்கும் உங்கள் ஆருடங்களையும் சொல்லுங்கள். நடந்தால் எல்லோருமாக சேர்ந்து சந்தோசப்படுவோம்.
Share:

Wednesday, February 24, 2010

சச்சின் மனிதனா?- ஒரு நியாயமான கேள்வி.


இன்று என் வாழ்வில் சாதித்த ஒரு திருப்தி ஆனால் நான் ஒன்றும் செய்யவில்லை நமக்கு பிடித்தவர்கள் சாதித்தால் அது நாம் சாதித்தது போல என்பதை உணர்கின்றேன். காலை பத்துமணிக்கு கண் விளித்ததே இன்று மாலை மூன்று மணிக்கு வானொலியில் இடம்பெறும் கற்றது கையளவு என்ற நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்க வேண்டும் என்ற ஹிஷாம் அண்ணாவின் தொலைபேசி அழைப்ப்பினூடு. மாலை மூன்று மணிக்கு கலையகத்துள் நான் நுழையும் போது எங்கள் தொலைக்காட்சி மக்கர் செய்துகொண்டிருந்தது. உடனடியாக தொழில் நுட்பவியலாளர்களின் உதவியை நாடினேன்.(மாற்றுவதாக இருந்தால் அவர்களின் பகுதியில் இருக்கும் தொலைக்காட்சியில் தான் முதலில் மாற்ற வேண்டும்.) வழக்கமா தாமதப்படுத்தும் நம்மவர்கள் இன்று உடனே சரி செய்து விட்டனர்.

பார்த்தேன் கொஞ்சம் கவலை நம்ம சேவாக் ஆட்டம் இழந்திருந்தார். அட இன்று தென் ஆபிரிக்கா நாளாக்கும் என நினைத்து ஒரு நிமிடம் சென்றிருக்காது சச்சின்.கார்த்திக் இரண்டுபேரின் துடுப்பாட்டத்தை பார்க்கும் போது ஒரு நம்பிக்கை வந்தது இந்தியா முன்னூறு அடிப்பது உறுதி என எண்ணினேன். மிக வேகமான சச்சின் அதிரடி ஆட்டத்தினால் நான் எழுந்து வெளியில் கூட செல்லவில்லை. அப்படியே கட்டுண்டு பார்ப்பது போல பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் மனதுக்குள் ஒரு பயம் நான் எப்போதெல்லாம் இந்தியா விளையாடும் போட்டியை பார்ப்போம் என இருந்து பார்த்தாலும் அன்று அவர்கள் சொதப்புவர். இன்றும் அந்த பயம் தொற்றிக்கொண்டது. இருப்பினும் சச்சினின் அந்த அதிரடியை மட்டுமாவது ரசிக்கலாமே என்ற ரீதியில் பார்த்துக்கொண்டிருந்தேன். முப்பத்தேழாவது பந்தை சந்தித்த சச்சின் தன் ஸ்டைலில் ஒரு நான்கு ஓட்டத்தை தட்டி விட்டு தன் அரைசதத்தை பூர்த்திசெய்தார். மறுமுனையில் கார்த்திக் சச்சினுக்கு நல்ல ஒத்துழைப்பு நல்கினார்.

மிக வேகமான புயல் வேக ஆட்டத்தில் இந்தியாவின் வேகம் அதிகரித்தது. களத்தடுப்பு புலிகள் என்னும் தென் ஆபிரிக்க அணியினர் களத்தடுப்பில் பல இடங்களில் சொதப்பினர். ஒருவாறு பதினைந்து ஓவரில் இந்தியா நூறு ஓட்டங்களை தொட்டது. நானும் சந்தோசமாக ஸ்கோர் விபரங்களை வானொலியில் வழங்கிக்கொண்டிருந்தேன். அதிகமான நான்கு ஓட்டங்கள் பெறப்பட்டுக்கொண்டே இருந்தன. சச்சின் எழுபதுகளை எட்டியவுடன் என்மனதோ சச்சினின் சதம் இன்று உறுதி என சொல்லிக்கொண்டது. அதேநேரம் ஒரு சில முட்டாள்கள் யோசிப்பது போல சச்சின் சதம் போட்டால் இந்தியா தோற்றுவிடுமோ என அஞ்சிக்கொண்டும் இருந்தேன். வழக்கமான தொன்னூறுகளில் மெதுவாக ஆடுவது போல எல்லாம் இன்று சச்சினின் தயக்கம் வெளிப்படவில்லை. சரவெடி தொடர்ந்து கொண்டே இருந்தது. தொன்னூறில் போயடுவாரோ என்ற பயம் என்னுள். எந்த தயக்கமும் இன்றி சச்சின் ஒவ்வொரு ஓட்டங்களாக சேர்த்து தன் 46வது சதத்தை பூர்த்து செய்தார். அப்போது அதிக சதம் பெற்றவர்கள் வரிசையை தொலைக்காட்சியில் காட்டியபோது அட நெருங்க முடியுமா நம்ம தலைவரை என்ற பெருமிதம் என்னுள்.

சதம் கடந்த பின் சச்சினின் வேகம் இன்னும் அதிகரித்தது. எனக்கும் ஒரே குஷி.அடடா இன்றைக்கு நம்மள இந்த நேரம் வேலை செய்யப்போட்டிட்டான்களே அதுவும் மேட்ச் பார்த்து ஸ்கோர் சொல்வது நம்ம வேலை. எப்பூடி?? ஆட்டம் தொடர கார்த்திக் போக பதான் வந்து தன் வேலையை செய்துவிட்டு போக வந்தார் தலைவர். ஒரு பக்கம் சச்சின் வெளுத்துக்கொண்டிருக்க மறுபுறம் தோனியின் தாண்டவம் நடந்துகொண்டிருந்தது. ஆனால் தோனியின் தாண்டவம் இன்று எரிச்சலை தான் ஏற்படுத்தியது. ஒவ்வொரு பந்தையும் சச்சின் அடித்து நொறுக்கமாட்டாரா என்ற அவாவை தந்தது. பல பதிவர்கள் இந்த சாடலை சொல்லி இருந்தனர். ஆனால் கடைசி ஓவரில் தான் நான் இதை நினைத்து பெருமைபட்டேன். தோனியின் தாண்டவத்துக்கு வழிவிட்டதே சச்சின் என தோன்றியது. காரணம் அணிக்கு ஓட்ட வேகம் தேவை அதே போல சச்சினும் சாதனை படைக்க வேண்டும் என்றால் அப்படி. ஒருவேளை அணியின் ஓட்ட வேகத்தை அதிகரிக்கப்போய் சச்சின் பொல்லு போய்விட்டால் அதை தான் டோனி செய்ய சச்சின் மறுமுனையில் தன் பங்கை செய்துகொண்டிருக்கின்றார். இறுதிப்பந்துக்கு முதல் பந்தில் அடித்து விட்டு டோனி ஓட முற்பட சச்சின் தடுத்து விடுவார். அப்போதே உணர்ந்தேன் சச்சின் தோனியின் அடிகளை வரவேற்றுக்கொண்டுதான் தன் சாதனையை நெருங்கினார் என. அதேபோல சாதனைக்காக ஆடவில்லை என்பதையும் இதன் மூலம் நிரூபித்துவிட்டார்.

சச்சின் நூற்றியைம்பது தாண்டிய பின் தன் முன்னைய அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை கடக்கமாட்டார என சிந்தித்தேன். இதற்கிடையில் மாலை ஐந்து மணியுடன் என் நிகழ்ச்சி முடிய அடுத்த நிகழ்ச்சிக்காக சந்துரு அண்ணாவிடம் கலையகத்தை ஒப்படைத்து விட்டு சென்றுவிட்டேன். இடையில் விமல் அண்ணாவிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. டேய் சச்சின் நூற்றி எழுபத்தொன்பது ரன்னடா இன்று எட்டுமணிக்கு விளையாட்டு திடல் நீதான் நான் சொல்றதையும் கணக்கில் எடு என்று சச்சின் இன்று கடந்த இன்னும் இரண்டு சாதனைகளை பகிர்ந்து கொண்டார்.(அவர் என்னுடன் பேசிய நேரம் மாலை ஐந்து முப்பது இருக்கும்.) இன்று சச்சின் தென் ஆபிரிக்காவிற்கு எதிராக ரிக்கி பாண்டிங் வைத்திருந்த மொத்த அதிகூடிய ஓட்டங்கள் என்ற சாதனையை முந்தி உள்ளார். அதேபோல தென் ஆபிரிக்காவிற்கு எதிராக ஒரு தனிநபர் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் என சொல்லிவிட்டு வைத்துவிட்டார். மீண்டும் சற்று நேரத்தில் இன்னொரு அழைப்பு சச்சின் உலகசாதனை படைப்பார் போல தெரிகின்றது எனவே சச்சின் ஸ்கோரை கொஞ்சம் அதிகம் சொல்லும்படி சந்துரு அண்ணாவிடம் சொல்ல நம் அலுவகத்தில் அந்த பரபரப்பை உண்டாக்கினோம். எல்லோரும் ஸ்கோர் பார்ப்பதில் குறியாக இருக்க எனக்கும் செய்தி வாசிப்பதற்கான நேரம் வந்தது. இதற்கிடையில் தன் முன்னைய அதிகூடிய ஓட்டத்தையு சனத்தின் சாதனையையும் சச்சின் கடக்க எங்கள் எல்லோர் மனதிலும் அடுத்தது சாத்தியமா? என்ற கேள்வி. செய்தி ஆரம்பிக்க நான்கு நிமிடங்கள் இருக்கவே நான் கலையகள் சென்றுவிட்டேன் சச்சின் அந்த சாதனையை முறியடிப்பதை பார்ப்பாதர்க்காக.

அங்கெ சந்துரு அண்ணா எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு உடனடி ஸ்கோர் கொடுத்துக்கொண்டிருந்தார். அந்த கணம் சச்சின் நீண்டகாலமாக சயீத் அன்வர் வசமும் அதன் பின் கவின்றியினால் சமப்படுத்தப்பட்ட அந்த சாதனையை கடக்க எங்கள் உடலும் ஒருக்கம் பூரித்தது. சற்று நேரத்தில் என்னிடம் ஒப்படைத்து விட்டு செல்ல ஆறு மணிக்கு முன் அடிக்கமாட்டார என நான் ஏங்கினேன். இதற்கககவே எங்கள் செய்திப்பிரிவை சேர்ந்தவர்கள் விளையாட்டு செய்தியடிப்பதை தாமதமாக செய்யும் படி கேட்டவன் நான். ஆனால் சச்சின் நூற்று தொண்ணூற்றாறு. செய்தியும் ஆரம்பமானது. என் ஒரு கண் செய்தித்தாளில் இன்னொரு கண் சச்சின் அடிக்கமாட்டார என அடிக்கடி தொலைக்காட்சியை பார்த்தபடி. இந்த நிலையில் விளையாட்டு செய்தியுடன் செய்திப்பிரிவை சேர்ந்த அருண் உள்ளே வந்து சச்சின் எப்போது இருநூறு என்னும் புதிய கணக்கை ஆரம்பிப்பார் என காத்திருக்க இந்த தோனிப்பயல் விடவே இல்லை. தன் பங்குக்கு அடித்து துவைத்துக்கொண்டிருந்தார். என்ன செய்வது நானும் செய்தியை வாசித்து விட்டு எங்கள் நிலைய குறியிசையை ஒலிபரப்பிக்கொண்டிருக்கும் அந்த தருணத்தில் (உலகெங்கும் வெற்றி என்ற வரி அதில் வந்த நேரம். என்ன பொருத்தம்) சச்சின் அந்த சாத்தியமற்ற செயலை செய்து முடித்தார், இது சாதனையா. வழக்கம் போல கடவுளுக்கு நன்றி சொன்னது இந்த கிரிக்கெட்டின் கடவுள் இப்போது சொல்லுங்கள் இந்த சாதனையை செய்த சச்சின் மனிதனா அல்லது கடவுளா?

சேவாக் தன் வாயாலேயே இந்த ஆசையை வெளியில் சொல்லி இருந்தாலும் அவர் குரு அதை முதலில் செய்ய அதை ரசித்து கைதட்டியது இந்த சீடன். உண்மையில் இந்த போட்டியை இன்று பார்த்த அத்தனை பேரும் சரித்திரத்தில் இடம்பெறுவர். சரித்திரம் ஆரம்பித்திருக்கின்றது. புதுப்பயணம் தொடங்கி இருக்கின்றது. இந்த பாதையில் பலர் பயணிக்கலாம் ஆனால் இப்போது சாத்தியமில்லை. அப்படி சாத்தியமானாலும் இந்த சாதனை நாயகனின் பின்னால் மற்றவர் வருவர். சாதனையின் பின் கடவுளின் பின் அவர் பக்தர்கள் இருப்பது. சாதனைக்கு சாதனை சொந்தமாகாமல் போய் இருந்தால் தான் தப்பு. சேர வேண்டியவரிடம் சேர வேண்டியது சேர்ந்திருக்கின்றது. அப்புறம் என்ன நானும் விளையாட்டு திடலில் சச்சின் புராணம் பாடிவிட்டேன்.

சச்சின் உங்களுக்கு ஒன்று சொல்லணும் நான் இலங்கையில் இருந்து இதை எழுதி இருக்கேன், நான் இந்தியன் இல்லை ஆனால் நாடு மொழி கடந்து உங்கள் ரசிகன். ஏதோ என்வீட்டு கொண்டாட்டமாக கொண்டாடுகின்றேன். நீங்கள் எங்கள் வீட்டுப்பிள்ளை என்பது தான் நீங்கள் சாதித்த சாதனைகளில் பெரியது. வாழ்த்துக்கள் தலைவா.
Share:

200 ஓட்டங்களை தொட்டார் சச்சின்.



இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆபிரிக்காவுக்கு எதிராக இன்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் இருநூறு ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று புதிய சரித்திரம் படைத்துள்ளார். கிரிக்கெட் ரசிகன் என்ற ரீதியில் கிரிக்கெட்டின் கடவுள் சச்சினுக்கு என் வாழ்த்துக்கள்.

மிக விரைவில் சச்சின் பற்றிய என் பதிவில் முழுமையான விபரங்களை பகிர்ந்து கொள்கின்றேன்.
Share:

Tuesday, February 23, 2010

தல அஜித் விழாக்களில் தலை காட்டாதது ஏன்?



தல அஜித்தான் இப்போ எல்லா இடமும் டாபிக். நம்ம பதிவுகளில் மட்டும் விட்டிடலாமா. ஏதோ தொடர்ந்து நம் பதிவுகளும் தலைய பற்றியே வருகின்றன. இப்படியே போனால் நானும் தல ரசிகர் ஆகிடுவன் போல.(தளபதி கவலைப்படாதிங்க உங்களை விட்டிட்டு போக மாட்டம் சும்மா இப்படி சொல்வோம்.) சரி அத விடுவோம் தல ஏன் விழாக்களில் தல காடுவதில்லை? இன்று நான் இன்னொருவரின் பதிவில் இதை படித்தேன்.


சரி அவர் சொன்ன காரணம் 1995ஆம் ஆண்டு ஒரு மேடை நிகழ்ச்சியில்
மீனாவுடன் அஜித் நடனமாடிக்கொண்டிருக்கும் போது அங்கே வந்த மீனாவின் அம்மா ஆத்திரபட்டு அஜித்தை அவமானப்படுத்தி மேடையை விட்டு இறக்கியதாகவும் அந்த அவமானம் தாங்காமல் தான் இன்றுவரை அஜித் மேடை நிகழ்ச்சிகளை தவிர்த்து வருவதாகவும் சொல்லி இருந்தார். இதில் எந்தளவு உண்மை என தெரியவில்லை. சிலவேளை அவர் சொல்வதும் உண்மையாக இருக்கலாம் காரணம் ஆசை என்ற ஒரு படம் மட்டுமே அஜித்துக்கு ஓரளவு பெயர் சொல்லும் படியான படமாக இருந்தது அதுவரை.
இப்படி நடந்ததென வைத்துக்கொண்டால் அதன் பின்னர் ஆனந்த பூங்காற்றே படத்தில் இருவரும் ஜோடி போட்டனரே எப்படி.வாலி வந்து வசூல் மழைபொழிந்ததனால் மீனா வேண்டுமென்றால் அஜித்துடன் நடிக்க ஒத்துக்கொண்டிருக்கலாம் ஏன் மீனாவின் அம்மாவே அந்த வாய்ப்பை வாங்கிக்கொடுத்திருக்கலாம். ஆனால் தன் ஆரம்ப படத்திலேயே இயக்குனருடன் நியாயத்துக்காக வாதிட்ட அஜித் நிச்சயமாக சேர்ந்திருக்க வாய்ப்பில்லை. இது எப்படி சாத்திய மாயிற்று.

அதை தான் விடுவோம் அதன் பின் சிட்டிசன்,வில்லன் என அஜித் அடுத்த தலைமுறையின் முன்னணி நாயகன் ஆனா பிறகும் இவர்கள் ஜோடி கலக்கி இருக்கின்றதே. இதை எப்படி எடுத்துக்கொள்வது. எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. இது இப்படித்தான் என சரியாக சொல்ல எனக்கு இந்த விடயம் பற்றி எதுவும் தெரியாது. எனவே நேற்று அலுவலகம் சென்றவுடன் விமல் அண்ணா கண்ணில் பட்டார் அவருக்கும் எனக்கும் மூஞ்சிப்புத்தகத்தில் இப்போது அஜித் பற்றிய ஒரு சண்டை போகிறது. உடனே அவரிடமே இதை பற்றி கேட்டேன்.

காரணம் அவர் அஜித்பற்றி ஈடுபாடுள்ளவர். அவர் சொன்னார் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று. ஆனால் உடனே நம் பிர்னாஸ் நாம் பாவித்த பேப்பர்கள் போடும் பெட்டியை கிளறத்தொடன்கினார் ஏன் என கேட்க இல்லை இல்லை இந்த விஷயம் தானும் பார்த்த ஒன்று என சொன்னார். அதன் பின் ரஜீவ் அதை உண்மை என்று சொன்னார். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்லி இருக்கின்றனர் ஆனால் உண்மை என்ன இப்படி ஏதாவது நடந்ததா? உண்மையில் அஜித் அவமானப்படுத்தப்பட்டாரா? தல விழாக்களில் தல காட்டாததற்கு காரணம் இதுதானா? எனக்கு தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
Share:

Monday, February 22, 2010

அஜித் விஜயிடம் சொன்ன ரகசியம்-குகநாதனிடம் மல்லுக்கட்டிய விஜய்.


மீண்டும் ஒரு அஜித் பதிவை எழுதிக்கொண்டிருந்த இடையில் இன்னொரு அஜித் பதிவு. எனக்கும் அஜித்துக்கும் இடையில் இப்போ அப்பிடி ஒரு பொருத்தம் போல இருக்கு. சரி நேரே விசயத்துக்கே வாறன். ஏற்கனவே ஒரு பதிவை விஜய்-அஜித் நட்பு பற்றியும் விஜய் அஜித்திடம் பேசியது பற்றியும் இட்டிருந்தேன். அதை படிக்க இங்கே அழுத்துங்கள்.

அந்த பதிவே இவர்கள் இரண்டுபேருக்கும் இடையிலான புரிந்துணர்வை காட்டி இருக்க. இப்போது இன்னொரு செய்தி வெளிவந்திருக்கின்றது. அஜித் பிரச்சனையில் அஜித்துக்கு ஆதரவாக நின்று கைதட்டியதும் பேசியதும் சூப்பர் ஸ்டார். அவருக்கே பெப்சி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துவிட அவர் பக்கமும் சத்தம் இல்லை. என்ன நடந்ததோ என தெரியாமல் நின்ற நேரம் இதோ நான் இருக்கேன் நீ என் நண்பன்டா உன்னை விட்டுவேனா என வந்திருக்கின்றார் நம் தளபதி. தலைக்காக தன் தலைய நுழைத்து சமரசம் செய்ய முற்பட்டிருக்கின்றார் விஜய்.

தொழில் இருவரும் எதிரிகள் இவர்கள் சேரமாட்டார்கள். என எண்ணியவர்கள் மூஞ்சியில் கரி பூசி இருக்கின்றார் விஜய். இதில் பலருக்கு தெரியாத இன்னொரு விசயமும் வெளிவந்திருக்கின்றது. இருவரும் திரையில் மோதிக்கொண்டாலும்(அண்மையில் குறைவு.) கிறிஸ்மஸ்,புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒன்றாக ஒரே இடத்தில் கொண்டாடி வருவதாக ஒரு செய்தி கசிந்துள்ளது. (என்ன அதிசயம் இது.)

அப்படிப்பட்ட தன் உயிர் நண்பனுக்கு பிரச்சனை என்ற போது பார்த்துக்கொண்டிருப்பார தளபதி. உடனடியாக் வி.சி.குகநாதனை தொடர்புகொண்ட விஜய்"அஜித் ஒரு திறந்த புத்தகம் மாதிரி அவர் மனதில் ஒன்றுமில்லை. நினைப்பதை உடனே கொட்டிவிடுவார். அதை பெரிது படுத்தவேண்டாம். வீணாக அவரின் மன உளைச்சலை அதிகரிக்க வேண்டாம்" என கேட்டிருக்கின்றார்.

இதை விட இன்னொரு செய்தி திடுக்கிட வைத்திருக்கின்றது. கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் சந்தித்த இருவரும் பேசியபோது இன்னும் சில ஆண்டுகளில் நடிப்பை கைவிட இருப்பதாக அஜித் விஜயிடம் தெரிவித்திருக்கின்றார். அதனை குறிப்பிட்டு பேசிய விஜய்,அவர் இந்த துறையில் இருக்கும் வரை அவரை கஷ்டப்படுத்தவேண்டாம் என கேட்டுக்கொண்டாராம். ஆனால் விஜயின் பேச்சையும் கேட்டு கோபமடைந்த குகநாதன் அவரை யார் நடிக்க சொன்னார் விருப்பமில்லாவிட்டால் போகட்டும் என சொன்னாராம்.

இந்த குகநாதன் போன்றோர் திருந்தமாட்டார். தேவையான நேரத்தில் தேவையானதை செய்யாமல் இப்படி கண்கெட்ட பிறகு நமஸ்காரம் செய்கின்றனர். அஜித் தேவையான இடத்தில் சொல்ல வேண்டியவரிடம் தான் இதை சொல்லி இருக்கின்றார். அனால் அதன் பின் நடக்கும் பிரச்சனைகளை அவர் பார்ஹ்த்துக்கொண்டிருப்பதே கொடுமையிலும் கொடுமை.

ரசிக சிகாமணிகளே, விஜயை ரசித்து அஜித்தை கேவலப்படுத்துவோரே, தலைய கொண்டாடி தளபதிய இழிச்சவாயனாக்குபவர்களே இவர்கள் இரண்டுபேருக்கும் ரசிகனில்லாமல் இவர்களை பற்றி தெரியாமல் இருந்து உசுப்பி விடும் நல்லுள்ளங்களே இப்போதாவது புரிகின்றதா இந்த இருவரின் நட்பு. உங்கள் நட்பு வளரட்டும். தல இனி என்ன கவலை உன் எதிரி என எல்லோரும் நினைத்தவர் உன்னுடன் உற்ற தோழனாக உண்மையில் நமக்கு சந்தோசம்.
Share:

Sunday, February 21, 2010

நடிப்பை விட்டு விலக தயார்-அஜித் பேட்டி



எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்க மாட்டேன். நான் தவறாக எதுவும் பேசவில்லை. தேவைப்பட்டால் நடிப்புத் தொழிலைவிட்டே விலகுகிறேன்... மீண்டும் ரேஸுக்குப் போகிறேன்," என்று அதிரடியாக கூறி விட்டார் தல.

முதல்வர் கருணாநிதியை அஜீத் சந்திப்பதற்கு முன்பு டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு ஒரு சிறப்புப் பேட்டி அளித்திருந்தார்.அந்த பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்."முதல்வருக்கு நடந்த விழா மேடையில் நான் பேசியது எழுதித் தயாரிக்கப்பட்ட பேச்சல்ல. அந்த நேரத்தில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசினேன். என் இதயத்தின் ஆழத்திலிருந்து வந்த பேச்சு அது. அதில் எந்தத் தவறும் இல்லை. உண்மைகளைப் பேசினேன்... என்ன நடந்ததோ, அதைத்தான் சொன்னேன்.வெளிப்படையாக சொல்கின்றார் தல.

நடிகர்களை, விளையாட்டு வீரர்களை உருவாக்கியது சமூகம்தானே… அவர்களுக்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா?

நடிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் மட்டும்தான் சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும் என்பதே விவாதத்துக்குரிய ஒன்று. ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது. ஆனால் அரசியல் என்று வரும்போது, நடிகர்கள் விசேஷ கவனம் பெறுகிறார்கள். பல சமையல்காரர்கள் சேர்ந்து விருந்தைக் கெடுத்த மாதிரி ஆகிவிடுகிறது. என்னைப் பொறுத்தவரை, அரசியல் விவகாரத்தை அரசியல்வாதிகளும் அதற்கான கட்சிகளும் பார்த்துக் கொள்ளட்டும். எனக்கு இந்த அரசியல் முறை மீது நம்பிக்கை உண்டு. நடிகர்களுடன் அரசியல் தலைவர்கள் சுமுகமாக இருந்தாலே போதும்.

ஏன் இங்கு ஒரு நடிகரால் சுதந்திரமாக கருத்து சொல்ல முடிவதில்லை?

இங்கே எல்லா பிரச்சினைகளைப் பற்றி பேசவும், தீர்க்கவும் நடிகர்கள் வேண்டும் என்கிறது ஒரு கூட்டம். அதேநேரம் நடிகனுக்கு சமூகப் பிரச்சினைகளில் என்ன வேலை... அவன் வேலையை மட்டும் பார்க்கட்டும் என்று கேட்கவும் ஒரு கூட்டம் இருக்கிறது. இதற்கு இடையில் மாட்டிக் கொண்டு விழிப்பது நாங்கள்தான்.

யாராவது ஒரு நடிகர் பெரிய முயற்சி செய்து அரசியலுக்குள் நுழைந்தால் உடனே அவரைத் தடுக்கப் பார்க்கிறார்கள், (
தளபதியை சொல்கின்றாரோ.)தாறுமாறாகத் திட்டுகிறார்கள். ஒரு நடிகன் வாழும் மாநிலத்தின் அரசியலில் பங்கெடுக்கக் கூடாது என்று சொல்பவர்களுக்கு, அவனை சமூகப் பிரச்சினைகளில் ஈடுபட வேண்டும் என்று சொல்லவும் எந்த உரிமையும் இல்லை. இதில் அவனது பிறப்பு, இனம் போன்றவை குறித்த கேள்வி எதற்கு வருகிறது? ஒரு நடிகர் பல லட்சம் மக்கள் மனதில் இடம் பிடித்த பிறகும், அந்த மக்கள் அவனது பேச்சைக் கேட்டு பின்னால் வரத் தயாராக உள்ள நிலையிலும் அரசியலுக்கு வரக்கூடாது என்று சிலர் எதிர்ப்பு காட்டுவது என்ன நியாயம்?

பிறப்பு, இனம்தான் பிரச்சினையாக்கப்படுகிறதா இங்கே?

அது இங்கு மட்டுமல்ல... எல்லா இடத்திலும்தான். ஒரு சினிமா ரசிகன் டிக்கெட் வாங்கி படம் பார்க்கச் செல்லும்போது அல்லது கிரிக்கெட் பார்க்க செல்லும்போது, தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பார்க்கும் ரசிகன் என்ன ஜாதி, மதம், நிறம், இனம் என்றெல்லாம் பார்ப்பதில்லை. அதுதான் கலையின் சிறப்பு. அந்தக் கலைதான் இந்த மொத்த தேசத்தையும் ஒரு கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஆனால் திரைக்கு வெளியே அதே கலைக்கு ஜாதி, இன வர்ணம் பூசுகிறார்கள். எந்த நடிகரின் ரசிகர் கூட்டத்தை எடுத்துக் கொண்டாலும், அவர்கள் குறிப்பிட்ட இனம், மொழிக்கு மட்டும் சொந்தக்காரராக இருக்க மாட்டார்கள். விளையாட்டு, சினிமா போன்ற கலையால் மட்டுமே ஒன்றுபட்டிருப்பதைப் பார்க்கலாம்.

நக்சல் இயக்கத்தவராக, மனித வெடிகுண்டு போன்ற பாத்திரங்களில் நடிப்பீர்களா?

கடந்த சில நாட்களாக நடப்பதைப் பார்க்கும்போது, எனக்கு மீண்டும் காமிராவுக்கு முன்னால் நிற்கவே பிடிக்கவில்லை. ஒரு நடிகனுக்கு இங்கே படைப்புச் சுதந்திரமே இல்லை. ஒரு நடிகன் திரையில் புகைப்பிடிப்பது போன்ற காட்சியில் நடித்தால் அது இளம் தலைமுறையை பாதிக்கும் என்கிறார்கள். ஆனால் அதே நடிகன் அரசியலுக்குள் நுழைந்து இளம் தலைமுறையை தன்வசப்படுத்த முயற்சித்தால், 'நடிகனுக்கு இங்கே என்ன வேலை?' என்கிறார்கள்.

ஆனால் நீங்கள் 50 வது படம் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளீர்களே…

உண்மைதான். தயாநிதி அழகிரி தயாரிக்கும் படம் இது. கண்டிப்பாக பண்ணணும்தான். ஆனால், எப்போது எனது பிறப்பும், இனம் குறித்த கேள்விகளும் இங்கே எழுந்துவிட்டதோ, இனி நடிக்கணுமா என்றுதான் தோன்றுகிறது. மீண்டும் எனது பார்முலா 2 கார் பந்தயங்களில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தரவே நான் விரும்புகிறேன்.

பார்முலா 2 பிரிவில் எனது நுழைவு அனுமதிக்கப்பட்ட ஒன்று. ஐரோப்பாவில் ஏப்ரல் - அக்டோபர் மாதங்களில் மோட்டார் ரேஸ் நடத்தும் 10 நாடுகளில் 8-ல் என்னால் நிச்சயம் பங்கேற்க முடியும்.

நாட்டின் 10 முன்னணி ரேஸ் வீரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதில் இந்த மாநிலம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக் இருவரும் இப்போது பார்முலா 1 பந்தயங்களில் பங்கேற்பவர்கள். அர்மான் இப்ராகிம், பர்திவா சுரேஷ்வரன், நான், அஸ்வின் சுந்தர் போன்றவர்கள் வேறு பிரிவுகளில் பங்கேற்கும் தகுதி நிலையை அடைந்தவர்கள். பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளோம்.

பைக் ரேஸிலும் நிறைய வீரர்கள் உள்ளார்கள் இங்கு. இதற்கு நல்ல ஸ்பான்ஸர்ஷிப்பும் கிடைக்கிறது. எதிர்காலத்தில் வெளிநாடுகளில் உள்ளது போல, ஸ்ட்ரீட் மோட்டார் ஸ்போர்ட் போட்டிகளை நடத்தவும் திட்டமிருக்கிறது..."

இவ்வாறு தல கூறினார்.
இம்புட்டு நாளா நான் வெறுத்த ஒருவர் மேல் இப்போது என்னை அறியாமல் ஒரு அன்பு. தல நீங்கள் பார்க்காத பிரச்சனைகளா தோல்விகளா? இந்தக்கலக்கம் எதற்கு. ஆனால் மன்னிப்பு கேட்டால் தான் நடிக்கலாம் என்ற போது உங்கள் இந்த பதில் சூப்பர். தன மானத்தை இழந்து வாழும் நிலை யாருக்கும் வரக்கூடாது. நீங்கள் இப்போது சொன்ன இந்த வசனத்தை கூட திரிவுபடுத்தி மன்னிப்பு கேட்கமாட்டேன் என தல இறுமாப்பு என்ற செய்தி வந்தாலும் ஆச்சரியமில்லை. நீங்கள் இந்த சினிமாவை விட்டு போனால் இழப்பு உங்களுக்கல்ல சினிமாவுக்குத்தான். அப்போது தெரியும் தலையின் அருமை.

இது ஏனோ உங்களுக்கு கஷ்டகாலம் உங்களை இன்னும் பண்படுத்த இன்னொரு வாய்ப்பு. உங்கள் கூட இப்போது இரண்டு பெரிய நடிகர்கள். ரஜினியின் ஆலோசனை இப்போது நிச்சயம் உங்களுக்கு உதவும் காரணம் அவரும் அடிபட்டவர். அடுத்தவர் உங்களில் இப்போதைய நெருங்கிய நண்பன் விஜய். அவரின் ஆறுதலு, அருகாமையும் நிச்சயம் உங்களை ஆறுதல் படுத்தியிருக்கும்.
ஒரு விஜய் ரசிகனாக சொல்கின்றேன் நீ தமிழனாக பிறக்காவிட்டாலும் தப்பு செய்யவில்லை அதனால் மன்னிப்பு கேட்கமாட்டேன் என சொன்னபோதே முழுத் தமிழனாகிவிட்டாய் . தமிழன் தன்மானம் இழக்கமாட்டான். போதும் இனியாவது இனம் மதம் களைந்து கலையை கலையாகவும் மைதரை மனிதராகவும் மதிப்போம். அஜித் பிறப்பில் தமிழனாக இல்லாவிட்டாலும் மனிதன் தானே. அந்த மனிதனை நினைத்து பெருமைப்படுவோம். அவர் செய்த கடந்த கால தவறை மன்னிப்போம். தமிழன் தமிழன் என சொல்லும் நம் பண்பு அதுதானே. இல்லாவிட்டால் நாம் தமிழரா?
Share:

யாரப்பா சொன்னா விஜயும் அஜித்தும் எதிரியா?



பாசத்தலைவரின் பாராட்டு விழாவில் அஜித் பேசினார் கை அரிச்சுதோ தெரியா ரஜினி கையைதட்டினார் அப்புறம் ஜாக்குவார் தங்கம் கொஞ்சம் உரசிப்பார்க்க அப்புறம் தீனா படத்தில் வரும் அந்த கலவரக்காட்சிபோல இப்போது சூடேறிப் போய் இருக்கு கள நிலவரம்.

இந்த நிலையில் சிலர் விஜய் தான் இதற்க்கு எல்லாம் காரணம் என்ற ரீதியில் கருத்துக்களை முன் வைத்தனர். ஆறுதலாக ஒன்றும் பேசவில்லையே என்று ஆதங்கப்பட்டனர். அட போட்டியாளர்கள் தானே எதிரிகள் தானே என்ற கணக்கில் சிலர் தரப்பு எண்ணெய் ஊற்ற அடபோங்கப்ப அதெல்லாம் ஒரு காலம் இப்போ நாங்கள் அப்படி இல்லை. யாரப்பாத்து என்ன சொல்றிங்க என்ற ரீதியில் இருக்கின்றது விஜயின் நடவடிக்கை.

தலையின் தலைக்கு வந்த ஆப்புகளால் நொந்திருந்தவருக்கு ரஜினியை தொடர்ந்து இப்போது அவரின் நண்பரும் இன்னொரு முக்கிய நடிகருமான ஆறுதல் கிடைத்திருக்கின்றது. பிரச்சனை பற்றி விசாரித்து ஆதரவாக பேசிய விஜய். கவலைப்படாதிங்க தல எல்லாம் சரியாகிடும் என்றாராம். அட நம்ப முடியலையே தல தளபதி சேர்ந்திட்டாங்க இனி என்ன நடக்கப்போகிறது.

இன்னொரு விஷயம் தல, விஜய் சொல்றத கேளுங்க ஏற்கனவே ராகுல் பிரச்சனையில் மாட்டி அப்புறம் பாசக்கார பயலுகளிட்ட மாட்டி இப்போதான் வெளிய வந்தார். இப்போ நீங்கள் அதனால் அனுபவஸ்தர் சொன்னால் கேட்கணும் சரியா?
Share:

Saturday, February 20, 2010

ESPN-Cricinfo விருதுகள்-படங்களுடன் ஒரு பார்வை.

பலத்த போட்டிகளுக்கு மத்தியில் 2009ஆம் ஆண்டுக்கான ESPN-Cricinfo விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளனர். பல நாடுகளிலும் உள்ள சிறந்த வீரர்கள் இந்த களத்தில் மோதினர் சுவாரஸ்யமான இந்த போட்டியில் வெற்றியாளர்களை தீர்மானித்த நடுவர்கள் இவர்கள் தான்.

Jury

Sambit Bal Editor, Cricinfo

Harsha Bhogle Television presenter and writer

Geoff Boycott Former England batsman, commentator

Ian Chappell Former Australia captain, commentator, columnist

Daryll Cullinan Former South Africa batsman, commentator

Peter English Australasia editor, Cricinfo

Tony Greig Former England captain, commentator

David Lloyd Former England coach, commentator

Sanjay Manjrekar Former India batsman, commentator

Andrew Miller UK editor, Cricinfo

Dileep Premachandran Associate editor, Cricinfo

Ramiz Raja Former Pakistan batsman and captain, commentator

Peter Roebuck Former Somerset captain, writer

Osman Samiuddin Pakistan editor, Cricinfo


இந்த நடுவர்களினால் வீரர்களின் கடந்த ஆண்டு சாதனைகள் பெறுபேறுகள் கணக்கில் மகுடம் சூட்டப்பட்டுள்ளனர்.


வீரர்களின் செயற்பாட்டுக்கு அமைய நடுவர்களின் தெரிவுகள்.

டெஸ்டில் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை இலங்கைக்கு எதிராக பெற்ற 293 ஓட்டங்களின் உதவியுடன் அன்று ஸ்டாஸ் மற்றும் கிரிஸ் கெயிலை வென்று இந்தியாவின் மினி சூறாவளி விரேந்தர் சேவாக் தனதாக்கிக்கொண்டார்.



மினி சூறாவளி கிளம்பியதே விரு தாண்டவம் தொடங்கியதே.....

ஜமைக்கா டெஸ்டில் பெற்ற எட்டு விக்கெட்டுக்கள் பெறுதியுடன் டெஸ்டில் சிறந்த பந்து வீச்சாளருக்குரிய விருதை தட்டி இருக்கின்றார் மேற்கிந்திய தீவுகளின் ஜெரோம் டெயிலர்.

நான் வெற்றி பெற்றவன் இமயம் தொட்டுவிட்டவன்.....

ஒருநாள் போட்டிகளில் சிறந்த துடுப்பாட்ட வீரராக சந்தேகமே இன்றி சாதனை நாயகன் சச்சின் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஓட ஓட விரட்டிய 175 ஓட்டங்களுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மீண்டும் இந்தியாவின் வசம் துடுப்பாட்ட விருது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ நான் ராஜ துடுப்பாட்டத்தில் எப்பவும் ராஜா.....

ஆனால் பந்துவீச்சில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தானின் சகித் அப்ரிடி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தன் சிறந்த பெறுபேறான 6-38 இன் மூலம் இந்த விருதை தட்டிச்சென்றார்.

பந்தையும் கடிப்பேன் விக்கெட்டும் எடுப்பேன் எனக்குள்ளே ஏதோ நடந்துபோச்சு....

போட்டிகளில் சிறந்த துடுப்பாட்ட வீரராக T20உலககிண்ண போட்டிகளில் அவுஸ்திரேலியாவை துவைத்தெடுத்த மேற்கிந்திய தீவுகளின் கிரிஸ் கெயில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


கறுப்பு சிங்கமொன்று புறப்பட்டதே......


பந்துவீச்சில் ஆறு ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை சாய்த்த உமர் குல் தெரிவு செய்யப்பாட்டுள்ளார்.


தனியே தன்னந்தனியே நானும் சிலவேளை இப்படி எடுப்பேன்.....


டெஸ்ட் கிரிக்கெட்டில் கிடைத்த மேலும் சில விருதுகள்.

வருடத்தின் சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர். - கெளதம் கம்பீர்.

கம்பீரமான பல டெஸ்ட் ஆட்டங்கள் ஆடியவர்.

சிறந்த ஆரம்ப இணைப்பாட்ட ஜோடி.- அவுஸ்திரேலியாவின் சைமன் கடிச்-ஷேன் வட்சன்.

நாங்க புதுசா இணைந்து கொண்ட ஜோடிதானுங்க.


சிறந்த டெஸ்ட் இணை.-மஹேல-திலான் சமரவீர. (இலங்கை.)

நாங்கதான் டாப்பு மத்ததெல்லாம் டூப்பு.


சிறந்த பந்துவீச்சாளர்.- மிட்சல் ஜான்சன்(அவுஸ்திரேலியா.)


எகிறி எறிந்தேன் விக்கெட் விழுந்தது.


ஒருநாள் போட்டி விருதுகள்.

வருடத்தின் சிறந்த துடுப்பாட்ட வீரர்-விரேந்தர் சேவாக்(இந்தியா)


அங்கேயும் நானே இங்கேயும் நானே பந்தினை பஞ்சராய் தினம் அடிப்பேனே.


வருடத்தின் சிறந்த பந்துவீச்சாளர்- ஜேம்ஸ் அன்டர்சன்(இங்கிலாந்து)

நான் போட்டா அடிக்கமாட்டாய்..

சிறந்த ஒழுக்கமான அணி-நியூசிலாந்து.

ரொம்ப நல்லவங்கையா....

டெஸ்ட் போட்டிகளில் செல்வாக்கு செலுத்திய அணி-இந்தியா.


நம்பர் 1க்கு வந்தது பெரிய விசயமப்பா.


ஒருநாள் போட்டிகளில் செல்வாக்கு செலுத்திய அணி- இந்தியா.


ஏறு முன்னேறு இங்கும் நம்பர் வன் அடையும் நாள் தொலைவில் இல்லை.


வருடத்தின் சிறந்த பந்துவீச்சாளர். - ஸ்டுவர்ட் பிரவுட்.(இங்கிலாந்து)


எல்லாம் அவன் செயல் அப்பாடா இந்த முறை யுவராஜிட சிக்கல.

வருடத்தின் சிறந்த துடுப்பாட்ட வீரர்.-கெளதம் கம்பீர்.(இந்தியா.)



எங்கேயும் போதும் நான் தாண்ட நம்பர் வன்.

மேலதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive