உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Monday, May 31, 2010

பாட்டி வடை சுட்ட கதை ரீமேக்கில் விஜய்.

நம்ம சின்ன வயசில பாட்டி வடை சுட்ட கதையை பாட்டி சொல்லவும் அம்மா அக்கா சொல்லவும் கேட்டிருப்போம் இல்லை பாடசாலையிலாவது அறிந்திருப்போம். இந்தக்கதை இப்போது ஒரு சரித்திர படமாக வரப்போகின்றது. அண்மைக்காலமாக இளைய தளபதி விஜய் அவர்கள் நடித்து வெளிவரும் படங்களில் கதை இல்லை என்பது மிகப்பெரிய குற்றச் சாட்டு. ஒரே மாதிரிப்படங்களில் நடிக்கின்றார் என்று இன்னொரு வசைபாடல். அதை எல்லாம் விட ஒரு சரித்திரக் கதையில் நடிக்கவில்லையே என்று விஜய் ரசிகர்கள் எங்களுக்கும் ஏன் விஜய்க்கு கூட ஒரு கவலை இருக்கும். இதை எல்லாம் தீர்க்க விஜய் கையில் எடுத்திருக்கும் கதை தான் இந்த பாட்டி வடை சுட்ட கதை ரீமேக். முதலே சொல்லிவிட்டேன் இது ரீமேக் என எனவே கதையில் பல திருப்பங்கள் இருக்கும். அதேநேரம் விஜய் படங்களுக்கு எந்த குறையும் இல்லாமல் வருகின்றது இந்தப்படம். வழக்கமாய் விஜய் படம் கிளைமாக்ஸ் சொதப்பலாய் இருக்கும் என்பர். இந்த படத்தில் ஒரு வித்தியாசமான கிளைமாக்ஸ் இருக்கு.

சரி இந்தப்படம் பற்றிய என் கற்பனை எப்படி உருவானது என்று சொல்லவேண்டாமா. நேற்று மூஞ்சிப்புத்தகத்தில் என் சிறுவயது முதல் அறிந்திருந்தும் அண்மையில் நண்பியான ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்(தான் தான் இந்தக்கதையின் மூலம் என தன் பெயரை குறிப்பிட வேண்டாம் என சொன்னார். எல்லாம் ஒரு தற்பாதுகாப்புக்குத்தான்.) அப்போதுதான் ஏதாவது சொல்லு என கேட்டபோது பாட்டி வடை சுட்ட கதை ரீமேக் சொல்றன் என சொன்னார். அவர் சொன்ன கதையில் இன்னும் சில மெருகேற்றலோடு இங்கே தரப்போகின்றேன். படத்தை இயக்குவது வெறு யாரும் இல்லை. சாட்சாத் எஸ்.ஏ.சந்திரசேகர் ஐயா தான்.(மனசுக்குள்ள நல்ல கெட்ட வார்த்தைகள் வரித்து இந்த பாவிப்பயலை திட்ட.)

அப்பிடியே ஓபன் பண்ணினால் பிரான்ஸ்(எல்லாம் அஜித்தின் பில்லா பாதிப்பு தான்.) அதிகாலை வேளை எல்லோரும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். வீதியில் பல வாகனங்கள் நெரிசலோடு இருக்க அப்பிடியே ஒரு சோடி காலுக்கு கமெரா சூம் போகிறது. அந்தக் கால்கள் ஓடிக்கொண்டிருக்க அப்பிடியே கமராவை மேலே கொண்டுவந்து முகத்தைக் காட்டினால் ஒரு சின்ன சிரிப்போடு அட நம்ம இளைய தளபதி.(எப்பிடி அறிமுகம் இதுவரை நீங்கள் எந்தப்படத்திலும் இதை பார்க்கமுடியாது.) ஓடிக்கொண்டிருக்கும் விஜயை ஒரு நபர் மறிக்கிறார் அவர் தான் இளவரசு.


இளவரசு: என்னப்பா ஈசா எங்கே இப்பிடி ஓடிக்கொண்டிருக்காய்?

விஜய்: என்ன சொன்னாய்? உலகத்திலேயே என்னை பாத்து இப்பிடி ஒரு கேள்வி கேட்கிறது நீயாய் தான் இருக்கும். ஓடிறதை பற்றி உனக்கு என்ன தெரியும். அதுவும் யாரை பாத்து ஓடிறதை பற்றி கேட்கின்றாய். நான் ரோட்டில ஓடிறது. என்னை பார்க்கும் தயாரிப்பாளர்கள் ஓடறது. என் படம் தியேட்டரை விட்டு ஓடிறது படத்தை பார்க்க வாரவங்க "தல"தெறிக்க ஓடிறது.(அப்பாட ஒரு மாதிரி தலைக்கு பன்ச் வைச்சாச்சு.) என்று ஆள் ஏரியாவிலும் ஓடவக்கிரவண்டா நான்.

இளவரசு: (மனசுக்குள்) பல்லு விளக்காமலே பன்ச் டயலாக் சொல்றானே. இவன்கிட இருந்து தப்பனும் என எண்ணிக்கொண்டு "சரிப்பா நீ போப்பா"

அப்படியே விஜய் ஓடிக்கொண்டிருக்கின்றார். உடனே பாட்டு வருது.......

இது .......(இதில் ஒரு சொல் வரும் இப்போ சொன்னா சஸ்பென்ஸ் போயிடும்) தேடிவந்த புழுகன் பெத்த பிள்ளை
ஓட்டம் என்ற ஒன்றை இவன் விட்டு வைத்ததில்லை.
கொடுப்பது தலைவலி இவன்பெயர் தளபதி என்றும் மொக்கை நாயகன்
இவனே எங்கள் வாழ்வில் இனிமேல் பிடித்த சனியன்.


பாடல் முடிய விஜய் அப்பிடியே ஒரு மிகப்பெரிய கட்டடத்துக்கு முன்னுக்கு நின்று அங்கேயும் இங்கேயும் பார்க்கிறார். வாசல் திறந்திருந்தும் உள்ளே போகல. அப்பிடியே வலது புறமாய் போய் ஒரு மதில மேல் ஏறி ஜம்ப் பண்ணி அந்தக்கட்டடத்துக்குள் போறார்(பிரான்சிலும் இப்பிடியா என கேட்கப்படாது இது விஜய் படம் இயக்குவது மிகப்பெரிய இயக்குனர் திருவாளர் எஸ்.ஏ. சந்திரசேகர் என்பதை மறக்கப்படாது.) அப்போ தான் எங்களுக்கு தெரியிது அது ஒரு சூப்பர் மாக்கட் என்று. அப்பிடியே அதிலே நிற்கும் தொழிலாளர் ஒருவருக்கு வணக்கம்னா என்ற போட்டிட்டு ஒரு இடத்தை நோக்கி போறார். அங்கே யாரையோ தேடிறார். அப்பிடியே தேடிக் கொண்டிருக்கும் போது வடிவேல் வாறார்.

வடிவேல்: என்னப்பா ஈசா வந்திட்டியா?

விஜய்:வாப்பா ரெயின் கோட்(அம்பிரல்லா என்று பெயர் வைப்பான்களாம் நாங்கள் ரெயின் கோட் என்று வைக்கக் கூடாதா.) எங்கேடா நம்ம பாட்டியை காணல.

வடிவேல்:ஆமா எல்லே. எங்கே போயட்டிது இந்த பாட்டி. ஒருவேளை ஒரேடியாய் போட்டிதோ? (இந்த இடத்தில் நீங்கள் சிரிக்கணும் இப்போ இதுதான் வடிவேல் ஜோக்.)

விஜய்: உனக்கு எப்ப பார்த்தாலும் இப்பிடித்தான்.....எங்கே போய்ட்டிது..............நேரம் வேற ஆச்சே....

வடிவேல்: ஏப்பா அங்கே பார் பாட்டி வருது. அடேய் பாட்டியோட இன்னுமொரு பாட்டி வருதுப்பா பார்.

விஜய்: அடேய் பாட்டியோட பாட்டி தானேடா வரும்.....பின்ன என்ன குமாரனா வருவான்......

வடிவேல்: இல்லைப்பா.........பாட்டியோட பூட்டி இதுவேற பாட்டி வருதடா?

விஜய் அப்பிடியே திரும்பி பார்க்கிறார். அங்கே தமன்னா அறிமுகமாகின்றார். அழகாய் காட்டிறாங்க.(முதல் முறையாய் சொல்றன் தமன்னா அழகென்று) விஜய் வாய் மூடாமல் கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டிருக்க.

வடிவேல்: ஏம்பா ஏம்பா ஈசா .......ஈசா.....ஈசு அப்பிடியெல்லாம் பார்க்கப்படாது. நாங்களும் பார்க்கணும்.

விஜய் இதை கவனிக்காமல் வடிவேலுக்கு கையாலே ஒரு அடி விட்டிடு அப்பிடியே பாட்டியை நோக்கி போறார். அந்த நேரம் பார்த்து தமன்னாவும் விஜயை பார்க்க.

இந்த இடத்தில் ஒரு பாட்டு.

சிறகடிக்கும் நிலவு என்ற பாட்டு போல பாடவும்

ஆண்: பாட்டியோட பேத்தி பார்த்துவிட்டேன் உன்னை
பெண்: பார்த்தவுடன் எனக்கு பிடித்துவிட்டு சனியன்
ஆண்: அப்படி நீ சொன்னால் வலிக்குமடி எனக்கு
பெண்: அவ்வே அவே அவ்வே நான் சிக்க மாட்டேன்

இப்படி ஆரம்பிச்சு ஒரு மாதிரி பாட்டு முடிகிறது.



அப்பிடியே இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்து முடித்த பின்.

விஜய்: என்ன பாட்டி இண்டைக்கு லேட்.

பாட்டி: ஆமா ஈசா இண்டைக்கு என் பேத்தி பிறந்தநாள் அதுதான் கோவிலுக்கு போட்டு வாறம்.

விஜய்: (தமன்னாவை பாத்து) என்னது இண்டைக்கு உங்களுக்கு பிறந்தநாளா? (தமன்னா ஆம் என்பது போல தலை ஆட்ட) விஷ் யூ எ ஹாப்பி பெர்த் டே

தமன்னா: தாங்க்ஸ்.

விஜய்: என்ன பாட்டி நீங்க இப்பிடி ஒரு அழகான பேத்தி இருக்கிறதை சொல்லாமல் விட்டின்களே. (என்று சொல்லிக்கொண்டிருக்கவே பாட்டி மெதுவாய் வழக்கமாய் தான் பீசா வைத்து விற்கும் இடத்துக்கு போக விஜயும் தமன்னாவும் ஒருவரை ஒருவர் மீண்டும் பாத்துக் கொள்கின்றனர்.)

என்னது பாட்டி வடை சுட்ட கதையில் பீசா என்று கேட்கப்படாது. இது ரீமேக் எனவே அங்கே வடை இங்கே பீசா. எப்பிடி நம்ம யோசனை.

இப்பிடியே ஒருவரை ஒருவர் பாத்துக்கொண்டிருக்க. அங்கே வந்த திருடன் ஒருவன் பாட்டியின் பேர்ஸ்சை எடுத்துக் கொண்டு ஓட விஜய் அவனை திரத்திறார். அவன் மாடிப்படியால் ஏறி ஓட விஜய் கீழே இருந்து அப்பிடியே ஒரு ஜம்ப் பண்ணி அடுத்த தளத்துக்கு சென்று அந்த திருடனோட சண்டை போடிறார்.

விஜய்: நானே ஒரு கதை திருடன். எனக்கு முன்னாலேயே திருடிரியா என்று பன்ச் பேசி அவனை அடிக்க அவனோ பையைக் கொடுத்திட்டு ஓடிறான்.

பையை அப்பிடியே ஒரு லுக விட்டு சுற்றும் முற்றும் பார்க்க அங்கே இருக்கும் வெள்ளைக் காரன் கூட தன் வேலையை விட்டிட்டு விஜயை சுத்தி நின்று கைதட்டிறான்.(விஜய் மாக்கட் உலக லெவலில் என சொல்லலாம் எல்லா.) கை தட்டினால் பரவாயில்லை.
பாட்டு தொடங்கிறது ஆரம்பிக்கிறது பிரான்சுக்காரன் தான்.....

திருடன் கதை திருடன் திருடனை வென்ற திருடன்
உலக லெவலில் வந்தும் கதையை திருடுவான்
திட்டம் போட்டு அடிப்பான் திருடித் திருடி ஜெயிப்பான்
இவனைப் போல திருடன் இனிமேல் யார் வருவான்

பாட்டு முடிய முதலில் பாட்டியின் பேர்ஸ் அடித்த திருடன் மீண்டும் வந்து விஜயின் பேர்ஸ்சை அடித்துக் கொண்டு ஓட. இந்த முறை ஹீரோ பாத்து சிரிச்சிட்டு நிற்கிறார்.(ஏன் என்றெல்லாம் கேட்கப்படாது இது விஜய் படம் நான் தொடர்ந்து சீன கொண்டு போகணும்) இதை பாத்தா தமன்னா விஜயிடம் வாறார்.

இதில் இடை வேளை


தமன்னா: அவன் உங்க பேர்ஸ்சை அடிச்சிட்டு போறான். பாத்திட்டு நிக்கிறியள்.

விஜய்: அட விடுங்க அவனும் என்னை போல தான் எத்தனை தோல்வி வந்தாலும் தன்னை மாத்திக் கொள்ளல. முதலில என்னிடம் பிடிபட்டு தன் தொழிலில் தோற்றாலும் என்னைப்போல அதை காட்டிக் கொள்ளாமல் அசட்டை செய்யாமல் அதே போல என் பேர்ஸ் அடிச்சேன் எனக்கு அது பிடிச்சிருந்தது அதுதான் விட்டிட்டன்.

தமன்னா: யூ ஆர் சோ ஸ்வீட். உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு. இப்பிடி பட்ட ஒருவர் தான் எனக்கு வேணும்......ஐ.லவ்.யூ

வடிவேல்: இதென்ன சின்னப் பிள்ளை தனமாய் இஉக்கு. ஒரு ஹான்ட்சம்மான அழகான அறிவான ஒருத்தன் இங்கே இருக்கேக்கே இப்பிடி நான்சன்சா பேசப்படாது. வலிக்கிறது.

விஜய்:யாரடா அது?

வடிவேல்: கண்டிப்பாய் நீ இல்லை. உன்னை தான் எல்லா பதிவர்களும் போட்டு தாளிக்கிரான்களே. இன்னுமா நீ உன்னையை நம்பிறாய்.

தமன்னா: அப்போ யார் அது?

வடிவேல்: என்ன கேள்வி இது அவரை தெரியாதா.

தமன்னா: இல்லையே.

வடிவேல்: அது நான் தான்.....

தமன்னா: ஹீ ஹீ ஹீ. என்னது அது நீயா. எனக்கு அப்பிடிப்பட்டவரே வேணாம். இப்போ உன்னையை விட இவர்தான் அதிகம் மொக்கை போடிறார். இவரை பற்றி தான் அதிகம் பேசிறாங்க எனக்கு இவரே. போதும்.

தமன்னா: வேணாம் செல்லம வலிக்கிது.

விஜய்:போதும் போதும் நிறுத்து அடுத்த பாட்டு ஆடனும். எவ்வளவு நேரம் தான். நடிக்கிரமாதிரி நடிக்கிறது.

தமன்னா:அதுதானே இவ்வளவு நேரமாய் ஹீரோயின் நான் வரும் சீன் வருதே. வரக்கூடாதே. விஜய் படம் எண்டால ஹீரோயின் வந்தவுடன் பாட்டு வரும் என்றெல்லா எல்லோரும் காத்திருப்பாங்க. நானும் உடுப்பை அவுத்துப்போட்டிட்டு உள்ளுக்குள் போடும் உடுப்பு சைசில் துணியை சுத்திட்டு ஆடனும். இல்லாட்டில் இது விஜய் படம் இல்லையோ என்று சந்தேகம் வந்திடும்.

உடனே ஒரு பாட்டு வருது. அப்பிடியே ஒரு பிளைட் பிடிச்சு லண்டன் போய் ஆடிறாங்க

தஞ்சாவூர் ஜில்லாக்காரி பாடல் போல படிக்கணும்

ஆண்: பீசாவை விற்க வந்த பிசாசே நைசா வாயேண்டி
பெண்: போக்கிரி பயலே எந்தன் டவுசரைக் கலட்டி போடாதே....
ஆண்: பொம்மாயி பொம்மாயி இது ரீமேக் ரீமேக் மறக்காதே பொம்மாயி
பெண்: சூ மந்திர காளி இவன்கிட்ட மாட்டிக்கிட்டா நான் காலி

என்று பாட்டு ஆரம்பித்து முடிகின்றது.


இந்த நேரம் பாத்து விஜய்க்கு ஒரு தொலை பேசி அழைப்பு வருகிறது. அதற்கு விஜய் சொல்றார் இன்னும் ஐந்சே நிமிசத்தில அங்கே இருப்பேன்.. ஆமா கையோட கொண்டுவாறேன்......

உடனே விஜய் சுத்தும் முத்தும் பார்க்கிறார். தமன்னா வந்திருப்பதால் தமன்னாவின் பாட்டி கொண்டுவந்த பீசாவை சுட்டுக்(திருடிக்) கொண்டு தமன்னாவையும் ஒரு கையால் பிடித்துக் கொண்டு ஓட ஆரம்பிக்கின்றார்.(இதை தமன்னா கூட கவனிக்கல.) இதை பார்த்த அந்த பாட்டி கத்த முதல் வாசலுக்கு வரும் விஜயையும் தமன்னாவையும் அன்று புதிதாய் வேலைக்கு சேர்ந்த காவலாளி பிரகாஷ்ராஜ் மறிக்கிறார்.

பிரகாஷ்ராஜ்: நில்லுடா செல்லம். நில்லு அதெப்பிடி நீ ஓடுவாய். நீ ஒரு தங்க கட்டியை எடுத்திட்டு போ அந்த பாட்டி சம்பாதிச்சிடும். ஆனால் நீ அந்த கிழவி சாப்பிட்டு வைச்ச மிச்ச பீசாவையும் ஒரு சப்பை பிகரையும் கூட்டி ஓடிரியே. இது தாங்குமா செல்லம்.

விஜய்: இதோ பார் உனக்கும் எனக்கும் பிரச்சனை இல்லை. எவனுக்கும் எனக்கும் பிரச்சனை நடுவில நீ வந்து கத்தாத. இந்த சப்பை பிகரையும் சாப்பிட்டு போட்ட பீசாவையும் கொண்டு போறதுக்கா கத்திறாய்.

பிரகாஷ்ராஜ்: பின்னே என்னடா செல்லம். இதை மாதிரி ஒரு சப்பை பிகரை எங்கேடா போய் அந்த பாட்டி தேடும். எல்லோரும் அழகாய் எல்லா இருக்காளுகள். மவனே நான் அடிச்சன் நீ பீஸ் ஆகிடுவாய்.

விஜய்: நீ அடிச்சா பீஸ் நான் அடிச்சா(திருடினா) பீசா.

அப்பிடியே இரண்டு பேருக்கும் நடுவில ஒரு சண்டை. சண்டையில் விஜய் கடுமையாய் அடிவாங்கி நடக்க முடியாமல் போக அப்பிடியே சுருண்டு விழுகின்றார். முதல் முறையாக விஜய் படத்தில் வில்லன் ஜெயிக்கபோறார் என்று நீக்கள் கனவெல்லாம் காணப்படாது.

தமன்னா: (பிரகாஷ்ராஜிடம்) நீ வேணுமானால் அவரை அடிச்சு விழுத்தலாம். முடிஞ்சா அவரோட பாட்டை பாத்தா பின்னும் நீ உயிரோட இருந்தால் அவனென்ன நானே அவனோட போக மாட்டேன். இந்த பீசாவையும் உனக்கு ஊட்டி விடுறன். ஓகே வா?

பிரகாஷ்ராஜ்: எந்திரிச்சு பாடி ஆட சொல்லடி.

இப்போதான் கடைசி பாட்டு.
எழும்பிற விஜய்க்கு சும்மா அட்டகாசமாய் கோட் சூட எல்லாம் போட போட்டிருந்த டிறேசை குறைச்சுக்கொண்டு தமன்னா மறு பக்கம் நடந்து வந்து விஜய்க்கு ஒரு முத்தம் கொடுக்க.

நான் நடந்தால் அதிரடி பாடல் ஸ்டைலில் படிக்கணும் ஓகே.

ஆண்: நான் ஆடினால் கதகளி என் பேச்சு தலைவலி என்னை துரத்தும் சுண்டெலி நீ
பெண்: நீ நடிச்சால் வெறுப்படா நாளை சி.எம் நீயாடா அடிக்காதே என் கிட்ட ஜோக்கடா
ஆண்: நான் யார் அடுத்த பி.எம்மு
பெண்: நீ யார் இங்கே முழு லூசு
ஆண்: வேண்டாம் பேச்சு வெட்டிப் பேச்சு அவன் கதை இப்போ காலி ஆகிப்போச்சு.


இறுதிப் பாட்டும் முடிஞ்சிது. பாட்டு முடிஞ்சு பார்த்தால். பிரகாஷ்ராஜ் குற்றுயிரும் குலைஉயிருமாக கிடக்க. இதை விஜய் ஒரு மாதிரி பார்க்க.
சாகப்போற அந்த நேரத்தில் கூட பிரகாஷ்ராஜ் வசனம் பேசிறார்.

பிரகாஷ்ராஜ்: என்னடா அப்பிடி பார்க்கிறாய். மவனே இது என்னோட போகட்டும். இனிமேலும் பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி யாரையும் இப்பிடி கொல்லாதே. நல்ல காலம் தமன்னா அப்பிடி அரை குறையாய் ஆடினதால் கொஞ்சம் உயிர் இருக்கு. மவனே இங்கே இருந்து ஓடிடு.

விஜய் தமன்னாவை கூட்டிக்கொண்டு போக முற்பட தமன்னா விஜயை மறிக்கிறார்.

தமன்னா: ஒரு சப்பிய பீசாவையும் சப்பை பிகர் என்னையும் கூட்டிக்கொண்டு நீ ஓட என்ன காரணம் சொல்.

விஜய் உடனே தன் பிளாஷ் பக் சொல்ல ஆரம்பிக்கின்றார்.

விஜய்: நான் சின்ன வயசை இருக்கும் போதே என் பாட்டி இறந்திட்டா. இறக்கும் போது எனக்கு அவ சொன்ன ஒரு விஷயம். தனக்கு தன் திருமணத்தன்று சீதனமாய் வடைகள் பல செய்து கொடுத்தாங்களாம். உங்கம்மா ஓடிப்போய் கல்யாணம் செய்ததால அவளுக்கு என்னால இதை சீதனமாய் கொடுக்க முடியல. ஆனால் உன் தங்கச்சிக்கு கல்யாணம் செய்யும் போது நீ கட்டாயம் அவளுக்கு சீதனமாய் எங்கேயாவது இதை தேடிக்கொண்டுவந்து கொடுக்கணும் என்று சொன்னா. நானோ ஒரு வெட்டிப்பயல் வேலையும் இல்லை. அரசியலுக்கு வா என்று அப்பா சொல்லி சொல்லியே என் வாழ்க்கையை நாசமாக்கிறார். வேலை இல்லை அதை விட அரசியல் என்ற சாக்கடை என்று நான் இருக்கிறதால ஒருத்தனும் பொண்ணு குடுக்கிறானும் இல்லை.எவளும் பாக்கிறாளும் இல்லை. அப்பத்தான் இங்கே பாட்டியை ஏமாத்தி கொஞ்ச பீசா வாங்கிட்டு போகலாம் என வந்தான். பீசா வாங்க காரணம் இது ரீமேக் படம். வந்த இடத்தில நீ மடங்கிட்டாய். இந்த சப்பை பிகர் கூட கிடைக்காட்டில் இனி நம்ம வாழ்க்கை அப்படியே போய்டும் என்று உன்னையும் கூட்டிட்டு வந்திட்டன்.

தமன்னா: நீங்க தங்கச்சி மேல வச்சிருக்கிற பாசம் எனக்கு ரொம்ப புல்லரிக்கிது. ஐ.லவ்.யூ சோ மச்.......

அப்படியே சுபம்......

தங்கைக்கு கொடுத்தாரா இல்லையா என்று கேட்கப்படாது......நேரம் முடிஞ்சிது சோ படம் முடிஞ்சிது....அதுவா முக்கியம் நாலு பைட் ஐஞ்சு பாட்டு ஒரு துள்ளல் இரண்டு பறப்பு முடிஞ்சிது நேரமும் போய்ட்டு சரிதானே.

Share:

Saturday, May 29, 2010

திரையுலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுகளுக்கான முன் அறிவித்தல்.




வணக்கம் மக்கள்ஸ்,

அண்மையில் சில நாட்கள் நீங்கள் சில வலைப்பூக்களில் திரையுலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் தொடர்பான பதிவினை படித்திருப்பீர்கள். சரி படிச்சாச்சு அப்பிடி என்னதான் நடக்கப்போகிறது என்ற ஆர்வம உங்களுக்கு இருக்கும். அதே நேரம் எனக்கு பிடித்தவர் இவர்கள் தெரிவில் இருப்பாரா? எங்கே வாக்களிக்கணும் எப்படி வாக்களிக்கணும் என்ற எண்ணங்கள் வந்து போகலாம்.

இன்னும் சிலருக்கோ இந்த சின்ன பசங்க என்னத்தை கிழிக்கப்போறாங்க பார்க்கலாம் என்ற ஆசையும் இருக்கும். இவை எல்லாவற்றுக்கும் இன்னும் சில மணி நேரங்களில் விடை கிடைக்கப்போகின்றது. வலைப்பூ மட்டுமன்றி Face Book, Twitterஇலும ஆதரவு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நாங்களும் தெரிவுகளை அறிவித்து வாக்கெடுப்பை ஆரம்பிக்கும் அந்த அரிய நேரத்துக்காக காத்திருக்கின்றோம்.எங்கள் முயற்சியின் வெற்றிக்காக காத்திருக்கின்றோம்.

ஒரு சில பேரோடு ஆரம்பித்து பின்னர் சக பதிவர்களிடம் வியாபித்து நாடு கடந்து இருக்கும் பதிவர்களின் அமோக ஆதரவிலும். இந்த வாக்களிப்புகள் இடம் பெற இருக்கின்றன. புதிய தளம் இதற்க்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்படுகின்றது......இறுதி நேரத்தில் இருக்கின்றோம். மிக விரைவில் உங்கள் கைகளில் வாக்களிப்புகளோடு அந்த தளமும் வர காத்திருக்கின்றது..

தயாராகுங்கள். .......
Share:

Friday, May 28, 2010

தமிழிஷில் நடப்பது என்ன?



கொஞ்சம் இதையும் படிச்சிட்டு போங்க. பதிவுலகின் இன்னொரு முயற்சி.

தமிலிஷ் திரட்டி, உண்மையில் பதிவர்களுக்கு மிக்கப்பெரிய டானிக். நான் என் பதிவுகளை இணைக்கும் திரட்டிகளில் ஒன்று. அதிகமான வாசகர்களை கொண்டு வந்து தருவதுடன் பல வாக்குகளை அளித்து பிரபலமான இடுகை ஆக்கியும் அழகு பார்க்கின்றது. ஆனால் எனக்கு நேற்று நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் எனக்குள் எழுந்த சில கேள்விகள். தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கிக் கூறவும்.

சில நேரங்களில் நான் இடும் இடுகைகள் உடனடியாக தொடரும் இடுகைகள் பகுதியில் வருவதில்லை. அதன் பின் தமிலிஷ் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டுதான் அவற்றை மீட்டு எடுத்திருக்கின்றேன். இது ஏன் நடக்கின்றது?

அடுத்து சூடான இடுகைகள் எப்படி தெரிவு செய்யப்படுகின்றன? ஒரு சில சொற்குறியீடுகளை கொண்டா அல்லது குறித்த நாள் அதிகமாக இடப்படும் இடுகைகளைக் கொண்டா? இங்கிலாந்து உலக கிண்ணம் வென்ற நேரம் நான் இட்ட இடுகை இதற்குள் அடங்கவே இல்லை. ஆனால் அதிக வாக்குகள் பெற்றது. அப்படியாயின். இடுகையை இணைத்து குறைந்த நேரத்தில் இடும் வாக்குகளைக் கொண்டா? இது தீர்மானிக்கப்படுகின்றது.

அடுத்து பிரபல இடுகைகள் பற்றியது. சிலநேரங்களில் பதின்மூன்று பதின நான்கு வாக்குகள் கிடைத்தும் சில பதிவுகள் ஹிட ஆகாது போய் விடும். அதற்க்கு காரணம் என்னவென்று தெரியும் ஆனால் என் கேள்வி என்னவென்றால் நான் ஒரு பதிவினை போட்டு ஒன்று இரண்டு மூன்று நாட்கள் கடந்தபின் கூட அந்த பதிவு ஹிட ஆகிறது. இது எப்படி? அப்படியாயின் தமிளிஷின் தொடரும் இடுகைகளை அதிகமான பக்கங்கள் சென்று வாசகர்கள் படிக்கின்றார்களா? அப்படி எனில் இது ஆரோக்கியமானதே. இதை தான் தமிளிஷும் முன்னர் எதிர் பார்த்து நடவடிக்கை மேற்கொண்டது என எண்ணுகின்றேன். சில நேரங்களில் நாங்கள் ஒரு இடுகையை தொடர்ந்து மூன்று இடுகைகளை இட்ட பின் கூட (அந்த பதிவுகள் ஹிட இல்லாவிடாலும்) அதற்க்கு முன் இட்ட பதிவு ஹிட அடித்துவிடும். இவை எல்லாம் எப்படி நடக்கிறது. உண்மையில் இது பதில் சொல்ல கடினமான சந்தோசமான உணர்வுதான்.

தமிளிஷிடம் ஒரு வேண்டுகோள்
சில இடுகைகள் இன்னும் ஒரு வாக்குக் கிடைத்தால் பிரபலமாகி விடும் என்ற நிலையில் தொடரும் இடுகைகள் பகுதியில் இருக்கும். ஆனால் அந்த ஒரு வாக்கு கிடைக்கும் கிடைக்காது என்ற ரீதியில் அல்லாடிக் கொண்டிருக்க. அதனை தொடர்ந்து பல இடுகைகள் தொடரும் இடுகைகள் ஆகிவிட இந்த இடுகை பின்னுக்கு போய் விடும். இதனால் அதை காண்போர் எண்ணிக்கை குறைந்து விடும். எனவே அந்த ஒரு வாக்கு குதிரைக் கொம்பாக கூட போய் விடும். எனவே இப்படி போர்டரில் இருக்கும் பதிவுகள் என்று ஒரு பிரத்தியே பகுதியை நிறுவி. பதிவர்களை ஊக்கப்படுத்தினால் என்ன.

அண்மையில் இருநாட்கள் தமிலிஷில் ஏற்ப்பட்டிருந்த கோளாறு உண்மையில் பதிவுலகத்தை பாதித்திருந்தது. தட்டச்சி இருந்த இடுகைகளை கூட நாங்கள் இடாமல் தமிளிசுக்காக காத்திருந்தோம். அந்தளவிற்கு பதிவர்களின் இன்றியமையாத ஒன்றாக தமிலிஷ் இருக்கிறது. உங்களுக்கு வாழ்த்துகள். இன்னும் உங்கள் பணி சிறப்பாக இருக்க.
Share:

Wednesday, May 26, 2010

திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் 2010 - முன்னோட்டம்.



வணக்கம் மக்கள்ஸ்,

மீண்டும் ஒரு தடவை ஒரு பிரமாண்டமான அறிவிப்புடன் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. கடந்த வருடம் என்(SSHATHIESH in பார்வை) வலைப்பூவில் தனியாக சினிமா கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக உங்கள் வாக்குகள் மூலம் அபிமானம் பெற்றவர்களை தெரிவு செய்து மகிழ்ந்தேன். நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து தங்கள் அபிமானிகளை தெரிவு செய்தனர். அதன் பின் அண்மையில் தான் அதை தமிலிஷில் பிரசுரிக்க உங்கள் அமோக ஆதரவுடன் பிரபல இடுகையாகியது. விளையாட்டாக நான் ஆரம்பித்த ஒரு விடயம் உங்கள் பலரின் அபிமானம் பெற இம்முறை அதை கொஞ்சம் விரிவாக்கி சிலர் சேர்ந்து செய்யலாமா என்ற எண்ணம் தோன்றவே சில பதிவர்களுடன் இதை கலந்துரையாடினேன்.

கலந்துரையாடலில் கிடைத்த ஊக்கம் தொடர்ந்து இந்த முயற்சியில் தங்களையும் இணைத்துக்கொண்டுள்ள பதிவர் கான்கொன், எரியாத சுவடுகள் பவன், என் உளறல்கள் வந்தியத்தேவன் மாமா, ஐந்தறைப்பெட்டி சுபாங்கன், நா எழுதும் கெளவ்பாய் மது அண்ணா ஆகியோரின் ஒத்துழைப்புடனும் இன்னும் சில பதிவுலக நண்பர்களுடனும் இணைந்து இந்த முயற்சியை ஆரம்பிக்கின்றோம். வழக்கமாக நல்ல முயற்சிகளுக்கு ஆதரவு தரும் நீங்கள் நிச்சயம் இந்த முயற்சிக்கும் கை கொடுப்பீர்கள் என்று நம்புகின்றோம்.

இங்கே எங்கள் குழுவில் சேராது வெளியில் இருந்து ஆதரவு தர சில பதிவர்கள் தயாராக இருக்கும் நிலையில் ஒரு சில திரட்டிகளும் இதற்கு நல்ல சமிக்கை காட்டியுள்ளன. எனவே திரட்டிகளின் பங்கும் இங்கே மிகப்பெரிய பங்காக இருக்கும் என நம்புகின்றோம். எனவே அவர்களுக்கும் இந்த இடத்தில் நன்றியை தெரிவிப்பதோடு சக பதிவர்கள், வாசகர்கள் எல்லோரிடமும் இதற்கு ஆதரவு கேட்கின்றோம். பதிவுலகம் இன்று மிகப்பெரிய சக்தியாக மாறி உள்ளது. பல நிறுவனங்கள்,அமைப்புக்கள் திரை உலகிற்கு விருது வழங்கி வரும் நிலையில் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பதிவுலகில் வரும் காலத்தில் பிரமாண்ட விழாக்களுடன் இந்த விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை. எனவே பூனைக்கு மணியைக் கட்டுவது யார்? நாங்கள் கட்டி இருக்கின்றோம்.

இந்த விருதுகளை நாம் வழங்க யார் என கேட்கலாம். சாதாரண ரசிகர்கள் தான் நாங்கள். ஆனால் பதிவர்கள் என்னும் மிகப்பெரிய சக்திகள். இது ஒரு குறிபிட்ட பிரதேசத்துக்கோ அல்லது குறிப்பிட்ட நாட்டுக்கோ அல்லது கண்டத்துக்கோ உரியதல்ல. நம் பதிவர்கள் எல்லோரும் இதன் பங்காளிகள். எனவே எங்களுக்குள் போட்டியாளர்களுக்காக தெரிவுகளுக்கான விவாதம்(நலன் விரும்பிகளும் பங்கு பெறுகின்றனர்) நடை பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் நீங்களும் எங்களுடன் தாராளமாக கை கோர்க்கலாம். இடம் காலம் மறந்து பதிவர்கள் என்ற ஒரு குடையின் கீழ ஒன்றாவோம். சாதிப்போம்.
Share:

சிங்கம் விமர்சனத்துக்கு பதிவர்களுக்கான தலைப்புக்கள்.



விஜயின் படங்கள் வரும் போதுதான் இந்த மாதிரிப்பதிவுகள் பல வந்தன. பல பதிவர்களுக்கு அடி எடுத்துக்கொடுப்பது போல இதே போன்ற பதிவுகள் விளங்கின. இந்த முறை சூர்யாவின் முறை இந்த சிங்கத்தின் முறை நான் என்னை சொல்லவில்லை படத்தை தான் சொல்கின்றேன். நாளை மறுநாள் உலகம் முழுவதும் சூர்யா நடிப்பில் வெளிவரும் சிங்கம் வர இருக்கின்றது. பல பதிவர்கள் இப்போதே விமர்சனப்பதிவு எழுதி பிரசுரிக்க தயார் நிலையில் வைத்திருப்பர். டிறேயிலரை பார்க்கும் போது இன்னொரு விஜயாக சூர்யா முயற்சிக்கும் படம் இது என்பது ஓரளவு யூகிக்க கூடியதாக இருக்க அதற்கு ஏற்றால் போல சூர்யாவின் பேட்டியும் இருக்கின்றது. அதாவது இந்தப்படத்துக்கு பன்ச் டயலாக் தேவைப்பட்டது பேசினேன். இந்த படத்தில் யார் நடித்திருந்தாலும் பேசுவர் என்றதே எனக்கு இரண்டு சந்தேகங்களை கொண்டு வந்திருக்கின்றது. சமபோட்டி நடிகர்கள் மத்தியில் இருந்த ஒரு நல்ல நடிகனும் செத்து விட்டான் என்று. என்ன செய்வது சூர்யாவும் பன்ச் டயலாக் பேசப்போகின்றார். அடுத்தது யாராய் இருந்தாலும் இதில் பன்ச் டயலாக் பேசுவர் என்றது இந்த படத்தில் கதை என்று எதுவுமே பெரிதாக இருக்காதோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது. இவை எல்லாம் இருக்கட்டும் படம் பார்க்காமல் நான் அதிகம் பேச முடியாது.ஆனால் படம் பார்த்து விட்டு நன்றாக இருக்கும் என்றும் நன்றாக இல்லை என்றும் பார்க்காமல் எழுதப்போபவர்களுக்கும் இன்னொருவர் எழுதிய விமர்சனத்தை எந்த கூச்சமும் இன்றி கொப்பி செய்து போடும் அசிங்கப்பிறவிகளுக்கும் இந்தப்பதிவு சமர்ப்பணம்.

இதோ நீங்கள் எழுதப்போகும் விமர்சனப் பதிவுகளுக்கு தலைப்பாக வைக்க சில தலைப்புக்கள். பிடிச்சிருந்தா கண்டிப்பாய் வாக்குப் போடுங்க.

சிங்கம் - அசிங்கம் (படம் சொதப்பலாய் இருந்தால்)

சிங்கம் -சொக்க தங்கம்.( படம் அசத்தலாய் இருந்தால்)

சிங்கம் - செத்துப்போச்சு(படம் புட்டுக்கிட்டால்)

சீறிப்பாயும் சிங்கம்(படம் சூப்பராக இருந்தால்)

பாயமறுத்த சிங்கம்(படம் படுத்துக்கொண்டால்)

சிங்கம் ஒரு டான் அசிங்கம் (சூர்யாவின் சிங்கம் பட பன்ச் டயலாக் ஸ்டைலில்)(படம் பப்படம் ஆனால்)

சிங்கம்- ஒரு டான் தங்கம்(அதே பன்ச் டயலாக் ஸ்டைலில் படம் நன்றாக இருந்தால்)

சிங்கம்- பாக்கப்போறியா பயன்திடுவாய் (சூர்யாவின் பன்ச் டயலாக் ஸ்டைல் தான் இதுவும்)(படத்தை பார்த்து வெறுப்பில் இருந்தால்)

சிங்கம் - சீ (என்னத்த சொல்ல படம் அப்படி சொல்ல வைத்தால்)

சிங்கம் - Stole my Heart (படப்பாடலை ஒட்டியது) (இரண்டு அர்த்தத்திலும் எடுக்கலாம் நல்ல படமாக இருந்தாலும் சொல்லலாம் கேட்டதேன்றாலும் ஓகே )

சிங்கம் - கடித்துக்குதறியது என்னை (படம் பாடாய் படுத்தி இருந்தால்)

சிங்கம் - தமிழ் சினிமாவின் ராஜா (மிகப்பெரிய வெற்றியை பெறும் என எண்ணினால்)

சிங்கம் வயசு போயிடிச்சு(கதை அதர பழசாக இருந்தால்)

கர்ஜிக்கும் சிங்கம்(படம் சூப்பர் என்றால்)

கர்ஜிக்காத சிங்கம்(படம் மொக்கை என்றால்)

சிங்கம்=பபில்கம்=இழுவை(இதுக்கு மேல என்ன சொல்ல)

சிங்கம் - தனிக்காட்டு ராஜா (வேற படங்கள் இல்லாததால் தப்பித்து விடும் என்றால்)

சிங்கம் - He is நரை(த்த) சிங்கம்(படம் பழைய படங்கள் போல் இருந்தால்)

சிங்கம்- The real King of Kollywood(படம் சூப்பர் டூப்பர் ஹிட என்றால்)

சிங்கம்- தமிழ் சினிமாவின் ஒரு அங்கம்(படம் நன்றாக இருந்தால் முக்கியமான படம் என்ற கருத்திலும் சாதாரண ஒரு படம் என்றால் பத்தோடு பதினொன்று என்ற கணக்கிலும் இடலாம்)

சிங்கம்- தமிழ் சினிமாவுக்கே பங்கம்.(ஏண்டா இப்படி ஒரு படம் எடுத்தாங்க என திட்டணும் எண்டால.)

என்னால் முடிந்தவரை இரவு உறக்கத்திலும் நினைவில் வந்த தலைப்புக்கள் இவை. பதிவுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் என நம்பிறன். இல்லை வேற தலைப்பு சொல்லப் போறிங்களா சொல்லுங்க. இதுதான் தலைப்பா வைத்துக்கொள்ளுங்க. அப்புறம் இன்னொரு விஷயம் கடந்த இரண்டு நாட்களாக என் இணைய இணைப்பில் தேக்கம் காரணமாக பதிவிட முடியவில்லை. இது கூட நண்பனின் இணைய இணைப்பில் வரும் பதிவு. அதனால் தான் உங்கள் பதிவுக்கு பின்னூடம் போட முடியல அதுக்காக என்னை யாரும் பழிவாங்கிடாதீங்கோ. என் இணைய இணைப்பு சரி வந்தவுடன் என் கடமையை நிறைவேற்றுகின்றேன்.
Share:

Monday, May 24, 2010

புலிகள் இல்லாத நாடு எது? எது? எது? - சொல்லலாம் வாங்க.



பதிவுகள் பல எழுதியாச்சு. ஆனால் இது எனக்கு புதுசு. சிலர் இப்படி எழுதி இருக்கின்றனர். ஆனால் இந்த பதிவை எழுதப்போவதே நீங்கள் தான். யான் அறிந்த விடயங்களை கேள்விக்கணையாக தொடுத்துள்ளேன். எதுவென்று தெரிந்திருப்பின் சடக் என்று பதில் சொல்லுங்கள். பதில் சொல்லும் நேரத்தில் நீங்கள் சொல்லும் சரியான விடைகள் பின்னூட்டத்தில் மறைக்கப்படும். போட்டி நிறைவுக்கு வரும் வேளை உங்கள் பெயருடன் விடைகள் வெளியிடப்படும். என்ன எது எது என்று அதைக் கண்டு பிடிக்க நீங்கள் ரெடியா வாங்க முதலில் புலிகளைக் கண்டு பிடிக்கலாம்.

1. தபாலட்டைகளை அறிமுகப்படுத்திய நாடு எது?

2. உலோக நாணயத்தை முதலில் வெளியிட்ட நாடு எது?

3. போர் விமானத்தை முதன் முதலில் பயன்படுத்திய நாடு எது?

4. உலகின் மிகப்பழமையான விளையாட்டு எது?

5. மிக வேகமாகப் பேசக் கூடிய மொழி எது?

6. நாத்திக நாடு எனப்பெயர் பெறும் நாடு எது?

7. முதலில் பனிச்சறுக்கு விளையாடப்பட்ட இடம் எது?

8. மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த தபால் தலையை முதலில் வெளியிட்ட நாடு எது?

9. மூன்று வயிறினைக் கொண்ட உயிரினம் எது?

10.புலிகள் இல்லாத நாடு எது?
Share:

Sunday, May 23, 2010

சைவர்களின் இறந்தவருக்கான கிரியைமுறை - பாகம் 2



அஸ்தி சஞ்சயனம் - காடாற்று.

உடலை தகனம் செய்த அடுத்த நாள் அல்லது மூன்றாம்,ஐந்தாம்,ஏழாம்,ஒன்பதாம் நாட்களில் எது வாய்ப்பாக அமையுமோ அதில் ஒரு நாளில் காடாற்று செய்யமுடியும். உடலை தகனம் செய்த இடத்தில் கால் பக்கத்தில் தொடக்கி தலைப்பக்கமாக நீரூற்றி எரியும் நெருப்பை அணைத்த பின் தலைப்பகுதியை வைத்து எரித்த இடத்தில் விளக்கு ஏற்றி கும்பம் வைத்து பூசைக்கு தேவையான அபிஷேக பொருட்களை வைக்கவும். மண்கலசம் ஒன்றில் நீர் ஊற்றி அதை தலைப்பகுதியில் வைக்கவும். தகனம் செய்யப்பட்ட உடல் எரித்த இடத்தில் முழு உருவமும் இருப்பதாக பாவனை செய்து கால் பகுதியில் இருந்து தலை நோக்கி கர்த்தா மேற்க்கே பார்க்கும் படி நிற்க புறங்கையால் அபிஷேகம் செய்ய வேண்டும். பின் முழங்கால்கல், நாபி,மாபு,நெற்றி,தலை ஆகிய ஐந்து இடத்திலும் திருநீறு, சந்தானம், மலர்கள், வைத்து தூப தீபம் காட்டி வணங்கி மேலே சொன்ன ஐந்து இடங்களிலும் இருக்கும் எலும்புகளை ஒழுங்காக எடுத்து தலைமாட்டில் இருக்கும் பாலுள்ள கலசத்தில் வைத்து அஸ்திரத்தினால் மூடவேண்டும்.

பின்னர் ஒரு எலும்பையும் விடாது எல்லாவற்றையும் எடுத்து(முடியுமானவரை கர்த்தாவே எல்லாவற்றையும் எடுப்பது நல்லது) ஒன்றாக்கி ஒரு பாத்திரத்தில் எடுக்கவேண்டும். பின் அந்த இடத்தை சுத்தம் செய்து நவதானியங்களை விதைத்து நெற்பொரி,மா அடை,தாம்பூலம்,பழங்கள் முதலியவற்றை சாஸ்திரப்படி பலியிட்டு முன்னர் கலசத்தில் எடுத்த அசதியையும், ஏனைய எலும்புகள் சாம்பல் முதலியவற்றையும் எடுத்து கர்த்தா வடக்கு முகமாக பார்க்க நின்றவண்ணம் தெற்குப் பக்கமாக போட்டுக் கரைத்து விடவும். பின்னர் அவர் அதே நீர்நிலையில் தோய்ந்து நக்கினதானம் செய்ய வேண்டும். ஒரு குடத்திலே பச்சை அரிசியை நிரப்பி அக்குடத்தை சுற்றி வஸ்திரம் கட்டி விளக்கில் நெய் ஊற்றி குடும்பஸ்தராக இருக்கும் ஒரு சிவப்பிராமனருக்கு தானமாக கொடுக்க வேண்டும்.

எட்டுக்கிரியை.

இதை பற்றி எந்த வித சாஸ்திரங்களும் இல்லை என்று சொல்கின்றனர். இருப்பினும் இது காலகாலமாக வழக்கத்தில் இருந்தே வருகின்றது. தகனம் செய்த நாள் தொடக்கம் அந்தியேட்டி வரை இறந்தவரின் படத்தை ஒரு இடத்தில் வைத்து விளக்கேற்றி தாம் உண்ணும் நாவினை அவர்களுக்கும் வைத்து வருவது வழக்கமாக இருக்கின்றது. அதேநேரம் இறந்தவருக்கு பிடித்த உணவுகள் பொருட்களை இறந்த எட்டாம் நாள் படைத்து வருவதும் வழக்கமான ஒன்றாகும்.

அந்தியேட்டி.

இறந்து முப்பத்தோராம் நாள் செய்யப்படும் கிரியையாகும். (இது சாதாரண சைவர்களுக்கு) பிரேதத்தின் உடலுக்கு பதிலாக தர்ப்பையினால் சரீரம் போல செய்து அந்தியேட்டி செய்யப்படும். சூர்ணோத்தவக் கிரியை முடித்து அந்த தர்ப்பையினால் செய்யப்பட்டதை தகனம் செய்வர். இது புனர் தகனம் எனப்படும். பின் அங்கு பாசாணம் ஸ்தாபித்து அதற்க்கு அபிஷேகம் போன்றன செய்யப்படும். இங்கு முப்பது பிண்டங்கள் இடப்படும். இந்த பிண்டங்கள் பச்சை அரிசிச்சாதம், கறிவகைகள், பலகாரங்கள், பழங்கள் எல்லாவற்றையும் சேர்த்து உருட்டி பிசைந்து இடவேண்டும். அதன் பின் ஏகோத்திர விருத்தி செய்யப்படும். பாசாணத்துக்கு தூப தீபம் காட்டி பூசை முடித்த பின் கும்பம், பாசாணம், பிண்டம் ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து நட்டுவ மேளம் கொட்ட எடுத்துச் சென்று பிண்டத்தை ஒருவரும் அதன் பின் கும்பத்தை ஒருவரும், அதனைத் தொடர்ந்து பாசானத்தை ஒருவரும் எடுத்துச் சென்று கர்த்தா இடையளவு தண்ணீரில் நின்றவண்ணம் வடக்கே நோக்க தெற்கு பக்கமாக பிண்டத்தை முன்னும், பின் கும்பத்தை வடக்குப் பக்கமாகவும், பாசாணத்தை தலைக்கு மேலால் தெற்குப் பக்கமாகவும் நீர்நிலையில் இட்டு ஸ்நானம் செய்யவேண்டும். பின்னர் வீட்டு வாசலை அடைந்ததும் வேப்பிலையை தின்று நெருப்பு,சாணம்,மண்,வெண்கடுகு ஆகியவற்றை தொட்டு கல்லின் மேல் கால் வைத்து அல்லது உலக்கையை கடந்து செல்ல வேண்டும்.

வீட்டுக்கிரியை அல்லது சபிண்டீகரணம்.

வீடினை கழுவி சுத்தம் செய்து புண்ணியாகவாசனம் செய்த பின்னர் வீட்டுக்கிரியை செய்ய வேண்டும். வீட்டுக்கிரியை செய்பவர் பிராமண குருக்களே. விக்னேஸ்வர பூசை,புண்ணியாகவாசனம்,பஞ்ச கவ்விய பூசை முதலிய கிரியைகளை செய்து நவசிராத்தம், ஏகோத்திர விருத்தி, சம்கிதை,இடபதானம், ஏகோதிட்டம்,மாசிகங்கள்,சோத கும்ப சிராத்தம், சபிண்டீகரணம் சிவதே ஒழுங்குமுறை.

நவசிராத்தம்- பச்சை அரிசி,காய்கறி வகைகள் தானம் செய்வது.

இடபதானம்- எருதுக்கு அலங்காரம் செய்து அதனை பூசித்து தானம் செய்தல். இதற்க்கு வசதி இல்லாதவர்கள் ஒரு தாம்பாளத்தில் அரிசியை பரப்பி அதில் இடபத்தை கீறி அதன் மேல் தேங்காய் ஒன்றை வைத்து அதில் இடபதேவரை இருப்பதாக எண்ணி பூசித்து ஆசாரியார் சொற்படி மந்திரங்களை கூறி தட்சனையுடன் வழங்க வேண்டும்.

ஏகோதிட்டம்- சர்பாத்திரமான ஒரு குருவை மேற்கு முகமாக இருக்க வைத்து ஆசனம் கொடுத்து சந்தானம் பூக்கள் எள்ளு ஆகியவை கொடுத்து உபசாரங்கள் செய்தது தானம் கொடுக்க வேண்டும். இதற்க்கு இருபத்திநான்கு ஸ்தானங்கள் சொல்லப்படுகின்றது. பவித்திரம்,பூணூல்,கமண்டலம்,உருத்திராக்கம்,பாதுகை,தண்டம்,கௌபீனம்,திருநீறுப்பை, யோக பட்டம், குடை, குலலாய், மேல்வஸ்திரம், வஸ்திரம்,பொன்,மோதிரம்,ரத்தினம், நெய்,வெண்ணெய், பசு,பூமி,உண்பதற்கு வேண்டிய பொருட்கள், சர்வதானியங்கள், அலங்காரப் பொருட்கள், தாசி,தாசர்கள் போன்றவற்றை கொடுக்கலாம். ஏகோதிட்டத்துக்கு ஒரு பிண்டமிட்டு அதை பூசிக்க வேண்டும்.

சோதகும்ப சிராத்தம்- நீர் நிறைந்த பாத்ஹ்டிரத்தை சாதத்துடன் தானம் செய்தல்

வைதரணி கோதானம்- பசுவை தானமாக கொடுத்தல்(முடியாதவர்கள் பணமாக கொடுக்கலாம்.)
Share:

Saturday, May 22, 2010

சைவர்களின் இறந்தவருக்கான கிரியைமுறை



இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஒருநாள் இந்த மண்ணை விட்டு செல்லத்தான் வேண்டும். அவர் ஆள்பவனாக இருந்தாலம் சரி அடிமையாக இருந்தாலும் சரி. இது காலம் காலமாக நான் உணர்ந்து கொண்டிருக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத கசப்பான உண்மை. மண்ணில் ஒரு உடலில் ஆன்மா வாழும்வரை அந்த ஆன்மா தான் பின்பற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டே அவர்களுக்கான இறுதிச் சடங்குகள் இடம்பெறுகின்றன. ஆனால் இதி கூட கவலைக்கிடமான விஷயம் சில இடங்களில் இந்த சடங்கை செய்ய வருபவர்களே தப்பாக செய்வதும் சில பெரியவர்கள் இதை அறியாமல் தப்பாய் வழிநடத்துவதும் சிலர் ஏனோ தானோ என்று செய்வதும் இன்று பல இடங்களில் நடந்தேறுகின்றது.

இன்றைய இளம் தலைமுறையில் பலருக்கு இந்த சடங்குகள் சம்பிரதாயங்கள் தெரியாமல் இருப்பது கண்கூடு. அதற்க்கு நானும் விதி விலக்கல்ல. அப்படி இருக்கையில் இந்த பதிவு எப்படி என நீங்கள் கேட்கலாம். இன்று காலை எனக்கு உறவினர் ஒருவரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பில் தன தந்தையின் நினைவேட்டுக்கு பல அரிய விஷயங்களை சேர்க்கவேண்டும் அதில் இந்த சடங்குகள் சம்பந்தமான விடயம் கட்டாயம் இடம்பெற வேண்டும் காரணம் பலர் அறியாமல் தடுமாறுகின்றனர் என்று சொன்னார். அதற்கு என்னாலான உதவியாக இதை செய்ய சில மூத்தோரிடமும் சில நூல்களிலும் படித்து அதன் தொகுப்பாக இதை இங்கே தருகின்றேன்.

இந்த வழக்குகள் சில இடங்களில் மாறி இடம்பெறுகின்றது என்றாலோ? மேலதிக கருத்துக்கள் நடைமுறைகள் உங்களுக்கு தெரிந்திருந்தாலோ பின்னூட்டத்தில் சொன்னால் நம்மை போல் பலர் அறியக்கூடியதாக இருக்கும்.

ஒரு மனிதனாக ஒரு நாட்டவனாக ஒரு தமிழனாக ஒரு உயிராக பிறந்தாலும் நானும் ஒரு சைவ சமயத்தை பின்பற்றுபவன். இங்கே நான் இடும் சடங்குகள் பற்றிய இடுகை சைவ சமயத்தை சார்ந்தவர்களுக்கே. சைவர்கள் பிறப்பது முதல் இறப்பது வரை பல்வேறு சடங்குகளை சந்திப்பவர்கள். அந்த வகையில் இறந்ததன் பின் செய்யப்படும் சடங்குகள் அபரக்கிரியை என அழைக்கப்படுகின்றது. அதாவது அபாரம் என்றால் பிந்தியது எனவே பிந்திய கிரியை என இது பொருள்படுகின்றது. இந்த சடங்குகளை செய்வதன் மூலமே பிதிர்கள் சாந்தி அடைகின்றன என்ற நம்பிக்கை உண்டு.

இந்த அபரக்கிரியையில் சூர்ணோத்சவம்(மரணச்சடங்கு), தகனம், அஸ்திசஞ்சயனம்(காடாற்று), அந்தியேட்டி, பாசாணபூசை, ருத்திர பலி, நவசிராத்தம், ஏகோத்திரவிருத்திசம்கிதை, இடபதானம், ஏகோதிட்டம், மாசியம், சோதகும்பசிராத்தம், சுவர்க்கமாதேயம், வைதரணிகோதானம், சபிண்டீகரணம்(வீட்டுக்கிரியை) சிராத்தம் முதலிய கியைகள் நடைபெறுகின்றன.

இதிலே தகனத்துக்கு முன்னர் இறந்தவரின் உடலுக்கு விசேட அந்தியேட்டி நிருவாண அந்தியேட்டி ஆகியவை இடம்பெறும். மாமிச உணவு உண்ணாத நாலாம் வருணத்தாருக்கும் இறந்தவரின் உடலில் (பிறேதத்தில்) சமய அந்தியேட்டி தகனம் செய்ய முன் செய்யப்படுவதே வழக்கம். இந்த கிரியைகளை செய்யும் ஆசாரியாரும் செய்விக்கும் கர்த்தாவும் இவை பற்றிய முழுமையான விளக்கத்தை தெரிந்து கொண்டு செய்தால் தான் முழுமையான நன்மை கிட்டும். மரணச் சடங்கு தொடக்கம் பாஷாணபூசை வரையுள்ள கிரியைகளை சைவ ஆசாரியர்களும் சபிண்டீகரணம் சிராத்தம் முதலிய கிரியைகளை பிராமண ஆசாரியார்களும் செய்து வைக்கிறார்கள்.

ஒருவர் நோய்வாய்ப்பட்டு அல்லது வாவ்திபமடைந்து மரணப்படுக்கையில் இருக்கும்பொழுது அவரது பாவங்கள் நீங்கி நற்கதி அடையும் பொருட்டு பசு தானம் செய்யப்படுவது வழக்கம். இதனை உத்திராந்தி தானம் என்பர். இது உயிர் உடலை விட்டு பிரியும் நேரம் செய்யும் கிரியையாகும். பின்னர் திருமுறைகள் ஓத வேண்டும். திருநீறு அணிவித்து புண்ணிய தீர்த்தம் அல்லது பால் பருக்கி வலது காதில் பஞ்சாட்சர மந்திரம் ஓத வேண்டும்.
மரணனமடைந்தவரை உடலுக்கு குளிப்பாட்டி அவரை அலங்கரித்து தர்ப்பைப்புல் பரப்பி தலை தென் புறம் வைக்க பிரேதத்தை வைத்து படுத்த வேண்டும். இறந்தவரின் உடலின் தலைப்பகுதியில் விளக்கேற்றி வைக்கவேண்டும்.

மரணச் சடங்கு - சூர்ணோத்சவம்.

இறந்தவர் தகப்பனாக இருப்பின் அவரின் மூத்த மகனும் தாயாக இருப்பின் கடைசி மகனும் கிரியை செய்வதே முறை. பிள்ளைகள் இல்லாதவிடத்தோ அல்லது அவர்களால் கிரியை செய்யமுடியாத சந்தர்ப்பங்களில் கீழ்வரும் ஒழுங்கில் பிவருவோர் கிரியை செய்ய உரித்துடையவர்கள்.
மகன்
மனைவி
மகள்
இறந்தவரின் அண்ணன்
இறந்தவரின் இளைய சகோதரர்
இறந்தவரின் சகோதரரின் மகன்
இறந்தவரின் தந்தை
இறந்தவரின் தாய்
இறந்தவரின் மருமகன்
இறந்தவரின் சகோதரி
இறந்தவரின் சகோதரியின் மகன்
தந்தை வழி சபிண்டன்
சமானோதகன்
தாய்வழிச் சபிண்டன்
தாயின் சமானோதகன்
சீடன்
குறு
மகளின் கணவன்
நண்பன்
அரசன்

இதேபோல மகனால் மரணச்சடங்கை தொடர்ந்து இடம்பெறும் கிரியை செய்ய முடியாதென்றால் இன்னொருவர் அந்த கிரியையை செய்யலாம். ஆனால் இவரையும் சேர்த்து வைத்தே ஆரம்ப கிரியை செய்யவேண்டும். பொதுவாக அந்தியேட்டி கிரியை இறந்தவரின் 31 ஆம் நாள் செய்யப்படுவதே வழக்கம். இந்த தினத்தை எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாது.

மரணக்கிரியை நடைபெற இருக்கும் இடத்தில் மண்டபம் அமைத்து வெள்ளை கட்டி, மாவிலை ,தோரணம், பூக்களால் அலங்கரித்து அந்த இடத்தினை சாணத்தினால் மெழுக வேண்டும். மரணக்கிரியை செய்யும் வேளை நடுவில் ருத்திரகும்பமும், அதனை சுற்றி அட்ட திக்கு பாலகர் கும்பமும்,மேற்குப் பக்கத்தில் புண்ணியாகவாசன கும்பமும், கிழக்குப் பக்கத்தில் உரல், உலக்கை, பேருக்கு பதில் மணி, மயானத்துக்கு கொண்டு செல்லும் மண்குடக்குடக் கும்பம் வைக்க வேண்டும். அபிஷேகம் செய்யும் முகமாக பிறேதத்தினை வீட்டின் தென் புறத்தில் வடக்கு நோக்கி தலை தெற்குப் பக்கம் இருக்கும் வண்ணம் கிடைத்த வேண்டும். அதன் பின்னர் கர்த்தா அரப்பு எண்ணெய் முதலியவற்றை சிரசில் வைக்க வேண்டும். பின் அரிசிமா, மஞ்சள் மா, அபிஷேகக் கூட்டு,பால்,தயிர்,இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். கர்த்தா மேற்கு முகமாக நின்று கீழிருந்து மேலாக அவரின் புறங்கையினால் வேறு ஒருவர் உதவியுடன் இந்த பிஷேகம் செய்ய வேண்டும். அதன் பின் கும்ப அபிஷேகம் நடைபெறும். அதாவது பன்னீர் போன்ற வாசனைப் பொருட்கள் முதலியவற்றை சிரசிலே சாத்த வேண்டும். பின்னர் பிரேதத்தை அலங்கரித்து மண்டபத்துக்கு கொண்டு வந்து தெற்கு பக்கமாக தலையை வைத்து திருநீறு பூச வேண்டும். பின்னர் சுண்ணம் இடிக்கப்படும்.அறுகு, மஞ்சள் போடி போன்றனவற்றை உரலில் இட்டு பேருக்கு பதிலாக மணியடித்து பத மந்திரம் சொல்லி எட்டுத்தரம் இடித்து பின்பு, திருப்போர்சுன்னப்பாடி சுன்னமிடிக்க வேண்டும். சுண்ணமிடித்து சுண்ணப்பொடியும் சேர்த்து பிரேத அபிஷேகம் நடைபெற வேண்டும்.

சுண்ணம் இடிக்கும் தறுவாயில் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உட்பட உரித்துடைய சந்ததிக்காரர்கள் பந்தம் பிடிப்பது வழக்கம். பின்னர் பெண்கள் வாய்க்கரிசி இட்டு பிரேதத்தின் வாய்,கை,,கால்,விரல்கள் ஆகியவற்றைக் கட்டி பூத உடலை வஸ்திரத்தினால் மூடி பாடையில் வைத்துக் கட்டி கால் முன்பக்கமாக இருக்கும் படி மயானத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். கொள்ளி வைக்க இருப்பவர் நெருப்புச் சட்டியுடன் பூத உடலுக்கு முன்பாக செல்ல ஆசௌச உரிமையாளர்கள் பிரேதத்தின் பின் புறம் செல்ல வேண்டும். ஏனையோர் பின் செல்லக்கூடாது. மயானத்தை அடைந்ததும் முதலில் தலைப்பக்கமும் பின்னர் கால்புறமும் செல்லக்கூடிய வகையில் பிரேதத்தை உள்நுழைக்க வேண்டும். மயானத்தில் வடக்கு தெற்காக விறகினை அடுக்கு அதன் மேல் பிரேதத்தினை வைத்து வாய்க்கரிசி இடுபவர்கள் இட வேண்டும். பின் கர்த்தா மட்குடத்தை இடது தோளில் வைத்து சிதையை இடப்பக்கமாக சுற்றி வந்து குடத்தை தலைப்பக்கத்தில் வைத்து கும்ப நீர், அரிசி, பவுன் அல்லது காசுடன் வாய்க்கரிசியிட்டு முன்போல குடத்தினை இடதுபுற தோளில் வைத்துக் கொண்டு கொள்ளிக்கட்டையை ஏந்திய வண்ணம் மீண்டும் இடப்புறமாக மூன்று முறை சுற்றி வர ஒவ்வொரு சுற்றின் போதும் குடத்தில் கத்தி நுனியினால் துவாரமிட்டு சுற்றி முடித்த பின் தலைப்பாகத்தில் தெற்கு முகமாக நின்று பின்புறமாக பிரணவம் சொல்லி கொள்ளியை பிரேதத்தின் சிரசில் வைத்து குடத்தை முன்புறமாக உடையும்படி போட்டு விட்டு, பின்பு கால்மடில் சென்று பவித்திரம், பூணூல் ஆகியவற்றை ஆகியவற்றை சிதையில் போட்டு திரும்பி பாராமல் செல்ல வேண்டும்.

இந்தப்பதிவு இன்னும் தொடரும். இதன் பின் செய்ய வேண்டிய கடமைகள் என்ன முழு விபரத்துடன் விரைவில் இதன் தொடர்ச்சி...காத்திருங்கள்.
Share:

Friday, May 21, 2010

காதல் மொழி எது?- கல்வி



* கட்டாயக்கல்வியின் வயதெல்லை 5-16

* பாடசாலைகளின் வகைகள் TAB, IC, Type II, Type III

* கிராமப்புறங்களில் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் கல்வி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய வகைப் பாடசாலை இசுறு என அழைக்கப்படும்.

* இலவசக் கல்வி முறையை அறிமுகப்படுத்திய நாடு நெதர்லாந்து.

* உலகில் முதன் முதல் கல்வித்துறையில் பரீட்சைகளை நடத்திய நாடாக சீனா பெருமை பெறுகின்றது.

* இலங்கையில் கல்வித்துறைக்கான நிர்வாக கட்டமைப்புக்களுக்கான கூறுகள்.
கல்வி அமைச்சு

மாகாணக் கல்வி அமைச்சு.
மாகாணக் கல்வித் திணைக்களம்.
வலயக் கல்வி அலுவலகம்
கோட்டக் கல்வி அலுவலகம்.
பாடசாலை.

உலகில் உள்ள ஒரு சில மொழிகளும் அதற்கான சிறப்பு பெயர்களும்.

தமிழ் - பக்தி மொழி.
ஆங்கிலம் - வணிக மொழி.
பிரெஞ்சு - காதல் மொழி
இத்தாலி - இசை மொழி
கிரேக்கம் - சட்ட மொழி
உருது - கவிதை மொழி
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive