உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Sunday, August 22, 2010

விஜய் படத்தில் அஜித் பாட்டு.- ஒரு வில்லங்கம்



தமிழ் சினிமாவில் ரஜினி-கமல் அடுத்த தலைமுறை நடிகர்களாக இருக்கும் விஜய்- அஜித் ஆரம்பகாலத்தில் சேர்ந்து நடித்த இந்த இரண்டுபேரும் அதன் பின் பிரிந்து பின்னர் பகை மூண்டு அது திரையிலும் எதிரொலித்து அஜித்தின் மகள் பிறப்புடன் எல்லாம் ஓய்ந்து இந்த மானும் புலியும் ஒன்றாய் தேநீர் குடித்து அதுதாங்க விஜய் நேரடியாய் வைத்தியசாலைக்கு சென்று ஷாலினியும் அவர் பேபியையும் பார்த்து அஜித்தை குடும்ப சமேதரராய் அழைத்து விருந்து கொடுத்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தனர். ரஜினி கமல் போல தாங்களும் நல்ல நண்பர்கள் என காட்டிக்கொண்டதுடன் அன்புடன் நடந்ததோடு ஒருவரை ஒருவர் பாராட்டினர். இதற்க்கு கண்ணு பட்டது போல குருவியில் அஜித்தை வாரும் வேலையை விஜய் செய்தாலும் அதன் பின் பெரிதாக எந்த எதிர்ப்பும் இருபுறமும் இருந்து கிளம்பாததால் அப்படியே அடங்கிப்போனது. இந்த நிலையில் தான் அஜித், கருணாநிதியிடம் எங்களை கட்டாயப்படுத்தி விழாக்களுக்கு அழைக்கின்றார்கள் என முறையிட அதற்க்கு எதிர்ப்புக்கிளம்ப விஜய், அஜித்துக்கு ஆதரவாக வி.சி.குகநாதனிடம் பேசியதாகவும் ஒரு கதை உண்டு.

இப்படி இவர்களுக்குள் நட்பு இருக்கின்றதா இல்லையா என்பதையும் தாண்டி ஒரு போட்டி இருக்கும் நிலையில். ரசிகர்கள் நாங்கள் நினைக்க வேண்டிய விடயம் என்னவென்றால் உண்மையில் நடிகர்களுக்கிடையில் எந்த பிணக்கும் இருக்காது. அதேபோல விஜய் ரசிகர்கள் அஜித்தை எதிரியாய் பார்ப்பதும் இல்லை அதேபோல அஜித் ரசிகர்கள் விஜயை எதிரியாய் பார்ப்பதும் இல்லை(ஒரு சில வக்கிர எண்ணம் கொண்டவர்களை தவிர்த்தால்) இடையில் இருந்து கொண்டு சில சுண்டைக்காய் பயலுகள் தான் உந்த உசுப்பேத்தும் வேலையை செய்கின்றார்கள். முதலில் அவர்களுக்கு வைக்கணும் ஒரு பெரிய ஆப்பு. சரி இவர்கள் தான் இப்படி செய்கின்றார்களே நடிகர்கள் ஆவது இதை கண்டிக்கலாமே என்று பார்த்தால் வரலாறு இதற்க்கு பதில் சொல்லும். எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல் காலம் தொட்டு சிம்பு-தனுஷ் வரை போட்டி நடிகர்கள் தங்கள் விளம்பரம் படம் ஓடனும் மற்றும் ஊடக பார்வையை கருத்தில் கொண்டு இந்த மாயையை கண்டும் காணாமல் இருக்கின்றார்கள். அவர்கள் ரசிகர்கள் நாங்கள் தான் உசுப்பிக்கொண்டு திரிகின்றோம்.

இந்த பதிவை நான் எழுத முக்கிய காரணம். நான் இப்போது இருப்பது இங்கிலாந்தில். என் படிப்புக்காய் வந்த இடத்தில் ஒரு சந்தோஷ செய்தியும் உண்டு அதை ஆறுதலாக ஒரு பதிவில் சொல்கின்றேன். அதை விடுத்து இங்கே இருக்கும் சுட்டிப்பிளைகளை பார்த்தால் அவர்கள் விஜய் ரசிகர்களாக தான் இருக்கின்றார்கள். போடும் உடையில் இருந்து அவர்களை விஜய் ஆக்கிரமித்திருக்கின்றார். அந்த வகையில் வில்லு படத்தை பார்க்கும் நிலை எனக்கு ஏற்ப்பட்டது. அந்த மரண மொக்கையை கூட அந்த சின்ன பிள்ளைகள் ரசித்து பார்த்தது விஜய் என்னும் பெயருக்கு. இந்த படத்தை முன்னர் ஒரு தடவை நான் பார்த்திருந்தாலும் இன்று தான் இன்னொரு விடயத்தை கவனித்தேன். விஜய் தான் குளிக்கப்போகும் நேரம் அவர் வாயில் முணு முணுத்த பாடலை கேட்டதும் எனக்கு தூக்கி வாரிப்போட்டது. அது வேறு ஒரு பாடலும் அல்ல. அஜித்தின் வாலி பட ஓ சோனா ஓ சோனா பாடல்.........தன சக போட்டி நடிகர் ஒருவரின் பாடலை வேண்டுமென்றே படத்தில் இடம்பெற வைத்தாரோ அல்லது எதேர்ச்சையாய் வந்ததோ தெரியாது. ஆனால் நடிகர்கள் ஒரு போதும் ஒருவருக்கு ஒருவர் எதிரி இல்லை. எனவே ரசிகர்களே ஏமாறாதீர்கள் என்று தான் தோணியது.

அப்புறம் லண்டன், வந்து சிரித்து அழுது கொஞ்சம் சுத்திப்பார்த்து நாட்கள் போகிறது. ...போக போகத்தான் தெரியும் என பயப்படுத்திரான்கள் போக போக நானும் சொல்லுறன். நேரம் கிடைக்கும் போது வாறன்...இப்போ வரட்டா ......
Share:

Tuesday, August 10, 2010

இணையம் இல்லாமல் வாழ முடியாதெண்டு எவன் சொன்னது?

வணக்கம் நண்பர்களே!

என்னடா நிறைய நாளைக்கு பிறகு இவன் எழுதிறான் என பார்க்கின்றீர்களா? ஓ ஒருவேளை புதுசா ஏதும் வேலைக்கு போயட்டானோ இல்லை ஒரு சில பதிவர்கள் போல கா_ல் இல் மாட்டி விட்டாரோ என்று எல்லாம் கற்பனை பண்ணப்படாது. நாங்கள் எப்போதும் வீட்டிலேயே பிசியாய் இருக்கும் பிரபலங்கள்.(நாங்கள் தான் அப்படி சொல்லணும்) அப்போ என்ன மண்ணாங்கட்டிக்கு பதிவு எழுதவில்லை? ஏன் நீ குடியிருக்கும் மூஞ்சி புத்தகப்பக்கமும் வரவில்லை இப்போ இங்கே வந்து என்ன பெரிசா அலம்பிறாய் என கேட்கலாம். பதில் சொல்லவா? சொல்லத்தானே வேணும்.

கடந்த மாதம் எனக்கு டயலாக் வழங்கி இருந்த இணையப்பாவனைகான எல்லையை நான் தாண்டி விட்டேன் என என் இணையம் மெதுவாகி விட்டது. நமக்கு எதுவும் பாஸ்டா இருந்தா தானே கிக். சிலோ ஆனதில் ஒரு சில நாள் அதை பாவிச்சு அலுத்துப்போய் அப்பிடியே இணையத்தை விட்டு ஒதுங்கி இருந்தேன். அந்த நேரம் எனக்கு அது உதவியாய் இருந்தது. கரணம் பல ஆய்வுகள் புண்ணாக்குகள் எல்லாம் இணையத்தை அதிகம் பாவிக்கும் நபர்கள் அந்த இணையம் இன்றி இருப்பது கடினம் என்றார்கள் அந்த இணையம் இல்லாமல் ஒரு அமைதியான வாழ்க்கை எப்படி இருக்கும் டென்சன் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் என பார்க்க எனக்கும் ஒரு ஆசை தான். காரணம் நான் அதிக நேரம் இங்கே குந்தி இருப்பவன் ஆனால் இதை விட்டு இருக்கும் போது எனக்கு நிறைய நேரம் வேறு இடத்தில் செலவழிக்க கிடைத்தது. சோ நோ கவலை. இணையத்துக்கு அடிமையானவன் போல இருந்த நான் இணையம் இன்றி கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் இருந்தேன் இணையத்தோடு இருந்த நாளை விட இணையம் இல்லாத நாள் உண்மையில் மன அமைதியோடு இருந்தது.

இணையம் கூடவே இருப்பதும், நாம் விலகி இருப்பது, இருந்தும் மன கட்டுப்பாடோடு இருப்பது என எல்லாமே நம் கையில் தான் இருக்கின்றது. ரஜினி பட பாடல்போல கையில் கொஞ்சம் காசு இருந்தால் அதற்க்கு நீதான் எஜமானன் கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அது தான் உனக்கு எஜமானன் என்பது போல நம் மன கட்டுப்பாட்டில் இருக்கும் வரை இணையம் என்ன எதுவுமே நம்மை ஒன்றும் செய்யாது. அடிமையாவதும் அதில் இருந்து வெளியே வருவதும் நம் கையில் தான்.

அடுத்து இன்னொரு விஷயம். கடந்த எட்டாம் திகதி எனது இருபத்திரண்டாவது பிறந்தநாள்(வயசை சொன்னால் நம்பணும் நான் பிறந்தது 8.8.88 ங்கோ). வெற்றியில் கடந்த வருடம் வேலை செய்யும் போது ஏராளமான நேயர்கள் வாழ்த்தி இருந்தார்கள். இந்த வருடமும் அந்த நண்பர்கள் எனக்கு வாழ்த்தியது அதிர்ச்சி கலந்த சந்தோசம். என்னை அவர்கள் எல்லோரும் மறந்திருப்பர் என நினைத்தேன். ஆனால் என்னை மறக்காமல் வாழ்த்தி திக்கு முக்காட வைத்துவிட்டனர். சிலர் என் தொலைபேசிக்கு அழைப்பெடுத்தி வாழ்த்தியதும் சந்தோசம். பாடசாலை நண்பர்கள், முகப்புத்தாக நண்பர்கள், மின் அஞ்சல நண்பர்கள், பதிவுலக நண்பர்கள், வானொலி நண்பர்கள், வானொலி சக அறிவிப்பாளர்கள், வானொலி நேயர்கள் என அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள். உங்கள் அன்பான வாழ்த்து என்றைக்கும் நமக்கு பூஸ்டு.

அதெல்லாம் இருக்கட்டும் என்னது டிரீட் கேட்கிறியளா? என்னது டிரீட்டா

ஹா ஹா
ஹீ ஹீ
ஹா ஹீ
ஹா ஹீ
ஹா ஹா
ஹீ ஹீ
ஹா ஹீ
ஹா ஹீ
ஹா ஹா
ஹீ ஹீ
ஹா ஹீ
ஹா ஹீ

யாரபாத்து டிரீட் கேட்கிரிய? நம்மளை பத்தி இவங்களுக்கு தெரியல நாம அடுத்தவங்க கிட்ட தான் டிரீட் கேட்பம் நாம யாருக்கும் கொடுத்ததில்லை. கொடுக்கப்போவதும் இல்லை. (என்னது டயலாக்கை வேற சுட்டு போடுறான் என திடப்படாது ஐ ஆம் பாவம். ஓகே டீல்.



சரி பதிவு போட்டா ஒரு படம் போடணும் தானே. சோ கஷ்டப்பட்டு ஒரு படம் போட்டிருக்கேன் நீங்களும் கஷ்டப்பட்டு தான் இந்த மூஞ்சியலை பார்க்கணும். ஆனால் கடைசியில் இந்த மூவரை பற்றியும் ஒரு விஷயம் சொல்லப்போறேன் கவனமாய் கேளுங்கோ.

இந்த படம் எடுக்கப்பட்டது இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் எஸ்.எஸ்.சியில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது. அதில் வெள்ளையும் கருப்பும் சேர்த்து அழகான டி சேர்டில் முதலாவதாய் இருக்கானே ஒரு பையன் அவன் தான் கிரேட் சதீஷ்(நான் தானுங்கோ) அடுத்தது கிரிக்கெட் அனலிஸ்ட் பிரபல பின்னூட்ட வாதி(பதிவர் இல்லை இதை கவனிக்க ) கான்கொன் அல்லது கிரீஸ் அல்லது கோபி அடுத்தவர் ஏரியாத சுவடுகள் வைத்து எல்லோரையும் கொமென்ட் போட்டு எரிய வைக்கும் பவன்.

சரி இவங்க மூன்று பேரும் தான் 3 இடியட்ஸ்சாம் ஷங்கர் இவர்கள் மூவரையும் தான் நடிக்க வைக்க முயற்சி எடுக்கிராராம். அப்போ படம் எப்பிடி இருக்கும்.....சும்மா பிச்சிக்கிட்டு ஓடும். எதை எண்டு கேட்கப்படாது.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox