உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Thursday, January 27, 2011

3 இடியட்சில் மீண்டும் விஜய்! பாவம் அவரே confuse ஆகிட்டாரு.



3 இடியட்ஸ் திரைப்படம் தொடங்கிய நாட்கள் தொடக்கி சர்ச்சைக்கு பஞ்சம் இல்லை. விஜய் சூர்யா என்னும் கண்ணாம்பூச்சி ஆட்டம் முடிந்து சூர்யாவுடன் தொடங்கிவிட்டது என நேற்று செய்திகள் வெளியாகிய நிலையில் இப்போது மீண்டும் பரபரப்பு செய்தியாக மீண்டும் விஜய் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த செய்தியில் எவ்வளவு உண்மை என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. காரணம் முன்னர் தேதி ஒத்துவரவில்லை என விஜயை ஒதுக்கியதாக சொல்லப்பட்டது அதன் பின்னர் சூர்யாவும் இப்போது தேதி மற்ற மொழி மட்டுமன்றி தயாரிப்பு கூட தமக்கு தரவேண்டும் என அடம் பிடிப்பதை பார்க்கும் போது ஜெமினி மீண்டும் சூர்யாவுக்கும் ஆப்படிக்குமோ என தெரியவில்லை. சங்கரோ, ஜெமினியோ ஏன் சூர்யாவோ கூட நடிக்கும் நடிகர்களோ இந்த படம் பற்றி வாய் திறக்காத நிலையில் இன்னும் மர்மமாகவே இருந்து வருகின்றது.

எது எப்படியோ விஜயின் அரசியல் இப்போதைக்கு இல்லை எண்பது மட்டும் தெளிவாகிவிட்டது. காவலனும் அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையை வைத்து பார்க்கும் போது மீண்டும் விஜயுடன் கைகோர்க்க ஷங்கர் மற்றும் ஜெமினி விரும்பலாம். அத்துடன் தம்மை எதிர்த்து விஜய் படத்தை வெளியிட்டு வெற்றி கண்டபின்னர் மேலும் விஜயை எதிர்த்து தம்மை படுகுழியில் தள்ள ஆளும் தரப்பும் யோசிக்கும்.

எல்லாம் தேர்தல் வருகுதெல்லோ. விஜய் ஆளும் தரப்பை கண்டு அடங்க ஆளும்தரப்பு விஜயை மேலும் வளரவிடக்கூடாது என்பதற்காகவே மீண்டும் விஜயுடன் பரஸ்பரமாக போகலாம். அப்படிப்போனால் பல நச்சரிப்புகள் கொடுத்த சூர்யாவுக்கு ஆப்பு அடிக்கப்படலாம். எது எப்படியோ உத்தியோக பூர்வ அறிவிப்பு வரும் வரை வாயை மூடிக்கொண்டு நடப்பதை பார்ப்போம். ஆனால் இப்படி சர்ச்சைகள் கடந்து ஒரு படம் தேவை தானா. காரணம் நம்மில் பலர் அந்த படத்தின் ஒரிஜினலை பார்த்துவிட்டோம் இனியும் அந்த படம் ஓடுமா? எல்லாமே ரசிகர்கள் கையில்.

செய்தியை படிக்க இங்கே செல்லுங்கள்.
S.Shathiesh
Share:

Saturday, January 15, 2011

ரஜினி,கமல்,விஜய், சதீஷ் பொங்கல்!

பொங்கல் வாழ்த்து எல்லோரும் ஒவ்வொரு விதத்தில் சொல்கின்றனர். இது என் இரண்டாவது முறை. நடிகர்கள் உட்பட சில பாடல் தொகுப்புக்களால் வாழ்த்துக்கள். (ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தால் தாமதமாக வருகின்றது.)

போடா எல்லாம் விட்டு தள்ளு பழசை எல்லாம் சுட்டு தள்ளு புதுசாய் இன்று பிறந்தோம் என்று எண்ணிக் கொள்ளடா,
தை பிறக்கும் நாளை விடியும் நல்ல வேளை - ரஜினி





தை பொங்கலும் வந்தது பாலும் வந்தது -கமல்




மழை காலத்தில் குடிசை எல்லாம் தண்ணீரில் மிதக்கின்ற கட்டுமரம்.......
போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல்.....விஜய்




ரஜினி கமல் விஜய் எல்லாம் தங்கள் பாட்டுகளால் வாழ்த்திவிட்டார்கள். அட நானும் பிரபலம் தாங்க வாழ்த்த கூடாதா. இதோ you tube தயவில் ஒரு பாடல்.



பாடல்களை தேடிக்கொண்டிருந்த போது எனக்கு கிடைத்த இன்னொரு அற்ப்புத பாடல். தமிழர்களுக்கு பொதுவான ஒரு பண்டிகையை பற்றி மதம் கடந்தி கிறிஸ்தவ மதத்தினர் பாடி கொண்டாடி மகிழ்கின்றனர். பாருங்கோ.



பாடல்களை தர உதவிய youtubeக்கு நன்றி.
Share:

பொங்கல் எப்போ? - இம்முறை இரண்டு பொங்கலா?

தைப்பொங்கல்.

இன்பம் பாதி துன்பம் பாதி தான் வாழ்க்கை ஒருபுறம் அழிவுகள் உலகை துரத்திக்கொண்டிருக்க மறுபுறம் சில தவிர்க்க முடியாத பண்டிகைகள் சடங்குகள் வந்துகொண்டே செல்கின்றன. நாளைய தினம் பொங்கல் கொண்டாட உள்ள அத்தனை உறவுகளுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.


காலையில் எழுந்து தோய்ந்து புத்தாடை அணிந்து சூரியனுக்கு படைத்து அப்பா தீபம் காட்ட பின்னே நின்று ஆதவனை வணங்கி அம்மா கையால் பொங்கல் உண்ணும பொங்கல் இந்த முறை எனக்கு இல்லை. இருந்தாலும் நினைவுகளால் மனதில் ஒரு பொங்கல் லண்டனிலும் கொண்டாடுவேன் உங்கள் வாழ்த்துக்களோடு.

மாட்டுப்பொங்கல்.

உழவர்களுக்கு உறுதுணையாய் நின்ற உன்னத உயிர்களை பூஜிக்கும் நாள் என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. இருப்பினும் நம்மில் சிலரும் இந்த நாளில் தான் குளித்து உடுத்தி கொண்டாடுவார்கள் அவர்களுக்கு வாழ்த்து சொல்லாவிட்டால் கோபி(அட நல்லாய் பொருந்துது)ப்பாங்க இல்லையா? வாழ்த்துக்கள்!




பொங்கல் எப்போ?
(இது மொக்கை அல்ல)

தமிழர்கள் அன்று முதல் இன்றுவரை தை மகளின் முதல் நாளை தான் தைத்திருநாளாக கொண்டாடுகின்றனர். என் தத்தா பாட்டன் பூட்டன் என்று எல்லோரும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாக தான் இந்த நாளை கொண்டாடி வந்தனர். ஆனால் அண்மையில் தமிழ் தாத்தா(ஆனால் இளைஞன் என்று விளம்பரப்படுத்திறாங்க என்ன கொடுமை இது. கீழுள்ள படத்தை பாருங்கோ) தை திருநாளை புத்தாண்டாகவும் கொண்டாட சொல்லி கழுத்தறுகின்றார்.
இந்த நிலையில் லண்டனில் பல காலண்டர்களில் 14.01.2011 தான் தை பொங்கல் என பிரசுரித்துள்ளதுடன் ஒரு சில ஆலயங்களிலும் இன்று தை திருநாள் கொண்டாடப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை மற்றும் இந்தியாவில் நாளை(15.01.2011) தான் பொங்கல் என அறியக்கிடைத்ததுடன் இன்றும் 14.01.2011 சிலர் பொங்கலை இந்தியாவில் கொண்டாடியதாய் அறியக்கிடைத்தது. இதை பற்றி நண்பர் ஒருவரிடம் கேட்டேன் ஏன் இன்று லண்டனில் கொண்டாடினார்கள் என்று அதுக்கு அவர் சொன்ன பதிலோ கொஞ்சம் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தது. (இங்கே எல்லாம் இப்பிடி தான்) சனிக்கிழமை வந்தால் மாமிசம் உண்ண உண்ண முடியாது என்பதற்காய் தை மகள் ஒரு நாள் முன்னரே பிறந்து விட்டால் என்று. பிள்ளையை தான் முந்தி பிந்தி பெறுகின்றார்கள் என்றால் இப்போ தை மகளும் இப்படியா?

உண்மையில் இன்று லண்டனில் பொங்கல் என சொல்ல காரணம் நேர வித்தியாசம் என்றனர். சரி உங்கள் வழியிலேயே வருகின்றேன். அப்படி நேர வித்தியாசம் என்றால் இலங்கை இந்திய நேரத்துடன் ஒப்பிடுகையில் லண்டன் நேரம் 5.30 மணித்தியாலங்கள் பின்னரே. அதாவது நீங்கள் காலை 6.00 மணி என்று சொன்னால் லண்டனில் நேரம் அதிகாலை 12.30. அப்படி பார்த்தால் இலங்கை இந்தியாவில் தை மகள் பிறந்த பின்னர் அல்லவா லண்டனில் பிறக்க வேண்டும். அதாவது January 15 ம் திகதி தான் தமிழுக்கு தை முதலாம் தயக்கத்தில் என்றால் அது எப்படி January 14 தை திருநாளாக முடியும். லண்டனில் பொதுவாக மூன்று W க்களை நம்ப முடியாது என்பர். Weather, Work, Wife இப்போ நம்பிக்கைகளாய் காலம் காலமாய் வந்த மரபுகளையே நம்ப முடியலையே! நண்பர்களே! உண்மையில் எப்பதாங்க பொங்கல் சொல்லிட்டு கொஞ்சம் நமக்கும் அனுப்பி வையுங்க.
Share:

பதிவுலக நண்பர்களே! நீங்கள் உண்மையான காவலன் ஆகுங்கள்.



தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கு உண்டு ஆனால் இம்முறை தை மகள் தன்கூட பல அழிவுகளையும் எங்கள் நாட்டில் கொண்டுவருவது கவலையே. இலங்கையின் சில பகுதிகளில் பாரியளவான சேதங்கள் ஏற்ப்பட்டிருப்பதுடன் கொழும்பில் கூட லண்டன் போன்ற குளிர் நிலவுவதாக நண்பர்கள் சொல்கின்றனர். வரும் காலம் வசந்தமாகும் என்றால் வம்பாகிக்கொண்டே போகின்றது.

இந்த நிலையில் பல அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் தங்கள் நிவாரணப்பணிகளை முடுக்கி இருக்கும் நிலையில் நற்காரியங்களில் ஈடுபட ஆசைப்பட்ட நம் பதிவர்களும் தங்களால் முயன்ற உதவிகளை வழங்க முன்வந்து பல பதிவுகள் இட்டனர். இதில் முக்கியமாக குறிப்பிடவேண்டிய விடயம் எந்த பாகுபாடும் இன்றி வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்ற மனப்பான்மை இன்றி(குற்றம் சொல்பவர்களே இப்போ எங்கே போய்விட்டீர்கள்) ஒன்றாக இணைந்த நிரூஜா, வதீஸ், ரமேஸ், சந்த்ரு, மதிசுதா, கூல் பாய் கிருத்திகன்(எல்லோரும் எனக்கு அண்ணா மார் எனவே பெயருக்கு பின் அண்ணா போடுங்க) என இந்த திட்டத்தை முன்னெடுத்தனர். எல்லோரும் ஒன்றுபட்டு இந்த நல்ல காரியத்தை செய்து முடிக்கும் படி பதிவுலக நண்பர்கள் அத்தனை பேரையும் உரிமையுடன் அன்பாக கேட்டுக்கொள்கின்றேன்.

கைநீட்டி கொடுத்த நம் உறவுகள் இன்று கையேந்தும் நிலைக்கு விட்டுவிடாதீர்கள். நாளை நமக்கும் இதே நிலை வரலாம். நம் உறவுகளுக்கு நாம் கொடுக்கும் போது அது கையேந்தல் ஆகாது நாம் செய்யும் கைமாறே அது.

இயற்கை அனர்த்தத்தில் இருந்து மீண்டுவர இறைவனை பிரார்த்திப்போம்!
Share:

Monday, January 3, 2011

பாட்டெழுத சான்ஸ் கொடுங்கப்பா!

வணக்கம் நண்பர்களே,

முதலில் உங்கள் எல்லோருக்கும் என் புதுவருட வாழ்த்துக்கள்.

கடந்த என் சில பதிவுகள் மொக்கை என்பதை தாண்டிய மொக்கை என சில அபிமானிகள் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில் கொஞ்சம் சீரியசாய் ஒரு மொக்கை பதிவு இது. இவன் திருந்த மாட்டானோ என நினைக்காதிங்க. நான் எழுதி இருப்பதில் உண்மை இல்லை என்றால் சொல்லுங்கள் நான் மொக்கை போடுவதை நிறுத்துகின்றேன்.

இன்று கொஞ்சம் வெட்டி சும்மா இருக்கையில் எனக்கு ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. அந்தக்காலம் இந்த காலம் என்று என் சிறுவயதில் வில்லிசையில் பாடிய பாடல் அதையே கொஞ்சம் மாத்தி இப்படி போட்டால் எப்படி இருக்கும் என சிந்தித்தேன் இதோ வருகின்றது அந்த பாடல்.

கண்ணதாசன் உண்மைக்காதல் கவி படித்தான் அந்தக்காலம் ஆமா அந்தக்காலம் -இப்போ
modern காதல் பற்றி நானும் சொல்ல போறேன் இந்த காலம் ஆமா இந்த காலம்.

பொண்ணுங்க பின்னால் பையன் சுத்தியது அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
பையன்க பின்னால் பொண்ணு சுத்துறது இந்த காலம் ஆமா இந்த காலம்.

Heartம் heartம் தான் beat போடுவது அந்த காலம் ஆமா அந்த காலம் - ஆனால்
next dayயே எல்லை மீறி ஆட்டம் போடுவது இந்த காலம் ஆமா இந்த காலம்

பார்த்த பார்வையில் காதல் fire வரும் அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
பார்க்காமலேயே பற்றி எரிகின்றது இந்த காலம் ஆமா இந்த காலம்

காதல் சொல்ல நாட்கள் பல கடக்கும் அந்த காலம் ஆமா அந்த காலம் - ஆனால்
கண்டவுடனேயே கையைபோடுவது இந்த காலம் ஆமா இந்த காலம்

கடிதங்கள் எழுதி காதல் செய்ததுவோ அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
Dating மூலமே bracket போடுவது இந்த காலம் ஆமா இந்த காலம்

அத்தான் மாமா என்று சினுங்கியது அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
அடேய் ராஸ்கல் என்று அழைப்பது இந்த காலம் ஆமா இந்த காலம்

அன்பு பண்பின் ஆழம் பார்த்தது அந்த காலம் ஆமா அந்த காலம் - ஆனால்
Car, Purse waitஐ first ஆய் பார்ப்பது இந்த காலம் ஆமா இந்த காலம்

காதலுக்காக உயிரைக்கொடுத்தது அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
கள்ள காதலுக்காய் உயிரை எடுப்பது இந்த காலம் ஆமா இந்த காலம்

காதலில் தோற்றால் தாடி வளர்த்தது அந்த காலம் ஆமா அந்தக் காலம் - love
தோல்வியிலும் அவள் friendஐ correct பண்ணும இந்த காலம் ஆமா இந்த காலம்

காதலி பிரிஞ்சதும் தாலி வளர்த்தது அந்த காலம் ஆமா அந்த காலம் - ஆனால்
பிரிஞ்சா happy moodஇல் அடுத்த lady pick up இந்த காலம் ஆமா இந்த காலம்

Weddingஇன் பின்னர் மழலை சத்தம் அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
waiting இன்றி wait கொடுப்பது இந்த காலம் ஆமா இந்த காலம்

காதல் செய்தால் ஊரே எதிர்த்தது அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போகாதல் பண்ணாட்டி fashion இல்லைஎன்னுது இந்த காலம் ஆமா இந்த காலம்

காதல் கல்யாணம் கருப்பாய் இனித்தது அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
தாலி ஏறமுன்னே diverse கேட்கிறது இந்த காலம்

காதலை காதலர் காதல் செய்தது அந்த காலம் ஆமா அந்த காலம் - செய்யும்
கண்றாவி எல்லாம் காதல் என்னுது இந்த காலம் ஆமா இந்த காலம்

லைலா மஜ்னு இறந்தும் வாழவைத்தது அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
lovers வாழும் போதே loveஐ கொள்வது இந்த காலம் ஆமா இந்த காலம்

வாலி வரியதனில் காதல் உருகியது அந்த காலம் ஆமா அந்த காலம் - ஐயோ
நானும் கவிவடித்தேன் என்ன கொடுமை இது இந்த காலம் ஆமா இந்த காலம்.

முக்கிய குறிப்பு: திரையுலக நண்பர்களே படைப்புலக பிரமாக்களே நானும் கொஞ்சம் பாட்டு எழுதுகின்றேன் சினிமாவில் பாட்டு எழுத ஒரு சான்ஸ் வாங்கி கொடுங்கப்பா! என்னது இந்த மொக்கை எல்லாம் அங்கேயும் பார்க்கணுமா என திட்டாதிங்க. திருப்பி சந்திப்பம்.


Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox