உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Sunday, May 31, 2009

விஜய் டி.வி, சன் டி.வியில் அசத்தியவர் அகாலமரணம்.

எந்த புதுமைகளையும் முதல் முதல் தந்து அதில் வெற்றியும் பெறுவது எப்போதும் விஜய் டி.விக்கு அல்வா சாப்பிடுவது போல. அப்படி ஆரம்பமாகி பின் பல தொலைக்காட்சிகளில் அதே போல நிகழ்ச்சிகளை படைக்க காரணமாக அமைந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலக்கோ கலக்கென கலக்கி அதன் பின் சன் டி.வியின் அசக்த்தப்போவது யாரில் அசத்துவதில் மன்னனாக அசத்தி பிரபலமான கோவையை சேர்ந்த மிமிக்கிரி வல்லுநர் கோவை ரமேஷ் வீதி விபத்தில் தன் உயிரை இழந்துள்ளார்.(உயிர் மட்டுமே செல்கின்றது அவர் தந்த சிரிப்பு என்றுமே வாழும்.)
நாற்பது வயதான ரமேஷ் அனேகமாக பெண் கலைஞர்கள் குரலில் பேசுவதில் அசகாய சூரர். அதிலும் பழம்பெரும் நடிகை சரோஜாதேவியை போல இவர் பேசினால் கண்ணை மூடிக்கேட்டால் சரோஜாதேவியே பேசுவதுபோல இருக்கும். பெண்களை போலவே உடை உடுத்திக்கொண்டு தோன்றி கவலைகளால் துவண்டுபோன பல நெஞ்சங்களை தன் கலையால் சிரிக்க வைத்து எல்லோர் மனதிலும் இடம்பிடித்தவர். பொதுவாகவே மற்றவர்களை சிரிக்க வைப்பது என்னும் கடினமான வேலையை மிக சர்வசாதாரணமாக செய்து வெற்றிகண்டவர் ரமேஷ்.

நான் ஒருமுறை இவர் நிகழ்ச்சியை பார்க்கும் போது அப்படியே சொக்கிப் பொய் விட்டேன். மிமிக்கிரி என்றால் எனக்கு கொள்ளை ப்ரியம்.(ஏனெனில் எனக்கு மிமிக்கிரி செய்ய தெரியாது.) அதனால் மிமிக்கிரி செய்பவர்களை பார்த்தால் ஏதோ எனக்குள் ஆனந்தம்.

இன்று.......?

இதன் மூலம் கிடைத்த புகழ் அங்கீகாரம் என்பவற்றைக் கொண்டு இசை நிகழ்வுகளில் பங்கேற்று வந்த ரமேஷ், தன் கலைப்பயனத்திலேயே தன் நண்பர்களோடு கலந்துவிட்டார். ஒரு இசை நிகழ்வு முடிந்து வரும் வழியில் இடம் பெற்ற விபத்தில் இந்த அற்புத கலைஞனின் வாழ்வு முற்றுப்பெற்றுவிட்டது. அவரின் உடல் இங்கிருந்து போனாலும் அவர் செய்த கலை சேவை காலம் கடந்தும் மக்கள் மனதில் அவரை வாழவைக்கும்.

ரமேஷின் அசைவுகளும் அவரின் நகைச்சுவை உணர்வும் இப்போது என் கண்முன்னே தோன்றி மறைகின்றது. இந்த நெஞ்சத்தை கிள்ளிய மனிதனை இனி கடந்து போன டி.வி நிகழ்வுகளில் மட்டுமே பார்க்க முடியும் என்னும் போது மனது கனக்கிறது. மரணம் எப்போதும் வரும் அது ரமேஷை கொஞ்சம் சீக்கிரமே அழைத்துவிட்டது. அவரி ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போமாக.
Share:

Sunday, May 24, 2009

Kolkatta Knight Riders அணியை வாங்க நடிகர் அஜித் முடிவு.

கடந்த நாட்களில் எத்தனையோ சம்பவங்கள். பதிவு எழுதலாம் என்றால் எல்லோரும் ஒரே விடயத்தை எழுதும் போது எனக்கு அதை தவிர்த்து வேறு விடயத்தை எழுத மனமும் இல்லை மானமில்லாதவனுமில்லை. அத்துடன் அதை பற்றி எழுத வலிமையும் இல்லை. அதனால் சில நாட்கள் பதிவை தவிர்த்து வந்தேன். இதோ மீண்டும் வந்துவிட்டேன்.இருப்பினும் இந்த காலத்திலும் என்னிடம் பதிவை எதிர்பார்த்து வந்து போன பிரியமானவர்களுக்கு நன்றிகள்.


திருவிழாவாக நடைபெற்றும் வரும் ஐ.பி.எல் தொடரும் இன்றைய Bangalorre Royal Challengers மற்றும் டெக்கான் சார்கேர்ஸ் அணிகளுடனான போட்டியோடு ஒரு முடிவிற்கு வரபோகின்றது. சற்றும் எதிர்பார்க்காமல் கடந்த முறை சொதப்பிய இரண்டு அணிகளும் இம்முறை இறுதியில். அதுவும் நேற்று Chennai Super Kings அணிக்கு பெங்களூர் கொடுத்த அடியை மறக்க முடியாது. (அந்த ரணத்தை மனதுக்குள் போட்டுக்கொண்டு பெங்களூர் அணியை பாராட்டி ஸ்கோர் கொடுத்தது தான் கொடுமை. இருந்தாலும் என்ன எத்தனை வலிகளை தாங்கிவிட்டோம் இது எம்மாத்திரம்.)
இம்முறை தொடரில் கடைசி இடம் Kolkatta Knight Riders அணிக்கே. அதன் உரிமையாளர் ஷாருக்கானும் அணியை விற்க முடிவெடுத்துவிட்டார். அதன் பின் அணி இரண்டு வெற்றிகளை பெற்று இறுதி நேர ஆறுதலோடு வெளி ஏறி இருக்கின்றது. விளையாடிய சில வீரர்கள் பயிற்றுவிப்பாளர்களை சாடியதோடு கங்குலியை தலைவராக போட்டிருந்தால் இன்னும் நன்றாக விளையாடி இருப்போம் என வெளிப்படையாக தெரிவித்து வருகின்றார்கள்.


இது வரைக்கும் நான் சொன்னவை எல்லாம் உண்மை. இனி சொல்லப்போவது எல்லாம் பொய் ஆனால் அதுதான் விடயமே..............(கவனிக்க இது ஒரு மொக்கை பதிவு.)


அல்டிமேட் ஸ்டார் அஜித், தமிழ் சினிமாவில் பார்க்காத தோல்விகளும் இல்லை ஏறாத வெற்றிப் பாதைகளும் இல்லை. தொடர்ந்து தோல்விப் படங்களே கொடுப்பார் திடீரென மிகப் பெரிய வெற்றிப் படம் கொடுத்து எல்லோரையும் பேச வைப்பார். அப்படிப்பட்ட ஒரு நிலைமையில் தான் இப்போதைய Kolkatta Knight Riders அணி. அவர்களுக்கும் அஜித் போல ஒரு திடீர் வெற்றி தேவைப்படுகின்றது.


இதை எல்லாம் விட அஜித் ஷாருக்கானின் சில ரீமேக் படங்களில் நடித்திருக்கும் போது ஏன் அணியையும் ரீமேக் செய்யமுடியாது. இதை அஜித் Style இல சொல்லிப் பாருங்க "அது ஒரு கறுப்பு சரித்திரம். அதனால்தான் அவங்க கறுப்பு உடுப்பு போட்டிருக்காங்க.Kolkatta Knight Riders என்று ஒரு அணி இருந்தது யாருக்காவது தெரியுமா? நான் தனி ஆளில்லைம்மா எனக்கு பின்னால ஒரு தோற்றுப்போன கூட்டமே இருக்கு. ஆனால் நான் தோற்கமாட்டேன். என்னையும் கங்குலியையும் பார்த்தா ஒரே மாதிரி இருக்கு என்னைப் போல அவரும் தோல்விகளையும் சர்ச்சைகளையும் பார்த்தவர். அதேபோல பல வெற்றிகளையும் தந்திருக்கிறோம். அவர் தாதா, நான் தல இரண்டுபேரும் சேர்ந்தா ஜெயிச்சிட்டே இருப்போம். நான் போறது நேர் கோட்டில எனக்கு வாழ்க்கை வட்டமோ சதுரமோ இல்லை. மழை நிக்கிறதுக்குள்ள நான் Kolkatta Knight Riders அணியை வாங்கிறன் அது!"


"ஏன் என்னால ஷாருக் மாதிரி மைதானத்தில flying kiss குடுக்க முடியாதா? அல்லது அவரைப்போல் தோற்க வைக்க முடியாதா. ப்ரீத்தி ஜிந்தா போல நானும் கட்டிப்பிடிப்பன். இப்ப சொல்லுங்க நான் எடுப்பது தப்பா?" அது! (யாரது எக்கோ போடுங்கப்பா இல்லாட்டி விஜய் வந்து silence சொல்லிட்டு அணியை வாங்கிடுவார். இப்பெல்லாம் அவரும் என்னை போல தோல்வி கொடுக்கிராரெல்ல. வரட்டா எல ஏலத்தில சந்திப்பம்!
Share:

Friday, May 15, 2009

என்ன நடக்கின்றது ஐ.பி.எல்லில்.

கடந்தமுறை ஐ.பி.எல் போட்டிகள் ஏனோ எல்லோரையும் கட்டிப்போட்டிருந்தது. இந்தியாவில் நடந்தது அதற்கு காரணமாக இருக்கலாம். வான வேடிக்கைகள் நிறைந்த விறுவிறுப்பான போட்டிகள் எத்தனை.(சென்னை அணி நன்றாக விளையாடியது என் ரசனைக்கு காரணமோ தெரியவில்லை.)

ஒரு சில அணிகளை விட மற்ற எல்லா அணிகளும் நன்றாகத்தான் மோதின. ஷேன் வார்னேயின் அணி இறுதியில் நடத்திய திருவிழாவை டோனி மட்டுமல்ல யாருமே மறக்கமாட்டார்கள்.

அதே எதிர்பார்ப்புடன் ஆரம்பமான இம்முறை தொடர் ஆரம்பத்திலேயே தென் ஆபிரிக்காவில் ஆரம்பம் என்றவுடன் தன் களையில் முதல் படியை இழந்தது என்பது மறுக்கமுடியாத உண்மையே. கிரிக்கெட் வெறியர்களை கொண்ட இந்தியா உட்பட ஆசிய நாட்டவரை இது பெரிதும் பாதித்தது என்னவோ உண்மையே. அதன் பின் ஒருவாறு ஆரம்பமாகிவிட்டது. (கடந்தமுறையை விட இம்முறை பல முன்னணி பிரபலங்கள் களமிறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.)
ஆரம்பத்திலேயே கடந்தமுறை இறுதிவரை முன்னேறிய சென்னை அணியினர் மும்பையிடம் தோற்று போட்டியின் சுவாரஸ்யத்தை கேள்விக்குறியாக்க தொடங்கினரென்றால் மறுபுறம் கடந்தமுறை உப்புசப்பு அணியாக இருந்த பெங்களூர் அணி சாம்பியன்ஸ் ராஜஸ்தானை விழுத்த மேலும் ஒரு எதிர்பார்ப்பில் அடி. இப்படியே போக கடந்தமுறை சொதப்போ சொதப்பென சொதப்பிய டெக்கான் அணி இம்முறை ஆரம்பம் முதலே பிளந்து கட்டத்தொடங்கியது. மும்பை மற்றும் டெல்லி அணிகளும் தங்களை பலமாக வெளிப்படுத்த கடந்தமுறை அசத்திய சென்னையும் ராஜஸ்தானும் நிமிரமுடியாமல் அடிவாங்கின.கொல்கத்தா அணியோ அடிவாங்கவே தான் வந்திருக்கின்றேன் என வந்தது போல் அடிமேல் அடி வாங்கி இன்று கடை நிலையில்.(ஷாருக்கானை மூட்டை கட்டி அனுப்பி வைத்த சாதனை அணி அது.)
இருந்தாலும் பயிற்றுவிப்பாளர் புச்சனன் செய்த மந்திர விளையாட்டுகள் கங்குலி என்னும் முதிர்ந்த சிங்கத்தை களங்கப்படுத்த மொத்த அணியே கரைசேரா கப்பலாகிவிட்டது.

கொஞ்சம் தலை நிமிர்ந்த ராஜஸ்தான் அணி பஞ்சாப் அணியை 214/4 என விளாசி துவைத்தெடுத்தனர். இதுவே இம்முறை ஐ.பி.எல் போட்டிகளில் இதுவரை ஒரு அணி பெற்ற அதிகூடிய ஓட்டம்.(வேறு எந்த அணியும் இருநூறை தாண்டவில்லை கேட்டால் இருபதுக்கு இருபது போட்டியாம்.)

துடுப்பாட்டத்தை பொறுத்தவரை கிழட்டு சிங்கம் ஹய்டேன் 486 ஓட்டங்களுடன் முதலிடத்திலும் தொடர்ந்து அவர் சகா கில்கிறிஸ்ட் 329 இரண்டாமிடத்திலும் AB de Villiers 366 ஓட்டங்களுடன் மூன்றாமிடத்திலும் ரைனா 322 ஓட்டங்களுடன் நான்காம் இடத்திலும்யுவராஜ் 314 ஓட்டங்களுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளனர். தனிநபர் ஓட்டக்குவிப்பை பொறுத்தவரை AB de Villiers 105 ஓட்டங்கள் ஆட்டமிழக்காமல் விளாசி முதல் இடத்திலும் ரைனா 98, ஹய்டேன் 89 ஓட்டங்களுடனும் முதல் மூன்று இடங்களை கைப்பற்றி உள்ளனர்.
சிக்ஸர் விலாசுவதிலும் வயதான வீரர்கள் விடவில்லை. கில்கிறிஸ்ட் 21 சிக்ஸ்செர்கள், ஹய்டேன் 20 சிக்ஸ்செர்கள் என முதல் இரண்டு இடங்களையும் பிடிக்க டுவய்னே ஸ்மித், ரைனா, யுவராஜ் அவர்களை துரத்துகின்றனர். ஒரே போட்டியில் ஆறு சிக்ஸ்செர்கள் விளாசி AB de Villiers, யுஸுப் பதான், ஹய்டேன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

பந்து வீச்சை பொறுத்தவரை இலங்கையின் சுனாமி மலிங்க இந்தியாவின் இருபதுக்கு இருபது ஸ்பெசலிஸ்ட் ஆர.பி.சிங் மற்றும் நெஹெரா ஆகியோர் பதினாறு விக்கெட்டுகளுடன் முன்னிலை வகிக்க அனில்கும்ப்ளே ஒரு போட்டியில் ஐந்து ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்துகின்றார்.(எதி ராஜஸ்தான்)

இம்முறை ஐ.பி.எல்லில் எந்த விக்கெடடுக்குமான அதிகபட்ச இணைப்பாட்டமாக ராஜஸ்தான் அணியின் ஓஜா மற்றும் கிரகம் ஸ்மித் ஆகியோர் 135 ஓட்டங்களை குவிக்க கடந்தமுறை ஆரம்ப இணையாக அசத்திய டெல்லியின் ஷேவாக் கம்பீர் ஜோடி தடுமாறி வருகின்றது. ஜெயசூரியா மற்றும் சச்சின் ஜோடியும் சில போட்டிகளில் விருந்து வைக்க தவறவில்லை.(இந்த வயதிலும் அப்படி ஒரு ஆட்டம் எங்களையா அணியை விட்டு நீக்க சொல்லி சொன்னீர்கள் என கேட்பதுபோல்.)

இந்த பதிவை நான் எழுத யோசித்தபோது டெல்லிக்கும் பஞ்சாபுக்கும் இடையிலான போட்டியில் தொடர்ந்து அசத்தி வந்த டெல்லி படுதோல்வி கண்டிருக்கின்றது. புள்ளிப்பட்டியலில் எந்த அணியும் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைப்பதாக தெரியவில்லை. அத்துடன் பலமான அணிகளுடன் ஜெயிக்கும் பெரிய அணிகள் பலம் குன்ரியதென நினைக்கும் அணிகளிடம் சுருண்டு விடுகின்றன.(இதுக்கு பெயர்தான் விட்டுக்கொடுப்போ?)
கள நிலவரம் இப்படி இருக்க கனவு தேவதைகளின் ஆட்டம் ஒரு புறம் சூடேற்றுகின்றது. நல்ல காலம் இம்முறை அவர்களை ஆவது ஆடவிட்டது. இல்லாவிட்டால் டெஸ்ட் போட்டிகள் போல் நடைபெறும் சில போட்டிகளை பார்க்கபோகும் ரசிகர் நிலை என்னவோ?

எந்த அணியும் தொடர்ச்சியாக தன் பலத்தை நிரூபிக்கவில்லை அதேபோல் பல எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் சொதப்பல் ஆட்டம் ஆடுகின்றனர். சேவாக் துடுப்பாட்டத்தை மறந்து விட்டார். கம்பீர் தடுமாறுகின்றார். சனத்தோ சத்தற்றவர்போல வந்து போகின்றார்.. பீட்டேர்சன், பிளின்டோப் விளையாடுகின்ரார்களா தெரியவில்லை. முரளியிடம் பழைய விக்கெட் வேட்கை காணவே இல்லை. ஓரம் என்ன செய்கின்றாரோ?. தோனியின் தலைமை? சச்சின் ஏதோ இடைக்கிடை ஆடுகின்றார். ராவிட்டும் அப்படியே. மஹேல, சங்கக்கார மற்றும் யுவராஜ் பெரிதாக சோபிக்கவில்லை.டில்ஷான் தன் கடந்தகாலங்களில் மறந்த துடுப்பாட்டத்தை இப்போது சேர்த்து காட்டிக்கொண்டிருக்கின்றார்.

தினேஷ் கார்த்திக் கொஞ்சம் அணியை காப்பாற்றி விடுகின்றார். பிராவோ தன் பங்குக்கு கலக்கிக்கொடிருக்கின்றார். ஹர்பஜன் தன் பங்குக்கு பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் உதவி செய்து அணிக்கு பலம் சேர்க்கின்றார். யுஸுப் பதான் களம் இறங்கினாலே எதிரணிக்கும் கலக்கும் ஆட்டம். பாகிஸ்தான் வீரர்கள் இல்லாமல் போனதும் மறுக்கமுடியா இழப்பே. ரோகித் ஷர்மா பந்துவீச்சில் கலக்குவதொடு அவ்வப்போது மறந்து போன துடுப்பாட்டத்தை நினைவுபடுத்திப்பார்க்கின்றார். உத்தப்பா நடந்து வந்து விளாசும் சிக்ஸ்செரை பார்த்து எத்தனை மாதங்களாகிவிட்டது?

எதிர்பார்க்காத எத்தனையோ இளம் வீரர்களும் சர்வதேச வீரர்களும் கொஞ்சம் தங்களை நிலை நிறுத்துகின்றார்கள். சில பிரபல வீரர்கள் களம் இறங்கவே இல்லை. ஏன்? என்ன நடக்கின்றது. கடந்தமுறை கலை கட்டிய திருவிழாவா இது? எதுவுமே தெரியாமல் பாதி கடந்து விட்டது. இனியாவது சூடு பிடிக்குமா? தெரியவில்லை.
Share:

Thursday, May 14, 2009

கத்தால கண்ணழகிக்கு அது பிடிக்காதாம்! கேளுங்க! கேளுங்க! கேளுங்க!

"நல்ல அழகாகத்தான் இருக்கிறார், நடனத்திலும் சளைக்காதவர் தமிழ் சினிமாவை கலக்குவார்" இது தமிழ் சினிமாவின் ஆர்வலர்கள் ஸ்னிக்தா "கத்தால கண்ணால குத்தாத" என பாடிக்கொண்டு அறிமுகமானபோது சொன்ன வசனம். மராத்தி, ஹிந்தி மொழிகளில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக்கொண்டிருந்தவர் இல்லாத இடுப்பாலே என தன இடுப்பை ஆட்டி ஆட்டி ஆட்டம் போட்டே பிரபலமாகிவிட்டார். என்ன செய்ய பல இளைஞர்களின் தூக்கமும் கொஞ்சம் கெட்டுத்தான் போச்சு.

ஆனாலும் இப்போ அவர் தன் செவ்விதழ் திறந்து சொன்ன வார்த்தைகள் தான் காதல் கோட்டை கட்டிய எத்தனையோ பெயரை முகவரி இல்லாமல் செய்யப்போகின்றது. அவர் அழகை பார்த்து ஆண்கள் பயப்பட்டுக்கொண்டிருக்கும்போது(வேறொன்றுமில்லை காதலில்தான்.) ஸ்னிக்தாவோ தனது பயப்பட்டியலை வெளியிட்டு எல்லோரையும் பயப்படுத்தி விட்டார். பத்திரிகையாளர்களைக் கண்டால் பயமாம்(கேட்கக்கூடாத கேள்வியை கேட்காதிங்கப்பா செல்லம் பயப்படுகிதெல்லா)

அடுத்ததா சிக்கியது இவங்க என்ன சொல்றாங்கன்னே என தெரியமுடியாத பல்லிகள்.(எல்லா நடிகைகளும் பல்லி கரப்பான் பூச்சி என ஒரு லிஸ்ட் வைத்திருப்பார்கள்.) தனிமையில் பிடிச்சது பொம்மைகளாம்(அதைத்தான் கட்டிப்பிடித்துக் கொண்டு இருப்பாரா? நானும் பொம்மைமாதிரி இருப்பேனே.) பருப்புசாதம் என்றா உயிரையே விடும் ஸ்னிக்தா உயிரினும் மேலான காதலை ஒரு நோயென சொல்லிவிட்டு காதலே தனக்கு பிடிக்காதாம். அதைவிட கொடுமை ஆண்கலென்றாலே பிடிக்காதாம்.(எப்பிடிதாயே நடிப்புலகத்துக்கு வந்திங்க.)

ஆண்களை பிடிக்காத அம்மணி எப்படித்தான் ஆண்களுடன் சேர்ந்து கட்டிப்பிடித்து காதல் காட்சிகளில் எல்லாம் நடிக்கின்றாரோ தெரியவில்லை. நண்பர்களே! இனிமேல் ஸ்னிக்தா பின்னால் அலையாதிங்க ஏனென்றால் அவங்களுக்கு தான் அது(காதல்+ஆண்களை) பிடிக்காதாமே.
Share:

Wednesday, May 13, 2009

என்ன ஜனநாயக நாடு இது? நீங்களும் கையை மேலே தூக்காமல் இனியாவது யாருக்கு வாக்களித்தீர்கள் என சொல்லலாமே.

உலகத்திலேயே பிரபலமான ஜனநாயக நாடு இந்தியா. அடுத்த நாட்டுக்கெல்லாம் ஜனநாயகம், இறையாண்மையை பற்றி சொல்லிக்கொடுக்கும் மிகப்பெரிய அரசியல் சாணக்கியர்களை கொண்ட நாடு. இன்று தன் 15 வது தேர்தலை சந்தித்திருக்கின்றது. இந்தத்தேர்தலில் எத்தனை மோசடிகள் நடைப்பெற்றிருக்கின்றது என எனக்கு தெரியாது. இருந்தாலும் வெளிச்சத்துக்கு வந்த சில ஜனநாயக முரண்பாடுகள் இன்றைய தேர்தலை கேள்விக்குறியாக்கி இருக்கின்றது.

சிறியவர்களுக்கும் பிரபலமில்லாதவர்களுக்கும் ஒரு அநீதி நடந்தால் அது வெளி உலகுக்கு தெரிவதில்லை. மூடி மறைக்கப்பட்டு உயிரோடு சமாதி கட்டப்பட்டு விடும். (இது எத்தனையோ நாட்டில் நடக்கின்றது.) அவர்களும் சொல்ல வலி இன்றி எதிர்க்க சக்தி இன்றி ஊமைகளாகிவிடுகின்றனர். (பலம் படைத்தவர்களாக காட்டிக்கொண்டு சர்வாதிகாரமாக நடந்தால் நாம் என்ன செய்வது) ஆனால் பிரபலங்களுக்கு அப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றால் மட்டும் அது பெரிய செய்தி ஆகிவிடுகின்றது.

என்ன கொடுமை சார் இது எனக்கு இதிலும் சோதனையா?
ஒவ்வொருமுறையும் வாக்களித்து வரும் நடிகர் கமலஹாசனுக்கு இம்முறை வாக்களிக்க முடியாமல் போய் இருக்கின்றது. தொடர்ந்து வாக்களித்து வந்த கமலின் பெயர் இம்முறை வாக்காளர் பெயர்ப் பட்டியலில் இல்லையாம். தொடர்ந்து வாக்களித்து வரும் ஒருவரின் பெயர் எப்படி இல்லாமல் போய்விட்டது. (அல்லது வேண்டுமெனவே இல்லாமல் செய்யப்பட்டதா தெரியாது.) இருந்தாலும் அதற்காக சொல்லப்பட்ட காரணமோ அதிகாரிகள் வீட்டிற்கு சென்ற நேரம் கமல் வீட்டில் இல்லை என்பதே.(இதென்ன நியாயம் அப்படியானால் கமல் தொழிலை விட்டுவிட்டு வீட்டில் அல்லவா இருக்க வேண்டும்.)
இதனால் வருத்தப்பட்ட கமல் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகும் இந்த தேர்தலில் தன் பங்கு இல்லாமல் போய்விட்டதே என தெரிவித்திருக்கின்றார். நான் எந்தக்கட்சிக்கும் சார்பானவன் அல்ல(அதுதாங்க பிரச்சனையே) இருப்பினும் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு வாக்களிக்க வந்தேன் இப்படி ஆகிவிட்டதே என்கின்றார் கமல். உலக நாயகன் என்ற பட்டத்தை வைத்திருப்பதால் உலகத்தில் எங்கு இருக்கின்றார் என தெரியாமல் அதிகாரிகள் தவறவிட்டுவிட்டார்களோ? உலகத்துக்கு தமிழக கலாச்சாரத்தையும் தமிழக சினிமாவையும் தலை தூக்க வைக்கும் ஒரு உன்னத கலைஞனின் நிலை இது.

நல்ல காலம் விரலை மேலே காட்டவில்லை
ஆனால் தன் குரலாலேயே அரசியலை கடந்தகாலங்களில் நிர்ணயித்த ரஜினி இம்முறை சாதரணமாக வந்து வாக்களித்து விட்டார். வழமைபோலவே பத்திரிகையாளர்கள் அரசியலுக்கு வருவீர்களா என கேட்க கையைத் தூக்கி மேலே காட்டிவிட்டு அவர் போய்விட்டார். இனி அவர் எதை காட்டினார். அவர் நகத்தில் அழுக்கு இருந்ததா இல்லையா என எல்லாம் பார்த்து அதற்கும் அரசியல் சாயம் பூசப்போகின்றார்கள். மனிதர் யாருக்கு வாக்களித்தேன் என சொல்லவே இல்லை.(ஜனநாயம் இதுதானோ?)

பிரச்சாரம் முடிஞ்சிதா மறந்தே போய்விட்டேன்.
இந்த இரண்டு தலைகளின் நிலை இப்படி இருக்க தமிழகத்தை அண்மையில் கலக்கிய இன்னொரு புரட்சி புயல் சூறாவளி சீமான் தன் கொள்கையை இன்றும் விடவில்லை. வாக்குசாவடிக்கு அருகில் வந்த சீமான் அங்கிருந்த மக்களிடம் காங்கிரஸ் மற்றும் தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்காமல் அ.தி.மு.கவிற்கு வாக்களியுங்கள் எனவும் ப.சிதம்பரத்துக்கு வாக்களிக்க வேண்டம் என கூறினார்.(பிரசாரங்கள் நிறைவடைந்ததை மறந்து விட்டாரோ? அத்துடன் இது மட்டும் ஜனநாயகமா என தெரியவில்லை.) யாராக இருப்பினும் இப்படி செய்வது குற்றம்தானே. இதனால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் சீமானை அவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்திய பின் அடங்கியது.

அதேபோல் அமீர் மற்றும் கஞ்சா கருப்பு போன்ற பிரபலங்களும் இம்முறை வாக்களிக்க முடியாமல் போய் விட்டது.

நமக்கு தெரிந்தே இத்தனை பேர் வாக்களிக்கவில்லை அதேபோல் சில ஜனநாயக மீறல்களும் நடைபெற்றிருக்கின்றது. இவை எல்லாம் பிரபலமானவர்களுக்கு என்பதால் அந்த இடங்களை விட்டு நாட்டை விட்டு பரவி இருக்கின்றது. இப்படி இன்னும் எத்தனை சாதரண குடிமகன்களுக்கு நடந்திருக்கு. இப்படிப்பட்ட தேர்தல் தேவைதானா?.(என்ன செய்வது அனேகமாக பல நாடுகளில் இப்படித்தானே நடக்கின்றது.)

பிரபலமானவர்களுக்கு நடக்கும் இப்படியான சம்பவங்கள் சாதாரண மக்களுக்கும் நடைபெறும் அநீதிகள் வெளி உலகங்களுக்கு தெரிந்து முற்றாக அழிக்கப்படும்போது தான் ஜனநாயகம் என்னும் உன்னதமான வார்த்தைக்கு அர்த்தம் கிடைக்கும். இது இந்தியாவிற்கு மட்டுமல்ல இலங்கை உட்பட அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.
Share:

Tuesday, May 12, 2009

தமன்னாவுடன் ஜோடிசேரும் விஜய் தேர்தலில் ஜெயிப்பாரா?

{தமிழ் நாட்டு மன்மதனே(சாரி மக்கள் தளபதியே) வாராய் நீ வெற்றி மாலைக்கென்று பிறந்தவனோ?}


நடிகர் இளயதளபதி விஜய் நடிக்கவந்து ஐம்பதாவது படத்தை தொடப்போகின்றார். யார் என்ன சொன்னாலும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகன் விஜய். வெற்றிகளை கொடுக்கும் போது தூக்கிவைத்து கொண்டாடிவிட்டு இன்று தோல்விகள் பார்த்தவுடன் இப்படி அவரைப் பற்றி கிண்டலடிப்பது தப்பே. இருந்தாலும் அது இயற்கையே.(ரஜினி கூட தப்பவில்லையே)

வேட்டைக்காரன் விஜயின் 49வது படம். விறுவிறுப்பாக வளர்ந்து வரும் நிலையில் ஒரு பாடல் அறிமுகமாகி விட்டது என எல்லோரும் பெரிதாக கூவினார்கள். ஆனால் அது இன்னொரு திரைப்படபாடல் என்பது இன்னும் பலருக்குத் தெரியாது. அதேபோலத்தான் சிம்புவின் விண்ணைத்தாண்டிவருவாயா, அஜித்தின் அசல் பாடல்களும் வந்திருப்பதாக சொல்கின்றார்கள். நிச்சயமாக இவை எல்லாம் பொய்யாகவே இருக்கப்போகின்றன.

இந்த நிலையில் தான் இப்போது விஜயின் ஐம்பதாவது பட விபரங்கள் அடுத்தடுத்து வந்து தீனி போடுகின்றது. தேர்தல் பரபரப்புக்குள் இதுவும் தமிழ் சினிமாவின் பரபரப்பே. காரணம் விஜயும் அஜித்தும் ஒரே நேரத்தில் ஐம்பதாவது படத்தை கொடுக்கப்போகின்றனர். எனவே இந்த போட்டியாளர்களில் யார் ஜெயிக்கப்போகின்றார் என அவரவர் ரசிகர் மட்டுமல்ல தமிழ் திரையுலகமே எதிர்பார்த்திருக்கின்றது.

இரண்டுபேரின் கடைசியாக வந்த படங்களும் சரியாகப்போகாவிட்டலும் அடுத்து இருவரும் நடிக்கும் படங்களுக்கு எதிர்பார்ப்பு குறையவே இல்லை. அதற்கு ஒரு சாட்சி தான் இந்த பாடல்கள் லீக் என்னும் விடயம். அதேபோல் இவர்கள் படங்கள் வெளிவரும்போது பரபரப்பும் வரும் வசூலும் வரும்.(முதலுக்கு மோசமில்லாமல்)

விஜயின் ஐம்பதாவது படத்துக்கு சித்திக் முதல் ஜெயம் ராஜா வரை பல இயக்குனர்கள் பேசப்பட்டு இப்போது திருப்பாச்சி, சிவாகாசி எனும் இரு சரவெடிகளை விஜய்க்கு கொடுத்து உயர்த்திய ஊர் பெயர் பிரபலம், மசாலா நாயகன் பேரரசு இந்த படத்தை இயக்கப்போகின்றார். இருந்தாலும் இம்முறை கதை அவர்கதை இல்லை. கதை, திரைக்கதை, வசனம் பொன்மனம் என்ற நல்ல படத்தை கொடுத்து இன்று அழகர்மலை என்னும் படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் எஸ்.பி.ராஜ்குமார்தான் திருமலைக்காக(அதுதாங்க விஜய்) எழுதுகின்றார்.

நகைச்சுவை, மசாலா இந்த இரண்டுமே விஜயை ஏற்றிவிட்டுள்ள நிலையில் இந்தப்படத்திலும் அதே கைங்கரியத்தில் களம் இறங்கப்போகின்றார். (குருவி, வில்லு போல நல்ல படமா இல்லாட்டி சரி!)

விஜயின் ஆரம்பகால தோல்விகளில் எல்லாம் தோள்கொடுத்து தூக்கிவிட்ட விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இந்தப்படத்தை தயாரிக்கவில்லை.(அப்பாடா நிம்மதி இயக்குனருக்கு) சங்கிலி முருகனின் மீனாட்சி ஆர்ட்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கப்போகின்றது. ஏற்கனவே விஜயின் திரையுலக மைல்கல் காதலுக்கு மரியாதையை தந்தது இதுதான்.(படம் பப்படமானால் காதலுக்கு மரியாதை செய்த வசூலை இதற்காக கழிக்கசொல்வார்களோ தயாரிப்பாளர் கவனம்.)

இசை யார்? தயாரிப்பு நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாதான்.(இசைஞானியும் விஜய்க்காக குத்து தான் போடுவாரோ? எப்பிடியோ பாட்டு சூப்பர் ஹிட் ஆவது உறுதி)

எல்லாம் சொன்னாச்சு, நாயகி யார்? வேறு யார் இப்போ தமிழ்சினிமாவின் ஆப்பிள் கன்ன அழகி தமன்னா தான். மிகக்குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகி ஆகிவிட்ட தமன்னா இப்போ விஜயுடன். எங்கோ ஆரம்பித்து தனுஷ், சூர்யா என வளர்ந்து இன்று ஒரு தலைமுறையின் முன்னணி நாயகனுடன் ஜோடி போடப்போகின்றார்.(சூர்யா என்னதான் ஹிட் கொடுத்தாலும் விஜய் எத்தனை தோல்விகொடுத்தாலும் இன்னும் விஜயின் அந்தஸ்து குறையவில்லை.)மொத்தத்தில் இந்த அழகிக்கு தமிழ் சினிமாவின் எதிர்காலம் இப்போதே தெரிய ஆரம்பித்திருக்கும். விஜயுடன் நடித்தால் கண்டிப்பாக பலதரப்பட்ட மக்களிடம் சென்றடையும் வாய்ப்பு கிட்டும். அதன் மூலம் மேலும் முன்னணி நடிகையாக வலம்வர தமன்னாவிற்கு வாய்ப்புண்டு.

(அப்பாடா ஒருமாதிரி சரியான ஆளைத்தான் பார்த்து பிடிச்சிருக்கேன்போல! ?)

ஒருவாறாக முக்கியமான கலைஞர்கள் தேர்வு முடிவிற்கு வந்திருக்கின்றது. அதேபோல் கதையிலும் புதுமையுடன் சிறப்பாக செய்தால் ஐம்பதாவது பட தேர்தலில் விஜயின் வெற்றி உறுதி. தன் கடந்தகால படங்களில் இருந்து நல்ல பாடங்களை எடுத்துக்கொண்டு இந்தப்படத்துக்கு கஷ்டப்பட்டு உழைத்து நல்ல கதை திரைக்கதையுடன் கொடுத்தால் பல முன்னணி கலைஞர்கள் ஒன்று சேரும் இந்தப்படமும் விஜய்க்கு ஐம்பதல்ல 200 not out ஐ கொடுக்கும்.
Share:

Sunday, May 10, 2009

டோனி ஒரு மந்திரவாதியா?

இந்திய அணியின் தலைவரும் தற்போதுள்ள சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான மகேந்திர சிங் டோனி. குறுகிய காலத்திலேயே அணித்தலைவராக சாதித்துக் காட்டிய டோனியை பற்றித்தான் பலரது பேச்சும் இருக்கிறது. தான் தலைமைப் பொறுப்பை ஏற்ற முதல் தொடரிலேயே கனவாக இருந்த இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத்தை பெற்றுக்கொண்டு வந்தார்.
கங்குலி, திராவிட் கலந்த தலைமைத்துவம் தான் இவரின் ஸ்டைல். தேவைப்படும் பொது கங்குலி போல் அதிரடி முடிவெடுப்பவர் பல இடங்களில் சாதுவாக இருந்தே சாதித்துக்காட்டினார். ஒரு வித்தியாசமான சிறந்த வீரர் தான் கடலில் தத்தளித்துக்கொண்டு இருந்த இந்திய அணியினரை தோணியைப்போல் காப்பாற்றி கரை சேர்த்துக்கொண்டு இருப்பவர்தான் டோனி.

சச்சின் மட்டுமன்றி உலக ஜாம்பவான்களே இவரது தலைமைப் பொறுப்பை பார்த்து வியந்து நிற்கின்றனர். இந்த நேரத்தில் தான் எனக்கு டோனி ஒரு மந்திரவாதியா என எண்ணத் தோன்றுகின்றது. காரணமும் இல்லாமல் இல்லை. அணில் கும்ப்ளேயின் இறுதித் தொடர் என நினைக்கின்றேன் கும்ப்ளேயின் தலைமையில் வெற்றிபெறாமல் கொஞ்சம் தடுமாறி தடுமாறி வெற்றியை நோக்கிச் சென்ற அதே வீரர்களை கொண்ட இந்திய அணி அடுத்த போட்டியிலேயே டோனி தலைமையிலேயே இலகுவாக வெற்றி பெறுகின்றது. நான் நினைத்ததில் என்ன தப்பு.

அதன் பின் ஒரு போட்டியில் சேவாகின் தலைமையில் தடுமாறி போட்டியை சமநிலையில் முடித்த அதே அணி மீண்டும் எழுந்து டோனி தலைமையில் மிகப்பெரிய வெற்றி.

இன்று ஐ.பி.எல்.போட்டிகளில் ஆரம்பத்தில் தடுமாறிய சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி இப்போது வெற்றிமேல் வெற்றி குவித்து புள்ளிகளின் அடிப்படையில் முதல்நிலையை அடைந்து இருக்கிறது. இதற்க்கெல்லாம் காரணம் என்ன? டோனி தொட்டால் மட்டும் துலங்கும் எல்லாம் மற்றவர்கள் தொடும்போது ஏன் துலங்கவில்லை? விடை சொல்வது கஷ்டம்தான்.

டோனி ஒரு மந்திரவாதியா? அல்லது ஏதும் மாயாஜாலம் செய்து வெற்றியை பெறுகிறாரா? அல்லது எப்பிடித்தான் வெற்றியை அடைகின்றாரோ?
நிச்சயமாக தோனியை சூழ்ந்து இருக்கும் அதிஷ்டதேவதை ஒரு பக்கம் வெற்றி அலையை வீசிக்கொண்டிருக்க தோனியின் ஆளுமை, சிந்திக்கும் திறன், விளையாட்டின் மேல் கொண்ட ஈடுபாடு, களத்தில் எடுக்கும் முடிவுகள், வகுக்கும் வியூகங்கள், மர்ரவீரர்களையும் மதித்தல் முக்கியமாக எல்லோரையும் ஊக்கப்படுத்தி ஒரே அணியாக விளையாட வைத்தல் என்பவைதான் தோனியின் மந்திரங்கள் என நினைக்கின்றேன்.
உலகக்கிண்ணம்(இருபதுக்கு இருபது), கடந்த ஐ.பி.எல், அதன்பின் தொடர்ந்த இந்திய அணியின் சாதனை வெற்றித் தொடர்கள் இன்று நடைபெறும் ஐ.பி.எல்லிலும் தொடர்ந்து உலகக்கிண்ணத்திலும் தொடருமென நினைக்கின்றேன். திறமையும் அதிஷ்டமும் இருந்தால் டோனி என்ன நீங்களும் மந்திரவாதி ஆகலாம்.

இந்த சந்தேகம் எனக்கு மட்டுமன்றி உங்களிடமும் இருந்திருக்குமென நினைக்கின்றேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என தட்டிவிடுங்களேன்.
Share:

Tuesday, May 5, 2009

மதிப்பிற்குரிய பாலுமகேந்திரா அவர்களுக்கு ஒரு சாதாரண ரசிகனின் கடிதம்.

தமிழ் திரையுலகம் கண்ட மிகப்பெரிய இயக்குனர்களில் நீங்களும் ஒருவர். அதுமட்டுமல்ல ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர் மற்றும் தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவிற்கு நீங்கள் ஆற்றிய சேவை என்றென்றும் நினைவுகூரப்படவேண்டும். உங்கள் அனுபவத்துக்கு நிச்சயம் நான் தலை வணங்குகின்றேன். மூடுபனி, மூன்றாம்பிறை, நீங்கள் கேட்டவை, சதி லீலாவதி என நீங்கள் கொடுத்த படங்கள் இன்றும் பேசப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. நீங்களும் காலத்தை வென்று நிற்கின்றீர்கள். (உங்கள் காலம் வேறு என்பதை சொல்லாமல் சொல்கின்றேன்)

எந்த மனிதனானாலும் தன் கருத்தை சொல்ல உரிமை இருக்கின்றது அதுவும் உங்கள் துறையில் நடக்கும் விடயங்களை பற்றி சொல்ல நிச்சயமாக உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அந்தக் கருத்துக்களை சொல்ல முதல் சற்றே சிந்திப்பது ஒரு அறிவாளியின் பண்பென நான் நினைக்கின்றேன்.
அண்மையில் நீங்கள் அங்காடித்தெரு திரைப்பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசியது எனக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கின்றது. தமிழ் சினிமாவில் நிறைய மாற்றங்கள் நடக்கின்றது, ஆனால் இன்னும் மாற்றங்கள் வேண்டும் என்றீர்கள். அது மிகச்சரியானதே. உண்மையில் இன்று தமிழ் சினிமா உலகத்தரத்தை எட்டி இருக்கின்றது பல மொழி சினிமாக்களோடு போட்டிபோட்டு விருதுகளையும் குறிவைக்கின்றது.

தமிழ் படங்களில் காதல் பாடல் அன்றிலிருந்து இன்றுவரை இருக்கின்றது. அது எரிச்சலூட்டுகின்றது என்றீர்கள். அதுமட்டுமில்லாமல் அதை மாற்ற முயன்றீர்கள் என்றும் சொல்கின்றீர்கள். ஆனால் உங்களால் காதலையோ அல்லது காதலர்களின் பழக்க வழக்கங்களையோ மாற்றமுடியாது. உங்களுக்கு முன்னைய கால பாடல் காட்சிகள் பிடிக்காமல் தான் நீங்கள் நடன அமைப்பை மாற்றியதாக சொல்கின்றீர்கள். அப்படித்தான் காலத்தின் மாற்றத்தில் மாற்றம் என்பது மட்டும் மாறாமல் இன்று நடனத்தில் பல மாற்றங்கள். ஒரு முன்னோடி என்னும் ரீதியில் அதை நீங்கள் வரவேற்க தான் வேண்டும்.

குரங்கிலிருந்து தானே மனிதன் வந்தான் எனவே அவர்கள் குரங்காட்டம் போடுவதை பாத்து நீங்கள் கவலைப்பட்டு பிரயோசனமில்லை. உங்கள் மூன்றாம் பிறை படத்தில் நீங்கள் காட்சிப்படுத்தியசில காட்சிகள் இன்றும் காரம் குறையவில்லையே. சிலுக்கும் கமலும் ஆடிய ஆட்டக்த்துக்கு என்ன பதில் ஐயா? போதை ஏறிய குரங்கு குட்டிகள் என்கிறீர்கள் நீங்கள் பாடல் மூலம் போதை ஏற்றியதை மறந்து விட்டு. ஆனால் நீங்கள் சொல்வதுபோல் சிலர் செயற்ப்படுகின்றனர்தான். அதற்காக ஒட்டுமொத்தமாக நீங்கள் சொன்ன குறையை ஏற்க முடியாது. இது காலத்தின் மாற்றம் ரசனையின் வித்தியாசம் எனவே ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

பாகவதர்-சின்னப்பா காலம் பிடிக்காமல் போய்த்தான் எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித் என தலைமுறை மாற்றத்தில் கதை திரைக்கதை பாடல்கள் நடன அமைப்பு என்பன மாறிவருகின்றது.( பழைய கதைகளை இன்றைய இயக்குனர்கள் தங்கள் சொந்தக்கதை என்பது வேறு கதை.) இன்று இப்படி ஆடினால் தான் நடனம் பதினைந்து வருடத்துக்கு முன் வந்த நடனத்தை பார்த்தால் இன்றைய தலைமுறை சிரிக்கின்றது. இதுதான் இன்னும் பத்து வருடத்தில் நடக்கப்போகின்றது. இதை எல்லாம் நான் சொல்லித்தான் உங்களுக்கு புரியும் என்றில்லை. (ஜாம்பவானான நீங்கள் கொடுத்த அது ஒரு கனாக்காலம் படம் இதற்கு உதாரணம்)

நீங்கள் சொன்னது போல் பக்கத்து வீட்டு பையன் போல பொண்ணு போல்த்தான் இருக்கவேண்டும் நடிகர்கள் என்பதும் சரியே. இருப்பினும் வர்த்தக சினிமா கலைப்படைப்பு என்னும் இரண்டு வகையில் வர்த்தகப்படைப்பில் நிச்சயம் நீங்கள் உடைக்க வேண்டும் எனும் Star அந்தஸ்து தான் மிகப்பெரிய பலமே. தான் செய்ய நினைக்கும் ஆனால் செய்யமுடியாததை தன் ஹீரோ, ஹீரோயின் செய்யும் பொது சந்தோசப்படும் சராசரி ரசிகனை திருப்திப்படுத்தும் சினிமாவால் கலைப்படைப்பை ரசிப்பவரையும் கலைப்படைப்பை ரசிப்பவரை வணிக ரீதியான படங்களும் திருப்திப்படுத்தமுடியாது என்பது உங்களுக்கு தெரியாததல்ல.
கலைஞன் என்பதை விட மிகச்சிறந்த ஒரு ரசிகனான நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு இவ்வாறான வார்த்தையை பாவித்ததுக்கு உங்கள் படங்களின் ரசிகனான நான் வருந்துகின்றேன். இனிமேலாவது பொது இடங்களில் சாதாரண ரசிகர்களின் ரசனைக்கும் மதிப்பளிப்பீர்கள் என நம்புகின்றேன்.

இது உங்களை குறை கூற அல்ல என் ஆதங்கமே. ஒரு கடைக்கோடி ரசிகன் நான் எனவே என் கருத்தில் பிழை இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். இல்லையேல் கொஞ்சம் மனதில் பத்துக்கொள்ளுங்கள்.
Share:

Monday, May 4, 2009

வருகிறது எமனுக்கு எமன். பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு!

உலக நாடுகளை பயங்கரவாதமும், பல கெட்ட சக்திகளும் அழித்துக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மற்றுமொரு அரக்கனாக ஸ்வைன் ப்ளூ என்னும் பன்றிக் காய்ச்சல் இப்போது பல நாடுகளை அழித்துக்கொண்டிருக்கிறது. மெக்ஸ்சிக்கோ, கனடா, அமெரிக்கா என தாக்கி விட்டு இந்தியாவையும் இப்போ அழிக்க ஆரம்பித்திருக்கிறது.

கொல்லும் இந்த எமனை கொல்ல இதுவரை எந்த மருந்தும் கண்டு பிடிக்கப்படாததால் எத்தனையோ மனித உயிர்கள் அழிந்து விட்டது. பல நாடுகள் தங்கள் நாட்டுக்கு அந்நிய படைகள் வரக்கூடாது என போடும் பாதுகாப்பை விட இந்தக் காய்ச்சலுக்கு போடும் பாதுகாப்பு அதிகம்.

இப்படி எத்தனையோ வகை வகையான காய்ச்சல்களை பார்த்து விட்ட மனித இனம் அதற்கான தடுப்புகளை கண்டுபிடித்து அவற்றை அழித்தும் இருக்கிறது. அந்த நம்பிக்கையோடு இப்போது ஸ்வைன் ப்ளூவிற்கும் சாவு மணி அடிக்க பல விஞ்ஞானிகளும் மருத்துவ நிபுணர்களும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் இப்போது இங்கிலாந்து விஞ்ஞானிகளும் சேர்ந்திருக்கிறார்கள்.

இங்கிலாந்தின் தேசிய உயிரியல் தரக்கட்டுபாடு நிறுவன விஞ்ஞானிகள் கோழியின் முட்டையில் துளையிட்டு அதனுள் ப்ளூ வைரசை வளர்க்க திட்டம் தீட்டிஇருக்கின்றனர். வைரஸ் வளர தேவையான அனைத்து வசதிகளும் முட்டைக்குள் இருக்கின்றது என இது தொடர்பான ஆராச்யில் ஈட்டுபட்டிருக்கும் ஒரு விஞ்ஞானி தெரிவித்தார்.

இரண்டு தொழில்நுட்பங்களின் மூலம் தடுப்பூசி தயாரிக்க உள்ளனர். இந்த தயாரிப்பு வேலைகள் முடிய மூன்று தொடக்கம் நான்கு வாரங்கள் ஆகலாமெனவும் பெரிய அளவில் தயாரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர மேலும் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் தேவைப்படும் என சொல்கின்றனர்.
எவ்வாறெனினும் இந்த கொலைகாரனுக்கும்(நோயிற்கும்) மருந்து கண்டு பிடிப்பது மகிழ்ச்சியே. இருந்தாலும் இவை எல்லாம் கண்டு பிடித்து பாவனைக்கு வந்து மனித உயிர்களை காப்பாற்ற எடுக்கும் காலத்துக்குள் இன்னும் எத்தனை உயிர்கள் அழியப் போகின்றனவோ?
Share:

Friday, May 1, 2009

பலர்முன் நிர்வாணமாக தோன்ற தயாராகும் நடிகை.+ "தல"யின் பிறந்தநாள் ஸ்பெஷல்.+ மே தின வாழ்த்துக்கள்.


தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அம்சமாகிவிட்ட அசல் நாயகன் தல அஜித்குமாரின் பிறந்தநாளுக்கு எல்லோரும் வாழ்த்தி ஓய்ந்த நேரத்தில் நான் வாழ்த்துகின்றேன்.(என் குரல் அவருக்கு தனியாக கேட்கட்டும் என்று.) தோல்விகள் கண்டாலும் தளராது வெற்றியை கொடுக்கும் தல ரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள். அத்துடன் இலங்கைத் தமிழர்களுக்காக தன பிறந்தநாள கொண்டாட்டங்களை ரத்து செய்து எண்கள் துயரில் பங்கெடுத்த அவருக்கு இலங்கை தமிழர் சார்பில் நன்றிகள். 

உலகம் சுற்றுவதே தொழிலாளர்களால் தான். உழைத்து வாழும் உன்னத வர்க்கத்தின் உழைப்பிற்கும் முயற்சிக்கும் தலை வணங்கி என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். மே தினம் உங்களுக்கு மென்மேலும் சிறப்புகளை தர பிரார்த்திக்கின்றேன்.  

ஜெயம் ரவி நடித்த தாம் தூம் திரைப்படம் எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். அதில் நடித்த கங்கனாசெராவத் பலராலும் ரசிக்கப்பட்டவர். அழகும் சற்றே நடிக்கும் திறைமையும் கொண்ட இவர் தமிழ் சினிமாவை கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் ஏனோ கரை ஒதுங்கிவிட்டார். னால் புயல் எப்போது அடங்கி இராது என்பதற்கு அவரே இப்போது சாட்சியாக வருகின்றார்.

ஏற்கனவே ஒரு ஹிந்தி படத்தில் முக்கள் நிர்வாணமாக நடித்து ரசிகர்களை சூடு ஏற்றியவர். இப்போது தெலுங்கு ரசிகர்களுக்கு தன முழு விருந்தையும் படைக்க தயாராகின்றார். பூரி ஜெகன்னாத் இயக்கம் இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் தன பிறந்த மேனியுடன் முழு நிர்வாணமாக நடிக்க இருக்கிறார். அந்தக் காட்சிக்கு கட்டாயம் நிர்வாணமாக நடிக்கவேண்டும் என கேட்டவுடன் மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்றுக்கொண்டு இப்போது அறுசுவை படையலுக்கு தயாராகிவிட்டார். 

இந்த காட்சியில் முழுக்க முழுக்க நிர்வாணமாக தொன்றபோகும் கங்கணாவுடன் வேறு எந்த நடிகரோ நடிகையோ தோன்றமாட்டாராம். முழுக்க முழுக்க கங்கனாவின் விருந்தாக இருக்கப்போகும் இந்தப்படம் தமிழிலும் வருமா என தெரியவில்லை. இருந்தாலும் நம்மவர்களுக்கு மொழியா முக்கியம். கங்கனா காட்டுவதை(மன்னிக்கணும் நடிப்பை) பார்க்க எல்லோரும் ஆவாலாக இருக்கின்றார்கள்.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive