Wednesday, November 4, 2009

மீண்டும் இணையும் சிம்பு-நயன்?




ஐயா படத்தில் அறிமுகமான நயனை ஐயகோ என்ன கொடுமை இது என சொல்ல வைத்த படம் வல்லவன். பல்லனாக நுழைந்த சிம்பு மன்மதனாகி பின் வல்லவனாகும் நேரம் நயன் வல்லவளாகி
பல்லனின் பல்லை உடைத்த கதை எல்லோருக்கும் தெரியும். அதன் பின் இரண்டுபேரும் காதல் தோல்வியில் வாட நயனோ பில்லாவில் பிகினியில் வந்து பிஞ்சு நெஞ்சுகளையும் கெடுத்தார். சிம்புவும் ஒருபுறம் தன் வழியில் போனாலும் பெரிய வெற்றிப்படங்கள் இன்றி போய்க்கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் தங்கள் சொந்தக்கதை சோகக்கதையை கெட்டவன் என்னும் பெயரில் தொடங்கிய சிம்பு அதை கெட்டுப்போகவே விட்டுவிட்டார். இடையில் சிம்பு வரலட்சுமி (சரத்குமார் மகள்) பக்கம் சாய(படத்துக்கு கதாநாயகி மட்டுமே) நயனம் பிரபுதேவாவில் சயனம் கொண்டது ஊரரிந்ததே. இப்போது இந்த கூட்டணியிலும் ஒரு சிறு விரிசல் மறுக்கமுடியா உண்மையே.

இந்த நிலையில் மீண்டும் தன் சகலகலாதன்மையை நிரூபிக்க சிம்பு தயாராகிவிடார். வாலிபன் படத்துக்கு கதை திரைக்கதை எழுதி நடிக்கப்போவதே அவரேதான்(வல்லவனிலும் இதே கதை தான்) ஆரம்பத்தில் சரத்தின் மகள் வரலட்சுமியை கதாநாயகியாக கேட்டு ஒப்புதல் வாங்கியபின் என்ன காரணமோ சாக்கு போக்கு சொல்லி பின்வாங்கி விட்டார் நாட்டாமையின் மகள். ஆனால் இப்போது மீண்டும் அவர் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கும் நிலையில் சிம்புவின் பார்வை மீண்டும் நயனின் பக்கம் திரும்பி இருக்கிறது.

என்னடா ஆச்சரியம்? நம்பமுடியலையே, உங்களை கிள்ளிப் பார்க்கிறிங்களா? என்ன செய்வது சில உண்மைகள் நம்பமுடியாதுதானே. வாலிபனில் வாலிபி (சும்மா ஒரு டைமிங்க்கு தான் தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும் ) நாயனாக இருந்தால் நல்லம் என கெட்டவன் (சாரி வாலிபன் ) யோசிக்க ஆரம்பித்து விட்டார். அண்மையில் சென்னையில் நடந்த விழா ஒன்றில் அருகருகே இருந்தும் எதுவும் பேசிக் கொள்ளாத இந்த ஜோடி அதன் பின் தொலைபேசியில் தங்கள் அன்பை பொழிந்திருக்கிறது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் இனி அவனுடன் தொடர்பில்லை என சீறிய நயனே சிம்புவுக்கு அழைப்பெடுத்து வம்பில் மாட்டி இருக்கின்றார். பத்து நிமிடம் உரையாடிய இந்த ஜோடிக்கு பழைய தீ பற்றியதோ தெரியவில்லை வாலிபனில் நடிக்கிறாயா என கேட்க நயனும் யோசித்து செல்வதாக சொல்லி இருக்கின்றாராம். அப்போ பிரபுதேவா???? அந்த யோசித்து என்பது பிரபுதேவாவிடம் கேட்டா அல்லது அவரை கட்டி விட்டா என்பது இன்னும் சில நாட்களில் தெரியும்.
Share:

14 கருத்துரைகள்:

sanjeevan said...

என்னமாதிரி சொண்டை கடிச்சு இழுக்கிறாரு .

sanjeevan said...

’கலட்டி’யென்று வந்துட்டுது சதீசன் மாத்தீடுங்க வித்தியாதரன் ஐயா பார்த்தா
நொங்கு எடுத்திடுவாரு.

கார்த்தி said...

விடுங்கப்பா விடுங்க அவங்களாவது வாழட்டும்

Anonymous said...

அந்த யோசித்து என்பது பிரபுதேவாவிடம் கேட்டா அல்லது அவரை கலட்டி விட்டா என்பது இன்னும் சில நாட்களில் தெரியும்.

Super timing

Unknown said...

அந்தப் படத்த மேல பொட்டா யாராவது தொடர்ந்து வாசிப்பாங்களா சதீஷ் அண்ணே?
என்னண்ணே நீங்கள் பொதறிவு தெரியாம நிக்கிறியள்?

என்னப்போல ஒண்டிரண்டு பெர் தான் பதிவ முழுசா வாசிக்கப் போறாங்கள்... பாருங்கோவன்...

Jawahar said...

அந்தப்பொண்ணு ரொம்ப ஒப்பன் டைப். உள்ளே இருக்கிறதை அப்படியே காமிச்சிடும். மூடி மறைக்கிற வேலையெல்லாம் அதுக்குத் தெரியாது. அதைத் தப்பா பேசறதே வேலையாப் போச்சு எல்லாருக்கும். :)

http://kgjawarlal.wordpress.com

Hisham Mohamed - هشام said...

அபச்சாரம் அபச்சாரம்......
இந்த பதிவுக் A(XXxX) சான்றிதழ் வழங்குகிறேன்

SShathiesh-சதீஷ். said...

sanjeevan கூறியது...
என்னமாதிரி சொண்டை கடிச்சு இழுக்கிறாரு

=>>
பாரடா பொறாமையை.

SShathiesh-சதீஷ். said...

sanjeevan கூறியது...
’கலட்டி’யென்று வந்துட்டுது சதீசன் மாத்தீடுங்க வித்தியாதரன் ஐயா பார்த்தா
நொங்கு எடுத்திடுவாரு

=>>
நன்றி சஞ்சீவன்.

SShathiesh-சதீஷ். said...

கார்த்தி கூறியது...
விடுங்கப்பா விடுங்க அவங்களாவது வாழட்டும்

=>>
வாழ்த்தும் அழகாய் பார்த்தால் நயன்தாராவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக நீங்களும் இருப்பீர்களோ என்ற சந்தேகம். மனதை தேற்றிக்கொள்ளுங்கள்.

SShathiesh-சதீஷ். said...

பெயரில்லா கூறியது...
அந்த யோசித்து என்பது பிரபுதேவாவிடம் கேட்டா அல்லது அவரை கலட்டி விட்டா என்பது இன்னும் சில நாட்களில் தெரியும்.

Super timing

=>>
நன்றிகள்

SShathiesh-சதீஷ். said...

கனககோபி கூறியது...
அந்தப் படத்த மேல பொட்டா யாராவது தொடர்ந்து வாசிப்பாங்களா சதீஷ் அண்ணே?
என்னண்ணே நீங்கள் பொதறிவு தெரியாம நிக்கிறியள்?

என்னப்போல ஒண்டிரண்டு பெர் தான் பதிவ முழுசா வாசிக்கப் போறாங்கள்... பாருங்கோவன்..

=>>

நீங்கள் அந்தப்படத்திலேயே பலமணி நேரம் கவனத்தை செலுத்திய பின் தான் மேலே வாசித்ததாக தகவல் தப்பு பண்ணிவிட்டேன் அந்த படத்தை கீழே போட்டிருக்கணும்.

SShathiesh-சதீஷ். said...

Jawahar கூறியது...
அந்தப்பொண்ணு ரொம்ப ஒப்பன் டைப். உள்ளே இருக்கிறதை அப்படியே காமிச்சிடும். மூடி மறைக்கிற வேலையெல்லாம் அதுக்குத் தெரியாது. அதைத் தப்பா பேசறதே வேலையாப் போச்சு எல்லாருக்கும். :)

=>>

நயன்தாரா புகழ் பரப்பும் உங்களுக்கு ஒரு ஓ

அந்த பொண்ணு எதையும் மறைக்கிரதில்லை உடம்பிலும் சரி நாலு சுவருக்குள் நடக்கும் விஷயங்களையும் சரி.

SShathiesh-சதீஷ். said...

Hisham Mohamed - هشام கூறியது...
அபச்சாரம் அபச்சாரம்......
இந்த பதிவுக் A(XXxX) சான்றிதழ் வழங்குகிறேன்

=>>
உங்களை போன்றவர்கள் படிக்கும் இப்படிப்பட்ட பதிவிற்கு பதிவுலக தணிக்கை குழு சார்பாக இந்த செர்டிபிகாத் வழங்கியமைக்கு நன்றி.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox