Tuesday, October 5, 2010

காதலி = அரசியல்வாதி



இரவினில் ஒரு நாள் இருதயம் கேட்டேன் - அவள்

இருவிழியூடு வந்து உயிரினை பறித்திட்டாள்

வாழ்வினில் என்றும் வாய்மையை கேட்டேன் - அவள்

வாயில் வந்ததை சொல்லி வாழ்க்கையை சிதைத்தாள்.


பிரியாதவரமொன்றை ப்ரியமானவளிடம் கேட்டேன்

ஏளனம் செய்து எனை ஏங்கவைத்து சென்றுவிட்டாள்

அன்பே உன்னை நான் மீண்டும் மீண்டும் அழைக்கையிலும்

மீளாத்துயில் கொண்டவள் போல் செவிடியாய் ஆகிவிட்டாய்


குற்றம் செய்தவனே சுற்றவாளி ஆகும் நாட்டில்

வழக்காடல் ஏதும் இன்றி குற்றவாளி ஆக்கப்பட்டேன்

அரசியல்வாதிபோல உன் அறிக்கைகள் இருந்தாலும் - என்

கூட்டணிக்கு இணங்காத உன் அறிக்கைக்கு பலன் ஏது.


தூதுவர் பலர் இருந்தும் தூதேதும் வரவில்லை

நானாக தூதனுப்பி பலனேதும் கிட்டவில்லை

காலத்துக்கு காலம் கூட்டணி மாற்றிக்கொள்ள - நான்

அரசியல்வாதியல்ல அநியாயக்காரனும் அல்ல

நிஜமான கூட்டணிக்கு தோல்வி கிடையாது -நின்


நிலைமாறும் கூட்டணிக்கு என்றுமே வாழ்வில் வெற்றி கிடையாது
Share:

3 கருத்துரைகள்:

Unknown said...

ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கீங்க போல சதீஷ்!!டோன்ட் வொர்ரி பே ஹாப்பி

anuthinan said...

அண்ணே பாதிப்புகளின் வலி கவிதைகளில் தெரிகிறது!!!

நேரம் கிடைக்கும் போது உங்கள் வழமையான பாணியில் பதிவுகள் போடவும்!!!

ம.தி.சுதா said...

நல்லாயிருக்க சதீஸ் வாழ்த்துக்கள்....

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox