உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label இருக்கிறம். Show all posts
Showing posts with label இருக்கிறம். Show all posts

Monday, November 2, 2009

ஷேவாக், கம்பீர் இல்லாமல் களமிறங்குமா இந்தியா?




இறுதியாக இடம்பெற்ற போட்டியில் அமோகமாக ஆடி இந்தியா வெற்றி பெற்றது. இந்தநிலையில் ஷேவாக் துடுப்பெடுத்தாடும் போது ஏற்ப்பட்ட காயம், மற்றும் கம்பீருக்கு களத்தடுப்பில் ஈடுபடும் போது ஏற்ப்பட்ட அடி போன்ற காரணங்களால் இன்று இடம்பெறும் போட்டியில் இவர்கள் ஆடுவது கேள்விக்குறியாகி உள்ளது.

ஷேவாக் கடந்த போட்டியில் பிரகாசிக்காவிட்டாலும் ஆரம்பத்தில் அதிரடியை தொடரக்கூடியவர். சச்சினும் ஷேவாக்கும் களத்தில் இருந்தால் எதிரணிக்கு கலக்கும் அப்படி இருக்கையில் ஷேவாக் இல்லாதது இந்தியாவிற்கு பேரிழப்பு. கடந்த காலங்களில் ஷேவாக் இல்லாமல் இந்தியா தலை நிமிர காரணமாக இருந்த கம்பீரும் இப்போது இப்போது இல்லை என்றால் ஆரம்பமும் இல்லை இடையும் இல்லாமல் தடுமாரப்போகின்றது இந்தியா.

கடந்த போட்டிகளில் சச்சின் பிரகாசிக்காத நிலையில் இப்போது ஆரம்ப துடுப்பாட்டம் பலம் குன்றி காணப்படுகின்றது. இன்று சச்சினுடன் தொடக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் மீள அண்மைக்காலமாக சர்வதேச போட்டிகளில் சொதப்பிய தினேஷ் கார்த்திக் மீள அழைக்கப்பட்டுள்ளார்.

திராவிட், ஷேவாக்,கம்பீர், ரோஹித் ஷர்மா இல்லாத நிலையில் இவரை விட ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யாரும் இல்லை. தோணியோ அல்லது யுவ்ராஜோ இன்று தொடக்க வீரராக வந்தாலும் அது மத்திய வரிசையை பலமிழக்க வைக்கும். எனவே கார்த்திக்-சச்சின் இணையே இன்று ஆரம்ப இணையாக் இறங்க வாய்ப்புண்டு. அவுஸ்திரேலிய அணி காயங்களால் தவிக்கும் இந்த நேரம் இரு ஜாம்பவான் அணிகள் மோதும் இந்த தொடரில் முழுமையான அணிவிளையாட முடியாமல் போனது ரசிகர்களாகிய எங்களுக்கு கவலையே.

டிஸ்கி: எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அச்சுவலை சந்திப்பு இன்று மாலை மூன்று மணிக்கு இருக்கிறம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தசந்திப்பில் நேரடியாக கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு நம் அந்நியன்(அவர் தலை முடி ஸ்டைல் அப்படிதான்) பிரியமுடன்,மதுவதனன் மௌ.(Aka) கௌபாய்மது (ஒன்றும் விடாமல் சரியா போட்டிட்டன் மது,

கடந்த முறை போன்று இம்முறையும் நேரடி ஒளி பரப்பு செய்து அசத்த தயாராகிவிட்டார். நிகழ்வு நடைபெறும் நேரம் உங்கள் பயன் மிக்க கருத்துகளை நீங்கள் அந்த ஒளிபரப்பில் chatting மூலம் பகிரும் வாய்ப்பும் உண்டு. மதுவின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.(என்ன தான் கடந்தமுறை திட்டு வாங்கினாலும் மனிதர் சளைக்கவில்லை.) மீண்டும் வந்துவிட்டார். மாலை சந்திப்போம் நேரடியாகவும் நேரடி ஒளிபரப்பிலும்.

நேரடி ஒளி பரப்பை நீங்கள் பார்க்க மதுவின் ஏற்ப்பாட்டில் அமைந்த களம்.....

Share:

Tuesday, October 27, 2009

என்னை அடிக்க நினைப்பவர்களுக்கு....



நெருங்கிக்கொண்டிருக்கின்றது மீண்டும் ஒரு இனிய நாள். அண்மையில் நடந்து முடிந்த பதிவர்கள் சந்திப்பு தித்திப்பாகவும் வெற்றியாகவும் நடந்து முடிந்தாலும் அதன் பின் இன்னொரு சந்திப்பு என்பது கேள்வியாக இருந்து வந்த நிலையில் நாங்களும் இருக்கிறம் கவலை வேண்டாம் சந்திப்போமா என இப்போது கேட்டிருக்கின்றார்கள் இருக்கிறம் சஞ்சிகை குழுவினர்.

வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி ஒரு நிறைந்த பூரணை நாளில் (பலர் வருவது இலகு எங்களை போன்றவரை தவிர) எல்லோரையும் சந்தித்து சிந்திக்க வைக்க முடிவு செய்து விட்டனர். கொழும்பு 7 இல அமைந்துள்ள அவர்களின் அலுவலகத்தில் இந்த இனிய ஒன்று கூடல் இடம்பெறப்போகின்றது. மாலை 3 மணி அளவில் ஆரம்பமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சந்திப்பு பல நல்ல நண்பர்களையும் நல்ல அனுபவங்களையும் தந்திருக்கும் நிலையில் ஊடகம் சார்ந்தோர் பதிவர்கள் என எல்லோரும் சந்திக்கப்போகும் இந்த சந்திப்பும் இன்னும் பல தித்திப்புகளை வழங்கும் என்பதில் ஐயமில்லை. இருக்கிறம் உங்களை ஒன்று சேர்க்க நாங்கள் இருக்கிறோம் என சொல்லிவிட்டனர் இனி நாங்களும் வருவோம் என சொல்லவேண்டியது மட்டுமே எங்கள் கடமை. கொழும்பு மட்டுமல்ல இலங்கையின் பல பகுதிகளில் இருந்து மட்டுமல்ல நாடு விட்டு நாடு சென்ற நம் நல்லுள்ளங்களும் வந்து கலந்து கலக்கலாம்.

சொல்ல காத்திருக்கும் வழிகள்....
மின் அஞ்சல் irukiram@gmail.com
தொலைபேசி 0113150836

கடந்தமுறை சந்திப்பில் எனக்கு கிடைத்த வேலை அறிவிப்ப்பு செய்வது இம்முறை எந்த வேலையும் இல்லாமல் வேடிக்கை பார்க்கப்போறன். சந்தோசமா, ஆனால் கடந்தமுறை பேச முடியாமல் போன அனானிகள் பற்றிய பேச்சு இம்முறை எழும் என எதிர்பார்க்கின்றேன். ஆனால் ஒரு சந்தோசம் இப்போது எனக்கு அனானிகள் தாக்குதல் குறைந்துள்ள நிலையில் மீண்டும் என்னை அடிக்க அண்ணன்கள் தயாராகலாம். இதுவரை முகம் தெரியாமல் தெரிந்தவர் என சொல்லி அடித்த கில்லிக்கும் சொல்லாமல் அடித்த திருப்பாச்சிக்கும் சொல்லியும் சொல்லாமலும் அடித்த சிவகாசிக்கும் என்னை நேரடியாக் அடிக்க வாய்ப்பு உண்டு வங்க அன்பால் ஒருவரை ஒருவர் அடிப்போம்.

சொல்லவேண்டியதை சொல்லிட்டன் இன்னொரு விஷயம் இருக்குங்க. இந்த பதிவு என் நூறாவது பதிவு. ஒருவாறு ஒரு நல்ல நிகழ்வுக்குரிய அழைப்பிதழாக என் நூறாவது பதிவு அமைந்தது சந்தோசமே. இந்த நேரத்தில் என் ஐம்பதாவது பதிவில் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த நல உள்ளங்களை நினைவு கூர்ந்திருந்தேன் மீண்டும் ஒரு தடவை அவர்களை நினைவுகூர்வதொடு எல்லோருக்கும் என் நன்றிகள். அதேநேரம் எனக்கு புதிதாக கிடைத்த வாசகர்கள், நண்பர்கள், அறிவுரையாளர்கள் இன்னும் பல அனானிகள் எல்லோருக்கும் என் நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் அன்பான ஆதரவை எதிர்பார்க்கின்றேன்.

இந்த நூறாவது பதிவை சதத்துக்கு முன் இரட்டை சதம் அடித்த நான் என பதிவிட இருந்தேன் காரணம் பதிவுலகில் என் நூறாவது பதிவை தொட முன் மூஞ்சி புத்தகத்தில் இருநூறு நண்பர்களை சேர்த்துவிட்டேன். சும்மா ஒரு பில்ட் அப்புக்கு தான். ஆனால் இப்போ என்னை அடிக்க நினைப்பவர்களுக்கு என எழுதுகின்றேன். சில மனபாரங்கள் தீர்ந்ததும், சூடான பதிவுகளோடு சிந்திப்போம். அதுவரை எனக்கு உங்கள் வாக்குகளையும் பின்னூட்டங்களையும் வழங்கி வளப்படுத்தும்படி கேட்டுக்கொள்கின்றேன்.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox