உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label சச்சின். Show all posts
Showing posts with label சச்சின். Show all posts

Saturday, April 2, 2011

உலக கிண்ணத்தை இலங்கை வெல்லவேண்டும் - சிங்



உலக கிண்ண இறுதிப்போட்டி வந்துவிட்டது. நாளை நடக்க இருக்கும் இந்த மெகா யுத்தத்துக்கு எல்லோரும் தயார். அணியின் பலம் பலவீனம் என எல்லாம் பலரால் பிரித்து மேயப்பட்டுள்ள நிலையில் நாளை மோத இருக்கும் அணிகளில் இந்திய அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது. முரளி நாளை விளையாடுவார் என பிந்திக்கிடைத்த செய்திகள் தெரிவிக்கும் நிலையில் அவர் எத்தனை ஓவர்கள் வீசுவார் என்பது கேள்வியே....

இந்தியாவில் நடப்பது இந்தியாக்கு பலம் எனிலும் இலங்கை இந்திய இதயங்களை ஓடித்தாலும் ஆச்சரியமில்லை. சச்சின்-முரளி ஜெயிக்கப்போவது யார்?

இந்தியாவில் பிறந்து லண்டனில் வாழும் ஒரு நபரை இன்று என்னால் சந்திக்க முடிந்தது. பிறப்பால் இந்தியாவின் சிங் (உடனே நம்ம மன்மோகன் சிங் என நினைக்கப்படாது) அவரிடம் இறுதிப்போட்டி பற்றி விசாரித்த போது இரண்டில் யார் வென்றாலும் சரியாம் இருந்தாலும் இலங்கை வென்றால் தனக்கு மிகப்பெரிய சந்தோசம் என்றும் சொன்னார். நான் ஏன் என கேட்டேன் I like to see Sri Lankan as a Champion என்றார். இதுதான் சிங்கின் பாசமோ? எல்லா சிங்கும் நல்லா சிங்கி அடிக்கிரான்கப்பா.

இதை நீங்கள் எப்படி எடுப்பீர்களோ தெரியாது. ஆனால் விளையாட்டில் இந்த நாட்டுக்கு தான் சப்போர்ட் பண்ணனும் என்ற கொள்கையில் பண்ண முடியாது. யாரை பிடிக்கிறதோ அவர்களை சப்போர்ட் பண்ணுவதில் என்ன தவறு. சூ மேக்கரை பிடித்தால் அவர் இலங்கையில் பிறக்க கூடாதோ. அல்லது சானியாவின் ஆட்டத்தை பாகிஸ்தான் ரசிகர் ரசிக்கக்கூடாதோ. விளையாட்டில் விளையாடாமல் ரசிப்போம். நாளை நிச்சயம் இரண்டு அணிகளும் ரசனைக்கு விருந்தளிக்கும். ஆனால் என்னங்க அண்ணனும் தம்பியும் அடிக்கடி மோதியதை பார்த்து சலித்துப்போச்சுதுங்க.
Share:

Sunday, December 19, 2010

இன்றுமுதல் பதிவர்கள் இதை தான் எழுதபோகின்றார்கள்.

என்ன பதிவர்களே! ஒரு சின்ன மொக்கை போடபோகின்றேன் அதுக்கு முதல் ஒரு சீரியஸ் விடயம்.

இந்தியா, தென் ஆபிரிக்காவுடன் போட்டியில் டிரா செய்கின்றதோ இல்லையோ சச்சின் தன சாதனை பயணத்தில் இன்னொரு மயில் கல்லை தாண்டி விட்டார். சத்தத்தில் அரைச்சதம் கடந்து தன அணியை மீட்க போராடிக்கொண்டிருக்கின்றார். சாதனை நாயகனுக்கு வாழ்த்துக்கள் சொல்கின்றேன். இதை விட வேற ஒன்றும் நான் சொல்ல மாட்டேன். ஏன் தெரியுமா?

வரபோகும் இரு நாட்களும் இதுவரை பதிவர்களால் போற்றி வழிபடப்பட்ட விஜயை பின்தள்ளி சச்சின் பெயர் அடிபடபோகின்றது. இந்தியா தோற்றாலும் சச்சின் நாமமமே அனைத்து தளங்களிலும் பரவலாக ஆக்கிரமிக்கப்படபோகின்றது. மீண்டும் ஒரு தடவை சச்சின் சாதனை புத்தகம் தூசு தட்டப்படபோகின்றது.(இந்த முறை தூசு இருக்காது காரணம் இப்பதான் சில நாட்களுக்கு முன்னம் இன்னொரு சாதனையை பதிக்க எடுத்திருப்பார்கள்.) சச்சின் கடவுளுக்கும் மேலாக வைத்து பதிவர்களால் பூசிக்கப்படபோகின்றார்.

இன்னொருபுறம் சாதனைக்காக ஆடும் சச்சின். சச்சின் சுயநலவாதி என்னும் விமர்சன பதிவுகளும் வரபோகின்றன. இன்னும் என்னென்னவோ பதிவுகள் வந்தாலும் சச்சின் தான் வரும் இரண்டு நாட்கள் எல்லா பதிவர்களாலும் எழுதப்படபோகின்றார். அப்புறம் எதுக்கு நான் அவரை பற்றி எழுதுவான். நீங்கள் எழுதுங்கோ வாசிக்கின்றேன்.
Share:

Monday, December 6, 2010

மகனுடன் துடுப்பெடுத்தாடும் சச்சின்.-காணொளி இணைப்பு.

கிரிக்கெட்டின் சாதனை மன்னன் சச்சின் தன் மகனுடன் கிரிக்கெட் ஆடும் காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. வருங்கால இந்தியா அவர் கருத்திலோ?

Share:

Friday, July 23, 2010

முரளி - போட்டோ கொமன்ஸ்








































இந்த பதிவிட படங்களை தந்துதவிய பவன்,கான்கொன்,மற்றும் யோ வாய்ஸ் யோகா அண்ணாவிற்கு என் நன்றிகள்.

Share:

Tuesday, April 27, 2010

ஐ.பி.எல் ஸ்பெசல் போட்டோ கொமண்ட்ஸ்.










நம்ம சமீரா ரெட்டியை பார்த்தே முன்தினம் பார்த்தேனே ஸ்டைலில் பாடுறான் இந்த மோடி.





ஜெயஹோ பாடல் போல படியுங்கள்.



Share:

Friday, April 23, 2010

எவன்டா மோடி? இவன் கிரவுண்டில ஒன்னுக்கு போறான் அம்பயர்.


தொடர்ந்து போட்டோ கொமண்ட்ஸ் பதிவுகளுக்கு உங்கள் ஆதரவு கிடைத்துவருவது ரொம்ப சந்தோசமாக இருக்கின்றது. இதோ அடுத்த அட்டகாசம். பாருங்கள் மகிழுங்கள் மறக்காமல் வாக்களியுங்கள் மற்றவர்களும் பார்க்க.




Share:

Thursday, April 22, 2010

யாரப்பாத்து தம்பி என்றாய். உம்மா உம்மா உம்மா ஆண்டி..

ஐ.பி.எல்லில் நம்ம கிரிக்கெட் வீரர்களும் சினிமா நடிகைகளும் அப்படி என்னதான் பேசி இருப்பாங்க. சும்மா லோலாய்க்கு. படியுங்க முடிஞ்சா சிரிங்க அப்பிடியே ஒரு வாக்கை குத்துங்க. எல்லோரும் இதை பார்க்க.










Share:

Monday, April 12, 2010

ஐ.பி.எல்லில் ஆடும் சர்வதேச வீரர்களுக்கு நெருக்கடி -ஐ.சி.சி அறிவிப்பு.



இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடர் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போயகொண்டிருக்கையில் அதில் விளையாடும் சர்வதேச வீரர்களுக்கும் அணி நிர்வாகிகளுக்கும் இடி தரும் செய்தி ஒன்றை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

சர்வதேச வீரர்கள் தங்கள் நாட்டுக்காக விளையாடுவது மட்டுமன்றி பணம் பார்க்க தெரிந்தெடுத்தது ஐ.பி.எல்தான்(இங்கே நடக்கும் கூத்து பற்றி விரைவில் ஒரு பதிவிட எண்ணி உள்ளேன்.) இப்போது அதற்கே ஆப்பென்றால் யார்தான் நிம்மதியாய் இருக்க முடியும். அனால் ஐ.சி.சியை வளைத்துப்போட்டு விடு சர்வதேச அங்கீகாரம் உள்ள போட்டியாக இதை மாற்றலாம் என்பதே லலித் மோடியின் எண்ணமாக இருந்தது. பல சர்வதேச வீரர்கள் முழுமையாக இந்த தொடரில் பங்குபெற முடியாமல் இடை நடுவே வந்து சேர்ந்துள்ளனர். இது போட்டியின் சுவாரஸ்யத்தை குறைத்தது மட்டுமன்றி, சில அணிகளை பாதித்தும் இருக்கின்றது.

இந்த நிலையில் ஐ.சி.சியின் தலைவர் லோகார்ட் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல்லுக்கேன்று தனியான காலகட்டத்தை ஒதுக்கும் எண்ணம் இல்லை. அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் தொடருக்கும் இப்படி செய்வது கடினமானது. எதிர்காலப் பயணத்திட்டம் என்பது சர்வதேச தொடர்களுக்கு மட்டுமே என்றும் மேலும் ஐ.பி.எல் நிர்வாக குழு கூட இது பற்றி தம்மிடம் கோரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் T20போட்டிகள் கிரிக்கெட்டில் பாரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது உண்மைதான் அதற்காக டெஸ்ட்,ஒருநாள் போட்டிகளை கைவிட முடியாதென்று கூறிய அவர் ஒருநாள் அரங்கில் அண்மையில் தான் சச்சின் இரட்டை சதத்தை தொட்டு புதிய சரித்திரம் படைத்தார். போட்டிகளும் சுவாரஷ்யமாக உள்ளன. எனவே ஒருநாள் கிரிக்கெட்டுக்கு அழிவில்லை. ஆனால் இந்த வகைககளை எப்படி நிர்வகிப்பது முக்கியம் என்றே அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பல சர்வதேச வீரர்கள் ஐ.பி.எல்லில் பங்குபற்றுவதில் சிறு சிக்கல்கள் வந்தாலும் சர்வதேச நட்சத்திரங்கள் இங்கேயும் ஜொலிப்பது தவிர்க்க முடியாததே.
Share:

Wednesday, March 24, 2010

உலககிண்ணப் போட்டிகளில் ஆடமாடேன்- சச்சின்.


இந்த வருடத்தில் பங்குபற்றிய டெஸ்ட் போட்டிகளில் தொடர் சதங்கள் போதாக்குறைக்கு ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் கில்லியும் சில பல்லிகளும் எட்டிப்பார்த்தும் எட்டாக்கனியாகிப்போன 200 அதுவும் குறைந்தளவு பந்துகளில். போதாக்குறைக்கு இப்போது ஐ.பி.எல்லில் முதல் போட்டியில் 11 பந்துகளில் மூன்று 4 ஓட்டங்கள் அடங்கலாக 17 ஓட்டங்கள் அடுத்தபோட்டியில் மரண அடி வெறும் 32 பந்துகளில் 11 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 63 ஓட்டங்கள்(கண்குளிர கண்டேன் இந்த தாண்டவத்தை.) அடுத்த போட்டியில் கொஞ்சம் மந்தமாக ஆடினாலும் இருபத்தைந்து ஓட்டங்கள் இறுதியாக கங்குலியின் அணிக்கெதிராக நாற்பத்தெட்டு பந்துகளில் ஆட்டமிழக்காமல் எழுபத்தொரு ஓட்டங்கள். இந்த தொடர் சிறப்பான ஆட்டத்துக்கு சொந்தக்காரர் தான் இப்போது உலகக்கிண்ண போட்டிகளில் ஆடமாட்டார் என தெரிவித்துள்ளார்.

இளையவர்களின் ஆட்டம் என சொல்லப்பட்ட அதிரடி T20இல் சூறாவளியாக ஆடிக்கொண்டிருக்கின்றார். அப்படி இருக்கையில் பலரின் பேச்சும் வரும் உலகக்கிண்ண போட்டிகளில் ஆடி மீண்டும் ஒரு தடவை இந்தியாவை வெல்லவைக்க வேண்டும் என்று இருக்கின்றது. ஆனால் இதற்க்கு சச்சின் மறுத்து விட்டார். அறிவிக்கப்பட்ட முப்பது பேர் கொண்ட இந்திய உத்தேச அணியில் சச்சின் இடம்பெறவில்லை. கடந்த 2007ஆம் ஆண்டிலேயே சச்சின் T20 போட்டிகளில் இருந்து விலகியதே இதற்கு காரணம். இருப்பினும் அசத்தலாட்டம் ஆடும் இவரை நிச்சயம் சேர்க்கவேண்டுமென ஒலிக்கும் பலரின் குரலுக்கு செவிசாய்த்து அணியில் சேர்த்துக்கொள்ளவேண்டுமென பலரின் கோரிக்கையாக இருந்தது. இதற்கு வழி திறந்து விடுவது போல உத்தேச அணியில் இடம்பெறாவிட்டாலும் இறுதியாக அறிவிக்கும் பதினைந்து பேர் கொண்ட அணியில் புதிதாக வீரர்களை இணைத்துக்கொள்ளலாம் என ஐ.சி.சி அறிவித்துள்ளது. இதன் மூலம் சச்சின் நிச்சயம் களம் இறங்குவார் என எதிர் பார்க்கப்பட நிலையில் தான் சச்சின் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சர்வதேச T20 போட்டிகளில் பங்குபற்றுவதில்லை என தான் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என சச்சின் தெரிவித்துள்ளார். இது ஒரு புறம் இருக்கட்டும். சச்சின் ஒரு சிறந்த தலைவர் இல்லை என்பது வெளிப்படை உண்மை எழுதமுடியாத விதியாகவே பேசப்பட்டு வருகின்றது. நம் கிரிக்கெட் தொடர் பதிவில் கூட சச்சினை வீரராக பிடித்தவர்கள் கூட ஒரு தலைவராக பிடிக்கவில்லை என்றனர். அதற்கு சர்வதேசப்போட்டிகளில் இந்தியாவை அவர் பிரதிநிதித்துவப்படுத்திய போது கிடைத்த பெறு பேறுகளே சான்று. ஆனால் இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவரகாவும் ஆட்டத்திலும் கலக்குகின்றார். கடந்தமுறை கூட காயத்தில் இருந்து தலைவராக இவர் வந்த பின் சனத்தும் இவரும் சேர்ந்து ஆடிய ஆட்டமும் பெற்ற வெற்றிகளும் தெரியும். நட்சத்திர வீரர்கள் சர்வதேச வீரர்கள் திறமையான வீரர்கள் இருக்கும் இந்த மும்பை அணியை வெற்றிக்கொடி நாட்ட வைக்கும் சிறந்த அணித்தலைவராக பிரகாசிக்கும் சச்சினால் ஏன் அன்று ஜெயிக்கமுடியாமல் போனது. அன்று இருந்த அணி திறமையில் சளைத்ததல்ல வேண்டுமென்றே இப்படி ஆடினார்களா அல்லது என்னதான் காரணம் புரியாத புதிராகவே உள்ளது. என்னைக் கேட்டால் சச்சினும் இப்போது சிறந்த தலைவர்தான்.
Share:

Saturday, March 13, 2010

கில்லியை தொடரும் கிரிக்கெட்.


கிரிக்கெட், விளையாட்டுகளில் எனக்கு ஓரளவு தெரிந்த விளையாட்டு எனக்கு பெரிதாக விளையாட தெரியாவிட்டாலும் அதை பற்றிய ஓரளவு அறிவை வளர்த்து வைத்துள்ளேன். 1999 பிற்பட்ட காலப்பகுதியில் இருந்து தான் கிரிக்கெட் பற்றி நான் அறிந்து கொண்டேன். எனவே என்னை கவர்ந்த வீரர்கள் அதன் பின் வந்த வீரர்களாக தான் இருக்கும். பெரியவர்கள் மன்னித்துக்கொள்ளுங்கள்.

ஆரம்பிக்கலாமா.

அழைத்தவர்: எப்பூடி.

விதி முறைகள்:

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.


2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை

3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்

(1) பிடித்த போட்டிவகை :ஒருநாள் மற்றும் T20

(2) பிடிக்காத போட்டிவகை :சில டெஸ்ட் போட்டிகள். முடிவே இல்லாமல் முடிவதனால்.

(3) பிடித்த அணி : இந்தியா அதன் பின் இலங்கை,நியூசிலாந்து,இங்கிலாந்து .

(4) பிடிக்காத அணி : அவுஸ்திரேலியா. காரணம் மற்ற அணிகளில் என்ன தரமான வீரர்கள் இருந்தாலும் தாங்கள் தான் மன்னர் என ஒரு சில வீரர்கள் நினைப்பது. தங்களை மற்றவர்கள் வென்றால் அதிஷ்டம் என சொல்லி சமாளிப்பது.

(5) பிடித்த துடுப்பாட்ட வீரர்கள் : சச்சின்(காரணம் சொல்லவேணுமா?) ,கங்குலி(அவர் போல நானும் இடக்கை.),சேவாக்(எதற்கும் அஞ்சா அதிரடி பார்க்கும் நேரம் முழுக்க வெறுப்பு வராத ஆட்டம்.),யுவராஜ்(மண்டியிட்டு சிக்ஸ் அடிக்கும் ஸ்டைல்.) ,கம்பீர்(கங்குலியின் வாரிசு.),விராட் கோலி(அதிரடி.), தோணி(தல ஆச்சே.),சங்கா(முன்னர் பிடிக்கும் இப்போ வெறுப்பு.) அர்ஜுன(ஒரு ரன்னை கூட நடந்து எடுக்கும் தைரியசாலி) ஸ்டீபன் பிளமின்க்,அடம் கில்கிறிஸ்ட்(அந்த அணியில் இருக்கும் ஒரே நல்லவர்.)

(6) பிடிக்காத துடுப்பாட்ட வீரர்கள் :பலர் உண்டு. ஆனால் பிரபலங்களை மட்டுமே சொல்கின்றேன். அத்தப்பத்து, டில்ஷான்(இப்போ அடி அடி என அடிப்பது ஆனாலும் ஸ்டைல் இல்லா மலட்டடி.) இன்சமாம்(மனிதன் அவுட்டே ஆகமாட்டார்.) லாரா(காரணமே இல்லை.) பொண்டின்க் (திறமை இருந்தும் வாயால் அலட்டுவதால்.) மைக்கல் கிளார்க் .(குட்டி பொண்டின்க்.) சமரவீர, சல்மான் பட்(இந்தியாவை தாக்குவதனால்.)


(7) பிடித்த விக்கட் காப்பாளர் : தோணி(நம்ம அணிக்காக ஆடுவதால்.) திராவிட்(யார்மே இல்லாத நேரம் அணியின் நலனுக்காக அந்த சுமையையும் ஏற்றதால்.) சங்கா,மார்க் பவ்ச்சர், கில்கிறிஸ்ட்.

(8) பிடிக்காத விக்கட் காப்பாளர் : பார்த்திவ் பட்டேல்

(9) பிடித்த களத்தடுப்பாளர் : எப்போதும் யுவராஜ் சிங்(பாயும் புலி.) கைப்(ஓடி எடுப்பார்.) சச்சின்(இந்த வயதிலும் ஓடி ஓடி பிடிப்பதால்.) பாண்டிங்

(10) பிடிக்காத களத்தடுப்பாளர் : கங்குலி(பந்து போக பார்த்துக்கொண்டிருப்பது.) அர்ஜுன(சொல்லவா வேணும்)

(11) பிடித்த வேகப் பந்து வீச்சாளர் :வசீம் அக்ரம், சோயிப் அக்தர்(என்ன தான் குழப்படி பயலா இருந்தாலும் வேகம் எண்டால் வேகம்.) லீ( என் தங்கைக்கு பிடித்ததால் எனக்கும் பிடித்து விட்டது.)

(12) பிடிக்காத வேகப் பந்து வீச்சாளர் : டில்ஹார பெர்னாண்டோ, மொகமத் சாமி, கிலேச்பி, ஷேன் பாண்ட் (இந்தியரை பாழாய் படுத்தியதால்.)

(13) பிடித்த ஸ்பின்னர் : முரளி(தமிழன் என்னும் பாசம்.) கும்ப்ளே(விடா முயற்சி) ஷேன் வாரன்(சாதனைகளை படைத்ததால். பின்னாளில் திருந்தியதால்)

(16) பிடிக்காத ஸ்பின்னர் : அஜந்தா மென்டிஸ்(வெட்டி பந்தா.)

(17) பிடித்த ஆடுகளங்கள் : இந்தியாவின் சென்னை, கொல்கத்தாவின் ஈடன் காடன், அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன்,அடிலெயிட்,சிட்னி,இலங்கையின் காலி, பாகிஸ்தான் லாகூர், இங்கிலாந்தின் ஓவல், தென் ஆபிரிக்காவின் ஜோகனச்பெர்க்.

(18) பிடிக்காத ஆடுகளங்கள் : இலங்கையின் தம்புள்ள(இலங்கை வெல்ல வேண்டுமென தயாரிக்கும் மைதானம்.)

(19) பிடித்த சகலதுறை வீரர் : யுவராஜ் சிங், சச்சின், இர்பான் பதான், சனத், கலிஸ், அப்பிரிடி, டானியல் வெட்டோரி.


என்ன ஒரு சகல துறை வீரர் பாருங்க.

(20) பிடிக்காத சகலதுறை வீரர் : அன்றூ சைமன்ஸ்.(குழப்படிக்கார பயல்).

(21)பிடித்த அணித் தலைவர் : கங்குலி(இந்தியாவுக்கு வெற்றி என்று ஒன்று இருக்கென சொல்லிக் கொடுத்தவர் தைரியத்தை கொடுத்தவர்) தோணி(அதிஷ்டக்கார தல) மஹேல(பொறுமை சாலி) அர்ஜுன, ஸ்டீவ் வாவ், ஸ்டீபன் பிளமின்க்(நீண்டகாலம் அணியை வெற்றிப்பாதையில் கொண்டுவந்தவர்.)

(22) பிடிக்காத அணித்தலைவர் : சச்சின்,சனத்(துடுப்பால் சாதித்தவர்கள் ஆனால் தலைமையில் சாதிக்கவில்லை.) பாண்டிங்(திமிர்.)

(23) கனவான் வீரர்கள் : சச்சின்,முரளி.

(24) பிடித்த வர்ணனையாளர் : டோனி கிரேக்,ரவி சாஸ்திரி,கவாஸ்கர்

(25) பிடிக்காத வர்ணனையாளர் :ஹர்ஷா போக்லே

(26) பிடித்த பயிற்றுவிப்பாளர் : டேவ் வட்மோர்(கத்துக்குட்டி அணியை பாயும் புலி ஆக்கியவர்) பாப் வூல்மர் (பயிற்ச்சியில் பல தொழில் நுட்பம் புகுத்தியவர்.) இப்போது கேரி கேச்டன்(இந்தியாவின் வெற்றிகளின் பங்காளன்.)


(27) பிடிக்காத பயிற்றுவிப்பாளர் : கிரேக் சப்பல்(கோச்சர் என்ற பெயரில் வந்து நாசமாக்கியது. )

(28) பிடித்த போட்டி : இந்தியா விளையாடும் எல்லாப்போட்டிகளும்.

(29) பிடித்த வளரும் வீரர் : விராட் கோலி.(என்ன பொறுப்பு என்ன அதிரடி. வருங்கால இந்தியா என சொல்லலாம்.)

(30) பிடிக்காத வளரும் வீரர் : ரியான் ஜேம்ஸ் ஹரிஷ்(அவுஸ்திரேலியா அணிக்காக விளையாடுகின்றாரே.)


பதிவெழுத நான் அழைப்பது.

1. அகசியம் வரோ ( என்னதான் எழுதிறார் பார்ப்போமே.)
2. சாளரம் கார்க்கி(உறவுக்காக)
4. க.கோபி கிருஷ்ணா( நீண்டகாலம் வேறு ஆணிகள் புடுங்குவதால்.)

வானொலியில் என் இறுதிநாள் பற்றி விரைவில் என் பதிவு வரும். சில பல தனி வேலைகள் உறவினர்களுடன் என் நேரத்தை செலவளிப்பதர்க்காக இந்த சில நாட்களை ஒதுக்கினேன். அத்துடன் வானொலியில் இருந்து விலகிய கவலை இன்னும் மாறவில்லை. எனவே நேரம் வரும் போது என் பதிவையும் எதிர்பாருங்கள்.

பல்டி: கன்கொன் || Kangon அழைச்சதுக்கு நன்றிங்ணா....
ஆனா ஏற்கனவே பதிவிட்டுவிட்டதால் பதிவிடாத ஆதிரை அண்ணாவை (:ப) இந்தப் பதிவிட அழைக்கவும்.....
http://kangon-kangon.blogspot.com/2010/02/blog-post_10.html கான்கொனின் கோரிக்கையை ஏற்று ஆதிரையை இதை தொடர அழைக்கின்றேன்.
Share:

Wednesday, February 24, 2010

சச்சின் மனிதனா?- ஒரு நியாயமான கேள்வி.


இன்று என் வாழ்வில் சாதித்த ஒரு திருப்தி ஆனால் நான் ஒன்றும் செய்யவில்லை நமக்கு பிடித்தவர்கள் சாதித்தால் அது நாம் சாதித்தது போல என்பதை உணர்கின்றேன். காலை பத்துமணிக்கு கண் விளித்ததே இன்று மாலை மூன்று மணிக்கு வானொலியில் இடம்பெறும் கற்றது கையளவு என்ற நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்க வேண்டும் என்ற ஹிஷாம் அண்ணாவின் தொலைபேசி அழைப்ப்பினூடு. மாலை மூன்று மணிக்கு கலையகத்துள் நான் நுழையும் போது எங்கள் தொலைக்காட்சி மக்கர் செய்துகொண்டிருந்தது. உடனடியாக தொழில் நுட்பவியலாளர்களின் உதவியை நாடினேன்.(மாற்றுவதாக இருந்தால் அவர்களின் பகுதியில் இருக்கும் தொலைக்காட்சியில் தான் முதலில் மாற்ற வேண்டும்.) வழக்கமா தாமதப்படுத்தும் நம்மவர்கள் இன்று உடனே சரி செய்து விட்டனர்.

பார்த்தேன் கொஞ்சம் கவலை நம்ம சேவாக் ஆட்டம் இழந்திருந்தார். அட இன்று தென் ஆபிரிக்கா நாளாக்கும் என நினைத்து ஒரு நிமிடம் சென்றிருக்காது சச்சின்.கார்த்திக் இரண்டுபேரின் துடுப்பாட்டத்தை பார்க்கும் போது ஒரு நம்பிக்கை வந்தது இந்தியா முன்னூறு அடிப்பது உறுதி என எண்ணினேன். மிக வேகமான சச்சின் அதிரடி ஆட்டத்தினால் நான் எழுந்து வெளியில் கூட செல்லவில்லை. அப்படியே கட்டுண்டு பார்ப்பது போல பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் மனதுக்குள் ஒரு பயம் நான் எப்போதெல்லாம் இந்தியா விளையாடும் போட்டியை பார்ப்போம் என இருந்து பார்த்தாலும் அன்று அவர்கள் சொதப்புவர். இன்றும் அந்த பயம் தொற்றிக்கொண்டது. இருப்பினும் சச்சினின் அந்த அதிரடியை மட்டுமாவது ரசிக்கலாமே என்ற ரீதியில் பார்த்துக்கொண்டிருந்தேன். முப்பத்தேழாவது பந்தை சந்தித்த சச்சின் தன் ஸ்டைலில் ஒரு நான்கு ஓட்டத்தை தட்டி விட்டு தன் அரைசதத்தை பூர்த்திசெய்தார். மறுமுனையில் கார்த்திக் சச்சினுக்கு நல்ல ஒத்துழைப்பு நல்கினார்.

மிக வேகமான புயல் வேக ஆட்டத்தில் இந்தியாவின் வேகம் அதிகரித்தது. களத்தடுப்பு புலிகள் என்னும் தென் ஆபிரிக்க அணியினர் களத்தடுப்பில் பல இடங்களில் சொதப்பினர். ஒருவாறு பதினைந்து ஓவரில் இந்தியா நூறு ஓட்டங்களை தொட்டது. நானும் சந்தோசமாக ஸ்கோர் விபரங்களை வானொலியில் வழங்கிக்கொண்டிருந்தேன். அதிகமான நான்கு ஓட்டங்கள் பெறப்பட்டுக்கொண்டே இருந்தன. சச்சின் எழுபதுகளை எட்டியவுடன் என்மனதோ சச்சினின் சதம் இன்று உறுதி என சொல்லிக்கொண்டது. அதேநேரம் ஒரு சில முட்டாள்கள் யோசிப்பது போல சச்சின் சதம் போட்டால் இந்தியா தோற்றுவிடுமோ என அஞ்சிக்கொண்டும் இருந்தேன். வழக்கமான தொன்னூறுகளில் மெதுவாக ஆடுவது போல எல்லாம் இன்று சச்சினின் தயக்கம் வெளிப்படவில்லை. சரவெடி தொடர்ந்து கொண்டே இருந்தது. தொன்னூறில் போயடுவாரோ என்ற பயம் என்னுள். எந்த தயக்கமும் இன்றி சச்சின் ஒவ்வொரு ஓட்டங்களாக சேர்த்து தன் 46வது சதத்தை பூர்த்து செய்தார். அப்போது அதிக சதம் பெற்றவர்கள் வரிசையை தொலைக்காட்சியில் காட்டியபோது அட நெருங்க முடியுமா நம்ம தலைவரை என்ற பெருமிதம் என்னுள்.

சதம் கடந்த பின் சச்சினின் வேகம் இன்னும் அதிகரித்தது. எனக்கும் ஒரே குஷி.அடடா இன்றைக்கு நம்மள இந்த நேரம் வேலை செய்யப்போட்டிட்டான்களே அதுவும் மேட்ச் பார்த்து ஸ்கோர் சொல்வது நம்ம வேலை. எப்பூடி?? ஆட்டம் தொடர கார்த்திக் போக பதான் வந்து தன் வேலையை செய்துவிட்டு போக வந்தார் தலைவர். ஒரு பக்கம் சச்சின் வெளுத்துக்கொண்டிருக்க மறுபுறம் தோனியின் தாண்டவம் நடந்துகொண்டிருந்தது. ஆனால் தோனியின் தாண்டவம் இன்று எரிச்சலை தான் ஏற்படுத்தியது. ஒவ்வொரு பந்தையும் சச்சின் அடித்து நொறுக்கமாட்டாரா என்ற அவாவை தந்தது. பல பதிவர்கள் இந்த சாடலை சொல்லி இருந்தனர். ஆனால் கடைசி ஓவரில் தான் நான் இதை நினைத்து பெருமைபட்டேன். தோனியின் தாண்டவத்துக்கு வழிவிட்டதே சச்சின் என தோன்றியது. காரணம் அணிக்கு ஓட்ட வேகம் தேவை அதே போல சச்சினும் சாதனை படைக்க வேண்டும் என்றால் அப்படி. ஒருவேளை அணியின் ஓட்ட வேகத்தை அதிகரிக்கப்போய் சச்சின் பொல்லு போய்விட்டால் அதை தான் டோனி செய்ய சச்சின் மறுமுனையில் தன் பங்கை செய்துகொண்டிருக்கின்றார். இறுதிப்பந்துக்கு முதல் பந்தில் அடித்து விட்டு டோனி ஓட முற்பட சச்சின் தடுத்து விடுவார். அப்போதே உணர்ந்தேன் சச்சின் தோனியின் அடிகளை வரவேற்றுக்கொண்டுதான் தன் சாதனையை நெருங்கினார் என. அதேபோல சாதனைக்காக ஆடவில்லை என்பதையும் இதன் மூலம் நிரூபித்துவிட்டார்.

சச்சின் நூற்றியைம்பது தாண்டிய பின் தன் முன்னைய அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை கடக்கமாட்டார என சிந்தித்தேன். இதற்கிடையில் மாலை ஐந்து மணியுடன் என் நிகழ்ச்சி முடிய அடுத்த நிகழ்ச்சிக்காக சந்துரு அண்ணாவிடம் கலையகத்தை ஒப்படைத்து விட்டு சென்றுவிட்டேன். இடையில் விமல் அண்ணாவிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. டேய் சச்சின் நூற்றி எழுபத்தொன்பது ரன்னடா இன்று எட்டுமணிக்கு விளையாட்டு திடல் நீதான் நான் சொல்றதையும் கணக்கில் எடு என்று சச்சின் இன்று கடந்த இன்னும் இரண்டு சாதனைகளை பகிர்ந்து கொண்டார்.(அவர் என்னுடன் பேசிய நேரம் மாலை ஐந்து முப்பது இருக்கும்.) இன்று சச்சின் தென் ஆபிரிக்காவிற்கு எதிராக ரிக்கி பாண்டிங் வைத்திருந்த மொத்த அதிகூடிய ஓட்டங்கள் என்ற சாதனையை முந்தி உள்ளார். அதேபோல தென் ஆபிரிக்காவிற்கு எதிராக ஒரு தனிநபர் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் என சொல்லிவிட்டு வைத்துவிட்டார். மீண்டும் சற்று நேரத்தில் இன்னொரு அழைப்பு சச்சின் உலகசாதனை படைப்பார் போல தெரிகின்றது எனவே சச்சின் ஸ்கோரை கொஞ்சம் அதிகம் சொல்லும்படி சந்துரு அண்ணாவிடம் சொல்ல நம் அலுவகத்தில் அந்த பரபரப்பை உண்டாக்கினோம். எல்லோரும் ஸ்கோர் பார்ப்பதில் குறியாக இருக்க எனக்கும் செய்தி வாசிப்பதற்கான நேரம் வந்தது. இதற்கிடையில் தன் முன்னைய அதிகூடிய ஓட்டத்தையு சனத்தின் சாதனையையும் சச்சின் கடக்க எங்கள் எல்லோர் மனதிலும் அடுத்தது சாத்தியமா? என்ற கேள்வி. செய்தி ஆரம்பிக்க நான்கு நிமிடங்கள் இருக்கவே நான் கலையகள் சென்றுவிட்டேன் சச்சின் அந்த சாதனையை முறியடிப்பதை பார்ப்பாதர்க்காக.

அங்கெ சந்துரு அண்ணா எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு உடனடி ஸ்கோர் கொடுத்துக்கொண்டிருந்தார். அந்த கணம் சச்சின் நீண்டகாலமாக சயீத் அன்வர் வசமும் அதன் பின் கவின்றியினால் சமப்படுத்தப்பட்ட அந்த சாதனையை கடக்க எங்கள் உடலும் ஒருக்கம் பூரித்தது. சற்று நேரத்தில் என்னிடம் ஒப்படைத்து விட்டு செல்ல ஆறு மணிக்கு முன் அடிக்கமாட்டார என நான் ஏங்கினேன். இதற்கககவே எங்கள் செய்திப்பிரிவை சேர்ந்தவர்கள் விளையாட்டு செய்தியடிப்பதை தாமதமாக செய்யும் படி கேட்டவன் நான். ஆனால் சச்சின் நூற்று தொண்ணூற்றாறு. செய்தியும் ஆரம்பமானது. என் ஒரு கண் செய்தித்தாளில் இன்னொரு கண் சச்சின் அடிக்கமாட்டார என அடிக்கடி தொலைக்காட்சியை பார்த்தபடி. இந்த நிலையில் விளையாட்டு செய்தியுடன் செய்திப்பிரிவை சேர்ந்த அருண் உள்ளே வந்து சச்சின் எப்போது இருநூறு என்னும் புதிய கணக்கை ஆரம்பிப்பார் என காத்திருக்க இந்த தோனிப்பயல் விடவே இல்லை. தன் பங்குக்கு அடித்து துவைத்துக்கொண்டிருந்தார். என்ன செய்வது நானும் செய்தியை வாசித்து விட்டு எங்கள் நிலைய குறியிசையை ஒலிபரப்பிக்கொண்டிருக்கும் அந்த தருணத்தில் (உலகெங்கும் வெற்றி என்ற வரி அதில் வந்த நேரம். என்ன பொருத்தம்) சச்சின் அந்த சாத்தியமற்ற செயலை செய்து முடித்தார், இது சாதனையா. வழக்கம் போல கடவுளுக்கு நன்றி சொன்னது இந்த கிரிக்கெட்டின் கடவுள் இப்போது சொல்லுங்கள் இந்த சாதனையை செய்த சச்சின் மனிதனா அல்லது கடவுளா?

சேவாக் தன் வாயாலேயே இந்த ஆசையை வெளியில் சொல்லி இருந்தாலும் அவர் குரு அதை முதலில் செய்ய அதை ரசித்து கைதட்டியது இந்த சீடன். உண்மையில் இந்த போட்டியை இன்று பார்த்த அத்தனை பேரும் சரித்திரத்தில் இடம்பெறுவர். சரித்திரம் ஆரம்பித்திருக்கின்றது. புதுப்பயணம் தொடங்கி இருக்கின்றது. இந்த பாதையில் பலர் பயணிக்கலாம் ஆனால் இப்போது சாத்தியமில்லை. அப்படி சாத்தியமானாலும் இந்த சாதனை நாயகனின் பின்னால் மற்றவர் வருவர். சாதனையின் பின் கடவுளின் பின் அவர் பக்தர்கள் இருப்பது. சாதனைக்கு சாதனை சொந்தமாகாமல் போய் இருந்தால் தான் தப்பு. சேர வேண்டியவரிடம் சேர வேண்டியது சேர்ந்திருக்கின்றது. அப்புறம் என்ன நானும் விளையாட்டு திடலில் சச்சின் புராணம் பாடிவிட்டேன்.

சச்சின் உங்களுக்கு ஒன்று சொல்லணும் நான் இலங்கையில் இருந்து இதை எழுதி இருக்கேன், நான் இந்தியன் இல்லை ஆனால் நாடு மொழி கடந்து உங்கள் ரசிகன். ஏதோ என்வீட்டு கொண்டாட்டமாக கொண்டாடுகின்றேன். நீங்கள் எங்கள் வீட்டுப்பிள்ளை என்பது தான் நீங்கள் சாதித்த சாதனைகளில் பெரியது. வாழ்த்துக்கள் தலைவா.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox