உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label ஐ.பி.எல்.. Show all posts
Showing posts with label ஐ.பி.எல்.. Show all posts

Wednesday, April 14, 2010

கலைஞர் கருணாநிதி உத்தரவை மதிக்காத தோணி.


நாட்டாமைக்கே நம்ம தோணி சொல்வது...இதெல்லாம் செல்லாது செல்லாது.


பாசக்கார தலைவர் பாராட்டு நாயகன் இளைஞர்களின் இதய நாயகன் என்றும் அசராமல் ஓடிக்கொண்டிருக்கும் இளைஞர் என்று இன்னும் பல அடுக்கு மொழிக்கு சொந்தக்காரரான கலைஞர் கருணாநிதி அவர்கள் காலம் காலமாக தமிழர்களின் பண்பாடாகவும் வழக்கமாகவும் கொண்டாடப்பட்டு வந்த தமிழ்ப் புத்தாண்டை மாற்றி அமைத்துவிட்டார். இதை பற்றி காரசாரமாக விவாதங்கள் கருத்துக்கள் வந்து மறைந்து விட்டன. மறையா சூரியன் தன் உத்தரவு மூலம் தமிழ் நாட்டு நண்பர்களின் தலைவிதியை மாற்றி விட்டார். ஆன்மீகத்தில் நம்பிக்கை இல்லை என சொல்லிக்கொண்டே தன் வீட்டில் ஆன்மீக வாதிகளை வைத்திருக்கும் இவரால் எப்படி ஒரு ஆன்மிகம் சம்பந்தப்பட்ட உலக மக்களின் நம்பிக்கையை மாற்ற முடியும்.

எனக்கு தெரிந்தளவில் மீனா ராசியில் இருந்து மேட ராசிக்கு இடம்பெயர்வதுதான் புதுவருடப்பிறப்பு. இது நம் பூட்டன் பூட்டிக்கு முன்னைய பல தலைமுறையில் இருந்து நம்பிக்கையின் வெளிப்பாடு என வரலாறு சொல்கின்றது. இந்த இடப்பெயர்வு தைப்பொங்கல் அன்று வருமா? அதேநேரம் வசந்த காலப் பிறப்பு தான் வருட பிறப்பு என்ற நம்பிக்கையில் பார்த்தால் அந்த கால மாற்றத்தை மாற்ற எந்த கொம்பனாலும் முடியாது? அப்படி இருக்கையில் இதை மாற்றிய கருணாநிதி.................?????

பாசத்தலைவர் என்ன சொன்னாலும் தமிழக மக்கள் மட்டுமே இந்த உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடக்கும் சூழ்நிலையில் இருக்கின்றார்களோ தெரியாது. இதில் எத்தனை பேருக்கு உடன்பாடோ என்பதும் தெரியாது. ஆனால் இலங்கையில் நாம் இவருக்கு கட்டுப்பட தேவையும் இல்லை. கட்டுப்படவும் இல்லை. வழக்கம் போல இன்று தமிழ் சிங்கள புத்தாண்டு எல்லா இடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்க தோணி கருணாநிதியின் கருத்துக்கு என்ன சொன்னார்??? பாவமப்பா கேப்டன்(நான் நம்ம விஜயகாந்தை சொல்லல) நேற்றைய தினம் இடம்பெற்ற ஐ.பி.எல் போட்டியில் வெற்றி பெற்றதன் பின்னர் இந்த வெற்றியை நாளை புத்தாண்டை கொண்டாட இருக்கும் தமிழர்களுக்கு சமர்பிக்கின்றேன் என பேட்டி அளித்துள்ளார். அதுவும் தமிழ் நாட்டில் வைத்து நம் தமிழினத்தலைவர் ஆட்சியில் இருக்கும் நிலையில். பாவமப்பா தோணி அவருக்கு யாரும் சொல்லவில்லை போல தமிழக முதல்வர் சரித்திரத்தையே மாற்றி அமைத்தவர் என்று. அல்லது தெரிந்தும் இதை சொன்னாரா யாருக்குத் தெரியும். காரணம் வரலாறு அதுதானே. ஒரு சின்ன சந்தேகம் அவருக்கு இருக்கும் தமிழ் நண்பர் யாரும் தன் ஆதங்கத்தை பிரபலமாக இருக்கும் இவர் மூலம் வந்தாலாவது கருணாநிதிக்கு இதுதான் சரித்திரம் இதுதான் வரலாறு இதுதான் நம்பிக்கை என்பதை சொல்லாமல் சொல்லி இருப்பாரோ?

எது எப்படியோ தமிழர்களையும் தாண்டி எல்லோரிடமும் ஏப்ரல் 14 தான் தமிழ் புத்தாண்டு என்று பதிந்துவிட்டது. இதை யாராலும் மாற்ற முடியாதது என்பதற்கு ஒரு சின்ன உதாரணமே இந்த சம்பவம்.....

அட என்னங்க இந்த புது வருடத்தில் ஒரு நல்ல காரியம் செய்யணும் என்பதற்காக கொளுத்திப்போடிருக்கேன் இனி இந்த வெடியை கையாள்வது உங்கள் இஸ்டம்...
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox