உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label சந்திப்பு. Show all posts
Showing posts with label சந்திப்பு. Show all posts

Tuesday, March 23, 2010

ப்ளீஸ்....பதிவர் சந்திப்பில் வெளிவந்த உண்மைகள்.

ப்ளீஸ் நானும் ஒரு பதிவு எழுதி இருக்கேன் நம்ம ப்ளீசை பற்றி. ப்ளீஸ் வந்து படிச்சிட்டு ப்ளீஸ் ஒரு வோட்டுப் போட்டிட்டு ப்ளீஸ் யாரும் சீரியஸா எடுக்காமல் ப்ளீஸ் அப்பிடியே வந்த வழியே போய்டுங்க.

முதலில் நடந்ததை என் பங்குக்கு சொல்லிவிடுகின்றேன். அதன் பின் அன்றைய பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்களை பற்றிய திடுக்கிடும் உண்மைகளை வெளியிட இருக்கின்றேன்.

வாங்க விசயத்துக்கு போகலாம்....

வெள்ளி இரவு ஒரு பத்து முப்பது இருக்கும். என் கைப்பேசி பாட ஆரம்பித்தது. பார்த்தால் ஒரு புது இலக்கம். சரி யாரென பார்ப்போம்.

ஹலோ!
ஹலோ! நான் சுபாங்கன் கதைக்கிறன்.....
ஹலோ யார்?
நான்தான் ஐந்தறைப்பெட்டி சுபாங்கன்.( என்னது சவப்பெட்டி பென்சில் பெட்டி மாதிரி உங்கள் வீட்டில் இருக்கிறது ஐந்தறை அதுவும் பெட்டி மாதிரி போலவா?)
ஆ சொல்லுங்க....
நம்ம பவன் வந்திருக்கான் நாளைக்கு சும்மா ஒரு சின்ன சந்திப்பு கோல் பேசில் நடத்தலாம். வருவிங்களா?
என்ன ப்ளான் வச்சிருக்கிங்க?
பெரிதா ஒன்றும் இல்லை அங்கேயே வந்து பார்த்துக்கொள்வோம்.
அதுசரி நம்ம ஏரியாவில் இருந்து யார் யார் வாரார்?
கான்கொன்,ஆதிரை பாட்டா, புல்லட் தாத்தா வருவாங்க.
சரி...
கட்டாயம் வருவிங்கதானே...
சரி வாறன் வாறன்...


இப்படியே உரையாடல் முடிந்த பின். மறுநாள் ஆதிரை அண்ணருடன் பேசி மாலை நான்கு முப்பதுக்கு வெள்ளவத்தை ஆர்பிக்கோவிற்கு முன்னால் வரவும் என்றும் தனக்கு அங்கெ இன்னொரு சைடு பிசினஸ் இருப்பதாகவும் சொன்னார். மதியம் நம்ம குட்டி வந்தியத்தேவன்(லோஷன் அண்ணாதான் இந்த அறிவிப்பை விடுத்தவர்.) கான்கொன் கோல் பண்ணினான். என்ன வார ஐடியா இருக்கா என்று கேட்க. தன்னிடம் ஆதிரை அண்ணாவின் நம்பர் இல்லையாம் நீங்கள் எப்படி போகின்றீர்கள் நானும் வருகின்றேன் என்றான். சரி என எங்கள் ராணுவ ரகசியங்களை சொல்லி விட்டு நகரவில்லை ஆதிரை அன்னார் அலைப்பெடுத்தார். சரியாக நான்கரைக்கு வந்துவிடுவீர்களா என கேட்டார். ஏனண்ண என கேட்டன். இல்லை புல்லட் இப்போதான் திருப்பள்ளி எழுச்சி பாடுகின்றாராம் அதுதான் தனிய வந்து நிக்கனுமே என கவலைப் பட்டார்.(கவனிக்கவேண்டிய விடயம் இப்போதெல்லாம் மனிதர் தனிய தனிய என அடிக்கடி சொல்கின்றார் எதுக்கும் வீட்டில சொல்லுறது நல்லம் வேற என்னது இவருக்கும் ஒரு மலேசியா சிங்கப்பூர் இல்லாவிடாலும் இன்னொரு நாட்டிலாவது சிக்காமலா போய்விடும்.)

ஒருவாறு நான்கரைக்கு வந்து சேர்ந்தோம் அவ்விடத்தில். ஐந்து நிமிடத்துக்குள் குளித்துவிட்டு(கவனிக்க.) நம் புல்லட் ஆட்டோ பிடித்து வந்தாராம். வந்தவர் ஆர்பிக்கோவிற்குள்நிற்கும் பிள்ளையை பார்க்கணும் என நினைத்து விட்டார் போல ஆதிரை பட்டாவின் ஸ்பான்சரில் தாக சாந்தி செய்தார். அப்புறம் பஸ் ஏறி வந்தோம். டிக்கெட் எடுத்தது அண்ணல் புல்லட் தான். வந்து சற்று நேரத்தில் எல்லோரும் கூடி விட்டோம். இனி வரோவின் பதிவை படியுங்கள் புரியும். அதன் பின் இவர்களை பற்றிய உண்மைகளை படியுங்கள்.


நான் ரெடி யார் யார் என கண்டு பிடிப்பது இலகு பின்னூட்டத்தில் யார் யார் என சொல்லுங்களேன்.

*பங்குகளை இதுவரை பேசி வந்தவர் தன் வாழ்க்கையை பங்கு போட இருப்பவரை தேடி பறந்து போக இருப்பதாக பட்சி சொல்கின்றது. பறக்கும் இடமும் ஏற்கனவே தேவர் பதிவர் இருக்கும் இடம் என அந்த பட்சி சொன்னது.

* தான் இறங்கும் எல்லா களத்திலும் தலையாக இருக்கும் உடலமைப்பிலும் தல போல இருக்கும் இவர் சந்திப்புக்கு வந்த போது தன் வாகனத்தை நிறுத்தமுடியாமல் செய்தவர்கள் மீது கொண்ட கோபத்தால் அந்தக்களத்திலும் தலையாகியே தீருவேன் என்ற வைராக்கியத்தில் நித்தியானந்தரின் ஆசியுடன் களம் இறங்க இருப்பதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

*தினமும் பதிவிடும் பதிவர் தான் இருக்கும் துறையை விட மேக்கப்போடும் தொழிலே தன்னுடனும் தன் ரசிகர்கள் படம் எடுக்க மொய்ப்பார் என்ற காரணத்தால் அந்த துறையில் வந்து பலரை வசியம் செய்ய தயாராகிவிட்டார்.

*ப்ளீஸ் சை பிரபலப்படுத்தியவர் மூஞ்சிப்புத்தகத்தில் தன் சொந்த photo போட காரணம் சொந்தக்காரியா வரப்போறவர் சொன்ன அட்வைஸ் தானாம். யானை எவ்வளவு பலம் வாய்ந்தது என்ற வார்த்தை தானாம் அவரை மாற்றி இருக்கின்றது, ஆனால் இதனால் பலர் கலங்கி இருப்பதாக கேள்வி. எல்லாம் இனி தமக்கு கிடைக்காதே என்றுதான்.

*பிள்ளையாரோடு நெருங்கிய பதிவர்(இருக்கும் இடம்) அன்மைக்கலாமாக தன் சிரிப்பை தொலைத்து விட்டாராம். காரணத்தை தேடிக்கொண்டிருப்பதாக பல்கலை கழகத்தில் இருந்து செய்திகள் வெளியாகின்றன. அதேநேரம் மலேசியா இல்லாவிட்டால் என்ன மாலைதீவிலாவது பிடிப்பேன் என வலை வீசி தேடுவதாக கேள்வி.

*பெண்களின் இதயத்தை துளைத்தெடுக்க முயன்று முடியாமல் போன கோவா பதிவர் மீது இப்போது எல்லோரும் ஒரு ஜாக்கிரதையான கண் வைத்திருந்த நேரம் தான் கோவா பதிவர் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு பின் காணாமல் போய்விட்டார். விசாரித்ததில் வாலிபா வா வா என யாரோ அழைத்து தான் போனதாக கேள்வி.

*ரயில் ஏறி சந்திக்க வந்த பதிவர் தன் தளத்தில் பிளந்து கட்டினாலும் அமைதியை மெயின்டெயின் செய்தார் விசாரித்ததில் கிடைத்த உண்மை ரயிலில் பார்த்த கிளி வேட்டைக்காரன் படம் போல வேட்டியாடக்கூடியது என்ற நினைப்பில் இருந்தவருக்கு 5 star படம் போல ஆகியதே காரணம் என சொல்லப்படுகின்றது.

*பெட்டிக்குள் எழுதி பழக்கமான பதிவர் யாழில் சென்று ரெஜினோ ஐஸ்கிரீம் சாப்பிட்டபோது கிடைத்த அனுபவத்தில் இங்கே வந்தார். போகும் போது வழியில் எங்காவது கட்டம் கட்டலாம் என வந்தவரை கட்டம் கட்டி அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகின்றது.

இந்த உண்மைகள் எல்லாம் வடிகட்டிய பொய்கள். ப்ளீஸ் இதை யாரும் சீரியஸாக எடுக்காதீர்கள். ப்ளீஸ் என்னை கட்டம் கட்டி அடித்து விடாதீர்கள். ப்ளீஸ் நான் ரொம்ப பாவம்...ப்ளீஸ் இதை இங்கேயே விட்டு விடுங்கள். ப்ளீஸ் கொஞ்சம் சிரித்துக்கொண்டுதான் போங்களேன் ....ப்ளீஸ் உங்களுக்கு என் மேல் கோவமா....எதையும் தாங்கும் இதயம் கொண்ட நம் ப்ளீஸ் புகழ் கான்கொன் உங்களை தன் தளத்துக்கு அழைக்கின்றார். கோபம் வந்த அவரை கும்முங்க. காரணம் நாங்கள் எல்லாம் ப்ளீஸ் பதிவு போட அவர் தானே காரணம்....ப்ளீஸ்...ப்ளீஸ்...எனக்காக இதை செய்யுங்கள்....
Share:

Sunday, August 23, 2009

இலங்கை பதிவர்கள் சந்திப்பு நேரடியாக இணையத்தில்......

இன்று காலை 9மணிதொடக்கம் 12 மணிவரை நடைபெற இருக்கும் பதிவர்கள் சந்திப்பு உங்களுக்காக நேரடி ஒலி,ஒளிபரப்பு பதிவர்களின் தளங்களில். நீங்களும் பாருங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
Share:

Thursday, August 20, 2009

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி நிரல்.


வணக்கம் நண்பர்களே

இலங்கைப் பதிவர்களின் முதலாவது சந்திப்புக்கு உங்களின் ஆதரவும் வரவேற்பும் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்துள்ளோம். நாங்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையை விட அதிகமான நண்பர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு

காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்.



நிகழ்ச்சி நிரல்

  • அறிமுகவுரை
  • பதிவர்கள் அறிமுகம்
  • வலைப்பதிவு ஒரு முன்னோட்டம்
  • திரட்டிகள்
  • சிறப்பு அதிதி உரை
இடைவேளை
  • வலைப்பதிவு தொழில்நுட்பங்கள்
  • வலைப்பதிவும் சட்டமும்
  • பதிவுலக அனுபவங்கள்
  • எதிர்காலத் திட்டங்கள்
  • கலந்துரையாடல்
  • நன்றியுரை
லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com

இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்

முக்கிய குறிப்பு: மீண்டும் மீண்டும் நாம் உங்கள் வருகையைப் பதிந்துகொள்ளுங்கள் என சொல்வதன் காரணம் உங்களுக்கான சிற்றுண்டி குளிர்பான விடயங்களை ஒழுங்கு செய்வதற்காகவே இதனைக் கேட்கின்றோம். அத்துடன் உங்களுடன் வருகை தரும் நண்பர்களின் எண்ணிக்கையையும் தயை கூர்ந்து தந்துதவுங்கள்.
Share:

Tuesday, August 11, 2009

பதிவர்களுக்கிடையில் சந்திப்பு தேவையா?

பதிவர்கள் பல நாடுகளில் பல இடங்களில் இருந்து தங்கள் கருத்துக்களை பதிவாக இட எங்கோ ஒரு மூலையில் இருந்து இன்னொருவர் படித்துக்கொண்டிருக்கின்றார். ஒரு முனையும் இன்னொரு முனையும் எழுத்து-வாசிப்பு என்னும் இரு காரணங்களுக்காக இணைகின்றன. இப்படி இருக்கும் போது எழுதுபவரின் முகம் தெரியாமல் படிக்கும் பலர் இதில் பெயரில்லாதவர்கள் வேறு பின்னூட்டவாதிகளாக.(அனுபவமுங்கோ...) அதனால் தான் கேட்கின்றேன் பதிவர்களுக்கிடையில் ஒரு சந்திப்பு அவசியமா?

என் பதில் ஆம்.

இதுவரை காலமும் தெரியாமல் ரசித்தவர்கள்,முட்டி மோதியவர்கள்,கருத்து யுத்தம் நடத்தியவர்கள் நேரடிக்கலத்தில் சந்த்தித்தால் எவ்வளவு சுவையா இருக்கும்? கற்பனையே கரும்பாக இனிக்கிறது.

கடந்த எட்டாம் திகதி(என் இருபத்தோராவது பிறந்தநாள்.) எனக்கு வாழ்த்து சொன்ன அத்தனை நல் உள்ளங்களுக்கும் என் நன்றிகள். என்னை தெரிந்தும் தெரியாமலும் வாழ்த்து சொன்னோர் பலர்.இதை கொடுத்த பதிவுலக முகப்புத்தக(Face Book) நண்பர்களுக்கும் ஏனைய நண்பர்கள் உறவுகளுக்கும் நன்றிகள். எங்கள் வானொலி ஏற்பாடு செய்திருந்த புட்சால் கால்ப்பந்து சுற்றுப்போட்டியில் கடமையில் இருந்த நேரம் லோஷன் அண்ணாவின் தொலைபேசி அழைப்பை கேட்டு மைதானத்துக்கு வெளியில் நான் சென்றபோது அங்கே மூன்று பேர்.

ஒருத்தர் புல்லேட்டோடு என்னை நெருங்க மற்றவர் வாந்தி எடுத்துக்கொண்டிருக்க வழக்கமா கடல் ஏறுபவர் இங்கே தரையில் நிற்கின்றார். இந்த மூவரையும் சந்தித்தது எனக்கும் சந்தோசம். அங்கே வைத்து பதிவர்கள் சந்திப்பை பற்றி பேசி பலநாள் கனவொன்றை நனவாக்க முடிவுசெய்து கொண்டாயிற்று.

இதோ இப்போது அந்த நாளுக்காக ஆரம்பமாகி விட்டது Count Down. எதிர்பார்த்துக் காத்திருப்போம் அந்த நன்னாளுக்கு. இந்த அழைப்பு பதிவர்கள் அத்தனைபேருக்கும் மட்டுமன்றி பதிவுலகில் ஈடுபாடுள்ள வாசகர்கள், பின்நூட்டவாதிகள், பெயரில்லாமல் வந்து பின்னூட்டமிடும் தைரியசாலிகள் என அத்தனை பேருக்குமே. இதோ உங்களுக்கான அழைப்பிதளோடு மேலதிக விபரங்கள்.

காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்,
இல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்)
கொழும்பு 06.

நோக்கங்கள் :

இலங்கைத் தமிழ் வலைப்பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல்.

புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்

இலங்கைப் பதிவாளர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செயதல்.
பதிவாளர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.

பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல்

வலைப்பதிவாளர்கள், புதிதாக வலைப்பதிபவர்கள், வலையுலக வாசகர்கள், பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மேலதிக விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் பின்வருவோரைத் தொடர்பு கொள்ளவும்.
லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com

முழுமையான நிகழ்ச்சி நிரல் அடுத்த வாரம் பிரசுரிக்கப்படும்.
இங்ஙனம் ஏற்பாட்டுக் குழுவினர்.

பிற்குறிப்பு : மின்னஞ்சலினூடாக பலரை நாம் தொடர்புகொண்டோம் சிலரின் மின்னஞ்சல் முகவரிகள் எமக்கு கிடைக்கவில்லை ஆகவே தயவு செய்து மின்னஞ்சலில் இதனைப் பற்றிய தகவல்கள் கிடைக்காதவர்கள் எந்தவித தயக்கமின்றி எம்மைத் தொடர்பு கொள்ளவும். ஏதாவது கருத்துக்கள்,ஆட்சேபணைகள்,ஆலோசனைகள் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.

உங்களுக்கு தெரிந்த வலைப்பதிவாளர்கள், ஆர்வமுள்ளவர்களையும் அழைக்கவும்; உங்கள் வருகை பற்றி உறுதிப் படுத்தவும். யாரையும் தவறவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாயுள்ளோம்.. யாராவது ஆரம்பிக்க வேண்டும் என்பதால் தான் நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.. எம்முடன் இணைந்து முன்னெடுக்க ஆர்வமுள்ளோர் வரவேற்கப்படுகிறார்கள்.

இருவாரங்கள் தாராளமாக இருப்பதால் இலங்கை முழுவதும் இருந்து பங்கேற்பை எதிர்பார்க்கிறோம். உங்கள் வலைத்தளங்களிலும் இதனைப் பிரசுரித்து வருகைகளை அதிகரிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.. நன்றி ஏற்பாட்டுக் குழுவினர்.

தொடர்பதிவு மிகவிரைவில் வரும் புட்சால்,தேர்தல் என கொஞ்சம் வேலைப்பளு. மீண்டும் விரைவில் சந்திக்கின்றேன். நேரிலும் சந்திப்போம் மறக்காமல் வாருங்கள் மகிழ்வாக உரையாடுங்கள் மன நிறைவோடு செல்லுங்கள்.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox