Sunday, March 8, 2009

தடுமாறும் ஹீரோக்கள்.

எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித் என பெரும் தலைகளின் ஆட்சியில் தமிழ்த்திரையுலகம் பல ஹீரோக்களை கண்டிருக்கிறது. இன்றும் கண்டுகொண்டிருக்கிறது.

ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், மோகன், பிரபு, கார்த்திக் அர்ஜுன் என்ற ஒரு தலைமுறை நடிகர்களில் வெள்ளிவிழா நாயகன் மைக் மோகன் என புகழப்பட்ட மோகன் சுட்டபழம் மூலம் re-entry கொடுக்க முனைந்தும் bold ஆகிவிட்டார். தன் மோசமான நடத்தைகள் காரணமாக மிகச்சிறந்த நடிகரான நவரச நாயகன் கார்த்திக் கூட திரையுலகை விட்டு ஒதுங்கி அரசியலில் நுழைந்துவிட்டார்.

நடிகர் திலகத்தின் வாரிசு இன்று கதாநாயகன் அந்தஸ்து இழந்து அண்ணா, அப்பா வேடம். ஆனால் அதிலும் பிளந்து கட்டுகிறார். இன்னொரு சிவாஜியாக.
ஆக்சன் கிங் அர்ஜுன் அன்றும் இன்றும் ஒரே மாதிரியான படத்தை கொடுத்தாலும் சராசரி வெற்றியைக் பெர்ருக்கொண்டிருக்கிறார்.
புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் சினிமா தோல்விகள் காரணமாக அரசியலில் நீந்த தொடங்கிவிட்டார். இருந்தும் இடையிடையே தன் வழமையான பாணியிலேயே படத்தை தருகின்றார்.

புரட்சித்தமிழன் சத்யராஜ் தன் வயதை புரிந்து அதற்கேற்ற வேடங்களில் நடிப்பதோடு இளைய நாயகிகளோடு டூயட் பாடி வெற்றி கண்டுகொண்டுமிருக்கிறார்.

சூப்பர் ஹீரோ சரத்குமார் இன்று சினிமாவிலும் அரசியலிலும் சராசரியாக ஓடிக்கொண்டிருக்கிறார். இடை இடையே நல்ல படங்களைத் தருவதோடு தன் குண்டுச் சட்டிக்குள்ளேயே குதறி ஊட்டும் படங்களையும் தருகிறார்.



சபாஷ் சரியான போட்டி! சோதனை முயர்சிசில் உங்களுக்கு போட்டி நீங்களே.
உலகநாயகன் கமல். பல சோதனை முயற்சிகளை செய்து அவற்றில் வெற்றியும் காண்கிறார். தசாவதாரம் உலக சினிமாவின் மைல்கல். இருந்தும் தன் அடுத்த படம் என மர்மயோகியை தொடக்கி அதன் மர்மத்தை அவராலேயே புரிந்துகொள்ள முடியவில்லை. தலைவன் இருக்கிறானும் எங்கே என தேடவேண்டிய நிலை. இருந்தாலும் அவர் சினிமாவை விட்டு ஒதுங்காமல் புதிய முயற்சிகளுக்கு வித்திட்டுக்கொண்டே இருக்கிறார்.

இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இந்த சூப்பர் ஸ்டார் நாற்காலி? பேசாமல் அரசியல் நாற்காலிக்கு போகலாமோ?
சூப்பர் ஸ்டார் ரஜினி, எத்தனை சூப்பர் ஹிட் படங்கள். வசூல் சாதனைகள். ௮௦௦ நாட்களுக்கு மேல் ஓடிய சந்திரமுகியின் இமாலய வெற்றி. ஸ்டைல், இமேஜ், பெரிய ரசிகர் கூட்டம் இவை எல்லாவற்றையும் மனதில் வைத்தோ என்னவோ 1980௦களிலேயே தன் படங்கள் மூலம் அரசியலுக்கு அரிதாரம் பூசத்தொடங்கிவிட்டர். 1994இல் மீண்டும் தன் குரல் மூலம் அரசியல் நிலைமைகளை மாற்றி அமைத்துப்பார்த்தார். ஆனால் பாபா தோல்வியால் விழுந்து அதன் பின் சந்திரமுகியில் சடார் என எழுந்து அதனைத் தொடர்ந்து சிவாஜியால் உலக மக்களை பிரமிப்பில் ஆழ்த்திய ரஜினி குசேலன் படம் மூலம் அதலபாதாளத்தில் விழுந்ததோடு பலரது விமர்சனங்களுக்கும் உள்ளானார். குசேலனில் பேசிய சில வசனங்களால் தன் ரசிகர்களாலேயே தூற்றும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்.

இந்த நேரம் மீண்டும் ஒரு சர்ச்சையை லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு ஏற்ப்படுத்தியது. சினிமாத்துறையில் தற்போது இருப்பவர்களில் மக்கள் மத்தியில் செல்வாக்கானவரராக சூப்பர் ரஜினியை(16.2 புள்ளி) இளைய தளபதி விஜய் (16.4 புள்ளி) முந்தியதால் மீண்டும் கொதித்த ரஜினி ரசிகர்கள் அவரை உடனடியாக அரசியலுக்கு வருமாறு வற்புறுத்திய நிலையில் ஷங்கர், AVM, ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோருடன் இணைந்து எந்திரன் எனும் மாபெரும் திரைப்பட தயாரிப்பு ஆரம்பமானது. இந்நிலையில் ஜோதிடர் ஒருவர் ரஜினியின் செல்வாக்கு சுக்கிரதிசை முடிவடைகிறது இனி அவரால் சினிமாவில் ஜொலிக்கமுடியாது என கூறி அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். ராஜ்ஜியமா இல்லை இமயமா இல்லை சினிமாவா இது இன்று அவருக்கே தெரியாது.

இவர்கள் காலத்திலேயே வெற்றிப் படங்களை அடுத்த முதல்வர் என புகழப்பட்ட ராமராஜன் இன்று எங்கே என்ன நிலையிலிருக்கிறார் என பலருக்கு தெரியாமல் போன இந்நேரம் மீண்டும் பீனிக்ஸ் பறவைபோல மேதை படத்தை தொடங்கப்போகிறார்.
மிகச் சிறந்த படங்களை தந்து காதல் இளவரசனாக வலம் வந்த பிரசாந்த் குடும்ப பிரச்சனை மற்றும் சில படத்தோல்விகளால் திரை உலகை விட்டே ஒதுங்கி இருக்கிறார். தன் தந்தையின் மலையூர் மம்பட்டியானாவது தனக்கு கைகொடுக்குமா என இப்போது அதில் நடிக்க போகிறார்.

சிறந்த நடிகர் மட்டுமன்றி ஈகோ இன்றி மற்ற நடிகர்களுடன் இணைந்து கூட நடிக்கத் தயங்காத மாதவனாலும் பெரிய வெற்றிப்படங்களை தரமுடியவில்லை. வேற்று மொழிகளில் கலக்கி எடுக்கிறார்.

சீயான் விக்ரம் சேதுவில் ஆரம்பித்து இன்றுவரை வித்தியாசமான படங்களை தந்தாலும் பீமா எனும் தோல்விப்படத்தை கொடுத்து இன்று ஒரு வருடத்துக்கு மேலாகியும் படம் எதனையும் தராததால் இன்னும் field இல் இருக்கிறாரா இல்லையா என எண்ணத் தோன்றினாலும் கந்தசாமியில் கலக்குவாரென அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அதுமட்டுமில்லாமல் அபிஷேக் பச்சன் ஐஸ்வரயா ராய் பச்சனுடனும் இணைந்து ஹிந்தி மற்றும் தமிழில் ராவணா, அசோகா வனம் என பெயர் வைக்கவே தடுமாறும் படத்தில் மொட்டை போட்டு நடித்து வருகின்றார்.

சூர்யா. ஜோதிகாவுடன் இணைந்து பல வெற்றிப்படங்களைத் தந்து மட்டுமன்றி பல சோதனை முயற்சிகளை செய்கின்றார். நந்தாவில் ஆரம்பித்த இவரின் விஸ்வரூபம் இன்றும் தொடர்கின்றது. வாரணம் ஆயிரம் படத்தில் "சிக்ஸ் பேக்" எடுத்தும் தன் அயராத முயற்சிகளை எடுத்துவருகின்றார். அயனை நம்பும் இவர் இவர் சாதிப்பாரா?

இப்படிக் கஷ்டப்பட்டால் தான் வெற்றி பெறலாமோ?
அல்டிமேட் ஸ்டார் அஜித். எத்தனையோ சோதனைகள் வேதனைகள் எல்லாவற்றையும் தன் தன்னம்பிக்கையால் வென்று அதிக தோல்விப்படங்களை கொடுத்தாலும் பெரிய ரசிகர் கூட்டத்தோடு இடையிடையே மிகப் பிரமாண்ட படங்களை தருவதில் தல எல்லோருக்கும் தல. இருந்தாலும் அண்மையில் வரலாறு படத்தில் தான் இவரின் உண்மையான நடிப்பால் வெற்றி கிடைத்தது. அதன் பின் பில்லா (ரஜினியின் பட ரீமேக்) மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் அதன் பெறுமு முழுவதும் அஜித்தை சாராது. படத்தை கொலொர்புல்லா ஆக தந்த இயக்குனர் விஷ்ணுவர்த்தன், ஏன் ரஜினிக்கு கூட பங்கு உண்டு.இறுதியாக வந்த ஏகன் சராசரியாக ஓடி அஜித்தின் எதிர்பார்ப்பை உடைத்துவிட்டது. அசலை மலைபோல(மலை என்பது திருமலை விஜய் அல்ல) நம்பும் அஜித் கதையையும் நம்பினால் அசத்தலாம்.

இதனால் பார்த்தாலாவது வெற்றி கண்ணுக்கு எட்டுமோ?

இளையதளபதி விஜய். ரஜினிபோல் சிறுவர் முதல் பெரியோர் வரை பலதரப்பட்ட ரசிகர்களை கொண்ட இவர் திருமலையில் தொடங்கிய அதிரடி வெற்றிகளால் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக கடகடவென உயர்ந்து வசூல் சக்கரவர்த்தியுமானார். பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்களாக உள்ளன. தனது தந்தையால் தட்டி பண்படுத்தப் பட்ட இவர் அதிகம் பேசமாட்டார் ஆனால் இவர் படங்கள் அதிகம் பேசப்படும். எனினும் கடைசியாக வந்த படங்களில் இவரது மெகா ஹிட் போக்கிரிதான். அதன் பின் வந்த அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு மூன்றும் சராசரியாக ஊடியவையே. இருந்தாலும் இவரின் மார்க்கெட் ரசிகர் பலம் என்பன குறையவே இல்லை. அரசியலுக்கு ஐவரும் அரிதாரம் பூசினாலும் இப்போது வர சாத்தியமே இல்லை. தன் அடுத்த படமான வேட்டைக்காரனை வசூல்காரனாக்கலாம் என வெற்றிக்காக உழைக்கிறார்.

எப்படி காய் நகர்த்தினாலும் பெரிசா ஜெயிக்கமுடியவில்லையே!

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு. இவருடன் கூடவே இருப்பது வம்பு. நயன்தாரா பிரச்சினை ஓய்ந்தாலும் இவர் ஓயவில்லை. ரசிகர்களை எவ்வறெல்லாம் கோபப்படுத்தலாமோ அவ்வாறான படங்களை தன் முயற்ச்சியால் தருவதில் இவர் கெட்டிக்காரர். இருந்தாலும் சகலதும் தெரிந்த சகலகலாவல்லவன். திறமைசாலி சிலம்பாட்டம் வசூலை தந்தாலும் தன் வழமையான playboy ஐ விட்டு விண்ணை தாண்டி செல்லப்போகின்றார். சிம்பு இனியும் வம்புக்கு போகாமல் நல்ல படங்களைத் தந்தால் இவர்போல் சகலகலாவல்லவன் இவர் குழுவில் இவர் தான்.


அவள் பறந்து போனாளே!(கையில் இருக்கும் பேப்பரைபாருங்க தலைகீளைப்படிக்கிறாராம்).




நீங்க சும்மா படம் குடுத்தாலே பயமா இருக்கும். இப்பிடி வேறயா?


தனுஷ். சூப்பர் ஸ்டாரின் மருமகனான பின் இவர் தான் தான் ரஜினி என்பதுபோல் படத் தலைப்பிலும் படங்களிலும் காட்டுவது ரொம்ப ஓவர். தனக்கு பொருத்தமான வேடங்களை தெரிவதிலும் இவர் கில்லாடி. படிக்காதவன் சராசரி வெற்றியைக் கொடுத்தாலும் பொல்லாதவன் பகுதி இரண்டு என பலராலும் விமர்சிக்கப்படுவதால் அடுத்த படத்தில் கவனம் செலுத்தியாக வேண்டும்.


உங்க அளவிலேயே எங்கு இருந்து கையில் வைத்திருப்பதை தேடிப் பிடித்தீர்கள்.


புரட்சித் தளபதி விஷால். ஆரம்பத்தில் இவர் தான் இளைய தளபதி விஜயின் திரையுலக வாரிசென சில ஊடகங்கள் சொன்னாலும் சொன்னார்கள் தனக்கு புரட்சித் தளபதி என பட்டமும் வைத்துக்கொண்டு ரசிக்க முடியாத படத்தை தந்திருக்கிறார். ஆரம்பத்தில் சிறந்த படங்களைத் தந்தவர் தனக்கு பொருந்தாத சத்யம் படத்தை தந்து ஏனோ? தோரனையை ஆவது யோசித்து தந்தால் விஜயின் பாதையை தொடரலாம்.

சின்ன தளபதி பரத். ரஜினி உச்சத்தில் இருக்கும் நேரம் எலோருக்கும் ஸ்டார் பட்டம் போடும் பைத்தியம் பிடித்தது போல் இப்போது எல்லோருக்கும் விஜயின் பட்டமான தளபதி மீது மோகம். அதை நிரூபிக்கும் வகையில் விஜய் நடிக்க சந்தர்ப்பம் கிடைக்காத படங்களைத் தேடிபிடித்து அவரைப்போலவே நடித்து வருகின்றார். காதல், பட்டியல் போல் படம் தந்து ரொம்ப நாளாகி விட்டது.

ஜெயம் ரவி. காதல் கதைகளில் நடிப்பது இவருக்கு அல்வா சாப்பிடுவது போல. சாக்லெட் போயாக வெற்றிகரமாக் ரீமேக் படங்களைத் தந்து கொண்டிருக்கிறார். இது நிரந்தர வெற்றி அல்ல என்பதை உணர்ந்து சுதாகரித்துக்கொள்ளவேண்டும்.

ஜீவா. ராம் எனும் காவியத்தை தந்தவர் கற்றது தமிழ், ராமேஸ்வரம் பட அடியால் தன் பாதையை தெரிந்து கொள்ள முடியாமல் தவிக்கின்றார். சிவா மனசில சக்தி பார்க்கலாம் ரகம்.

இப்படிப் பெரிய நட்சந்திரங்கள் எல்லாம் தடுமாறிக்கொண்டிருக்க பூ ஸ்ரீகாந்த், நான் கடவுள் ஆர்யா, பருத்திவீரன் கார்த்தி, மற்றும் நகுல், ஜெய் போன்றோரும் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். இவற்றை யோசித்தாவது ஸ்டார்களும் தளபதிகளும் நல்ல படங்களை தந்தால் தமிழ் திரை உலகம் உலக அரங்கில் மாபெரும் இட்டதைப் பெறும். அதேபோல் ஹீரோக்களும் நிஜமாகவே ஹீரோக்களாக வலம் வரலாம்.

Share:

4 கருத்துரைகள்:

அப்பாவி முரு said...

அப்பப்பா...

மோனி said...

அம்மம்மா ...

Sinthu said...

ராமா ராமா.............. தானா? விஜய் தான் கவலைப் பட வேண்டாம்..

Welcome Karthik Fans said...

are you karthik fans please joint this web site http://karthikfan.blogspot.com/

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive