Monday, March 16, 2009

ஒரே நேரத்தில் ஒரே அணியில் ஆடும் 3 சச்சின்கள் 2 கங்குலிகள்

மிக விரைவில் சர்வதேச ஒருநாள் அரங்கில் முதல் நிலையை அடைய இருக்கும் இந்திய அணி இலங்கையை துவைத்து விட்டு நியூசிலாந்துக்கும் வதம் செய்யும் கனவுடன் பறந்து சென்றது.

புதிய நிற உடையுடன் இருபதுக்கு இருபது உலக சம்பியன் எனும் பெருமையுடனும் உலகத்தரம் வாய்ந்த இருபதுக்கு இருபது போட்டி வீரர்களையும் கொண்ட இந்திய அணிக்கு இடியை கொடுத்தது வெட்டோரியின் அணி இருபதுக்கு இருப்பதில்.

ஆனால் தூங்கிற சிங்கத்தைத் தட்டி எழுப்பக்கூடாது என்பார்கலேல்லா அதேபோல்தான் இருபதுக்கு இருபதில்விழுந்த அடிக்கெல்லாம் சேர்த்து பிளந்து கட்டிக்கொண்டிருக்கிறார்கள் இந்திய வீரர்கள். இவர்களின் விஸ்வரூபம் அப்பப்பா சொல்லவே முடியவில்லை. பிரகாஷ்ராஜ் ஸ்டைல் இல் சொல்வதென்றால் என்னடா இப்படி அடிக்கிறா செல்லம்? வடிவேல் ஸ்டைல் இல் சொன்னால் வேணாம் வலிக்கிது என்பார்கள் நியூசிலாந்து வீரர்கள்.

இந்திய அணியில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் ஸ்டைல் இல் அசத்தினாலும் இப்போதுள்ள அணியில் 3 சச்சின்கள், 2 கங்குலிகளுடன் இன்னும் பல ஜாம்பவான்களும் விளையாடுவது போலத்தெரிகிறது.

சச்சின் டெண்டுல்கர்.

இருபது வருடமென்ன இருநூறைத் தொட்டாலும் ஓயாது இந்த வேகம்

கிரிக்கெட் ஒரு மதமாக இருந்தால் அதில் கண்டிப்பாக சச்சின் கடவுளாக இருப்பார் என எல்லோருமே சொல்வார்கள். எத்தனை சோதனைகள் அத்தனை சோதனையிலும் ஏதோ ஒரு சாதனை. சச்சின் ஒரு ஓட்டம் எடுத்தாலும் அது சாதனைதான். ஒரு நாள் டெஸ்ட் போட்டி என எந்தப்போட்டியானாலும் சிங்கம் சிங்கம் தான். ஆனால் இருபதுக்கு இருபது போட்டியில்தான் இந்த அதிரடி அட்டகாச நாயகனின் ஆட்டத்தை காணமுடியாதிருக்கிறது. எத்தனை சாதனைகள்! இவற்றை எழுத இங்கே இடம் போதாது.


அடிச்ச பந்தை தேடும் வரை இப்படியே தூங்கும் எண்ணமோ?

இத்தனை சாதனைகளை கண்டாலும் மற்றுமொரு புதிய மைல்கல்லை தொட மற்றைய வீரர்களுக்கு ஒரு வழியை திறந்து விட்டதுடன் ஒரு உந்து சக்தியாக 200 ஓட்டங்களை மிக அற்புதமாக வேகமாக நெருங்கியிருக்கிறார். அன்றைய தினம் அவரது உடல் நிலை ஒத்து ளைத் திருந்தால் புதியதொரு சரித்திரம் படைக்கப்பட்டிருக்கும் இந்த வயதிலும் 18 வயது பையன் போல என்ன வேகம்! என்ன தாண்டவம்! இவரது வழிகாட்டலை மிக விரைவில் ஒரு நாள் அரங்கில் இரட்டை சதம் விளாசப்படும்.



இந்திய அணியின் இரண்டாவது சச்சின் ஷெவாக்!

என்னை நோக்கி வந்த பந்தை அடிச்சேன் காணவில்லையே!.

சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த இவரது புயல் வேக ஆட்டம் இன்று சூறாவளியாக சுழன்றுக் கொண்டிருக்கின்றது.சச்சின் - கங்குலி என்ற அதிசிறந்த ஆரம்ப இணையே இவரது கலக்கலான அதிரடிக்கு மதிப்பளித்து சச்சினுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அனுப்பி அழகிய தொடக்கம் கண்டு வருகின்றது.

ஆரம்ப காலங்களிலேயே சச்சினின் மறுவடிவம் என புகழப்ட்ட ஷெவாக்கின் ஒவ்வொரு அடியும் சச்சினை நினைவூட்டி களத்தில் இருவரும் துடுப்பெடுத்தாடும் போது இருவரையும் பிரித்தறிவது கடினமாக இருந்தது.

இன்றும் சச்சின் வழியிலே சச்சின் 163 ஓட்டங்களை விளாசிய மறு போட்டியிலேயே இந்தியா சார்பாக அதிவேக சதம் விளாசினார். அன்றைய போட்டியில் மலை குறுக்கிட்டது நியூசிலாந்துக்கு நல்லதாக போய்விட்டது. இலையேல் நிச்சயம் 200ஐ நெருங்கியிருப்பார். (என்ன நியூசிலாந்தின் ஓட்ட எண்ணிக்கை அதற்க்கு இடம் கொடுத்திருக்காது)

டெஸ்ட் இலும் 400௦ஐ எட்டித் தொட இவர் எப்போதும் தயார். பாகிஸ்தான், தென்னாபிரிக்காவிற்கு எதிராக இவர் 300௦௦ ஓட்டங்களை கடந்தது கூட டெஸ்ட் போட்டிபோல் அன்றி வானவேடிக்கையுடனேயே. சச்சின் வழியிலே ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக பின்னி எடுக்கிறார்.

அடுத்தவர் யார்??????????? தெரியணுமா? கொஞ்சம் காத்திருங்கள் விரைவில் சொல்கின்றேன்.
Share:

3 கருத்துரைகள்:

எட்வின் said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

மட்டையாளர்கள் நன்றாகவே ஆடி வருகின்றனர். பந்து வீச்சாளர்கள் என்ன செய்கிறார்கள் என டெஸ்ட் போட்டிகளில் பார்ப்போம்.

Anonymous said...

thanks for your interet.

kutima said...

well said

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive