Monday, December 6, 2010

நானும் ஒரு பதிவருங்கோ?- மறந்தவர்களுக்கு நினைவூட்ட.



என்ன நண்பர்களே? எப்பிடி இருக்கிறிங்க. இலங்கையில் இருந்த போது நிறைய கிறுக்கிய இவன் இப்போ அடங்கி இருக்கிறான் என சந்தோசப்படும் நல்ல உள்ளங்களே. நானும் ஒரு பதிவருங்கோ!

மாதம் ஒரு பதிவுபோட்டிட்டு எல்லா தளத்திலும் பின்னூட்டம் போடும் பிரபல பின்னூட்டவாதியில்லையுங்கோ!(அதுக்காகா அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய பதிவர் சாரி பின்நூட்டவாதி கறுப்பு தங்கத்தை குத்துறேன் என நினைக்க கூடாது. குத்தினால் எனக்கு தான் வலிக்கும்.) இருந்தாலும் நான் ஒரு பதிவருங்கோ! பின்னூட்டம் போடாவிட்டாலும் இன்ட்லியில் இரவு பகல் பாராமல் அத்தனை இடுகையும் வாசிக்கும் வாசகனுங்கோ.

லண்டன் ஸ்நோ பெண்டு கழட்டுதுங்கோ அதனால பதிவ எழுத முடியாமல் இருக்கு என சாட்டு சொல்ல மாட்டேனுங்கோ ஆனாலும் நான்பதிவருங்கோ! நிறைய நாளுக்கு ஒரு பதிவு போட்டாலும் ஹிட் ஆக நான் ஒன்றும் சூப்பர் ஸ்டார் இல்லைங்கோ ஆனாலும் நான் பதிவருங்கோ! எனக்கு நிறைய படிப்பு புரிஜெக்டுகள் இருக்குதுங்கோ இருந்தாலும் இப்படி ஒரு பதிவு போடுறேனுங்கோ ஏனெண்டால் நானும் உங்களை போல ஒரு மொக்கை பதிவருங்கோ!

என்ன கடுப்பாகுதா? இப்படி தான் எனக்கும் கொஞ்ச நாள் பதிவு எழுதாமல் கை எல்லாம் ஏதோ பண்ணுதுங்கோ! வரும் சில நாட்கள் முடிந்தால் அதகளம் பண்ண போறேன் அதனால தான் சொல்லுறேன் நானும் ஒரு பதிவருங்கோ! இப்ப கூட இந்த செமிச்டேரின் இறுதி நாட்களில் இருக்கின்றேன். இருந்தாலும் ஒரு பதிவு போட்டு நானும் ஒரு பதிவர் என உங்களுக்கு சொல்ல வேண்டாமா? காரணம் இல்லாமலா இப்படி ஒரு பதிவு. இப்பெல்லாம் காற்றெல்லாம் கொலை வாசி வீசுது. அந்த சூறாவளி எங்க பக்கம் வரமுதல் நானும் ஒரு பதிவர் என உங்களுக்கு நினைவூட்ட வேண்டாமா?

யாரும் இதை சீரியசாய் படிக்காதிங்க. இதுவும் ஒரு மொக்கை தாங்கோ! அட சொன்னால் தான் தெரிது என யாரப்பா அங்கே சவுண்டு விடறது. ஓகே ஓகே இப்போ போறேன் மறுபடி வருவேன்.
Share:

11 கருத்துரைகள்:

Philosophy Prabhakaran said...

இனியாவது தொடர்ந்து பதிவு போடும்படி கேட்டுக்கொள்கிறேன்...

கன்கொன் || Kangon said...

கிர்ர்ர்ர்ர்ர்....

இடக்கிடை எழுதுங்கோ என்ன...
வேற எப்பிடி இருக்குது இலண்டன்? :-)

Subankan said...

ஒத்துக்கறேன், நீங்களும் பதிவர்ங்கறத நான் ஒத்துக்கறேன் :P

ARV Loshan said...

ஹ்ம்ம்.. அவ்வ்... ஐயோ.. அம்மா..

யோ வொய்ஸ் (யோகா) said...

நீங்க பதிவரா? அதுவும் லண்டன் பதிவரா சொல்லவேயில்ல....

Ashwin-WIN said...

உங்கள் பதிவுகளுக்காக காத்திட்டிருக்கிற எங்களை இனியும் எமாத்திடாதீங்க அத்தான்..
//இப்பெல்லாம் காற்றெல்லாம் கொலை வாசி வீசுது. அந்த சூறாவளி எங்க பக்கம் வரமுதல் நானும் ஒரு பதிவர் என உங்களுக்கு நினைவூட்ட வேண்டாமா?//
:))))))

Bavan said...

//கன்கொன் || Kangon said...

கிர்ர்ர்ர்ர்ர்....

இடக்கிடை எழுதுங்கோ என்ன...
வேற எப்பிடி இருக்குது இலண்டன்? :-)//

ROFL..
அட பாருங்கப்பா யார் சொல்லிறதெண்டு..:P

சதீஸ் அண்ணே நீங்க பதிவர்தான் ஒத்துக்கொள்ளுறம்..:P

ம.தி.சுதா said...

தங்கள் மீள் வரவுக்காய் பதிவுலகம் காத்திருக்கிறது.. சதிஸ்

மாயனின் தொலைந்த ப‌க்கம் said...

சொல்லுக்கு சொல் தானும் ஒரு பதிவர் என்று ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி...விட்டா அழுதுடுவீங்க்ளோ!!!! (அவ்வ்வ்வ்வ்!!!)

நீங்களும் ஒரு பதிவர் தானுங்கோ!!!!
(நாங்க யாரும் மறந்தது என்டு சொன்னமா அண்ணை!)
லண்டல் குளிர்ல உறஞ்சி போயிட்டீங்களோ!!!
(இந்த நேரத்தில் நீங்கள் எனக்குத் தந்த அறிவுரையையும் ஞாபகப்படுத்துகிறேன்!!நன்றி..அனுபவத்தின் மூலம் தானே இன்னொருவருக்கு உதவலாம் பாஸ்!!!வேறென்ன!ல‌ண்டன் வாழ் உறவுகளுக்கு (தமிழ் பேசுபவர்களுக்கு மட்டும்!)என் வணக்கங்களையும் நல விசாரிப்பையும் சொல்லி விடுங்கோ!!தொடர்ந்து முடியாட்டியும் அப்பப்ப பதிவ போடுங்க பதிவரே!!!

Jana said...

மற்றும்பலருடன் ஒப்பிடுகையில் நீங்கள் இடைக்கிடை என்றாலும் பதிவு இட்டுக்கொண்டுதானே இருக்கின்றீர்கள் சதீஸ்?

Unknown said...

return of the dragan - பார்ட்டு 2 வா!?

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive