உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label இலங்கை.. Show all posts
Showing posts with label இலங்கை.. Show all posts

Saturday, January 15, 2011

பதிவுலக நண்பர்களே! நீங்கள் உண்மையான காவலன் ஆகுங்கள்.



தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கு உண்டு ஆனால் இம்முறை தை மகள் தன்கூட பல அழிவுகளையும் எங்கள் நாட்டில் கொண்டுவருவது கவலையே. இலங்கையின் சில பகுதிகளில் பாரியளவான சேதங்கள் ஏற்ப்பட்டிருப்பதுடன் கொழும்பில் கூட லண்டன் போன்ற குளிர் நிலவுவதாக நண்பர்கள் சொல்கின்றனர். வரும் காலம் வசந்தமாகும் என்றால் வம்பாகிக்கொண்டே போகின்றது.

இந்த நிலையில் பல அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் தங்கள் நிவாரணப்பணிகளை முடுக்கி இருக்கும் நிலையில் நற்காரியங்களில் ஈடுபட ஆசைப்பட்ட நம் பதிவர்களும் தங்களால் முயன்ற உதவிகளை வழங்க முன்வந்து பல பதிவுகள் இட்டனர். இதில் முக்கியமாக குறிப்பிடவேண்டிய விடயம் எந்த பாகுபாடும் இன்றி வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்ற மனப்பான்மை இன்றி(குற்றம் சொல்பவர்களே இப்போ எங்கே போய்விட்டீர்கள்) ஒன்றாக இணைந்த நிரூஜா, வதீஸ், ரமேஸ், சந்த்ரு, மதிசுதா, கூல் பாய் கிருத்திகன்(எல்லோரும் எனக்கு அண்ணா மார் எனவே பெயருக்கு பின் அண்ணா போடுங்க) என இந்த திட்டத்தை முன்னெடுத்தனர். எல்லோரும் ஒன்றுபட்டு இந்த நல்ல காரியத்தை செய்து முடிக்கும் படி பதிவுலக நண்பர்கள் அத்தனை பேரையும் உரிமையுடன் அன்பாக கேட்டுக்கொள்கின்றேன்.

கைநீட்டி கொடுத்த நம் உறவுகள் இன்று கையேந்தும் நிலைக்கு விட்டுவிடாதீர்கள். நாளை நமக்கும் இதே நிலை வரலாம். நம் உறவுகளுக்கு நாம் கொடுக்கும் போது அது கையேந்தல் ஆகாது நாம் செய்யும் கைமாறே அது.

இயற்கை அனர்த்தத்தில் இருந்து மீண்டுவர இறைவனை பிரார்த்திப்போம்!
Share:

Wednesday, December 29, 2010

உலக வரலாற்றில் முதன் முறையாக ஒரு வித்தியாச பதிவு!



உலக மகா ஜனங்களுக்கு வணக்கம்,

பதிவுலகில் ஒரு சாதாரண பதிவராக இருந்து வரும் ஒருவர் நிறைய பதிவுகளை எழுத பொறி தட்டுப்பட்டும் இன்னும் அவற்றை பதிப்பில் இடாமல் உள்ளார். சினிமா, விளையாட்டு வம்பு தும்பு என கலந்து கட்டி எழுதி பலரிடம் அடிவான்கியும் வலிக்காமல் எழுதிக்கொண்டிருந்தவருக்கு இப்போதெல்லாம் நேரம் கிடைத்தும் பதிவு எழுத மனம் இல்லாமல் எல்லாவற்றையும் டிராப்டில் வைத்துள்ளாராம்.

பதில் பதிவுகள் பரபரப்பு பதிவுகள் என பல கைவசம் இருந்தும் கரை சேர்க்க முடியாமல் இருக்கும் இவருக்கு பதிவுகளை எழுதி தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்(சுடு சோறு என நினைக்க படாது) என அறிவித்துள்ளார். அதன் ஒரு விளம்பர பதிவாக இந்த பதிவை இட வேண்டும் என அந்த பதிவர் கேட்டுக்கொண்டதுடன் நாடு கடந்த அதிகார மைய பதிவர் அவர் என்பதால் பல வெளிநாடு பெண்கள் இந்த வேலைக்கு விண்ணப்பித்தும் தமிழர் ஒருவருக்காய் காத்திருப்பதாய் சொல்லி இருக்கின்றார்.

ஆர்வம உள்ளவர்கள் கீழ்காணும் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்:
வெட்டிப்பயளுக்கு வெட்டிப்பயல்,
வெட்டித்தெரு,
வெட்டியர் கிராமம்,
லண்டன்.

அண்ணே மாரே அக்கா மாரே அங்கெ இங்கே பார்த்து உருட்டுக்கட்டை தேடாதிங்கோ. உங்களால அவரை அடிக்க முடியாது ஏன்னா அவர் அவர்......

























நான்தானுங்கோ!



உங்களால என்னை அடிக்க முடியாது. காரணம் லண்டனுக்கு வர ரொம்ப செலவாகும். இங்கே அழ வச்சு அடிக்கலாம் எண்டால முடியாதுங்க.....ஏன்னா நாங்க தான் நாடு கடந்த பதிவர்கள் அதிகார மையம் ஆச்சே....சும்மா லோலாய்....

நீங்க எல்லோரும் பதிவை போட்டு கலக்க நாமளும் ஒரு பங்குக்கு போடா வேண்டாமா என்ன? எழுத நிறைய விடயங்கள் இருந்தாலும் மகா மொக்கை ஒன்று போடணும் என்பதற்காய் இப்படி ஒரு பதிவு. சும்மா ஒரு வாக்கு குத்திட்டு போங்கோ!


Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox