உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label பதிவு. Show all posts
Showing posts with label பதிவு. Show all posts

Friday, June 17, 2011

பதிவுலக அவன் இவன் எவனுக்கும்....ஆதங்க பதிவு


பதிவுலக நண்பர்களே! எதிரிகளே! (இப்பெல்லாம் இவங்களும் இருக்காங்க)

எல்லோருக்கும் ஒரு முக்கியமான விஷயம். இது புதுசில்லை. கடந்த சில ஆண்டுகளாக பதிவுலகில் நடக்கும் ஒரு கேவலமான விடயத்தை சொல்ல வேண்டும் என மனம் நினைத்தாலும் தகுந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்போது அவன் இவன் வந்திருக்கும் நேரம் எவனுக்குஇது பொருந்துமோ அவன் போட்டுக்கொள்ளட்டும்.

பதிவுலகில் ஒரு பதிவர் கஷ்டப்பட்டு யோசித்து எழுதும் பதிவுகள் சிலவற்றை அவர்களின் அனுமதியின்றி தங்கள் தளங்களில் வெளியிட்டு சந்தோசப்பட்டுக்கொள்கின்றார்கள் சில வக்கிரக்காரர்கள். குறிப்பாக பிரபல இணையதளங்கள் கூட இப்போது சில வலைப்பதிவர்களின் செய்திகளை அப்படியே போடுவது தான் கொடுமை. ஆனால் இதில் சந்தோசப்படக்கூடிய விடயம் என்னவென்றால் பதிவுலகில் எழுதும் எழுத்தாளர்களின் எழுத்துக்களை எடுத்து இடும் அளவுக்கு அவர்களின் எழுத்தின் தரம் இருக்கின்றது என இணையதளங்களே பறைசாற்றுகின்றன. ஆனால் சில பதிவர்கள் சில இணையதளங்கள் இப்படி அடுத்தவரின் பதிவுகளை போடுவது ஏனோ?

பதிவுலகுக்கு வா என யாரும் யாரையும் இழுத்து வரவில்லை. இத்தனை பதிவு போடு என வேருட்டவில்லை அப்படி இருக்கையில் நேரம் கிடைக்கையில் சொந்தமாக பதிவு போடுவதை விடுத்தது ஏன் இப்படி அடுத்தவன் பதிவை போடவேண்டும். இன்னும் விடை தெரியாக்கேள்வி இது? இவை எல்லாவற்றையும் விட கொடுமை என்னவென்றால் ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் மிகப்பெரிய சக்தியாக வளர்ந்திருக்கும் பதிவர்கள் தங்கள் தளங்களில் முந்திக்கொண்டு விமர்சனம் வர வேண்டும் என்பதற்காய் படங்களை பார்க்காமலே இன்னொருவன் தன பார்வையில் எழுதிய எழுத்தை அப்படி அச்சு பிசகாமல்(ஒரிஜினலில் எழுத்து பிழை இருந்தால் இங்கேயும் இருக்கும்) போட்டு ஏன் அவமானப்படுகின்றனர். இன்னும் சிலரோ ஏதோ தானே எழுதியது போல அதுக்கு பில்ட் அப் வேறு. கந்த சாமி படம் வந்ததில் இருந்து நான் அவதானிக்கும் விடயம். பல தளங்களில் ஒரே படத்தின் விமர்சனம் ஒரே மாதிரி இருக்கும். அப்படி என்றால் அந்த அத்தனை தளமும் ஒருவராலா நடத்தப்படுகின்றது. இல்லையேல் அவருக்கு ரசனை இல்லையா? ஒரு படம் பார்க்கும் போது அது தாய்க்கு பிடிக்கும் தனயனுக்கு பிடிக்காமால் இருக்கலாம் அப்படி இருக்கையில் எந்த வேறு பாடும் இன்றி ஒரு படத்தின் விமர்சனம் அமைவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

நண்பர்களே! உங்களுக்கு நேரம் இல்லை என்றால் எழுதாதீர்கள். அதற்காக தெரியாத ஒன்றை தெரிந்தது போல காட்டி பதிவுலகில் விபசாரம் செய்யாதீர்கள். இன்று இந்த கோப பதிவு இட காரணம் அவன் இவன் படம் எப்படி இருக்கு என முதலில் வந்த சில விமர்சனங்களை படிக்க ஆரம்பித்தால் ஒரு சில தளங்களில் வழக்கம் போல கோப்பி விமர்சனங்களை காண கிடைத்தது. நிச்சயம் வரும் நாட்களில் இது அதிகரிக்கும். படம் வந்து சில மணிநேரமே ஆகி இருக்கும் நிலையில் ஒருவர் நல்லது என எழுதி விட்டால் அதை கோப்பி செய்து போட்டு அது நல்ல படம் என்றோ அல்லது கூடாமல் எழுதி இருந்தால் அதை போட்டு கூடாது என பரப்பும் ஒரு கேட்ட காரியத்தை தான் இந்த கோப்பி பேஸ்ட் பதிவர்கள் செய்கின்றார்கள். ரசனை நிச்சயம் வேறுபாடும். ஒரு செய்தியை கூட வித்தியாசமாக தரும் எத்தனயோ பேர் இருக்கையில் ஒரு படத்தின் விமர்சனத்தை ஒரே மாதிரி தருவதை எப்படி பொறுக்கமுடியும். இதை தடுக்க இப்படி கோப்பி செய்யும் உங்களால் மட்டும் தான் முடியும். உங்கள் மனசாட்சியால் மட்டும் தான் முடியும். கொஞ்சம் சிந்தியுங்கள் .நல்ல புதிய தரமான பதிவுகள் வரும்.......
Share:

Monday, June 6, 2011

எது விதை(18+)? - கிரியேட்டிவிட்டி மொக்கை.

அண்மையில் ஒரு சஞ்சிகையை படிக்கும் போது இந்தியாவின் பெண்ணாடம் என்னும் இடத்தில் இருந்து என்.மதியழகன் எழுதிய ஒரு கவிதை என்னை இன்னொரு விதமாக சிந்திக்க வைத்தது. சில கவிதைகளை வாசிக்கும் போது எமக்கு வேறு விதமான அர்த்தங்கள் வந்துவிடும். கவி எழுதியவரின் கருத்துக்கு நாங்கள் வேறு ஒரு விதையை நினைக்க அவரோ அதை இன்னொரு விதையை வைத்து எழுதி இருப்பார். இங்கே மதியழகன் கவிக்கு எனக்கு தெரிந்த இரு விளக்கங்களை பகிர்கின்றேன்.

கடிகார முள்.
உனக்காக நான் காத்திருக்கும் தருணங்களில் என்னை விட அதிகமாய் துடிக்கிறது எனது கையில் இருக்கும் கடிகார முள்.

மிக சிறிதாக சுருக்கமாக இருக்கும் இக்கவியில் ஒரு காதலனின் ஏக்கம் தவிப்பு காதலிக்காக தவமிருப்பது என்பது வெளிப்படையாக சொல்லப்பட்டாலும் வாழ்வில் ஒரு முக்கியமான தத்துவத்தை சொல்லி போயிருக்கின்றார்.(பதிவு எழுத தொடங்கிய நாளில் இருந்து எங்கே என்ன பாத்தாலும் அதில் ஒரு மொக்கை தேடி பிடிப்பது நமக்கு பழகிடிச்சு. காதலிக்காக காத்திருக்கும் ஒரு காதலன் அந்த காதலி வருவாள் வருவாள் என எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என அவனுக்கு ஏன் அவளுக்கே தெரியாது. பெண்கள் எப்போதான் சொன்ன நேரத்துக்கு வந்திருக்காங்க. பல மணிநேரம் செல்லும் என்பதற்கு என்னங்க காரணம் குளிக்க போனால் குற்றாலம் போனது போல மணிக்கணக்கு எந்த உடை போடுவது என முடிவெடுக்க முக்கால் மணிநேரம் மேக்கப் போட மேலும் நான்கு மணிநேரம் என அவங்க வெளிக்கிட்டு வந்து சேர ஒரு யுகம் முடிஞ்சிடும். இதை அவர் சொல்ல விளைந்திருக்கலாம் இருப்பினும் அவர் இன்னுமொரு முக்கியமான கருப்பொருளை சொல்லாமல் சொல்லி போயிருப்பாரோ என எனக்கு ஒரு சந்தேகம்.

எப்படியும் காதலி வந்த பின்னர் பேச்சு கொடுத்தோ அல்லது அடி உதை வாங்கியோ காதலன் துடிக்கப்போவது நிச்சயம். எதற்கும் முன்னெச்சரிக்கையாய் தான் துடித்துக்கொண்டே இருக்கின்றேன் என சொல்வதுடன் இப்பவே இப்படி துடிக்கிறான் நீ வந்த பின் உன் அடி மற்றும் கொடுமையில் இந்த கடிகார முல்லை விட துடிக்கப்போரேனே என்று சொல்ல வந்திருப்பாரோ என்று சந்தேகம்.

முக்கிய குறிப்பு: இந்த சிந்தனை எல்லாம் என் அனுபவோ என நீங்கள் கேட்கப்படாது, சந்தேகப்படக்கூடாது, ஏன் கொஞ்சம் கூட நீங்கள் அப்படி நினைக்கவே கூடாது என்பதற்காய் நான் ஒரு உண்மையை சொல்லுறேன். யாருக்கும் சொல்லாதிங்க. அடுத்தவங்களுக்கே ஆப்படிக்கும் இளவரசியின் இதயம் கவர் நாயகன் வந்தியத்தேவன் அவர்களின் வாழ்க்கை படிப்பில் இருந்து கிரியேட்டிவிட்டி செய்தது. நம்புங்க. ஆனால் இது என் மாமா பச்சிளம் பாலகன் நாடுகடந்த பதிவுலக செயலாளர் கோபியரின் கண்ணன் காதல் நாயகன்(வெட்டியா தோல்வியா என கேட்டு அவரை அசிங்கப்படுத்தப்படாது) வந்தியத்தேவன் இல்லை என்றால் நம்பவா போறிங்க.

Share:

Wednesday, December 29, 2010

உலக வரலாற்றில் முதன் முறையாக ஒரு வித்தியாச பதிவு!



உலக மகா ஜனங்களுக்கு வணக்கம்,

பதிவுலகில் ஒரு சாதாரண பதிவராக இருந்து வரும் ஒருவர் நிறைய பதிவுகளை எழுத பொறி தட்டுப்பட்டும் இன்னும் அவற்றை பதிப்பில் இடாமல் உள்ளார். சினிமா, விளையாட்டு வம்பு தும்பு என கலந்து கட்டி எழுதி பலரிடம் அடிவான்கியும் வலிக்காமல் எழுதிக்கொண்டிருந்தவருக்கு இப்போதெல்லாம் நேரம் கிடைத்தும் பதிவு எழுத மனம் இல்லாமல் எல்லாவற்றையும் டிராப்டில் வைத்துள்ளாராம்.

பதில் பதிவுகள் பரபரப்பு பதிவுகள் என பல கைவசம் இருந்தும் கரை சேர்க்க முடியாமல் இருக்கும் இவருக்கு பதிவுகளை எழுதி தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்(சுடு சோறு என நினைக்க படாது) என அறிவித்துள்ளார். அதன் ஒரு விளம்பர பதிவாக இந்த பதிவை இட வேண்டும் என அந்த பதிவர் கேட்டுக்கொண்டதுடன் நாடு கடந்த அதிகார மைய பதிவர் அவர் என்பதால் பல வெளிநாடு பெண்கள் இந்த வேலைக்கு விண்ணப்பித்தும் தமிழர் ஒருவருக்காய் காத்திருப்பதாய் சொல்லி இருக்கின்றார்.

ஆர்வம உள்ளவர்கள் கீழ்காணும் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்:
வெட்டிப்பயளுக்கு வெட்டிப்பயல்,
வெட்டித்தெரு,
வெட்டியர் கிராமம்,
லண்டன்.

அண்ணே மாரே அக்கா மாரே அங்கெ இங்கே பார்த்து உருட்டுக்கட்டை தேடாதிங்கோ. உங்களால அவரை அடிக்க முடியாது ஏன்னா அவர் அவர்......

























நான்தானுங்கோ!



உங்களால என்னை அடிக்க முடியாது. காரணம் லண்டனுக்கு வர ரொம்ப செலவாகும். இங்கே அழ வச்சு அடிக்கலாம் எண்டால முடியாதுங்க.....ஏன்னா நாங்க தான் நாடு கடந்த பதிவர்கள் அதிகார மையம் ஆச்சே....சும்மா லோலாய்....

நீங்க எல்லோரும் பதிவை போட்டு கலக்க நாமளும் ஒரு பங்குக்கு போடா வேண்டாமா என்ன? எழுத நிறைய விடயங்கள் இருந்தாலும் மகா மொக்கை ஒன்று போடணும் என்பதற்காய் இப்படி ஒரு பதிவு. சும்மா ஒரு வாக்கு குத்திட்டு போங்கோ!


Share:

Sunday, December 19, 2010

The making of பதிவர் சந்திப்பு! - வரலாற்று தடம்.

பதிவர் சந்திப்பை எல்லோருக்கும் ஏற்ற ஒரு நாளில் நடத்துவதே கஷ்டம் அதை விட கஷ்டம் இந்த பதிவு போடுறது. என்ன செய்வது வெளியே போகமுடியாமல் பனி மூடிக்கிடப்பதால் வீட்டுக்குள் இருந்து ஒரு அவசர பதிவு.

லண்டனில் முதன்முறையாக தமிழ் பதிவர்கள் ஒன்று கூட வேண்டும் என்ற ஆசை வந்தி அண்ணாவுக்கு எப்போதும் இருந்தது உண்டு(இப்போது மாம்ஸ் வேற விசயத்தில் பிசி) இதை நிரூஜாவும்(அட உடனே சந்தேகப்படாதிங்கோ) மாம்சும் பலமுறை பகிர்ந்து கொண்டாலும் நான் லண்டனில் காலடி வைத்த பின் தான் சந்திப்பு என அறிவித்துவிட்டார் நாடுகடந்த பதிவர்களின் அதிகாரமைய தலைவர் திரு வந்தி அவர்கள். இந்த நிலையில் நிரூஜா இலங்கை சென்று சந்திப்பை வெற்றிகரமாக நடத்தியும் விட்டார்.

நான் லண்டன் வந்தே நான்கு மாதங்கள் ஆகும் நிலையில் சந்திப்பு பற்றி எந்த பேச்சும் இன்றி நாட்கள் போக போகத்தான் மாம்ஸ்க்கும் கரவைக்குரலுக்கும் பிறந்த நாள் வந்தது. எனவே இருவரும் விருந்துவைப்பதாய் சொன்னதை நம்பி நானும் ஓகே என ஒரு நாள் சொன்னேன்.(கடைசிவரை ஏமாத்திட்டாங்க பயலுகள்) அப்போதுதான் ஏன் இதை மற்றைய சில பதிவர்களையும் சேர்த்து சந்திப்பாக்க கூடாது என எண்ணி ஒரு மாதத்துக்கு முன்னரே பேசி வைத்துவிட்டோம்.

லண்டனில் கல்வி நடவடிக்கை வேலை என எல்லாம் பார்த்து எல்லோருக்கும் சரியான நான் எது அமையும் என்றால் நூறு வருடம் சென்றாலும் அறியமுடியாது. இந்த நிலையில் திடீரென ஒரு நாளை பலரின் தெரிவில் செய்வோம் என்ற ரீதியிலும் இந்த கிறிஸ்மஸ் விடுமுறை அதற்க்கு பொருத்தமாக இருக்கும் என எண்ணினேன். அந்த வகையில் என்னுடன் என் உளறல்கள் வந்தி அண்ணா, கரவைக்குரல் தினேஷ், பங்குசந்தை அச்சு, இளங்கன், ஜனகன் மற்றும் முன்னாள் பதிவர்கள் கோசலன், பார்த்தி, ஷனா இவர்களுடன் பின்னூட்டங்களில் சில காலம் கலக்கிய செல்லம்மாவுக்கும் அழைப்பு விடுத்ததோடு இந்திய பதிவர்களையும் கலந்து கொள்ள வைக்கும் எண்ணத்தில் பதிவர்கள் சாளரம் கார்க்கி, ரசிகன் சௌந்தர் ஆகியோரிடமும் இதை பற்றி பேசி இருந்தேன்.

இலங்கை பதிவர்கள் என்பதையும் மீறி தமிழ் பதிவர்களின் சந்திப்பாக இது அமைந்தால் சந்தோசமாக இருக்கும் என்பது மட்டுமன்றி. தமிழ் பதிவர்கள் சந்திப்பு வரலாற்றில் முதன் முறையாக லண்டனில் நடக்கும் பொது அதற்க்கு பலர் வந்தால் உரம் சேர்க்கும் என்ற எண்ணம தான்.

இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் முதல் நாள் மதியம் தான் நாளை சந்திப்பது என ஐவர் முன் வந்த நிலையில் நாங்கள் இதை பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போதே கரவைக்குரல் தினேஷ் தன கைவேலையை காட்டிவிட்டார். இதற்க்குபிறகும் நாங்கள் பின்னடிக்க முடியாது என முடிவெடுத்து ஓரளவுக்கு இடத்தையும் நேரத்தையும் முடிவெடுத்தோம். இந்த நிலையில் சிலர் தம்மால் இம்முறை பங்கு பற்ற முடியாது அடுத்தமுறை பார்ப்போம் என ஒதுன்கியதுடன் வாழ்த்துக்களை தெரிவிக்க இறுதியில் நால்வர் மட்டுமே சந்திக்க போகின்றோம் என்ற நிலை உருவானது. இங்கே கல்வியை கட் அடித்துவிட்டு வந்தாலும் வேலையை யாரும் கட் அடிக்க மாட்டார்கள். இருப்பினும் எதற்கும் ஒரு ஆரம்பம் வேண்டும் தானே சந்தித்துவிடுவோம் என முடிவெடுத்து இரவு தூங்க போகும் நேரத்தில் மாம்ஸ் அழைப்பெடுத்து நேரம் கேட்டார். அந்த நேரம் எனக்கு காய்ச்சல் ஆனால் என்ன செய்யமுடியும் இதை நான் சொல்ல சந்திப்பை நிறுத்துவோம் என்றார் இருப்பினும் சந்திக்கணும் என்று முடிவெடுத்தாச்சு இனி நாங்களே எங்க பேச்சை கேட்ககூடாது என்ற நினைப்பில் நாளை காலநிலை என்ன என்று பார்த்தால் கடும் பனிப்பொழிவு. அப்படி ஏதும் சிக்கல் என்றாலே ஒழிய வேறு எந்த காரணத்துக்காகவும் சந்திப்பு நிக்காது என சொல்லிவிட்டு தொலைபேசியை மௌனத்தில் போட்டுவிட்டு தூங்கிவிட்டேன்.

பங்குசந்தை அழைப்பு எடுத்து பார்த்து என்னை தொடர்பு கொள்ள முடியாமல் போக கரவைக்குரலுடன் தொடர்பை ஏற்ப்படுத்தி எல்லோரும் மறுநாள் oxfrod circus இல 12.30 க்கு சந்திப்பதை ஏற்பாடானது. ஆனால் அன்றைய நாளோ லண்டனில் கடும் மழை. அப்புறம் தானே நம்ம பதிவர்கள் தங்கள் நிஜ முகங்களை காட்ட ஆரம்பித்தனர். இனி கரவைக்குரல், மாம்ஸ், அச்சு தொடர்வார்கள்.

குறிப்பு: பதிவுலக மார்க்கண்டேயன் லண்டன் அதிகார மைய தலைவர் என் மாம்ஸ் வந்தி அவர்கள்(தலைவர் ஆகிட்டார் எல்லா) இப்போது வேறு வேலைகளில் பிசியாக இருப்பதால் இன்னும் படங்களை அனுப்பவில்லை. இனி அதுவும் வருமா தெரியாது. சிலவேளை கடவுச்சொல் பறிபோனால்??????????? ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.
Share:

Sunday, December 12, 2010

கொலைக்காற்று பாகம்-3

பதிவர்களினால் தொடர் கதையாக எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் கொலைக்காற்று கதையின் மூன்றாவது பகுதி என் கையில். ஏற்கனவே எழுதிய பகுதிகளை படிக்க இங்கே கீழே உள்ள சுட்டிகளுக்கு செல்லுங்கள்.




தொலைபேசி அழைப்பை தொடர்ந்து உடனடியாக கொலை நடந்த பீச்சுக்கு விரைந்த பொலிஸ் அதிகாரி சூர்யபிரகாஷ் சேகரின் உடலை கூர்ந்து கவனித்ததில் அவரின் ஆடையில் பெண்ணின் தலைமுடி சில இருந்ததை அவதானித்து விட்டார். இருப்பினும் அதை பெரிதாக காட்டிக்கொள்ளாது பிரேதத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு நேரடியாக காவல்நிலையம் சென்றுவிட்டார்.

"குட் ஈவினிங் சார்" - கான்ஸ்டபிள்

"சொல்லையா என்ன இண்டைக்கு ஒரே செத்த வீடாய் இருக்கு" இது சூர்யபிரகாஷ்.

"அதுதான் தெரியல என்ன சார் போன இடத்தில் ஏதும் சிக்கிச்சா" என காண்டபில் கேட்டதும் "அட போய்யா நீவேற என்ன கறுமமோ தெரியல ஏதும் கள்ள தொடர்போ தெரியாது. சும்மா போயா இந்த கேஸ் எல்லாம் நடத்தி என்னத்தை கிழிக்க போறோம். போ போய் எனக்கு ஒரு கொத்தும் சிகறேட்டும் வாங்கி வா" என அதட்டி விட்டு அப்படியே மெதுவாய் கண்ணயர்கின்றான் சூர்யபிர்காஷ்.

.......................................................................................................

மறுபுறம் தனது கையடக்க தொலைபேசியில் இருந்து தனது ஆருயிர் நண்பன் சேகரை தொடர்பு கொள்ள முயன்ற கெளதமுக்கு ஏமாற்றமே மிஞ்ச அப்படியே வர்ஷாவுக்கு பக்கத்தில் சாய்ந்து படுத்து கொண்டே கண்களை மூடினாலும் கெளதமை ஏனோ தூக்கம் அணைக்கவில்லை. புரண்டும் திரும்பியும் படுத்தும் தன் கணவன் தூங்கவில்லையே என அறிந்த வர்ஷா "என்னங்க தூக்கம் வரவில்லையா? என்னத்தை நினச்சுக்கொண்டு இருக்கிறிங்க" என கேட்க "ஒண்ணுமில்லை லேசா தலைவலிக்கிறது நீ படு" என சொல்லிவிட்டு மறு பக்கம் திரும்ப முயன்றவனை இழுத்து அணைத்து அன்பாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டு "எதுக்குமே யோசிக்காதிங்க அதுதான் நான் கூட இருக்கிறேன் எல்லா. பிறகென்ன தலைவலி அப்புறம் போனில தட்டுறது" என வர்ஷா தட்டு தடுமாறி கேட்டுவிட "அப்போ நீ இன்னும் தூங்கலையா? நான் என்ன செய்கின்றேன் என பார்த்து கொண்டா இருந்தாய்?" என கோபமும் சந்தேகமும் கலந்து கெளதம் சொல்ல "என்ன சார் இப்போ கோபம் நான் ஒன்றும் அடுத்த வீட்டுக்காரி இல்லை. உங்க பொண்டாட்டி தான். நானொன்றும் ஒட்டுக்கேட்கவில்லை. உடல் அசதியில் வந்து படுத்தாலும் நீங்கள் எனக்கு அருகில் இருக்கிறதால மனதளவில் எனக்கு அசதியே வரவில்லை" என ஜொள்ளு விட்டபடியே வர்ஷா பேசினாலும் கெளதமால் அதற்க்கு இசைய முடியவில்லை.

ஒரு சில நிமிட நேர பேச்சுக்கு பிறகு சத்தம் குறைந்தது. ஒருவர் மற்றவர் தூங்கிவிட்டார் என்று நினைத்தார்களோ என்னவோ தங்களுக்குள் அணைக்க முயாவிட்டாலும் கால ஓட்ட கட்டளைக்கமைய இரவை அணைத்துக்கொண்டார்கள். வர்ஷா தூங்கிவிட்டதை உணர்ந்த கெளதம் மெதுவாய் அரவமின்றி எழுந்து வந்து தன் கையடக்க தொலைபேசியைஎடுத்து சேகரின் இலக்கத்துக்கு அழைப்பெடுக்க இம்முறை ஒரு ஆண்குரல் "ஹலோ ஐ ஆம் சேகர்" என்றது இருந்தாலும் அது தன் நண்பன் சேகரின் குரல் இல்லை என உறுதி செய்து கெளதம் அந்த அழைப்பை உடனடியாகக் துண்டித்ததுடன் அடுத்த கணமே ஜெனியின் நம்பருக்கும் அழைப்பை எடுத்தான். என்ன ஆச்சரியம் இம்முறையும் அதே குரல் ஆனால் "நான் ஜெனியின் அப்பா நீங்க"
"......................................."
"ஹலோ யாரடா அது"
".........................................."
"அந்த நம்பரும் இதுவும் ஒன்று தான் சார்"
டக் டக்

ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கிறது என புரிந்து கொண்ட கெளதம் அந்த அழைப்பை துண்டித்தது மட்டுமன்றி அந்த இலக்கத்தையும் துண்டித்துவிட்டான்.
..................................................................................................................

அதே நேரம்....கொழும்பு காவல் நிலையத்தில்.......

"சார் இரண்டு நம்பரும் ஒன்றுதான். யாரோ இரண்டுபேருக்கும் தெரிந்தவன் கோல் பண்ணுறான் போல..."
"அந்த நம்பர் யார் பெயரில் இருக்கு என்று எனக்கு இப்ப உடனே தெரியணும்...." - சூர்யபிரகாஷ்.
"இப்போ நைட் காலமைக்கு தான் எடுக்கலாம்."
"ஓகே ஓகே எனக்கு நாளைக்கு தெரிஞ்சாகணும்" இது சூர்யபிரகாஷ்.

........................................................................................

கண்டியில் கெளதம் அறையில்..........

தன் எந்த முயற்சியும் பலனளிக்காமல் வந்து கட்டிலில் சரிந்த கெளதமின் நினைவுகள் கடந்த காலத்தை மீட்டி பார்க்க தொடங்கியது.......

இன்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் மாணவர் விசாவில் லண்டன் சென்ற கெளதம் பல்கலைக்கழகத்தில் தன் கல்வியை சீராக ஆரம்பித்தான். ஒரு சில வார நகர்வுகளுக்கு பிறகு தானும் இன்னொரு மாணவியும் தான் அங்கே தமிழர் என்பதை இனங்கண்டு கொண்டு அவரை சந்திக்கின்றான்.

"ஹாய்"
"ஹாய்"
"ஐ ஆம் கெளதம் புறோம் ஸ்ரீ லங்கா. ஆர் யூ எ ஸ்ரீ லங்கன் தமிழ்?"
"எஸ். ஐ ஆம் ஜெனி. ஹவ் ஆர் யூ?"
"ஐ ஆம் ஓகே....ஹா ஹா ஹா"
"என்னங்க சிரிப்பு?"
"இல்லை நாங்க இரண்டுபேரும் தமிழர்கள் என்று அடையாளம் தெரிஞ்ச பிறகும். வி ஆர் டாக்கிங் இன் இங்கிலீஷ்."
ஜெனி விழுந்து விழுந்து சிரிக்கின்றாள்.
"ஏனுங்க சிரிக்கிரிங்க"
"இல்லை தமிழில கதைப்பம் எண்டு நீங்களே இங்கிலிஷில கதைக்கிறிங்க அதுதான்."
"என்னங்க பண்ணுறது இங்க நம்ம ஆட்கள் ஒரு மூஞ்சியை பார்க்கிறதே கஷ்டமாய் இருக்கு. உங்களை பார்த்தது சந்தோசம்"
"எனக்கும் தாங்க. வி ஆர் பிரண்ட்ஸ்."
"ஏங்க நான் ஒன்று சொன்னால் தப்பாய் எடுக்க மாட்டியலே"
"இல்லை சொல்லுங்க. அதுதான் சொல்ல வந்திட்டிங்க அப்புறம் என்ன கேள்வி."
"ஓகே சொல்லுறேன். சிரிக்கும்போது உங்களை பார்த்தால் லைலா மாதிரி இருக்குதுங்க"
"இது லைலாவுக்கு தெரியுமா? ஓகே ஓகே எனக்கு ஐஸ் வச்சது போதும் வாங்க கிளாஸ் தொடங்கபோகிறது"

இருவரும் ஒரே பாதையில் பயணிக்க இரண்டுபேருக்கும் இடையில் மலர்ந்த நட்பு காதலாகி பின்னர் லண்டனில் ஒரே வீட்டில் லிவ்விங் டுகெதர் அளவிற்கு வந்தது. இந்த இளம் காதல் ஜோடியின் வாழ்வில் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் சுமுகமாக வாழ்க்கை போய் கொண்டிருக்க இருவரும் தங்கள் கல்வியை முடித்து பட்டம் பெற்றனர். அதன் பின் இரண்டு வருட வேலைவாய்ப்புக்கு வழங்கும் விசாவையும் பெற்று எவ்வளவு முடியுமோ அந்தளவிற்கு கஷ்டப்பட்டு உழைத்து பணத்தையும் சேர்க்க தொடங்கினர். தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடங்களையும் ஒன்றும் விடாமல் தன் நண்பன் சேகருடன் தொலைபேசியிலும் மின் அஞ்சலிலும் பகிரும் கெளதம் தன் நண்பனை தன் வருங்கால மனைவுக்கும் நல்ல நண்பனாக மாற்றி இருந்தான். சில நேரங்களில் இருவருக்குள்ளும் செல்ல சண்டைகள் வரும் போதெல்லாம் சேகர் தான் பேசி தீர்த்து வைப்பான். அந்த நேரத்தில் சேகர் சில நேரங்களில் ஜெனியின் ஒரு நல்ல சகோதரன் போல இருந்து கெளதமை எதிர்த்து இவர்கள் பிணக்கை தீர்த்ததும் உண்டு.

இந்த நிலையில் கெளதம் மற்றும் ஜெனிக்கு இருவர் வீட்டிலும் திருமண பேச்சுக்கள் வந்தாலும் இருவராலும் தங்கள் காதலை பற்றி வீட்டில் சொல்ல முடியாமல் இருவர் மதமும் தடுத்துக்கொண்டே இருந்தது. இந்த நேரத்தில் கெளதமின் அம்மா வர்ஷாவை பார்த்து தன் மகன் வெளிநாட்டில் இருக்கின்றான் லண்டன் மாப்பிள்ளை என்ற பெயருடன் நிறைய சீதனத்துடன் பொண்ணும் கேட்டு எல்லாம் ஓகே செய்துவிட்டார். இதை கெளதம் பெரிதாக எடுக்காவிட்டாலும் விதி இவர்கள் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்தது.

ஜெனி, கெளதம் இருவருக்கும் ஒரே நேரத்தில் விசா முடிய மேலும் லண்டனில் தங்க முடியாத சூழ்நிலை வர இருவரும் ஒரே நாள் ஒரே விமானத்தில் பறந்து தாயகம் திரும்பினர். விமான நிலையத்தில் வைத்து பிரியும் போதே....

"கெளதம் என்னை மறந்திட மாட்டியே?"
"ஆர் யூ (f)பூல்? உன்னை விட்டு என்னால வாழ முடியுமா? தைரியமாய் போ நானே உன் வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்கின்றேன்."

இருவர் கண்களும் பனிக்க நீண்ட நாட்களின் பின் அந்த காதல் ஜோடி தன் சிறகுகளை வேறு வேறு திசையில் பறக்க திருப்பியது.

வீட்டுக்கு வந்த கெளதம்,ஜெனியால் நேரடியாக சந்திக்க வாய்ப்புக்கள் இல்லாமல் போக தொலைபேசியில் மட்டுமே இவர்கள் காதல் வளர்ந்தது. இந்த நிலையில் தான்.
"டேய் உனக்கு நிச்சயம் பண்ணனும் அதுக்கு முதல் போய் பொண்ணை ஒருக்கா பார். உனக்கு பிடிக்காட்டில் வேண்டாம். ஆனால் பார்த்திட்டு சொல்லு" இது கெளதமின் அம்மா.

அவரின் நச்சரிப்பு தாங்காமலே சேகரையும் கூட்டிக்கொண்டு வர்ஷா வீட்டுக்கு போனவன். அவர்களின் வீட்டின் வசதிகளை பார்த்ததும் மனதில் சலனம் தோன்றுவதை உணர தொடங்கினான்.
"மச்சான் எவ்வளவு பெரிய வீடடா"?
"ம் உன் அம்மா உனக்கு பெரிய இடமாய் தான் பார்த்திருக்கா? சொத்து ஓகேடா ஆனால் பொண்ணு தான் எப்பிடி இருக்கோ?"

பேசிக்கொண்டே உள்ளே சென்றவர்களை இன்முகத்துடன் வரவேற்ற குடும்பம் வர்ஷாவை கோக் கொண்டு வா என சொல்ல பல திரிஷாக்களையும் அசின்களையும் அனுஷ்காக்களையும் ஒன்றாக சேர்த்த ஒரு அழகு சில வருவதை கண்டு அப்படியே சொக்கிப்போய்விட்டன் கெளதம். சம்பிரதாயமாய் பார்க்க போனவன் கூடிய சீக்கிரமே கல்யாணத்தை முடிப்போம் என தன் மாமா மாமியிடம் சொல்லிவிட்டு வெளியில் வர சேகர் இது சரியில்லையா ஜெனி பாவம் என எச்சரித்தான்.

"போடா போ. அது லண்டனில எல்லாம் முடிஞ்சிது. இங்கே இனி அவள் எதுக்கு. ஜெனியிடம் என்ன இருக்கு. வர்ஷா பார் எப்பிடி அழகாய் இருக்கா. அதைவிட நாலு தலைமுறைக்கு உட்காந்து சாப்பிட சொத்து இருக்கு" என்று கெளதம் சொல்லிமுடிக்க முன்னரே

"நான் இப்பவே ஜெனியிடம் எல்லாம் சொல்ல போறேன்" என சென்ற நண்பனை தன் தாயின் பேச்சை மீற முடியாது இவளை தான் திருமணம் செய்ய வேண்டும் என புதிய கீதை ஒன்றை உரைத்து சேகர் மனதையும் கலைத்தான்.

சொல்லி ஒருமாத்தத்தில் திருமணமும் இனிதாய் நடந்தேறியது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஜெனியுடன் கதைப்பதை கெளதம் தவிர்க்க முயன்றாலும் மீறி கதைக்கும் சந்தர்ப்பத்தில் இதை காட்டிக்கொள்ளாமல் நடக்க முயன்றான். ஆனால் கெளதமின் திருமண நாளன்று ஜெனியிடம் இனி நீ அவனை தொடர கூடாது அவன் இனி இன்னொருத்தனுக்கு சொந்தம் என சேகர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சொல்லி வைக்க முதல் கெளதமின் அலைபேசி அலறியது.

அந்த அழைப்பை ஏற்றவன் சொன்ன வார்த்தைகள் மட்டுமே இங்கே எழுத்தில் வடிக்க கூடியவை. ஜெனி.....?

"நான் சொல்லுறத கேளு ஜெனி நான் வேணுமெண்டே செய்யல என் அம்மா கட்டாயப்படுத்தி செய்திட்டா. நீ கவலை படாதே நான் எப்பிடியும் இவளை டைவர்ஸ் பண்ணிட்டு உன்னோட தான் வாழ்வேன் நீ தான் என் மனைவி என சமாதனப்படுத்திக்கொண்டிருக்கவே அவன் அம்மா அந்த இடத்துக்கு வர தொடர்பை துண்டித்து விட்டான். பிறகு பல தடவை ஜெனி தொடர்புகொள்ள முயன்றும் முடியாமல் போய்விட்டது. ஆனால் மூன்று நாட்கள் கடந்த பின் வந்த அழைப்பை ஏற்று பேசிய கெளதம் உனக்காக அவளை கொலை செய்து விட்டு வந்து என்றாலும் வாழ்வேன். கொஞ்ச நாள் பொறு என சொல்லிவிட்டு வைத்துவிட்டான். இந்த நிலையில் தான் ஜெனி, சேகர் என இருவரின் கொலையும் நடந்தேறி இருக்கிறது.


மறு நாள் அதிகாலை.....

"வர்ஷா இண்டைக்கு நாங்கள் கொழும்புக்கு போகணும் சீக்கிரம் எழும்பு"
"என்னங்க இண்டைக்கு வேலை இல்லையா?"
"இருக்கு ஆனால் நம்ம சேகரை யாரோ கொன்னுட்டாங்களாம்"
"என்னது உங்க பிரென்ட் சேகர்? செத்திட்டாரா? எப்பிடிங்க? யாரு கொன்றதாம்? உங்களுக்கு எப்பிடி தெரியும்?"
"வா எல்லாம் போகும் போது சொல்லுறேன் இப்போ ரெடியாகு"
இருவரும் பேசிக்கொண்டே கொழும்பை நோக்கி விரைகின்றனர்.

இதற்கிடையில் கெளதம் முன்னர் சேகர் மற்றும் ஜெனியுடன் தொடர்பு கொண்ட நம்பர் யார் பெயரில் பதிவாகி இருக்கின்றது என்று தேடி பார்த்த போது அது சேகரின் பெயரில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. நாடு திரும்பிய வேளை சேகர் தன் பெயரில் இருந்த ஒரு சிம்மையே கெளதமிடம் கொடுக்க தொடர்ந்து கெளதம் அதையே பயன்படுத்தி வந்தான்.

நேராக சேகர் வீட்டுக்கு சென்றவர்கள் பகல் முழுவதும் அவர்களுடன் இருந்துவிட்டு இரவு ஒரு விடுதிக்கு சென்று அறை எடுத்து தங்கினர். விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனை என்று சூரியபிரகாசும் அடிக்கடி அங்கே வந்து சென்று கெளதமுக்கு நெருங்கிய நண்பராகிவிட்டார். இதனால் அவர்கள் தங்கும் ஹோட்டல் விபரங்களையும் பெற்றுக்கொண்டு அனுப்பிவைத்தார்.

ஹோட்டல் அறைக்கு வந்த இருவரும் பயண மற்றும் இறந்த வீட்டில் இருந்த களைப்பால் நேரத்துக்கே தூங்கிவிட்டனர். இடையில் தூக்கம் கலைந்து எழுந்த வர்ஷா,கெளதமுக்கு தெரியாமல் யாரோ ஒருவருக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவிட்டு தூங்கிவிட்டாள். இருவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கையில் ஒரு மர்மமான உருவம் அவர்கள் அறையை நெருங்குகின்றது. இந்த நேரம் சொல்லி வைத்தது போல அந்த உருவம் நெருங்கும் திசையை நோக்கியே வர்ஷாவும் எழுந்து நடக்க ஆரம்பிக்கின்றாள்.!!!!


இனி???????????????????????????????????????

கொலை குழப்பம் நிறைந்த இந்த கதையை நம் சக பதிவர் மது தொடர்வார்.

Share:

Wednesday, July 7, 2010

உலகம் அழியும் உண்மை வீடியோ.

நான் முன்னர் உலக அழிவு பற்றி ஒரு பதிவு இட்டேன். அதை தொடர்ந்து பலருடன் கதைக்கும் போது உலக அழிவு என்பது இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது என்ற கருத்தையே சொல்கின்றார்கள். அதற்கு சான்றாக என் முகப்புத்தாக நண்பர் ஜோசெப் என்பவர் எனக்கு தந்த வீடியோ ஒன்றை இங்கே பகிருகின்றேன். அப்படியே 2012 படத்தை பார்ப்பது போல இருந்தாலும் இது படமல்ல நிஜம். இதை பார்த்த பின் இன்னும் கலக்குகின்றது. பார்த்து விட்டு நீங்களும் உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

Share:

Wednesday, June 9, 2010

200+ பதிவு. சாக்கடைகளுக்கு ஒரு சாட்டையடி!



வணக்கம் பதிவுலக நண்பர்களே, எதிரிகளே, முதுகெலும்பில்லாத நரிகளே!

ஏன் இப்படி ஒன்று என பார்க்கின்றீர்களா. காரணம் இல்லாமல் இல்லை. கடந்த காலத்தில் நான் ஓய்வாக இருப்பதால் தினமும் ஒரு இடுகையை இட்டு வந்துள்ளேன் என் மனதுக்கே இப்போதுதான் நான் ஓரளவு நல்ல இடுகைகளை தருகின்றேன் என கடந்த முப்பது நாப்பது பதிவுகளை எழுதிக்கொண்டிருந்த காலத்தில் தான் இப்படி ஒரு சூழ்ச்சி, நயவஞ்சகம், முதுகெலும்பில்லாத நரிகள் செய்த ஒரு வலையில் மாட்டாமல் வெளிவந்திருக்கின்றது இந்த சுறா.(சும்மா பில்ட் அப்புக்குதான் சுறா.)

நேற்று காலை நான் கண்விளித்ததே ஒரு சக பதிவரின் தொலைபேசி அழைப்பில் எனக்கு கிடைத்த தகவல் எனக்கு நம்ப முடியாமல் இருந்தது. அந்த தகவல் என்னவென்றால் என் தளத்துக்கு செல்ல முடியவில்லை. காரணம் இரண்டு ஒன்று சில தவறான தகவலை நான் பரப்ப முற்பட்டதற்காய் தளம் முடக்கப்பட்டிருக்க வேண்டும் இல்லை சில நய வஞ்சகர்களால்(கடுமையான கெட்ட வார்த்தைகளால் திட்டணும் என்றாலும் நாகரிகம் கருதி தவிர்க்கின்றேன்.) என் தளம் களவாடப்பட்டிருக்கணும். என்ன நடந்தது என தெரியாமல் இருக்கவே என் மினஞ்சல் இயக்க முற்பட்ட போது அதுவும் முடக்கப்பட்டது. உடனடியாய் ஒரு சக பதிவருடன் தொடர்பை ஏற்படுத்தி என் தளத்தையும் மினஞ்சலையும் ஒரு நிமிடத்தில் மீளப்பெற்றேன்.

இது நடக்க முதல் நாள் இரவு அதிகாலை மூன்று மணிவரை நான் என் மினஞ்சல் மற்றும் தளத்தை பாவித்துக்கொண்டே இருந்தேன். அதன் பின் காலை ஏழு மணிக்குள் இது நடந்தேறியுள்ளது. ஆனால் அவரின் துரதிஷ்டம் களவாட முற்பட்ட நிலையில் தானியங்கி முறையில் என் கணக்குகள் முடக்கப்பட்டு களவாடுவது தடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நான் தூங்கிக்கொண்டிருந்த போதும் கூட என் தளத்தை களவாடப்பட்டு இருப்பதைக் கண்டு அவரை இனம்காண உதவிய என் சக பதிவுலக நண்பர்களுக்கு என் நன்றிகள். அந்த முட்டாளுக்கு வெறுத்துப்போயிருக்கும். இன்னும் ஒரு சிலரிடமும் கைவைத்து தோல்வியில் முடிந்திருக்கின்றது அவர் முயற்சி.


என் தளம் களவாட காரணம் என்ன? பதிவுலகை பொறுத்தவரை எனக்கு எதிரிஎன்று யாரும் இல்லை. சரி நான் ஒரு பிரபல பதிவர் என்றாலும் பரவாயில்லை. வளர்ந்து வரும் ஒரு பதிவரான என் வலைப்பூவை முடக்கி என்ன இலாபம். ஆனால் முடக்க முயற்சித்த அந்த முடவனுக்கு ஒரு நன்றி. நீங்கள் முடக்க முயற்சித்த அன்று நான் ஒரு பதிவும் இடாமலே என் தளத்துக்கு பல நண்பர்கள் வந்து போய் உள்ளனர். வழக்கமாய் பதிவு போடாவிட்டால் வருவோர் எண்ணிக்கை குறையும் ஆனால் இங்கே மாறி நடந்தது.

தொலைபேசி வாயிலாக,மூஞ்சிப்புத்தக வாயிலாக என பல வகையிலும் என்னை தொடர்பு கொண்டு விசாரித்த சகல பதிவுலக நண்பர்களுக்கும் என் நன்றிகள். உங்கள் உதவியால் தான் மீண்டும் வந்துள்ளேன். இந்த தடையால் என் பதிவுகள் தளராது. தொடர்ந்து நான் எழுதிக்கொண்டிருப்பேன். எந்த இலாபமும் இன்றி நண்பர்களை மட்டும் கொடுத்திருக்கும் பதிவுலகத்தை விட்டு நான் ஒதுங்க மாட்டேன்.

தளத்தை முடக்க முற்பட்ட முட்டாளே,
ஒரு தடவை ஹக பண்ண முயலும் முன் நூறு தடவை யோசிச்சிட்டு செய் அப்புறம் யோசிக்கவே முடியாது. இப்போது கூட உன் நிலை அதுதான். பதிவுலகில் கருத்து மோதல் வரலாம் எழுத்தை எழுத்தால் மோதுங்கள். அதை விடுத்து முதுகெலும்பு இல்லாமல் ஒருவனை முடக்கி அதில் வெற்றி காண்பது அழகா? உனக்கு எழுத தெரியவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது. நாங்கள் எழுதுகின்றோம் பிடித்தால் படி இல்லாவிட்டால் போய் ப.... பதிவுகள் பலர் எழுதுகின்றனர் எல்லோரின் எல்லாப்பதிவும் ஹிட் ஆவதில்லை இதில் யாழ் தேவியில் நான் இணைக்கும் பதிவுகளுக்கு வாக்குகள் விழுவதே அபூர்வம் இப்போது பல வாக்குகள் விழுகின்றன. ஆனால் மறை வாக்குகள். இதை பற்றி யாழ்தேவியுடன் பேசி அந்த நயவஞ்சகர்களையும் இனம் கண்டாயிற்று. இப்படி எல்லா இடமும் அடிக்கப்போய் கடைசியில் அடி வாங்கிடாதிங்க. உங்களை போல நான் அடிச்சால் தாங்க மாட்டிங்க. எழுத வந்த இடத்தில் எழுதுவம் பிடிச்சிருந்தா வாக்குப்போடுவம் இதுதான் எனக்கு தெரிந்த பதிவுலக அரசியல். அதை விட்டிட்டு சாக்கடையை இங்கேயும் கொண்டுவந்தால் நான் பேசமாட்டேன். ஏனென்றால் நாங்கள் சாக்கடை முன்னால் பேச மாட்டோம்.(உபயம் வேட்டைக்காரன்)

அப்புறம் இன்னொன்று சொல்ல மறந்திட்டன். இது என் 203வது பதிவு. இத்தனை நாள் எனக்கு ஆதரவளித்த வாசகர்கள்,சக பதிவர்கள்,வாக்காளர்கள்,பின்னூட்ட நண்பர்கள்,அனானிகள்,திரட்டிகள் என எல்லோருக்கும் என் நன்றிகள்.

இருநூறாவது பதிவில் இதை குறிப்பிடலாம் என எண்ணி இருந்தேன் இருந்தும் மறந்து விட்டேன். பரவாயில்லை. நம் நண்பர்கள் தானே இதை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகின்றேன். நம்பிக்கையை கேடுப்பீர்களா என்ன.

என் பதிவுலக பயணம் தொடரும்............தடைகளை படிக்கற்களாக மாற்றி.
Share:

Wednesday, June 2, 2010

பதிவுலக ஆத்திசூடி.



எல்லோருக்கும் ஆத்திசூடியின் முதல் பன்னிரண்டு வரிகளும் தெரியும். அந்த பன்னிரு வரிகளையும் தற்கால பதிவுலகுக்கு ஏற்ப மாற்றினால் எப்படி இருக்கும். இதோ என் கற்பனை குதிரை. படியுங்கள் பிடிக்கும் என நம்பிறேன். படிப்பது மட்டுமன்றி கொஞ்சம் சிந்தித்து நடந்தால் பதிவுலகமும் சிறப்பாய் இருக்கும். பல நண்பர்கள் இப்போது பதிவெழுதுவதில்லை. எல்லோரும் எழுதினால் தான் பதிவுலகமும் ஆரோக்கியமாய் இருக்கும். நமக்குள்ளும் நல்ல பதிவு கொடுக்கணும் என்ற போட்டி வரும். செய்வீர்களா? முதல்ல இதை படியுங்க.

அன்னையும் பிதாவும் பின்னடிக்கிடைஞசல்
தினம் பதிவெழுதுவது சாலவும் நன்று
கொப்பிப் பதிவு நல்லறம் அன்று
அனானியின் திட்டை பதிவர் கணக்கெடார்
மேக்கப் குறைத்தல் பெண்களுக்கழகு
போலிப்பதிவர்கள் வேருடன் கெடுவர்
கிடைக்கும் வாக்குகள் கண்ணெனத் தகும்
கணக்கெடுக்காமையே அனானிக்கு மருந்து
சொந்தச் சரக்கில் பதிவினை எழுது
ஒருவரையும் விடாமல் நண்பர்களாய் சேர்
பின்னூட்டம் தானே வாசகர் கொடுக்கும் பூஸ்ட்
பதிவெழுதாட்டில் பிளாக்குக்கே அழிவு
Share:

Friday, May 28, 2010

தமிழிஷில் நடப்பது என்ன?



கொஞ்சம் இதையும் படிச்சிட்டு போங்க. பதிவுலகின் இன்னொரு முயற்சி.

தமிலிஷ் திரட்டி, உண்மையில் பதிவர்களுக்கு மிக்கப்பெரிய டானிக். நான் என் பதிவுகளை இணைக்கும் திரட்டிகளில் ஒன்று. அதிகமான வாசகர்களை கொண்டு வந்து தருவதுடன் பல வாக்குகளை அளித்து பிரபலமான இடுகை ஆக்கியும் அழகு பார்க்கின்றது. ஆனால் எனக்கு நேற்று நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் எனக்குள் எழுந்த சில கேள்விகள். தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கிக் கூறவும்.

சில நேரங்களில் நான் இடும் இடுகைகள் உடனடியாக தொடரும் இடுகைகள் பகுதியில் வருவதில்லை. அதன் பின் தமிலிஷ் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டுதான் அவற்றை மீட்டு எடுத்திருக்கின்றேன். இது ஏன் நடக்கின்றது?

அடுத்து சூடான இடுகைகள் எப்படி தெரிவு செய்யப்படுகின்றன? ஒரு சில சொற்குறியீடுகளை கொண்டா அல்லது குறித்த நாள் அதிகமாக இடப்படும் இடுகைகளைக் கொண்டா? இங்கிலாந்து உலக கிண்ணம் வென்ற நேரம் நான் இட்ட இடுகை இதற்குள் அடங்கவே இல்லை. ஆனால் அதிக வாக்குகள் பெற்றது. அப்படியாயின். இடுகையை இணைத்து குறைந்த நேரத்தில் இடும் வாக்குகளைக் கொண்டா? இது தீர்மானிக்கப்படுகின்றது.

அடுத்து பிரபல இடுகைகள் பற்றியது. சிலநேரங்களில் பதின்மூன்று பதின நான்கு வாக்குகள் கிடைத்தும் சில பதிவுகள் ஹிட ஆகாது போய் விடும். அதற்க்கு காரணம் என்னவென்று தெரியும் ஆனால் என் கேள்வி என்னவென்றால் நான் ஒரு பதிவினை போட்டு ஒன்று இரண்டு மூன்று நாட்கள் கடந்தபின் கூட அந்த பதிவு ஹிட ஆகிறது. இது எப்படி? அப்படியாயின் தமிளிஷின் தொடரும் இடுகைகளை அதிகமான பக்கங்கள் சென்று வாசகர்கள் படிக்கின்றார்களா? அப்படி எனில் இது ஆரோக்கியமானதே. இதை தான் தமிளிஷும் முன்னர் எதிர் பார்த்து நடவடிக்கை மேற்கொண்டது என எண்ணுகின்றேன். சில நேரங்களில் நாங்கள் ஒரு இடுகையை தொடர்ந்து மூன்று இடுகைகளை இட்ட பின் கூட (அந்த பதிவுகள் ஹிட இல்லாவிடாலும்) அதற்க்கு முன் இட்ட பதிவு ஹிட அடித்துவிடும். இவை எல்லாம் எப்படி நடக்கிறது. உண்மையில் இது பதில் சொல்ல கடினமான சந்தோசமான உணர்வுதான்.

தமிளிஷிடம் ஒரு வேண்டுகோள்
சில இடுகைகள் இன்னும் ஒரு வாக்குக் கிடைத்தால் பிரபலமாகி விடும் என்ற நிலையில் தொடரும் இடுகைகள் பகுதியில் இருக்கும். ஆனால் அந்த ஒரு வாக்கு கிடைக்கும் கிடைக்காது என்ற ரீதியில் அல்லாடிக் கொண்டிருக்க. அதனை தொடர்ந்து பல இடுகைகள் தொடரும் இடுகைகள் ஆகிவிட இந்த இடுகை பின்னுக்கு போய் விடும். இதனால் அதை காண்போர் எண்ணிக்கை குறைந்து விடும். எனவே அந்த ஒரு வாக்கு குதிரைக் கொம்பாக கூட போய் விடும். எனவே இப்படி போர்டரில் இருக்கும் பதிவுகள் என்று ஒரு பிரத்தியே பகுதியை நிறுவி. பதிவர்களை ஊக்கப்படுத்தினால் என்ன.

அண்மையில் இருநாட்கள் தமிலிஷில் ஏற்ப்பட்டிருந்த கோளாறு உண்மையில் பதிவுலகத்தை பாதித்திருந்தது. தட்டச்சி இருந்த இடுகைகளை கூட நாங்கள் இடாமல் தமிளிசுக்காக காத்திருந்தோம். அந்தளவிற்கு பதிவர்களின் இன்றியமையாத ஒன்றாக தமிலிஷ் இருக்கிறது. உங்களுக்கு வாழ்த்துகள். இன்னும் உங்கள் பணி சிறப்பாக இருக்க.
Share:

Sunday, April 25, 2010

இன்றைய தினக்குரல் பத்திரிகையில் நான் - நன்றி யாழ்தேவி.

வணக்கம் நண்பர்களே,
இன்று இலங்கையில் இருந்து வெளியாகும் தினக்குரல் பத்திரிகையில் யாழ்தேவி தெரிவு செய்த நட்சத்திரப்பதிவராக ஜோளித்துக்கொண்டிருக்கின்றேன். தினக்குரல் யாழ்தேவி, வாசகர்கள்,பின்நூட்டிகள்,அனானிகள்,திரட்டிகள், நண்பர்கள் எல்லோருக்கும் என் நன்றிகள்.


கீழே நான் கொடுத்திருப்பது இன்று பத்திரிகையில் வெளியாகி இருக்கும் பிரதி. பெரிதாக்கி படித்துப்பாருங்களேன்.



Share:

Friday, April 16, 2010

154வது பதிவு நோய் தீர்க்கும் தட்டச்சு.



இது என் 154வது பதிவு. 150இல் சொல்லி இருக்கலாம் மறந்து விட்டேன். நட்சத்திரப்பதிவரானது பதிவெழுதும் வேகத்தை அதிகரித்திருக்கின்றது. நீண்ட நாட்களுக்கு பின்னர் அனானி தாக்குதலும் ஆரம்பித்திருக்கின்றது. சந்தோசமாக இருக்கின்றது. தொடர் மசாலா பதிவுகள் வரும் நிலையில் அதிலிருந்து கொஞ்சம் வித்தியாசமான பதிவாக இதை தரலாம் என நம்புகின்றேன். என்னை தொடரும் பதிவர்கள்,வாசகர்கள்,பின்னூட்ட வாதிகள்,திரட்டிகள் எல்லோருக்கும் என் நன்றிகள்.

தட்டச்சு என்றவுடன் நமக்கு பல நினைவு . இந்த தட்டச்சின் பரிணாம வளர்ச்சியில் இப்போது மருத்துவத்திலும் நுழைந்து நோயை குணப்படுத்துகின்றது. பேசுவதன் மூலம் தட்டச்சு செய்வது பிரபலமாக இருக்கும் ஒரு முறை. இது தொழில் உலகம் சார்ந்தது. இந்த நிலையில் ஆபத்துக்காலத்தில் சிலருக்கு பேசவே முடியாமல் போய்விடும். நாக்கு குளறலாம், காகா வலிப்பு வரலாம், முடக்குவாதம் கோமா கூட வரலாம். அப்போது என செய்வது?

இதற்க்கு விடைதான் இப்போது கிடைத்துள்ளது. புதிய முறையில் தட்டச்சு முறை மூலம் நோயை தீர்க்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. இது நோயாளிகளின் நினைவுகளை கணினியில் தட்டச்சு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நினைவலை தட்டச்சு முறை மருத்துவ உலகின் முக்கிய சாதனை என தெரிவிக்கின்றனர்.
Share:

Wednesday, March 24, 2010

பஞ்சாமிர்தம்= SO+சந்தோசமாக+மழை+கடிதம்+கோபம்.


நானும் ஒரு வானொலி அறிவிப்பாளராக இருந்த காரணத்தால் இதை பற்றி பேச ஓரளவு தகுதி இருக்கும் என நினைக்கின்றேன். இன்று காலை ஒரு தொலைக்காட்சியில் தொலைபேசி வாயிலாக நேயர்களை கலாய்க்கும் நிகழ்ச்சி ஒலி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. பொழுது போகணுமே என்பதற்காக அப்படியே இருந்தேன். அந்த நிகழ்ச்சியின் கடைசி பகுதி தான் அது. அந்தப்பகுதியில் நேயருடன் தொகுப்பாளர் பேசிறார் பேசிறார் பேசிறார் அவர் பேச்சில் so என்ற ஆங்கில வார்த்தை கிட்டத்தட்ட ஐம்பது தடவை வந்து தாண்டவமாடி இருக்கும். அது அவருக்கே கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஒரு வசனம் முடிந்து அடுத்த வசனத்துக்கு இடையில் வந்துவிடும். அந்த சொல்லின் அர்த்தம் வரக்கூடாத இடத்திலும் பேசினாரா என்பது அவருக்கு தான் வெளிச்சம்.(நான் அவர் பேசியதை கவனிக்கவில்லை. soவைத்தான் கவனித்தேன்.)

************************************************************************************************

இந்த கொடுமை இப்படி இருக்க. மதிய நேரம் இன்னொரு தொலைக்காட்சியில் வந்த தொகுப்பாளினி சந்தோசமாக என்ற வார்த்தையை அதை கேட்டு நாங்கள் சந்தோசத்தை இழக்கும் வரை பாவித்தார். சந்தோசமாய் இணைந்து கொள்ளுங்கள், சந்தோசமா டயல் பண்ணுங்க,சந்தோசமா பேசுங்க,சந்தோசமா பாருங்க என்று சந்தோஷ கொடுமை. இப்போது வீட்டில் இருந்து அனுபவிக்கின்றேன். இதில் இன்னொரு விடயமும் சொல்லவேண்டும் என்ற Bodyguard திரைப்படத்தின் தழுவலில் சித்திக் இயக்கம் படத்தில் தான் விஜய் அடுத்து நடிக்க இருக்கின்றார். ஆனால் அந்த பெயரை பாடிகார்ட் பாடிகார்ட் என்றே சொல்லிக்கொண்டிருந்தார் அவர். இந்தியாவில் சில தளங்களில் இப்படி இடுகின்றார்கள். அது அவர்கள் வழக்கமாக இருக்கலாம். நம் நாட்டில் அது வழக்கம் இல்லை. அதே போல ஒரு பெயரை மாற்ற எங்களுக்கு உரிமை இல்லை. ஆரம்பத்தில் நான் இந்த பிழைகளை விட்டு அதன் பின் சரியான நெறிப்படுத்தலால் இதை தவிர்த்து வந்தவன் என்ற ரீதியில் இதை பகிர்கின்றேன்.

****************************************************************************************************

நீண்ட நாட்களின் பின் இன்று காலை கொழும்பில் சில பகுதிகளில் மழை பெய்து சூட்டை தணித்தது. இது இப்படியே இருக்கவேண்டும் என்ற ஆசை பலருக்கு இருந்திருக்கும். ஆனால் கொளுத்துதே. காலையில் இங்கே நின்ற அந்த நல்லவர் இப்போ எங்கேயும் போய்விட்டாரோ? ஏனென்றால் காலையில் விடியலில் லோஷன் அண்ணா நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்றாரே. அதுதான் சந்தேகம்....

************************************************************************************************************

வீட்டுக்கு ஏதும் கடிதங்கள் வருகின்றனவோ இல்லையோ இப்போது தினமும் வீட்டு தபால் இடும் பெட்டிக்குள் மூன்று நான்கு பிரசுரங்கள் கிடைக்கின்றன. வேறு ஒன்றுமில்லை தேர்தல் பிரசார துண்டுகள் தான் அவை. இப்படி வீடு வீடாக கடிதங்கள் எழுதி எனக்கு வாக்களியுங்கள் என வாக்காளர் கையொப்பம் இட்டு கடிதம் வந்தாலும் வரும்.


*********************************************************************************************************

நானும் நேற்றும் இன்றும் சில பதிவுகளை தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றேன். வழக்கமாக வருபவர்கள் கூட இந்தப்பக்கம் வருவதாக தெரியவில்லை. வாக்குகளும் இல்லை பின்னூட்டங்களும் இல்லை.ஏனையா எல்லோருக்கும் என் மேல் கோவம். ப்ளீஸ் கோபித்துக்கொள்ளாதீர்கள். ப்ளீஸ் எல்லோரும் வாங்கோ எல்லாத் தளத்துக்கும் போங்கோ. எந்த லாபமும் இன்றி பதிவெழுதும் எமக்கு ஆக்கமும் ஊக்கமும் உங்கள் வாக்குகளும் பின்னூட்டங்களும் பாராட்டுக்களுமே.

Share:

Tuesday, March 16, 2010

தேர்தல் களத்தில் குதிக்கின்றார் கான்கொன்.


நேற்றைய கும்மியின் பயனாக இன்று நானும் எங்கள் அன்பு நமீதா வருங்கால அமைச்சர் (எந்த நாட்டுக்கு என்று கேட்டு என்னை வம்பில் மாட்டக்கூடாது.) கௌரவ அதி மேன்மை தங்கிய கான்கொன்னுடன் வெள்ளவத்தை பீச்சுக்கு செல்ல திட்டம் தீட்டினோம். என்னடா பெரிய திட்டம் என கேட்கப்படாது ஒன்றும் இல்லை, உடனடியா நடக்கும் என்ற ஒரு விஷயம் கொஞ்சம் தமதமாகிப்போக தூக்கமும் இல்லை கனவும் இல்லை கலரும் இல்லை என போகும் வெறுத்த என் வாழ்க்கைக்கு இன்றாவது ஒரு விடிவெள்ளி(மாலையில் எப்பிடிடா என கேட்கப்படாது) கிடைக்காதா என தேடிப்பார்க்க என வைத்துக்கொள்ளுங்கள்.


போக முன் ஒரு அரை மணிநேரத்துக்கு முன்னர் எனக்கு அழைப்பெடுப்பதாக சொன்ன எங்கள் அன்புத் தம்பி. மன்னிக்கவும் தலைவர். சொன்னபடி எடுத்து தோளைத்துவிட்டார். இவன் எங்க டைமுக்கு வரப்போறான் என்ற நினைப்பில் நானும் ஆறுதலா வெளிக்கிட வந்திட்டானப்பா நேரத்துக்கு. அரசியலில் இறங்கப்போகும் தம்பியே ஆரம்பமே தப்பா இருக்கே. இப்பிடி நேரத்துக்கு வரக்கூடாது. ஒரு மாதிரி நடைராசா வாகனத்தில் நாங்களும் பிரயாணம் செய்து பீச்சுக்கு வந்தோம். தம்பி, வழக்கமா இப்படி கடல் ஐ பார்க்க (கடலை அல்ல என்பதை அடிக்கடி சொன்னார்.) வருவதாக சொன்னார். கொஞ்சநேரம் இருக்காது தொலைவில் வந்த காதல் ஜோடி ஒன்றை பார்த்து நான் எப்போ இப்படி வாறது என்ற பெருமூச்சுடன் நிற்க இன்னொரு நண்பர் எங்களோடு இணைந்து கொண்டார். அவர் வருகை எனக்கு பலமாகிப் போனது. காரணம் எங்கள் சிங்கத்தின் வீரச்செயல்களை அடுக்கி வைத்தார் அந்த நபர்.





பல விடயங்களை அலசி ஆராய்ந்த எங்கள் பொதுக்குழு(எல்லாம் பில்ட் அப்தான். ) பல விசயங்களை பேசிக்கொண்டிருக்கும் போது அடிக்கடி அந்த வழியால் சென்ற புகையிரதம் எண்களை குழப்பியது. கொதித்தெழுந்த எங்கள் தன்மான சிங்கம். தான் அரசியலில் நுழைந்து முதல் வேலையாக இந்த தண்டவாளங்களை இந்த பீச்சில் இருந்து தள்ளி வைக்கவேண்டும் என்ற தன் முக்கியமான பிரதான கோட்பாட்டை முன்வைத்தார். பாவம் வழக்கமா வருபவருடன் வரும் போது கஷ்டப்பட்டிருப்பார் போல. விடுங்கப்பா அவர் கஷ்டம் அவருக்கு தானே தெரியும்,





அதை விட இன்னொரு கருத்து பாருங்க இப்படிப்பட்ட அரசியல் வாதி கண்டிப்பா எந்த நாட்டில் இருக்க வேண்டும் என நீங்களே முடிவு செய்யுங்க இந்தியாவின் லாலு பிரசாத் யாதவ்வை அழைத்து வந்துதான் இதை செய்யணும் என்ற கதை வேறு. (இப்போ சொல்லுங்க இவர் எந்த நாட்டு அரசியல் வாதி என நான் சந்தேகப்பட்டது சரிதானே.) என்ன செய்றது எத்தனையோ பேர் அரசியலுக்கு வரும் போது இப்படிப்பாட அறிவாளி நல எண்ணம் படைத்த எங்கள் அன்புத் தளபதி, நமீதாவின் கொள்கை பரப்புச் செயலாளர் கான்கொன் வருவதில் என்ன தப்பு. ஒருவாறு மழைக்குள் நனைந்தபடி வீடு வந்து சேர்ந்தோம்.(நிறைய நாட்களின் பின் தான் குளிக்கின்றேன் என்ற உண்மையை சொன்னார். நீர்வள போக்குவரத்து அமைச்சராக இருக்க தகுதியான்a எங்கள் தலைவரின் பேட்டி இதோ.



நானும் ரொம்ப நாளை ஒரு மொக்கை பதிவு போட்டு மொக்கை பதிவராகனும் என பார்த்தால் நடக்கிதில்லையே. ஏன்பா யாரங்கே என்னையும் கவனியுங்கப்பா.


அப்புறம் அந்த வானொலிப் பதிவு இன்னும் இழுபடுகின்றது. இன்றோ நாளையோ இட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு தட்டச்சுகின்றேன். பார்க்கலாம்.
Share:

Thursday, September 17, 2009

காதல்,அழகு,கடவுள்,பணம்-என் பார்வையில்.

இது தொடர் பதிவுகளின் காலம். நான் எழுத நினைக்கும் பதிவுகளை கூட எழுதமுடியாமல் இப்படி தொடர்பதிவு எழுத வேண்டுமே என்னும் ஆதங்கமும் உண்டு. என்ன செய்வது நண்பர்கள் அழைக்கும் போது அவர்கள் அன்புக்கு கட்டுப்பட்டு தானே நடக்கவேண்டும்.

அண்மையில் நண்பர் யோ வாயிஸ் தன் சார்பாக பள்ளிபயின்றதொரு காலம் என்னும் தலைப்பில் என்னை விளையாட கூப்பிட்டார். தப்பித்து விட்டேன். காரணாம் ஏற்கனவே அதே விடயத்தை நான் என் பள்ளிக்காலம் என்னும் தலைப்பில் எழுதிவிட்டேன். எனவே அந்த பதிவிற்கான இணைப்பை இங்கே கொடுக்கின்றேன். என்னை மன்னித்துவிட்டு அதை படிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.

அதை தொடர்ந்து அடுத்த அழைப்பு. இந்த முறை புதிய நண்பர் ஒருவர். காதல்,அழகு,கடவுள்,பணம் என மருதமூரான் அழைக்க இன்று இந்த பதிவு. இந்த பதிவை தொடங்க முன் இன்னொரு வேதனையான விடயம் அண்மைய என் பதிவுகள் எதுவும் தமிழிச் தளத்தில் ஹிட் அடிக்கவில்லை. என் புலம்பலை விட்டு விட்டு விடயத்துக்கு போகலாமா?

காதல்.


சொல்லும் போதே இனிக்கும் மந்திர சொல். மாயாஜால வாழ்க்கை. சிலருக்கு இது வாழ்க்கை சிலருக்கு இது பொழுதுபோக்கு. தாய் பிள்ளை மேல் கணவன்-மனைவி ஒருவருக்கிடையில், பிள்ளை தாய் மேல், ஒரு உயிர் இன்னொரு உயிரிடத்தில் என்று எல்லோரும் காதலின்றி வாழமுடியாது. காதலன் காதலி தங்களுக்கிடையில் வைக்கும் காதல் தான் இன்று காதல் என்றவுடன் பலருக்கு நினைவு வருகின்றது. அந்த பக்கத்தில் பார்த்தால் நானும் எத்தனையோ நல்ல காதல்களையும் காமக்காதல்களையும் பார்த்திருக்கின்றேன். பார்த்துக்கொண்டிருக்கின்றேன். காதல் என்னும் அற்புதம் காதலர்களுக்கிடையில் சிக்கி சின்னாபின்னமாகி அதன் புனித்ததை இழந்து கொண்டிருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மையே.

அழகு.


எம் மனதை பறிகொடுத்து நாங்கள் லயித்துப் போகும் இடங்கள் ஒவ்வொன்றும் அழகே. ஆனால் இந்த அழகு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக தெரிவதுதான் இயற்கையின் விந்தை. குழந்தையின் புன் சிரிப்பு முதல் மரணித்தவனின் மரண படுக்கை வரை ஏதோ ஒரு அழகு இருக்கத்தான் செய்கின்றது.

கடவுள்.


எங்களை மிஞ்சிய ஒரு சக்தி. எனக்கு கடவுள் மேல் முழு நம்பிக்கை உண்டு. அப்பப்போ எனக்கும் அவருக்கும் சண்டை வரும். அப்புறம் எல்லாம் நன்மைக்கே என கடவுளையே மன்னித்து விடுவேன். ஒவ்வொருவருக்கும் தங்களை விட ஏதோ ஒன்று மேலே இருக்கின்றது என்னும் எண்ணம் எப்போது வருகின்றதோ அப்போதே கடவுள் நம்பிக்கை வந்து விடுகின்றது. என் மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் நான் எம் மதத்துக்கும் சம்மதம் சொல்லும் மனம் கொண்டவன். அதே நேரம் சில நல்ல மனித உள்ளங்களிலும் கடவுளைக் கண்டுள்ளேன்.

பணம்.


இந்த பிசாசுதான் இன்று இங்கே கொடுத்த நான்கு வகைகளுக்குள்ளும் முதன்மையாகி நிற்கிறது. காதலுக்கும் காசு வேணும், அழகாய் இருப்பதை விட காசை அடுக்கி வைப்பவனையே பலர் ஏற்கின்றனர். கடவுளை பார்க்கணும் என்றாலே காசு தான் தேவைப்படுகின்றது. ஒருமுறை நான் இந்தியா போனபோது சிதம்பரம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. எத்தனையோ மக்கள் சிதம்பரத்தானை தரிசிக்க முட்டி மோதிய வேளை சிதம்பர ரகசியத்தை பார்க்க பணம் வாங்கிவிட்டு ரகசியத்தை மாத்திரம் சொல்லா குறையாக எல்லாவற்றையும் சொன்ன அந்தணர்களை நினைக்கும் போது இன்றும் வேதனையாக இருக்கின்றது. இந்த சிறிய சம்பவமே பணம் எந்தளவிற்கு முக்கியம் என்பதை சொல்லிவிடும. அதேநேரம் முத்து திரைப்பட பாடல் போல கழுத்துக்கு கீழே பணம் இருக்கும் வரை தான் நீ எஜமான் இல்லை பணம் தான் உனக்கு எஜமான் என்பது வாழ்க்கையின் ஓட்டத்தில் புரியாதவர்கள் பலர் இன்னமும் இருக்கின்றார்கள்.

என் மனதை சொல்லி விட்டேன். இப்போ இன்னும் நான்கு பேர் மனதை திறக்கவேண்டுமல்லவா.

புல்லட்-எப்போது எடக்கு முடக்காக எழுதும் இவரை இப்படி எடக்கு முடக்கான விடயங்களில் இழுத்து சீரியஸாக எழுத வைக்கும் ஒரு முயற்சி. நடக்குமா புல்லட்.?

கடலேறி- நான் லோஷன் அண்ணாவிடம் கேள்வியைக்கேட்டுவிட்டு பதிவேற்றாமல் இருக்கும் போது வந்தி அண்ணரிடம் கேள்வியால் துளைத்து எனக்கு முதல் பதிவிட்ட குற்றத்துக்காக இந்த தண்டனை.

பிரபா-பிறந்தநாளுக்கு பிறகு மனிதர் சந்தோசமாக இருக்கின்றார். விடலாமா. இதோ அஞ்சல் கோலை கொடுத்துவிட்டேன். எப்புடி?


சிந்து-இலங்கையை சேர்ந்த இப்போது பங்களாதேஷில் இருந்து எழுதும் பதிவர். என்னை ஏற்கனவே வம்பில் மாட்டி விட்டதற்காக இந்த பழிவாங்கல்.

நண்பர்களை அழைத்தமைக்கு நான் கூறிய காரணங்கள் சும்மா ஒரு சுவாரஷ்யத்துக்காகவே உண்மையில் அத்தனைபேரும் நல்ல தரம் மிக்க படைப்பை தருபவர்கள். இந்த தொடரை தொடர்வார்கள் என நம்புகின்றேன்.

எல்லாம் சொன்னாச்சு காதல் என்னும் தலைப்பிட்டு விட்டு என் காதலியை பற்றி சொல்லாமல் விடலாமா? இதோ அவர் படத்தையே தருகின்றேன். எப்பிடி இருக்காங்க ஜோடி பொருத்தம் எப்புடி என சொல்லிட்டு போங்கோ.

=>



=>




=>





=>




=>




=>






=>




Share:

Monday, September 14, 2009

நண்பர்களுக்காக...............


விருதுகளால் பல பதிவர்கள் அலங்கரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் எனக்கும் யோ வாய்ஸ் சார்பாக எனக்கு மீண்டும் ஒரு விருது கிடைத்தது. அதன் தொடரை நான் தொடர காலம் எடுத்துக்கொண்டிருக்க இப்போது சற்று நாட்களுக்கு முன் மீண்டும் சந்ருவினால் அந்த விருது எனக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. விருதுகளை கொடுப்பதும் பெறுவதும் பற்றி பலர் பல்வேறு விதமாக கூறினாலும் எனக்கு விருது கிடைத்தது சந்தோசமே. இப்போது நான் கொடுக்கப்போவாதும் மகிழ்ச்சியே.

இம்முறை விருது வழங்கும் போது எனக்கு நிறைய பதிவர்களை படிக்க முடிந்தது. அதற்கு காரணம் பதிவர் சந்திப்பு. நிறைய பதிவுகளை படித்தேன் அப்படிப்படிக்கும் போது எல்லோரும் என்னை ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்து விட்டனர். அதில் பத்துபேரை தெரிந்து இந்த விருதை வழங்கப்போகின்றேன். அவர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கின்றேன்.

1. ௧.கனக கோபி.
தன்னைப்பற்றி என்ன சொல்வதென்பதற்கே யோசிக்கும் இவர் பதிவுகளில் சொல்லவேண்டியவற்றை சொல்லி விடுவார். பல்சுவை கலந்த எழுத்தில் நான் இவரை ரசிக்கின்றேன்.

2. பால்குடியின் தாய்மடி.
உங்கள் எண்ணங்களை மீட்டு அரவணைப்புடன் ஆறுதல் தேட நீங்கள் தாரளமாக இவர் தளம் செல்லலாம். தன் வாழ்வில் இருக்கும் யதார்த்தங்கள் அதிகம் பிரதிபலிக்கப்படும்.

3. கவ்பாய் மது.
நாவினால் நாட்டையே அசையவைக்கும் அசகாய சூரன். பதிவுகளோ பாரினை சுற்றிவரும். பேருந்தில் பயணித்து பேயறைந்து போய் நிற்கின்றார்.

4. த கிரேட் புல்லட்.
பெயரிலேயே வில்லங்கம் என்றால் முதலில், தலைப்பிலும் புல்லட்டின் டுமீல். ஏதோ சீரியஸ் பதிவர் என பார்த்தால் சுண்டக்காயையும் சூத்தைக்கத்தரிக்கயையும் கூட சுவையாக சமைக்கும் வல்லமை பொருந்திய சுவாரஸ்ய பதிவர். இப்படி சொல்ல காரணாம் சின்ன விடயங்களையும் எதிர்மறையான விடயங்களை கூட நகைச்சுவையாக தரக்கூடியவர். பதிவர் சந்திப்பின் பின் நெருங்கிய நண்பர் ஆகிவிட்டார். என்ன செய்வது வந்தி அண்ணருக்கு போட்டியாக இப்பவே தனக்கு பொண்ணு பார்க்க தொடங்கி விட்டார்.

5. டயானா
அறிந்ததும் அறியாததும் என எல்லாவற்றையும் எழுதும் இவர் அடிக்கடி காணாமல் போய்விடுவார். தனக்கு தானே காணவில்லை என எழுதி பரபரப்பூட்டும் பதிவாயினி.(எல்லாம் கவிதாயினி என்னும் பெண்பாலில் இருந்து செட்டது.)அப்பப்போ எழுதினாலும் அறிவாக எழுதும் கெமிஸ்ட்ரி (இவரின் ரொம்பநாள் பிரச்சனை ) தெரிந்தவர்.

6. ஹரன்.
சாமானியன் என சொல்லிக்கொண்டே சகலதும் எழுதும் சகலகலாவல்லவர். கவிதை முதல் காரசாரம் வரை கலந்து கலக்குபவர்.

7.மருதமூரான்.
பதிவர் சந்திப்பில் நாயகன். கடலையும் வானத்தையும் கூட உடைத்தெறிந்து எல்லை வகுத்தவர். சாம்பாரை சகலதும் வரும் சத்துணவை. படித்தால் கிடைத்திடும் எல்லோருக்கும் புத்துணர்ச்சி.

8.சுபானு.
சொல்வதற்கு ஏதும் இல்லை என்று விட்டு சொல்லவேண்டிய எல்லாவற்றையும் ஊஞ்சல் ஆட்டியே சொல்லிவிடுவார். சுயமும் சுவாரஸ்யமும் தான் இவரின் ஊஞ்சலின் இரண்டு கயிறுகள்.

9.பனையூறான்.
ஏதேனும் எழுதவேண்டும் என்பதற்காக எழுவது என சொல்லி விட்டு எல்லாவற்றையும் எழுதிவிடுவார். தேடியதும் தெரிந்ததும் தொட்டதும் தொடாததும் வடலிக்குள் மறைந்திருக்கும் ரகசியங்களும் இந்த பனையூரானின் உச்சத்திலே பளிச்சென தெரிந்து விடும். பட்டத்தை பட்டென சொல்லும் பனையூரான்.

10. வந்தியத்தேவன்.
என் உளறல்கள் என உள்வீட்டு ரகசியங்களை உளறித்தள்ளும் ஒரு உளறல் நாயகன். சக பதிவர்களை காளியாக்கியே பதிவிடும் அன்பு நெஞ்சன். மூத்த பிரபல பலம் தின்று கொட்டை போட்ட பதிவர் என தன்னை தானே சொல்லல் சொல்லும் உண்மையிலேயே மூத்த பதிவர்.(பூட்டனை காணும் வயதில் இருக்கும் உங்கள் வயதை சொன்னேன்.) எல்லாவற்றுக்கும் மேலாக பதிவர் சந்திப்பில் அறிமுகமாகி இன்று என் பதிவுகளிலும் தளத்திலும் மாறா அக்கறை உடைய யானைப்பலம் கொண்ட புண்ணியவான். கண்டதும் கேட்டதும் நக்கலும் நையாண்டியும் கலந்து வரும் கள்ளம் கபடமற்று. அதுவே இவரின் பெரிய வெற்றி.

அப்பாடா நீண்டகாலமாக என் மனதை உறுத்திக்கொண்டிருந்த ஒரு உணர்வை இப்போது பதிந்து விட்டேன். பெற்றவர்கள் தொடர்வார்கள் என்றும். மற்றவர்கள் வாழ்த்துவார்கள் எனவும் எண்ணி எல்லோருக்கும் மீண்டும் மீண்டும் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, மீண்டும் சந்திப்போம். வரட்டா...........
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox