
விஜய் ரசிகர்கள் மட்டும் அல்ல விஜய் எதிர்ப்பு வாதிகளாலும் எதிர்பார்க்கப்பட்ட(உங்களுக்கு மட்டும் தானுண்ணா இந்த சிறப்பு.) வேட்டைக்காரன் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்துவிட்டான். இலங்கையில் வியாழன் இரவே ஒரு சிலர் படத்தை பார்த்து விட்டதால் வெள்ளி காலையில் இருந்து விமர்சனப்பதிவுகள் வர ஆரம்பித்தன. நான் எதிர்பார்த்தது போலவே வேட்டைக்கரனை வேட்டையாடிய பதிவுகள். நேரம் செல்ல செல்ல நிலைமை மோசமானது. பதிவர்களின் வேட்டை அதிகைத்தது. உண்மையில் ஒரு விஜய் ரசிகனாக வெட்கிப்போனேன். அதுமட்டுமில்லாமல் கவலையும் பட்டேன். இந்தமுறையும் கவித்திட்டாரா என்ற கவலையுடன் எதுவா இருப்பினும் ஒருதடவை படத்தை பார்த்து விடனும் என்ற முடிவில் சனிக்கிழமை காலை படம்பார்க்க சென்றேன்.

டிக்கெட் கிடைக்கவில்லை சினிசிட்டிக்கு. இங்கே ஓசியாக பார்க்கும் வாய்ப்பும் கிடைக்க இங்கேயே பார்க்கலாம் என நானும் அலுவலக நண்பன் ஒருவரும் சென்றோம்(அவரும் விஜய் ரசிகருங்கோ.). காலை பத்து பதினைந்துக்கு காட்சி என்றனர் நாங்கள் 9.45க்கே சென்றுவிட்டோம். எல்லா ஆர்வக்கோளாறு தான்.சென்றால் கூட்டம் இளைஞர்கள் பெண்கள் குழந்தைகள் என அந்த வெயிலிலும் கூட்டம்.(இந்த திரை அரங்கிலேயே இப்படி என்றால் இதை விட நல்ல திரை அரங்குகளில் எவ்வளவு கூட்டம் இருக்கும் என சிந்தித்தேன்.) ஒருவாறு நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு உள்ளே சென்றால் ஹவுஸ் புல் என்பதை அறியக்கூடியதாக இருந்தது.

சரி படம் பார்க்கலாம் என ஆவலோடு எதிர்பார்க்க சண் pictures தொடக்கம் விஜய் சண் வரும் வரை விசிலடித்தான். எனக்குள் சந்தோசம் அட நம்ம தளபதி ஜெயிச்சிட்டார் என்று. குருவி, வில்லு போன்ற ஓவர் பில்ட் அப்புகள் இல்லாமல் தளபதியின் அறிமுகம் எனக்கு சந்தோசத்தை கொடுத்தது. அதை தொடர்ந்து வழக்கமான ஒபிநிங் பாடல் விஜயின் வழக்கமான நடனம் இல்லாமல் போனது ஏனோ? கொஞ்சம் அடக்கி வாசித்தார். மகனுடன் ஆடும் பொது விஜய் கொஞ்சம் மெதுவாக ஆட ஜூனியர் தளபதி ஐயப்பன் ஆசியுடன் அறிமுகமாகி அப்பாவுடம் அமர்க்களம் பண்ணினார். மகன் ஆட விஜய் பார்த்து ரசித்ததை நானும் ரசித்தேன்.மூன்று முறை பரீட்சையில் தோற்று நான்காவதில் வெல்வதை அப்பட்டமாக சொல்லாமல் சொல்லி இருக்கின்றார்கள் தளபதியின் இன்றைய நிலையை.

வழக்கமான படம் போல ஆரம்பித்து விட்டது இனியாவது களை கட்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த எனக்கு பட்டாம் பூச்சி பறந்தது அதுதான் நம்ம ஸ்வீட்டி அறிமுகமான நேரம் நான் வழியல அனுஷ்கா நிஜ பெயரை சொன்னேன். சும்மா சொல்லக்கூடாது நன்றாகத்தான் இருந்தா அக்கா.(எஸ்கேப்) வழக்கமான படங்களில் ஹீரோ ஹீரோயின் அறிமுகம் போல இங்கும் ரசிக்க முடியவில்லை. ஆனால் விஜயின் அந்த குறும்புத்தனத்தை மட்டுமே அதில் ரசித்தேன். வாரணம் ஆயிரம் போல தளபதிக்கும் ரயில் பயணமோ என நினைக்க இல்லை இல்லை என அனுஷ்கா சொன்னபோது கவலைப்பட்டது விஜய் மட்டுமல்ல நானும் தான். அதற்க்கு முன் தன குடும்பம் பற்றி விஜய் கற்பனை காதல் கவிதை.ஆனால் அதன் பின் ரயிலில் என்ன நடந்தது என்பது தெரிய முன்னமே காலேஜில் சேரும் விஜய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க அனுஷ்கா வருவார் என நினைக்க ஒரு சோடாபுட்டி போட்டா பெண் அறிமுகமாகிறார். என்னடா இது என நினைக்க அந்த வகுப்பிலேயே தனக்கு படிப்பிக்க வரும் ஆசியருக்கு படிப்பிக்கின்றார் நம் விஜய். டாக்டர் பட்டம் இதுக்கு தானோ.(சத்தியமா ரசிக்க முடியல இது ரொம்ப ஓவருங்க.) அதற்க்கு பின் செல்லா அறிமுகம் அட நம்ம ஆதி வில்லன் சாய்குமார். ஆளே மாறிப்போனார். அதேபோல அந்த நடிப்பிலும் ஏதோ மிஸ்ஸிங். அவரின் பாத்திர படைப்பை காட்டவே காமுகனாக காட்டி இருக்கின்றார்கள். வழக்கமான விஜய் படம் போலவே எதிர்பாராத (வேண்டுமென்றே திணிக்கப்பட்டிருக்கும் மாணிக்கவிநாயகம் அண்ட் மகள் ) திருப்பத்தால் விஜய்-வில்லன் மோதல் உருவாகிறது. இதற்கிடையே அனுஷ்கா வருகின்றார் போகின்றார். கரிகாலன் பாட்டு பரவாயில்லை ஆனால் ஏனோ விஜயின் நடனம் மிஸ்ஸிங். சண்டைக்காட்சிகளிலும் புதுமை இல்லை. பார்த்துப் புளிச்சு போன காட்சிகள்.

போலீஸ் பிடித்துப்போகும் விஜயை காப்பாற்ற அனுஷ்கா எடுக்கும் முயற்சி சராசரி கதாநாயகிக்கு உரியது. ஆனால் இறுதியில் விஜய் போலிசிடம் இருந்து தப்புவது. அருவியில் குதி ப்பதெல்லாம் எதிர்பார்த்ததுதான். இங்கே இடைவேளை விட கொஞ்சம் அயர்ந்து தூங்கப்போன என்னுடன் வந்த நண்பரை எழுப்பினேன். அடப்பாவி இங்கே இப்படி விஜயின் தாண்டவம் நடக்க நீ தூங்கிறாயா? இடைவேளைக்கு பிறகு நான் எதிர்பார்த்த புலி உருமுது பாடல் வானொலியில் நான் ஒலிபரப்பும் போது கிடைத்த அந்த புத்துணர்ச்சியை தரவில்லை. இன்னும் நன்றாக படமாக்கி இருக்கலாம். அடுத்து சின்ன தாமரை இதில் தான் விஜய் வித்தியாசம் காட்ட முயற்சித்து இருக்கின்றார். இப்படி பாடல்களில் வித்தியாசம் காட்டும் நீங்கள் ஏன் ஒரு படம் அப்படி நடித்து முயற்சி செய்யக்கூடாது என நானும் யோசித்தேன். ஆனால் அதற்கும் காரணம் இருந்தது நிறைவில் சொல்கின்றேன்.என் உச்சி மண்டையில் மட்டுமே விஜயின் அசுர நடனத்தை காணக்கூடியதாக இருந்தது.

இரண்டாம்பாதி ஒரு சிவகாசி,திருப்பாச்சியில் இருந்த விறு விறுப்பு இருக்கும் என்றால் விஜயின் நடை உடை எல்லாம் அவரின் பகவதி படத்தை அச்சு அசலாக கொப்பி பண்ணி இருந்தது. சில காட்சிகள் எனக்கு அலுப்பு தட்டியது உண்மை. ஒரு சில Punch டயலக்குகள் இருந்தது Punch டயலாக் ரசிகரான எனக்கு கவலயே. செல்லாவின் தந்தையாக வருபவர் அசால்டாக வில்லத்தனம் அனால் அதுவே கொஞ்சம் ஓவர். விஜயும் அவரும் மோதும் காட்சிகளை இன்னும் சுவாரஷ்யமாக்கி இருக்கலாம். இறுதியில் விஜய் வில்லனை அழிக்காமல் தேவராஜை வைத்து அழிப்பது விஜய் படங்களுக்கு புதுசு. இதைவிட இடை இடையே சத்தியன் குழு உட்பட வரும் காட்சிகள் எல்லாம் விஜய் ரசிகர்களுக்கு புதிதல்ல. மொத்தத்தில் விஜயின் திருப்பாச்சி, சிவகாசி,போக்கிரி(ஒரு சில காட்சி) பகவதி, பாட்ஷா படங்களில் இருந்து உருவியது மட்டுமில்லாமல் வரப்போகும் சிங்கம் பட காட்சிகளையும் வைத்து வந்து வேட்டை ஆடிக்கொண்டிருக்கின்றான் வேட்டைக்காரன்.

இந்த விமர்சனம் வானொலியில் நான் வேலைக்கு சேர்ந்த பின் வரும் விமர்சனம், காரணம் ஒரு விமர்சனம் செய்யும் நாடு நிலையில் இருந்து இந்த படத்தை பார்க்கும் போது நிச்சயமாக இது ஒரு சிறந்த படம் அல்ல. விஜய் படம் அப்படி தானே என நீங்கள் கேட்கலாம். ஆனால் மூன்று தோல்விகளுக்கு பின் மீள்வருகை கொடுக்கும் ஒரு படமாக இது அமையவில்லை என்பதே என் கருத்து. கொஞ்சமேனும் கதையில் வித்தியாசம் காட்டி இருந்தால் இமாலய வெற்றி கிடைத்திருக்குமே. ஆனால் நிச்சயம் இது வழக்கமான விஜய் ரசிகர்களை முழுதாக திருப்திப்படுத்திய படமே. இதற்க்கு சாட்சி இன்று வரை குழந்தைகள், பெண்கள்,இளைஞர்கள் உட்பட எல்லோரும் குடும்பம் குடும்பமாக சென்று ஹவுஸ்புல்லாக இருக்கும் இந்த படத்தை பார்ப்பது. இன்றுவரை இலங்கையில் ஹவுஸ் புல்லாகவும் டிக்கெட் எடுப்பதில் கடினமாக இருப்பது போன்றவை வேடைக்காரனின் எழுச்சிக்கு உதாரணங்கள். என்னதான் சண் Pictures படத்தை வெளியிட்டாலும் படம் ரசிகர்களுக்கு பிடிக்காவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது. அதேபோல இன்றைய திகதியில் ஒரு திரைப்படம் நூறு நாள் ஓடுவதை வைத்து வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படவில்லை. வெளியாகும் போது அதிக திரை அரங்குகளில் அதிக காட்சிகள் என ஓடும் போது குறிப்பிட்ட சில நாடகளிலேயே வசூல் சாதனை படைத்து விடும் அண்மையில் இதற்க்கு கண்டேன் காதலை உதாரணம் ஐம்பது நாளில் கந்தசாமி வசூலை முறியடித்து விட்டது. பரத்தின் படமே அப்படி எண்டால் விஜய் படம்? சொல்லவா வேண்டும்.

இதெல்லாம் இருக்கட்டும் படம் வெற்றியா இல்லையா என கேக்கிறிங்களா? நிச்சயமாக இது விஜயின் வெற்றிப்படங்களில் ஒன்று ஐம்பது அடிக்கமுன் ஒரு பவுண்டரி அடித்து அரை சதத்தை நெருங்குகின்றார் விஜய். இந்த பெருமையில் பெரும் பங்கு நம்மை போன்ற பதிவர்களையே சாரும். தன வாழ்நாளில் விஜய் படம் திரை அரங்கில் பார்க்காதவர்கள் என சொல்லிக்கொண்டே இந்த படத்தை பார்த்தோம் என சொல்லி விமர்சனம் எழுதிய பதிவர்கள் உட்பட பலரின் பங்களிப்பில் வேட்டைக்காரன் வெற்றிக்காரனாகி விட்டான். எஸ்.எம்.எஸ்கள், எதிர் பதிவுகள், தடைகள் எல்லாவற்றையும் தாண்டி இன்று வேட்டைக்காரன் வெற்றி பெற்று விட்டான். வேட்டைக்காரன் தோல்வியடையும் என படம் வர முன்னர் கணித்த நம் தீர்கதரிசன பதிவர்களே என்ன சொல்லப்போகின்றீர்கள். ஒரு விஜய் ரசிகனாக எனக்கு இந்த வெற்றி சந்தோசமே. ஆரம்பத்தில் சொன்னேனேனே விஜய் இப்படி வித்தியாசமான வேடம் செய்யக்கூடாதென ஆனால் விஜய் நிச்சயமாக உங்களை அப்படி ஒரு நிலையில் பார்க்கும் தன்மை ரசிகர்களுக்கு இல்லை. விஜயை விஜயாக திரையில் பார்க்கவே ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர் என்பதற்கு இந்த கதையில்ல வேட்டைக்காரனே உதாரணம். இது ஒரு சில நாயகர்களுக்கு மட்டுமே உண்டான வரம். அது உங்களுக்கு உண்டு.எனக்கு வேட்டைக்காரன் இன்னொரு திருமலை, கானரணம் தோல்வியில் இருந்து விஜய் வெற்றிப்படியில் ஏற தொடக்கி இருக்கும் படம்........




















