உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label வேட்டைக்காரன். Show all posts
Showing posts with label வேட்டைக்காரன். Show all posts

Thursday, December 24, 2009

வேட்டைக்காரனையே வேட்டை ஆடிய விஜய் ரசிகன்.



விஜய் ரசிகர்கள் மட்டும் அல்ல விஜய் எதிர்ப்பு வாதிகளாலும் எதிர்பார்க்கப்பட்ட(உங்களுக்கு மட்டும் தானுண்ணா இந்த சிறப்பு.) வேட்டைக்காரன் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்துவிட்டான். இலங்கையில் வியாழன் இரவே ஒரு சிலர் படத்தை பார்த்து விட்டதால் வெள்ளி காலையில் இருந்து விமர்சனப்பதிவுகள் வர ஆரம்பித்தன. நான் எதிர்பார்த்தது போலவே வேட்டைக்கரனை வேட்டையாடிய பதிவுகள். நேரம் செல்ல செல்ல நிலைமை மோசமானது. பதிவர்களின் வேட்டை அதிகைத்தது. உண்மையில் ஒரு விஜய் ரசிகனாக வெட்கிப்போனேன். அதுமட்டுமில்லாமல் கவலையும் பட்டேன். இந்தமுறையும் கவித்திட்டாரா என்ற கவலையுடன் எதுவா இருப்பினும் ஒருதடவை படத்தை பார்த்து விடனும் என்ற முடிவில் சனிக்கிழமை காலை படம்பார்க்க சென்றேன்.


டிக்கெட் கிடைக்கவில்லை சினிசிட்டிக்கு. இங்கே ஓசியாக பார்க்கும் வாய்ப்பும் கிடைக்க இங்கேயே பார்க்கலாம் என நானும் அலுவலக நண்பன் ஒருவரும் சென்றோம்(அவரும் விஜய் ரசிகருங்கோ.). காலை பத்து பதினைந்துக்கு காட்சி என்றனர் நாங்கள் 9.45க்கே சென்றுவிட்டோம். எல்லா ஆர்வக்கோளாறு தான்.சென்றால் கூட்டம் இளைஞர்கள் பெண்கள் குழந்தைகள் என அந்த வெயிலிலும் கூட்டம்.(இந்த திரை அரங்கிலேயே இப்படி என்றால் இதை விட நல்ல திரை அரங்குகளில் எவ்வளவு கூட்டம் இருக்கும் என சிந்தித்தேன்.) ஒருவாறு நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு உள்ளே சென்றால் ஹவுஸ் புல் என்பதை அறியக்கூடியதாக இருந்தது.


சரி படம் பார்க்கலாம் என ஆவலோடு எதிர்பார்க்க சண் pictures தொடக்கம் விஜய் சண் வரும் வரை விசிலடித்தான். எனக்குள் சந்தோசம் அட நம்ம தளபதி ஜெயிச்சிட்டார் என்று. குருவி, வில்லு போன்ற ஓவர் பில்ட் அப்புகள் இல்லாமல் தளபதியின் அறிமுகம் எனக்கு சந்தோசத்தை கொடுத்தது. அதை தொடர்ந்து வழக்கமான ஒபிநிங் பாடல் விஜயின் வழக்கமான நடனம் இல்லாமல் போனது ஏனோ? கொஞ்சம் அடக்கி வாசித்தார். மகனுடன் ஆடும் பொது விஜய் கொஞ்சம் மெதுவாக ஆட ஜூனியர் தளபதி ஐயப்பன் ஆசியுடன் அறிமுகமாகி அப்பாவுடம் அமர்க்களம் பண்ணினார். மகன் ஆட விஜய் பார்த்து ரசித்ததை நானும் ரசித்தேன்.மூன்று முறை பரீட்சையில் தோற்று நான்காவதில் வெல்வதை அப்பட்டமாக சொல்லாமல் சொல்லி இருக்கின்றார்கள் தளபதியின் இன்றைய நிலையை.


வழக்கமான படம் போல ஆரம்பித்து விட்டது இனியாவது களை கட்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த எனக்கு பட்டாம் பூச்சி பறந்தது அதுதான் நம்ம ஸ்வீட்டி அறிமுகமான நேரம் நான் வழியல அனுஷ்கா நிஜ பெயரை சொன்னேன். சும்மா சொல்லக்கூடாது நன்றாகத்தான் இருந்தா அக்கா.(எஸ்கேப்) வழக்கமான படங்களில் ஹீரோ ஹீரோயின் அறிமுகம் போல இங்கும் ரசிக்க முடியவில்லை. ஆனால் விஜயின் அந்த குறும்புத்தனத்தை மட்டுமே அதில் ரசித்தேன். வாரணம் ஆயிரம் போல தளபதிக்கும் ரயில் பயணமோ என நினைக்க இல்லை இல்லை என அனுஷ்கா சொன்னபோது கவலைப்பட்டது விஜய் மட்டுமல்ல நானும் தான். அதற்க்கு முன் தன குடும்பம் பற்றி விஜய் கற்பனை காதல் கவிதை.ஆனால் அதன் பின் ரயிலில் என்ன நடந்தது என்பது தெரிய முன்னமே காலேஜில் சேரும் விஜய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க அனுஷ்கா வருவார் என நினைக்க ஒரு சோடாபுட்டி போட்டா பெண் அறிமுகமாகிறார். என்னடா இது என நினைக்க அந்த வகுப்பிலேயே தனக்கு படிப்பிக்க வரும் ஆசியருக்கு படிப்பிக்கின்றார் நம் விஜய். டாக்டர் பட்டம் இதுக்கு தானோ.(சத்தியமா ரசிக்க முடியல இது ரொம்ப ஓவருங்க.) அதற்க்கு பின் செல்லா அறிமுகம் அட நம்ம ஆதி வில்லன் சாய்குமார். ஆளே மாறிப்போனார். அதேபோல அந்த நடிப்பிலும் ஏதோ மிஸ்ஸிங். அவரின் பாத்திர படைப்பை காட்டவே காமுகனாக காட்டி இருக்கின்றார்கள். வழக்கமான விஜய் படம் போலவே எதிர்பாராத (வேண்டுமென்றே திணிக்கப்பட்டிருக்கும் மாணிக்கவிநாயகம் அண்ட் மகள் ) திருப்பத்தால் விஜய்-வில்லன் மோதல் உருவாகிறது. இதற்கிடையே அனுஷ்கா வருகின்றார் போகின்றார். கரிகாலன் பாட்டு பரவாயில்லை ஆனால் ஏனோ விஜயின் நடனம் மிஸ்ஸிங். சண்டைக்காட்சிகளிலும் புதுமை இல்லை. பார்த்துப் புளிச்சு போன காட்சிகள்.


போலீஸ் பிடித்துப்போகும் விஜயை காப்பாற்ற அனுஷ்கா எடுக்கும் முயற்சி சராசரி கதாநாயகிக்கு உரியது. ஆனால் இறுதியில் விஜய் போலிசிடம் இருந்து தப்புவது. அருவியில் குதி ப்பதெல்லாம் எதிர்பார்த்ததுதான். இங்கே இடைவேளை விட கொஞ்சம் அயர்ந்து தூங்கப்போன என்னுடன் வந்த நண்பரை எழுப்பினேன். அடப்பாவி இங்கே இப்படி விஜயின் தாண்டவம் நடக்க நீ தூங்கிறாயா? இடைவேளைக்கு பிறகு நான் எதிர்பார்த்த புலி உருமுது பாடல் வானொலியில் நான் ஒலிபரப்பும் போது கிடைத்த அந்த புத்துணர்ச்சியை தரவில்லை. இன்னும் நன்றாக படமாக்கி இருக்கலாம். அடுத்து சின்ன தாமரை இதில் தான் விஜய் வித்தியாசம் காட்ட முயற்சித்து இருக்கின்றார். இப்படி பாடல்களில் வித்தியாசம் காட்டும் நீங்கள் ஏன் ஒரு படம் அப்படி நடித்து முயற்சி செய்யக்கூடாது என நானும் யோசித்தேன். ஆனால் அதற்கும் காரணம் இருந்தது நிறைவில் சொல்கின்றேன்.என் உச்சி மண்டையில் மட்டுமே விஜயின் அசுர நடனத்தை காணக்கூடியதாக இருந்தது.


இரண்டாம்பாதி ஒரு சிவகாசி,திருப்பாச்சியில் இருந்த விறு விறுப்பு இருக்கும் என்றால் விஜயின் நடை உடை எல்லாம் அவரின் பகவதி படத்தை அச்சு அசலாக கொப்பி பண்ணி இருந்தது. சில காட்சிகள் எனக்கு அலுப்பு தட்டியது உண்மை. ஒரு சில Punch டயலக்குகள் இருந்தது Punch டயலாக் ரசிகரான எனக்கு கவலயே. செல்லாவின் தந்தையாக வருபவர் அசால்டாக வில்லத்தனம் அனால் அதுவே கொஞ்சம் ஓவர். விஜயும் அவரும் மோதும் காட்சிகளை இன்னும் சுவாரஷ்யமாக்கி இருக்கலாம். இறுதியில் விஜய் வில்லனை அழிக்காமல் தேவராஜை வைத்து அழிப்பது விஜய் படங்களுக்கு புதுசு. இதைவிட இடை இடையே சத்தியன் குழு உட்பட வரும் காட்சிகள் எல்லாம் விஜய் ரசிகர்களுக்கு புதிதல்ல. மொத்தத்தில் விஜயின் திருப்பாச்சி, சிவகாசி,போக்கிரி(ஒரு சில காட்சி) பகவதி, பாட்ஷா படங்களில் இருந்து உருவியது மட்டுமில்லாமல் வரப்போகும் சிங்கம் பட காட்சிகளையும் வைத்து வந்து வேட்டை ஆடிக்கொண்டிருக்கின்றான் வேட்டைக்காரன்.


இந்த விமர்சனம் வானொலியில் நான் வேலைக்கு சேர்ந்த பின் வரும் விமர்சனம், காரணம் ஒரு விமர்சனம் செய்யும் நாடு நிலையில் இருந்து இந்த படத்தை பார்க்கும் போது நிச்சயமாக இது ஒரு சிறந்த படம் அல்ல. விஜய் படம் அப்படி தானே என நீங்கள் கேட்கலாம். ஆனால் மூன்று தோல்விகளுக்கு பின் மீள்வருகை கொடுக்கும் ஒரு படமாக இது அமையவில்லை என்பதே என் கருத்து. கொஞ்சமேனும் கதையில் வித்தியாசம் காட்டி இருந்தால் இமாலய வெற்றி கிடைத்திருக்குமே. ஆனால் நிச்சயம் இது வழக்கமான விஜய் ரசிகர்களை முழுதாக திருப்திப்படுத்திய படமே. இதற்க்கு சாட்சி இன்று வரை குழந்தைகள், பெண்கள்,இளைஞர்கள் உட்பட எல்லோரும் குடும்பம் குடும்பமாக சென்று ஹவுஸ்புல்லாக இருக்கும் இந்த படத்தை பார்ப்பது. இன்றுவரை இலங்கையில் ஹவுஸ் புல்லாகவும் டிக்கெட் எடுப்பதில் கடினமாக இருப்பது போன்றவை வேடைக்காரனின் எழுச்சிக்கு உதாரணங்கள். என்னதான் சண் Pictures படத்தை வெளியிட்டாலும் படம் ரசிகர்களுக்கு பிடிக்காவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது. அதேபோல இன்றைய திகதியில் ஒரு திரைப்படம் நூறு நாள் ஓடுவதை வைத்து வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படவில்லை. வெளியாகும் போது அதிக திரை அரங்குகளில் அதிக காட்சிகள் என ஓடும் போது குறிப்பிட்ட சில நாடகளிலேயே வசூல் சாதனை படைத்து விடும் அண்மையில் இதற்க்கு கண்டேன் காதலை உதாரணம் ஐம்பது நாளில் கந்தசாமி வசூலை முறியடித்து விட்டது. பரத்தின் படமே அப்படி எண்டால் விஜய் படம்? சொல்லவா வேண்டும்.


இதெல்லாம் இருக்கட்டும் படம் வெற்றியா இல்லையா என கேக்கிறிங்களா? நிச்சயமாக இது விஜயின் வெற்றிப்படங்களில் ஒன்று ஐம்பது அடிக்கமுன் ஒரு பவுண்டரி அடித்து அரை சதத்தை நெருங்குகின்றார் விஜய். இந்த பெருமையில் பெரும் பங்கு நம்மை போன்ற பதிவர்களையே சாரும். தன வாழ்நாளில் விஜய் படம் திரை அரங்கில் பார்க்காதவர்கள் என சொல்லிக்கொண்டே இந்த படத்தை பார்த்தோம் என சொல்லி விமர்சனம் எழுதிய பதிவர்கள் உட்பட பலரின் பங்களிப்பில் வேட்டைக்காரன் வெற்றிக்காரனாகி விட்டான். எஸ்.எம்.எஸ்கள், எதிர் பதிவுகள், தடைகள் எல்லாவற்றையும் தாண்டி இன்று வேட்டைக்காரன் வெற்றி பெற்று விட்டான். வேட்டைக்காரன் தோல்வியடையும் என படம் வர முன்னர் கணித்த நம் தீர்கதரிசன பதிவர்களே என்ன சொல்லப்போகின்றீர்கள். ஒரு விஜய் ரசிகனாக எனக்கு இந்த வெற்றி சந்தோசமே. ஆரம்பத்தில் சொன்னேனேனே விஜய் இப்படி வித்தியாசமான வேடம் செய்யக்கூடாதென ஆனால் விஜய் நிச்சயமாக உங்களை அப்படி ஒரு நிலையில் பார்க்கும் தன்மை ரசிகர்களுக்கு இல்லை. விஜயை விஜயாக திரையில் பார்க்கவே ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர் என்பதற்கு இந்த கதையில்ல வேட்டைக்காரனே உதாரணம். இது ஒரு சில நாயகர்களுக்கு மட்டுமே உண்டான வரம். அது உங்களுக்கு உண்டு.எனக்கு வேட்டைக்காரன் இன்னொரு திருமலை, கானரணம் தோல்வியில் இருந்து விஜய் வெற்றிப்படியில் ஏற தொடக்கி இருக்கும் படம்........
Share:

Thursday, December 17, 2009

வேட்டைக்காரன் வென்றுவிட்டால்?



இளைய தளபதியாக ஒரு சில வருடங்களுக்கு முன் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வந்த விஜய் இன்று இளைய தலைவலியாகவும் சர்தாஜி ஜோக்கர் போலவும் வலம் வந்து கொண்டிருக்கின்றார். காரணம் அந்த மூன்று படங்களும் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மூன்று படங்களும் விஜய் ரசிகர்களுக்கே பிடிக்காத படங்களாக மாற சந்தில் சிந்து பாடும் கூட்டத்துக்கு அது வாய்ப்பாகி போனது. நம்மில் எத்தனையோ பதிவர்கள் தங்கள் தளத்துக்கு ஹிட்ஸ் கூட்டவும் பிரபல்யபபடுத்தவும் விஜய் என்னும் பெயர் ஆணிவேராகிப்போனது. விஜயை தாக்கினால் பதிவு பிரபலம் என்ற கணக்கில் இன்றைய நிலை. இதெல்லாம் கில்லி,சிவகாசி வரும் போது இல்லையே. ஆனால் இப்போது அந்த திரைப்படங்களையும் போட்டு தாக்குகின்றனர் சில பதிவர்கள். ஒன்று மட்டும் புரியவில்லை அன்று வெற்றி பெற்ற படங்கள் என சொல்லப்பட்ட இந்த படங்கள் இன்று ஏன் உங்களுக்கு மொக்கையாகின.

சரி என்ன செய்வது இதை பற்றி எழுதப்போனால் எனக்கு தாக்குதல் மட்டுமே மிஞ்சும் வேறு பலனில்லை. ஆனால் வேட்டைக்காரனை புறக்கணிப்போம், வேட்டைக்காரன் தோல்விப்படமாகும் என சொல்லிவருபவர்கள் இதே வேட்டைக்காரன் வெற்றி பெற்றுவிட்டால் என்ன நடக்கும் என சிந்தித்ததில்லை. எல்லாத் தடைகளையும் தாண்டி வேட்டைக்காரன் வசூல் வேட்டை ஆடிவிட்டால்?


1.மூன்று படங்களினாலும் கோமாளியாக்கப்பட்ட விஜய் பழையபடி நம்பர் வன் ஹீரோ ஆகிவிடுவார். மீண்டும் நம் பதிவர்கள் வேறு ஒரு நடிகரை தேடிப்பிடித்து வறுக்க ஆரம்பிப்பர். விஜய் புகழ் பாடும் பதிவுகள் அதிகம் வரும்.

2.விஜயின் ஐம்பதாவது படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரிப்பதுடன் அந்த படம் இன்னும் பல வசூல் சாதனைகளை செய்யும்.

3.பழைய பட பெயர்களை பாவிக்கும் பழக்கம் இன்னும் அதிகரிக்கும்.

4.தமிழ் படங்களை தவிர்த்து ஜேம்ஸ் கமரூனின் அவதார் போன்ற படங்களை பார்க்கும் உயர் ரசனைக்காரர்கள் கூட தமிழ் படங்கள் மேல் காதல் கொள்வர்.(தமிழ் படங்களை கேவலமாக விமர்சித்து வேறு மொழிப்படங்களை நன்றென தூக்கிப்பிடிக்கும் தமிழர்கள்.)

5.இயக்குனர் பாபு சிவனுக்கு வேறு பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம்.

6.சண் பிக்செர்சுக்கே தொடர்ந்து விஜய் தன் படங்களை கொடுக்கலாம்.(கொடுத்த அடியை பார்த்தால் இந்த வாய்ப்பு குறைவே.)

7.விஜய் அன்டனி இசை அமைத்தால் வெற்றி என்ற மாயை உருவாவதுடன் விஜய்-விஜய் அன்டனி கூட்டணி தொடரலாம்.(இசை-வித்தியாசாகர் கூட்டணி கொஞ்சகாலம் மிரட்டியது போல்.)

8.ஏற்கனவே படம் பார்க்காமல் விமர்சனம் எழுதும் ஒரு சில பதிவர்கள்(தொப்பி பொருந்தியவர்கள் போடுங்கள்) இனி வாழ்நாளில் அந்த தீர்கதரிசன தவறை செய்யாமல் போகலாம்.

9.இதே பட கூட்டணி மீண்டும் இணையலாம்.

10.விஜய்-த்ரிஷா போல் இந்த ஜோடியும் அடிக்கடி இணையலாம்.( விஜய்-அனுஷ்கா)

11.விஜயை தாக்கி வரும் நகைச்சுவைகள் திசை மாறலாம்.

12.விஜய் மூலம் ஹிட்ஸ் தேடிய பல பதிவர்களின் பதிவுகள் ஹிட் ஆகாமல் போகலாம்.

13.நம் லோஷன் அண்ணா விஜய் ரசிகனாக மாறலாம்.(ஹி ஹி ஹி)

14.நான் இந்த பதிவு போடா காரணமாக இருந்த ஹிஷாம் அண்ணா வேட்டைக்காரன் சொதப்பினால் என போட்ட பதிவினைப்போல சுராவிற்கு போடாமல் தப்பிக்கலாம்.

15.மூக்குடைபட்ட பல பதிவர்கள் வைத்தியசாலியில் அனுமதிக்கப்படலாம்.

16.படத்தை புறக்கணிப்போம் என சொல்லிய சில தமிழ் பற்றாளர்கள்?????? இதை நீங்களே சொல்லுங்கள் அவர்கள் கதி என்னாகும்.

17.இதை விட கொடுமை ஒன்றும் நடக்கும் தொடர்ந்து இதே போன்ற படங்களில் விஜய் நடிக்கலாம்.


எதுவா இருப்பினும் இன்று மாலை கொழும்பில்(யாருக்காக புலம்ப்யர் தமிழர் புறக்கணிப்போம் என்றனரோ அதே நாட்டில்) சினி சிட்டியில் வேட்டைக்காரன் திரையிடப்பட இருக்கிறதாம். என்னால் இன்று முடியாது பார்ப்போம் நாளை. வேட்டைக்காரனின் வேட்டை ஆரம்பமாகப்போகின்றது.
Share:

Saturday, September 26, 2009

விஜய் நடித்திருக்க வேண்டிய திரைப்படம் முதல்வன்- ஷங்கர்.



அண்மையில் தான் இளைய தளபதியின் வேட்டைக்காரன் திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. பாடல்களும் பட்டையை கிளப்ப ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில் அந்த விழாவிற்கு வந்திருந்த பல பிரபலங்களும் விஜயையும் வேட்டைக்காரனையும் வாழ்த்திப் பேசியதுடன் சில பழைய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

விழாவிற்கு அழைக்கப்படிருந்த சிபிராஜ் சன் பிக்சர்சும் விஜயும் கைகோர்த்திருக்கின்றார்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் என வாழ்த்தினார். அடுத்து கருணாசும் மேடையில் அழைக்கப்பட்டு பேசும் வாய்ப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து வேட்டைக்காரி வந்தார் வந்தவர் கொஞ்சும் தமிழில் பேசியது பாராட்டுக்குரியது. பல தமிழ் நடிகைகளே தமிழில் பேச தள்ளாடும் நேரம் இந்த யோகா டீச்சர் தமிழில் பேசியது பாராட்டுக்குரியது.(விடுங்கப்பா நாலு வார்த்தை தமிழில் பேசினாங்க அதை தான் சொன்னேன்.) அதற்காகவே அவரின் தாராள மனதை சொல்லும் படம். இங்கே.


தொடர்ந்து வந்து பேசிய இயக்குனர் ஷங்கர் விஜய்க்கு வாழ்த்து சொல்லிவிட்டு, எந்திரன் படத்தை பற்றியும் பேசினார். அதை தொடர்ந்து நீண்டநாட்களாக இருந்து வந்த சந்தேகம் ஒன்றையும் போட்டு உடைத்தார். ஏற்கனவே தெரியும் முதல்வன் திரைப்படம் ரஜினிக்காக எழுதப்பட்ட கதை அந்த நேர அரசியல் சூழ்நிலை காரணமாக ரஜினி நடிக்காமல் போக அர்ஜூன் நடித்து படம் பெற்ற வெற்றி. ஆனால் ரஜினிக்கு அடுத்து தன்னுடைய தெரிவு விஜய் தான் என இதுவரை மெளனம் காத்து வந்த ஷங்கர் வெளிப்படையாக சொல்லிவிட்டார். முன்பொருமுறை இதை விஜய் சொல்லி எள்ளி நகையாடிய அத்தனைபேரின் மூஞ்சியிலும் கரி பூசப்பட்டு விட்டது. தொடர்ந்து பேசிய ஷங்கர் தானும் விஜயும் ஒரே பள்ளியில் இருந்து அதாவது எஸ்.ஏ.சியின் பள்ளியில் இருந்து வந்தவர்கள் ஏழு வருடம் அவரிடம் உதவி இயக்குனராய் இருந்து இருக்கின்றேன். விரைவில் விஜயை வைத்து படம் செய்யும் திட்டம் உண்டு என் குருநாதர் மகன் என்பது மட்டுமல்ல அவர் ஒரு திறமையான நடிகர் அவர் ஆட்டம் எந்த இடத்திலும் பிசிறு தட்டாது என சொல்ல அரங்கமே அதிர்ந்தது. தொடர்ந்து விஜயும் பல பிரமுகர்களும் இந்த நிகழ்வில் பேசினார். ஷங்கர் முதல்வன் பற்றி கூறிய உண்மை அடங்கிய வீடியோ இங்கே.


Share:

Thursday, August 20, 2009

சூர்யாவை பாராட்டிய இளைய தளபதி.


தமிழ் சினிமாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இருக்கும் இரண்டு படங்களும் தீபாவளிக்கு முட்டி மோத இருக்கும் நிலையில் அந்த திரைப்படத்திலே நடிக்கும் இரண்டு கதாநாயகர்களும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பாராட்டி தங்கள் நட்பை வெளிக்காட்டி உள்ளனர்.

தொடர் சறுக்கல்களில் இருந்தும் பல நல்ல மனம் கொண்ட பதிவர்களின் கிண்டல் கேலிகளிலிருந்தும் (எங்களை விட்டிடேனே என யாரும் கோபிக்க கூடாதேல்லா) தன்னை மீட்டெடுத்து தொடர்ந்து ரஜினிக்கு அடுத்து தான் தான் வசூல் சக்கரவர்த்தி என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய் நடிக்கும் வேட்டைக்காரன் மற்றும் தொடர் வெற்றிகளை தக்க வைக்க வேண்டுமென போராடும் சூர்யாவின் ஆதவன் படங்கள் தான் மோதப்போகின்றன. களை கட்டப்போகும் தீபாவளிக்கான அறிகுறிகள் இப்போதே ஆரம்பமாகிவிட்டன.
இந்த நிலையில் நேற்று மாலை சூர்யாவின் ஆதவன் திரைப்பட பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இளைய தளபதி விஜய், சூர்யா,விவக்,இயக்குனர் ஷங்கர்,தயாரிப்பாளர் ராமநாராயணன்,கெளதம் மேனன்,சசிக்குஆர் போன்ற பிரபலங்கள் பங்கு கொண்டனர்.

சூர்யாவின் நடிப்பு எப்படியோ அதேபோல விஜயின் நடனத்தைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். அப்படி இருக்கையில் சூர்யாவின் வாரணம் ஆயிரம் பாடல்களை பார்த்து விட்டு மாப்பு....song superடா என மெசேஜ் அனுப்பி இருக்கின்றார் விஜய், என்று பேசிய சூர்யா இங்கே ஆதவன் திரைப்பட பாடல் திரையில் ஓடும் போது அட விஜயும் பார்த்திட்டிருக்கின்றாரே என மனதுக்குள் ஒரு குறுகுறுப்பு இருந்தது என போட்டு உடைத்த சூர்யா, அவர் வருகைக்கு நன்றிகளை பகிர்ந்து கொண்டார்.

பதிலுக்கு சூர்யாவின் உழைப்பும் திறமையும் அவரின் ஒவ்வொரு படத்திலும் தெரிகின்றது. பிரமாண்டமாக வளரும் சூர்யாவிற்கு ஆதவனும் மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்க வேண்டுமென விஜயும் வாழ்த்திப்பேசினார். இரண்டுபேருமே ஆரம்பகாலம் முதல் நண்பர்கள் என்பதை தாண்டி தீபாவளிக்கு மோத இருக்கும் முன்னணிக் கதாநாயகர்கள் இருவர் மேடை ஒன்றில் ஒருவருக்கொருவர் பாராட்டிக்கொண்டதும். யாருக்கும் தெரியாமல் மெசேஜ் மூலமே விஜய் சூர்யாவை பாராட்டியதும் பாராட்டுக்குரியதே.

இந்த நேரத்தில் இன்னுமொரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. இப்படித்தான் தொடர் தோல்விகளால் சிதைந்து போய் விஜய் இருக்க விக்ரம் கலக்கிக்கொண்டிருந்தார். சாமி வெற்றி விழாவில் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொண்டனர். அதன் பின் வந்த திருமலை விஜயை எங்கே கொண்டு சென்றது என உங்களுக்கே தெரியும். இப்போதும் அதே நிலை இங்கே விக்ரமுக்கு பதில் சூர்யா. வேட்டைக்காரனும் அந்த ராசிப்படி வெற்றி பெறுமா?
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox