Sunday, March 7, 2010

கரண்டியால் சுரங்கம் தோண்டிய சாதனை கைதி.



நெதர்லாந்து நாட்டின் சிறையில் இருந்த பெண் கைதி, தேக்கரண்டி மூலம் சுரங்கம் தோண்டி தப்பித்து சென்று விட்டார்.நெதர்லாந்து நாட்டின் ப்ரீடா நகர சிறையில் 35 வயது பெண் கைதி, கொலை குற்றம் தொடர்பாக அடைக்கப்பட்டிருந்தார்.நீண்ட காலமாக இவர் சிறையில் இருந்ததாலும், சிறை அதிகாரிகளின் நன்மதிப்பை பெற்றதாலும், சிறைக்குள் சுதந்திரமாக உலாவி வந்தார்.கடந்த 20ம் தேதி முதல் இந்த பெண் கைதியை காணவில்லை. சிறைக்கு வெளியே ஊழியர்கள் சிலர் பள்ளம் தோண்டிய போது சுரங்கம் காணப்பட்டது. அந்த சுரங்கம் சிறையின் சமையலறை வரை சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சுரங்கத்துக்குள் தேக்கரண்டியும், முள்கரண்டியும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. "இவைகளை வைத்து தான் அந்த பெண் கைதி தப்பித்திருக்கிறார்'என, சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அந்த பெண் கைதியை தேடும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

இந்த செய்தியை இன்று தினமலரில் படித்தேன். கரண்டியை வைத்து இப்படியும் தப்பலாமா? தோண்டும் போது எங்கே செல்லும் இந்த பாதை என பாடி இருப்பாரோ?

Share:

4 கருத்துரைகள்:

Subankan said...

ம்.., சிறுதுரும்பும் பல்குத்த உதவும் என்பது இதைத்தானா?

Unknown said...

எங்க நாட்டில ஜெயில் இருந்தது தப்பிறது ரொம்ம்ப ஈஸி .அரசியல்வாதியா இருந்தா போதும் (ஆளும் கட்சி )

அ.ஜீவதர்ஷன் said...

தப்பிச்சவவ விடுங்க, கரண்டி எங்க செய்ததென்று விசாரியுங்க , அதுதான் சமையல் கட்டுக்கு அவசியம்.

Bavan said...

ஆஹா... வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்கிறது இதுதானாஆஆஆ??

சிலவேளை அவர் சைஸ்சீரோ எக்சசைல் பண்ணின கைதியா இதுப்பாவோ..:p

நன்றி அண்ணே பகிர்வுக்கு..:)

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive