Friday, February 5, 2010

தியேட்டருக்கு வருகின்றது கிரிக்கெட்.



ஆயிரம் சினிமா தியேட்டர்களில் ஐ.பி.எல் போட்டிகளை காட்ட ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. மைதானத்தில் இருந்து போட்டியை காணும் பரவசத்தை தரும் வகையில் Digital வசதி செய்து கொடுக்கப்படவுள்ளது. வரும் மார்ச் 12 முதல் ஏப்ரல் 25 வரை நடைபெறும் அத்தனை போட்டிகளும் இனி திரை அரங்குகளில் அமர்க்களம் பண்ண காத்திருக்கின்றன.

இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இறுதிப்போட்டி உட்பட ஒரு சில போட்டிகளை 3d மூலம் காட்டும் திட்டமும் உண்டாம். (சினிமாகாரர் கவனிக்க.) வீட்டில் பார்த்தால் ஆயிரம் தொல்லை என நினைப்பவர்களுக்கு இந்த வரப்பிரசாதம் கிடைத்துள்ளது. இடைநடுவே விளம்பரம் என்ற கழுத்தறுப்புகள் இல்லை. சூடேற்ற பெண்களின் ஆட்டமும் இடம்பெறுமாம்.(கண்டிப்பாய் கூட்டம் கூடும். நம் பதிவர்களில் சுடும் பதிவரும், கடல் ஏறுபரும், நமீதாவுடன் சம்பந்தப்பட்டவரும், அண்மையில் விடைபெற்றவரும் இன்னும் சில நல உள்ளங்களும் இப்போதே தயாராவதாக கேள்வி.)

இந்த காலகட்டத்தில் பெருமளவான படங்கள் வெளிவராது என்றாலும் ஏப்ரல் 14 அன்று சில முக்கிய படங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வீட்டில் பெண்கள் மெகாத்தொடர் பார்க்க பெரியவர்களும் ஆண்களும் தியேட்டரில் பார்க்க என்னையும், யோ வாயிஸ்,சுபாங்கன் போன்ற பச்சிளம் பாலகர்கள் எங்கே சென்று பார்ப்பது சொல்லுங்கள். அடடா இப்பதான் தூக்கத்தில் இருந்து எழும்பினேன் இது இந்தியாவில் தான் இலங்கையில் இல்லை என்ன.?
Share:

3 கருத்துரைகள்:

மதுரை சரவணன் said...

nalla visayam varaveppom. theyattarkal ini vaalattum/

Nimalesh said...

ippa vara padam seriya oduvathilai athanal ippadi oru vali..... hmmmm

யோ வொய்ஸ் (யோகா) said...

எப்படியோ நம்மள பச்சிளம் பாலகன் என ஒத்துக் கொண்டால் போதும்

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive