உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label தென் ஆபிரிக்கா. Show all posts
Showing posts with label தென் ஆபிரிக்கா. Show all posts

Sunday, October 4, 2009

மினி உலககிண்ணம்- மூக்குடைபட்ட கதை.





ஐ.சி.சி. சாம்பியன் கிண்ண இறுதிப்போட்டி நாளை இடம்பெற இருக்கும் நிலையில் பல பதிவர்கள் (நானுட்பட) விமர்சகர்கள் என எல்லோர் முகத்திலும் கரி பூசிவிட்டு இரண்டு அணிகள் இறுதிக்கு வந்துள்ளன. எதிர்பார்க்கப்பட்ட இந்தியா,தென் ஆபிரிக்கா, இலங்கை அணிகள் இழிவான தோல்விகளோடு வெளியேறிவிட்டன. எதிர்பார்க்காத இங்கிலாந்து .நியூசிலாந்து அணிகள் தாண்டவமாடி நிற்கின்றன. நாளை விடை கிடைக்கப்போகும் கேள்விக்கு இவ்வளவு நாளும் கிடைத்த பதில்களுடன் ஒரு முழு அலசலாக இந்த பதிவு.

முதலாவது போட்டியே எனக்கு மூக்குடைவான போட்டி. காரணம் போட்டிகளை நடத்தும் நாடு மட்டுமல்ல உலகின் முதல்தர அணி ஒன்று இலங்கையை பந்தாடும் என பார்த்தால் இலங்கை அவர்களை பந்தாடி விட்டனர். நாணய சுழற்ச்சியில் வென்ற தென் ஆபிரிக்க தலைவர் சிமித் ஏன்தான் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தாரோ தெரியவில்லை. ஜெயசூரிய ஏமாற்றினாலும் மறுமுனையில் டில்ஷான் இந்த தொடரின் முதலாவது சத்தத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து சங்ககாரவும் தன பங்குக்கு அரைசதம் ஒன்றை பூர்த்தி செய்ய மகேலவும் இழந்த பார்மை மீட்டெடுத்தார். இந்நிலையில் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 319 ஓட்டங்களை குவிக்க தென் ஆபிரிக்கவிற்கு இது எல்லாம் சின்ன விடயம் எனத்தான் நானும் நினைத்தேன். ஆனால் சிமித்தையும் களிசையும் தவிர வேறு யாரும் கைகொடுக்காமல் போக மழையும் வில்லனாக டக்வேர்த் லூயிஸ் முறைப்படி இலங்கை 55 ஓட்டங்களால் முதல் வெற்றியை பதிந்தது.



அடுத்த போட்டி பாகிஸ்தான்- மேற்கிந்திய தீவுகளுக்கிடையில். மேற்கிந்திய தீவுகள் நாணய சுழற்ச்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடினர். மில்லேரை தவிர வேறு எவரும் பிரகாசிக்காமல் போக 133 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தனர். பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் ஒன்று சேர்ந்து மிரட்டினர். ஆனால் பாகிஸ்தான் துடுப்பெடுத்தடியபோதுதான் மேற்கிந்திய தீவின் பலமும் தெரிந்தது. ஆரம்ப விக்கெட்டுக்கள் தொங்கினால் அடுத்தடுத்து சரிக்கப்பட ஒருவாறு சமாளித்து போட்டியில் வென்று முடித்தது பாகிஸ்தான் 5 விக்கெட்டுகளினால். இந்த போட்டி ஒருவாறு என் கணிப்பை காப்பாற்றியது.


முதல் போட்டியில் தோல்வி அடைந்த தென் ஆபிரிக்க வெல்ல வேண்டிய கட்டாயத்துடனும் நியூசிலாந்து தொடரை சிறப்பாக தொடங்கும் எதிர்பார்ப்புடனும் களம் கண்டன. மறுபடி நாணய சுழற்ச்சியில் வென்று களத்தடுப்பை தெரிந்தார் சிமித். அப்போது ஏண்டா இந்த மனிதன் தோல்வியை பார்த்ததும் இப்படி செய்கின்றார் என நினைத்தேன்.ஆனால் ஆரம்பத்திலேயே ரைடரை அனுப்பி நல்ல ஆரம்பம் கண்டது தென் ஆபிரிக்கா.ஆனால் டெய்லர்,மக்கலம்,எலியட் கைகொடுக்க 214 என்னும் ஓரளவு நல்ல நிலைக்கு வந்தனர். பந்துவீச்சில் பார்னெல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென் ஆபிரிக்கவிற்கு சிமித்தின் ஆட்டமிழப்பு அதிர்ச்சியைக் கொடுத்தது.ஆனால் தொடர்ந்து வந்த ஆம்லா,கலிஸ், வில்லிஎர்ஸ் பொறுப்புடன் ஆட முதல் வெற்றியை சுவைத்தது தென் ஆபிரிக்கா.நியூசிலாந்தின் பந்து வீச்சாளர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. 5 விக்கெட்டுகளால் தென் ஆபிரிக்கா வென்று என்னையும் காப்பாற்றியது.

மறுபுறம் வெற்றியுடன் இலங்கையும் முதல் போட்டிக்காக இங்கிலாந்தும் களமிறங்கின. இலங்கை இலகுவாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட போட்டியில் நாணய சுழற்ச்சியில் வென்று இங்கிலாந்து இலங்கையை துடுப்பெடுத்தாட பணித்தது. அந்த நம்பிக்கை வீண் போகவில்லை 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்த இலங்கையை வழக்கம் போல கண்டம்பியும் மதியூசும் மீட்டெடுத்தனர்.ஒருவாறு 212 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது இலங்கை.அன்டேர்சன், ஒனியன்,புரோட் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டனர்.


பதிலுக்கு குலசெகரவும் இங்கிலாந்தை மிரட்ட முதல் இரு விக்கெட்டுகளும் 19 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டாலும் ஷா மாறும் கோலிங்வூட் ஜோடி சிறப்பான இணையை வழங்கி வெற்றியை நோக்கி கொண்டு சென்றது. இறுதி நேரத்தில் மோர்கன் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களை பெற்று வெற்றியை உறுதி செய்து இங்கிலாந்தில் எழுச்சிக்கு அச்சாரம் ஆறு விக்கெட்டுகளால் வென்ற இங்கிலாந்து என் கணிப்பில் மண்ணை போட்டது.

அடுத்து அவுஸ்திரேலியா மேற்கிந்திய தீவுகளுடன் சமரை நடத்தியது. நாணய சுழற்சியில் வெல்பவர்கள் எல்லாம் களத்தடுப்பை தெரிவு செய்வது போல மேற்கிந்தியாவும் தெரிந்தது. முதல் பந்திலேயே வாட்சனை ஆட்டமிழக்க வைத்து அசைத்து பார்த்தனர். ஆனால் அடுத்து வந்த பாண்டிங் நங்கூரமிட்டு ஆட தொடங்கினார். இறுதி நேரத்தில் ஜோன்சனும் கலக்க எட்டு விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களை குவித்தது அவுஸ்திரேலியா.


ஆனால் மேற்கிந்திய இப்படி ஆடும் என பாண்டிங் நினைத்திருக்க மாட்டார். மிக சிறப்பாக ஆடி வெற்றியை நோக்கி பிலேட்சரும் டோவ்ளினும் அழைத்தது சென்றனர். போராடிய இவர்களுக்கு உறுதுணையாக வேறு யாரும் கைகொடுக்காமல் போக இறுதி வீரரும் களம் வராமல் விட பரிதாபமாக தோல்வி அடைந்தது. இந்த போட்டியும் என் கணிப்பை உறுதி செய்தது.

இந்த தொடரின் மிகப்பெரிய சமர் என எதிர்பார்க்கப்பட்ட போட்டி. தட்டு தடுமாறி மேற்கிந்தியாவை வென்று வந்த பாகிஸ்தானும் பலமான அணியாக வர்ணிக்கப்பட்ட இந்தியாவும் மோதின.நாணய சுழற்ச்சியில் வென்ற பாகிஸ்தானை பல முன்னணி வீரர்கள் இல்லாமல் சந்தித்தது இந்தியா.ஆரம்பத்தில் ஓரளவு சிறப்பாக பந்து வீசிய பந்து வீச்சாளர்களை மாலிக்கும் முஹம்மத் யூசுப்பும் சேர்ந்து காச்சி எடுத்தனர். மாலிக் சதம் கண்டாலும் தொடர்ந்து வந்த எவரும் பிரகாசிக்கவில்லை. ஒருவாறு 302 ஊடங்களை பாகிஸ்தான் குவிக்க துடுப்பாட்ட சூரர்கள் இதை அடிப்பார் என பார்த்தால் ஓட்டு மொத்த சொதப்பலின் மூலம் பாகிஸ்தானிடம் தாரை வார்த்தனர் போட்டியை. இதை பற்றிய என் முன்னைய பதிவு. http://sshathiesh.blogspot.com/2009/09/blog-post_7660.htmlஎன் கணிப்பு மறுபடி பொய்த்தது.

தீர்மானம் மிக்க போட்டியாக இலங்கை நியூசிலாந்து அணிகள் மோதின. நாணய சுழற்ச்சியில் வென்ற சங்கா முதலில் துடுப்பெடுத்தாட நியூசிலாந்தை அழைத்தார். ஆரம்பம் முதலே அதிரடிக்கு இறங்கியவர்கள் இலங்கை பந்துவீச்சாளர்களை அடித்து துவைத்தனர். முரளி இல்லாமல் ஆட வந்த சங்காவிர்க்கு மூஞ்சியில் அடித்து வெறுப்பேற்றினார். பாரிய ஓட்ட எண்ணிக்கையை தென் ஆபிரிக்காவிற்கு எதிராக துரத்தியவர்கள் தானே என்ற எதிர்பார்ப்பை டில்ஷான் ஏற்ப்படுத்திக்கொடுக்க மகேள அதை தொடர்ந்தார். ஆனால் இம்முறை கண்டம்பியும் மதியூசும் ஏமாற்ற இலங்கை தோல்விகண்டது. இங்கும் என் கணிப்பு என்னை ஏமாறியது.

தென் ஆபிரிக்கா வென்றாக வேண்டிய நிலையில் இங்கிலாந்தை சந்தித்தது. நாணய சுழற்ச்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்தை ஷா,கோலிங் வூட், மோர்கன் ஆகியோர் தாங்கிப்பிடித்து இமாலய இலக்கை நோக்கி கொண்டு சென்றனர். 323 என்ற இமாலய இலக்கை துரத்திய தென் ஆபிரிக்காவில் மாலுமி சிமித் மட்டுமே போராடினார். இறுதியில் அவரும் ஆடிப்போக 22 ஓட்டங்களால் வென்றது இங்கிலாந்து. மறுபடி நான் ஏமாந்தேன்.

வழக்கமாக தென் ஆபிரிக்காவை தொடரும் துரதிஷ்டம் இம்முறை இந்தியாவை துரத்தியது. அவுஸ்திரேலியாவை கட்டாயம் வெல்ல வேண்டிய போட்டியை மழை வென்று இந்தியாவை வீட்டுக்கு அனுப்பியது. யார் சிறந்தவர் என்பதை இறுதிவரை நிரூபிக்க முடியாமல் போய்விட்டது.

இந்த போட்டியில் இங்கிலாந்து வென்றால் தான் இலங்கை உள்ளே என இலங்கை காத்திருக்க பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய போட்டியாக இது அமைந்தது. 146 ஓட்டங்களுக்குள் சுருள. நியூசிலாந்து அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் உதவியுடன் ஆறு விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்று இலங்கையை அனுப்பி வைத்தது.

இம்முறை இந்தியா பாகிஸ்தானிடம் பிச்சை கேட்டு நின்றது. இதுவரை நடந்த போட்டிகளில் சுவாரஷ்யமான போட்டி என்றால் அது இந்த போட்டிதான்.அவுஸ்திரேலியா களத்தடுப்பை தெரிவு செய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இது என்ன பெரிய இலக்கு என்பது போலதான் ஆரம்பித்தனர் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள்.போக போக இந்தியாவிற்காக விளையாடுவது போல பாகிஸ்தான் விளையாடியது. விக்கெட்டுகளை மள மளவென சரித்து இறுதிப்பந்தில் வெற்றியை கோட்டை விட்டு இந்தியாவிற்கு சாரி சொன்னனர்.

உப்புசப்பு அற்ற போட்டியாக நடந்த இந்திய மேற்கிந்திய தீவுகளுக்கேதிரான போட்டியில் தோணி முதலில் பந்து வீசியது. சச்சினின் உணவு கோளாறு தவிர வேறு எந்த பர பரப்பும் இல்லாமல் சுருட்டி அடித்தத் இந்தியா. இத்துடன் லீக் சுற்றும் முடிவடைந்தது.

இதன் படி முதலாவது அரை இறுதியில் அவுஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள் மோதின.முதலில் இங்கிலாந்து 257 ஓட்டங்களை பெற்றதும் அவுஸ்திரேலியா அவ்வளவுதான் என நினைத்தேன். ஆனான் என்ன ஒரு அழகான ஆட்டம் போண்டிங்க்கும் வாட்சனும் சதம் பெற்றதுடன் முடித்தும் வைத்தனர் இங்கிலாந்தின் பயணத்தை.ஒரு விக்கெட்டை மாத்திரம் பறிகொடுத்து இமாலய வெற்றியுடன் இறுதிக்குள் நுழைந்தது. முழுதான பலமாக தன்னை காட்டிவிட்டது பாண்டிங் குழு.


மறுமுனையில் பாகிஸ்தான் நியூசிலாந்துடன் பலப்பரீட்சையில் ஈடுபட்டது. ஆரம்பத்தில் தடுமாறிய பாகிஸ்தான் ஒருவாறு 233 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்கு ஆடிய நியூசிலாந்து ஆரம்பத்தில் வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்தபோது.எலியட்டும் வெட்டோரியும் அற்புதமாக ஆடி வெற்றியை உறுதி செய்தனர். கிண்ணம் வெல்லும் என நான் நினைத்த பாகிஸ்தானும் பரிதாபமாக் வெளியேறியது.

நாளை இறுதி. ஏற்கனவே கிண்ணம் வென்ற ஓர் கண்டத்தை சேர்ந்த இரு அணிகள். அசுர பலம் அவுஸ்திரேலியாவும் திடீர் பலம் கொண்ட நியூசிலாந்தும் மோத போகின்றன. என் உள்மனது ஏனோ பாண்டிங் கையில் பூமாலை என்றாலும் ஆசை அது வேட்டோரிக்கு கிடைக்கனுமேன்றே. எப்போதும் பெரிய கிண்ணங்களை தவறவிடும் நியூசிலாந்து மினி உலக கிண்ணத்தில் ஏற்க்கனவே சாதித்தது போல் சாதிக்குமா நாளை தெரியும்?

மொத்தத்தில் பல அதிர்ச்சிகளையும் தலை கீழ் முடிவுகளையும் பல தலைகளையும் உருட்டிய இந்த தொடர் முடிந்த பின் நிச்சயம் ஆடுகளங்கள் பற்றிய சர்ச்சை எழும் என்பதில் மட்டும் ஐயமில்லை.
Share:

Saturday, June 6, 2009

யார்கையில் T20 உலகக்கிண்ணம்?- ஒரு அலசல்.

கடந்த T20 உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் Johinder Sharma வின் பந்து வீச்சில் ஸ்ரீசாந்த் பிடி எடுத்து தோனியின் கையில் உலகக்கிண்ணத்தை கொடுத்த காட்சியே இன்னும் கண்ணை விட்டு அகலாத நிலையில் அடுத்த இருபதுக்கு இருபது உலகக்கின்னமும் ஆரம்பமாகிவிட்டது.

ஆரம்ப நிகழ்வுகளை சிறப்பாக நடத்திய இங்கிலாந்தினால் ஆரம்பப்போட்டியிலேயே சாதிக்கமுடியாமல் போய்விட்டது துரதிஸ்டமே. எதிர்பாராத திருப்பங்களோடு ஆரம்பமாகி இருக்கும் உலகக்கிண்ணம் இன்னும் எத்தனை அதிர்வலைகளை தரப்போகின்றது என இந்த பதிவில் பார்ப்போம்.

பயிற்சிப்போட்டிகளில் சோதனை கொடுத்த, சொதப்பிய அணிகளை பார்த்துவிட்டு அவை என்னவெல்லாம் செய்யப்போகின்றன என பார்க்கலாம்.

நெதர்லாந்து.

தன்னுடைய பயிற்சிப்போட்டி ஒன்றில் சூப்பர் ஓவர் முறையில் அயர்லாந்திடம் தோல்விமுகத்துடன் ஆரம்பித்தாலும் துடுப்பாட்டம் பந்து வீச்சு என அணியின் பல வீரர்கள் சிறப்பாக ஆடி இருக்கின்றார்கள். இந்த நம்பிக்கையோடு ஸ்கொட்லாந்து அணியை சந்தித்தவர்கள் Edgar Schiferli மற்றும் Pieter Seelaar ஆகியோரின் சிறந்த பந்து வீச்சு ஆகியோரின் துடுப்பாட்ட உதவியுடன் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றனர். இந்த உத்வேகம் தந்த வீரமோ என்னவோ T20 உலகக்கிண்ண முதலாவதுபோட்டியில் இம்முறை கிண்ணத்தை வெல்லும் என பரவலாக எதிர்வுகூறப்படும் அணிகளில் ஒன்றான இங்கிலாந்தை மண்கவ்வ செய்துவிட்டது.

பந்துவீச்சாளர்கள் பெரிதாக பிரகாசிக்காவிட்டலும் துடுப்பாட்டத்தில் பொதுவாக அனைவரும் கைகொடுக்க கனவாக இருக்கும் என நினைத்த ஒன்றை நனவாக்கி நிற்கின்றார்கள் இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு நுழைவதற்கான வாய்ப்பு இப்போது அவர்களுக்கு அதிகமாக இருக்கின்றது.

அயர்லாந்து.

நெதர்லாந்துடனான முதல் போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் வெற்றி பற்ற அணி, மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியில் ஒன்பது விக்கெட்டுகளால் படு தோல்வியை சந்தித்த நிலையில் இந்த உலகக்கிண்ண போட்டியில் காலடி வைத்திருக்கின்றது. பந்து வீச்சில் பலமிழந்து காணப்படுகின்றது. இருப்பினும் கடந்த உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தானை தோற்கடித்து திருப்பத்தை ஏற்ப்படுத்திய அணி இது என்பது இம்முறை இந்த அணியிலும் மற்றவர்கள் ஒரு கண் வைக்க காரணமாக இருக்கின்றது.

ஸ்கொட்லாந்து.

இங்கிலாந்துடனான போட்டியோடு தோல்வி அடைந்த நிலையில் இந்த தொடரை சந்திக்கப்போகும் அணி பந்துவீச்சில் யாருமே கைகொடுக்கவில்லை என்ற ஆதங்கம் மட்டுமில்லாமல் மத்திய மற்றும் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் நிலையான ஆட்டம் இல்லாமல் தவிக்கின்றது. நெதர்லாந்துடனான போட்டியில் ஏழு விக்கெட்டால் தோல்வி அடைந்தது அணி இம்முறை எந்த மாற்றத்தையும் தரப்போவதில்லை என்பதை சொல்கின்றது.

பங்களாதேஷ்.

சிறந்த அணி, திறமையான இளம் வீரர்கள் இருக்கின்றார்கள்.அவுஸ்ரேலியா அணியுடன் சொற்ப ஊடங்கள் வித்தியாசத்திலே தோற்றாலும் இலங்கையுடனான பயிற்சிப்போட்டியில் வெற்றியின் விளிம்புவரை வந்து கோட்டை விட்டது. ஆனால் அன்று ஆடிய ஆட்டத்தை பார்க்கும் பொது நிச்சயம் இம்முறை ஒரு மாற்றத்தை இவ்வணி ஏற்ப்படுத்தப்போகின்றது. காரணம் அது இடம்பெறும் பிரிவில் இருந்து இம்முறை அடுத்த சுற்றுக்கு போகும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கின்றது எனவே இம்முறை ஒரு சில அணிகளை பங்களாதேஷ் நிச்சயமாக ஆட்டம் காண வைக்கும் கொஞ்சம் பொறுத்து இருந்து பாருங்கள்.

மேற்கிந்திய தீவுகள்.

கிரிஸ் கையில் என்னும் தனி மனித ரன் குவிக்கும் இயந்திரம் இருக்கும் வரை கவலை இல்லை. எந்த போட்டியையும் மாற்றும் சக்தி இவருக்கு உண்டு இவருடன் சர்வான், சந்தர்போல்,ராம்டின், பிராவோ என மற்றவர்களும் அசத்தினால் இம்முறை கிண்ணத்தோடு திரும்பக்கூடிய அணிகளில் இதுவும் ஒன்று. ஆனால், கிரிஸ் கையில் இல்லாமல் ஆடி இங்கிலாந்திடம் தோற்றது சற்று பின்னடைவே. இருப்பினும் இவர்கள் இடம்பெறும் சி பிரிவில் பலம் வாய்ந்த அவுஸ்ரேலியா, இலங்கை அணிகள் இவ்வணியின் வெற்றியை தடுத்து நிறுத்த வாய்ப்புண்டு.

பாகிஸ்தான்.
கடந்த இறுதிப்போட்டி வரை வந்த அணியா இது என கேட்கவைக்கின்றது. ஆனால் அதன் பலமே அதுதான் எப்போதும் தடுமாறிக்கொண்டிருக்கும் அணி, திடீரென வீறு கொண்டு எழுது கிண்ணத்தோடு சென்றுவிடும். எப்போது எப்படி ஆடும் என கணிக்கவே முடியாது. தென் ஆபிரிக்காவுடன் தோல்வி மட்டுமன்றி இந்தியாவிடம் மரண அடி வாங்கி இருக்கும் அணி நிமிர்ந்து எழுமா என்பதே இப்போதைய கேள்வி. பொதுவாக அணியிலுள்ள எல்லோருமே சொதப்புகின்றனர். பந்து வீச்சையே தெரியாதவர்கள் போலாகிவிட்டனர். பிழைகளை திருத்தி இறங்கினால் கிண்ணம் கிடைத்தாலும் ஆச்சரியம் இல்லை.

இங்கிலாந்து.
ஸ்கொட்லாந்தை ஆறு விக்கெட்டுகளால் வென்றதோடு மேற்கிந்திய தீவுகள் அணியை ஒன்பது விக்கெட்டுகளால் தோற்கடித்து அசுர பலத்தோடு முதல் போட்டியை ஆடியவர்கள் அடங்கிப்போய் நிற்கிறார்கள். தங்கள் நாட்டில் நடக்கும் போட்டிகள் என்னும் பலம் என பலர் எதிர்வு கூறியும் இப்போது இந்த அணியின் எதிர்பார்ப்பு கேள்விக்குறியாகிவிட்டது. லுக் ரைட், ரவி போபரா,பீடேர்சன் என துடுப்பாட்ட வீரர்கள் இருக்க கடந்தமுறை யுவராஜிடம் ஆறு சிக்ஸ்செர்கள் வாங்கிய Stuard Broad இம்முறையும் களம் கண்டிருக்கிறார். Flintof இல்லாதது பெரிய பலவீனமே. அத்துடன் பாகிஸ்தானுடனான போட்டியில் தோற்றால் அடுத்த சுற்றுக்கே முன்னேற முடியாமல் போய்விடும்.

அவுஸ்ரேலியா.
பங்களாதேசிடம் கொஞ்சம் தடுமாறினாலும் நியூசிலாந்துக்கு இடியை கொடுத்து இப்போது பலம் பொருந்திய அணி இம்முறை கிண்ணத்தை வெல்லக்கூடிய முதல் மூன்று அணிகளில் ஒன்றாக இருக்கின்றார்கள். பொண்டிங்கின் தலைமையில் இம்முறை பலமான நட்சத்திரங்கள் பல ஆடப்போகின்றன. முக்கியமான போட்டிகளில் அசத்தலாக ஆடி கிண்ணத்தை கைப்பற்றுவது இவர்கள் பிறவிக்குணம். இம்முறையும் நிச்சயம் கிண்ணத்தோடு போகும் வாய்ப்பு இவர்களுக்கு இருக்கின்றது.

இலங்கை.
மற்றொரு கணிக்க முடியாத அணி. ஆனால் நிச்சயமான அணி. பங்களாதேஷின் விஸ்வரூபத்தில் தப்பி பிழைத்து வென்று வந்த அணி தென் ஆபிரிக்காவிடம் ஆறு விக்கெட்டால் தோல்வி அடைந்து பரிதாபமாக நிற்கின்றது. புதிய தலைவரான சங்கக்காராவை பல பதிவர்களும் இணையதளங்களும் சரியான தேர்வு என சொன்னாலும் என்னுடைய தனிப்பட்ட கருத்து சங்ககாரவிற்கு தலைமை பொறுப்பை விட சாதாரண வீரராக ஆடுவதே சரி. இருந்தாலும் இம்முறை முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு வந்தால் வாய்ப்புள்ள அணிகளில் இதுவும் ஒன்று. ஆனால் முதல் சுற்றிலேயே பெரிய சவால் காத்திருக்கின்றது.

நியூசிலாந்து.
பலமான அணி, ஆனால் எப்போது சுருள்வார்கள் எப்போது வீறு கொண்டு எழுவார்கள் என தெரியாது. இம்முறை, சாம்பியன்கள் இந்தியாவை ஒன்பது ஓட்டங்களால் கலங்கடித்துவிட்டு நிற்கின்றது. மக்கலம் மற்றும் ரோஸ் டெயிலர் துடுப்பில் பலம் சேர்க்க வெட்டோரி பந்து வீச்சில் கலக்குவார். ஆனால் அவுஸ்ரேலியாவிடம் படு தோல்வியை சந்தித்து இருக்கும் இவர்கள் ஒன்றிணைந்து எழுந்தால் இம்முறை அரை இறுதிக்கு தெரிவாகும் அணிகளில் இதுவும் ஒன்று என்பது என் கணிப்பு. நிச்சயமாக அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் இவர்கள் என்னென்ன செய்யபோகின்றார்கள் என்பது போகப்போகத்தான் தெரியும். ஆனால் முதல் சுற்றில் இலங்கை, மேற்கிந்திய தீவுகளை வென்றால் தான் இதெல்லாமே.

தென் ஆபிரிக்கா.
பாகிஸ்தானிடம் வெற்றி, இலங்கையிடம் இமாலய வெற்றி இந்த பயணம் நன்றாகவே தொடங்கி இருக்கிறது. அடுத்த சுற்றுக்கு கட்டாயம் தெரிவாகும் அதேபோல் கிண்ணத்தை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ள அணிகளில் இதுவும் ஒன்று. இம்முறை அரை இறுதிவரை வாய்ப்புள்ள அணி. கலிஸ், சிமித்,கிப்ஸ், வில்லிஎர்ஸ் என அத்தனை பேரையும் சொல்லலாம்.

இந்தியா.
நடப்பு சாம்பியன்கள் இம்முறை கிண்ணம் இவர்களுக்குத்தான் என அத்தனைபேரும் சொல்கிறார்கள். தோனியின் தலைத்துவம் யுவராஜ், ரைனா, ரோஹித் ஷர்மா, யுஸுப் பதான் இவர்களோடு சேவாக் கம்பீரின் அதிரடி தொடக்கம் ஆர்.பி.சிங், இஷாந்த் ஷர்மா, சகீர் கான், ஹர்பஜன் சிங் ஆகியோர் இம்முறையும் தோனியின் கையில் கிண்ணத்தை பெற்றுக்கொடுக்க காத்திருக்கின்றது. மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது அசுர பலம் கொண்ட ஒரு பெரும் படையாக இன்று தோனியின் இளம்படை இம்முறை தொடரை எதிர்கொண்டிருக்கின்றது. அத்துடன் இம்முறை முதல் நிலை அணியாகாக களம் கண்டிருக்கின்றது.

இவைதான் இம்முறை அணிகள் பற்றி பார்வை. அத்துடன் குழு ஏ இலிருந்து இந்தியா, பங்களாதேஷ் அணிகளோடு குழு பி இலிருந்து நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு வாய்ப்பு இருக்கின்றது. இருப்பினும் இங்கிலாந்து உள்ளே வரவும் வாய்ப்புண்டு. ஆனால் பாகிஸ்தான் இலகுவில் இங்கிலாந்திடம் மண்டி இடாது எனவே வாய்ப்பு குறைவே. சி பிரிவில் யார் வருவார் என சொல்ல முடியாது அவுஸ்ரேலியா, இலங்கை அணிகளுக்கு வாய்ப்பு அதிகம் உண்டு இருப்பினும் இலங்கைக்கு பதில் மேற்கிந்திய தீவுகள் நுழைய வாய்ப்புண்டு. டி பிரிவில் நியூசிலாந்து மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது.


இவை எல்லாம் கடந்தபின் அரை இறுதியில் விளையாட வாய்ப்புள்ள அணிகள் இந்தியா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான், இலங்கை, தென் ஆபிரிக்காவிற்கு வாய்ப்புண்டு. (இதில் இலங்கைக்கு பதில் மேற்கிந்திய தீவுகளும் பாகிஸ்தானுக்கு பதில் இங்கிலாந்தும் இடம்பிடித்தாலும் ஆச்சரியமில்லை.) இதிலே அரை இறுதியில் இந்தியாவுடன் இலங்கை அல்லது பாகிஸ்தான் அல்லது இங்கிலாந்து அல்லது மேற்கிந்திய தீவுகள் அணியில் ஏதாவது ஒன்று மோத வாய்ப்புண்டு.

அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் இந்தியாவிற்கே வெற்றிக்கான வாய்ப்பு உண்டு. மறுபக்கம் தென் ஆபிரிக்கவுடன் அவுஸ்ரேலியா அல்லது நியூசிலாந்து அணியில் ஒன்று விளையாட வாய்ப்புண்டு. இதனடிப்படையில் இறுதிப்போட்டியில் என்னுடைய கணிப்பின் படி இந்தியா-தென் ஆபிரிக்க அணிகள் மோதவே அதிக வாய்ப்பிருக்கின்றது. ஆனால் கிரிக்கெட்டில் அதுவும் இருபதுக்கு இருபது கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம். ஆனால் இந்திய வீரர்களில் ஒருவர் தொடர் ஆட்டநாயகனாக வர வாய்ப்புண்டு. எல்லாவற்றுக்கும் இன்னும் சில நாட்கள் பொறுத்திருப்போம். கிண்ணம் இந்தியா வசம் வந்தால் கொஞ்சம் என்னையும் நினைத்து பாருங்கள்.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox