Friday, February 5, 2010

சிம்பு மீண்டும் வம்பு- "கோ"விலிருந்து GO




அயன் படத்தை தொடர்ந்து கே.வி ஆனந்த இந்த கோ என்ற படத்தை ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார் அவர் Go சொன்ன ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. முதலில் பருத்தி வீரன் ஆயிரத்தில் ஒருவன் கார்த்தி, கதையில் தனக்கேற்ப மாற்ற சொல்ல கே.வி மறுத்து விட்டார். அழைத்தார் சிம்புவை வம்பெல்லாவற்றையும் தூக்கிப்போட்டு விட்டு வந்து நல்ல பிள்ளையாக நின்றார். கதையே சொல்ல தேவை இல்லை. நடித்துக்கொடுத்து விட்டு போகின்றேன் என்றவர் பின்னர் தன பிறந்தநாள் அன்று தனக்கும் கே.விக்கும் இடையில் ஒத்துவரவில்லை எனவே பிரிந்து விடுவோம் என அறிவித்து விட்டார். இதன் உள் குத்து வெளிக்குத்துகளை விரைவில் எதிர்பார்க்கலாம்.

இப்போதான் ஏதோ வம்பெல்லாம் விட்டு அழகான பையனாக விண்ணை தாண்டிவர அழைத்த சிம்பு மீண்டும் தன் பெயரை காப்பாற்றி விட்டார்.(அதுதாங்க வம்பு பண்றது.) லிட்டில் சூப்பர் ஸ்டாரில் இருந்து யங் சூப்பர் ஸ்டார் ஆனவர் மேச்சுருட்டி வந்தது போல பேட்டியும் கொடுத்தார். அட சிம்பு திருந்தி விட்டார். இனி நல்ல படங்களை எதிர்பார்க்கலாம் என்றால் மீண்டும் இப்படி ஒரு செய்தி.

அடுத்து என்னதான் நடக்கும்? யார்தான் ஹீரோ? என விசாரித்ததில். அண்மையில் பெரிய வெற்றிப்படம் எதையும் கொடுக்காத ஜீவாவை கே.வி ஆனந்த் அணுகியதாக சொல்லப்படுகின்றது. சிங்கம் புலி,கச்சேரி ஆரம்பம் படங்களில் நடிக்கும் ஜீவா அடுத்து இதில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நீங்களாவது இந்த படத்தை முடிச்சு கொடுங்கப்பா.

இந்த படம் மூலம் ராதாவின் மகள் கார்த்திகா அறிமுகமாவாது குறிப்பிடத்தக்கது. முக்கிய கதாபாத்திரத்தில் அஜ்மல் நடிக்க, ஹரிஷ் ஜெயராஜ் இசை அமைக்கின்றார். ஜீவாவாது "கோ"வாவாரா அல்லது Goவா பொறுத்திருந்து பார்ப்போம்.
Share:

2 கருத்துரைகள்:

Nimalesh said...

simbu naa Vambu pa....
yenna seiya ma Fav Hero.......

கன்கொன் || Kangon said...

எனக்குத் தெரிஞ்சு சதீஷ் எண்டொராள் இருக்கிறார். வேணுமெண்டா அவரக் கேட்டுப் பாக்குமாறு கே.வி.ஆனந்திடம் சொல்லவும்.

பிரிக்க முடியாதது ? சிம்பு-வம்பு....

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive