Tuesday, March 24, 2009

சற்று முன் கிடைத்த செய்தி: தென் ஆபிரிக்காவில் IPL

இங்கே அங்கே என பூச்சாண்டி காட்டிய IPL விவகாரம் ஒரு வாறாக முடிவுக்கு வந்திருக்கிறது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16ம் திகதி IPL போட்டிகள் தென் ஆபிரிக்காவில் நடைபெற உள்ளதாக IPL நிர்வாகி லலித் மோடி அறிவித்துள்ளார். இன்று தென் ஆபிரிக்க மற்றும் இங்கிலாந்துக்கு விஜயம் செய்த இவர் இப்போது இந்த முடிவை அறிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்திய நேரப்படி மாலை 4 மணி மற்றும் இரவு 8 மணிக்கே போட்டிகள் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். ஏற்பாட்டு வேலைகள் மேற்கொள்ள உள்ளதால் ஏப்ரல் 16ம் திகதிக்கு போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். சந்தோசமான விடயம் தானே!
Share:

4 கருத்துரைகள்:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இப்படி செய்து கேவலப் படுத்துவதற்கு இப்படி செய்திருக்கலாம்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அதுமட்டுமில்லாமல் இந்திய நேரப்படி மாலை 4 மணி மற்றும் இரவு 9 மணிக்கே போட்டிகள் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். //

பயங்கர திட்டத்தோடதான் இருப்பாங்க போல...

துஷா said...

"சந்தோசமான விடயம் தானே"

முதல் இது இனி அடுத்தது உலக கிண்ணம் எல்லாம் இப்படியே எல்லாம் ஆசியாவை விட்டு போய் விடும் போல இருக்கு

SShathiesh-சதீஷ். said...

சுரேஷ் நீங்க சொன்னதுபோல் இம்முறை போட்டிகள் ஏனோ சூடு இல்லையே.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive