Monday, August 31, 2009

Super Singers உடன் ஒரு சூப்பர் பயணம்-பகுதி-3




நாங்கள் வாகனத்தில் விமான நிலையத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த நேரம் எங்களை நக்கல் செய்த வண்ணம் வைதேகி அக்காவும் பூஜா அக்காவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தினேஷின் வேறொரு தொலைபேசியிலிருந்து நாங்கள் கலையகத்துக்கு தொடர்பை ஏற்படுத்தி குரலை மாற்றி அவர்களை கலாய்த்தோம். அதன் பின் உண்மையை சொல்லி விட்டு நாங்கள் அழைப்பை துண்டித்தவுடன் மீண்டும் அவர்கள் ராச்சியம் ஆரம்பமானது. இப்படியே நிகழ்ச்சியை கேட்டவண்ணம் பயணித்த எங்களுக்கு குமார் அண்ணா தாக சாந்தி செய்து வைத்தார். அப்போதே எனக்கு அல்சர் வருத்தம் வாரத்தொடங்கியதால் நான் அடக்கி வாசித்தேன். அதன் பின் விமான நிலையத்தை நோக்கிய பயணம் விரைவானது. 12.15க்கு விமானம் தரை இறங்கும் என்ற தகவலுடன் அதற்கு முன் சென்றடைய வேண்டுமே என்ற அங்கலாய்ப்பில் பயணித்த எங்களுக்கு அதிசயம் தான். காரணம் விமான நிலையம் போகும் வரை எந்த சோதனை சாவடியிலும் எங்களை மறிக்கவில்லை.(நானும் தினேஷும் ஒருவரை ஒருவர் கிள்ளிப்பார்த்துக்கொண்டோம் இது உண்மைதானா என்று.)



ரேனு.

ஒருவாறு விமான நிலைய நுழைவாயிலுக்கு அருகில் எங்களுக்கான முதல் சோதனை. குமார் அண்ணா எங்கள் வருகையின் காரணத்தை சொன்னார். அதன் பின் சாரதி ஆசனத்தில் இருந்த அந்த சிறுவனின் தந்தையிடம் சில பத்திரங்களை வாங்கிப்பார்த்த பின். இத்தனை பேர் எதற்கு வந்தீர்கள் என்ற கேள்வி. காரணத்தை குமார் அண்ணா சொன்னதுடன். என்னையும் தினேசையும் ஊடகத்தை சேர்ந்தவர்கள் என அந்த இராணுவ சிப்பாயிடம் சொல்ல எங்கள் எந்த அடையாள அட்டையும் கூட கேட்காமல் எல்லோரும் உள்ளே அனுமதிக்கப்பட்டோம்.



வெற்றிக் களிப்பில் ஷெரிப்


எங்கள் வாகனம் உள்ளே கம்பீரமாக சென்றது. தரிப்பிடத்தில் வாகனத்தை விட்டு விட்டு உள்ளே சென்றோம். காத்திருக்கும் மண்டபத்தில் காத்திருக்க வேண்டிய நிலை. காரணம் நேரத்துக்கு சென்றுவிட்டோமே. அதன் பின் எங்கள் அலுவலகத்தை சேர்ந்த தியாகேஷ் அண்ணா எங்களோடு இணைவதாக சொல்லி இருந்தார். காத்திருந்த நேரத்தை பிரயோசனம் செய்ய வேண்டுமே. எங்கள் கண்கள் ஆங்காங்கே அலை பாய்ந்தன. அந்த அலைபாய்தலில் அங்கங்கே நின்ற சில ஷாலினிகள் தட்டுப்பட்டனர். நாங்களும் மாதவனாகிவிட நேரமும் பறக்கத்தொடங்கியது. இடை இடையே கலையகத்துடன் தொடர்பை ஏற்படுத்தி நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டோம்.



அஜீஸ்


இலங்கை மக்கள் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூப்பர் சிங்கர்ஸ்,கலக்கல் மன்னன் சிவகார்த்திகேயன், அடுத்த பிரபுதேவா ஷெரிப் ஆகியோர் ஒரு கலை நிகழ்வுக்காக முதல் முதல் இலங்கை மண்ணில் கால்பதிக்கப்போகும் அந்த நேரம் நிமிடங்கள் செக்கன்களாக மாறி எதிர்பார்ப்பை எகிறவைத்தது. அந்த இனிய எதிர்பார்ப்பு அடுத்த பகுதியில் ............
Share:

2 கருத்துரைகள்:

Nimalesh said...

haiyooo thodar kadhaya poguthu...............lol

யோ வொய்ஸ் (யோகா) said...

:)

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive