Wednesday, March 10, 2010

வெற்றி வானொலியில் என் இறுதி நிமிடங்கள்.....



2008ஆம் ஆண்டு ஆரம்பித்த என் வானொலிப் பயணத்துக்கு இவ்வளவு சீக்கிரம் ஒரு முடிவு வரும் என நினைக்கவில்லை. சீக்கிரம் கிடைப்பதெல்லாம் சீக்கிரமே கைவிட்டுப்போகும் என்பது இதைத்தானோ? வானொலி என்றால் இதுதான் என கற்க ஆரம்பித்து இருக்கும் இந்த நேரத்திலேயே என் விடைபெறல். வெற்றிக் குடும்பம் , எங்கள் நேயர்கள் என பல சுவர்களால் நான் தாங்கப்பட்டு ஒரு அறிவிப்பாளராக ஓரளவு ஏற்றுக்கொள்ளப்பட்டேன்.

என்னையும் ஏற்றுக்கொண்ட நேய நெஞ்சங்களுக்கும் எனக்கு பல விடயங்களை கற்பித்து அனுபவ பாடம் தந்த வெற்றிக்குடும்பத்துக்கும் என் நன்றிகள். இன்றிரவு ஒன்பது மணி செய்தி அறிக்கையை தொடர்ந்து என் பிரியாவிடையாக காற்றின் சிறகுகளில் சந்திக்கின்றேன். இன்றிரவு 9 மணி செய்தி அறிக்கையே என் குரலில் வரும் இறுதி செய்தி அறிக்கை. உளமார வாழ்த்திய உள்ளங்களுக்கு ப்ரியமானவனின் நன்றிகள். இன்னும் நிறைய நன்றிகள் நினைவுகள் சொல்ல இருக்கு. இரவு நிகழ்ச்சியை முடித்து விட்டு சொல்கின்றேன். பிரியப்போகின்றேன் என இவாளவு நாள் வலிக்கவில்லை. இன்று இந்த நொடி வலிக்கிறது. பிரிவுகள் சேர்வதற்கே என்ற நம்பிக்கைள் பிரிவோம் சந்திப்போம்.

Share:

12 கருத்துரைகள்:

கன்கொன் || Kangon said...

எதிர்காலம் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள் சதீஷ் அண்ணா...

உங்கள் நிகழ்ச்சிக்காக காத்திருக்கிறேன்....

வாழ்த்துக்கள்....

துஷா said...

எதிர்பார்க்காத ஒன்று shathiesh......


வாழ்த்துக்கள்

சசிகுமார் said...

உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஆதிரை said...

அன்புச் சகோதரனாக பழகிய காலங்கள் இனிமையானவை. இலங்கையிலிருந்து சென்றாலும், என்றும் போல அருகில் இருப்பீர் என்ற நம்பிக்கை உண்டு.

சென்று வருக தம்பி...

சுபானு said...

நல்ல குரல்வளம் உனக்குடா சதீஸ்.. எதிர்காலம் சிறப்பாக வளமாக அமைய இந்த நண்பனின் வாழ்த்துக்கள்.. நினைத்ததெல்லாம் கைகூடும்..

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

"பிரிவுகள் நிரந்தரமில்லை" உங்கள் விடைபெறலுக்கான காரணங்கள் உங்கள் சிறந்த ஏதிர்கால பயணத்திற்காக இருக்கும் பட்சத்தில் கவலை வேண்டாம். உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

யோ வொய்ஸ் (யோகா) said...

வளமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள் சதீஷ்.

Ramesh said...

என்றும் சிறப்பாக உங்கள் எதிர்காலம் அமையட்டும் கடவுள் துணை எப்போதும் உங்களுக்கு இணையத்தில் என்றும் இணைந்திருப்போம்...

EKSAAR said...

தாயுடன் இருப்பது குஞ்சுக்கு இதம்தான். ஆனால் அது பறக்கவேண்டுமானால் தாயை விட்டு பிரியத்தானே வேண்டும்? உங்கள் இலக்குகளை அடைய மனதார வாழ்த்துகிறேன். பதிவுலகினூடாக தொடர்ந்து சந்திப்போம்.. வெற்றி கிடைக்கட்டும்..

Subankan said...

சென்றுவாருங்கள் சதீஷ், மீண்டும் சந்திக்கலாம் :)

அ.ஜீவதர்ஷன் said...

எங்குசென்றாலும் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்......இது அடிமனத்திலிருந்து......

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நண்பரே வாழ்த்துக்கள் ...

வெற்றியின் லோகநாதன்

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive