Friday, June 17, 2011

பதிவுலக அவன் இவன் எவனுக்கும்....ஆதங்க பதிவு


பதிவுலக நண்பர்களே! எதிரிகளே! (இப்பெல்லாம் இவங்களும் இருக்காங்க)

எல்லோருக்கும் ஒரு முக்கியமான விஷயம். இது புதுசில்லை. கடந்த சில ஆண்டுகளாக பதிவுலகில் நடக்கும் ஒரு கேவலமான விடயத்தை சொல்ல வேண்டும் என மனம் நினைத்தாலும் தகுந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்போது அவன் இவன் வந்திருக்கும் நேரம் எவனுக்குஇது பொருந்துமோ அவன் போட்டுக்கொள்ளட்டும்.

பதிவுலகில் ஒரு பதிவர் கஷ்டப்பட்டு யோசித்து எழுதும் பதிவுகள் சிலவற்றை அவர்களின் அனுமதியின்றி தங்கள் தளங்களில் வெளியிட்டு சந்தோசப்பட்டுக்கொள்கின்றார்கள் சில வக்கிரக்காரர்கள். குறிப்பாக பிரபல இணையதளங்கள் கூட இப்போது சில வலைப்பதிவர்களின் செய்திகளை அப்படியே போடுவது தான் கொடுமை. ஆனால் இதில் சந்தோசப்படக்கூடிய விடயம் என்னவென்றால் பதிவுலகில் எழுதும் எழுத்தாளர்களின் எழுத்துக்களை எடுத்து இடும் அளவுக்கு அவர்களின் எழுத்தின் தரம் இருக்கின்றது என இணையதளங்களே பறைசாற்றுகின்றன. ஆனால் சில பதிவர்கள் சில இணையதளங்கள் இப்படி அடுத்தவரின் பதிவுகளை போடுவது ஏனோ?

பதிவுலகுக்கு வா என யாரும் யாரையும் இழுத்து வரவில்லை. இத்தனை பதிவு போடு என வேருட்டவில்லை அப்படி இருக்கையில் நேரம் கிடைக்கையில் சொந்தமாக பதிவு போடுவதை விடுத்தது ஏன் இப்படி அடுத்தவன் பதிவை போடவேண்டும். இன்னும் விடை தெரியாக்கேள்வி இது? இவை எல்லாவற்றையும் விட கொடுமை என்னவென்றால் ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் மிகப்பெரிய சக்தியாக வளர்ந்திருக்கும் பதிவர்கள் தங்கள் தளங்களில் முந்திக்கொண்டு விமர்சனம் வர வேண்டும் என்பதற்காய் படங்களை பார்க்காமலே இன்னொருவன் தன பார்வையில் எழுதிய எழுத்தை அப்படி அச்சு பிசகாமல்(ஒரிஜினலில் எழுத்து பிழை இருந்தால் இங்கேயும் இருக்கும்) போட்டு ஏன் அவமானப்படுகின்றனர். இன்னும் சிலரோ ஏதோ தானே எழுதியது போல அதுக்கு பில்ட் அப் வேறு. கந்த சாமி படம் வந்ததில் இருந்து நான் அவதானிக்கும் விடயம். பல தளங்களில் ஒரே படத்தின் விமர்சனம் ஒரே மாதிரி இருக்கும். அப்படி என்றால் அந்த அத்தனை தளமும் ஒருவராலா நடத்தப்படுகின்றது. இல்லையேல் அவருக்கு ரசனை இல்லையா? ஒரு படம் பார்க்கும் போது அது தாய்க்கு பிடிக்கும் தனயனுக்கு பிடிக்காமால் இருக்கலாம் அப்படி இருக்கையில் எந்த வேறு பாடும் இன்றி ஒரு படத்தின் விமர்சனம் அமைவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

நண்பர்களே! உங்களுக்கு நேரம் இல்லை என்றால் எழுதாதீர்கள். அதற்காக தெரியாத ஒன்றை தெரிந்தது போல காட்டி பதிவுலகில் விபசாரம் செய்யாதீர்கள். இன்று இந்த கோப பதிவு இட காரணம் அவன் இவன் படம் எப்படி இருக்கு என முதலில் வந்த சில விமர்சனங்களை படிக்க ஆரம்பித்தால் ஒரு சில தளங்களில் வழக்கம் போல கோப்பி விமர்சனங்களை காண கிடைத்தது. நிச்சயம் வரும் நாட்களில் இது அதிகரிக்கும். படம் வந்து சில மணிநேரமே ஆகி இருக்கும் நிலையில் ஒருவர் நல்லது என எழுதி விட்டால் அதை கோப்பி செய்து போட்டு அது நல்ல படம் என்றோ அல்லது கூடாமல் எழுதி இருந்தால் அதை போட்டு கூடாது என பரப்பும் ஒரு கேட்ட காரியத்தை தான் இந்த கோப்பி பேஸ்ட் பதிவர்கள் செய்கின்றார்கள். ரசனை நிச்சயம் வேறுபாடும். ஒரு செய்தியை கூட வித்தியாசமாக தரும் எத்தனயோ பேர் இருக்கையில் ஒரு படத்தின் விமர்சனத்தை ஒரே மாதிரி தருவதை எப்படி பொறுக்கமுடியும். இதை தடுக்க இப்படி கோப்பி செய்யும் உங்களால் மட்டும் தான் முடியும். உங்கள் மனசாட்சியால் மட்டும் தான் முடியும். கொஞ்சம் சிந்தியுங்கள் .நல்ல புதிய தரமான பதிவுகள் வரும்.......
Share:

0 கருத்துரைகள்:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive