உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label ரஜினி. Show all posts
Showing posts with label ரஜினி. Show all posts

Sunday, June 5, 2011

சூப்பர் ஸ்டார் லோஷன்.

லோஷன்!
இந்த பெயர் சொன்னதன் பின் எனக்கு அதற்க்கு மேல் சொல்ல என்ன இருக்கு என தெரியவில்லை. நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டுமா என்ன? ஆனால் எனக்கும் அவருக்கும் இருக்கும் உறவை பற்றி சில சுவாரஷ்யங்களை சொல்லலாமே. கடந்த முறை அவர் பிறந்த நாளுக்கும் என் பதிவு தாமதமாக வந்தது. அப்போது அவரின் ரசிகர்கள் பதிவுலகை தொடரும் வானொலி நண்பர்கள் சிலர் லோஷன் அண்ணா பற்றி வந்த பதிவுகளை வாசித்துவிட்டோம் ஆனால் நீங்கள் எழுதப்போகும் பதிவுக்கு வெயிட்டிங் என்றார்கள். உண்மையில் சந்தோசமாக இருந்தது.....


ரகுபதி பாலசிறீதரன் வாமலோஷணன்(பேரை சொல்லும்போதே களைக்குது பாஸ்) இந்த பெயர் எனக்கு அறிமுகமானது என் சிறுபிராயத்தில். சக்தியின் முத்துக்கள் பத்து தான் என்னை இவர் பக்கம் திரும்ப வைத்த நிகழ்ச்சி. எதிர்காலத்தில் இவருடனே வேலை செய்யபோகின்றேன் இப்படி ஒரு நல்ல உறவு எனக்கும் அவருக்கும் இருக்கப்போகின்றது என எதுவுமே தெரியாமல் ஒரு பெரிய மனிதர் என்ற எண்ணத்தில் இவர் நிகழ்ச்சிகளை ரசிக்க தொடங்கினேன். அதுதான் அவரின் வானொலி ஆரம்ப கால கட்டம் என்பது கூட தெரியாமல்..........அந்த வயதில் எனக்கு யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை லோஷன் அண்ணாதான் சிறந்த அறிவிப்பாளர் அதேபோல இவ்வளவு உயரத்தை தொடப்போகின்றார் எனவே இவரை ரசி என்று. தானாக சிறு வயதில் வந்தது இதுதான் அவர் கைங்கரியம். நான் எப்போதும் இவரை சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஒப்பிட்டு பார்ப்பேன் காரணம் சிறுவர் முதல் பெரியோர் வரை அத்தனை பேரையும் தன குரலில் கட்டி வைத்திருக்கிறாரே.

சக்தியில் தொடங்கிய பயணம் என்றென்றும் புன்னகை என தினமும் காலை சூரிய ராகங்களில் தொடர்ந்து ஒவ்வொரு விடியலும் எனது பெயர் சொல்லுதே என அவர் பட்டையை கிளப்பும் இன்றுவரை நான் அவர் ரசிகன். என் வெற்றி அறிமுகம் எப்படியானது வெற்றி அனுபவங்கள் என்ன என்பதெல்லாம் என் கீழ்வரும் பதிவுகளில் சொல்லி உள்ளேன். ஆனால் அதையும் மீறி எனக்கும் அவருக்கும் இடையில் நடந்த சில சுவாரஷ்யங்கள் நினைத்து பார்க்கும் போது இன்றும் உயர்ந்து நிற்கின்றார்.







முதலில் லோஷன் அண்ணாவிடம் எனக்கு மிக பிடித்ததே சரியோ தப்போ பட்டதை பட்ட படி சொல்லுவது. உண்மையில் பலருக்கு இது இருப்பது குறைவு. எனக்கு இவரிடம் மிகப்பிடித்ததும் இதுவே. லோஷன் அண்ணாவுக்கும் எனக்கும் உள்ள உறவில் எனக்கு பல சந்தேகங்கள். இது ஒரு குருசிஷ்யனுக்கானதா? ஒரு கலைஞனுக்கும் ரசிகனுக்குமானதா? இல்லை ஒரு மேலதிகாரிக்கும் அவர் தலைமையில் வேலை செய்த ஒரு ஊழியருக்கானதா? இல்லை சகபதிவர் என்னும் உறவா? இல்லை ஒரு அண்ணா தம்பி உறவா? இல்லை வயது வித்தியாசங்கள் மறந்து எல்லாம் பேசும் ஒரு நண்பனா? சத்தியமாக இந்த கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில் நம் உணர்வு மட்டுமே.

வானொலியில் நான் பணிபுரியும் நேரம் அவரை பார்த்து வியந்திருக்கின்றேன். பல விடயங்களை அத்துப்படியாக தெரிந்து வைத்திருக்கின்றார். இணையம் இல்லாமல் பல விடயங்களை தன்னுள்ளே கொண்டு திரியும் ஒரு விக்கிபீடியா. (அதனால தான் விக்கி லீக்ஸ் வந்துதா என கேட்கப்படாது) இவை எல்லாவற்றையும் மீறி அடுத்தவர்களை மதிக்க தெரிந்த மனிதன். அவரின் வயதில் பாதிக்கு கொஞ்சம் தான் எனக்கு கூட (அப்பாடா லோஷன் அங்கிள் என நான் கூப்பிட காரணம் சொன்னாச்சு) ஆனால் நாங்கள் கூட ஒரு விடயம் சொல்லி அது சரி எண்டால் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவர். சரியை சிறுவன் சொன்னாலும் அதை மதிக்கும் மதிப்புக்குரியவர். அதனால் தான் இன்று எல்லோரும் அவரை மதிக்கின்றனர்.

என் வானொலி ஆரம்ப நாட்களில் என் மேல் அதிகம் நம்பிக்கை வைத்தவர் அதனால் தான் அத்தனை நிகழ்ச்சிகளும் செய்யும் வாய்ப்பை நான் பெற முடிந்தது. என்னை தட்டிக்கொடுத்து வளர்த்து விட்டவர். அதேநேரம் நான் தவறு செய்யும் போது தட்டி நிமிர்த்தவும் அவர் தவறவில்லை. சில நாட்கள் அவர் மேல் நான் கோபப்பட்டதும் உண்டு மனதில். ஆனால் அவை எல்லாம் உடனே மறைந்துவிடும் காரணம் அடுத்த தடவை அவரை சந்திக்கும் போது இன்னொரு பரிமாணத்துக்கு எங்களை கொண்டு போய்விடுவார்.

செய்தி வாசிக்க எனக்கு வாய்ப்பு வழங்கும் போது பொதுவாக எல்லோருக்கும் மணித்தியால செய்தி வாசிக்க கொடுத்துவிட்டு தான் பிரதான செய்தி கொடுப்போம் ஆனால் இங்கே மணித்தியால செய்தியும் இல்லை பிரதான செய்தி வாசிக்க போதிய ஆட்களும் இல்லை எனக்கு உன்னில் நம்பிக்கை இருக்கு என என்னையே என்னால் நம்பவைத்தவர். என் தனி ஆவர்த்தன நிகழ்ச்சிகள் பலவற்றுக்கு நன்றாக இருக்கு என அவர் போட்ட குறுந்தகவல்கள் இன்றும் என்னிடம் இருக்கின்றன. ஆரம்ப நாட்களில் ஒரு இமயத்தை பார்ப்பதை போல அவரை வியந்து தூர நின்று பார்த்துக்கொண்டிருந்த என்னை அவரை நெருங்க வைக்க சில நாட்களே போதுமாய் இருந்தது. நெருங்கி பழகும் குணம் மட்டுமன்றி 04.02.2009 அன்று நடந்த ஒரு சம்பவத்தில் என்னை கடுமையாய் கடிந்து கொண்ட அடுத்த நிமிடமே நான் செய்தி வாசித்துவிட்டு வெளியே வந்ததும் செய்தி SUPERடா என்று சொல்லும் போது அவர் மேல் இருந்த கோபமே எங்கே போனது என தெரியவில்லை.

சில காலம் கடந்து வெற்றியின் காலை நேர செய்தி வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் என் அலுவலகத்தில் உயர் அதிகாரி, பத்து வருடங்கள் சாதித்த சாதனையாளர், அளவில்லா ரசிகர்கள் எல்லோரும் வியந்து பார்க்கும் மனிதர் அவர் நினைத்திருந்தால் காலையில் உனக்கு செய்தி இருக்கு ஆறுமணிக்கெல்லாம் என்று சொல்லிட்டு போயிருக்கலாம். ஆனால் காலை செய்தி உனக்கு போடுறேன் விடிய நான் வரும் போது உன்னை ஏத்த உன் வீட்ட வருவேன் இத்தனை மணிக்கு ரெடியாய் நில்லு என சொல்லி முதல் நாள் முதல் அந்த கடமையில் மாற்றம் வரும் வரை தினமும் என்னை ஏற்றி வந்தவர் இவர். இதை நான் சொல்ல காரணம் அறிமுகணாம ஒரு சில மாதத்திலேயே எனக்கு இப்படி என்றால் அவர் எந்தளவுக்கு தன கீழ் வேலை செய்த ஏனைய அறிவிப்பாளர்களுடன் எப்படி நடந்திருப்பார் என நீங்களும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். இதுதானே ஒரு நல்ல தலைவனுக்கும் மனிதனுக்கும் அழகு.


காற்றின் சிறகுகள் நிகழ்ச்சி சுபாஷ் அண்ணா சென்ற பின்னர் எனக்கு தருவதாக சொல்லப்பட்டாலும் பின்னர் அதை ரஜீவிடம் கொடுத்த நேரம் மனதளவில் நான் காயப்பட்டாலும் அந்த நிகழ்ச்சியை ரஜீவை கொண்டு வீழ்ச்சி பெற விடாமல் செய்யும் போது ஒரு சிறந்த மேலதிகாரியாக அவரின் அந்த முடிவை ரசித்தேன். காரணம் அந்த இடத்தில் நிச்சயம் என்னால் சுபாஷ் அண்ணா இல்லாத குறையை தீர்த்திருக்க முடியாது. எனவே அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்காக தனி மனிதர் என்ற பாசம் மீறி கடமைக்கு மதிப்பு கொடுக்கும் ஒருவர். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மகுடம் சூட்டுவது போல தான் செய்த சினிமாலை நிகழ்ச்சியை என்னிடம் கொடுத்து அதற்க்கு ஆலோசனையை சொல்லி என்னை மெருகேற்றி அழகு பார்த்தவர். இந்த மனது உண்மையில் அவர் மேல் இன்னும் எனக்கு அவாவை கொண்டுவந்தது. இதை தொடர்ந்து விடியலை செய் என என்னிடம் ஒரு நாள் கொடுக்கும் போது அதை நான் நம்பவே இல்லை. ஆனால் அன்று மாலை முதல் எனக்கு ஆலோசனைகள் சொல்லி வெற்றியின் ஏனைய நிகழ்ச்சிகள் மூலம் நாளை ஒரு வித்தியாசமான சிறப்பான விடியல் இருக்கு என விளம்பரபடுத்த வைத்து அந்த நிகழ்ச்சியை என்னை செய்ய வைக்க யாருக்கு மனது வரும். அவர் எங்கோ ஒரு இமயத்தில் நின்று எங்களையும் தன்னுடன் வர சொல்லி இழுக்கின்றார் ஆனால் மன்னிக்கணும் அண்ணா எங்களால் நீங்கள் நிற்கும் இடத்துக்கு வரவே முடியாது.



செய்தி வாசிக்கும் போது எனக்கு ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே வாசிக்கும் பழக்கம் உண்டு. இதை பல தடவை கண்டித்ததுடன் ஒருமுறை அது பிரச்சனையை உருவெடுத்த நேரம் என்னை காப்பாற்றி அதன் பின் கண்டித்து திருத்திய நல்ல தல. இதே உடல் நிலை பிரச்சனையால் நான் வானொலியை விட்டு போகப்போகின்றேன் என நான் ஒருமுறை கூறியபோதுகூட யோசிச்சு முடிவெடு சில நாட்கள் விடுமுறை எடுத்து ரெஸ்ட் எடுத்திட்டு திருப்பி வா என சொல்ல எந்த மேலதிகாரியால் முடியும். இதுதான் இன்று அவரால் பல அறிவிப்பாளர்கள் உருவாகவும் உங்களை என்னை போன்ற ரசிகர்கள் அவருக்கு இருக்கவும் காரணம். அவதாரம் நிகழ்ச்சியை அவருடன் செய்ய நான் ஆசைப்பட்ட வேலை அதை செய்ய அனுமதி தந்ததுடன் நான் பயமாய் இருக்கு என சொல்ல எதுக்கு பயம் செய்டா என தட்டி தந்ததுடன் நிகழ்ச்சி முடியும் வரை ஒரு இடமும் என்னை தர்மசங்கட படவோ இல்லை பயம் என்ற எண்ணம் வரவோ விடாமல் சாதாரணமாக இருந்து என்னையும் செய்யவைத்தார்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அவர் வீட்டில் பொங்கல் இவர் பொங்குவதில்லை. அதுதான் நாடு முழுக்க இவர் குரல் கேட்டு பொங்கி கொண்டாடுகின்றதே. அத்தியாவசிய தேவை தவிர தான் விடுப்பு எடுப்பது எப்போதாவதே. இப்போதுதான் ஒரு வருடம் முத்த ல்தொடக்கம் ஞாயிறு லீவு என நினைக்கின்றேன். இந்த கடமையுணர்வு எப்போதும் வானொலி பற்றி சிந்திக்கும் அவர் புலன்கள் என ஒரு சிறந்த தன்னிகரில்லா ஊடகவியலாளர். சூப்பர் ஸ்டார் என இவரை நான் சொல்ல இன்னொரு காரணம் உண்டு அவருக்கும் ரசிகர்கள் நிறைய இவருக்கும் நிறைய இரண்டுபேரும் ரொம்ப சிம்பிள். அவரும் தன ரசிகர்களுக்கு ஏதாவது செய்யணும் என நினைக்கின்றார் இவரும் நினைக்க மாட்டாரா என்ன? அண்ணே எப்போ அண்ணே அடுத்த கட்டம்.....(அப்பாடா சும்மா கொளுத்திப்போட்டிருக்கேன்......)


இனி லோஷன் அங்கிளின் இன்னொரு பக்கம்.................


அடுத்து பதிவுலகில் என்னை அழைத்து வந்தவர் இவர் தான். டேய் உன் பதிவுகள் உதவாது திருத்து என என் மொக்கைகளை கண்டித்த மொக்கை சிங்கம். எங்கள் அதிகார மைய முன்னாள் தலைவர்....எங்கள் அரட்டை குழுவின் அங்கிள்.....ஆனாலும் பாருங்கோ அரட்டை எண்டு வந்தால் அங்கிள் தொல்ல தாங்க முடியாது. நம்ம மாமாவையும் குஞ்சுவையும் அப்பப்ப என்னையும் பந்தாடுவது அங்கிள் தான்.....இன்னொரு முக்கியமான விஷயம்... யாராவது இருவருக்கு இடையில் பத்த வைத்திட்டு பறந்திடுவார். ஆனாலும் அப்பப்ப தன தலையிலும் பத்த வைத்துக்கொள்வார்.

என்ன தான் இருந்தாலும் இந்த மனிசனை வாட்டி எடுக்கிறது கொஞ்சம் கஷ்டமாய் இருக்கு. சிங்கம் ஒரு நாளைக்கு சிக்காமலா போய்டும் எங்க கும்மில நல்லாய் வறுத்தெடுத்தா தான் எங்கள் எல்லோருக்கும் மன திருப்தி...அப்புறம் இந்த பிறந்த நாள் தன பதினாறாவது பிறந்த நாள் என சொன்னார் அங்கிள். எனக்கென்னவோ பயமாய் தான் கிடக்கு.....இன்னுமொன்று சொல்லிட்டு போறேன்...அங்கிளின் இன்னொரு பக்கம் என்ற இந்த கடைசி பகுதிக்கு எப்பிடியும் நான் கும்மியில கும்பாபிசேகம் செய்யப்படுவேன்....நேரம் ஆகிறது வரட்டே.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் லோஷன் அண்ணாவுக்கு என் குடும்பத்தினர் சார்ப்பாகவும், பதிவர்கள் சார்பாகவும், ஏனைய வானொலி அறிவிப்பாளர்கள் சார்ப்பாகவும், என் போன்ற உங்களை போன்ற அவர் ரசிகர்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள்.

ட்ரீட் கேட்டா கிடைக்கவா போகுது..அதனால கேட்கமாட்டேன்...
Share:

Saturday, January 15, 2011

ரஜினி,கமல்,விஜய், சதீஷ் பொங்கல்!

பொங்கல் வாழ்த்து எல்லோரும் ஒவ்வொரு விதத்தில் சொல்கின்றனர். இது என் இரண்டாவது முறை. நடிகர்கள் உட்பட சில பாடல் தொகுப்புக்களால் வாழ்த்துக்கள். (ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தால் தாமதமாக வருகின்றது.)

போடா எல்லாம் விட்டு தள்ளு பழசை எல்லாம் சுட்டு தள்ளு புதுசாய் இன்று பிறந்தோம் என்று எண்ணிக் கொள்ளடா,
தை பிறக்கும் நாளை விடியும் நல்ல வேளை - ரஜினி





தை பொங்கலும் வந்தது பாலும் வந்தது -கமல்




மழை காலத்தில் குடிசை எல்லாம் தண்ணீரில் மிதக்கின்ற கட்டுமரம்.......
போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல்.....விஜய்




ரஜினி கமல் விஜய் எல்லாம் தங்கள் பாட்டுகளால் வாழ்த்திவிட்டார்கள். அட நானும் பிரபலம் தாங்க வாழ்த்த கூடாதா. இதோ you tube தயவில் ஒரு பாடல்.



பாடல்களை தேடிக்கொண்டிருந்த போது எனக்கு கிடைத்த இன்னொரு அற்ப்புத பாடல். தமிழர்களுக்கு பொதுவான ஒரு பண்டிகையை பற்றி மதம் கடந்தி கிறிஸ்தவ மதத்தினர் பாடி கொண்டாடி மகிழ்கின்றனர். பாருங்கோ.



பாடல்களை தர உதவிய youtubeக்கு நன்றி.
Share:

Tuesday, December 7, 2010

விஜயின் கடைசிப்படம் வேலாயுதம்????


தலைப்பை பார்த்து நிறைய பேர் பயந்திடுவாங்க. அடுத்து இவன் விஜய் ரசிகன் தானே விஜய்க்கு சப்போர்ட்டா எழுதி இருப்பான் என்று நினைப்பவர்கள் மேலே படிக்க வேண்டாம். இல்லை இல்லை தன் ஆதங்கத்தை கொட்டி இருப்பான் என நினைப்பவர்கள் சத்தியமாய் அப்பிடியே அடுத்த பக்கம் போங்கோ. நிஜமாய் தான் சொல்கின்றேன் நம்ம தளபதியை ரவுண்டு கட்டி தான் இந்த பதிவு.

விஜய்க்கு இது போதாதா காலம் என்று சொல்ல மாட்டேன். அந்த முட்டாளுக்கு(3 idiots படத்தில் ஒரு ஹீரோ என பேசினாங்க அப்போ இவர் ஒரு முட்டாள் தானே) சொந்த செலவில் சூனியம் வைக்க ரொம்ப நல்லாய் தெரியும். அப்பா பேச்சை கேட்டால் பிள்ளைகள் நல்லாய் இருப்பாங்க என்று நம்ம மூதாதையர் சொன்னதை இன்றுவரை பின்பற்றும் ஒரே ஒருவர் இவர் தான். பின்னே எத்தனை மொக்கை படம் எத்தனை கிண்டல் கேலி வந்தாலும் அசந்து கொடுக்கிரானா இந்த மாப்பு. இதை விட என்னங்க வேணும் அரசியலுக்கு வர. கல்லெறிந்தாலும் வலிக்காத மாதிரி நடிக்க தெரிந்த விஜயை பார்த்து யாரையா சொன்னது நடிக்க தெரியாது.

எங்க தளபதிக்கு வேணுமென்றால் திரையில் கமல் போல நடிக்க தெரியாமல் இருக்கலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் எங்கள் அழகிய தமிழ் மகனை விஞ்ச யார். கைப்புள்ளை இன்னுமாடா ஆஸ்பத்திரி போகாமல் இருக்கிறாய். தமிழ் சினிமாவில அவருக்கு அடுத்து ஒரு இடம் உனக்கு தாப்பா இருந்தது அதை மறுக்கல ஆனால் இப்போ நீ போற பாதையை பார்த்தால் உவ்வே.....குருவை மிஞ்ச ட்ரை பண்ணாதேப்பா. எல்லாத்தையும் அவருகிட்ட இருந்து கொப்பி பண்ணுற நீ இதை மட்டும் எதுக்கு அவசரப்படுகின்றாய்(அவர் யாரென்று நான் பெயர் சொல்ல மாட்டேன் பிறகு அவர் பெயர் சொல்லி நான் ஹிட் கொடுத்தேன் என்று சொல்லிடுவாங்க.)

அவரே கிழட்டு சிங்கத்தை பார்த்து அரை டவுசர் பையன் மாதிரி நிக்கும் போது அரை டவுசர் போடும் வயசு பையன் உனக்கு அரசியல் எதுக்கு? முதல்வன் படத்தில் நடிக்காத நீங்கள் இரண்டு பேரும் எதுக்கு முதல்வன் பதவிக்கு மட்டும் ஆசைபடுகிறிங்க. கொஞ்ச படம் ஒழுங்காய் போகல என்டவுடனையே உன் அப்பாவை கொஞ்சம் வீட்டில உட்கார வச்சிட்டு பையன் படம் நடிக்க போறான் என உன் முடிவுகளை நினைச்சு சந்தோசப்பட்டோம். ஆனால் அவர் வீட்டில் இல்லை போயஸ் காடனில் இருந்தார் என்று இப்பதானே தெரிய வருது. ஏண்டா ராசா உனக்கு இந்த வேலை. காவலன்,வேலாயுதம்,மூன்று முட்டாள், பகலவன், விக்ரம் கே குமார் என்று ஒழுங்கான இயக்குனர்களிட்ட நீ போறத பார்த்து அட தளபதியும் தலையும் மீண்டும் கிளம்பிட்டாங்க என நினைச்சா, நீங்க என்னவென்றால் அரிசிமூட்டையும் பசு மாதுமை அலையிறிங்க.

எல்லாம் இருக்கட்டும் உங்களுக்காக மதுரையே கலக்கிய மதுரை மன்னனின் வீட்டு கல்யாணத்துக்கு கூட போகலையாம். சரி படம் மேலே உண்மையில் அக்கறை என பார்த்தால் இல்லை இல்லை பகை என்று எல்லோ புகை வருது. என்ன தளபதி இது தியேட்டரை அடைச்சால் என்ன நீங்கள் ஒரு ஹிட் படம் கொடுத்தால் எவனும் உங்க படத்துக்கு தடை போட முடியாது. பாபா தோற்ற போது எல்லோரும் தானே ஆடினியல் உங்கள் குரு மீண்டு வரவில்லையா? இப்போ உங்கள் நேரம் ஒரு படத்தில பிக் அப் ஆனால் போய்ட்டே இருக்க வேண்டியது தானே. திரையிலையே நடிக்க கஷ்டப்படும் உங்களால் நிஜத்தில் நடிக்க முடியாது டாக்டர்.

திரைப்படங்கள் போதும் என்ற எண்ணம் உங்கள் மனதில் வந்ததால் தான் உங்கள் வாரிசாக வருங்களா நடிகனாக உங்கள் மகனை அறிமுகப்படுத்தி விட்டீர்கள். இனி அவன் வளர்ந்து வந்து விட்டதை தொடரட்டும் என்று நீங்கள் அரசியல் போறதாய் முடிவோ? இந்த பதிவை எழுத வைத்த செய்தி என்ன என்றால் ஷங்கர் படத்தில் இறுதி விலகிட்டிங்க என்று வந்த செய்தி தான். ஏனுங்கோ இந்த முட்டாள் முடிவு. நல்ல ஸ்க்ரிப்ட் நல்ல இயக்குனர் நீங்கள் விலகிப்போனால் யாருக்கு நட்டம். ஒ உங்களுக்கு இல்லை என்று நீங்கள் சொல்வது புரிது. அதுதானே அரசியலுக்கு வரவேண்டிய அத்தனை ஏற்பாடும் செய்தாச்சு இனி எதுக்கு ஷங்கர் என்ன மணிரத்னம் என்ன? யார் படமும் முக்கியமில்லை. இனி தேவை பசுவும் அரிசி மூட்டையும் தானே. சூப்பர் தலிவா உங்க அப்பன் பேச்சை கேட்டு நீயும் ஒருநாள் அரிசி மூட்டை போல வீட்டில் இருக்கும் நாள் வரும். காரணம் இது எம்.ஜி.ஆர் காலமில்லிங்க அண்ணா.

இனி நம் மக்களுக்கு!
விஜய் அரசியல்க்கு வர முழு வேலையும் செய்து முடித்து விட்டார். இனி அவரை மட்டும் அல்ல யாரையும் காப்பாத்துவது கஷ்டம். அதுக்கு இறுதி ஆயுதம் ஒன்று தான் உண்டு. அதுதான் காவலன் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்குவது. அப்படி நடக்கும் பட்சத்தில் தான் விஜய் மேலும் படங்கள் நடிப்பார் இல்லையேல் அரசியல் சாக்கடையில் இன்னொரு நட்சத்திரம் மங்கிப்போகும் காலம் வெகு தொலைவில் இல்லை. சாதாரண கதைகளுடன் ஹீரோயிசத்தை தவிர்த்து விஜய் படம் கொடுத்தால் இளைய தளபதி திரையுலகில் தொடர்ந்து மின்னலாம். இதை அவர் தந்தை யோசிக்க வேண்டும்.(நான் சொல்வதை யாரும் சீரியசாய் எடுக்க மாட்டீர்கள் என நினைக்கின்றேன்.)

சீரியஸ் மேட்டர்: ஒரு மகனாக விஜய் அவர் அப்பா சொன்னதெல்லாம் செய்கின்றார்(சோப்பு போட்டதும் தான்). தந்தை சொல்லை மதிக்கும் ஒரு தனயனை தந்தை தன் சுய விருப்பு வெறுப்புக்காக அழிக்காமல் திரை உலகில் வாழவிடுவதே சிறப்பு.

மிக விரைவில் பதிவர்கள் பற்றிய என் கிசு கிசுவுடன் போலி பதிவுலீக்ஸ் பதிவு.
Share:

Friday, November 19, 2010

தன் வாயால் தானே கெடும் ரஜினி.



சூப்பர் ஸ்டார் ரஜினி, இன்னும் எத்தனை பேர் வந்தாலும் அந்த இடம் என்னவோ ஒரு இமயம தான் அடுத்தவர் எல்லோருக்கும் ரஜினியின் நடிப்புத்துறையில் மட்டும். ஆனால் நிஜ வாழ்க்கையில் என்றுமே ஒரு குழப்பவாதியாக இருக்கின்றாரோ என எண்ணத்தோன்றுகின்றது.

அழகிரியின் மகன் திருமணத்தில் வைத்து 32 ஆண்டுகளுக்கு பின் தான் மதுரை மண்ணில் காலடி வைத்ததாக ரஜினி பேசியது இப்போது பலரிடையே சலசலப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. இந்த கணக்கு தப்பு ரஜினி இதற்கிடையே மதுரை வந்து போயுள்ளதை தன் ஆதார பூர்வமாக பதிவித்துள்ளார் சக பதிவர் உண்மைத்தமிழன். அந்த பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்.

இந்த நிலையில் ரஜினி இறுதியாக மன நலம் பாதிக்கப்பட்டு உடல் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது தான் இறுதி மதுரை பயணம் என தட்ஸ்தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதை படிக்க இங்கே சொடுக்குங்கள்.

ஆனால் அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆரின் கைப்பொம்மையாக இருந்த நடிகை லதாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் சில்மிஷம் செய்யவும் ரஜினி முயன்றதால் எம்.ஜி.ஆர் குழுவினர் ரஜினியை அடித்து கொண்டு சென்று பைத்தியகார வைத்தியசாலையில் சேர்த்ததாகவும் ஒரு செய்தி உண்டு. அதே நேரம் எம்.ஜி.ஆர் அரசியலில் கோலோச்சிய நேரம் ரஜினி தன் பட பாடல்களில் தன் அரசியல் ஆசையை வெளிப்படுத்தியதும் இதற்க்கு ஒரு காரணமாகா சொல்லப்படுகின்றது. எது எப்படியோ 32 வருடங்கள் ரஜினி மதுரைக்கு வரவில்லை என்றால் அதற்கு என்ன காரணம்?

என்னை வாழ வைத்தது தமிழ் மக்கள் என சொல்லும் ரஜினி தமிழ் வளர்த்த மதுரையில் கடந்த 32 வருடம் காலே வைக்கவில்லை என்றால் அது அந்த மக்களுக்கும் தன் ரசிகர்களுக்கும் செய்தது சரியா?

இல்லை இல்லை அவர் வந்திருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம் அப்படி என்றால் அதை மறைக்க காரணம் என்ன? எப்போதும் தன் மீது ஒரு மீடியா வெளிச்சம் படவேண்டும் என்பதற்காய் இப்படி பேசுகின்றாரா? அப்படியென்றால் தன்னை கடவுளாகவும் நேர்மையின் சிகரமாகவும் நினைக்கும் தன் ரசிகர்களை ஏமாற்றுவதுடன் தன்னையும் ஏமாற்றுகின்றாரா? ரஜினியின் இந்த குழப்பங்களுக்கு எல்லாம் என்ன காரணம்?

இமயத்தில் பாபா என்றார் இல்லை கோட்டையில் ராஜ்ஜியம் என்றார் இன்று சினிமாவே போதும் என நிற்கின்றார். விழாக்களுக்கு கட்டாயப்படுத்துகின்றார்கள் என அஜித் பேசியபோது கைதட்டினார் இன்று அழையா விருந்தாளியாய் பல விழாக்களில் சென்று கை கட்டி நிற்கின்றார். அஜித்தை உசுப்பேத்தி விட்டு வேடிக்கை பார்க்க நினைத்தாரா? இல்லை உண்மையிலேயே மனதார தட்டினாரா? ஆனால் இந்த உள்ளொன்று வைத்து புறம் பேசும் பேச்சு எதற்கோ. உண்மையில் இந்த விடயத்தில் கமலை போற்ற வேண்டும். மீடியாவுக்காக ஒரு பேச்சு ரசிகருக்கு என்று ஒரு பேச்சு இன்றி தன் படுக்கை அறை விடயங்களை கூட சரியோ பிழையோ உள்ளதை உள்ளபடி ஓரளவு சொல்கின்றார்.

இதேபோல தான் அண்மையில் வாலியின் விழாவிலும் ஒரு பரபரப்பு பேச்சு. சிலவேளை ரஜினி அப்படி பேசி இருக்காவிட்டால் அந்த விழாவே எமக்கு தெரியாமலும் போயிருக்கலாம். ஆனால் அங்கும் அவரின் பேச்சில் தடுமாற்றம். பெரிய மனிதர் பேசும் பாங்கா அது. அதுமட்டுமன்றி தன் வீட்டு கல்யாணத்துக்கு அழைத்தது மட்டுமன்றி வரவில்லை என கடிந்து கொண்ட ரஜினி தான் இவ்வளவு அக்கறை கொண்ட வாலியின் மனைவியின் இறந்த தினத்தை மறந்தாரா இல்லை மறந்தது போல நடித்தாரா? வந்தது தான் வந்துவிட்டார் சபைக்கு வழக்கம் போல வாழ்த்தி பேசிவிட்டு போயிருக்கலாமே. கருணாநிதியின் பேரக்குழந்தைகளையே வாழ்த்தும் இந்த பெரியவர் உண்மையில் பெரிய ஒரு மனிதனை இப்படி கடிந்தது தகுமா? அவர் வந்தால் தான் போவாராம். அதேபோலசிகர்கள் நாங்கள் காசு கொடுத்து படம் பார்ப்பதால் தான் தான் அரசியலுக்கு வந்து நல்லது செய்வதாக சொல்லுகின்றார். நீங்கள் இதுவரை செய்த ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு பாதிக்கப்பட்ட ஒருவன் இதே போல உங்களை மேடையில் ஏற்றி வைத்துக் கேட்டால் எப்படி இருக்கும். வாலியின் அனுபவம் என்ன என்பதை இந்த மன்னன் மறந்துவிட்டார் போல. மேலும் படிக்க.

இதுவரைக்கும் ரஜினி பேசிய செய்த செயகைகள் எல்லாம் ரஜினியின் இந்த ஒரு பேச்சுடன் காற்றில் போய்விடுமா? இல்லை மீண்டும் கண்ணை மூடிக்கொண்டு ரஜினி ரசிகர்கள் இதற்கும் சாக்கு போக்கு சொல்லப்போகின்றார்களா? இல்லையெனில் கடவுள் ரஜினி தான் தப்பாய் பேசிவிட்டேன் என மன்னிப்பு கேட்கப்போகின்றாரா? பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

தன் பிறந்த மாநிலத்தையே எதிர்த்து பேசிவிட்டு பின் தன் படம் ஓடணும் என்பதற்காய் மன்னிப்பு கெட்ட மகான் தானே அவர். இப்போது நான் மகான் இல்லை என சொல்லப்போகின்றாரா? இல்லையேல் எந்திரன் ஓடணும் என்பதற்காய் ஐஸை IFA செல்ல விடாமல் மறித்ததையும் தன் மகள் திருமணத்தை முன்னிட்டு விருந்து கொடுப்பேன் என சொல்லிவிட்டு இன்றுவரை அதைப்பற்றி வாய்த்திறக்காமல் இருப்பதையும் சமாளிப்புகேசன் இல்லை என போகின்றாரா?

என் இந்த பதிவு நிச்சயம் ரஜினி ரசிகர்களை சூடு படுத்தும். ஆனால் இது நீங்கள் நான் என எல்லோரும் சிந்திக்க வேண்டிய ஒரு நேரம். திரையில் என்றுமே ஜாம்பவான் தான் ரஜினி ஆனால் நிஜத்தில் இல்லை இல்லை இல்லை என சொல்லாமல் சொல்கின்றார். அப்புறம் இன்னொரு விஷயம் இந்த பதிவை நான் எழுதியதால் ரஜினிக்கு 32 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது போல எனக்கும் இங்கே நடத்தனும் என நினைப்பவர்களுக்கு ஒரு விஷயம் CCTV in operation. ஹா ஹா ஹா ஹா மெ மெ மெ (இதுவும் திரையுலக சூப்பர் ஸ்டார் வசனம் தான்.உபயம் எந்திரன் )

குறிப்பு: என் சின்ன வயதில் நானும் ரஜினி ரசிகன் தான்.....

இங்கே கோர்த்து விட்டாச்சு அப்புறம் இன்னுமொரு சக்திவாய்ந்த இடம் இருக்கு எல்லா. நம் பதிவுலக சகாக்கள் பற்றிய மகா மொக்கை ஒன்று தயாராகின்றது. மிக விரைவில் டண்டனக்கா தான்
Share:

Sunday, July 18, 2010

ரஜினி என் குரு-விஜய் பல்டி+லோஷன் அண்ணாவுக்கு விருது.

நடிகர் விஜய்க்கு இது போதாத காலம். இவனெல்லாம் இனி சினிமாவுக்கு தேவையா என்ற ரீதியில் இன்று விஜய் நிலை. நடிக்கத்தேரியாது. கெட் அப் மாற்றுவதில்லை. பத்து படத்தில் ஒரே மாதிரி நடிப்பது என்ற விமர்சனங்கள் ஓரளவுக்கு உண்மையாக இருக்கும் நிலையில் இப்போது சித்திக், ராஜா என்று நம்பிக்கை தரும் இயக்குனர்களுடன் விஜய் சேர்ந்திருக்கும் நிலையில் இந்த களங்கங்கள் கடந்து மீண்டு எழுவாரா? அல்லது மீண்டும் அதே குட்டையில் இந்த இயக்குனர்களையும் கொண்டு சென்று தன்னையும் கேவலப்படுத்தி அவர் ரசிகர் எம்மையும் அவமானப்படுத்துவாரா தெரியவில்லை.

ஒரு விஜய் ரசிகர் என்றாலும் விஜயின் இந்த பெட்டியில் இருக்கும் பல்டி எனக்கும் பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் தன் குரு ரஜினி என்றவர் அதன் பின் எம்.ஜி.ஆர் பக்கம் சாய்ந்து விட்டு. மீண்டும் இப்போது தன் குரு ரஜினி என்கிறார். வேண்டாம் விஜய் இந்த பல்டி. இது உங்களை மட்டுமல்லா உங்கள் ரசிகர் என சொல்லும் எமக்கும் கேவலம். உங்கள் முடிவில் நீங்கள் தான் தெளிவாய் இருக்க வேண்டும். ஆலோசனை கேட்பது சரியானது ஆனால் முடிவை சரியாய் தெளிவாய் நீங்கள் எடுங்கள் அதுவே நல்லது. இன்னும் நம்புகின்றோம் அந்த நம்பிக்கையை காப்பாற்றுவீர்கள் என்று.





பி.கு: இந்த பதிவை தயார் செய்து கொண்டிருந்த வேளை கொழும்பு பல்கலைக்கழகம் வழங்கும் இந்த வருடத்துக்கான சிறந்த பிளாக்கர் என்ற விருதை லோஷன் அண்ணா வென்று இருக்கின்றார். ரொம்ப சந்தோசம் எங்களுக்கும். அண்ணே ட்ரீட் வேணும். முக்கியமான விஷயம். மீண்டும் ஒருதடவை விருதை வென்ற அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். இன்னொரு விஷயம் இந்த பதிவுக்கு நான் அவரிடம் திட்டு வாங்குவது உறுதி ஏன் தெரியுமா? முடிந்தால் யாரும் சொல்லுங்கள்.
=>


=>


=>


=>


=>


=>


=>


=>


=>


வேற ஒன்றும் இல்லை விஜய் பற்றிய பதிவுடன் தன்னையும் போட்டிட்டாயே என்று கோபப்படுவார். ஏனென்றால் விஜய் மீது அவருக்கு ரொம்ப பாசம். அப்பிடி கொபிச்சால் உங்களுக்கு தனி பதிவு போட்டு கும்மிடமாட்டோம். எவ்வளவோ பண்றம் இதை பண்ண மாட்டமா?


Share:

Monday, April 19, 2010

சீ போங்க வெட்கமாய் இருக்கு.

என் முதல் இரண்டு போட்டோ கொமண்ட்ஸ் பதிவுகளும் கிரிக்கெட் சம்பந்தமாக இருந்தது. அதற்கு உங்கள் ஆதரவும் அமோகமாக இருந்தது. அந்த சந்தோசத்தில் இப்போது முதல் முறையாக சினிமா பதிவொன்று....இம்முறை என்ன கேட்கப்போகின்றேன். நாங்கள் எப்போதும் ஒரே பேச்சு தான் இண்டைக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒன்றில்லை. அதனால வாக்குப்போடுங்க கருத்து சொல்லுங்க...ப்ளீஸ் சீரியஸா எடுக்காமல் ரசித்து விட்டு போங்க.

இம்முறை பதிவில் முதல் மூன்று படங்களும் பார்ப்பதற்கு கொஞ்சம் எழுத்துக்கள் சிறிதாக இருக்கின்றன. எனவே படத்தில் மேல் சொடுக்கு பெரிதாக்கி பாருங்கள். அடுத்த முறை இந்த தவறை சரி செய்கின்றேன்.










Share:

Monday, April 12, 2010

ரஜினி,கமல்,விஜய்,அஜித் ரம்பா திருமணத்துக்கு வராததற்கு காரணம்.

ஆந்திராவில் பிறந்து தமிழ்நாட்டில் தன் தொடை அழகால் ஆட்சி செய்த ரம்பா ஒருவாறு தன் இல்லற வாழ்வில் இணைந்து விட்டார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி , போஜ்புரி மொழி படங்கள் என மொத்தம் நூறுக்கு மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். இந்த அழகுப்புயல். சிரஞ்சீவி, சல்மான் கான், அணில் கபூர், அஜய் தேவ்கான், கோவிந்தா என வேற்று மொழி முன்னணி நாயகர்களின் ஜோடியாகி பல இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தவர்.

உழவன் திரைப்படத்தில் பிரபு பானுப்பிரியாவுடன் இணைந்து நடித்து தன் அறிமுகத்தை மேற்கொண்ட தொடையழகி கார்த்திக்குடன் இணைந்து நடித்த உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் தமிழ் மக்களின் உள்ளத்தையும் அள்ளிவிட்டார். தொடர்ந்து அர்ஜூனுடன் அடிமைச்சங்கிலி, பிரபுதேவா அப்பாசுடன் சிம்ரனும் ரம்பாவும் இணைந்து வி.ஐ.பில் கலக்கி எடுத்தனர். அதற்க்கு அடுத்த திரைப்படம் ரம்பாவின் திரை உலக வாழ்க்கையில் இன்னொரு மைக்கல். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கூடவே வரும் கதாபாத்திரம் (ஆனால் ஜோடி இல்லை.) அருணாச்சலத்தில் அனார்கலியாகி அள்ளினார் மீண்டும் ரசிகர்களை. அடுத்த படம் அடுத்த தலைமுறையில் முக்கிய நாயகனான தல அஜித்துடன். ஆனால் அந்த படம் பெரிதாக கைகொடுக்கவில்லை. தொடர்ந்து சுந்தர புருஷன், செங்கோட்டை திரைப்படங்கள் ரம்பாவை ஏமாற்றின.


ஆனால் அடுத்த வருடம் உலக நாயகன் பிரபுதேவா இணைவில் வந்த காதலா காதலா படம் ரம்பாவிற்கு இன்னொரு வரலாறு. அதே ஆண்டு காதலர் தினம் திரைப்படத்தில் ஓ மரியா பாடலுக்கு மட்டும் ஆடினார். படம் படுத்தாலும் அந்த பாடலின் நிலை உங்களுக்கே தெரியும். இவர் நடிக்கும் படங்களில் அனேகமாக இரண்டு கதாநாயகிகள் இருந்து கொண்டே வந்தனர். இந்த வரிசையில் இன்னொரு முக்கிய நடிகரான இளைய தளபதியுடன் முதல் முறையாக கைகோர்த்தார் ரம்பா நினைத்தேன் வந்தாயில். இடுப்பு மச்சத்தை வைத்தே மனதில் பச்சை குத்தியது இளைஞர் கூட்டம்.
ஆனால் அடுத்து வந்த ஜானகி ராமன் பெரிய பெயரைக் கொடுக்கா விட்டாலும் அடுத்து வந்த உனக்காக எல்லாம் உனக்காகவில் மீண்டும் கார்த்திக்குடன் ஜோடி சேர உனக்காக நாங்கள் இருக்கின்றோம் என மீண்டும் ரசிகர்களை சொல்ல வைத்தார். அடுத்து பார்த்தீபனுடன் உன்னருகே நானிருந்தால் படத்தில் நடித்தார். அந்த வருடம் நிறைய படங்களில் ரம்பா நடித்திருந்தாலும் பெரிதாக போன படங்கள் ஒன்று இரண்டுதான்.

குடும்பக்கதையாக காதலை கலந்து வந்த பிரஷாந்தின் பூமகள் ஊர்வலம் படமும் மீண்டும் ஒருதடவை குஷ்பூ,மோனிக்காவுடன் இளையதளபதி நடித்த மின்சாரக்கண்ணாவில் விஜய் ஜோடி இல்லாமல் கதாநாயகியாக நடித்தார். படம் படுத்துக்கொண்டது. அடுத்ததும் அதேவருடம் வந்தது விஜயுடன் என்றென்றும் காதல். இந்த படமும் ஏமாற்றியது. இடையில் சுயம்வரம் படத்தில் பல நாயகர்கள் நாயகிகளுடன் இணைந்து உலக சாதனை படைத்தார் இந்த சிணுங்கல் நாயகி.


தொடர் தோல்விகள் கொஞ்சம் ஆட்டியதோ என்னவோ லொள்ளு நாயகனுடன் குங்குமப்பொட்டுக்கவுண்டர் படத்தில் நடித்தார். இந்த படத்திலும் கௌசல்யா இன்னொரு நாயகி. அடுத்து அன்புடனில் அருண்குமாருடனும்(இப்போதைய அருண் விஜய்) மீண்டும் அர்ஜூனுடன் நடித்த சுதந்திரமும் தொடையை சாரி காலை வாரி விட்டது. மீண்டும் கார்த்திக்குடன் இணைந்த அழகான நாட்கள் அழகியை மறக்கவேண்டிய நாட்க
ளாக்கிவிட அடுத்து வந்த ஆனந்தத்தில் தலைகாட்டினார் ரம்பா. மம்முட்டி, முரளி, அப்பாசுடன் நாயகிகள் தேவயாணி, சினேகா நடித்த இந்த திரைப்படம் வெற்றி பெற்றது. ஆனால் அதற்க்கு பின் யாரும் ரம்பாவை சீண்டவில்லை. இதனால் தன் சொந்த செலவில் சூனியம் வைக்க தயாராகி த்ரீ ரோசெஸ் என்ற படத்தில் ஜோதிகா, லைலாவுடன் சேர்ந்து நடித்துப்பார்த்தார். அதுவும் சூனியமாகிப்போக அப்படியே தமிழை விட்டு மெதுவாக ஒதுங்கிய ரம்பா, அதன் பின் தன் முதல் நாயகன் பிரபு அப்பாஸ் நடித்த பந்தா பரமசிவத்தில் நடித்தார் அந்தப்படம் பந்தா காட்டாமல் விட சத்ரபதி அழகிய தீயே படங்களில் சிறு காட்சிகளில் வந்து போனார் .சுக்ரனில் விஜயுடன் குத்தாட்டம் போட்டார்.

அப்படியே அண்மைக்காலத்தில் மானாட மயிலாடாவில் நடுவராக அசத்தி வந்தவர் தன் திருமண வாழ்விற்கான இந்திரனை கண்டுபிடித்துவிட்டார் இந்த ரம்பை. அண்மையில் நடைபெற்ற திருமணத்தை தொடர்ந்து நடைபெற்ற வரவேற்பிற்கு ரம்பாவின் தொடையையும் கவர்ச்சியையும் காட்டி வெற்றி பெற்ற ரஜினி,கமல்,விஜய் அஜித் போன்ற முன்னணி நாயகர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது கவலையான விடயமே. ஒரு காலத்தில் கலக்கோ கலக்கென கலக்கிய புயலின் வீரியம் குறைந்து விட்டது என நினைத்தார்களா இந்த நட்சத்திரங்கள். இப்போதே இப்படி என்றால் ஒரு காலத்தில் ரம்பாவிற்கு ஒரு கவலைக்குரிய விடயம் நடந்தாலோ அல்லது ஏதும் பிரச்சனை என்று வந்தாலோ இவர்கள் எல்லாம் ஏறேடுத்துப்பார்பார்களா? தயவு செய்து இந்த நடிகர்களின் ரசிகர்கள் கோவித்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கலாம் ஆனால் இதுவும் ஒரு வேலையாக கொண்டு நீங்கள் செய்யத்தானே வேண்டும் காரணம் உங்களை எல்லோரும் கவனிக்கின்றார்கள். இல்லாவிடால் என்னை போல ஒரு சிலர் எழுதலாம் ஊடகங்கள் கிழிக்கலாம்.



சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களே உங்களுடன் நடிக்காத தப்பு செய்த புவனேஸ்வரி
க்கு வக்காலத்து வாங்கிய கூட்டத்துக்கு போனீர்கள் வாழ்த்து சொல்ல நேரம் இல்லையா உங்களுடன் நடித்தவருக்கு?

உலகநாயகனே உங்களுக்கு வேண்டுமென்றால் திருமணத்தில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் ஆனால் பந்தத்தில் இணைபவர்களுக்கு வாழ்த்துவது மரபுதானே.

இளைய தளபதி உங்களுக்கு ஆயிரம் தலைவலிதான் ஆயிரம் திருமணம் செய்துவைப்பதை விட ஆயிரம் காலப்பயிர் ஒன்று நன்றாய் வாழவேண்டுமென வாழ்த்துவது எவ்வளவு முக்கியம் என தெரியாதா? த்ரிஷா உங்கள் திருமணத்துக்கும் வரமாட்டார். அரசியலில் ஆணி பிடுங்கமுதல் இப்படி நாலு இடம் போய் வாழ்த்தினால் தானே நீங்களும் அரசியல் வாதி ஆகலாம். காரணம் கடைசியில் சொல்கின்றேன்.

தல கல்யாணம் போய் வாழ்த்த கட்டுப்பாடு இல்லை யாரும் கட்டாயப்படுத்திறதும் இல்லை. நீங்கள் இங்கே இல்லையோ தெரியாது ஆனால் சோனா பிறந்தநாளுக்கு போறிங்க யாரும் கட்டாயப்படுத்தாமல் இந்த ரம்பைக்கு ஒரு வாழ்த்து சொன்னால் என்ன தல.

இவங்கெல்லாம் இருக்கட்டும் வந்தா என்ன வராவிட்டால் என்ன இவ்வளவு வேலைகளுக்கும் நடுவில் இந்த வயதிலும் ஓயாது ஓடிக்கொண்டிருக்கும் இளைஞர் கலைஞர் கருணாநிதி நேரே வந்து வாழ்த்தும் போது உங்களுக்கு எங்கே போய்விட்டது. எனக்கு இப்போ காரணம் புரிந்து விட்டது ரஜினி,கமல்,விஜய்,அஜித். அவர் போனால் பாராட்டு விழா வைப்பாங்க இவ்வளவு சுமைக்கு நடுவில் வந்து வாழ்த்தியதுக்கு வாழ்த்து தெரிவித்து மிக விரைவில் பாராட்டு விழா நடக்கும் அப்போது இங்கே வராத இவர்கள் அங்கெ வர வேண்டுமே. இங்கே வராததுக்கு காரணம் அஜித் சொன்னதுபோல எல்லா இடமும் போனால் டஎர்ட் ஆகிடுவாங்க. அதேபோல இவங்க வந்தா என்ன பாராட்டு விழாவா நடத்தப்போறாங்க.
Share:

Monday, February 22, 2010

அஜித் விஜயிடம் சொன்ன ரகசியம்-குகநாதனிடம் மல்லுக்கட்டிய விஜய்.


மீண்டும் ஒரு அஜித் பதிவை எழுதிக்கொண்டிருந்த இடையில் இன்னொரு அஜித் பதிவு. எனக்கும் அஜித்துக்கும் இடையில் இப்போ அப்பிடி ஒரு பொருத்தம் போல இருக்கு. சரி நேரே விசயத்துக்கே வாறன். ஏற்கனவே ஒரு பதிவை விஜய்-அஜித் நட்பு பற்றியும் விஜய் அஜித்திடம் பேசியது பற்றியும் இட்டிருந்தேன். அதை படிக்க இங்கே அழுத்துங்கள்.

அந்த பதிவே இவர்கள் இரண்டுபேருக்கும் இடையிலான புரிந்துணர்வை காட்டி இருக்க. இப்போது இன்னொரு செய்தி வெளிவந்திருக்கின்றது. அஜித் பிரச்சனையில் அஜித்துக்கு ஆதரவாக நின்று கைதட்டியதும் பேசியதும் சூப்பர் ஸ்டார். அவருக்கே பெப்சி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துவிட அவர் பக்கமும் சத்தம் இல்லை. என்ன நடந்ததோ என தெரியாமல் நின்ற நேரம் இதோ நான் இருக்கேன் நீ என் நண்பன்டா உன்னை விட்டுவேனா என வந்திருக்கின்றார் நம் தளபதி. தலைக்காக தன் தலைய நுழைத்து சமரசம் செய்ய முற்பட்டிருக்கின்றார் விஜய்.

தொழில் இருவரும் எதிரிகள் இவர்கள் சேரமாட்டார்கள். என எண்ணியவர்கள் மூஞ்சியில் கரி பூசி இருக்கின்றார் விஜய். இதில் பலருக்கு தெரியாத இன்னொரு விசயமும் வெளிவந்திருக்கின்றது. இருவரும் திரையில் மோதிக்கொண்டாலும்(அண்மையில் குறைவு.) கிறிஸ்மஸ்,புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒன்றாக ஒரே இடத்தில் கொண்டாடி வருவதாக ஒரு செய்தி கசிந்துள்ளது. (என்ன அதிசயம் இது.)

அப்படிப்பட்ட தன் உயிர் நண்பனுக்கு பிரச்சனை என்ற போது பார்த்துக்கொண்டிருப்பார தளபதி. உடனடியாக் வி.சி.குகநாதனை தொடர்புகொண்ட விஜய்"அஜித் ஒரு திறந்த புத்தகம் மாதிரி அவர் மனதில் ஒன்றுமில்லை. நினைப்பதை உடனே கொட்டிவிடுவார். அதை பெரிது படுத்தவேண்டாம். வீணாக அவரின் மன உளைச்சலை அதிகரிக்க வேண்டாம்" என கேட்டிருக்கின்றார்.

இதை விட இன்னொரு செய்தி திடுக்கிட வைத்திருக்கின்றது. கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் சந்தித்த இருவரும் பேசியபோது இன்னும் சில ஆண்டுகளில் நடிப்பை கைவிட இருப்பதாக அஜித் விஜயிடம் தெரிவித்திருக்கின்றார். அதனை குறிப்பிட்டு பேசிய விஜய்,அவர் இந்த துறையில் இருக்கும் வரை அவரை கஷ்டப்படுத்தவேண்டாம் என கேட்டுக்கொண்டாராம். ஆனால் விஜயின் பேச்சையும் கேட்டு கோபமடைந்த குகநாதன் அவரை யார் நடிக்க சொன்னார் விருப்பமில்லாவிட்டால் போகட்டும் என சொன்னாராம்.

இந்த குகநாதன் போன்றோர் திருந்தமாட்டார். தேவையான நேரத்தில் தேவையானதை செய்யாமல் இப்படி கண்கெட்ட பிறகு நமஸ்காரம் செய்கின்றனர். அஜித் தேவையான இடத்தில் சொல்ல வேண்டியவரிடம் தான் இதை சொல்லி இருக்கின்றார். அனால் அதன் பின் நடக்கும் பிரச்சனைகளை அவர் பார்ஹ்த்துக்கொண்டிருப்பதே கொடுமையிலும் கொடுமை.

ரசிக சிகாமணிகளே, விஜயை ரசித்து அஜித்தை கேவலப்படுத்துவோரே, தலைய கொண்டாடி தளபதிய இழிச்சவாயனாக்குபவர்களே இவர்கள் இரண்டுபேருக்கும் ரசிகனில்லாமல் இவர்களை பற்றி தெரியாமல் இருந்து உசுப்பி விடும் நல்லுள்ளங்களே இப்போதாவது புரிகின்றதா இந்த இருவரின் நட்பு. உங்கள் நட்பு வளரட்டும். தல இனி என்ன கவலை உன் எதிரி என எல்லோரும் நினைத்தவர் உன்னுடன் உற்ற தோழனாக உண்மையில் நமக்கு சந்தோசம்.
Share:

Sunday, February 21, 2010

நடிப்பை விட்டு விலக தயார்-அஜித் பேட்டி



எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்க மாட்டேன். நான் தவறாக எதுவும் பேசவில்லை. தேவைப்பட்டால் நடிப்புத் தொழிலைவிட்டே விலகுகிறேன்... மீண்டும் ரேஸுக்குப் போகிறேன்," என்று அதிரடியாக கூறி விட்டார் தல.

முதல்வர் கருணாநிதியை அஜீத் சந்திப்பதற்கு முன்பு டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு ஒரு சிறப்புப் பேட்டி அளித்திருந்தார்.அந்த பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்."முதல்வருக்கு நடந்த விழா மேடையில் நான் பேசியது எழுதித் தயாரிக்கப்பட்ட பேச்சல்ல. அந்த நேரத்தில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசினேன். என் இதயத்தின் ஆழத்திலிருந்து வந்த பேச்சு அது. அதில் எந்தத் தவறும் இல்லை. உண்மைகளைப் பேசினேன்... என்ன நடந்ததோ, அதைத்தான் சொன்னேன்.வெளிப்படையாக சொல்கின்றார் தல.

நடிகர்களை, விளையாட்டு வீரர்களை உருவாக்கியது சமூகம்தானே… அவர்களுக்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா?

நடிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் மட்டும்தான் சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும் என்பதே விவாதத்துக்குரிய ஒன்று. ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது. ஆனால் அரசியல் என்று வரும்போது, நடிகர்கள் விசேஷ கவனம் பெறுகிறார்கள். பல சமையல்காரர்கள் சேர்ந்து விருந்தைக் கெடுத்த மாதிரி ஆகிவிடுகிறது. என்னைப் பொறுத்தவரை, அரசியல் விவகாரத்தை அரசியல்வாதிகளும் அதற்கான கட்சிகளும் பார்த்துக் கொள்ளட்டும். எனக்கு இந்த அரசியல் முறை மீது நம்பிக்கை உண்டு. நடிகர்களுடன் அரசியல் தலைவர்கள் சுமுகமாக இருந்தாலே போதும்.

ஏன் இங்கு ஒரு நடிகரால் சுதந்திரமாக கருத்து சொல்ல முடிவதில்லை?

இங்கே எல்லா பிரச்சினைகளைப் பற்றி பேசவும், தீர்க்கவும் நடிகர்கள் வேண்டும் என்கிறது ஒரு கூட்டம். அதேநேரம் நடிகனுக்கு சமூகப் பிரச்சினைகளில் என்ன வேலை... அவன் வேலையை மட்டும் பார்க்கட்டும் என்று கேட்கவும் ஒரு கூட்டம் இருக்கிறது. இதற்கு இடையில் மாட்டிக் கொண்டு விழிப்பது நாங்கள்தான்.

யாராவது ஒரு நடிகர் பெரிய முயற்சி செய்து அரசியலுக்குள் நுழைந்தால் உடனே அவரைத் தடுக்கப் பார்க்கிறார்கள், (
தளபதியை சொல்கின்றாரோ.)தாறுமாறாகத் திட்டுகிறார்கள். ஒரு நடிகன் வாழும் மாநிலத்தின் அரசியலில் பங்கெடுக்கக் கூடாது என்று சொல்பவர்களுக்கு, அவனை சமூகப் பிரச்சினைகளில் ஈடுபட வேண்டும் என்று சொல்லவும் எந்த உரிமையும் இல்லை. இதில் அவனது பிறப்பு, இனம் போன்றவை குறித்த கேள்வி எதற்கு வருகிறது? ஒரு நடிகர் பல லட்சம் மக்கள் மனதில் இடம் பிடித்த பிறகும், அந்த மக்கள் அவனது பேச்சைக் கேட்டு பின்னால் வரத் தயாராக உள்ள நிலையிலும் அரசியலுக்கு வரக்கூடாது என்று சிலர் எதிர்ப்பு காட்டுவது என்ன நியாயம்?

பிறப்பு, இனம்தான் பிரச்சினையாக்கப்படுகிறதா இங்கே?

அது இங்கு மட்டுமல்ல... எல்லா இடத்திலும்தான். ஒரு சினிமா ரசிகன் டிக்கெட் வாங்கி படம் பார்க்கச் செல்லும்போது அல்லது கிரிக்கெட் பார்க்க செல்லும்போது, தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பார்க்கும் ரசிகன் என்ன ஜாதி, மதம், நிறம், இனம் என்றெல்லாம் பார்ப்பதில்லை. அதுதான் கலையின் சிறப்பு. அந்தக் கலைதான் இந்த மொத்த தேசத்தையும் ஒரு கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஆனால் திரைக்கு வெளியே அதே கலைக்கு ஜாதி, இன வர்ணம் பூசுகிறார்கள். எந்த நடிகரின் ரசிகர் கூட்டத்தை எடுத்துக் கொண்டாலும், அவர்கள் குறிப்பிட்ட இனம், மொழிக்கு மட்டும் சொந்தக்காரராக இருக்க மாட்டார்கள். விளையாட்டு, சினிமா போன்ற கலையால் மட்டுமே ஒன்றுபட்டிருப்பதைப் பார்க்கலாம்.

நக்சல் இயக்கத்தவராக, மனித வெடிகுண்டு போன்ற பாத்திரங்களில் நடிப்பீர்களா?

கடந்த சில நாட்களாக நடப்பதைப் பார்க்கும்போது, எனக்கு மீண்டும் காமிராவுக்கு முன்னால் நிற்கவே பிடிக்கவில்லை. ஒரு நடிகனுக்கு இங்கே படைப்புச் சுதந்திரமே இல்லை. ஒரு நடிகன் திரையில் புகைப்பிடிப்பது போன்ற காட்சியில் நடித்தால் அது இளம் தலைமுறையை பாதிக்கும் என்கிறார்கள். ஆனால் அதே நடிகன் அரசியலுக்குள் நுழைந்து இளம் தலைமுறையை தன்வசப்படுத்த முயற்சித்தால், 'நடிகனுக்கு இங்கே என்ன வேலை?' என்கிறார்கள்.

ஆனால் நீங்கள் 50 வது படம் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளீர்களே…

உண்மைதான். தயாநிதி அழகிரி தயாரிக்கும் படம் இது. கண்டிப்பாக பண்ணணும்தான். ஆனால், எப்போது எனது பிறப்பும், இனம் குறித்த கேள்விகளும் இங்கே எழுந்துவிட்டதோ, இனி நடிக்கணுமா என்றுதான் தோன்றுகிறது. மீண்டும் எனது பார்முலா 2 கார் பந்தயங்களில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தரவே நான் விரும்புகிறேன்.

பார்முலா 2 பிரிவில் எனது நுழைவு அனுமதிக்கப்பட்ட ஒன்று. ஐரோப்பாவில் ஏப்ரல் - அக்டோபர் மாதங்களில் மோட்டார் ரேஸ் நடத்தும் 10 நாடுகளில் 8-ல் என்னால் நிச்சயம் பங்கேற்க முடியும்.

நாட்டின் 10 முன்னணி ரேஸ் வீரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதில் இந்த மாநிலம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக் இருவரும் இப்போது பார்முலா 1 பந்தயங்களில் பங்கேற்பவர்கள். அர்மான் இப்ராகிம், பர்திவா சுரேஷ்வரன், நான், அஸ்வின் சுந்தர் போன்றவர்கள் வேறு பிரிவுகளில் பங்கேற்கும் தகுதி நிலையை அடைந்தவர்கள். பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளோம்.

பைக் ரேஸிலும் நிறைய வீரர்கள் உள்ளார்கள் இங்கு. இதற்கு நல்ல ஸ்பான்ஸர்ஷிப்பும் கிடைக்கிறது. எதிர்காலத்தில் வெளிநாடுகளில் உள்ளது போல, ஸ்ட்ரீட் மோட்டார் ஸ்போர்ட் போட்டிகளை நடத்தவும் திட்டமிருக்கிறது..."

இவ்வாறு தல கூறினார்.
இம்புட்டு நாளா நான் வெறுத்த ஒருவர் மேல் இப்போது என்னை அறியாமல் ஒரு அன்பு. தல நீங்கள் பார்க்காத பிரச்சனைகளா தோல்விகளா? இந்தக்கலக்கம் எதற்கு. ஆனால் மன்னிப்பு கேட்டால் தான் நடிக்கலாம் என்ற போது உங்கள் இந்த பதில் சூப்பர். தன மானத்தை இழந்து வாழும் நிலை யாருக்கும் வரக்கூடாது. நீங்கள் இப்போது சொன்ன இந்த வசனத்தை கூட திரிவுபடுத்தி மன்னிப்பு கேட்கமாட்டேன் என தல இறுமாப்பு என்ற செய்தி வந்தாலும் ஆச்சரியமில்லை. நீங்கள் இந்த சினிமாவை விட்டு போனால் இழப்பு உங்களுக்கல்ல சினிமாவுக்குத்தான். அப்போது தெரியும் தலையின் அருமை.

இது ஏனோ உங்களுக்கு கஷ்டகாலம் உங்களை இன்னும் பண்படுத்த இன்னொரு வாய்ப்பு. உங்கள் கூட இப்போது இரண்டு பெரிய நடிகர்கள். ரஜினியின் ஆலோசனை இப்போது நிச்சயம் உங்களுக்கு உதவும் காரணம் அவரும் அடிபட்டவர். அடுத்தவர் உங்களில் இப்போதைய நெருங்கிய நண்பன் விஜய். அவரின் ஆறுதலு, அருகாமையும் நிச்சயம் உங்களை ஆறுதல் படுத்தியிருக்கும்.
ஒரு விஜய் ரசிகனாக சொல்கின்றேன் நீ தமிழனாக பிறக்காவிட்டாலும் தப்பு செய்யவில்லை அதனால் மன்னிப்பு கேட்கமாட்டேன் என சொன்னபோதே முழுத் தமிழனாகிவிட்டாய் . தமிழன் தன்மானம் இழக்கமாட்டான். போதும் இனியாவது இனம் மதம் களைந்து கலையை கலையாகவும் மைதரை மனிதராகவும் மதிப்போம். அஜித் பிறப்பில் தமிழனாக இல்லாவிட்டாலும் மனிதன் தானே. அந்த மனிதனை நினைத்து பெருமைப்படுவோம். அவர் செய்த கடந்த கால தவறை மன்னிப்போம். தமிழன் தமிழன் என சொல்லும் நம் பண்பு அதுதானே. இல்லாவிட்டால் நாம் தமிழரா?
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox