உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label சிம்பு. Show all posts
Showing posts with label சிம்பு. Show all posts

Friday, February 5, 2010

சிம்பு மீண்டும் வம்பு- "கோ"விலிருந்து GO




அயன் படத்தை தொடர்ந்து கே.வி ஆனந்த இந்த கோ என்ற படத்தை ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார் அவர் Go சொன்ன ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. முதலில் பருத்தி வீரன் ஆயிரத்தில் ஒருவன் கார்த்தி, கதையில் தனக்கேற்ப மாற்ற சொல்ல கே.வி மறுத்து விட்டார். அழைத்தார் சிம்புவை வம்பெல்லாவற்றையும் தூக்கிப்போட்டு விட்டு வந்து நல்ல பிள்ளையாக நின்றார். கதையே சொல்ல தேவை இல்லை. நடித்துக்கொடுத்து விட்டு போகின்றேன் என்றவர் பின்னர் தன பிறந்தநாள் அன்று தனக்கும் கே.விக்கும் இடையில் ஒத்துவரவில்லை எனவே பிரிந்து விடுவோம் என அறிவித்து விட்டார். இதன் உள் குத்து வெளிக்குத்துகளை விரைவில் எதிர்பார்க்கலாம்.

இப்போதான் ஏதோ வம்பெல்லாம் விட்டு அழகான பையனாக விண்ணை தாண்டிவர அழைத்த சிம்பு மீண்டும் தன் பெயரை காப்பாற்றி விட்டார்.(அதுதாங்க வம்பு பண்றது.) லிட்டில் சூப்பர் ஸ்டாரில் இருந்து யங் சூப்பர் ஸ்டார் ஆனவர் மேச்சுருட்டி வந்தது போல பேட்டியும் கொடுத்தார். அட சிம்பு திருந்தி விட்டார். இனி நல்ல படங்களை எதிர்பார்க்கலாம் என்றால் மீண்டும் இப்படி ஒரு செய்தி.

அடுத்து என்னதான் நடக்கும்? யார்தான் ஹீரோ? என விசாரித்ததில். அண்மையில் பெரிய வெற்றிப்படம் எதையும் கொடுக்காத ஜீவாவை கே.வி ஆனந்த் அணுகியதாக சொல்லப்படுகின்றது. சிங்கம் புலி,கச்சேரி ஆரம்பம் படங்களில் நடிக்கும் ஜீவா அடுத்து இதில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நீங்களாவது இந்த படத்தை முடிச்சு கொடுங்கப்பா.

இந்த படம் மூலம் ராதாவின் மகள் கார்த்திகா அறிமுகமாவாது குறிப்பிடத்தக்கது. முக்கிய கதாபாத்திரத்தில் அஜ்மல் நடிக்க, ஹரிஷ் ஜெயராஜ் இசை அமைக்கின்றார். ஜீவாவாது "கோ"வாவாரா அல்லது Goவா பொறுத்திருந்து பார்ப்போம்.
Share:

Wednesday, November 4, 2009

மீண்டும் இணையும் சிம்பு-நயன்?




ஐயா படத்தில் அறிமுகமான நயனை ஐயகோ என்ன கொடுமை இது என சொல்ல வைத்த படம் வல்லவன். பல்லனாக நுழைந்த சிம்பு மன்மதனாகி பின் வல்லவனாகும் நேரம் நயன் வல்லவளாகி
பல்லனின் பல்லை உடைத்த கதை எல்லோருக்கும் தெரியும். அதன் பின் இரண்டுபேரும் காதல் தோல்வியில் வாட நயனோ பில்லாவில் பிகினியில் வந்து பிஞ்சு நெஞ்சுகளையும் கெடுத்தார். சிம்புவும் ஒருபுறம் தன் வழியில் போனாலும் பெரிய வெற்றிப்படங்கள் இன்றி போய்க்கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் தங்கள் சொந்தக்கதை சோகக்கதையை கெட்டவன் என்னும் பெயரில் தொடங்கிய சிம்பு அதை கெட்டுப்போகவே விட்டுவிட்டார். இடையில் சிம்பு வரலட்சுமி (சரத்குமார் மகள்) பக்கம் சாய(படத்துக்கு கதாநாயகி மட்டுமே) நயனம் பிரபுதேவாவில் சயனம் கொண்டது ஊரரிந்ததே. இப்போது இந்த கூட்டணியிலும் ஒரு சிறு விரிசல் மறுக்கமுடியா உண்மையே.

இந்த நிலையில் மீண்டும் தன் சகலகலாதன்மையை நிரூபிக்க சிம்பு தயாராகிவிடார். வாலிபன் படத்துக்கு கதை திரைக்கதை எழுதி நடிக்கப்போவதே அவரேதான்(வல்லவனிலும் இதே கதை தான்) ஆரம்பத்தில் சரத்தின் மகள் வரலட்சுமியை கதாநாயகியாக கேட்டு ஒப்புதல் வாங்கியபின் என்ன காரணமோ சாக்கு போக்கு சொல்லி பின்வாங்கி விட்டார் நாட்டாமையின் மகள். ஆனால் இப்போது மீண்டும் அவர் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கும் நிலையில் சிம்புவின் பார்வை மீண்டும் நயனின் பக்கம் திரும்பி இருக்கிறது.

என்னடா ஆச்சரியம்? நம்பமுடியலையே, உங்களை கிள்ளிப் பார்க்கிறிங்களா? என்ன செய்வது சில உண்மைகள் நம்பமுடியாதுதானே. வாலிபனில் வாலிபி (சும்மா ஒரு டைமிங்க்கு தான் தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும் ) நாயனாக இருந்தால் நல்லம் என கெட்டவன் (சாரி வாலிபன் ) யோசிக்க ஆரம்பித்து விட்டார். அண்மையில் சென்னையில் நடந்த விழா ஒன்றில் அருகருகே இருந்தும் எதுவும் பேசிக் கொள்ளாத இந்த ஜோடி அதன் பின் தொலைபேசியில் தங்கள் அன்பை பொழிந்திருக்கிறது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் இனி அவனுடன் தொடர்பில்லை என சீறிய நயனே சிம்புவுக்கு அழைப்பெடுத்து வம்பில் மாட்டி இருக்கின்றார். பத்து நிமிடம் உரையாடிய இந்த ஜோடிக்கு பழைய தீ பற்றியதோ தெரியவில்லை வாலிபனில் நடிக்கிறாயா என கேட்க நயனும் யோசித்து செல்வதாக சொல்லி இருக்கின்றாராம். அப்போ பிரபுதேவா???? அந்த யோசித்து என்பது பிரபுதேவாவிடம் கேட்டா அல்லது அவரை கட்டி விட்டா என்பது இன்னும் சில நாட்களில் தெரியும்.
Share:

Monday, October 19, 2009

நயன்தாராவை சங்கடப்படுத்திய சன் டி.வி



தீபாவளி நாள் எனக்கு இம்முறை ஏனோ தித்திக்கவில்லை. சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய பிளிம்பெயார் விருது வழங்கும் விழாவை பார்த்து விட்டு மதிய உணவும் முடித்தது விட்டு நல்லா தூங்கி எழுந்து வரும் போது என் மனதில் ஏனோ கோபம் வெறுப்பு. அப்படியே வந்திருந்து போட்டது சக்தி தொலைக்காட்சியை.

தீபாவளி நாள் தானே நம்ம தளபதி நடித்த அழகிய தமிழ் மகன் போய்க்கொண்டிருந்தது. அது முடிய ஐந்து மணிக்கு தானே சன் டி.வியின் பட்டிமண்டபம் வரும்(பட்டி மன்றம் என்பது சரியான தமிழ் பதம் அல்ல) அதற்க்கு முன் அரை மணித்தியாலம் இருக்கே என்ன நிகழ்ச்சி என பார்ப்போம் என பொறுத்திருந்த எனக்கு அந்த காத்திருப்பு வீண்போகவில்லை.


தமிழ்நாட்டின் மாதவி(கண்ணகி வேறுயார் நம்ம பிரபுதேவா மனைவி ரம்லத் தான்) திரையில் வந்தார். அடடா தமிழ் நாட்டுக்கே வரமட்டேன் என்ற புயல் இன்று அதுவும் தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கப்போகின்றதே. நயனை தமிழ் நாட்டிலேயே கால் வைக்க விடமாட்டேன் என்றவர்கள் எங்கப்பா போய்ட்டார்கள் என்ற எண்ணத்துடன் பொண்ணு(ஆதவன் விமர்சனங்களை பார்க்கும் போது வயதான பொண்ணு என சொல்லணும் போல) என்னதான் சொல்லப்போகிறது பார்ப்போம் என காத்திருந்தேன்.


வழக்கம் போல ஒருவர் பரவாயில்லை ஓரளவு அழகா இருந்தார் அவர்தான் நயனை பேட்டி எடுக்கப்போகும் புண்ணியவான் நயன் மனம் திறந்து(எதை எதையோ எல்லாம் திறந்து காட்டியவர் இதை காட்டமாட்டாரா? ) பதிலளிக்கப்போகின்றார் என சொல்லியே ஆரம்பித்தார். பேட்டி ஆரம்பம் ஒரு சில நிமிடத்திலேயே சூடு பிடித்தது. பேட்டி எடுத்தவரின் குறிக்கோள் நயனின் செவ்விதழ் திறந்து சிம்பு, பிரபுதேவா பற்றி சொல்லவைப்பதே. (நமக்கும் என்ன சொல்லப்போகின்றார் என்ற ஆசைதான்.) அதற்க்கு அவர் ஆயுதமாக பாவித்தது காதலை.(அடப்பாவிங்களா சிம்புவோட காதல் எண்டால் ஏற்கலாம் பிரபுதேவாவோடும் என்பது தாங்கமுடியாது.) பெட்டியில் அடிக்கடி காதலை மையப்படுத்தியே மனிதர் கேள்விகளை கேட்க ஆரம்பித்தார். பாடசாலையில் காதல்? இது கேள்வி நயனும் சளைக்காமல் நிறைய பசங்க லெட்டர் கொடுத்தாங்க நான் யாரையும் காதலிக்க என்றார்.


தொடர்ந்து விட்டாரா பேட்டி எடுத்தவர் அப்போ உங்க முதல் காதல்? என்றார் நயன் சொன்னார் அதுதான் உங்க எல்லோருக்கும் தெரியுமே ஊரறிந்த அந்த காதல் தான் என் வெளிப்படையாக சிரித்தது சிரித்தே சொல்லிவிட்டார். அத்தோடு விட்டிருக்கலாமே. எதுவுமே தெரியாத பச்சை பிள்ளை போல அப்பிடியா யாரை எங்கே காதலிச்சிங்க என கேள்விமேல் கேள்வி கேட்க நயன் சங்கடப்பட்டு போனார். சிரிப்பே அவர் பதிலாக வந்தது மட்டுமில்லாமல் இதை விட்டுவிடுங்கள் என எத்தனையோ முறை சொல்லியும் வேதாளம் முருங்கை மரக்த்டில் இருந்து இறங்கவில்லை. பார்த்துக்கொண்டு இருந்த எனக்கே அட என்ன மனிதனடா இவன் என்ற எண்ணம் வந்தது. என்னதான் நயன் செய்தது தவறாக இருந்தாலும் ஒரு பிரபல நடிகை அதுவும் பல நாடுகளில் ஒளிபரபரப்பாகும் சன்.டியில் தீபாவளி நிகழ்ச்சியை எத்தனை பேர் பார்ப்பார் அப்படி இருக்கையில் இப்படியான தர்மசங்கடமான கேள்வியை தவிர்த்திருக்கலாம்.


ஆனால் அடுத்து நடந்தது இதை விட கொடுமை. தன் பழைய தொழில் நினைவு வந்ததோ தெரியாது பேட்டி எடுத்தவர்க்கு நயனிடம் உங்க இடக்கையை காட்டுங்க ஜோதிடம் சொல்லப்போறேன் என்றார் தடுக்க முயன்றார் முடியல. (நானும் பயபுள்ளைக்கு நயனின் கையை பிடிக்க ஆசை போல என நினைக்க பய கைய தொடல.) இறுதியில் கையைப்பார்த்து ஜோதிட சிகாமணி நயனின் பூர்வீகத்தை சொல்லியவர் உங்களுக்கு தமிழ் நாட்டை சேர்ந்த ஒருவர்தான் வாழ்க்கையில் பெரும்பகுதியை கொடுக்கப்போகின்றார் என அடுத்த ரூட்டை போட்டார்.


அப்படியே அவர் பார்வை கொஞ்சம் மேலே போய் நயன் கையில் இருந்த பச்சையில் நின்றது. எல்லோருக்கும் தெரிந்த பிரபு என்று நயன் கையில் உள்ள பச்சை விடயம் தெரியாத நம் அறிவு நிரம்பிய பேட்டி எடுத்தவர் அதை கிளறினார். நேரடியாகவே கேட்டார் நயன் உங்களுக்கு உண்மைக்கும் தெரியாத இந்த விடயம்தான் எல்லோருக்கும் தெரியுமே நீங்கள் வேண்டுமென கேட்கின்றீர்கள். வம்பில் (சிம்பு இல்லை) மாட்டப்பார்க்கிறீர்கள் என சிரித்து சொனாலும் நயன் மனதில் வாடா மவனே உனக்கு இருக்கெண்டு என சொல்லிரியிருப்பார்.(பார்த்த எனக்கே வெறுப்பும் கோபமும் கூடும் போது அவர்க்கு வராதா என்ன?) ஆனால் அவரோ விடுவதாக இல்லை. பொருத்தது பார்த்த நயன் இறுதியில் பொங்கி எழுந்து உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நேரடியாக கேட்டு விடுங்கள் இப்படி அங்கெ சுற்றி இங்கே சுற்றி வரவேண்டாம் என சொன்னதும் பயல் கொஞ்சம் அடக்கிவாசிக்க ஆமா பிரபு என குத்தி இருக்கேன் எனக்கு பிடிச்சவர் பெயரை நான் குத்தி இருக்கேன் என நேரே சொல்லிவிட்டார். சாத்தித்து விட்டார் பேட்டி
எடுத்தவர். . பேட்டியும் நல்ல படியாக முடிந்தது.

ஒரு பொறுப்பான(?????) பலர் பார்க்கும் அதுவும் தீப திருநாள் அன்று பிரபல நடிகை ஒருவரை வேண்டுமென்றே இப்படி செய்ததோ என தோன்றுகின்றது. காரணம் பார்த்த்ட எனக்கே சங்கடமாக இருக்கும் போது சம்பந்தப்பட்ட நயனுக்கு இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல எவ்வளவு சங்கடம் வந்திருக்கும். நான் நயன் புகழ் பாடுகின்றேன் என நினைக்கவேண்டாம். ச டி.வி செய்த இந்த நிகழ்ச்சி என்னை பொறுத்தவரை தப்பே. வேறு கேள்விகை கேட்டிருக்கலாம். அதை விட்டு விட்டு அசிங்கமான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பேட்டி எடுத்தா சன் இன்று வில்லனாக செய்தது தப்பென்றாலும் தைரியமாக சொன்ன நயன் நிஜ கதாநாயகி ஆகிவிட்டார்.

என்னிடம் அந்த பேட்டியின் வீடியோ இல்லை யாரும் நண்பர்களிடம் இருப்பின் அதை பகிருங்கள் பார்க்காதவர்களும் பார்த்து இன்பம் பெற.

பி.கு: ஏனோ தெரியல பின்னூட்டங்களுக்கு பதில் சொல்ல மனது இன்னும் நேரத்தை கொடுக்கல. வரும் போது சொல்கின்றேன். நிறைய நண்பர்கள் நிறைய பதிவில் கேட்டவை காத்திருக்கு.
Share:

Tuesday, April 21, 2009

வெளிவந்துவிட்டது விஜயின் வேட்டைக்காரன் அறிமுகப்பாடல்.

அழகியதமிழ்மகன், குருவி, வில்லு என்ற சுமாரனா படங்களின் பின்னர் பத்திரிக்கையாளர் மாநாட்டில் ஏற்ப்பட்ட "Silence" பிரச்சனை என்பவற்றை தொடர்ந்து விஜய் நடிக்கும் வேட்டைக்காரன் திரைப்பட அறிமுகப்பாடல் ஒரு கற்ப்பனையில். அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே........ என்னும் Style இல் பாடிப்பாருங்கள். இது யாரையும் புண்படுத்த அல்ல சும்மா ஒரு ஜாலிக்காக.
Silence இல்லை Silence இல்லை Silence என்பது இல்லையே
பத்திரிக்கையாளர் மாநாட்டில் நான் பேசும் போதிலும்
Silence இல்லை Silence இல்லை Silenceஎன்பது இல்லையே
கஷ்டப்பட்டு மூன்று படங்கள் நடித்துக்குடுத்தபோதிலும்- பெரிய
வெற்றி இல்லை வெற்றி இல்லை வெற்றி என்பது இல்லையே


Super Star நாற்காலிக்கு குறிவைத்தபோதிலும்
ரஜினி அந்த இடத்தை இன்னும் எனக்கு விட்டுக்குடுக்கவில்லையே
எம்.ஜி.ஆர், ரஜினி வழியில் நான் போகும் போதிலும்
சிம்பு, தனுஷ் அந்த வழியை விட்டு வைக்கவில்லையே
கொடி அறிமுகப்படுத்தி அரசியலில் குதிக்க முயலும்போதிலும்
அதில் கூட ஜெயிப்பேனா மக்கள் உங்களை கேட்கின்றேன்

கோடி கோடியாக நான் சம்பளம் வாங்கும் போதிலும்
என் படங்கள் கோடி கோடியாக வசூலிக்கவில்லையே
அழகிய தமிழ் மகனாய் மனிதனாகி நின்றேனே
குருவியாக பறக்க முயன்று சிறகொடிந்து போனேனே
வில்லெடுத்து அம்புகொண்டு வெற்றிக் கனி பறிக்க எய்தேனே
அத்தனையும் உடைந்து போக வேட்டைக்காரனாகி வருகின்றேன்

என்னால் முடிந்தவரை நடித்து பார்த்துவிட்டேனே-இப்போ
மகனை கொண்டு பெருமை சேர்க்கும் வேட்டைக்காரன் நானடா
என் பட தோல்விகளால் பலர் துவண்ட போதிலும்
கலங்கமாட்டேன் உங்களை நான் கலங்கவைத்து மகிழ்வேனே.
அஜித்,விக்ரம்,சூர்யா என்று எத்தனை பேர் இருந்தாலும்
தளபதி நான் வேட்டைக்காரன் No.1 நானடா
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox