உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label வெற்றி எப்.எம். Show all posts
Showing posts with label வெற்றி எப்.எம். Show all posts

Wednesday, June 22, 2011

லண்டன் ரயில்களும் தற்கொலைகளும்



இதமான பனி விழும் காலைப்பொழுது.இலங்கையின் வெள்ளவத்தை தொடர்மாடியில் ஒரு வீட்டில் அலாரம் அடிக்க புத்துணர்ச்சியுடன் அதுதான் இலங்கையில் தன் தாய் தந்தை தங்கையுடன் தான் எதிர்கொள்ளும் இறுதி விடியல் என தெரியாமல் கண்விழித்து கண்ணாடியினூடே கதிரவனை பார்க்கின்றான் கதிர்.

கதிர்!

யாழ்பாணத்தை பிறப்பிடமாக கொண்டு கால சக்கர ஓட்டத்தில் ஓடி ஓடி இன்று தென் இலங்கை பக்கம் கரை ஒதுங்கி இருக்கும் சராசரித் தமிழன். அன்பான அப்பா அம்மா சுட்டித்தங்கை என அழகான குடும்பம் இருந்தும் அழகான காதல் செய்யப்போய் அழுக்காகி போனதால் வாழ்வை தொலைத்துவிட்டு இறுதியில் வந்து சேர்ந்த இடம் கொழும்பு.

வழக்கம் போல சில பல கணினி கற்கை நெறிகளை முடித்துவிட்டு இலங்கை சராசரிக்குடிமகனின் பெருங்கனவாகிய லண்டன் படிப்பை தொடரவேண்டும் என்பதே அவன் அவா. அவனுக்காகவே அவன் குடும்பமும் கொழும்பில் தங்கிவிட்டது. எந்த கெட்ட பழக்கங்களும் இல்லை அடுத்தவருக்கு கெட்டதும் நினைப்பதில்லை என்ற கொள்கையுடன் ஒரு இருப்பதே வயது வாலிபனுக்கான மிடுக்குடன் கொழும்பில் வளம் வந்தான். மீண்டும் சில காதல் விளையாட்டுக்கள் தலையெடுக்க முற்பட்டாலும் அவன் காதல் என்னவோ லண்டன் மீது அமைந்துவிட்டது. படிப்பும் முடிய லண்டன் விசாவை பெறுவதற்கான தகுதிகளை பெறுவதற்கு ஆங்கில பரீட்சை அது இது என எல்லாம் செய்து விட்டு காத்திருக்கின்றான்.

தானுண்டு தன் வேலை உண்டு என அவன் இருந்தாலும் அவன் பெற்றோரை அவர்காலத்து நண்பர்கள் விட்டு வைக்கவில்லை.
"என்ன பெடியனை லண்டன் அனுப்பிற வேலையள் நடக்குது போல" இது கதிரின் அப்பாவின் நண்பர் ஒருவர்.
"பின்னே என்ன செய்றது இந்த நாட்டில அவனை வச்சிருந்து என்ன செய்றது. ஏதோ போய்ட்டான் எண்டால் எங்கட குடும்பமும் தல நிமிர்ந்திடும்." பெருமூச்சோடு ஓய்கின்றது பல ஏக்கங்களை மனதிலே சுமந்து திரியும் கதிரின் தந்தையின் இதயம்.
ஒருவாறு ஒருவருக்கு பதில் சொல்லியாச்சு இருந்தாலும் உவங்க கண்ணு எல்லாம் என்ட பெடியன் மேல பட்டா ஒண்டும் சரிவராது இண்டைக்கு அவனுக்கு சுத்திப்போடணும் என நினைத்துக்கொண்டே நடந்து செல்லும் அவரை பார்த்து சிரிக்கின்றது தினமும் மரக்கறி சந்தையில் பார்த்து பழகிய அந்த முகம்.
"என்ன கணேஷ் அண்ணே இப்பிடியே யோசிச்சுக்கொண்டு போனால் முன்னுக்கு வாறது கூட தெரியாது"
"அட சுந்தரேசா, நான் உங்களை கவனிக்கல என்ன சந்தைக்கோ?"
"ஓமண்ண என்ட மகளும் மருமகனும் இண்டைக்கு மத்தியான சாப்பாட்டுக்கு வீட்ட வரீனமாம். அதுதான் உதில கறியை கிரியை வாங்கிட்டு போவம் எண்டு வந்தன்"
"ஒ அதுசரி உங்க மருமகன் கட்டார் போறதா சொன்னிங்க என்ன மாதிரி எப்ப போறார். அதுக்கு தான் வந்திருக்கினமோ"?
"இல்லை இல்லை அது அந்த ஏஜென்சி காரன் ஏமாத்தி போட்டான். இப்ப இங்கேயே ஒரு பிசினஸ் செய்யலாம் என நினைக்கிறார். என்ன செய்றது எல்லாம் விதி"
"ம ஏதோ என்ட மகனுக்கும் போடா போறம் ஆனால் லண்டனுக்கு உந்த ஏஜென்சியளுக்கு எல்லாம் நான் போகமாட்டேன். எங்களிட்ட எல்லாம் இருக்கு பிறகேன் உந்த ஏமாத்திற கள்ளன்களிட்ட எங்கட காசை"
"என்ன ஸ்டுடென்ட் விசாவோ...?"
"ஓமோம்"
"இப்ப அங்கே கொஞ்சம் கஷ்டம்போல இருக்கு........எல்லாம் ஏற்ப்பாடு பண்ணிட்டியல் தானே"
"அதெல்லாம் ஓகே அவன் அங்க போய் இறங்கிட்டான் எண்டா அப்புறம் எல்லாம் ஓகே"
"ஏதோ பார்த்து நல்லதை செய்யுங்கோ. அவன் நல்லாய் இருந்தா சந்தோசம்"
"ம நான் வாறன் எனக்கு நிறைய வேலை இருக்கு" என சொல்லிக்கொண்டே இவனுக்கும் என்ட பிள்ளை போறது பிடிக்கல. எல்லாரும் சரியான எரிச்சல் பொறாமை பிடிச்சவன்களாய் இருக்காங்க. கணேஷின் மனம் உள்ளுக்குள் சொல்லிக்கொல்கின்றது.

கதிர் வீட்டில்.

"அப்பா! இந்த யோகா அக்கா சொன்னவ பெடியனுக்கு விசாவுக்கு கொடுக்க முதல் அந்த வெள்ளவத்தை கடக்கரையில இருக்கிற விசா பிள்ளையாருக்கு ஒரு பூசை செய்திட்டு கொண்டே குடுக்கட்டாம். கட்டாயம் விசா கிடைக்கும் என சொல்லுறா. என்ன நாங்களும் செய்வமா? பெடியன் போகணும் ............." கதிரின் அம்மா ஜெயந்தி.

"நானும் அதை நினைச்சன் எனக்கும் ஒரு சிலர் அந்த பிள்ளையாரை பற்றி சொல்லி இருக்கினம், அங்க பூசை வச்சா தப்பாதாமே. ஏன் அந்த குறையை மட்டும் வைப்பான். விசாவுக்கு குடுக்கிற அண்டைக்கு காலமை இந்த பூசையை செய்திட்டு கொண்டு போய் குடுப்பம்." - கணேஷ்.

புகைப்படங்கள்,பாஸ்போர்ட், விண்ணப்பபடிவங்கள் என எல்லாம் தயார் செய்தாயிற்று.
"அடுத்த திங்கள் கிழமை கொடுக்கணும்...ஏம்மா திவ்யா எங்க அண்ணாவை கூப்பிடு இதில ஒரு கையெழுத்து போடணும்....எல்லாத்தையும் இண்டைக்கே ரெடியாய் வச்சால் நாளைக்கு ஒருநாள் கோவில் வேலையளை பார்க்கலாம் நாளைஇண்டைக்கு அப்பிளை பண்ணினால் சரியாய் பெப்ரவரிக்கு விசா கிடைச்சிடும்......" என்று கணேஷன் சொல்வதை கூட கேட்காமல்
"அண்ணா டேய் அண்ணா .......அண்ணா டேய்...." இது திவ்யா
"அடியேய் உனக்கு எத்தனை தரம் சொல்லி இருப்பேன் ஒண்டில் அண்ணா எண்டு கூப்பிடு இல்லாட்டி கதிர் எண்டு கூப்பிடு எண்டு எதுக்கிடி இப்பிடி இரண்டையும் சேர்த்து கூப்பிட்டு என்ன அவமானப்படுத்துறாய்.....உன்னை...." இது கதிர்.
"அடிக்காதடா உன்னை அப்பா கூப்பிட்டார்" - திவ்யா
"எதுக்கடி?"
"ஆஹ உன் ஆட்டோகிராப் வாங்கி வைக்க தான். ஐயா லண்டன் போறார் எல்லே பிறகு அங்கே போய் லண்டன் இளவரசியை பார்த்து பிடிச்சிட்டா அதுதான் இப்பவே......." என்று திவ்யா சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவள் தலையில் ஒரு குட்டு வைத்துவிட்டு மெதுவாக அப்பாவை நோக்கி போக திவ்யா இரவு செய்தி கேட்பதற்காக வெற்றி எப் எம்மை போட்டுவிட அதில் "ம் ஒருமாதிரி விமல் இண்டைக்கு அவுட் ஆகாமல் நல்லா விளையாடிடிங்க ஆனால் அடுத்ததா ஒருத்தர் ஆடு ஆடு என ஆடி கையில ஒரு பெரிய கட்டோடு உங்களை எங்களை ஆட வைக்க வந்திருக்கின்றார் எனவே நாங்க இப்ப போகப்போறோம் மீண்டும் சந்திக்கலாம் ஒ வந்திருக்கிறவர் பெயரை நான் சொல்ல மாட்டேன் நீங்களும் சொல்லவேண்டாம் விமல் வெற்றியின் செய்தியை தொடர்ந்து நானாடா நீயாட நிகழ்ச்சியோடு இணைந்திருக்கலாம் விடை பெற்றுக்கொள்ளும் நாங்கள் என்றும் அன்புடன் விமல் ஏ.ஆர்.வி.லோஷன்...இப்பிடி சொன்னதுக்காக எல்லாம் டெரரா முறைக்கப்படாது.. பாய்" என்று போக திவ்யா செய்துயுடன் அமர மறுபுறம் கதிரும் அம்மா அப்பாவும் இறுதிக்கட்ட படிவங்கள் நிரப்பி சரிபார்க்கும் வேலையில் மும்முரமாக இருந்தனர்.

அம்மா அப்பா கதிர் என மூவரின் குரல்களும் பல விவாதங்களை செய்தாலும் மிக குறுகிய நேரத்தில் வெற்றி எப்.எம் செய்திகள் என்ற தீமுடன் செய்தி ஆரம்பமானது. வழக்கம் போல வெற்றி எப்.எம் செய்திகள் செய்தி ஆசிரியர்........வாசிப்பவர்........என்ற வழக்கமான விடயங்கள் கடந்து தலைப்புச் செய்திகள் என்று வரும் போது கூட திவ்யா கூர்ந்து கவனிக்கவில்லை. ஆனால் முக்கிய செய்திகளில் மூன்றாவதாக வந்த செய்தி முழு புலனையும் உல் நாட்டு செய்திகள் திவ்யாவை மட்டுமன்றி முழு குடும்பத்தையும் கொண்டு சென்றது.

"...........மாணவர் விசா மூலம் இங்கிலாந்து சென்று கற்கை நெறியை மேற்கொண்டு வரும் இலங்கை மாணவர்கள் இங்கிலாந்து குடிவரவு புதிய சட்டங்களின் படி வரும் ஏப்ரில் மாதம் முதல் மட்டுப்படுத்தப்பட்ட மணி நேரமே வேலை செய்யலாம். வெளிநாட்டில் இருந்து வரும் பெருமளவானோரின் எண்ணிக்கையை குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....................................." என அந்த செய்தி நீண்டு கொண்டு செல்ல அனைவர் முகத்திலும் ஒரு ஏமாற்ற பிரதிபலிப்பு. இருப்பினும் செய்தியில் இருந்து புலனை திருப்பி மனதை ஆசுவாசப்படுத்தி எல்லாவற்றையும் சரி பார்த்து முடிக்கவும்.

"நேயர்கள் இந்த சனி இரவு நானாட நீயாட நிகழ்ச்சியோடு இணைந்திருக்கின்றீர்கள். உங்களை ஆட வைக்கும் பாடல்களோடு கொஞ்சம் கருத்துக்களை சொல்லும் பாடல்களாகவும் இன்றைய நானாட நீயாட பாடல்கள் வரபோகின்றன........................இதோ வருகிறது இது நம்மண்ணின் பாடல் மண் பெருமையை சொல்லும் மண் பட பாடல் லண்டன் பிரான்ஸ் கனடா என ஓடாமல் இங்க இருந்தா எவ்வளவு சந்தோசமா இருக்கலாம் ஆனால் ஓடிக்கொண்டே இருக்கிறாங்களே" என சொல்லிவிட்டு லண்டனுக்கு போகவில்லை பாரிசுக்கும் ஓடவில்லை சொந்த மண்ணில் தானிருந்தோம் உற்சாகமாக ....................என பாடல் ஒலிக்கவும் கதிர் விண்ணப்ப படிவத்தில் கையெழுத்து போடவும் சரியாக இருந்தது......

(தொடரும்.......)

Share:

Thursday, May 20, 2010

வானொலியில் மீண்டும் என் குரல்.



வானொலியில் இருந்து விடை பெற்ற பின் அதில் இருந்து விலகி இருக்கும் போது அனுபவிக்கும் அந்த வலியை நான் இன்னும் இழக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் என் குரலில் ஒரு முழுமையான நிகழ்ச்சியை நேற்று இரவு வெற்றி வானொலியில் எனக்கு கேட்க கிடைத்தது சந்தோசம். வெற்றிக் குடும்பத்துக்கும் நிகழ்ச்சியை தொகுத்தளித்த ரஜீவுக்கும் என் முதல் கண் நன்றிகள்.

வெற்றியில் பிரதி புதன் தோறும் ஒலிபரப்பாகி பல நேயர்களின் அமோக ஆதரவை பெற்று இன்றும் வெற்றிகரமாக ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் காற்றின் சிறகுகளின் ஆகாயமுகவரி. வானலை வரம்புகளையும் மீறி உயிருடன் இல்லாதவர்களுக்கோ அல்லது நேசித்த இடம் பொருள் போன்றவற்றுக்கோ நேயர்கள் எழுதும் கடிதங்களுக்கு குரலால் உயிர் கொடுப்பது அறிவிப்பாளர்கள் எங்கள் கடமை. நான் வெற்றியில் வேலை செய்த காலத்தில் அநேகமான நாட்கள் என் குரலில் நேயர்களின் கடிதங்கள் ஒலிபரப்பாகி உள்ளன. ஆனால் அதை எல்லாவற்றையும் விட நேற்றைய நிகழ்ச்சி எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை தந்து எனலாம். காரணம் நான் வேலை செய்யும் பொது என் குரலை நானே கேட்டு எனக்கே போரடித்து விட்டது ஆனால் வானொலியை விட்டு ஒதுங்கிய பின் கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் கழித்து என் குரல் அதுவும் ஆறுதலாய் இருந்து நான் கேட்கும் போது என்னை அறியாமல் சந்தோசப்பட்டேன்.

வேறு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நான் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு வானொலிக்கருகே அமர்ந்து விட்டேன். பாடல்களை பொருத்தமாக இடுவதில் ரஜீவ் எப்போதுமே கிரேட். நேற்று ஒலித்த நிகழ்ச்சியில் எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாய் அமைந்தது ரஜீவின் பாடல் தெரிவு. கதையை கேட்ட பின் எங்களை வெளியே வர விடாமல் அப்படியே கட்டிப்போட்டு மனதை ஆறவைத்தன பாடல் தெரிவுகள். மீண்டும் வெற்றிக்கு வந்துவிட்டீர்களா? அல்லது எப்படி இந்த நிகழ்ச்சி என்று கேட்டு சிலர் என்னை தொடர்பு கொண்ட போது உண்மையில் என்மேல் அன்பு வைத்த அந்த நண்பர்களை நினைத்து பெருமைப்பட்டேன். என்னை நெருங்கி இருந்த நண்பர்கள் சிலருடன் நான் இதை பகிர்ந்து கொண்டேன்.

வானொலியை விட்டு ஒதுங்கினால் என்ன வலி என்ன கவலை என்பதை அனுபவித்துக்கொண்டு ஒரு நிகழ்ச்சியை கேட்பதும் ஒரு சந்தோசம்தான். இந்த வலி சந்தோசம் என்னை மீண்டும் வானொலித் துறைக்குள் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை. எந்த நாட்டில் இருந்தாலும் வானொலியோடு என் பயணம் போகவேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன். நடக்கும் என்ற நம்பிக்கயோடு என் சந்தோசத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
Share:

Sunday, April 25, 2010

இன்றைய தினக்குரல் பத்திரிகையில் நான் - நன்றி யாழ்தேவி.

வணக்கம் நண்பர்களே,
இன்று இலங்கையில் இருந்து வெளியாகும் தினக்குரல் பத்திரிகையில் யாழ்தேவி தெரிவு செய்த நட்சத்திரப்பதிவராக ஜோளித்துக்கொண்டிருக்கின்றேன். தினக்குரல் யாழ்தேவி, வாசகர்கள்,பின்நூட்டிகள்,அனானிகள்,திரட்டிகள், நண்பர்கள் எல்லோருக்கும் என் நன்றிகள்.


கீழே நான் கொடுத்திருப்பது இன்று பத்திரிகையில் வெளியாகி இருக்கும் பிரதி. பெரிதாக்கி படித்துப்பாருங்களேன்.



Share:

Thursday, January 28, 2010

தன்னை தானே அடித்து துவைத்த போப் பாண்டவர்.



இந்த உலகில் அடுத்தவர்களை துன்புறுத்தும் மனிதர்கள் இருக்கும் இந்த நிலையில் உன்னதமான இடத்தில் இருக்கும் ஒருவர், ஒரு மதத்தின் உன்னத குருவாக இருந்த ஒருவர் தன்னை தானே வதைத்ததை இன்று இணையத்தில் மேய்ந்தபோது அறிந்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

போப்பாண்டவர் 2ம் ஜான் பால், போப்பாக இருந்தபோது தன்னைத் தானே பெல்ட்டால் அடித்துக் கொள்ளும் பழக்கம் கொண்டிருந்ததாக ஒரு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.பிஷப்பாக இருந்தபோதிலிருந்தே இந்தப் பழக்கம் அவரிடம் இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையான கிறிஸ்தவராக இந்த உலகில் தான் முன்மாதிரியாக விளங்க வேண்டும் என்பதற்காக போப் இப்படி நடந்தார் என்று Why He's a Saint என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகில் நடக்கும் பாவங்களை எண்ணி வருந்தி அவர் இந்த தண்டனையை தனக்கு கொடுத்ததாக அதில் சொல்லப்பட்டுள்ளது.

இதை நம்பலாமா இல்லையா என்ற கேள்வி ஒருசிலருக்கு எல்லாம் ஆனால் இதை சொல்பவர் போப்க்கு புனிதர் பட்டம் வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவில் முக்கிய இடம் பிடித்த மான்சிக்னர் ஸ்லவோமிர் ஓடர் என்பவர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

இதை பற்றி கருத்து தெரிவித்த நூலாசிரியர் போப் தன்னை வருத்தியத்தில் தவறில்லை என்றும் கிறிஸ்தவர்கள் சிலர் இயேசு சிலுவையில் அறைந்ததை நினைவு கூரும் முகமாக இப்படியாக தம்மை வருத்துவது வழக்கமான ஒரு விடயம் என சொல்கின்றார்.

இது மட்டுமல்லாமல் பலமுறை உணவு சாப்பிடாமல் வெறும் வயிற்றோடு இருப்பார் போப்பாண்டவர் 2ம் ஜான் பால். மேலும், வெறும் தரையிலும் படுத்துத் தூங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் மற்றவர்களுக்கு அது தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தனது படுக்கையை தானே கலைத்து விட்டு அதில் படுத்துத் தூங்கியது போல காட்டிக் கொள்வார்.

போப்பாண்டவர் தன்னைத் தானே வருத்திக் கொள்வதை தங்கள் காதுகளால் கேட்டதாக போலந்திலும் (அவர் பிஷப்பாக இருந்தபோது), வாடிகன் சிட்டியிலும் பணியாற்றிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் என்றார் மான்சிக்னர்.

உண்மையில் ஆச்சரியம் மட்டுமல்ல மரியாதையும் கவலையையும் தரும் ஒரு செயல் தான் இது. மதங்களை தாண்டி ஒரு மனிதனாக போப்க்கு தலை வணங்குகின்றேன்.

பி.கு: கிட்டத்தட்ட ஒரு மாதமாக எனக்கு பதிவெழுத ஏனோ தோன்றவில்லை. காரணங்கள் பல சொல்லலாம் மாத ஆரம்பத்தில் எங்கள் வானொலி சார்பாக யாழ் விஜயம், வந்திறங்கியவுடன் சுகவீனம், அதன் பின் என் தனிப்பட்ட சில ஆணி பிடுங்கல்கள் என போய்க்கொண்டிருக்க இன்று ஏனோ இந்த செய்தியை படித்தவுடன் இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோம் என முடிவெடுத்து எழுதிவிட்டேன். நாங்கள் தான் ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா எங்க பேச்சையே கேட்க மாட்டோமே. அடிக்கடி வருவேன் என்ற நம்பிக்கையில் வேட்டையை ஆரம்பிக்கின்றேன்.

அறுவை: நண்பர்களுக்கு பிந்திய பொங்கல் வாழ்த்துக்கள். ஹி ஹி ஹி
Share:

Thursday, August 6, 2009

Super Singrs உடன் ஒரு சூப்பர் பயணம் -பகுதி-1

இலங்கையில் வெற்றிநடை போட்டுவரும் வெற்றி எப்.எம் மிகப்பிரமாண்டமான இசை நிகழ்வை வழங்க சூப்பர் சிங்கர்ஸ்,அடுத்த பிரபுதேவா,மற்றும் சகலகலாவல்லவன் சிவகார்த்திகேயனை அழைத்து வெற்றிகரமாக நடத்தியும் முடித்து விட்டது. வெற்றியில் அடியேனும் ஒருவன் என்னும் காரணத்தால் எனக்கும் ஒரு சில கடமைகள் கிடைத்தன. விமான நிலையத்தில் நான் சென்று வரவேற்றது முதல் இசை நிகழ்வு நடந்து முடிந்தது வரை நடைபெற்ற சில சுவாரஷ்யமான விடயங்களை இங்கே தொடர் பதிவாக இடப்போகின்றேன். (யாரும் அலுத்துக்கொள்ளாதீர்கள். சீரியல் போல இழுக்கமாட்டேன் சீக்கிரமே முடித்திடலாம்.) எழுத நான் தயார் வாசித்து வாக்குபோடுவதுடன் என்னை வசை பாட நீங்கள் தயாரா?

ஜூலை மாதம் 10ஆம் திகதி, நான் வீட்டில் இருக்கும் பொது எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எங்கள் வெற்றி எப்.எம் வானொலியின் விரிவாக்கல் பிரிவைச் சேர்ந்த ஜெய்சனிடமிருந்து. "சதீஷ், நாளைக்கு இந்தியாவிலிருந்து வருபவர்களை நீங்கள் தான் விமான நிலையம் சென்று அழைத்து வரவேண்டும்" என அதற்கான வேலைகளை தொலைபேசியில் சொல்ல ஆரம்பித்து விட்டார். நானோ நேர வந்து எல்லாம் கேட்கின்றேன் என தொடர்பை துண்டித்து விட்டு அலுவலகம் புறப்பட்டேன். அலுவலகத்துக்கு போனவுடன் ஜெய்சனுக்கு தொடர்பை ஏற்படுத்தி, எங்கள் நிகழ்ச்சிப் பிரிவிற்கு வருமாறு அழைத்து சகல விடயங்களையும் கேட்டறிந்து கொண்டேன். தன்னால் அந்த நிகழ்விற்கு வரமுடியாதென சொன்ன ஜெய்சன் ஒரு தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்து அந்த இலக்கத்துக்கு சொந்தக்கார நபருடன் இது பற்றி கதைக்கும் படி கூறினார். நானும் அவருடன் கதைக்க தன் பெயர் குமார் என அறிமுகமானார் ஒரு முக்கியஸ்தர்.(இவரை எல்லோரும் மாருதி குமார் எனத்தான் அழைப்பர்.) அவர் நாளை காலை உங்கள் வீட்டுக்கு9.30க்கு வந்திடிறன் தயாரா இருங்க என்று விட்டு தொடர்பை துண்டித்தார். என்னுடன் எங்கள் விரிவாக்கல் பிரிவை சேர்ந்த தினேஷும் வருவதாக தெரிவிக்க புகைப்பட கருவியுடன் அவரும் மறுநாள் தயாரானார்.
இரவு நேரம் நான் லோஷன் அண்ணாக்கு தொடர்பை ஏற்படுத்தி இந்த விடயம் தொடர்பாக என் சந்தேகங்களை தீர்த்ததோடு அங்கே சென்று நான் செய்யவேண்டிய செய்யத்தேவையற்ற விடயங்களை கேட்டு தெரிந்து கொண்டேன். சரி நாளை காலை நாங்கள் இந்தியாவின் விஜய் டி.வி .புகழ் சூப்பர் சிங்கர்ஸ் அஜீஸ்,ரவி,ரேனு,ரஞ்சனி ஆகியோருடன் அடுத்த பிரபுதேவாவாக முடிசூடிய ஷெரிப் மற்றும் மிமிக்கிரி நடனம் என அசத்தும் சிவகார்த்த்திகேயனை வரவேற்கப் போகின்றோம் என்ற ஒரு சின்ன சந்தோசத்தோடு அன்றைய இரவும் கழிந்தது.
ஆனால் மறுநாள் காலை எனக்கு ஒரு அதிர்ச்சி, சற்று நேரம் தான் என்றாலும் அது அதிர்ச்சிதான்..... நான் விமான நிலையம் சென்றேன் என்பது சிலருக்கு தெரியும் அதனால் சென்றேனா இல்லையா என கேட்கவில்லை. ஆனால் ஒரு சின்ன சங்கடம் ஏற்பட்டு தான் போனது........ தெரிந்தவர்கள் என்னவென சொல்லிவிடுங்கள்.....நான் அடுத்த அங்கத்தில் அந்த விடயத்தோடு உங்களை சந்திக்கின்றேன்.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox