Saturday, July 4, 2009

உலகின் முதல் AC கடற்கரை உங்களுக்காக.

உலகிலேயே முதல் குளிரூட்டப்பட்ட(AC) கடற்கரை துபாயில் வரப்போகின்றது. உலக நாடுகள் எல்லாம் பொருளாதார சிக்கலில் சிக்கி சின்னாபின்னமாகும் போது கூட அசராத நாடுகளில் ஒன்று சவூதி அரேபியா. எனவேஅவர்களின் மற்றுமொரு சாதனையாகத்தான் இந்த அரிய முயற்சி எடுக்கப்படுகின்றது.

கடந்த 2008ஆம் ஆண்டு பிரமாண்டமான அருங்காட்சியகத்தோடு மிகப்பெரிய ஷாப்பிங் மால் ஒன்று திறந்துவைக்கப்பட்டது. அதிலே செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவு ஒன்றில் பல வீடுகள் கூட விற்பனைக்கு வந்திருக்கின்றன. இந்த நிலையிலே தான் பலேசோ வேர்சாஷ் ஹோட்டலுக்கு அருகில் கடற்கரை மணலுக்கு அடியிலே பைப்கள் மூலம் குளிரூட்டும் வசதி செய்யப்படுகின்றது. இதன்காரணமாக கோடைக்காலத்தில் கூட மணலின் வெப்பம் கட்டுப்படுத்தப்பட்டு நண்பகல் 12மணிக்கு கூட கடற்கரையில் நீங்கள் நிம்மதியாக படுத்தே தூங்கலாமாம்.

கோடை என்றாலே சவுதியில் வெயில் கொளுத்தும் ஐம்பது டிகிரிக்கு,ஆனால் பலேசா வெர்ஷாஷ் ஹோட்டலை சுற்றி இருக்கும் மணல் பகுதிகளோ சும்மா சில்லின்னு இருக்குமாம். ஆனால் இந்த வசதி இந்த ஆண்டோ அல்லது அடுத்த ஆண்ண்டோ தான் நடைமுறைக்கு வர வாய்ப்பிருப்பதாக சொல்கின்றார்கள்.

அப்படி நடைபெற்றால் உலகிலேயே முதலாவது குளிரூட்டப்பட்ட(AC) கடற்கரை என்னும் சாதனைப் பெயர் துபாய் கடற்கரைக்கு கிடைக்கும். உங்களுக்கும் ஆசையாய் இருக்கும் தானே ஒருமுறை போய்த்தான் பாருங்களேன்.
Share:

4 கருத்துரைகள்:

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு பாராட்டுகள்

Muruganandan M.K. said...

சுவையான செய்தி. பதிவுக்கு பாராட்டுகள்

sshathiesh said...

நன்றிகள் உங்கள் பாராட்டுக்கு.

Sinthu said...

It is costed a lot to use...

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive