உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label வாலி. Show all posts
Showing posts with label வாலி. Show all posts

Friday, June 24, 2011

கவிஞர் வாலியின் வாளி வாழி!


கருணாநிதி ஆட்சியில் இருக்கையில் அவர் புகழும் இப்போது அம்மா புகழும் பாடும் கவிஞர் வாலி அவர்களுக்கு அவர் ஸ்டைலில் ஒரு கவிதை பதில். இந்த பதிவை இட காரணமாக அமைந்தது அவர் அண்மையில் ரங்கத்து நாயகியாய் அம்மாவை புகழ்ந்து பாடிய துதி.


''ரங்கநாயகி -ஜெயலலிதா' கவிஞர் வாலியின் அந்தர்பல்டி


ஒரு கவிஞராக பாடலாசிரியராக அவர் வரிகளின் மேல் எனக்கு காதல் ஆனால் அவர் படித்த துதியால் இங்கே மோதுகின்றேன். மன்னிக்கணும் பெரியவரே அதுக்காக மனதில் பட்டத்தை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

காவியக்கவிஞனே!

உன் கவிவரிகளின் மேல் எனக்கு காதல்
நீ படித்த துதிகளினால் நமக்குள் மோதல்
தமிழன் குணம் எப்போதும் அடுத்தவனுக்கு ஈதல்
தங்கள் குணமோ ஏன் ஆட்சியாளர் பக்கம் சாய்தல்
உந்தன் உயிரினும் மேலான தமிழினம் சாதல்
கண்டு உன் மனதுக்குள் வரவில்லையா கூதல்.

மார்க்கண்டேயனே!

மாற்றத்திலும் மாறாத உன் தமிழை ரசிக்கின்றேன்
நீயோ
மறத்தமிழ் குருதியை ருசித்தவனை ரசிக்கின்றாய்

எம் வலியும் வரிகளில் விதைத்தாய் வியக்கின்றேன்
அதே பேனாவால்
வலியைக் கொடுத்தவனையும் இந்திரன் சந்திரன் என வாய்கூசாமல் விழிக்கின்றாய்

வாலி!

உன் வரிகளில் தெறித்தது நம்மவரின் வலி
உன் வார்த்தைகளில் ஏன் இன்று இந்த போலி
ஈழத்தமிழன் கொண்டதோ உயிர் கிலி
ஈனத்தவனாய் ஆட்சிமாறியதும் நீ கொண்டதும் கிலி
நீ துதி பாடிய நிதியால் அறுந்தது பல தாலி
எந்த நிதியால் கொடுக்க முடியும் இழந்த உயிர்களுக்கு கூலி
கவிதைகளில் நீ பராக்கிரமசாலி
களங்க மனத்தால் நீ இனி மக்கள் மனதில் எலி
நின் பெயருக்கு ஏற்றது போல பிடிக்காதே வாளி
உந்தன் களங்கம் களைந்து நீ பல்லாண்டு வாழி!
Share:

Monday, January 3, 2011

பாட்டெழுத சான்ஸ் கொடுங்கப்பா!

வணக்கம் நண்பர்களே,

முதலில் உங்கள் எல்லோருக்கும் என் புதுவருட வாழ்த்துக்கள்.

கடந்த என் சில பதிவுகள் மொக்கை என்பதை தாண்டிய மொக்கை என சில அபிமானிகள் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில் கொஞ்சம் சீரியசாய் ஒரு மொக்கை பதிவு இது. இவன் திருந்த மாட்டானோ என நினைக்காதிங்க. நான் எழுதி இருப்பதில் உண்மை இல்லை என்றால் சொல்லுங்கள் நான் மொக்கை போடுவதை நிறுத்துகின்றேன்.

இன்று கொஞ்சம் வெட்டி சும்மா இருக்கையில் எனக்கு ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. அந்தக்காலம் இந்த காலம் என்று என் சிறுவயதில் வில்லிசையில் பாடிய பாடல் அதையே கொஞ்சம் மாத்தி இப்படி போட்டால் எப்படி இருக்கும் என சிந்தித்தேன் இதோ வருகின்றது அந்த பாடல்.

கண்ணதாசன் உண்மைக்காதல் கவி படித்தான் அந்தக்காலம் ஆமா அந்தக்காலம் -இப்போ
modern காதல் பற்றி நானும் சொல்ல போறேன் இந்த காலம் ஆமா இந்த காலம்.

பொண்ணுங்க பின்னால் பையன் சுத்தியது அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
பையன்க பின்னால் பொண்ணு சுத்துறது இந்த காலம் ஆமா இந்த காலம்.

Heartம் heartம் தான் beat போடுவது அந்த காலம் ஆமா அந்த காலம் - ஆனால்
next dayயே எல்லை மீறி ஆட்டம் போடுவது இந்த காலம் ஆமா இந்த காலம்

பார்த்த பார்வையில் காதல் fire வரும் அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
பார்க்காமலேயே பற்றி எரிகின்றது இந்த காலம் ஆமா இந்த காலம்

காதல் சொல்ல நாட்கள் பல கடக்கும் அந்த காலம் ஆமா அந்த காலம் - ஆனால்
கண்டவுடனேயே கையைபோடுவது இந்த காலம் ஆமா இந்த காலம்

கடிதங்கள் எழுதி காதல் செய்ததுவோ அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
Dating மூலமே bracket போடுவது இந்த காலம் ஆமா இந்த காலம்

அத்தான் மாமா என்று சினுங்கியது அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
அடேய் ராஸ்கல் என்று அழைப்பது இந்த காலம் ஆமா இந்த காலம்

அன்பு பண்பின் ஆழம் பார்த்தது அந்த காலம் ஆமா அந்த காலம் - ஆனால்
Car, Purse waitஐ first ஆய் பார்ப்பது இந்த காலம் ஆமா இந்த காலம்

காதலுக்காக உயிரைக்கொடுத்தது அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
கள்ள காதலுக்காய் உயிரை எடுப்பது இந்த காலம் ஆமா இந்த காலம்

காதலில் தோற்றால் தாடி வளர்த்தது அந்த காலம் ஆமா அந்தக் காலம் - love
தோல்வியிலும் அவள் friendஐ correct பண்ணும இந்த காலம் ஆமா இந்த காலம்

காதலி பிரிஞ்சதும் தாலி வளர்த்தது அந்த காலம் ஆமா அந்த காலம் - ஆனால்
பிரிஞ்சா happy moodஇல் அடுத்த lady pick up இந்த காலம் ஆமா இந்த காலம்

Weddingஇன் பின்னர் மழலை சத்தம் அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
waiting இன்றி wait கொடுப்பது இந்த காலம் ஆமா இந்த காலம்

காதல் செய்தால் ஊரே எதிர்த்தது அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போகாதல் பண்ணாட்டி fashion இல்லைஎன்னுது இந்த காலம் ஆமா இந்த காலம்

காதல் கல்யாணம் கருப்பாய் இனித்தது அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
தாலி ஏறமுன்னே diverse கேட்கிறது இந்த காலம்

காதலை காதலர் காதல் செய்தது அந்த காலம் ஆமா அந்த காலம் - செய்யும்
கண்றாவி எல்லாம் காதல் என்னுது இந்த காலம் ஆமா இந்த காலம்

லைலா மஜ்னு இறந்தும் வாழவைத்தது அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
lovers வாழும் போதே loveஐ கொள்வது இந்த காலம் ஆமா இந்த காலம்

வாலி வரியதனில் காதல் உருகியது அந்த காலம் ஆமா அந்த காலம் - ஐயோ
நானும் கவிவடித்தேன் என்ன கொடுமை இது இந்த காலம் ஆமா இந்த காலம்.

முக்கிய குறிப்பு: திரையுலக நண்பர்களே படைப்புலக பிரமாக்களே நானும் கொஞ்சம் பாட்டு எழுதுகின்றேன் சினிமாவில் பாட்டு எழுத ஒரு சான்ஸ் வாங்கி கொடுங்கப்பா! என்னது இந்த மொக்கை எல்லாம் அங்கேயும் பார்க்கணுமா என திட்டாதிங்க. திருப்பி சந்திப்பம்.


Share:

Tuesday, February 23, 2010

தல அஜித் விழாக்களில் தலை காட்டாதது ஏன்?



தல அஜித்தான் இப்போ எல்லா இடமும் டாபிக். நம்ம பதிவுகளில் மட்டும் விட்டிடலாமா. ஏதோ தொடர்ந்து நம் பதிவுகளும் தலைய பற்றியே வருகின்றன. இப்படியே போனால் நானும் தல ரசிகர் ஆகிடுவன் போல.(தளபதி கவலைப்படாதிங்க உங்களை விட்டிட்டு போக மாட்டம் சும்மா இப்படி சொல்வோம்.) சரி அத விடுவோம் தல ஏன் விழாக்களில் தல காடுவதில்லை? இன்று நான் இன்னொருவரின் பதிவில் இதை படித்தேன்.


சரி அவர் சொன்ன காரணம் 1995ஆம் ஆண்டு ஒரு மேடை நிகழ்ச்சியில்
மீனாவுடன் அஜித் நடனமாடிக்கொண்டிருக்கும் போது அங்கே வந்த மீனாவின் அம்மா ஆத்திரபட்டு அஜித்தை அவமானப்படுத்தி மேடையை விட்டு இறக்கியதாகவும் அந்த அவமானம் தாங்காமல் தான் இன்றுவரை அஜித் மேடை நிகழ்ச்சிகளை தவிர்த்து வருவதாகவும் சொல்லி இருந்தார். இதில் எந்தளவு உண்மை என தெரியவில்லை. சிலவேளை அவர் சொல்வதும் உண்மையாக இருக்கலாம் காரணம் ஆசை என்ற ஒரு படம் மட்டுமே அஜித்துக்கு ஓரளவு பெயர் சொல்லும் படியான படமாக இருந்தது அதுவரை.
இப்படி நடந்ததென வைத்துக்கொண்டால் அதன் பின்னர் ஆனந்த பூங்காற்றே படத்தில் இருவரும் ஜோடி போட்டனரே எப்படி.வாலி வந்து வசூல் மழைபொழிந்ததனால் மீனா வேண்டுமென்றால் அஜித்துடன் நடிக்க ஒத்துக்கொண்டிருக்கலாம் ஏன் மீனாவின் அம்மாவே அந்த வாய்ப்பை வாங்கிக்கொடுத்திருக்கலாம். ஆனால் தன் ஆரம்ப படத்திலேயே இயக்குனருடன் நியாயத்துக்காக வாதிட்ட அஜித் நிச்சயமாக சேர்ந்திருக்க வாய்ப்பில்லை. இது எப்படி சாத்திய மாயிற்று.

அதை தான் விடுவோம் அதன் பின் சிட்டிசன்,வில்லன் என அஜித் அடுத்த தலைமுறையின் முன்னணி நாயகன் ஆனா பிறகும் இவர்கள் ஜோடி கலக்கி இருக்கின்றதே. இதை எப்படி எடுத்துக்கொள்வது. எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. இது இப்படித்தான் என சரியாக சொல்ல எனக்கு இந்த விடயம் பற்றி எதுவும் தெரியாது. எனவே நேற்று அலுவலகம் சென்றவுடன் விமல் அண்ணா கண்ணில் பட்டார் அவருக்கும் எனக்கும் மூஞ்சிப்புத்தகத்தில் இப்போது அஜித் பற்றிய ஒரு சண்டை போகிறது. உடனே அவரிடமே இதை பற்றி கேட்டேன்.

காரணம் அவர் அஜித்பற்றி ஈடுபாடுள்ளவர். அவர் சொன்னார் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று. ஆனால் உடனே நம் பிர்னாஸ் நாம் பாவித்த பேப்பர்கள் போடும் பெட்டியை கிளறத்தொடன்கினார் ஏன் என கேட்க இல்லை இல்லை இந்த விஷயம் தானும் பார்த்த ஒன்று என சொன்னார். அதன் பின் ரஜீவ் அதை உண்மை என்று சொன்னார். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்லி இருக்கின்றனர் ஆனால் உண்மை என்ன இப்படி ஏதாவது நடந்ததா? உண்மையில் அஜித் அவமானப்படுத்தப்பட்டாரா? தல விழாக்களில் தல காட்டாததற்கு காரணம் இதுதானா? எனக்கு தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox