பட்டாம்பூச்சியை பறக்க விட்டாச்சு. அடுத்து சுவாரஷ்யபதிவர் விருதை அறுவரிடம் ஒப்படைத்து விட்டால் என் கடமையும் கொஞ்சம் முடிந்து விடும். இந்த விருதை எனக்கு கொடுத்த கடலேறி ஆதிரைக்கு என் நன்றிகள். இப்போது நான் விருதளிக்கபோபவர்கள் நான் பார்த்து ரசித்து மகிழ்பவர்கள். பதிவர்கள் ஒவ்வொருவரும் தமக்கென தனி அடையாளம் கொண்டவர்கள். நான் தெரிவு செய்தவர்கள் ஏற்கனவே இந்த விருதைப் பெற்றிருந்தாலும் நான் அவர்களுக்கு தான் இந்த விருதை அளிக்கப்போகின்றேன். காரணம், நான் படித்து சுவைத்தவர்களுக்கு தானே நான் கொடுக்க முடியும். இந்த சின்னைப்பையன் கொடுப்பதை அந்த பெரியவர்கள் ஏற்பார்கள் என நம்புகின்றேன். அத்தோடு இந்த சங்கிலியை உடையாமல் தொடருமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். உங்கள்
சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்
உங்கள்
சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
எம்
சமூக கருத்துக்கள்
சதீஷ் தொகுத்த
பொது நிகழ்வுகள்
ஒரே தளத்தில்
இன்னும் பல
Friday, July 31, 2009
நான் விருது கொடுத்த சுவாரஸ்யபதிவர்கள்.
பட்டாம்பூச்சியை பறக்க விட்டாச்சு. அடுத்து சுவாரஷ்யபதிவர் விருதை அறுவரிடம் ஒப்படைத்து விட்டால் என் கடமையும் கொஞ்சம் முடிந்து விடும். இந்த விருதை எனக்கு கொடுத்த கடலேறி ஆதிரைக்கு என் நன்றிகள். இப்போது நான் விருதளிக்கபோபவர்கள் நான் பார்த்து ரசித்து மகிழ்பவர்கள். பதிவர்கள் ஒவ்வொருவரும் தமக்கென தனி அடையாளம் கொண்டவர்கள். நான் தெரிவு செய்தவர்கள் ஏற்கனவே இந்த விருதைப் பெற்றிருந்தாலும் நான் அவர்களுக்கு தான் இந்த விருதை அளிக்கப்போகின்றேன். காரணம், நான் படித்து சுவைத்தவர்களுக்கு தானே நான் கொடுக்க முடியும். இந்த சின்னைப்பையன் கொடுப்பதை அந்த பெரியவர்கள் ஏற்பார்கள் என நம்புகின்றேன். அத்தோடு இந்த சங்கிலியை உடையாமல் தொடருமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். Thursday, July 30, 2009
விருது வாங்கலயோ விருது.

பதிவுலக நண்பர்களுக்கு!
என்னுடைய பதிவுலக பிரவேசத்துக்கு காரணமான ஒருவர். பல விடயங்களை மற்றவர்களோடு பகிரும் தீராத அவா கொண்ட இவர் இப்போது இடும் பதிவுகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. தரமான நல்ல பதிவுகளை தந்த நீங்கள் மீண்டும் மீண்டு வரவேண்டும். தன் தளத்தில் எதற்கும் அஞ்சாமல் மனதில் உள்ளதை உள்ளபடி இடும் ஒருவர்.
இவரை முதலில் எனக்கு முகப்புத்தகம் அதாங்க Face book மூலம் தான் தெரியும். அதன்பின் இவரின் தளத்தில் மையம் கொண்டவன் நான். எல்லா விடயங்களையும் பஞ்சாமிர்தமாக தந்து ரசிக்க வைப்பார். எனக்கு சுவாரஸ்ய பதிவர் விருது தந்த பரந்த மனசுக்காரர். சரித்திரம் முதல் சகலதும் அலசும் சகலகலா வல்லவன்.
பசுமைக்குள் ஒளிந்திருக்கும் ரணங்களையும் வேதனைகளையும் ரசைனையோடு சொல்லும் கலை தெரிந்தவர் இந்தக்கலை. நீண்ட நாட்களின் பின் மீண்டு வந்திருக்கின்றார். தொடர்ந்து கலை களைகட்ட வாழ்த்துக்கள்.
இவருடய பதிவுலகம் என்னைப்பொறுத்தவரை வேறுபட்டது. நாங்கள் சிலர் மசாலா கலந்து எழுதிக்கொண்டிருக்க, இவரோ கமல் போல பல தரமான முயற்சிகளை எடுப்பவர்.மிகமுக்கியமாக நான் பதிவுலகில் கால்வைக்க எனக்கு பலவிடயங்களை சொல்லிக்கொடுத்தவர். வித்தியாசமான கோணங்களில் பல விடயங்கள் தரும் ஒருவர். தெரியாத பல விடயங்களை தேடி அலசி ஆராய்ந்து தரும் என் நண்பன்.
இவர் பதிவில் ஒரு குழந்தைத்தனம் இருக்கும்.(நான் சொல்வது ரசனையை அவர் பதிவின் தரத்தை அல்ல) கவித்துவமும் தன வாழ்வின் அனுபவங்களும் எழுத்தாக வரும் தளம் இவருடையது. இவர் பதிவுகளை படிக்கும் பொது ஏனோ நம் வாழ்வின் சில கட்டங்கள் வந்து போவது தவிர்க்க முடியாத ஒன்று. நீங்கள் இன்னும் பல பதிவுகளை உங்கள் தளத்தில் சிந்தவேண்டும்(எழுதவேண்டும்)
Friday, July 24, 2009
அட எனக்கும் வெற்றியுங்கோ -நன்றி உங்களுக்கு.
பதிவுலக நண்பர்களுக்கு!Monday, July 20, 2009
விருது கொடுக்க நான் தகுதி அற்றவனா?
பதிவுலகில் அண்மையில் விருது வழங்கும் ஒரு கலாசாரம் பரபரப்பாக பேசப்படுகின்றது. சிலர் தமக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் கொடுக்கின்றார்கள் தகுதியானவர்களை தவறவிடுகின்றார்கள் என்பது ஒரு குற்றச்சாட்டே. உண்மையில் எல்லா பதிவர்களுக்கும் எல்லா பதிவர்களையும் தெரிவதில்லையே.(என்னை எத்தனை பேருக்கு தெரியும் சொல்லுங்க.) அப்படி இருக்கும் போது இந்த பெரிய காலத்தில் அவரவர் தாம் ரசித்து படிக்கும் பதிவர்களுக்கு விருது வழங்குவது என்னைப்பொறுத்தவரை தப்பில்லை. Sunday, July 19, 2009
விஜயின் ஜோடியாக அஜித்தின் குடும்பத்தில் இருந்து ஒருவர்.
விஜய்-அஜித் இந்த இரண்டு பேரும் வெளி உலகிற்கு என்ன நட்பு பாராட்டினாலும் உள்ளுக்குள் குமுறல் இருப்பது என்னவோ உண்மையாகத்தான் இருக்கின்றது. ஆரம்பத்தில் இந்த இரண்டுபேரும் சேர்ந்து ராஜாவின் பார்வை திரைப்படத்தை கொடுத்திருந்தனர். படத்தின் படுதோல்வி இந்த இணையை மீண்டும் இணையவிடாமல் செய்து விட்டது. அதன் பிறகு பேபி ஷாலினியாக கலக்கி எடுத்தவர் குமாரியாக அறிமுகமானது என்னவோ அறிமுகமானது விஜயோடு. அறிமுகப்படத்திலேயே காதலுக்கு மரியாதை செய்த இவர்களின் படம் மிகப்பிரமாண்ட வெற்றியை பெற்றதோடு தமிழ் சினிமாவையே புரட்டிப்போட்டது.
அதற்கு பிறகு இரண்டு பேரும் மீண்டும் ஜோடி சேர்ந்த படம் கண்ணுக்குள் நிலவு. படம் என்னவோ வெற்றி பெறாவிட்டாலும் வியாபார ரீதியான படமே நடிப்பார் என சொல்லப்பட்டு வந்த விஜய், வித்தியாசமான கதைக்களத்தோடு வித்தியாசமான கதாபாத்திரத்தில் துணிந்து நடித்த படம். இந்த ஜோடியை தமிழ் நாடே கொண்டாடியது. காதல் ஜோடி என்றால் இப்படி எல்லா இருக்கவேண்டும் என்று ஏங்கியோர் பலர்.(இது திரையில் மட்டும் சொல்கின்றேன்.) காலம் ஓட அஜித்தோடு ஜோடியானார் ஷாலினி.அது அஜித்தை பற்றி ஒரு சில கிசுகிசுக்கள் உலாவந்தநேரம்.(ஹீராவுடன் படு நெருக்கம் என்பதே அது.) இந்த நேரத்தில் தான் ஷாலினி அஜித்தோடு ஜோடி சேர பதறிய ஷாலினியின் தந்தை, நேராக அஜித்திடமே சென்று என் பெண்ணை ஒன்றும் செய்துவிடாதே விட்டுவிடு என சொன்னதாக கூட ஒரு சில தகவல்கள் வெளியானது. அதையும் மீறி காதல் என்னும் கடவுள் இரண்டுபேர் மனதிலும் குடி ஏற இன்று அத்தனை பேரும் மெச்சும் நிஜ ஜோடியாக (அஜித்தும் நல்ல மனிதராகிவிட்டார்.) வாழ்ந்துவருகின்றனர். ஷாலினி எப்படி சிறு வயது முதல் கலக்கினாரோ அதேபோல அவர் தங்கள் ஷாமிலியும் புறப்பட்டார்.
அதுவும் மணிரத்னத்தின் அஞ்சலி திரைப்படத்தில் அறிமுகமான பெருமை கொண்ட ஷாமிலி ஓய் என்னும் தெலுங்குத் திரைப்படம் மூலம் கதாநாயகி என்னும் அந்தஸ்துக்கு உயர்ந்தார். தென்னிந்திய மொழிகளில் இவரின் பிரவேசம் ஆரம்பமாகவேண்டும் என எத்தனையோ பேர் ஏங்க இப்படி ஒரு அறிமுகம் அவருக்கு. அறிமுகப்படத்தில் குடும்ப பாங்கான வேடத்தில் அறிமுகமானவரிடம் நம்மவர்கள் அப்போ கவர்ச்சியா நடிக்க மாட்டிங்களா என்று கேட்க எதற்கும் தான் தயார் என்று தமிழ் சினிமாவிற்கு ஏற்றவர்தான் தான் என்பதை நிரூபித்து விட்டார்.
இதெல்லாம் இருக்கட்டும் தமிழுக்கு வரணுமே. எப்படி அக்காவின் கணவரோடு ஜோடி சேர்ந்து கொஞ்சி குலாவலாமா? முடியாதே.(ஒரு சிலர் தங்கள் மகளை விட குறைந்தவயது நடிகைகள் அல்லது தன்னுடன் நடித்த நடிகையின் மகள் நடிகைகளை ஜோடியாக்கியது வேறு கதை) தமிழில் நடிக்க வைக்கவேண்டுமென பல முன்னணி நிறுவனங்கள் நடிகர்கள் முயற்சிக்க இவர் ஜோடியாகப்போவது யாருடன்?
வேறுயார் தன் அக்காவின் கணவரின் போட்டியாளரும் அக்காவின் முதல் ஹீரோவுமான தளபதியோடு தான்.(ஷாமிலிக்கும் நல்ல எதிர்காலம் இருக்குங்கோ) விஜயின் 51வது படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போவதாகவும் அந்த படத்தை சித்திக் அல்லது ஜெயம் ராஜா இயக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.(இது தான் குடும்ப ராசியோ என்பது தெரியவில்லை) வாங்கோ ஷாமிலி தளபதியோட கலக்குங்கோ. முடிஞ்சா உங்க மச்சான் தலையோடையும் ஜோடி சேருங்க.(அரசியல்ல இதெல்லாம் சகயமுங்க. ஆஹா இது அரசியல் இல்லை சினிமா என்ன இருந்தாலும் இரண்டும் ஒன்றுதாங்க.) Friday, July 17, 2009
மீண்டும் வாஸ்.

பதிவுலக நண்பர்களுக்கு!
சச்சினை பற்றி அப்படிக் கூறவில்லை! -பல்டி அடித்த வினோத் காம்ப்ளி .

பதிவுலக நண்பர்களுக்கு!
அண்மைக்காலங்களில் தொலைக்காட்சிகளில் Reality Show என்னும் ஒரு கருமாந்திரம்(இதை விட எனக்கு இந்த நிகழ்ச்சியை திட்ட வேறு வார்த்தை தெரியவில்லை) எல்லா பிரபலங்களையும் போட்டு வாட்டுவதோடு ஒரு சில பிரபலமில்லாதவர்களையும் பிரபலமாக்கி விட்டிருக்கின்றது. இப்படிப்பட நிகழ்ச்சிகள் தேவையா? அந்தரங்கங்களை போட்டு உடைக்கும் ஒரு நிகழ்ச்சியை எத்தனை பேர் பார்க்கின்றார்கள். இது எங்கே போய் முடியப்போகின்றதோ? (அதெல்லாம் இருக்கட்டும் நீ சொல்ல வந்ததை சொல் அதுக்கெதுக்கு இவ்வளவு என்கிறது புரிது. என்ன செய்றது பழகிப்போச்சு..)
சச்சின்-வினோத் காம்ப்ளி பாடசாலை காலத்தில் ஆடிய ஆட்டம் அனைவருக்கும் அத்துப்படி. அதன் பின் சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டுபேர் செய்த சேவையும்(காம்ப்ளி என்னதான் குழப்படி செய்தாலும் டெஸ்டில் ஆயிரம் ஓட்டத்தை விரைவாக கடந்த இந்தியர் என்ற சாதனை இன்னும் அவர் வசமே.) வரலாறுகளே. இந்த நேரத்தில் சச்சின் என்ற நாமம் ஒரு தசாப்தத்தை கடந்து பிறந்த குழந்தைக்கு கூட தெரிந்திருக்க இரண்டாயிரமாம் ஆண்டோடு கிரிக்கெட்டில் அஸ்தமனமாகிப் போய், பலரால் மறந்து போன வினோத் காம்ப்ளி இப்போது தானும் இருக்கின்றேன் என சொல்லாமல் சொல்லி இருக்கின்றார்.
சரி அவர் மனதில் இருக்கும் ஆதங்கத்தை ஏதோ கொட்டி விட்டார். என்று அந்த பிரச்னையை ஓரளவிற்கு ஒரு சிலர் அதை ஒதுக்கித் தள்ளிக்கொண்டிருக்கும் போது நேற்று முன்தினம் காம்ப்ளி வழங்கிய பேட்டி ஒன்றில் தன்னால் சச்சினுக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்திற்கு வருத்தம் தெரிவித்திருக்கின்றார். அதற்கு பிறகு அவர் சொன்னதுதான் நடிகர்களையே விஞ்சி நிற்க்கின்றது. அதாவது சச்சினைப் பற்றி தான் அப்படி எதுவும் சொல்லவில்லையாம். அது முற்றிலும் தவறான செய்தியாம். தனக்கும் சச்சினுக்கும் கடந்த 26ஆண்டுகளாக நல்ல நட்பு இருந்து வருகின்றது. மிக விரைவில் அவரை சந்தித்து இதை பற்றி விளக்கப்போவதாக சொல்லி இருக்கின்றார். இவை எல்லாவற்றுக்கும் சச்சின் தன் வழக்கமான அமைதியை காத்துக்கொண்டிருப்பதே அவரின் பெருந்தன்மை தான். Wednesday, July 15, 2009
திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுகளை தெரிவு செய்ய வாங்கோ! .
பதிவுலகில் அண்மையில் ஒரு பரபரப்பாக பதிவர்களுக்கான விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்த நேரத்தில் பதிவுலகை சேர்ந்த நாமும் அதை படிப்போரும் இணைந்து தமிழ் சினிமாவின் சில துறைகளில் அபிமானம் பெற்றவர்களை தெரிந்து விருது வழங்கலாம் என நினைக்கின்றேன். இது நிச்சயமாக என் தனிப்பாட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லா ஒரு இடம். காரணம் நீங்களே வாக்களிக்கப்போகின்றீர்கள். அதேநேரம் நான் தெரிவு செய்திருக்கும் தெரிவுகளில் உங்கள் தெரிவு அடங்காவிட்டால் பின்னூட்டத்தில் உங்கள் கருத்துக்களோடு உங்கள் தெரிவையும் சொன்னால் அவற்றையும் கருத்தில் கொள்ள காத்திருக்கின்றேன். எனவே நாம் அனைவரும் சேர்ந்து திரை உலககத்தினருக்கு மகுடம் சூட்ட தயாராகுவோம். இது முற்று முழுதாக உங்கள் அபிமானியை தெரிவு செய்யவே.(சிறந்தவர் யார் என்ற போட்டியல்ல)
இதே நேரம் அண்மையில் என் தளத்தில் நடைபெற்ற திரையில் ஜோடியாக தோன்றி நிஜஜோடியாகி உங்களை கவர்ந்தவர்கள் யார் என்ற போட்டியில் அஜித்-ஷாலினி,சூர்யா-ஜோதிகா,சரத்-ராதிகா போட்டியிட்டனர். அவர்களில் சூர்யா-ஜோதிகா ஜோடி அபார வெற்றியோடு முதலிடம் பிடிக்க அஜித்-ஷாலினி ஜோடி இரண்டாமிடம் பெற்றுள்ளது. சூர்யா-ஜோதிகா ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு தங்கள் வாக்குகளை அளித்து போட்டியை சுவாரஷ்யமாக்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.
அதே நம்பிக்கையோடு இந்த விருது வழங்கும் போட்டித்தெரிவிலும் நீங்கள் பங்கு பற்றுவீர்கள் என நம்புகின்றேன். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். என் தளத்தில் நீங்கள் படிக்கும் பதிவின் வலப்புறம் உள்ள என்னைப்பற்றி என்னும் பகுதிக்கு கீழிருந்து ஒவ்வொரு பிரிவாக உங்கள் வாக்குகளை அளித்து உங்கள் அபிமான பிரபலத்தை வெற்றி பெற வைத்து பதிவுலகம் திரை உலகிற்கு வழங்கும் விருதுகளை நீங்களே வழங்குங்கள். (தயவுசெய்து இங்கே எந்தவிதமான தவறான வாக்களிப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டாம்.)
அபிமான நடிகர்.
ரஜினி,கமல்,சரத்,விஜயகாந்த்,சத்யராஜ் என்னும் சாதனை நாயகர்களை தவிர்த்து அதன் பின் வந்த அடுத்த தலை முறை நாயகர்களையே நாங்கள் போட்டிக்காக தேர்ந்தெடுத்துள்ளோம்.
அபிமான நடிகை.
குஸ்பு,ரம்பா,சிம்ரன்,ஜோதிகா என கலக்கி தவிர்த்து இப்போது பலரின் தூக்கங்களை கெடுத்து ஜொள்ளு விட வைக்கும் கதாநாயகிகளை இங்கே போட்டிக்காக தருகின்றோம்.
அபிமான இயக்குனர்.
மணிரத்தினம்,பாரதிராஜா,பாலச்சந்தர் என்ற இமயங்களை கடந்து அதன் பின் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாமல் மாறி இருக்கும் இயக்குனர்கள் இவர்கள்.
அபிமான இசை அமைப்பாளர்.
எம்.எஸ்.விஸ்வநாதன்,இளையராஜா,தேவா என்ற இசை சிகர்ணகளை இங்கே போட்டிக்காக நாங்கள் எடுக்கவில்லை. அதன் பின் வந்து மாற்றங்களை தந்து கொண்டிருக்கும் இசை அமைப்பாளர்களே இவர்கள்.
அபிமான ஆண் பாடகர்.
கே.ஜெ.யேசுதாஸ்,எஸ்.பி.பாலசுப்ரமணியம் என பாடும் நிலாக்களை நாங்கள் போட்டிக்காமல் எடுக்காமல் அதன் பின் வந்து உங்களை கவர்ந்தவர்களாக இவர்கள் இருப்பார்கள்.
அபிமான பெண் பாடகர்.
சுசீலா,ஜானகி என்ற பாடும் குயில்களின் சாதனைகள் அளப்பரியன. இங்கே அதன் பின் வந்து சாதித்துக்கொண்டிருக்கும் குயில்கள் போட்டிக்காக.
அபிமான பாடலாசிரியர்.
வாலி என்னும் மார்க்கண்டேயக்கவிஞர் காலங்களை தாண்டியும் கவி படைக்கும் நேரத்தில் அந்த ஜாம்பவானை இங்கே போட்டிக்குள் கொண்டுவராமல் அதன் பின் சாதித்த சாதித்துக்கொண்டிருக்கும் பாடலாசிரியர்களே இவர்கள்.
.













