உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Saturday, May 21, 2011

தகத்தகாய தாரகை நமீதா ரசிகராக கலைஞர்

கடந்த சில வருடங்களாக காலை உணவுக்கும் மாலை தேநீருக்கும் இடையில் உண்ணாவிரதம் இருந்தும் மனைவி துணைவியுடன் சந்தோசமாக இருந்து தமிழ் நாட்டுக்கு குடும்பம் நடத்துவது எப்படி என வகுப்பெடுத்த பெயரிலே நிதியை வைத்திருப்பதால் எல்லா நிதியும் தமக்கு தன் என எண்ணிய தமிழின தலைவர் என தன்னை தானே சொல்லி தன்னை தானே செருப்படி அடித்துக்கொண்ட மதிப்புக்குரிய கலைஞர் ஐயாவுக்கும் அவர் தம அருந்தவப்புதல்வி கனி பரிக்கப்போய் கையான கனிமொழி ஆண்டிக்கும் இவர்கள் நடுவே பலிக்கடவானா முன்னாள் ராசா இந்நாள கூசாவுக்கும் பொருத்தமான பாடல்கள் சில மனதிலே தட்டின.

அதை கொஞ்சம் பகிர்ந்து கொண்டிருக்கும் போது ஒரு ஐடியாவில் வரும் பதிவு இது. அநேகமான தமிழர்கள் இதே மனநிலையில் தான் இருப்பிங்க என நினைக்கின்றேன்.....

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் பாட்டுக்கு மேலே சந்தர்ப்பம் சொல்லி இருக்கேன். பொருள் இடம் காலம் சந்தர்ப்பம் எல்லாம் போட்டு பொருத்தமாய் ஒவ்வொரு வரியை பாட்டை கேட்கணும் சொல்லிப்புட்டன்.


ஹா ஹா கனிமொழி ஆண்டி உள்ளுக்குள்ள இருந்து இப்படிதான் பாடுவாவோ






ராசாவாக இருந்து கூசாவாகிப்போயிருக்கும் பலிக்கடா உள்ளுக்க இருந்து இப்பிடித்தான் பாடுவாரோ?





குடும்பமாக சேர்ந்து ஆடிய ஆட்டம் அடங்கிப்போயிருக்கும் நிலையில் அந்த குடும்பத்துக்கு தன் மான தமிழர்கள் பாடும் பாடல்.





தமிழின் மூத்த மகன் தமிழர்களின் தனிப்பெரும் தலைவன் பாசத்தலைவன் நமீதாவின் முதல் ரசிகன் கலையுலகின் தலைமகன் என தன்னை தானே சொல்லிக்கொண்டு இப்போது வீட்டில் ரெஸ்ட் எடுக்கும் ஐயா கலைஞர் அவர்களுக்கு தமிழ் மக்கள் சொல்ல நினைக்கும் சேதி.



எனக்கு ஒரு சந்தேகம் இந்த பாடல்கள் எல்லாம் கலைஞர் காலத்திலேயே வந்தவை சினிமாவில் ஆடிய இவர் இதை எல்லாம் கேட்காமலா விட்டார்...ஆப்பு இப்படி கண்ணு தெரியாமல் தான் இருக்குமோ?
Share:

Saturday, April 2, 2011

உலக கிண்ணத்தை இலங்கை வெல்லவேண்டும் - சிங்



உலக கிண்ண இறுதிப்போட்டி வந்துவிட்டது. நாளை நடக்க இருக்கும் இந்த மெகா யுத்தத்துக்கு எல்லோரும் தயார். அணியின் பலம் பலவீனம் என எல்லாம் பலரால் பிரித்து மேயப்பட்டுள்ள நிலையில் நாளை மோத இருக்கும் அணிகளில் இந்திய அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது. முரளி நாளை விளையாடுவார் என பிந்திக்கிடைத்த செய்திகள் தெரிவிக்கும் நிலையில் அவர் எத்தனை ஓவர்கள் வீசுவார் என்பது கேள்வியே....

இந்தியாவில் நடப்பது இந்தியாக்கு பலம் எனிலும் இலங்கை இந்திய இதயங்களை ஓடித்தாலும் ஆச்சரியமில்லை. சச்சின்-முரளி ஜெயிக்கப்போவது யார்?

இந்தியாவில் பிறந்து லண்டனில் வாழும் ஒரு நபரை இன்று என்னால் சந்திக்க முடிந்தது. பிறப்பால் இந்தியாவின் சிங் (உடனே நம்ம மன்மோகன் சிங் என நினைக்கப்படாது) அவரிடம் இறுதிப்போட்டி பற்றி விசாரித்த போது இரண்டில் யார் வென்றாலும் சரியாம் இருந்தாலும் இலங்கை வென்றால் தனக்கு மிகப்பெரிய சந்தோசம் என்றும் சொன்னார். நான் ஏன் என கேட்டேன் I like to see Sri Lankan as a Champion என்றார். இதுதான் சிங்கின் பாசமோ? எல்லா சிங்கும் நல்லா சிங்கி அடிக்கிரான்கப்பா.

இதை நீங்கள் எப்படி எடுப்பீர்களோ தெரியாது. ஆனால் விளையாட்டில் இந்த நாட்டுக்கு தான் சப்போர்ட் பண்ணனும் என்ற கொள்கையில் பண்ண முடியாது. யாரை பிடிக்கிறதோ அவர்களை சப்போர்ட் பண்ணுவதில் என்ன தவறு. சூ மேக்கரை பிடித்தால் அவர் இலங்கையில் பிறக்க கூடாதோ. அல்லது சானியாவின் ஆட்டத்தை பாகிஸ்தான் ரசிகர் ரசிக்கக்கூடாதோ. விளையாட்டில் விளையாடாமல் ரசிப்போம். நாளை நிச்சயம் இரண்டு அணிகளும் ரசனைக்கு விருந்தளிக்கும். ஆனால் என்னங்க அண்ணனும் தம்பியும் அடிக்கடி மோதியதை பார்த்து சலித்துப்போச்சுதுங்க.
Share:

Monday, February 14, 2011

வெற்றி FM - லங்கா ஸ்ரீ FM இல் பாடகர் சத்யன் மற்றும் நான்.

வெற்றி FM பிறந்தநாள்.



இலங்கையில் இருக்கும் தனியார் வானொலியில் தனக்கென தனி இடம் பிடித்து இன்று உச்சத்தை தொட்டிருக்கும் அண்ணை உருவாக்கிய வெற்றிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வெற்றியின் முதல் பிறந்த நாள் முதல் கூட இருந்து ஒவ்வொரு படிகளையும் கடக்க பயணித்தவனில் நானும் ஒருவன் என்பதில் எனக்கும் சந்தோசம்.

மிக வேகமான வளர்ச்சி சிறந்த அறிவிபபளர்கள் எல்லாவற்றும் மேலாக லோஷன் அண்ணாவின் வழிகாட்டல் என வெற்றியின் வெற்றியை பற்றி சொல்ல தேவை இல்லை. வெற்றியின் ஆரம்ப நாட்கள் என்றுமே பொற்காலம் தான். காரணம் சிறிய குழு என்றாலும் அத்தனை ஜாம்பவான்களும் ஒரே குழுவில் இருந்தனர். அவர்கள் அனைவருடனும் சிறு காலம் பணியாற்ற கிடைத்தது என் பாக்கியம்.

இன்று பல புதிய அறிவிப்பாளர்களையும் சேர்த்துக்கொண்டு வீறுநடை போட்டுகொண்டிருக்கும் வெற்றிக்கு வெற்றியின் முதல் குழந்தை(வெற்றி அறிமுகப்படுத்திய முதல் ஆண் அறிவிப்பாளர் நான் தான்) என்ற ரீதியில் என் வாழ்த்துக்கள். வெற்றியால் தான் இன்று எனக்கு பல வாய்ப்புக்கள் வந்து போகின்றன. அப்படிப்பட்ட வெற்றியின் வெற்றியின் காரணகர்த்தாக்கள் ஆகிய அத்தனை நேயர்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

லங்காஸ்ரீ FM இல் பிரபல பின்னணி பாடகர் சத்யன்


தென் இந்தியாவின் பிரபல பின்னணி பாடகர் மாத்தியோசி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் பட பாடல்கள் புகழ் சத்யன் காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று லங்காஸ்ரீ FM இல் லண்டன் நேரப்படி மாலை 4 மணி முதல் 5 மணி வரை நேரடியாக பங்குபெறுகின்றார். இனிய ஒரு மாலை பொழுதுக்கு தயாராகுங்கள்.

லங்காஸ்ரீ FM இல் நான்


காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகளின் ஒரு அங்கமாக இன்று இரவு 9 மணி முதல் 10 மணிவரை லங்கா ஸ்ரீ வானொலியின் ஊடாக உங்களை சந்திக்கப்போகின்றேன். இப்படி இடை இடையிடையே கடல் கடந்தும் என் வானொலிப்பயணம் தொடர்கின்றது மனதுக்கு திருப்தி. இரவு வானலைகளில் சந்திப்போம்.

நிகழ்ச்சியை கேட்க இங்கே செல்லுங்கள். http://www.lankasri.fm/



அட இதை மறக்க முடியுமா கொண்டாடும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். நான் ப்ரீயாத்தான் இருக்கேன். பிகாஸ் ஐ ஆம் பச்சிளம் பாலகன்.
Share:

Thursday, January 27, 2011

3 இடியட்சில் மீண்டும் விஜய்! பாவம் அவரே confuse ஆகிட்டாரு.



3 இடியட்ஸ் திரைப்படம் தொடங்கிய நாட்கள் தொடக்கி சர்ச்சைக்கு பஞ்சம் இல்லை. விஜய் சூர்யா என்னும் கண்ணாம்பூச்சி ஆட்டம் முடிந்து சூர்யாவுடன் தொடங்கிவிட்டது என நேற்று செய்திகள் வெளியாகிய நிலையில் இப்போது மீண்டும் பரபரப்பு செய்தியாக மீண்டும் விஜய் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த செய்தியில் எவ்வளவு உண்மை என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. காரணம் முன்னர் தேதி ஒத்துவரவில்லை என விஜயை ஒதுக்கியதாக சொல்லப்பட்டது அதன் பின்னர் சூர்யாவும் இப்போது தேதி மற்ற மொழி மட்டுமன்றி தயாரிப்பு கூட தமக்கு தரவேண்டும் என அடம் பிடிப்பதை பார்க்கும் போது ஜெமினி மீண்டும் சூர்யாவுக்கும் ஆப்படிக்குமோ என தெரியவில்லை. சங்கரோ, ஜெமினியோ ஏன் சூர்யாவோ கூட நடிக்கும் நடிகர்களோ இந்த படம் பற்றி வாய் திறக்காத நிலையில் இன்னும் மர்மமாகவே இருந்து வருகின்றது.

எது எப்படியோ விஜயின் அரசியல் இப்போதைக்கு இல்லை எண்பது மட்டும் தெளிவாகிவிட்டது. காவலனும் அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையை வைத்து பார்க்கும் போது மீண்டும் விஜயுடன் கைகோர்க்க ஷங்கர் மற்றும் ஜெமினி விரும்பலாம். அத்துடன் தம்மை எதிர்த்து விஜய் படத்தை வெளியிட்டு வெற்றி கண்டபின்னர் மேலும் விஜயை எதிர்த்து தம்மை படுகுழியில் தள்ள ஆளும் தரப்பும் யோசிக்கும்.

எல்லாம் தேர்தல் வருகுதெல்லோ. விஜய் ஆளும் தரப்பை கண்டு அடங்க ஆளும்தரப்பு விஜயை மேலும் வளரவிடக்கூடாது என்பதற்காகவே மீண்டும் விஜயுடன் பரஸ்பரமாக போகலாம். அப்படிப்போனால் பல நச்சரிப்புகள் கொடுத்த சூர்யாவுக்கு ஆப்பு அடிக்கப்படலாம். எது எப்படியோ உத்தியோக பூர்வ அறிவிப்பு வரும் வரை வாயை மூடிக்கொண்டு நடப்பதை பார்ப்போம். ஆனால் இப்படி சர்ச்சைகள் கடந்து ஒரு படம் தேவை தானா. காரணம் நம்மில் பலர் அந்த படத்தின் ஒரிஜினலை பார்த்துவிட்டோம் இனியும் அந்த படம் ஓடுமா? எல்லாமே ரசிகர்கள் கையில்.

செய்தியை படிக்க இங்கே செல்லுங்கள்.
S.Shathiesh
Share:

Saturday, January 15, 2011

ரஜினி,கமல்,விஜய், சதீஷ் பொங்கல்!

பொங்கல் வாழ்த்து எல்லோரும் ஒவ்வொரு விதத்தில் சொல்கின்றனர். இது என் இரண்டாவது முறை. நடிகர்கள் உட்பட சில பாடல் தொகுப்புக்களால் வாழ்த்துக்கள். (ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தால் தாமதமாக வருகின்றது.)

போடா எல்லாம் விட்டு தள்ளு பழசை எல்லாம் சுட்டு தள்ளு புதுசாய் இன்று பிறந்தோம் என்று எண்ணிக் கொள்ளடா,
தை பிறக்கும் நாளை விடியும் நல்ல வேளை - ரஜினி





தை பொங்கலும் வந்தது பாலும் வந்தது -கமல்




மழை காலத்தில் குடிசை எல்லாம் தண்ணீரில் மிதக்கின்ற கட்டுமரம்.......
போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல்.....விஜய்




ரஜினி கமல் விஜய் எல்லாம் தங்கள் பாட்டுகளால் வாழ்த்திவிட்டார்கள். அட நானும் பிரபலம் தாங்க வாழ்த்த கூடாதா. இதோ you tube தயவில் ஒரு பாடல்.



பாடல்களை தேடிக்கொண்டிருந்த போது எனக்கு கிடைத்த இன்னொரு அற்ப்புத பாடல். தமிழர்களுக்கு பொதுவான ஒரு பண்டிகையை பற்றி மதம் கடந்தி கிறிஸ்தவ மதத்தினர் பாடி கொண்டாடி மகிழ்கின்றனர். பாருங்கோ.



பாடல்களை தர உதவிய youtubeக்கு நன்றி.
Share:

பொங்கல் எப்போ? - இம்முறை இரண்டு பொங்கலா?

தைப்பொங்கல்.

இன்பம் பாதி துன்பம் பாதி தான் வாழ்க்கை ஒருபுறம் அழிவுகள் உலகை துரத்திக்கொண்டிருக்க மறுபுறம் சில தவிர்க்க முடியாத பண்டிகைகள் சடங்குகள் வந்துகொண்டே செல்கின்றன. நாளைய தினம் பொங்கல் கொண்டாட உள்ள அத்தனை உறவுகளுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.


காலையில் எழுந்து தோய்ந்து புத்தாடை அணிந்து சூரியனுக்கு படைத்து அப்பா தீபம் காட்ட பின்னே நின்று ஆதவனை வணங்கி அம்மா கையால் பொங்கல் உண்ணும பொங்கல் இந்த முறை எனக்கு இல்லை. இருந்தாலும் நினைவுகளால் மனதில் ஒரு பொங்கல் லண்டனிலும் கொண்டாடுவேன் உங்கள் வாழ்த்துக்களோடு.

மாட்டுப்பொங்கல்.

உழவர்களுக்கு உறுதுணையாய் நின்ற உன்னத உயிர்களை பூஜிக்கும் நாள் என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. இருப்பினும் நம்மில் சிலரும் இந்த நாளில் தான் குளித்து உடுத்தி கொண்டாடுவார்கள் அவர்களுக்கு வாழ்த்து சொல்லாவிட்டால் கோபி(அட நல்லாய் பொருந்துது)ப்பாங்க இல்லையா? வாழ்த்துக்கள்!




பொங்கல் எப்போ?
(இது மொக்கை அல்ல)

தமிழர்கள் அன்று முதல் இன்றுவரை தை மகளின் முதல் நாளை தான் தைத்திருநாளாக கொண்டாடுகின்றனர். என் தத்தா பாட்டன் பூட்டன் என்று எல்லோரும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாக தான் இந்த நாளை கொண்டாடி வந்தனர். ஆனால் அண்மையில் தமிழ் தாத்தா(ஆனால் இளைஞன் என்று விளம்பரப்படுத்திறாங்க என்ன கொடுமை இது. கீழுள்ள படத்தை பாருங்கோ) தை திருநாளை புத்தாண்டாகவும் கொண்டாட சொல்லி கழுத்தறுகின்றார்.
இந்த நிலையில் லண்டனில் பல காலண்டர்களில் 14.01.2011 தான் தை பொங்கல் என பிரசுரித்துள்ளதுடன் ஒரு சில ஆலயங்களிலும் இன்று தை திருநாள் கொண்டாடப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை மற்றும் இந்தியாவில் நாளை(15.01.2011) தான் பொங்கல் என அறியக்கிடைத்ததுடன் இன்றும் 14.01.2011 சிலர் பொங்கலை இந்தியாவில் கொண்டாடியதாய் அறியக்கிடைத்தது. இதை பற்றி நண்பர் ஒருவரிடம் கேட்டேன் ஏன் இன்று லண்டனில் கொண்டாடினார்கள் என்று அதுக்கு அவர் சொன்ன பதிலோ கொஞ்சம் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தது. (இங்கே எல்லாம் இப்பிடி தான்) சனிக்கிழமை வந்தால் மாமிசம் உண்ண உண்ண முடியாது என்பதற்காய் தை மகள் ஒரு நாள் முன்னரே பிறந்து விட்டால் என்று. பிள்ளையை தான் முந்தி பிந்தி பெறுகின்றார்கள் என்றால் இப்போ தை மகளும் இப்படியா?

உண்மையில் இன்று லண்டனில் பொங்கல் என சொல்ல காரணம் நேர வித்தியாசம் என்றனர். சரி உங்கள் வழியிலேயே வருகின்றேன். அப்படி நேர வித்தியாசம் என்றால் இலங்கை இந்திய நேரத்துடன் ஒப்பிடுகையில் லண்டன் நேரம் 5.30 மணித்தியாலங்கள் பின்னரே. அதாவது நீங்கள் காலை 6.00 மணி என்று சொன்னால் லண்டனில் நேரம் அதிகாலை 12.30. அப்படி பார்த்தால் இலங்கை இந்தியாவில் தை மகள் பிறந்த பின்னர் அல்லவா லண்டனில் பிறக்க வேண்டும். அதாவது January 15 ம் திகதி தான் தமிழுக்கு தை முதலாம் தயக்கத்தில் என்றால் அது எப்படி January 14 தை திருநாளாக முடியும். லண்டனில் பொதுவாக மூன்று W க்களை நம்ப முடியாது என்பர். Weather, Work, Wife இப்போ நம்பிக்கைகளாய் காலம் காலமாய் வந்த மரபுகளையே நம்ப முடியலையே! நண்பர்களே! உண்மையில் எப்பதாங்க பொங்கல் சொல்லிட்டு கொஞ்சம் நமக்கும் அனுப்பி வையுங்க.
Share:

பதிவுலக நண்பர்களே! நீங்கள் உண்மையான காவலன் ஆகுங்கள்.



தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கு உண்டு ஆனால் இம்முறை தை மகள் தன்கூட பல அழிவுகளையும் எங்கள் நாட்டில் கொண்டுவருவது கவலையே. இலங்கையின் சில பகுதிகளில் பாரியளவான சேதங்கள் ஏற்ப்பட்டிருப்பதுடன் கொழும்பில் கூட லண்டன் போன்ற குளிர் நிலவுவதாக நண்பர்கள் சொல்கின்றனர். வரும் காலம் வசந்தமாகும் என்றால் வம்பாகிக்கொண்டே போகின்றது.

இந்த நிலையில் பல அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் தங்கள் நிவாரணப்பணிகளை முடுக்கி இருக்கும் நிலையில் நற்காரியங்களில் ஈடுபட ஆசைப்பட்ட நம் பதிவர்களும் தங்களால் முயன்ற உதவிகளை வழங்க முன்வந்து பல பதிவுகள் இட்டனர். இதில் முக்கியமாக குறிப்பிடவேண்டிய விடயம் எந்த பாகுபாடும் இன்றி வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்ற மனப்பான்மை இன்றி(குற்றம் சொல்பவர்களே இப்போ எங்கே போய்விட்டீர்கள்) ஒன்றாக இணைந்த நிரூஜா, வதீஸ், ரமேஸ், சந்த்ரு, மதிசுதா, கூல் பாய் கிருத்திகன்(எல்லோரும் எனக்கு அண்ணா மார் எனவே பெயருக்கு பின் அண்ணா போடுங்க) என இந்த திட்டத்தை முன்னெடுத்தனர். எல்லோரும் ஒன்றுபட்டு இந்த நல்ல காரியத்தை செய்து முடிக்கும் படி பதிவுலக நண்பர்கள் அத்தனை பேரையும் உரிமையுடன் அன்பாக கேட்டுக்கொள்கின்றேன்.

கைநீட்டி கொடுத்த நம் உறவுகள் இன்று கையேந்தும் நிலைக்கு விட்டுவிடாதீர்கள். நாளை நமக்கும் இதே நிலை வரலாம். நம் உறவுகளுக்கு நாம் கொடுக்கும் போது அது கையேந்தல் ஆகாது நாம் செய்யும் கைமாறே அது.

இயற்கை அனர்த்தத்தில் இருந்து மீண்டுவர இறைவனை பிரார்த்திப்போம்!
Share:

Monday, January 3, 2011

பாட்டெழுத சான்ஸ் கொடுங்கப்பா!

வணக்கம் நண்பர்களே,

முதலில் உங்கள் எல்லோருக்கும் என் புதுவருட வாழ்த்துக்கள்.

கடந்த என் சில பதிவுகள் மொக்கை என்பதை தாண்டிய மொக்கை என சில அபிமானிகள் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில் கொஞ்சம் சீரியசாய் ஒரு மொக்கை பதிவு இது. இவன் திருந்த மாட்டானோ என நினைக்காதிங்க. நான் எழுதி இருப்பதில் உண்மை இல்லை என்றால் சொல்லுங்கள் நான் மொக்கை போடுவதை நிறுத்துகின்றேன்.

இன்று கொஞ்சம் வெட்டி சும்மா இருக்கையில் எனக்கு ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. அந்தக்காலம் இந்த காலம் என்று என் சிறுவயதில் வில்லிசையில் பாடிய பாடல் அதையே கொஞ்சம் மாத்தி இப்படி போட்டால் எப்படி இருக்கும் என சிந்தித்தேன் இதோ வருகின்றது அந்த பாடல்.

கண்ணதாசன் உண்மைக்காதல் கவி படித்தான் அந்தக்காலம் ஆமா அந்தக்காலம் -இப்போ
modern காதல் பற்றி நானும் சொல்ல போறேன் இந்த காலம் ஆமா இந்த காலம்.

பொண்ணுங்க பின்னால் பையன் சுத்தியது அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
பையன்க பின்னால் பொண்ணு சுத்துறது இந்த காலம் ஆமா இந்த காலம்.

Heartம் heartம் தான் beat போடுவது அந்த காலம் ஆமா அந்த காலம் - ஆனால்
next dayயே எல்லை மீறி ஆட்டம் போடுவது இந்த காலம் ஆமா இந்த காலம்

பார்த்த பார்வையில் காதல் fire வரும் அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
பார்க்காமலேயே பற்றி எரிகின்றது இந்த காலம் ஆமா இந்த காலம்

காதல் சொல்ல நாட்கள் பல கடக்கும் அந்த காலம் ஆமா அந்த காலம் - ஆனால்
கண்டவுடனேயே கையைபோடுவது இந்த காலம் ஆமா இந்த காலம்

கடிதங்கள் எழுதி காதல் செய்ததுவோ அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
Dating மூலமே bracket போடுவது இந்த காலம் ஆமா இந்த காலம்

அத்தான் மாமா என்று சினுங்கியது அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
அடேய் ராஸ்கல் என்று அழைப்பது இந்த காலம் ஆமா இந்த காலம்

அன்பு பண்பின் ஆழம் பார்த்தது அந்த காலம் ஆமா அந்த காலம் - ஆனால்
Car, Purse waitஐ first ஆய் பார்ப்பது இந்த காலம் ஆமா இந்த காலம்

காதலுக்காக உயிரைக்கொடுத்தது அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
கள்ள காதலுக்காய் உயிரை எடுப்பது இந்த காலம் ஆமா இந்த காலம்

காதலில் தோற்றால் தாடி வளர்த்தது அந்த காலம் ஆமா அந்தக் காலம் - love
தோல்வியிலும் அவள் friendஐ correct பண்ணும இந்த காலம் ஆமா இந்த காலம்

காதலி பிரிஞ்சதும் தாலி வளர்த்தது அந்த காலம் ஆமா அந்த காலம் - ஆனால்
பிரிஞ்சா happy moodஇல் அடுத்த lady pick up இந்த காலம் ஆமா இந்த காலம்

Weddingஇன் பின்னர் மழலை சத்தம் அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
waiting இன்றி wait கொடுப்பது இந்த காலம் ஆமா இந்த காலம்

காதல் செய்தால் ஊரே எதிர்த்தது அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போகாதல் பண்ணாட்டி fashion இல்லைஎன்னுது இந்த காலம் ஆமா இந்த காலம்

காதல் கல்யாணம் கருப்பாய் இனித்தது அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
தாலி ஏறமுன்னே diverse கேட்கிறது இந்த காலம்

காதலை காதலர் காதல் செய்தது அந்த காலம் ஆமா அந்த காலம் - செய்யும்
கண்றாவி எல்லாம் காதல் என்னுது இந்த காலம் ஆமா இந்த காலம்

லைலா மஜ்னு இறந்தும் வாழவைத்தது அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
lovers வாழும் போதே loveஐ கொள்வது இந்த காலம் ஆமா இந்த காலம்

வாலி வரியதனில் காதல் உருகியது அந்த காலம் ஆமா அந்த காலம் - ஐயோ
நானும் கவிவடித்தேன் என்ன கொடுமை இது இந்த காலம் ஆமா இந்த காலம்.

முக்கிய குறிப்பு: திரையுலக நண்பர்களே படைப்புலக பிரமாக்களே நானும் கொஞ்சம் பாட்டு எழுதுகின்றேன் சினிமாவில் பாட்டு எழுத ஒரு சான்ஸ் வாங்கி கொடுங்கப்பா! என்னது இந்த மொக்கை எல்லாம் அங்கேயும் பார்க்கணுமா என திட்டாதிங்க. திருப்பி சந்திப்பம்.


Share:

Wednesday, December 29, 2010

உலக வரலாற்றில் முதன் முறையாக ஒரு வித்தியாச பதிவு!



உலக மகா ஜனங்களுக்கு வணக்கம்,

பதிவுலகில் ஒரு சாதாரண பதிவராக இருந்து வரும் ஒருவர் நிறைய பதிவுகளை எழுத பொறி தட்டுப்பட்டும் இன்னும் அவற்றை பதிப்பில் இடாமல் உள்ளார். சினிமா, விளையாட்டு வம்பு தும்பு என கலந்து கட்டி எழுதி பலரிடம் அடிவான்கியும் வலிக்காமல் எழுதிக்கொண்டிருந்தவருக்கு இப்போதெல்லாம் நேரம் கிடைத்தும் பதிவு எழுத மனம் இல்லாமல் எல்லாவற்றையும் டிராப்டில் வைத்துள்ளாராம்.

பதில் பதிவுகள் பரபரப்பு பதிவுகள் என பல கைவசம் இருந்தும் கரை சேர்க்க முடியாமல் இருக்கும் இவருக்கு பதிவுகளை எழுதி தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்(சுடு சோறு என நினைக்க படாது) என அறிவித்துள்ளார். அதன் ஒரு விளம்பர பதிவாக இந்த பதிவை இட வேண்டும் என அந்த பதிவர் கேட்டுக்கொண்டதுடன் நாடு கடந்த அதிகார மைய பதிவர் அவர் என்பதால் பல வெளிநாடு பெண்கள் இந்த வேலைக்கு விண்ணப்பித்தும் தமிழர் ஒருவருக்காய் காத்திருப்பதாய் சொல்லி இருக்கின்றார்.

ஆர்வம உள்ளவர்கள் கீழ்காணும் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்:
வெட்டிப்பயளுக்கு வெட்டிப்பயல்,
வெட்டித்தெரு,
வெட்டியர் கிராமம்,
லண்டன்.

அண்ணே மாரே அக்கா மாரே அங்கெ இங்கே பார்த்து உருட்டுக்கட்டை தேடாதிங்கோ. உங்களால அவரை அடிக்க முடியாது ஏன்னா அவர் அவர்......

























நான்தானுங்கோ!



உங்களால என்னை அடிக்க முடியாது. காரணம் லண்டனுக்கு வர ரொம்ப செலவாகும். இங்கே அழ வச்சு அடிக்கலாம் எண்டால முடியாதுங்க.....ஏன்னா நாங்க தான் நாடு கடந்த பதிவர்கள் அதிகார மையம் ஆச்சே....சும்மா லோலாய்....

நீங்க எல்லோரும் பதிவை போட்டு கலக்க நாமளும் ஒரு பங்குக்கு போடா வேண்டாமா என்ன? எழுத நிறைய விடயங்கள் இருந்தாலும் மகா மொக்கை ஒன்று போடணும் என்பதற்காய் இப்படி ஒரு பதிவு. சும்மா ஒரு வாக்கு குத்திட்டு போங்கோ!


Share:

Sunday, December 19, 2010

இன்றுமுதல் பதிவர்கள் இதை தான் எழுதபோகின்றார்கள்.

என்ன பதிவர்களே! ஒரு சின்ன மொக்கை போடபோகின்றேன் அதுக்கு முதல் ஒரு சீரியஸ் விடயம்.

இந்தியா, தென் ஆபிரிக்காவுடன் போட்டியில் டிரா செய்கின்றதோ இல்லையோ சச்சின் தன சாதனை பயணத்தில் இன்னொரு மயில் கல்லை தாண்டி விட்டார். சத்தத்தில் அரைச்சதம் கடந்து தன அணியை மீட்க போராடிக்கொண்டிருக்கின்றார். சாதனை நாயகனுக்கு வாழ்த்துக்கள் சொல்கின்றேன். இதை விட வேற ஒன்றும் நான் சொல்ல மாட்டேன். ஏன் தெரியுமா?

வரபோகும் இரு நாட்களும் இதுவரை பதிவர்களால் போற்றி வழிபடப்பட்ட விஜயை பின்தள்ளி சச்சின் பெயர் அடிபடபோகின்றது. இந்தியா தோற்றாலும் சச்சின் நாமமமே அனைத்து தளங்களிலும் பரவலாக ஆக்கிரமிக்கப்படபோகின்றது. மீண்டும் ஒரு தடவை சச்சின் சாதனை புத்தகம் தூசு தட்டப்படபோகின்றது.(இந்த முறை தூசு இருக்காது காரணம் இப்பதான் சில நாட்களுக்கு முன்னம் இன்னொரு சாதனையை பதிக்க எடுத்திருப்பார்கள்.) சச்சின் கடவுளுக்கும் மேலாக வைத்து பதிவர்களால் பூசிக்கப்படபோகின்றார்.

இன்னொருபுறம் சாதனைக்காக ஆடும் சச்சின். சச்சின் சுயநலவாதி என்னும் விமர்சன பதிவுகளும் வரபோகின்றன. இன்னும் என்னென்னவோ பதிவுகள் வந்தாலும் சச்சின் தான் வரும் இரண்டு நாட்கள் எல்லா பதிவர்களாலும் எழுதப்படபோகின்றார். அப்புறம் எதுக்கு நான் அவரை பற்றி எழுதுவான். நீங்கள் எழுதுங்கோ வாசிக்கின்றேன்.
Share:

The making of பதிவர் சந்திப்பு! - வரலாற்று தடம்.

பதிவர் சந்திப்பை எல்லோருக்கும் ஏற்ற ஒரு நாளில் நடத்துவதே கஷ்டம் அதை விட கஷ்டம் இந்த பதிவு போடுறது. என்ன செய்வது வெளியே போகமுடியாமல் பனி மூடிக்கிடப்பதால் வீட்டுக்குள் இருந்து ஒரு அவசர பதிவு.

லண்டனில் முதன்முறையாக தமிழ் பதிவர்கள் ஒன்று கூட வேண்டும் என்ற ஆசை வந்தி அண்ணாவுக்கு எப்போதும் இருந்தது உண்டு(இப்போது மாம்ஸ் வேற விசயத்தில் பிசி) இதை நிரூஜாவும்(அட உடனே சந்தேகப்படாதிங்கோ) மாம்சும் பலமுறை பகிர்ந்து கொண்டாலும் நான் லண்டனில் காலடி வைத்த பின் தான் சந்திப்பு என அறிவித்துவிட்டார் நாடுகடந்த பதிவர்களின் அதிகாரமைய தலைவர் திரு வந்தி அவர்கள். இந்த நிலையில் நிரூஜா இலங்கை சென்று சந்திப்பை வெற்றிகரமாக நடத்தியும் விட்டார்.

நான் லண்டன் வந்தே நான்கு மாதங்கள் ஆகும் நிலையில் சந்திப்பு பற்றி எந்த பேச்சும் இன்றி நாட்கள் போக போகத்தான் மாம்ஸ்க்கும் கரவைக்குரலுக்கும் பிறந்த நாள் வந்தது. எனவே இருவரும் விருந்துவைப்பதாய் சொன்னதை நம்பி நானும் ஓகே என ஒரு நாள் சொன்னேன்.(கடைசிவரை ஏமாத்திட்டாங்க பயலுகள்) அப்போதுதான் ஏன் இதை மற்றைய சில பதிவர்களையும் சேர்த்து சந்திப்பாக்க கூடாது என எண்ணி ஒரு மாதத்துக்கு முன்னரே பேசி வைத்துவிட்டோம்.

லண்டனில் கல்வி நடவடிக்கை வேலை என எல்லாம் பார்த்து எல்லோருக்கும் சரியான நான் எது அமையும் என்றால் நூறு வருடம் சென்றாலும் அறியமுடியாது. இந்த நிலையில் திடீரென ஒரு நாளை பலரின் தெரிவில் செய்வோம் என்ற ரீதியிலும் இந்த கிறிஸ்மஸ் விடுமுறை அதற்க்கு பொருத்தமாக இருக்கும் என எண்ணினேன். அந்த வகையில் என்னுடன் என் உளறல்கள் வந்தி அண்ணா, கரவைக்குரல் தினேஷ், பங்குசந்தை அச்சு, இளங்கன், ஜனகன் மற்றும் முன்னாள் பதிவர்கள் கோசலன், பார்த்தி, ஷனா இவர்களுடன் பின்னூட்டங்களில் சில காலம் கலக்கிய செல்லம்மாவுக்கும் அழைப்பு விடுத்ததோடு இந்திய பதிவர்களையும் கலந்து கொள்ள வைக்கும் எண்ணத்தில் பதிவர்கள் சாளரம் கார்க்கி, ரசிகன் சௌந்தர் ஆகியோரிடமும் இதை பற்றி பேசி இருந்தேன்.

இலங்கை பதிவர்கள் என்பதையும் மீறி தமிழ் பதிவர்களின் சந்திப்பாக இது அமைந்தால் சந்தோசமாக இருக்கும் என்பது மட்டுமன்றி. தமிழ் பதிவர்கள் சந்திப்பு வரலாற்றில் முதன் முறையாக லண்டனில் நடக்கும் பொது அதற்க்கு பலர் வந்தால் உரம் சேர்க்கும் என்ற எண்ணம தான்.

இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் முதல் நாள் மதியம் தான் நாளை சந்திப்பது என ஐவர் முன் வந்த நிலையில் நாங்கள் இதை பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போதே கரவைக்குரல் தினேஷ் தன கைவேலையை காட்டிவிட்டார். இதற்க்குபிறகும் நாங்கள் பின்னடிக்க முடியாது என முடிவெடுத்து ஓரளவுக்கு இடத்தையும் நேரத்தையும் முடிவெடுத்தோம். இந்த நிலையில் சிலர் தம்மால் இம்முறை பங்கு பற்ற முடியாது அடுத்தமுறை பார்ப்போம் என ஒதுன்கியதுடன் வாழ்த்துக்களை தெரிவிக்க இறுதியில் நால்வர் மட்டுமே சந்திக்க போகின்றோம் என்ற நிலை உருவானது. இங்கே கல்வியை கட் அடித்துவிட்டு வந்தாலும் வேலையை யாரும் கட் அடிக்க மாட்டார்கள். இருப்பினும் எதற்கும் ஒரு ஆரம்பம் வேண்டும் தானே சந்தித்துவிடுவோம் என முடிவெடுத்து இரவு தூங்க போகும் நேரத்தில் மாம்ஸ் அழைப்பெடுத்து நேரம் கேட்டார். அந்த நேரம் எனக்கு காய்ச்சல் ஆனால் என்ன செய்யமுடியும் இதை நான் சொல்ல சந்திப்பை நிறுத்துவோம் என்றார் இருப்பினும் சந்திக்கணும் என்று முடிவெடுத்தாச்சு இனி நாங்களே எங்க பேச்சை கேட்ககூடாது என்ற நினைப்பில் நாளை காலநிலை என்ன என்று பார்த்தால் கடும் பனிப்பொழிவு. அப்படி ஏதும் சிக்கல் என்றாலே ஒழிய வேறு எந்த காரணத்துக்காகவும் சந்திப்பு நிக்காது என சொல்லிவிட்டு தொலைபேசியை மௌனத்தில் போட்டுவிட்டு தூங்கிவிட்டேன்.

பங்குசந்தை அழைப்பு எடுத்து பார்த்து என்னை தொடர்பு கொள்ள முடியாமல் போக கரவைக்குரலுடன் தொடர்பை ஏற்ப்படுத்தி எல்லோரும் மறுநாள் oxfrod circus இல 12.30 க்கு சந்திப்பதை ஏற்பாடானது. ஆனால் அன்றைய நாளோ லண்டனில் கடும் மழை. அப்புறம் தானே நம்ம பதிவர்கள் தங்கள் நிஜ முகங்களை காட்ட ஆரம்பித்தனர். இனி கரவைக்குரல், மாம்ஸ், அச்சு தொடர்வார்கள்.

குறிப்பு: பதிவுலக மார்க்கண்டேயன் லண்டன் அதிகார மைய தலைவர் என் மாம்ஸ் வந்தி அவர்கள்(தலைவர் ஆகிட்டார் எல்லா) இப்போது வேறு வேலைகளில் பிசியாக இருப்பதால் இன்னும் படங்களை அனுப்பவில்லை. இனி அதுவும் வருமா தெரியாது. சிலவேளை கடவுச்சொல் பறிபோனால்??????????? ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.
Share:

Sunday, December 12, 2010

கொலைக்காற்று பாகம்-3

பதிவர்களினால் தொடர் கதையாக எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் கொலைக்காற்று கதையின் மூன்றாவது பகுதி என் கையில். ஏற்கனவே எழுதிய பகுதிகளை படிக்க இங்கே கீழே உள்ள சுட்டிகளுக்கு செல்லுங்கள்.




தொலைபேசி அழைப்பை தொடர்ந்து உடனடியாக கொலை நடந்த பீச்சுக்கு விரைந்த பொலிஸ் அதிகாரி சூர்யபிரகாஷ் சேகரின் உடலை கூர்ந்து கவனித்ததில் அவரின் ஆடையில் பெண்ணின் தலைமுடி சில இருந்ததை அவதானித்து விட்டார். இருப்பினும் அதை பெரிதாக காட்டிக்கொள்ளாது பிரேதத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு நேரடியாக காவல்நிலையம் சென்றுவிட்டார்.

"குட் ஈவினிங் சார்" - கான்ஸ்டபிள்

"சொல்லையா என்ன இண்டைக்கு ஒரே செத்த வீடாய் இருக்கு" இது சூர்யபிரகாஷ்.

"அதுதான் தெரியல என்ன சார் போன இடத்தில் ஏதும் சிக்கிச்சா" என காண்டபில் கேட்டதும் "அட போய்யா நீவேற என்ன கறுமமோ தெரியல ஏதும் கள்ள தொடர்போ தெரியாது. சும்மா போயா இந்த கேஸ் எல்லாம் நடத்தி என்னத்தை கிழிக்க போறோம். போ போய் எனக்கு ஒரு கொத்தும் சிகறேட்டும் வாங்கி வா" என அதட்டி விட்டு அப்படியே மெதுவாய் கண்ணயர்கின்றான் சூர்யபிர்காஷ்.

.......................................................................................................

மறுபுறம் தனது கையடக்க தொலைபேசியில் இருந்து தனது ஆருயிர் நண்பன் சேகரை தொடர்பு கொள்ள முயன்ற கெளதமுக்கு ஏமாற்றமே மிஞ்ச அப்படியே வர்ஷாவுக்கு பக்கத்தில் சாய்ந்து படுத்து கொண்டே கண்களை மூடினாலும் கெளதமை ஏனோ தூக்கம் அணைக்கவில்லை. புரண்டும் திரும்பியும் படுத்தும் தன் கணவன் தூங்கவில்லையே என அறிந்த வர்ஷா "என்னங்க தூக்கம் வரவில்லையா? என்னத்தை நினச்சுக்கொண்டு இருக்கிறிங்க" என கேட்க "ஒண்ணுமில்லை லேசா தலைவலிக்கிறது நீ படு" என சொல்லிவிட்டு மறு பக்கம் திரும்ப முயன்றவனை இழுத்து அணைத்து அன்பாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டு "எதுக்குமே யோசிக்காதிங்க அதுதான் நான் கூட இருக்கிறேன் எல்லா. பிறகென்ன தலைவலி அப்புறம் போனில தட்டுறது" என வர்ஷா தட்டு தடுமாறி கேட்டுவிட "அப்போ நீ இன்னும் தூங்கலையா? நான் என்ன செய்கின்றேன் என பார்த்து கொண்டா இருந்தாய்?" என கோபமும் சந்தேகமும் கலந்து கெளதம் சொல்ல "என்ன சார் இப்போ கோபம் நான் ஒன்றும் அடுத்த வீட்டுக்காரி இல்லை. உங்க பொண்டாட்டி தான். நானொன்றும் ஒட்டுக்கேட்கவில்லை. உடல் அசதியில் வந்து படுத்தாலும் நீங்கள் எனக்கு அருகில் இருக்கிறதால மனதளவில் எனக்கு அசதியே வரவில்லை" என ஜொள்ளு விட்டபடியே வர்ஷா பேசினாலும் கெளதமால் அதற்க்கு இசைய முடியவில்லை.

ஒரு சில நிமிட நேர பேச்சுக்கு பிறகு சத்தம் குறைந்தது. ஒருவர் மற்றவர் தூங்கிவிட்டார் என்று நினைத்தார்களோ என்னவோ தங்களுக்குள் அணைக்க முயாவிட்டாலும் கால ஓட்ட கட்டளைக்கமைய இரவை அணைத்துக்கொண்டார்கள். வர்ஷா தூங்கிவிட்டதை உணர்ந்த கெளதம் மெதுவாய் அரவமின்றி எழுந்து வந்து தன் கையடக்க தொலைபேசியைஎடுத்து சேகரின் இலக்கத்துக்கு அழைப்பெடுக்க இம்முறை ஒரு ஆண்குரல் "ஹலோ ஐ ஆம் சேகர்" என்றது இருந்தாலும் அது தன் நண்பன் சேகரின் குரல் இல்லை என உறுதி செய்து கெளதம் அந்த அழைப்பை உடனடியாகக் துண்டித்ததுடன் அடுத்த கணமே ஜெனியின் நம்பருக்கும் அழைப்பை எடுத்தான். என்ன ஆச்சரியம் இம்முறையும் அதே குரல் ஆனால் "நான் ஜெனியின் அப்பா நீங்க"
"......................................."
"ஹலோ யாரடா அது"
".........................................."
"அந்த நம்பரும் இதுவும் ஒன்று தான் சார்"
டக் டக்

ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கிறது என புரிந்து கொண்ட கெளதம் அந்த அழைப்பை துண்டித்தது மட்டுமன்றி அந்த இலக்கத்தையும் துண்டித்துவிட்டான்.
..................................................................................................................

அதே நேரம்....கொழும்பு காவல் நிலையத்தில்.......

"சார் இரண்டு நம்பரும் ஒன்றுதான். யாரோ இரண்டுபேருக்கும் தெரிந்தவன் கோல் பண்ணுறான் போல..."
"அந்த நம்பர் யார் பெயரில் இருக்கு என்று எனக்கு இப்ப உடனே தெரியணும்...." - சூர்யபிரகாஷ்.
"இப்போ நைட் காலமைக்கு தான் எடுக்கலாம்."
"ஓகே ஓகே எனக்கு நாளைக்கு தெரிஞ்சாகணும்" இது சூர்யபிரகாஷ்.

........................................................................................

கண்டியில் கெளதம் அறையில்..........

தன் எந்த முயற்சியும் பலனளிக்காமல் வந்து கட்டிலில் சரிந்த கெளதமின் நினைவுகள் கடந்த காலத்தை மீட்டி பார்க்க தொடங்கியது.......

இன்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் மாணவர் விசாவில் லண்டன் சென்ற கெளதம் பல்கலைக்கழகத்தில் தன் கல்வியை சீராக ஆரம்பித்தான். ஒரு சில வார நகர்வுகளுக்கு பிறகு தானும் இன்னொரு மாணவியும் தான் அங்கே தமிழர் என்பதை இனங்கண்டு கொண்டு அவரை சந்திக்கின்றான்.

"ஹாய்"
"ஹாய்"
"ஐ ஆம் கெளதம் புறோம் ஸ்ரீ லங்கா. ஆர் யூ எ ஸ்ரீ லங்கன் தமிழ்?"
"எஸ். ஐ ஆம் ஜெனி. ஹவ் ஆர் யூ?"
"ஐ ஆம் ஓகே....ஹா ஹா ஹா"
"என்னங்க சிரிப்பு?"
"இல்லை நாங்க இரண்டுபேரும் தமிழர்கள் என்று அடையாளம் தெரிஞ்ச பிறகும். வி ஆர் டாக்கிங் இன் இங்கிலீஷ்."
ஜெனி விழுந்து விழுந்து சிரிக்கின்றாள்.
"ஏனுங்க சிரிக்கிரிங்க"
"இல்லை தமிழில கதைப்பம் எண்டு நீங்களே இங்கிலிஷில கதைக்கிறிங்க அதுதான்."
"என்னங்க பண்ணுறது இங்க நம்ம ஆட்கள் ஒரு மூஞ்சியை பார்க்கிறதே கஷ்டமாய் இருக்கு. உங்களை பார்த்தது சந்தோசம்"
"எனக்கும் தாங்க. வி ஆர் பிரண்ட்ஸ்."
"ஏங்க நான் ஒன்று சொன்னால் தப்பாய் எடுக்க மாட்டியலே"
"இல்லை சொல்லுங்க. அதுதான் சொல்ல வந்திட்டிங்க அப்புறம் என்ன கேள்வி."
"ஓகே சொல்லுறேன். சிரிக்கும்போது உங்களை பார்த்தால் லைலா மாதிரி இருக்குதுங்க"
"இது லைலாவுக்கு தெரியுமா? ஓகே ஓகே எனக்கு ஐஸ் வச்சது போதும் வாங்க கிளாஸ் தொடங்கபோகிறது"

இருவரும் ஒரே பாதையில் பயணிக்க இரண்டுபேருக்கும் இடையில் மலர்ந்த நட்பு காதலாகி பின்னர் லண்டனில் ஒரே வீட்டில் லிவ்விங் டுகெதர் அளவிற்கு வந்தது. இந்த இளம் காதல் ஜோடியின் வாழ்வில் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் சுமுகமாக வாழ்க்கை போய் கொண்டிருக்க இருவரும் தங்கள் கல்வியை முடித்து பட்டம் பெற்றனர். அதன் பின் இரண்டு வருட வேலைவாய்ப்புக்கு வழங்கும் விசாவையும் பெற்று எவ்வளவு முடியுமோ அந்தளவிற்கு கஷ்டப்பட்டு உழைத்து பணத்தையும் சேர்க்க தொடங்கினர். தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடங்களையும் ஒன்றும் விடாமல் தன் நண்பன் சேகருடன் தொலைபேசியிலும் மின் அஞ்சலிலும் பகிரும் கெளதம் தன் நண்பனை தன் வருங்கால மனைவுக்கும் நல்ல நண்பனாக மாற்றி இருந்தான். சில நேரங்களில் இருவருக்குள்ளும் செல்ல சண்டைகள் வரும் போதெல்லாம் சேகர் தான் பேசி தீர்த்து வைப்பான். அந்த நேரத்தில் சேகர் சில நேரங்களில் ஜெனியின் ஒரு நல்ல சகோதரன் போல இருந்து கெளதமை எதிர்த்து இவர்கள் பிணக்கை தீர்த்ததும் உண்டு.

இந்த நிலையில் கெளதம் மற்றும் ஜெனிக்கு இருவர் வீட்டிலும் திருமண பேச்சுக்கள் வந்தாலும் இருவராலும் தங்கள் காதலை பற்றி வீட்டில் சொல்ல முடியாமல் இருவர் மதமும் தடுத்துக்கொண்டே இருந்தது. இந்த நேரத்தில் கெளதமின் அம்மா வர்ஷாவை பார்த்து தன் மகன் வெளிநாட்டில் இருக்கின்றான் லண்டன் மாப்பிள்ளை என்ற பெயருடன் நிறைய சீதனத்துடன் பொண்ணும் கேட்டு எல்லாம் ஓகே செய்துவிட்டார். இதை கெளதம் பெரிதாக எடுக்காவிட்டாலும் விதி இவர்கள் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்தது.

ஜெனி, கெளதம் இருவருக்கும் ஒரே நேரத்தில் விசா முடிய மேலும் லண்டனில் தங்க முடியாத சூழ்நிலை வர இருவரும் ஒரே நாள் ஒரே விமானத்தில் பறந்து தாயகம் திரும்பினர். விமான நிலையத்தில் வைத்து பிரியும் போதே....

"கெளதம் என்னை மறந்திட மாட்டியே?"
"ஆர் யூ (f)பூல்? உன்னை விட்டு என்னால வாழ முடியுமா? தைரியமாய் போ நானே உன் வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்கின்றேன்."

இருவர் கண்களும் பனிக்க நீண்ட நாட்களின் பின் அந்த காதல் ஜோடி தன் சிறகுகளை வேறு வேறு திசையில் பறக்க திருப்பியது.

வீட்டுக்கு வந்த கெளதம்,ஜெனியால் நேரடியாக சந்திக்க வாய்ப்புக்கள் இல்லாமல் போக தொலைபேசியில் மட்டுமே இவர்கள் காதல் வளர்ந்தது. இந்த நிலையில் தான்.
"டேய் உனக்கு நிச்சயம் பண்ணனும் அதுக்கு முதல் போய் பொண்ணை ஒருக்கா பார். உனக்கு பிடிக்காட்டில் வேண்டாம். ஆனால் பார்த்திட்டு சொல்லு" இது கெளதமின் அம்மா.

அவரின் நச்சரிப்பு தாங்காமலே சேகரையும் கூட்டிக்கொண்டு வர்ஷா வீட்டுக்கு போனவன். அவர்களின் வீட்டின் வசதிகளை பார்த்ததும் மனதில் சலனம் தோன்றுவதை உணர தொடங்கினான்.
"மச்சான் எவ்வளவு பெரிய வீடடா"?
"ம் உன் அம்மா உனக்கு பெரிய இடமாய் தான் பார்த்திருக்கா? சொத்து ஓகேடா ஆனால் பொண்ணு தான் எப்பிடி இருக்கோ?"

பேசிக்கொண்டே உள்ளே சென்றவர்களை இன்முகத்துடன் வரவேற்ற குடும்பம் வர்ஷாவை கோக் கொண்டு வா என சொல்ல பல திரிஷாக்களையும் அசின்களையும் அனுஷ்காக்களையும் ஒன்றாக சேர்த்த ஒரு அழகு சில வருவதை கண்டு அப்படியே சொக்கிப்போய்விட்டன் கெளதம். சம்பிரதாயமாய் பார்க்க போனவன் கூடிய சீக்கிரமே கல்யாணத்தை முடிப்போம் என தன் மாமா மாமியிடம் சொல்லிவிட்டு வெளியில் வர சேகர் இது சரியில்லையா ஜெனி பாவம் என எச்சரித்தான்.

"போடா போ. அது லண்டனில எல்லாம் முடிஞ்சிது. இங்கே இனி அவள் எதுக்கு. ஜெனியிடம் என்ன இருக்கு. வர்ஷா பார் எப்பிடி அழகாய் இருக்கா. அதைவிட நாலு தலைமுறைக்கு உட்காந்து சாப்பிட சொத்து இருக்கு" என்று கெளதம் சொல்லிமுடிக்க முன்னரே

"நான் இப்பவே ஜெனியிடம் எல்லாம் சொல்ல போறேன்" என சென்ற நண்பனை தன் தாயின் பேச்சை மீற முடியாது இவளை தான் திருமணம் செய்ய வேண்டும் என புதிய கீதை ஒன்றை உரைத்து சேகர் மனதையும் கலைத்தான்.

சொல்லி ஒருமாத்தத்தில் திருமணமும் இனிதாய் நடந்தேறியது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஜெனியுடன் கதைப்பதை கெளதம் தவிர்க்க முயன்றாலும் மீறி கதைக்கும் சந்தர்ப்பத்தில் இதை காட்டிக்கொள்ளாமல் நடக்க முயன்றான். ஆனால் கெளதமின் திருமண நாளன்று ஜெனியிடம் இனி நீ அவனை தொடர கூடாது அவன் இனி இன்னொருத்தனுக்கு சொந்தம் என சேகர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சொல்லி வைக்க முதல் கெளதமின் அலைபேசி அலறியது.

அந்த அழைப்பை ஏற்றவன் சொன்ன வார்த்தைகள் மட்டுமே இங்கே எழுத்தில் வடிக்க கூடியவை. ஜெனி.....?

"நான் சொல்லுறத கேளு ஜெனி நான் வேணுமெண்டே செய்யல என் அம்மா கட்டாயப்படுத்தி செய்திட்டா. நீ கவலை படாதே நான் எப்பிடியும் இவளை டைவர்ஸ் பண்ணிட்டு உன்னோட தான் வாழ்வேன் நீ தான் என் மனைவி என சமாதனப்படுத்திக்கொண்டிருக்கவே அவன் அம்மா அந்த இடத்துக்கு வர தொடர்பை துண்டித்து விட்டான். பிறகு பல தடவை ஜெனி தொடர்புகொள்ள முயன்றும் முடியாமல் போய்விட்டது. ஆனால் மூன்று நாட்கள் கடந்த பின் வந்த அழைப்பை ஏற்று பேசிய கெளதம் உனக்காக அவளை கொலை செய்து விட்டு வந்து என்றாலும் வாழ்வேன். கொஞ்ச நாள் பொறு என சொல்லிவிட்டு வைத்துவிட்டான். இந்த நிலையில் தான் ஜெனி, சேகர் என இருவரின் கொலையும் நடந்தேறி இருக்கிறது.


மறு நாள் அதிகாலை.....

"வர்ஷா இண்டைக்கு நாங்கள் கொழும்புக்கு போகணும் சீக்கிரம் எழும்பு"
"என்னங்க இண்டைக்கு வேலை இல்லையா?"
"இருக்கு ஆனால் நம்ம சேகரை யாரோ கொன்னுட்டாங்களாம்"
"என்னது உங்க பிரென்ட் சேகர்? செத்திட்டாரா? எப்பிடிங்க? யாரு கொன்றதாம்? உங்களுக்கு எப்பிடி தெரியும்?"
"வா எல்லாம் போகும் போது சொல்லுறேன் இப்போ ரெடியாகு"
இருவரும் பேசிக்கொண்டே கொழும்பை நோக்கி விரைகின்றனர்.

இதற்கிடையில் கெளதம் முன்னர் சேகர் மற்றும் ஜெனியுடன் தொடர்பு கொண்ட நம்பர் யார் பெயரில் பதிவாகி இருக்கின்றது என்று தேடி பார்த்த போது அது சேகரின் பெயரில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. நாடு திரும்பிய வேளை சேகர் தன் பெயரில் இருந்த ஒரு சிம்மையே கெளதமிடம் கொடுக்க தொடர்ந்து கெளதம் அதையே பயன்படுத்தி வந்தான்.

நேராக சேகர் வீட்டுக்கு சென்றவர்கள் பகல் முழுவதும் அவர்களுடன் இருந்துவிட்டு இரவு ஒரு விடுதிக்கு சென்று அறை எடுத்து தங்கினர். விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனை என்று சூரியபிரகாசும் அடிக்கடி அங்கே வந்து சென்று கெளதமுக்கு நெருங்கிய நண்பராகிவிட்டார். இதனால் அவர்கள் தங்கும் ஹோட்டல் விபரங்களையும் பெற்றுக்கொண்டு அனுப்பிவைத்தார்.

ஹோட்டல் அறைக்கு வந்த இருவரும் பயண மற்றும் இறந்த வீட்டில் இருந்த களைப்பால் நேரத்துக்கே தூங்கிவிட்டனர். இடையில் தூக்கம் கலைந்து எழுந்த வர்ஷா,கெளதமுக்கு தெரியாமல் யாரோ ஒருவருக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவிட்டு தூங்கிவிட்டாள். இருவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கையில் ஒரு மர்மமான உருவம் அவர்கள் அறையை நெருங்குகின்றது. இந்த நேரம் சொல்லி வைத்தது போல அந்த உருவம் நெருங்கும் திசையை நோக்கியே வர்ஷாவும் எழுந்து நடக்க ஆரம்பிக்கின்றாள்.!!!!


இனி???????????????????????????????????????

கொலை குழப்பம் நிறைந்த இந்த கதையை நம் சக பதிவர் மது தொடர்வார்.

Share:

Tuesday, December 7, 2010

விஜயின் கடைசிப்படம் வேலாயுதம்????


தலைப்பை பார்த்து நிறைய பேர் பயந்திடுவாங்க. அடுத்து இவன் விஜய் ரசிகன் தானே விஜய்க்கு சப்போர்ட்டா எழுதி இருப்பான் என்று நினைப்பவர்கள் மேலே படிக்க வேண்டாம். இல்லை இல்லை தன் ஆதங்கத்தை கொட்டி இருப்பான் என நினைப்பவர்கள் சத்தியமாய் அப்பிடியே அடுத்த பக்கம் போங்கோ. நிஜமாய் தான் சொல்கின்றேன் நம்ம தளபதியை ரவுண்டு கட்டி தான் இந்த பதிவு.

விஜய்க்கு இது போதாதா காலம் என்று சொல்ல மாட்டேன். அந்த முட்டாளுக்கு(3 idiots படத்தில் ஒரு ஹீரோ என பேசினாங்க அப்போ இவர் ஒரு முட்டாள் தானே) சொந்த செலவில் சூனியம் வைக்க ரொம்ப நல்லாய் தெரியும். அப்பா பேச்சை கேட்டால் பிள்ளைகள் நல்லாய் இருப்பாங்க என்று நம்ம மூதாதையர் சொன்னதை இன்றுவரை பின்பற்றும் ஒரே ஒருவர் இவர் தான். பின்னே எத்தனை மொக்கை படம் எத்தனை கிண்டல் கேலி வந்தாலும் அசந்து கொடுக்கிரானா இந்த மாப்பு. இதை விட என்னங்க வேணும் அரசியலுக்கு வர. கல்லெறிந்தாலும் வலிக்காத மாதிரி நடிக்க தெரிந்த விஜயை பார்த்து யாரையா சொன்னது நடிக்க தெரியாது.

எங்க தளபதிக்கு வேணுமென்றால் திரையில் கமல் போல நடிக்க தெரியாமல் இருக்கலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் எங்கள் அழகிய தமிழ் மகனை விஞ்ச யார். கைப்புள்ளை இன்னுமாடா ஆஸ்பத்திரி போகாமல் இருக்கிறாய். தமிழ் சினிமாவில அவருக்கு அடுத்து ஒரு இடம் உனக்கு தாப்பா இருந்தது அதை மறுக்கல ஆனால் இப்போ நீ போற பாதையை பார்த்தால் உவ்வே.....குருவை மிஞ்ச ட்ரை பண்ணாதேப்பா. எல்லாத்தையும் அவருகிட்ட இருந்து கொப்பி பண்ணுற நீ இதை மட்டும் எதுக்கு அவசரப்படுகின்றாய்(அவர் யாரென்று நான் பெயர் சொல்ல மாட்டேன் பிறகு அவர் பெயர் சொல்லி நான் ஹிட் கொடுத்தேன் என்று சொல்லிடுவாங்க.)

அவரே கிழட்டு சிங்கத்தை பார்த்து அரை டவுசர் பையன் மாதிரி நிக்கும் போது அரை டவுசர் போடும் வயசு பையன் உனக்கு அரசியல் எதுக்கு? முதல்வன் படத்தில் நடிக்காத நீங்கள் இரண்டு பேரும் எதுக்கு முதல்வன் பதவிக்கு மட்டும் ஆசைபடுகிறிங்க. கொஞ்ச படம் ஒழுங்காய் போகல என்டவுடனையே உன் அப்பாவை கொஞ்சம் வீட்டில உட்கார வச்சிட்டு பையன் படம் நடிக்க போறான் என உன் முடிவுகளை நினைச்சு சந்தோசப்பட்டோம். ஆனால் அவர் வீட்டில் இல்லை போயஸ் காடனில் இருந்தார் என்று இப்பதானே தெரிய வருது. ஏண்டா ராசா உனக்கு இந்த வேலை. காவலன்,வேலாயுதம்,மூன்று முட்டாள், பகலவன், விக்ரம் கே குமார் என்று ஒழுங்கான இயக்குனர்களிட்ட நீ போறத பார்த்து அட தளபதியும் தலையும் மீண்டும் கிளம்பிட்டாங்க என நினைச்சா, நீங்க என்னவென்றால் அரிசிமூட்டையும் பசு மாதுமை அலையிறிங்க.

எல்லாம் இருக்கட்டும் உங்களுக்காக மதுரையே கலக்கிய மதுரை மன்னனின் வீட்டு கல்யாணத்துக்கு கூட போகலையாம். சரி படம் மேலே உண்மையில் அக்கறை என பார்த்தால் இல்லை இல்லை பகை என்று எல்லோ புகை வருது. என்ன தளபதி இது தியேட்டரை அடைச்சால் என்ன நீங்கள் ஒரு ஹிட் படம் கொடுத்தால் எவனும் உங்க படத்துக்கு தடை போட முடியாது. பாபா தோற்ற போது எல்லோரும் தானே ஆடினியல் உங்கள் குரு மீண்டு வரவில்லையா? இப்போ உங்கள் நேரம் ஒரு படத்தில பிக் அப் ஆனால் போய்ட்டே இருக்க வேண்டியது தானே. திரையிலையே நடிக்க கஷ்டப்படும் உங்களால் நிஜத்தில் நடிக்க முடியாது டாக்டர்.

திரைப்படங்கள் போதும் என்ற எண்ணம் உங்கள் மனதில் வந்ததால் தான் உங்கள் வாரிசாக வருங்களா நடிகனாக உங்கள் மகனை அறிமுகப்படுத்தி விட்டீர்கள். இனி அவன் வளர்ந்து வந்து விட்டதை தொடரட்டும் என்று நீங்கள் அரசியல் போறதாய் முடிவோ? இந்த பதிவை எழுத வைத்த செய்தி என்ன என்றால் ஷங்கர் படத்தில் இறுதி விலகிட்டிங்க என்று வந்த செய்தி தான். ஏனுங்கோ இந்த முட்டாள் முடிவு. நல்ல ஸ்க்ரிப்ட் நல்ல இயக்குனர் நீங்கள் விலகிப்போனால் யாருக்கு நட்டம். ஒ உங்களுக்கு இல்லை என்று நீங்கள் சொல்வது புரிது. அதுதானே அரசியலுக்கு வரவேண்டிய அத்தனை ஏற்பாடும் செய்தாச்சு இனி எதுக்கு ஷங்கர் என்ன மணிரத்னம் என்ன? யார் படமும் முக்கியமில்லை. இனி தேவை பசுவும் அரிசி மூட்டையும் தானே. சூப்பர் தலிவா உங்க அப்பன் பேச்சை கேட்டு நீயும் ஒருநாள் அரிசி மூட்டை போல வீட்டில் இருக்கும் நாள் வரும். காரணம் இது எம்.ஜி.ஆர் காலமில்லிங்க அண்ணா.

இனி நம் மக்களுக்கு!
விஜய் அரசியல்க்கு வர முழு வேலையும் செய்து முடித்து விட்டார். இனி அவரை மட்டும் அல்ல யாரையும் காப்பாத்துவது கஷ்டம். அதுக்கு இறுதி ஆயுதம் ஒன்று தான் உண்டு. அதுதான் காவலன் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்குவது. அப்படி நடக்கும் பட்சத்தில் தான் விஜய் மேலும் படங்கள் நடிப்பார் இல்லையேல் அரசியல் சாக்கடையில் இன்னொரு நட்சத்திரம் மங்கிப்போகும் காலம் வெகு தொலைவில் இல்லை. சாதாரண கதைகளுடன் ஹீரோயிசத்தை தவிர்த்து விஜய் படம் கொடுத்தால் இளைய தளபதி திரையுலகில் தொடர்ந்து மின்னலாம். இதை அவர் தந்தை யோசிக்க வேண்டும்.(நான் சொல்வதை யாரும் சீரியசாய் எடுக்க மாட்டீர்கள் என நினைக்கின்றேன்.)

சீரியஸ் மேட்டர்: ஒரு மகனாக விஜய் அவர் அப்பா சொன்னதெல்லாம் செய்கின்றார்(சோப்பு போட்டதும் தான்). தந்தை சொல்லை மதிக்கும் ஒரு தனயனை தந்தை தன் சுய விருப்பு வெறுப்புக்காக அழிக்காமல் திரை உலகில் வாழவிடுவதே சிறப்பு.

மிக விரைவில் பதிவர்கள் பற்றிய என் கிசு கிசுவுடன் போலி பதிவுலீக்ஸ் பதிவு.
Share:

Monday, December 6, 2010

மகனுடன் துடுப்பெடுத்தாடும் சச்சின்.-காணொளி இணைப்பு.

கிரிக்கெட்டின் சாதனை மன்னன் சச்சின் தன் மகனுடன் கிரிக்கெட் ஆடும் காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. வருங்கால இந்தியா அவர் கருத்திலோ?

Share:

நானும் ஒரு பதிவருங்கோ?- மறந்தவர்களுக்கு நினைவூட்ட.



என்ன நண்பர்களே? எப்பிடி இருக்கிறிங்க. இலங்கையில் இருந்த போது நிறைய கிறுக்கிய இவன் இப்போ அடங்கி இருக்கிறான் என சந்தோசப்படும் நல்ல உள்ளங்களே. நானும் ஒரு பதிவருங்கோ!

மாதம் ஒரு பதிவுபோட்டிட்டு எல்லா தளத்திலும் பின்னூட்டம் போடும் பிரபல பின்னூட்டவாதியில்லையுங்கோ!(அதுக்காகா அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய பதிவர் சாரி பின்நூட்டவாதி கறுப்பு தங்கத்தை குத்துறேன் என நினைக்க கூடாது. குத்தினால் எனக்கு தான் வலிக்கும்.) இருந்தாலும் நான் ஒரு பதிவருங்கோ! பின்னூட்டம் போடாவிட்டாலும் இன்ட்லியில் இரவு பகல் பாராமல் அத்தனை இடுகையும் வாசிக்கும் வாசகனுங்கோ.

லண்டன் ஸ்நோ பெண்டு கழட்டுதுங்கோ அதனால பதிவ எழுத முடியாமல் இருக்கு என சாட்டு சொல்ல மாட்டேனுங்கோ ஆனாலும் நான்பதிவருங்கோ! நிறைய நாளுக்கு ஒரு பதிவு போட்டாலும் ஹிட் ஆக நான் ஒன்றும் சூப்பர் ஸ்டார் இல்லைங்கோ ஆனாலும் நான் பதிவருங்கோ! எனக்கு நிறைய படிப்பு புரிஜெக்டுகள் இருக்குதுங்கோ இருந்தாலும் இப்படி ஒரு பதிவு போடுறேனுங்கோ ஏனெண்டால் நானும் உங்களை போல ஒரு மொக்கை பதிவருங்கோ!

என்ன கடுப்பாகுதா? இப்படி தான் எனக்கும் கொஞ்ச நாள் பதிவு எழுதாமல் கை எல்லாம் ஏதோ பண்ணுதுங்கோ! வரும் சில நாட்கள் முடிந்தால் அதகளம் பண்ண போறேன் அதனால தான் சொல்லுறேன் நானும் ஒரு பதிவருங்கோ! இப்ப கூட இந்த செமிச்டேரின் இறுதி நாட்களில் இருக்கின்றேன். இருந்தாலும் ஒரு பதிவு போட்டு நானும் ஒரு பதிவர் என உங்களுக்கு சொல்ல வேண்டாமா? காரணம் இல்லாமலா இப்படி ஒரு பதிவு. இப்பெல்லாம் காற்றெல்லாம் கொலை வாசி வீசுது. அந்த சூறாவளி எங்க பக்கம் வரமுதல் நானும் ஒரு பதிவர் என உங்களுக்கு நினைவூட்ட வேண்டாமா?

யாரும் இதை சீரியசாய் படிக்காதிங்க. இதுவும் ஒரு மொக்கை தாங்கோ! அட சொன்னால் தான் தெரிது என யாரப்பா அங்கே சவுண்டு விடறது. ஓகே ஓகே இப்போ போறேன் மறுபடி வருவேன்.
Share:

Sunday, November 21, 2010

கைகோர்க்கும் Facebook மற்றும் Myspace.

சமுக வலைத்தளங்களின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்றது. பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஒவ்வொரு தளங்களும் அடுத்த தளங்களுடன் போட்டியை சமாளிக்க பல்வேறு உத்திகளை மேற்கொண்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் வரை சமுகவலைத்தளங்களின் ராஜாவாக முதலிடத்தில் இருந்த Myspace அந்த இடத்தை கடுமையான பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அசுர வளர்சசி கண்டுவரும் Facebook இடம் இழந்துள்ளது.




இந்த நிலையில் பரம எதிரிகள் கடுமையான போட்டியாளர்கள் என நாங்கள் நினைத்துக்கொண்ட இந்த இரண்டு தளங்களும் அதிசயிக்க வகையில் கைகோர்த்துள்ளன. அதாவது Myspace தன் பயனர்கள் பயன்படுத்தும் வண்ணம் தன் தளத்தில் இருந்தே Facebook க்கு login செய்யும் வசதியை செய்து கொடுத்தது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. Facebook இன் அசுர வளர்ச்சியே இப்படி எல்லா தளங்களும் அதனுடன் சமாதானமாக போக காரணம் என்று சொன்னால் அது மிகையில்லை.


ஆளானப்பட்ட கூகிலே அடக்கி வாசித்துக்கொண்டிருக்கையில் இந்த இரண்டு தளங்களில் கைகோர்ப்பானது சிலவேளை இன்னும் சில புதிய சமுக தளங்களுக்கு வழியமைத்துக் கொடுத்தாலும் ஆச்சரியமில்லை.

இந்த பதிவு எல்லோரையும் சென்றடைய உங்கள் வாக்குகளை குத்துங்கள்.

ஒரு சாதனை பதிவு மிக விரைவில் இட வேண்டும். அந்த சாதனை செய்தது யார் எண்டு கேட்காதிங்க நான் தானுங்கோ!
Share:

Saturday, November 20, 2010

உலக அழகி என் மாமி ஐஸ்க்கு இன்று வயது 16!

உலக அழகி ஐவர்யா ராய்! பெயரை சொல்லும்போதே தொண்டைக்குள்ளே பலருக்கு ஐஸ் வரும். அதுவும் முக்கியமாய் என் மாமாவுக்கு. சரி அதெல்லாம் விடுங்க. அமிதாப்பின் மருமகள், அபிசேக்கின் மனைவி மட்டுமன்றி பிரபல நடிகை என பல முகம் கொண்ட ஐசுக்கே இன்று உலகம் ஐஸ் வைத்த நாள். என்ன ஒன்று மெ புரியலையா? இன்று தாங்க 44 வது உலக அழகியாய் நம்ம ஐஸ் ஆண்டி( மாமிக்கு ஆங்கிலம் மட்டுமன்றி வயசிலும் என ஆண்டி தானே. ) முடிசூடி இன்றுடன் பதினாறு வருடங்கள். முழு உலகமே இந்தியாவை திரும்பி பார்த்த ஒரு நாள் இந்த நாள். எனவே நாமும் வாழ்த்து சொல்ல வேண்டாமா? வாழ்த்துக்கள் ஆண்டி. மாமி என சொல்ல காரணம் நம்ம மாமா யாரெண்டு நான் சொல்லனுமா என்ன அடிக்கடி இவரை பற்றி தானே பேசுறார்.

ஐஸை பற்றி நான் என்ன சொல்ல வந்த நீங்க கண்குளிர ஐஸின் சில படங்களையும். பேட்டியையும் பார்த்திட்டு போங்களேன்.


கீழே இருக்கும் முதல் படத்தை பார்த்து யாரும் பொறாமைப்பட கூடாது. உலக அழகியும் உலக அழகனும் ஒரே இடத்தில்.







Share:

Friday, November 19, 2010

தன் வாயால் தானே கெடும் ரஜினி.



சூப்பர் ஸ்டார் ரஜினி, இன்னும் எத்தனை பேர் வந்தாலும் அந்த இடம் என்னவோ ஒரு இமயம தான் அடுத்தவர் எல்லோருக்கும் ரஜினியின் நடிப்புத்துறையில் மட்டும். ஆனால் நிஜ வாழ்க்கையில் என்றுமே ஒரு குழப்பவாதியாக இருக்கின்றாரோ என எண்ணத்தோன்றுகின்றது.

அழகிரியின் மகன் திருமணத்தில் வைத்து 32 ஆண்டுகளுக்கு பின் தான் மதுரை மண்ணில் காலடி வைத்ததாக ரஜினி பேசியது இப்போது பலரிடையே சலசலப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. இந்த கணக்கு தப்பு ரஜினி இதற்கிடையே மதுரை வந்து போயுள்ளதை தன் ஆதார பூர்வமாக பதிவித்துள்ளார் சக பதிவர் உண்மைத்தமிழன். அந்த பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்.

இந்த நிலையில் ரஜினி இறுதியாக மன நலம் பாதிக்கப்பட்டு உடல் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது தான் இறுதி மதுரை பயணம் என தட்ஸ்தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதை படிக்க இங்கே சொடுக்குங்கள்.

ஆனால் அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆரின் கைப்பொம்மையாக இருந்த நடிகை லதாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் சில்மிஷம் செய்யவும் ரஜினி முயன்றதால் எம்.ஜி.ஆர் குழுவினர் ரஜினியை அடித்து கொண்டு சென்று பைத்தியகார வைத்தியசாலையில் சேர்த்ததாகவும் ஒரு செய்தி உண்டு. அதே நேரம் எம்.ஜி.ஆர் அரசியலில் கோலோச்சிய நேரம் ரஜினி தன் பட பாடல்களில் தன் அரசியல் ஆசையை வெளிப்படுத்தியதும் இதற்க்கு ஒரு காரணமாகா சொல்லப்படுகின்றது. எது எப்படியோ 32 வருடங்கள் ரஜினி மதுரைக்கு வரவில்லை என்றால் அதற்கு என்ன காரணம்?

என்னை வாழ வைத்தது தமிழ் மக்கள் என சொல்லும் ரஜினி தமிழ் வளர்த்த மதுரையில் கடந்த 32 வருடம் காலே வைக்கவில்லை என்றால் அது அந்த மக்களுக்கும் தன் ரசிகர்களுக்கும் செய்தது சரியா?

இல்லை இல்லை அவர் வந்திருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம் அப்படி என்றால் அதை மறைக்க காரணம் என்ன? எப்போதும் தன் மீது ஒரு மீடியா வெளிச்சம் படவேண்டும் என்பதற்காய் இப்படி பேசுகின்றாரா? அப்படியென்றால் தன்னை கடவுளாகவும் நேர்மையின் சிகரமாகவும் நினைக்கும் தன் ரசிகர்களை ஏமாற்றுவதுடன் தன்னையும் ஏமாற்றுகின்றாரா? ரஜினியின் இந்த குழப்பங்களுக்கு எல்லாம் என்ன காரணம்?

இமயத்தில் பாபா என்றார் இல்லை கோட்டையில் ராஜ்ஜியம் என்றார் இன்று சினிமாவே போதும் என நிற்கின்றார். விழாக்களுக்கு கட்டாயப்படுத்துகின்றார்கள் என அஜித் பேசியபோது கைதட்டினார் இன்று அழையா விருந்தாளியாய் பல விழாக்களில் சென்று கை கட்டி நிற்கின்றார். அஜித்தை உசுப்பேத்தி விட்டு வேடிக்கை பார்க்க நினைத்தாரா? இல்லை உண்மையிலேயே மனதார தட்டினாரா? ஆனால் இந்த உள்ளொன்று வைத்து புறம் பேசும் பேச்சு எதற்கோ. உண்மையில் இந்த விடயத்தில் கமலை போற்ற வேண்டும். மீடியாவுக்காக ஒரு பேச்சு ரசிகருக்கு என்று ஒரு பேச்சு இன்றி தன் படுக்கை அறை விடயங்களை கூட சரியோ பிழையோ உள்ளதை உள்ளபடி ஓரளவு சொல்கின்றார்.

இதேபோல தான் அண்மையில் வாலியின் விழாவிலும் ஒரு பரபரப்பு பேச்சு. சிலவேளை ரஜினி அப்படி பேசி இருக்காவிட்டால் அந்த விழாவே எமக்கு தெரியாமலும் போயிருக்கலாம். ஆனால் அங்கும் அவரின் பேச்சில் தடுமாற்றம். பெரிய மனிதர் பேசும் பாங்கா அது. அதுமட்டுமன்றி தன் வீட்டு கல்யாணத்துக்கு அழைத்தது மட்டுமன்றி வரவில்லை என கடிந்து கொண்ட ரஜினி தான் இவ்வளவு அக்கறை கொண்ட வாலியின் மனைவியின் இறந்த தினத்தை மறந்தாரா இல்லை மறந்தது போல நடித்தாரா? வந்தது தான் வந்துவிட்டார் சபைக்கு வழக்கம் போல வாழ்த்தி பேசிவிட்டு போயிருக்கலாமே. கருணாநிதியின் பேரக்குழந்தைகளையே வாழ்த்தும் இந்த பெரியவர் உண்மையில் பெரிய ஒரு மனிதனை இப்படி கடிந்தது தகுமா? அவர் வந்தால் தான் போவாராம். அதேபோலசிகர்கள் நாங்கள் காசு கொடுத்து படம் பார்ப்பதால் தான் தான் அரசியலுக்கு வந்து நல்லது செய்வதாக சொல்லுகின்றார். நீங்கள் இதுவரை செய்த ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு பாதிக்கப்பட்ட ஒருவன் இதே போல உங்களை மேடையில் ஏற்றி வைத்துக் கேட்டால் எப்படி இருக்கும். வாலியின் அனுபவம் என்ன என்பதை இந்த மன்னன் மறந்துவிட்டார் போல. மேலும் படிக்க.

இதுவரைக்கும் ரஜினி பேசிய செய்த செயகைகள் எல்லாம் ரஜினியின் இந்த ஒரு பேச்சுடன் காற்றில் போய்விடுமா? இல்லை மீண்டும் கண்ணை மூடிக்கொண்டு ரஜினி ரசிகர்கள் இதற்கும் சாக்கு போக்கு சொல்லப்போகின்றார்களா? இல்லையெனில் கடவுள் ரஜினி தான் தப்பாய் பேசிவிட்டேன் என மன்னிப்பு கேட்கப்போகின்றாரா? பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

தன் பிறந்த மாநிலத்தையே எதிர்த்து பேசிவிட்டு பின் தன் படம் ஓடணும் என்பதற்காய் மன்னிப்பு கெட்ட மகான் தானே அவர். இப்போது நான் மகான் இல்லை என சொல்லப்போகின்றாரா? இல்லையேல் எந்திரன் ஓடணும் என்பதற்காய் ஐஸை IFA செல்ல விடாமல் மறித்ததையும் தன் மகள் திருமணத்தை முன்னிட்டு விருந்து கொடுப்பேன் என சொல்லிவிட்டு இன்றுவரை அதைப்பற்றி வாய்த்திறக்காமல் இருப்பதையும் சமாளிப்புகேசன் இல்லை என போகின்றாரா?

என் இந்த பதிவு நிச்சயம் ரஜினி ரசிகர்களை சூடு படுத்தும். ஆனால் இது நீங்கள் நான் என எல்லோரும் சிந்திக்க வேண்டிய ஒரு நேரம். திரையில் என்றுமே ஜாம்பவான் தான் ரஜினி ஆனால் நிஜத்தில் இல்லை இல்லை இல்லை என சொல்லாமல் சொல்கின்றார். அப்புறம் இன்னொரு விஷயம் இந்த பதிவை நான் எழுதியதால் ரஜினிக்கு 32 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது போல எனக்கும் இங்கே நடத்தனும் என நினைப்பவர்களுக்கு ஒரு விஷயம் CCTV in operation. ஹா ஹா ஹா ஹா மெ மெ மெ (இதுவும் திரையுலக சூப்பர் ஸ்டார் வசனம் தான்.உபயம் எந்திரன் )

குறிப்பு: என் சின்ன வயதில் நானும் ரஜினி ரசிகன் தான்.....

இங்கே கோர்த்து விட்டாச்சு அப்புறம் இன்னுமொரு சக்திவாய்ந்த இடம் இருக்கு எல்லா. நம் பதிவுலக சகாக்கள் பற்றிய மகா மொக்கை ஒன்று தயாராகின்றது. மிக விரைவில் டண்டனக்கா தான்
Share:

Friday, November 5, 2010

தூரதேச சிறகில்லா பறவையின் தீபாவளி வாழ்த்து!

ஹாய்! எல்லோரும் எப்பிடி இருக்கிறிங்க? நானும் ஒரு பதிவரா என்று கேட்கப்படாது. என்ன செய்வது நம் நாட்டை விட்டு வெளிநாடு வந்து நடுவாற்றில் நிற்கும் நமக்கு இப்படி ஆடிக்கொரு அமாவாசைக்கு ஒரு பதிவு தான் இடமுடியும். நம்மவர்களை மறக்கலாமா என்ன. இதோ நாடு இரவிலும் உங்கள் எல்லோரையும் மறக்காமல் என் உள்லாம் வால்த்துக்கின்றது ஏற்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில். மிக விரைவில் சந்திப்போம். அதுவரை என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

Share:

Tuesday, October 5, 2010

காதலி = அரசியல்வாதி



இரவினில் ஒரு நாள் இருதயம் கேட்டேன் - அவள்

இருவிழியூடு வந்து உயிரினை பறித்திட்டாள்

வாழ்வினில் என்றும் வாய்மையை கேட்டேன் - அவள்

வாயில் வந்ததை சொல்லி வாழ்க்கையை சிதைத்தாள்.


பிரியாதவரமொன்றை ப்ரியமானவளிடம் கேட்டேன்

ஏளனம் செய்து எனை ஏங்கவைத்து சென்றுவிட்டாள்

அன்பே உன்னை நான் மீண்டும் மீண்டும் அழைக்கையிலும்

மீளாத்துயில் கொண்டவள் போல் செவிடியாய் ஆகிவிட்டாய்


குற்றம் செய்தவனே சுற்றவாளி ஆகும் நாட்டில்

வழக்காடல் ஏதும் இன்றி குற்றவாளி ஆக்கப்பட்டேன்

அரசியல்வாதிபோல உன் அறிக்கைகள் இருந்தாலும் - என்

கூட்டணிக்கு இணங்காத உன் அறிக்கைக்கு பலன் ஏது.


தூதுவர் பலர் இருந்தும் தூதேதும் வரவில்லை

நானாக தூதனுப்பி பலனேதும் கிட்டவில்லை

காலத்துக்கு காலம் கூட்டணி மாற்றிக்கொள்ள - நான்

அரசியல்வாதியல்ல அநியாயக்காரனும் அல்ல

நிஜமான கூட்டணிக்கு தோல்வி கிடையாது -நின்


நிலைமாறும் கூட்டணிக்கு என்றுமே வாழ்வில் வெற்றி கிடையாது
Share:

Thursday, September 2, 2010

வெளிநாட்டு வாழ்க்கை.



ஊருறங்கா மெசின் உறங்கா நாடு கூட - தன்

உறக்கத்தை உறவாக்கும் நேரம் கூட

உறவோடு ஊருறங்கும் நாட்டவன் எந்தன்

உள்ளம் மட்டும் இன்னும் விழி உறங்கிப் போனாலும் உறங்கவில்லை.

பள்ளிப் படிப்பது பாதியில் பலியானதனால்

பல நாடு கடந்து வந்து பலிக்கடா ஆகிவிட்டேன்.

கல்லூரிப்படிப்புக்கு காசு வேண்டும் அதை விஞ்சி

ஒரு சாண் வயிற்றுக்கும் கஞ்சி வேண்டும்

ஆறடி உடல் ஒப்புக்காய் தூங்க ஓர் இடம் வேண்டும்

இதற்கெல்லாம் விலையை எம்மவரின் ரத்தம் வேண்டும்.

காலை எது மாலை எது கவலையேதும் கிடையாது - நாளை

விலை கொடுத்து எனை வாங்க இன்று உலையிலே எரிகின்றேன்

ஊட்டி விட இருந்தன அன்று ஊரின் கைகள் - இன்று

விக்கல் எடுத்தாலும் விக்கி விக்கி அழவேண்டும்.

தாய் நாட்டின் அரவணைப்பு தான் தாயின் அரவணைபென்று

தெரியாமல் வந்திங்கு தெருத் தெருவாய் அலைகின்றேன்

மனிதன் யார் மிருகம் யார் எனப் பிரித்து அறியாமல்

பணம் உழைக்கும் எந்திரனாய் மனிதர் நாம் மாறுகின்றோம்.

கவி படிக்கும் நேரம் இது பேனா மைக்குப் பதிலாய்

கண்ணீர்த்துளி கொண்டு என் கதை எழுதுகின்றேன்

கேட்பாயா என்தாயே என்பது தான் அவா எனினும்

கேட்டிடாதே என் தாயே உன் மகன் படும் பாடு இதுதான் என்று.

கேட்டால் நீ தாங்கமாட்டாய் திருப்பியும் அழைத்திடுவாய்

சரித்திரம் மாறிவிடும் இனி ஒரு தாயும் அனுப்பமாட்டாள் தன் பிள்ளையை

இப்போதுதான் எழுகின்றது எனக்குள் ஒரு கேள்வி

இனி எந்தப் பெண்ணுக்கு கிடைப்பாள் வெளிநாட்டு மாப்பிள்ளை.

Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox